Jump to content

வல்வெட்டித்துறையில் ‘ஆழிக்குமரன்’ ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் திறந்து வைப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1-7-720x450.jpg

வல்வெட்டித்துறையில் ‘ஆழிக்குமரன்’ ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம் திறந்து வைப்பு

வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘ஆழிக்குமரன்’ ஆனந்தன் நினைவு நீச்சல் தடாகம்  வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நீச்சல் தடாகத்தினை இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைத்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம். ஏ.சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் மற்றும் வல்வெட்டித்துறை நகரசபை தலைவர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளார்கள்

2014 ஆம் ஆண்டு நிதி அமைச்சின் நிதி திட்டத்தின் கீழ் அடிக்கல் நாட்டப்பட்ட குறித்த நீச்சல் தடாகமானது இன்றைய தினம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன்  மரம் நாட்டும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

2-5.jpg

3-3.jpg

http://athavannews.com/வல்வெட்டித்துறையில்-கும/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முழுவியளத்துக்கு சுப்பர் ஆனா ஆக்கள் திறந்து வைத்து இருக்கினம் .

1-7-720x450.jpg

மூண்டும் அடிபடுது போல் இருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்......!   👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கிராமத்துக்கு ஒரு நீச்சல் தடாகம் தேவை, சிறுவர்கள்(ஆண்/பெண்) எல்லோரும் கட்டாயம் நீச்சல் பயில வேண்டும். தற்பாதுகாப்பும், இன்னொருவரை காப்பாற்றவும், விசேட திறமை உள்ளவர்கள் போட்டிகளில் பங்குபற்ற.

Link to comment
Share on other sites

சிறப்பான விடயம். இது போல் பல கிராமங்களில் இப்படிப்பட்ட நீச்சல் தடாகங்கள் திறக்கப்பட்டு தொடர்சியாக சுகாதாரமாக பராமரிக்கப்படல் வேண்டும். இதை உருவாக்கியொருக்கு பாராட்டுக்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

கிராமத்துக்கு ஒரு நீச்சல் தடாகம் தேவை, சிறுவர்கள்(ஆண்/பெண்) எல்லோரும் கட்டாயம் நீச்சல் பயில வேண்டும். தற்பாதுகாப்பும், இன்னொருவரை காப்பாற்றவும், விசேட திறமை உள்ளவர்கள் போட்டிகளில் பங்குபற்ற.

நீச்சல் பழகுவது நல்ல விடயம் பிரச்சனை தண்ணீர் சம்பந்தமானது ஏழு லட்சம் லீற்றர் நன்னீர் தேவை திறப்புவிழாவுக்கு தடாகம் நிரம்புவதுக்கே முக்கிய நன்னீர் வழங்கல் வடமராட்சி கிழக்கு பகுதி எங்கும் உவர்நீரடிக்க தொடங்கியுள்ளது வந்து விழும் மழையையும் கார்பெட் ரோட்டில் ஓடவிட்டு கடலுக்குள் ஒரு துளியும் மண்ணுக்குள் இறங்காமல் கலைத்து விடுகிரம் நிலத்தடி நீர்மட்டம் வெகு வேகமாக குறைந்து போய் கொண்டு உள்ளது தண்ணியில்லை என்று குழாய் அடித்தால் நல்லதண்ணி கிணறு உப்புத்தண்ணியாகி விட்டுது என்று  போனில் சொல்லி குமுறிக்கொண்டு இருக்கிறார்கள் .

அரசியல்வாதிகள் சுமத்திரன் தரவழிகள் தான் வாழ்ந்தால் காணும் எனும் கொள்கையுடன்  மேலும் பணம் சம்பாதிக்கவே அரசியலுக்கு வந்தவர்கள் அவர்களிடம் நன்மையை எதிர்பார்ப்பது முட்டாள்த்தனமானது நீச்சல் முக்கியமானது அதுக்காக கண்ணை வித்து நீச்சல் பழகுவது போன்றது இந்த விடயம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முயற்சி திருவினையாக்கியிருக்கிறது. ஊருக்கு பெருமைதேடித்தந்த வீரனை மதிப்பளித்ததோடு எதிர்கால சந்ததிக்கும் பெரும் ஊக்கம் வழங்கப்பட்டிருக்கிறது. சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போதுதான் ஒவ்வொருவரும் திறமைகளை வெளிப்படுத்த முடியும். இதுவரை காலமும் எமது ஊரில் நிறைய நீச்சல் வீரர்கள் இருந்திருக்கிறார்கள் ஆனால் போட்டிகள் தொடர்பாக அவர்களுக்கு சரியான ஊக்கம் வழங்கப்படவில்லை. அத்தோடு அதிகமான வல்வையர்களுக்கு நீச்சலை அடிப்படையாகக்கொண்டே தொழில் அமைகிறது. மாபெரும் சமுத்திரங்களில் வெளிநாட்டுக்கப்பல்களில் தாயகத்தில் இருக்கும் நம்மவர்கள் பலர் வேலை செய்கிறார்கள் அவர்களின் அடிப்படை வாழ்வாதாரமே கடல் வாழ்வாக இருக்கும் பட்சத்தில் நீச்சல் என்பது மிக அவசியமான ஒன்று. ஒரு சாதனை வீரனுக்கு மதிப்பளிப்பதாக இருக்கும் இத்தடாகம் தொழில் ரீதியான கற்கைக்கும் விளையாட்டு ரீதியான சாதனைக்கும் வழிகாட்டியாக அமையட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழக்குமரனின் உலக சாதனைகள்:

1- பாக்கு நீரிணையை 51 மணி நேரத்தில் நீந்தி கடந்தது.(1971-ம் ஆண்டு)

2 - 128 மணி நேரம் தொடர்ச்சியாக "டிவிஸ்ட்"நடனம் ஆடியது(1978)

3 - 1487 மைல் தூரத்தை 187 மணி நேத்தில் இரு சக்கர வாகனத்தில் கடந்தது(1979)

4 - 33 மணி நேரம் ஒற்றை காலில் நின்றது.(1979)

5 - 136 மணி நேரம் பால் பனசிங் செய்தது.(1979)

6 - இரண்டு நிமிடத்தில் 165 தடவை site up செய்தது.

7 - 9100 தடவை high kicks செய்தது(1980)

8 - நடந்தே 296 மைல் தூரத்தை 159 மணி நேரத்தில் கடந்தது.(1981)

9 - 80 மணி நேரம் தொடர்ச்சியாக தண்ணீரில் செங்குத்தாக நின்றது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பெருமாள் said:

நீச்சல் பழகுவது நல்ல விடயம் பிரச்சனை தண்ணீர் சம்பந்தமானது ஏழு லட்சம் லீற்றர் நன்னீர் தேவை திறப்புவிழாவுக்கு தடாகம் நிரம்புவதுக்கே முக்கிய நன்னீர் வழங்கல் வடமராட்சி கிழக்கு பகுதி எங்கும் உவர்நீரடிக்க தொடங்கியுள்ளது வந்து விழும் மழையையும் கார்பெட் ரோட்டில் ஓடவிட்டு கடலுக்குள் ஒரு துளியும் மண்ணுக்குள் இறங்காமல் கலைத்து விடுகிரம் நிலத்தடி நீர்மட்டம் வெகு வேகமாக குறைந்து போய் கொண்டு உள்ளது தண்ணியில்லை என்று குழாய் அடித்தால் நல்லதண்ணி கிணறு உப்புத்தண்ணியாகி விட்டுது என்று  போனில் சொல்லி குமுறிக்கொண்டு இருக்கிறார்கள் .

அரசியல்வாதிகள் சுமத்திரன் தரவழிகள் தான் வாழ்ந்தால் காணும் எனும் கொள்கையுடன்  மேலும் பணம் சம்பாதிக்கவே அரசியலுக்கு வந்தவர்கள் அவர்களிடம் நன்மையை எதிர்பார்ப்பது முட்டாள்த்தனமானது நீச்சல் முக்கியமானது அதுக்காக கண்ணை வித்து நீச்சல் பழகுவது போன்றது இந்த விடயம். 

தண்ணீர் பிரச்சனைக்கு மழை காலங்களில் மட்டும் நீச்சல் தடாகங்களை பாவிக்கலாம். மிக முக்கிய ஒரு சில தடாகங்களை வருடம் முழுக்க பாவிக்கலாம்.
கோவில் கேணிகளை மக்கள் நீந்தி பழக விடலாம், இப்போது பல கேணிகள் நீச்சல் பழகவிடாது மூடி வைக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

வீரர்களின் பெயர்களில் பொதுவசதிகள் அமைவது வரவேற்கப்பட வேண்டியது.

வீரர்களின் பெயர்களில் பொதுவசதிகள் ஏற்படுத்தப்படும் போது அதை நேர்மையான வீரர்கள் / மனிதர்கள் திறந்துவைப்பதே அந்த வீரர்களுக்கு கவுரவமானது.

இங்கே ஒரு வீரனின் பெயரில் அமைந்த தடாகத்தை, தமிழினக் கொலைகாரர்களும், நேர்மையற்ற பேர்வழிகளும், கைக்கூலிகளும்  திறந்து வைத்தது அந்த வீரனுக்கு செய்யப்படும் அவமரியாதை ஆக கருதப்படுகிறது.

குறைந்தது வல்வையின் மைந்தனும் எளிமையான அரசியல்வாதியுமாகிய சிவாஜிலிங்கத்தை வைத்து திறந்திருப்பதே முறையானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, போல் said:

வீரர்களின் பெயர்களில் பொதுவசதிகள் அமைவது வரவேற்கப்பட வேண்டியது.

வீரர்களின் பெயர்களில் பொதுவசதிகள் ஏற்படுத்தப்படும் போது அதை நேர்மையான வீரர்கள் / மனிதர்கள் திறந்துவைப்பதே அந்த வீரர்களுக்கு கவுரவமானது.

இங்கே ஒரு வீரனின் பெயரில் அமைந்த தடாகத்தை, தமிழினக் கொலைகாரர்களும், நேர்மையற்ற பேர்வழிகளும், கைக்கூலிகளும்  திறந்து வைத்தது அந்த வீரனுக்கு செய்யப்படும் அவமரியாதை ஆக கருதப்படுகிறது.

குறைந்தது வல்வையின் மைந்தனும் எளிமையான அரசியல்வாதியுமாகிய சிவாஜிலிங்கத்தை வைத்து திறந்திருப்பதே முறையானது.

கடவுள் பாதி மிருகம் பாதி சிவாஜிலிங்கத்துக்கு இந்த தடாகம் அமையணும் என்று யாரோ பப்பாவில் எத்திவிட முக்கால்வாசி கஷ்டபட்டு கடைசியில்  அவரின் வாயால் ஓரம்கட்டபட்டு படத்தில் நிற்பதை பார்க்க பாவமாயிருக்கு .

வடமராட்சியில் என்ன நிகழ்வு நடந்தாலும் சுமத்திரன் அழையாத விருந்தாளியாய் உள்ளே புகுந்து மைக்கை புடுங்கி அரசியல் கதைப்பது அவரின் புது ஸ்டைல் .

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: 1 நபரà¯, பà¯à®©à¯à®©à®à¯, நிறà¯à®à®¿à®±à®¾à®°à¯ மறà¯à®±à¯à®®à¯ ஸà¯à®à¯à®°à¯à®ªà¯à®ªà¯à®à®³à¯

இந்த சிறுமியின் பெயர் தனுஜா ஜெயக்குமார். இவர் ஒரு ஈழத்து அகதி சிறுமியாகும்.

இவர் தன் தாய் தந்தையருடன் தமிழ்நாட்டில் திருச்சியில் வாழ்ந்து வருகின்றார்.

இவர் ஒரு சிறந்த நீச்சல் வீராங்கனையாக விளங்கி வருகின்றார். அண்மையில் பூனேவில் நடந்த அகில இந்திய நீச்சல் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார்.

அதையடுத்து அக்டோபர் 21ம் திகதி அமெரிக்காவில் நடக்கவிருக்கும் உலகப் போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

அதில் பங்குபற்றினால் நிச்சயம் பதக்கம் பெற்று தமிழ் இனத்திற்கு பெருமை சேர்ப்பார்.

ஆனால் இப்போது பிரச்சனை என்னவென்றால் இவர் அமெரிக்கா செல்வதற்கான இந்திய அரசின் அனுமதியும் கடவுச் சீட்டும் பெற முடியாமல் உள்ளது.

இவர் இந்தியாவில் அகதியாக இருப்பதால் உரிய கடவுச்சீட்டை வழங்க இலங்கை அரசு மறுக்கிறது.

இவர் ஈழத்து அகதி என்பதால் இந்திய அரசு கடவுச்சீட்டு வழங்க மறுக்கிறது.

இதுவே அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளாக இருந்தால் உடனடியாக குடியுரிமை வழங்கி தமது நாட்டுக்கு பதக்கம் பெறுவார்கள்.

ஆனால் இந்த சிறுமி அகதியாக அதுவும் தமிழ் அகதியாக இருப்பதால் இலங்கை அரசும் அக்கறை காட்ட மறுக்கிறது. இந்திய அரசும் அக்கறை காட்ட மறுக்கிறது. தமிழ்நாடு அரசும்கூட அக்கறைகாட்ட மறுக்கிறது.

இச் சிறுமியின் குடும்பத்தினருக்கு அரசுடன் தொடர்பு கொள்ளவோ அல்லது வழக்கு போட்டு நீதி பெறவோ எந்த வசதியும் அற்ற ஒரு குடும்பம் ஆகும்.

யாராவது மனிதாபிமானம் உள்ளவர்கள் இரக்கப்பட்டு உதவி செய்தால் மட்டுமே ஏதும் நடக்கக் கூடும்.

இல்லையேல் ஒரு சிறுமியின் கனவு அகதி என்பதற்காக கருகி விடும் நிலையே இருக்கிறது.


Facebook 

Link to comment
Share on other sites

On 8/9/2019 at 3:59 AM, பெருமாள் said:

முழுவியளத்துக்கு சுப்பர் ஆனா ஆக்கள் திறந்து வைத்து இருக்கினம் .

1-7-720x450.jpg

மூண்டும் அடிபடுது போல் இருக்கு .

 

ஆழிக்குமரன் பெயரில் அமைத்தது சிறப்பான விசயம் ஏனெனில் அவர் ஒரு கடின முயற்சியாளர் விளையாட்டுத்துறையில் ஈழத்தில் முயற்சிக்கு அவரே முதன் முன்னுதாரணம். ஆனால் இதை மூன்று கத்திரிக்கோல் போட்டு முண்டியடித்து வெட்டும் முயற்சி ரெம்ப கேவலமா இருக்கு. 

Link to comment
Share on other sites

அமெரிக்க செல்ல இருக்கும் தேசியத் தலைவரின் ஊரினைச் சேர்ந்த “அதி வேக நீச்சல் மகள்” தனுஜா ஜெயக்குமார்

வல்வெட்டிதுறையைப் பூர்வீமாகக் கொண்ட தற்பொழுது தமிழகம் திருச்சியில் வசித்து வரும் நீச்சல் வீராங்கனை செல்வி தனுஜா ஜெயக்குமார் எதிர்வரும் அக்டோபர் மாதம் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள நீச்சல் போட்டி ஒன்றில் பங்கு பெறத் தகுதி பெற்றுள்ளார் .
68425555_2404983272921386_11355689691476

நேற்று இந்தியாவின் மகாராஸ்திரா மாநிலத்தின் பூனே நகரில் இடம்பெற்ற இந்திய அளவிலான 10th Modem Pentathalon National Championships 2019 ( 10th Buathle / Triathle National Championships 2019 ) போட்டிகள் இடம்பெற்றது . குறித்த போட்டி எதிர்வரும் அக்டோபர் மாதம் 23 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இடம்பெறவுள்ள 10th ( Buathle / Tiathle World Championships 2019 ) முன்னோடியாக இடம்பெற்றது .

நேற்று இடம்பெற்ற குறித்த 2 போட்டிகளில் செல்வி தனுஜா 1 ஆம் மற்றும் 2 ஆம் இடங்களைப் பெற்றுளார் . இதன் மூலம் மிக இலகுவாக 10th Buathle / Tiathle | World Championships 2019 போட்டிகளில் பங்குபெறும் தகுதியைப் பெற்றுள்ளார் .

15 வயதுக்கு கீழ்பட்ட பெண்கள் பிரிவினருக்கான

T 800 Meters Run – 100 Meters Swim – 800 Meters Run ஐ 07 : 43 : 03 நிமிடத்தில் அடைந்து முதல் இடத்தையும்,

4×400 Run , 4 x 25 Swim , 4 x 5 Hits ; 5M 16 . 15 . 87 நிமிட நேரத்தில் அடைந்து 2 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார் .

ஆனாலும் செல்வி தனுஜா ஜெயக்குமார் இலங்கை கடவுச்சீட்டைப்பெற்று இந்தியாவில் வசிப்பதால் இந்தியாவிலிருந்து வெளிநாடு ஒன்றில் போட்டியிடுவதில் இடர்கள் உள்ளது எனக் கூறப்படுகின்றது . ஆனாலும் தனுஜாவின் தந்தை திரு.ஜெயக்குமார் தமது வழக்கறிஞர் மூலம் அமெரிக்காவில் இடம்பெறவுள்ள போட்டிகளில் கலந்துகொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடவுள்ளார்,

இந்தியாவில் பல போட்டிகளில் பங்குகொண்டு பல வெற்றிகளை ஈட்டி ஈழதேசத்துக்கும், உலகத்தமிழர்களுக்கும் பெருமை சேர்க்கும் #செல்வி_தனுஜா_ஜெயக்குமார் அமெரிக்காவிற்கும் சென்று தனது அதீத திறமைகளை நிலைநாட்டி பல்வேறு பரிசில்களை பெறுவார் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

68671780_2404983356254711_5363036438864568723381_2404983326254714_45964338379400

67801468_2392281690858211_76687577759497

https://mulakkam.com/archives/6720

Link to comment
Share on other sites

5 hours ago, ampanai said:

இந்த சிறுமியின் பெயர் தனுஜா ஜெயக்குமார். இவர் ஒரு ஈழத்து அகதி சிறுமியாகும்.

இவர் தன் தாய் தந்தையருடன் தமிழ்நாட்டில் திருச்சியில் வாழ்ந்து வருகின்றார்.

5 hours ago, ampanai said:

இவர் இந்தியாவில் அகதியாக இருப்பதால் உரிய கடவுச்சீட்டை வழங்க இலங்கை அரசு மறுக்கிறது.

இவர் ஈழத்து அகதி என்பதால் இந்திய அரசு கடவுச்சீட்டு வழங்க மறுக்கிறது.

இவர்கள் தாய்மண்ணுக்கு திரும்புவது சிறந்த முடிவாக இருக்கும்.

அதை விடுத்து மகளின் திறமையை வைத்து பெற்றோர்கள் பிச்சைக்காரப் பிழைப்பை முன்னெடுப்பதை எந்தவிதத்திலும் பாராட்ட முடியாது.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.