Jump to content

கடலோரம் தென்னம் தோப்பு_பா .உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடலோரம் தென்னம் தோப்பு 
கரை மீது இரண்டு கிளிகள் 
கடல் அலையில் சுரம் எடுத்து 
கனவுகளை பாடுது 

காற்றினிலே தொட்டில் கட்டி 
கிளி இரண்டும் ஆடுது 
தென்றலிலே முகம் நனைத்து 
தேன்நிலவை தேடுது 

விழி ஓரம் கவி எழுதி 
வரம் ஒன்று கேக்குது 
வாழ்வு தனை வரையுது 
வசந்தத்தை பாடுது 

அலை வந்து சுரம் பாட 
அவள் மடி மீது தலை வைத்து 
மனதோடு பல ராகம் 
கிளி இரண்டும் சுக ராகம் 

அந்தி வானம் சிந்தி விட்ட 
அழகான மழை துளியில் 
கிளி இரண்டும் நனையுது 
கீதங்கள் கேக்குது 

ஏழு சுரத்தில் கவிதை எழுதி 
இதயம் இரண்டும் பேசுது 
எல்லை இல்லா வானத்தருகே 
ஏதோ கீதம் பாடுது .

கிளி இரண்டும் இசை பாட 
கிண்கிணியின் ராகத்திலே 
கடல் அலையும் ஆடுது 
காதல் மொழி பேசுது 

நினைவு அழியா கனவுடனே 
நீண்ட தூரம் பறப்பதற்கு 
கிளி இரண்டும் சமரசங்கள் 
கடற்கரையில் புது வசந்தம் .

 

Link to comment
Share on other sites

அழகான, எளிமையான கவிதை. தொடருங்கள் உதயகுமார்.  😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, மல்லிகை வாசம் said:

அழகான, எளிமையான கவிதை. தொடருங்கள் உதயகுமார்.  😊

உங்கள் அழகான கருத்துக்கு நன்றி மல்லிகை வாசம் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.