Jump to content

கணனி பயில்வோம் August 09, 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கணனி பயில்வோம்

 
 
 
 
அன்பானஉள்ளங்களே !
இன்றைய நவீன உலகம் தகவல் தொழில்நுட்பத்தின் அபரிதமான வளர்ச்சி காரணமாக கைக்குள் அடங்கிவிட்டது. அவ்வளர்ச்சி காரணமாக விழிப்புலன் மாற்றாற்றல் உடையோருக்கு எவ்வாறான வசதிவாய்ப்புக்கள் வந்துள்ளது, அதை எம்மால் எந்தளவில் பயன்படுத்த முடியும் என்பதை எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்ததொடரினை எழுதுகின்றேன். இதற்காக நான் வாசித்த நூல்களில் இருந்து பெறப்பட்ட விடயங்கள் மற்றும் நானாக கணனியில் பரீட்சித்த விடயங்களையே இதில் எழுதியுள்ளேன். இங்கு நான் குறிப்பிட்டுள்ள மென்பொருள்களுக்கான நிறுவும் வழிமுறைகளைக்கொண்டு,  விழிப்புலன் உடைய ஒருவரின் உதவி கிடைக்காத சந்தர்ப்பத்தில் நாமாகவே கணனியில் நிறுவிக்கொள்ள முடியும் என்பதை உங்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றேன்.
 நன்றி 
தொகுப்பு.
ஆசிரியர்
சி.பிரதீபன்
 
 
விழிப்புலன் மாற்றாற்றல் உடையோரின் வாழ்வில் தகவல்தொழிநுட்பத்தின் பங்கு
அறிமுகம்
            உலகில் வாழும் அனைவரும் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு   தொழில்நுட்பம் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இன்று வளர்ச்சியடைந்து வருகின்றது.          அதில் பிரதான இடத்தை வகிக்கின்ற கணனியும் அதனை சார்ந்த இலத்திரணியல் சாதனங்களும் விழிப்புலன் மாற்றாற்றல் உடையோரின் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களைஇங்கு பார்ப்போம்.
கணனி என்பது குறித்த கட்டளையின் படி செயற்படத்தக்கதும் தரவுகளை கட்டளைகளாக மாற்றக்கூடியதும் சேமிப்புத் திறன் உடையதும் பின்னர் அவற்றை மீள வழங்கக்கூடியதுமான ஓர் இலத்திரணியல் சாதனமே கணனி ஆகும்.இது வன்பொருள், மென்பொருள், உயிர்ப்பொருள்(மனிதன்) ஆகியவற்றின் கூட்டு எனவும் கூறலாம்.
            கணனியையும் அதன் பாவணையாளரையும் (user) இணைக்கும் ஒரு ஊடகமாகவே மென்பொருட்கள் (software) தேவைப்பட்டன. இவைகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்க புதிய பல மென்பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.இவை அனைவருடைய பாவனைக்கும் உகந்ததாகவும் இலகுவான முறையில் கையாளத் தக்கதாகவும் வெளிவந்துள்ளன.அனைவரும் பாவிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் உருவாக்கப்படும் மென்பொருட்களில் சில, விழிப்புலன் மாற்றாற்றல்   உடையோருக்கும் ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு உருவாக்கப்பட்டவை நான்கு வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.
01.   திரைப் படிப்பான்(Screen Readers)
02.  ஸ்கான் செய்து வாசிப்பது (Scanning and Reading Software)
03.  இணையத் தேடல் பகுதியை வாசிப்பது (Internet Browser Readers)
04.   பல வகைப்பட்ட மென்பொருட்கள் (Miscellaneoussoftware’s)
அடுத்து நாம் மேற்குறிப்பிட்ட வகைகள் தொடர்பாக விரிவாக ஆராய்வோம்
 திரைப்படிப்பான் (Screen Reader)
            இம் மென்பொருள் கணனியை பாவிக்கும் போது அதன் ஒவ்வொரு விசையினதும் செயற்பாட்டுக்கு ஏற்ப ஒலியின் உதவியுடன் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கும். அதாவது திரையில் தோன்றுபவற்றை ஒலி வடிவில் எமக்கு அறியத் தருகின்றன. தற்போது  திரைப்படிப்பானாக  பின்வரும் மென்பொருள்கள் உலகலாவிய விழிப்புல மாற்றாற்றல் உடையவர்களால் கணனியில் நிறுவப்பட்டு  பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
Windows eye, Hal, Jaws, Nvda, System Access (Windows), Apple VoiceOver போன்றவை அவற்றுல் சிலவாகும்.
 
தொடரும்
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி விசுகு, பகிருங்கள் பிரயோசனமாய் இருக்கும் என் போன்றவர்களுக்கு.......!  👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.