Jump to content

தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு குறித்துக் கருத்துக் கூறிய போது காஷ்மீரை சுட்டிக்காட்டிய மஹிந்த


Recommended Posts

வட இந்தியாவின் ஜம்மு – காஷ்மீரின் விசேட அந்தஸ்த்தை இரத்துச் செய்த பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் செயலுக்குப் பிறகு முதற்தடவையாக அதுகுறித்து அரசியல் ரீதியில் கருத்துத் தெரிவித்த இலங்கை அரசியல் தலைவர் முன்னாள் ஜனாதிபதியும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷவே.

mhinda_rajabaksha.jpg

தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கத்திற்கான சாத்தியப்பாடு குறித்துக் கருத்துத் தெரிவித்த போது, இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தில் நடந்திருப்பவற்றைக் கவனத்திற்கொண்டே இலங்கையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

வீரகேசரி நாளிதழுக்கு நேற்றைய தினம் ராஜபக்ஷ வழங்கிய நேர்காணலில் அவர் தெரிவித்த கருத்தை மேற்கோள்காட்டி இந்தியாவின் பிரபல தேசிய தினசரிகளில் ஒன்றான 'த இந்து' நேற்று செய்தியொன்றை வெளியிட்டிருக்கிறது.

நீண்டகாலமாகத் தீர்வு காணப்படாமல் இருக்கும் தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்கான அவரது எதிர்காலத் திட்டங்கள் குறித்து கேட்கப்பட்ட போது முன்னாள் ஜனாதிபதி பின்வருமாறு கூறியிருக்கிறார்:

'இருவகையான அபிப்பிராயங்கள் தற்போது நிலவுகின்றன. சிலர் புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவரப்பட வேண்டுமென்று விரும்புகின்றனர்.

 வேறு சிலர் சமஷ்டி அடிப்படையிலான ஏற்பாடு ஒன்று வேண்டுமென விரும்புகின்றார்கள். அரசியலமைப்பிற்கான 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான அரசியல் தீர்வே போதுமானது என்று இன்னும் சிலர் கூறுகின்றார்கள். 

ஆனால் காணப்படக்கூடிய எந்தவொரு தீர்வும் நாட்டைப் பிளவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. காஷ்மீரில் நடந்திருப்பவற்றைப் பாருங்கள். இவை எல்லாவற்றையும் மனதிற்கொண்டு தான் நாம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவையிருக்கிறது'.

https://www.virakesari.lk/article/62396

Link to comment
Share on other sites

வட கிழக்கையும் ஒரு யூனியன் பிரதேசமாக இந்தியாவுடன் இணைத்து விடலாமா? 

"ஆனால் காணப்படக்கூடிய எந்தவொரு தீர்வும் நாட்டைப் பிளவுபடுத்துவதாக இருக்கக்கூடாது. காஷ்மீரில் நடந்திருப்பவற்றைப் பாருங்கள். இவை எல்லாவற்றையும் மனதிற்கொண்டு தான் நாம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவையிருக்கிறது'."

நம் கியால் : லடாக் யூனியன் பாராளுமனற உறுப்பினர் எவ்வாறு தனது மக்களுக்காக பேசுகின்றார்? தனது மக்களின்  அழிந்து போய் கொண்டிருக்கும் மொழியை மீண்டும் உயிர்  கொடுக்கும்   துணிச்சல்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொத்து ரொட்டி போட போகினமா.? 😢

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கொத்து ரொட்டி போட போகினமா.? 😢

 

தமிழ் ஈழத்தில்.....  ஏற்கெனவே, 
வடக்கு இந்தியனும்... சிங்களனும்,  கொத்து  ரொட்டி செய்து விட்டார்கள். 😨 😥

இப்போ...  நாங்கள், இந்தியாவின் வடக்கிலோ, ஸ்ரீலங்கவின் தெற்கிலோ....
ஒரு மேசையை... வைத்து,  கொத்து ரொட்டி செய்வது தான் முறை. :)

அது... காலத்தின், கட்டாயம். அதனை ஆவலுடன்... எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

 

தமிழ் ஈழத்தில்.....  ஏற்கெனவே, 
வடக்கு இந்தியனும்... சிங்களனும்,  கொத்து  ரொட்டி செய்து விட்டார்கள். 😨 😥

இப்போ...  நாங்கள், இந்தியாவின் வடக்கிலோ, ஸ்ரீலங்கவின் தெற்கிலோ....
ஒரு மேசையை... வைத்து,  கொத்து ரொட்டி செய்வது தான் முறை. :)

அது... காலத்தின், கட்டாயம். அதனை ஆவலுடன்... எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.  :grin:

நாங்களும் ஆவலோடு காத்து கிடக்கோம் தோழர்.. போக ரொட்டிய கொத்துவது ஹாரிஸ் ஜெயராஜ் இசை போலவே கிடக்கு.😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

நாங்களும் ஆவலோடு காத்து கிடக்கோம் தோழர்.. போக ரொட்டிய கொத்துவது ஹாரிஸ் ஜெயராஜ் இசை போலவே கிடக்கு.😊

அய்யோஓ..... கொத்து ரொட்டி கொத்துவது,  ஹாரிஸ் ஜெயராஜ் இசையா..... 😎
உங்கள்... லொள்ளை... தாங்க முடியவில்லை, சகோதரம். :grin:

Link to comment
Share on other sites

43 minutes ago, தமிழ் சிறி said:

அய்யோஓ..... கொத்து ரொட்டி கொத்துவது,  ஹாரிஸ் ஜெயராஜ் இசையா..... 😎
உங்கள்... லொள்ளை... தாங்க முடியவில்லை, சகோதரம். :grin:

ஹரிஸ் ஜெயராஜ் ரசிகராக இருப்பாரோ? 😂

4 hours ago, ampanai said:

வட கிழக்கையும் ஒரு யூனியன் பிரதேசமாக இந்தியாவுடன் இணைத்து விடலாமா? 

தற்காலிகமாக இணைந்திருந்த வடகிழக்கையே வடக்கு கிழக்கு என இரண்டாக பிரித்து விட்டார்கள், வடகிழக்கை இந்தியாவுடன் இணைக்க விடுவார்களா? 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Lara said:

ஹரிஸ் ஜெயராஜ் ரசிகராக இருப்பாரோ? 😂

புரட்சி &  லாரா.... நான் இது வரை,  ஹரிஸ் ஜெயராஜ் அவர்களின் இசையை கேட்டதில்லை
அவரின்... இசை, கொத்து ரொட்டியை.. கொத்துவது மாதிரியா.... இருக்கும்.
இயலுமென்றால்..... அவரின், இசையை.... இணைத்து விடுங்களேன்.  :)

Link to comment
Share on other sites

4 hours ago, தமிழ் சிறி said:

புரட்சி &  லாரா.... நான் இது வரை,  ஹரிஸ் ஜெயராஜ் அவர்களின் இசையை கேட்டதில்லை
அவரின்... இசை, கொத்து ரொட்டியை.. கொத்துவது மாதிரியா.... இருக்கும்.
இயலுமென்றால்..... அவரின், இசையை.... இணைத்து விடுங்களேன்.  :)

ஹரிஸ் ஜெயராஜ் மற்றவர்களது இசையை கொப்பி பண்ணினாலும் பல நல்ல மெலொடி பாடல்களை தந்திருக்கிறார். அவர் இசை கொத்து ரொட்டி கொத்துவது போலல்ல.

ஆனால் நீங்கள் இணைத்த வீடியோவையும் அக்கருத்தையும் வாசித்த பின் இந்த பாடலை கேட்க கொத்துரொட்டி சத்தம் தான் எனக்கு கேட்குது. 😂

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.