Jump to content

இதற்குப் பெயர் பக்தியா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் சொல்கிறேன்   நண்பர்களே

மதம்  சார்ந்த  விடயங்களில்  மற்றவர்கள்  மூக்கை நுளைப்பது வெறுப்பாகவே  பார்க்கப்படும்

நீங்கள்  அறியாததல்ல

எமக்குள்  பிரிவுகள்  வேண்டாமே

Link to comment
Share on other sites

  • Replies 186
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

செத்தை பாம்பை அடித்துக் கொண்டிருக்காமல் போய் வேலையைப் பாருங்கப்பா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

 

மதம்  சார்ந்த  விடயங்களில்  மற்றவர்கள்  மூக்கை நுளைப்பது வெறுப்பாகவே  பார்க்கப்படும்

 

நீங்கள் கூறும் எந்த அறிவுரையையும் கேட்க நான் தயாராக இருக்கிறேன் 
நீங்கள் நேரடியாக பேசினால் கூட நான் இதில் கோபிக்கமாட்டேன். 

நான் புரிதல் என்பது ஏன் புரியப்படாமலே போகிறது 
எனும் கேள்வியுடன் மட்டுமே இங்கே இப்போது நிற்கிறேன். 

மற்றவர்கள் என்று  நீங்கள் கூற முனைவது யாரை? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Maruthankerny said:

நீங்கள் கூறும் எந்த அறிவுரையையும் கேட்க நான் தயாராக இருக்கிறேன் 
நீங்கள் நேரடியாக பேசினால் கூட நான் இதில் கோபிக்கமாட்டேன். 

நான் புரிதல் என்பது ஏன் புரியப்படாமலே போகிறது 
எனும் கேள்வியுடன் மட்டுமே இங்கே இப்போது நிற்கிறேன். 

மற்றவர்கள் என்று  நீங்கள் கூற முனைவது யாரை? 

பேசப்படும் மதத்தை  சாராதவர்கள்

எப்பொழுதுமே

அந்த மதத்தை  சேராதவர்கள் அல்லது  அதிலிருந்து விலகியவர்கள்

அந்த  மதத்தை  விமர்சிக்கும்  போது

அது நன்மையை  விட  தீமையையும்

வெறுப்பையுமே தருகிறது

எனவே  சில  நாட்களாக இங்கே மதம்  சார்ந்து  நடக்கும் தாக்குதல்களும்  மறு  தாக்குதல்களும்

எமக்குள்  விரிசலை  ஏற்படுத்துவதை  நான்  விரும்பவில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, விசுகு said:

பேசப்படும் மதத்தை  சாராதவர்கள்

எப்பொழுதுமே

அந்த மதத்தை  சேராதவர்கள் அல்லது  அதிலிருந்து விலகியவர்கள்

அந்த  மதத்தை  விமர்சிக்கும்  போது

அது நன்மையை  விட  தீமையையும்

வெறுப்பையுமே தருகிறது

எனவே  சில  நாட்களாக இங்கே மதம்  சார்ந்து  நடக்கும் தாக்குதல்களும்  மறு  தாக்குதல்களும்

எமக்குள்  விரிசலை  ஏற்படுத்துவதை  நான்  விரும்பவில்லை

உங்களின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் ...
ஊரில் பொதுவாகவே சொல்வார்கள் 
மாட்டுக்கு மாடு சொன்னா கேட்க்காதாம் .... மணி கட்டின மாடுதான் சொல்லவேண்டும் என்று.
இப்படியான ஒரு பொது புத்தி இருக்கலாம் என்பதை ஒத்தததாக உங்கள் கருத்தும் இருக்கிறது.

இதுக்குள் நான் அடங்கவில்லையே?
நான் எனது மதம் பற்றியே பேசுகிறேன் காரணமும் சொல்கிறேன் 
எனது வீட்டுக்குள் குப்பைகளை வைத்துக்கொண்டு எப்படி அடுத்தவன் மதம் பற்றி பேசுவது என்று?

என்னுடைய கருத்துக்கும் 
கிறிஸ்தவ பாதிரிகளும் 
மற்ற கயவர் காவலிகளும்தானே பதிலாக வருகிறார்கள்? 

இதை இங்கு கருத்து எழுதும் யாரும் மறுக்கவும் இல்லை மறைக்கவும் இல்லை 
அவர்களுக்கான தண்டனை கொடுத்து அதை சரி செய்யவேணும் என்றுதான் எல்லோரும் எழுதுகிறார்கள் 

ஏன் அதே எழுத்து இந்துசமயத்துக்கு வக்காலத்து வாங்குவரிடம் இருந்து வரவில்லை.

மேலே இரண்டு சிறார்களை பக்தி எனும் பெயரில் கொடுமை செய்கிறார்கள் 
இதில் என்ன நன்மை இந்து மதத்துக்கு உண்டு?
இதை நீக்கினால் அடுத்தவனும் மதிப்பான் அல்லவா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Maruthankerny said:

உங்களின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் ...
ஊரில் பொதுவாகவே சொல்வார்கள் 
மாட்டுக்கு மாடு சொன்னா கேட்க்காதாம் .... மணி கட்டின மாடுதான் சொல்லவேண்டும் என்று.
இப்படியான ஒரு பொது புத்தி இருக்கலாம் என்பதை ஒத்தததாக உங்கள் கருத்தும் இருக்கிறது.

இதுக்குள் நான் அடங்கவில்லையே?
1 - நான் எனது மதம் பற்றியே பேசுகிறேன் காரணமும் சொல்கிறேன் 
எனது வீட்டுக்குள் குப்பைகளை வைத்துக்கொண்டு எப்படி அடுத்தவன் மதம் பற்றி பேசுவது என்று?

என்னுடைய கருத்துக்கும் 
கிறிஸ்தவ பாதிரிகளும் 
மற்ற கயவர் காவலிகளும்தானே பதிலாக வருகிறார்கள்? 

இதை இங்கு கருத்து எழுதும் யாரும் மறுக்கவும் இல்லை மறைக்கவும் இல்லை 
அவர்களுக்கான தண்டனை கொடுத்து அதை சரி செய்யவேணும் என்றுதான் எல்லோரும் எழுதுகிறார்கள் 

ஏன் அதே எழுத்து இந்துசமயத்துக்கு வக்காலத்து வாங்குவரிடம் இருந்து வரவில்லை.

2- மேலே இரண்டு சிறார்களை பக்தி எனும் பெயரில் கொடுமை செய்கிறார்கள் 
இதில் என்ன நன்மை இந்து மதத்துக்கு உண்டு?
இதை நீக்கினால் அடுத்தவனும் மதிப்பான் அல்லவா ?

1 -  மேலே இரண்டு  விதமானவர்களை  குறிப்பிட்டிருக்கின்றேன்

அந்த மதத்தை  சேராதவர்கள் அல்லது  அதிலிருந்து விலகியவர்கள்

  இதுவரை  உங்களது  எழுத்தை  வாசித்தவன்  என்றமுறையில்  நீங்கள்   இதில்  இரண்டாவது  வகையினர்

 

2 - பழைய  செருப்பால்   அடிக்கணும்  என்று நானே  எழுதியிருக்கின்றேன்

அத்துடன்  திரிக்கான விடை  முடிவடைந்தது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கு இப்போது எழுதுவது மதம் தொடர்பாகவோ 
அல்லது அதன் சரி பிழை சார்ந்தோ அல்ல அதை இப்போ தள்ளிவைக்கவே விரும்புகிறேன்.

எனது கேள்வியும் தேடலும் 
இங்கே எழுதுபவர்களின் மனோநிலை சார்ந்தது 
இங்கேயே இப்படி நன்கு பரிச்சயமான நாங்களே ஒரு முடிவை 
இந்து சம்மந்தமாக எட்ட முடியவில்லை என்றால் .......

எமது நாட்டு பிரச்சனை அது இது என்று வரும்போது 
எவ்வாறு தீர்வை காணப்போகிறோம்?
இப்படியொரு மனோநிலையை வேறு இனங்களில் காண கூடியதாக இல்லை.

நான் தெளிவாக எழுதுகிறேன் 
இந்த பிள்ளைகளின் பெற்றோரை என்னால் புரிய முடிகிறது 
அவர்களை நான் குற்றம் சாட விரும்பவும் இல்லை.... அவர்களுடைய தவறு 
அவர்கள் வாழும் சமூகம் சார்ந்தது .

எதை எட்டி நின்று பார்க்கும் மனிதர்களின் மனோநிலைதான் என்னால் விளங்க முடியாது இருக்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Maruthankerny said:

நான் இங்கு இப்போது எழுதுவது மதம் தொடர்பாகவோ 
அல்லது அதன் சரி பிழை சார்ந்தோ அல்ல அதை இப்போ தள்ளிவைக்கவே விரும்புகிறேன்.

எனது கேள்வியும் தேடலும் 
இங்கே எழுதுபவர்களின் மனோநிலை சார்ந்தது 
இங்கேயே இப்படி நன்கு பரிச்சயமான நாங்களே ஒரு முடிவை 
இந்து சம்மந்தமாக எட்ட முடியவில்லை என்றால் .......

எமது நாட்டு பிரச்சனை அது இது என்று வரும்போது 
எவ்வாறு தீர்வை காணப்போகிறோம்?
இப்படியொரு மனோநிலையை வேறு இனங்களில் காண கூடியதாக இல்லை.

நான் தெளிவாக எழுதுகிறேன் 
இந்த பிள்ளைகளின் பெற்றோரை என்னால் புரிய முடிகிறது 
அவர்களை நான் குற்றம் சாட விரும்பவும் இல்லை.... அவர்களுடைய தவறு 
அவர்கள் வாழும் சமூகம் சார்ந்தது .

எதை எட்டி நின்று பார்க்கும் மனிதர்களின் மனோநிலைதான் என்னால் விளங்க முடியாது இருக்கிறது?

மீண்டும்  முதலிருந்தா  ராசா

நாடு தாங்குமா??:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:

அங்கபிரதட்சணம் செய்வது சைவ வழிபாட்டு முறையில் ஒன்று.அதையெல்லாம் மூட நம்பிக்கை என்று கருதமுடியாது.

Bildergebnis für à®à®à¯à®à®ªà®¿à®°à®¤à®à¯à®à®£à®®à¯

18 hours ago, இணையவன் said:

ஏன் என்று விளக்க முடியுமா ? :grin:

எமது வழிபாட்டு முறைகளில் இதுவும் ஒன்று.....😎

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, விசுகு said:

1 -  மேலே இரண்டு  விதமானவர்களை  குறிப்பிட்டிருக்கின்றேன்

அந்த மதத்தை  சேராதவர்கள் அல்லது  அதிலிருந்து விலகியவர்கள்

  இதுவரை  உங்களது  எழுத்தை  வாசித்தவன்  என்றமுறையில்  நீங்கள்   இதில்  இரண்டாவது  வகையினர்

 

2 - பழைய  செருப்பால்   அடிக்கணும்  என்று நானே  எழுதியிருக்கின்றேன்

அத்துடன்  திரிக்கான விடை  முடிவடைந்தது

இதுவரைக்கும் நீங்கள் எழுதியதுக்கு நன்றி !

கொஞ்சம் புரிகிறது .....
நீங்கள் என்னைப்பற்றி சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன் 
நான் கடவுளை கூட நம்புவதில்லை .... ஆகவே மதத்தை கடந்தவனாகவே இருக்க வேண்டும்.

அப்போ யார் எழுதுவது? 
என்பதுதான் கேள்வி ......... இப்படியே இதை விடுவோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Maruthankerny said:

இதுவரைக்கும் நீங்கள் எழுதியதுக்கு நன்றி !

கொஞ்சம் புரிகிறது .....
நீங்கள் என்னைப்பற்றி சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன் 
நான் கடவுளை கூட நம்புவதில்லை .... ஆகவே மதத்தை கடந்தவனாகவே இருக்க வேண்டும்.

அப்போ யார் எழுதுவது? 
என்பதுதான் கேள்வி ......... இப்படியே இதை விடுவோம். 

நானும்  அதே...

ஆனால் அம்மாவை  குற்றம்  சொன்னால்   பொத்துக்கொண்டு வந்து  விடுகிறது

யான்  என்ன  பண்ணும்????

Link to comment
Share on other sites

இவ்வாறான விடயங்கள் பொது வெளிக்கு வரும்  போது நாம் அனைவரும் திறந்த மனதுடன் விவாதிக்க வேண்டியது இதை போல் எம்மால் கடைப்பிடிக்கப்படும் அனைத்து மூடப்பழக்கங்களையும் பற்றி என்பது எனது அபிப்பிராயம். இவை மூடத்தனம் என்று இங்கு கருத்தெழுதும் அனைவரின் மனச்சாட்சிக்கு மட்டுமல்ல  தமிழர்களிலும் பலரின்   மனச்சாட்சிக்கும. நன்கு தெரியும். இருப்பினும் ஈகோ காரணமாக எல்லா  மூடத்தனத்துக்குள்ளும் ஏதோ அறிவியல் கலந்துள்ளதாக தம்மை தாமே  ஏமாற்றி அதற்கு வக்காலத்து வாங்கி மக்களை மட்டுமல்ல தம்மையும் ஏமாற்றி வருகிறார்கள். . 

எங்கோ பல மில்லியன் கிலோ மீற்றருக்கு அப்பால் சுற்றும்  Saturn planet மற்றும்  Jupiter planet    தன்னை பிடித்துவிடும் என்று அஞ்சுவதும் அதற்கு எண்ணெய் எரித்து பரிகாரம் தேடுவதும் மிக மோசமான அறிவீனத்தின் வெளிப்பாடு. இவை போன்ற எண்ணற்ற மூடத்தனத்தை மக்கள்  மனதில் விதைத்து அவர்களை நிரந்தரமாக அச்சநிலையில் வைத்திருப்பதன் மூலம் தமது வாழ்வை பெருக்கிக்கொள்ளலாம் என்பதே இவற்றை பரப்பிய அயோக்கியர்களின் நோக்கமாகும் 

இதை உணர்ந்து இப்படியான மூடத்தனத்தை களை எடுப்பது  எமது தமிழ் சமுதாயம் முன்னேற மிக முக்கியமான செயற்பாடு என்பது எனது கருத்து. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Justin said:

உண்மையில் இந்த விடயத்தில் நீள நீளமாக எழுத ஒன்றும் இல்லை! சிறுவர் துன்புறுத்தல் சட்ட ரீதியிலும் தவறு தார்மீக ரீதியிலும் தவறு! இதை இன மத பேதமில்லாமல் யாரும் சுட்டிக்காட்டவும் கண்டிக்கவும் வேண்டும். அந்தக் கண்டனம் வரமுதல் மனதில் "ஐயோ என் மதநம்பிக்கை!" என்ற கணநேரத்தயக்கம் ஒருவருக்கு வந்தால், அப்படிப்பட்டவருக்கு ஆழமான பிரச்சினைகள் இருக்கின்றன என்று அர்த்தம்! அமெரிக்க கிளிஷேயில் சொல்வது போல: I do not envy them!

அவ்வளவு தான் இந்தத் திரிக்கு என் நேரக் கோட்டா!

இந்தக் கருத்தை உங்களது இரண்டாவது கருத்தாய் இத் திரியில் எழுதி இருந்தால்  உங்கள் மேல் உள்ள மரியாதை இன்னும் உயர்ந்து இருக்கும்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Justin said:

 மேலே படத்தில் இருப்பது போன்ற ஒரு பிழையை பிழை என்று சொல்ல உங்கள் போன்ற ஒருவருக்கு நேர்மை இல்லை!  வேறு இரண்டு மதங்களை இழுத்து அதிலேயும் பொய் செய்தியைக் கலந்து தான் சமாளிபிகேசன் செய்ய வேண்டியிருக்கிறது! அப்படியானால் உங்கள் தனிப்பட்ட உள்ளக நேர்மையை விட ஒரு மதத்தின் சடங்கு தான் உங்களை பெருமைக்குள்ளாக்குகிறது! 

யார் அதை பிழையில்லை என்று சொன்னார்கள். எமது விருப்புகளையோ அல்லது வேண்டுதல்களையோ மற்றவர்கள் மீது திணிப்பது அநாகரீகமானது. அதுவும் இப்படி சிறு குழந்தைகள் மீது திணிப்பது கடுமையாக கண்டிக்கப்படவேண்டியதே. அதற்காக மதச்சடங்குகள் எல்லாவற்றையும்  (ஒருவர் தானாக விரும்பி செய்வதை) மட்டம் தட்டுவதை நிறுத்திக்கொள்ளுங்கள். 

அதுசரி எந்தக்கோவிலில் சும்மா போறவாற ஆட்களையெல்லாம் பிடித்து அலகு  குத்தி அனுப்பிறவை. சும்மா சகட்டுமேனிக்கு எழுதாமல் மாறின மதத்துக்காவது விசுவாசமா இருக்கப்பாருங்கோ (இன்னொருவன் வந்து இன்னும் கொஞ்சம் கூட சலுகைகள் தாறன் எண்டால் அதுக்கு மாறாமல்). உங்கட மதத்தை நாங்கள் விமர்சிப்பதில்லையே, அதேபோல் நீங்களும் பொத்திக்கொண்டு இருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Justin said:

யாரும் தான் தனக்கு முக்கியம் என்று கருதும் ஒரு காரணத்திற்காக மதம் மாறலாம் என்பது என் நிலைப்பாடு! மதங்கள் ஒன்றும் சட்டத்தால் பிறந்த நிலையிலேயே இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப் பட்ட கூறு அல்ல! இதை ஒரு அமைப்பு ஊக்குவித்தால் அதில் தவறில்லை! தலையில் துவக்கு வைத்து ஐசிஸ் போல செய்தால் தவறு, குற்றம்! மாறுபவன் சொல்லும் காரணம் வலுவான காரணமா இல்லையா என்று மதிப்பிடும் உரிமை யாருக்கும் கிடையாது! இது கறுப்பு வெள்ளை நிலைமை, இதில் உங்களுக்குக் குழப்பம் இருப்பது என் தவறல்ல! 

அதேபோல் ஒருவன் நேர்த்திக்காக காவடி எடுப்பதும், பிரதட்ச்சணை செய்வதும் அவரவரின் விருப்பமே. அதில் தலையிட  நீங்கள் யார். அவர்  யாரையும் அதை செய்ய சொல்லி நிர்பந்திக்காதவரை ஒருவர் செய்வதை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை.

Link to comment
Share on other sites

இந்து மதமல்லாத பிற மதங்களைப் பற்றியும் எழுதவேண்டிய காரணத்தைக் கேட்போருக்கு:

இந்து மத மூடநம்பிக்கையை எதிர்ப்பதாக இவ்வாறான பல திரிகள் முன்னரும் ஆரம்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டன. இது இங்குள்ள பலருக்கும் தெரியும்.

இத் திரிகளுக்கு கருத்து எழுதுபவர்கள் ஒட்டுமொத்தமாக இந்து மதத்தில் இருக்கும் வேறு பல நம்பிக்கைகளையும் அனாவசியமாகக் கேலி செய்கிறார்கள் என்று திரிகளை முழுவதுமாக வாசித்தவர்களுக்குப் புரியும். 

இவ்வாறு அவர்கள் வீண் வம்பிழுக்கும்போது நாமும் தலைப்பை விட்டு விலகி அவர்களின் கருத்துக்கு மறு கருத்து எழுதவேண்டிய நிலை உள்ளது. மற்ற மதங்்களிின் குறைகளை எழுதுவதன் நோக்கம் 'எல்லா மதங்களிலும் குறைகள் உண்டு தான். அதற்காக இந்து மதத்தை இலக்காக வைத்து நடாத்தப்படும் அனாவசிய தாக்குதல்களை வேடிக்கை பார்க்க எனது மனம் ஒப்பவில்லை. கூடவே ஏனைய மதங்களின் குறைகளை மறைக்கும் போது அதைச் சுட்டிக் காட்டி குறைகள் எங்கும் உண்டு எனப் புரியவைக்கத் தான்.

ஏனைய மதங்களை கிண்டவடிக்கும் திரிகளை நானாகவே ஆரம்பித்ததும் கிடையாது. அவ்வாறான திரிகளில் நான் அநாவசியமாக மூக்கை நுழைப்பதும் இல்லை. 

இங்கு ஒரு படத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு முடிவுக்கு வர முடியாது. சம்பந்தப்பட்ட பெற்றோரை விசாரித்தால் அல்லது அந்த இடத்தில் இருந்தோரைக் கேட்டால் தான் இதற்கான தெளிவான பதில் கிடைக்கும். 

பெரிய பதவியில் முன்னுதாரணமாக இருக்க வேண்டிய பாதிரியார்கள் செய்த பாலியல் தவறுக்கும், இந்தப் படத்திற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. முன்னுதாரணமாக இருக்க வேண்டியோரை முதலில் திருத்தலாமே!

Link to comment
Share on other sites

என்றும் தமிழனுக்கு என்று ஒரு சுதந்திர நாடு அமையப்போவதில்லை. எம்மை சுற்றி பார்த்தால், இன்றும் மூன்று இல்லை நான்கு தலைமுறையில் தமிழே இருக்காது. ஆனால், தமிழர்கள் இருப்பார்கள் உலகெங்கும். 

தமிழே இல்லாத நாடுகளிலும் கலாச்சாரம் உலக வாழ் தமிழர்களை இணைக்கலாம். அந்த கலாச்சாரம் என்பது மரபு, பண்பாடு, உணவு, உடை மற்றும் மதமும் சார்ந்து இருக்கலாம். 

எம்மால் நாட்டைதான் உருவாக்க முடியவில்லை மொழியை தான் வளர்க்க முடியவில்லை கலாச்சாரம் ஆவது அந்த நாடுகளில் அவற்றின் சட்ட்ங்களுக்கு அமைய வாழட்டும். அதற்கு உதவாவிட்டாலும் அறிவியல், விளக்கம் எனக்கேட்டு இருப்பதையும் அழிக்காமல் விட்டுவிடுவோம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எது தப்பு?
1. பாதிரிகளின் சிறுவர் துஸ்பிரயோகம்
2. சுன்னத்
3. குழந்தைகளுக்கு அலகு குத்துவது
4. குழந்தை பிக்குகள்
5. ஆசை/பயம் காட்டி மதம் மாற்றுவது

நீ வேற்று மதத்தான் நீ என் மதத்தை பற்றி கதைக்கபடாது அல்லது நீ நம்பிக்கை அற்றவன் நீயும் கதைக்க கூடாது என்பதெல்லாம் குழு மனோநிலையே அன்றி வேறில்லை.

மனித குலத்துக்கு விரோதமான செயலகளை கண்டிக்க அது என்ன மதத்தில் இருந்து வருகிறது என்று பார்ப்பது தேவை அற்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் இனத்தின் வழமை என்பதால், வயசுக்கு வந்த பிள்ளையை - புலம் பெயர் நாட்டில், மாதம் 3 நாள் வீட்டு கார்டனில் கொட்டில் போட்டு வைக்கிறோமா?

இறந்த பிணத்தை வெட்ட வெளியில் நெஞ்சாங் கட்டை வைத்து ஏரிக்கிறோமா?

வயது வந்தவர்கள் சமய நம்பிக்கை என்றபெயரில் தூக்கு காவடி எடுங்கோ, தீ மிதியுங்கோ, அல்லது சியாக்கள் செய்வது போல சங்கிலியால் ரத்தவாறாக அடியுங்கோ, பெண்டிகோஸ்டர் செய்வது போல் மருந்தெடாமல் சாவுங்கோ - ஆனால் பிள்ளைகள் பெற்றாரின் சொத்து அல்ல. மிருகங்களுகே உரிமை பேசும் காலத்தில், முடிவெடுக்கும் பராயம் வராத குழந்தைகள் மீது, அது எந்த மதமாகினும், மதத்தின் பெயரால் வன்முறை ஏவப்பட்டால் - அதை தட்டிக் கேட்டே ஆகவேண்டும்.

இதுவே வெளிநாட்டில் நடந்திருந்தால் இப்போ புள்ளைகள் சோசல் சேவிசிடம் இருந்திருக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

எது தப்பு?

2. சுன்னத்
.

மனித குலத்துக்கு விரோதமான செயலகளை கண்டிக்க அது என்ன மதத்தில் இருந்து வருகிறது என்று பார்ப்பது தேவை அற்றது.

பல்கலைக் கழகத்தில் தொடங்கிய முதல் நாள் பகிடிவதையில் என்னிடம் கேட்ட கேள்விகளில் ஒன்று  குளிக்கும் போது முன் தோலை விரித்து சுத்தம் செய்யிறனீ தானே என்று.     கிணற்று குளியலின் வசதிகளில்  இந்த விதமான எண்ணப்பாடுகளே வந்ததில்லை என்று சொன்னேன் .  இதற்காண்டித்   தானே ஒரு பகுதியினர் தோலை முற்றாக அகற்றி விடுகிறார்கள் - 'எலிமினேஷன் of ரிஸ்க் ' என்று சொன்னார்கள்
அதை விடவும் உணர்ச்சி மேம்பாடு கட்டுப்பாடு என்று வேறு விடயங்களும் இருக்கின்றன போல் தெரிகின்றது
அடலீஸ்ட் இதனையாவது விட்டு விடலாமா   

 

Link to comment
Share on other sites

4 hours ago, ampanai said:

என்றும் தமிழனுக்கு என்று ஒரு சுதந்திர நாடு அமையப்போவதில்லை. எம்மை சுற்றி பார்த்தால், இன்றும் மூன்று இல்லை நான்கு தலைமுறையில் தமிழே இருக்காது. ஆனால், தமிழர்கள் இருப்பார்கள் உலகெங்கும். 

தமிழே இல்லாத நாடுகளிலும் கலாச்சாரம் உலக வாழ் தமிழர்களை இணைக்கலாம். அந்த கலாச்சாரம் என்பது மரபு, பண்பாடு, உணவு, உடை மற்றும் மதமும் சார்ந்து இருக்கலாம். 

எம்மால் நாட்டைதான் உருவாக்க முடியவில்லை மொழியை தான் வளர்க்க முடியவில்லை கலாச்சாரம் ஆவது அந்த நாடுகளில் அவற்றின் சட்ட்ங்களுக்கு அமைய வாழட்டும். அதற்கு உதவாவிட்டாலும் அறிவியல், விளக்கம் எனக்கேட்டு இருப்பதையும் அழிக்காமல் விட்டுவிடுவோம். 

 

பெருமைமிக்க தனது அடையாளமான மொழியை இழந்த பின்னர் இப்படியான குப்பைகளை வைத்திருப்பது    தமிழருக்கு இழிவையே தரும்.  மொழியை இழப்பார்களானால் அதன் பின்னர்  இந்த  தரங்கெட்ட  குப்பைகளை  தூக்கி எறிந்து விட்டு தாம் வாழும்   நாட்டு மக்களில் குடிமக்களில்  ஒருவராக மனித கலாச்சாரத்தில்  வாழ்வதே சிறந்தது. அதுவே அவர்களுக்கு  பெருமை தரும்.  நாடு  இல்லாவிட்டாலும் பரவாயில்லை,  தமிழ் மொழி  அழிந்து போனாலும் பரவாயில்லை. இப்படியான மூடத்தனங்கள்  மட்டும் எங்களை மட்டும் அடுத்த தலைமுறைக்கு கொடுத்தால் போதுமானது என்று நினைக்கும் அளவுக்கு உங்கள் அறிவை எங்கு அடகு வைத்தீர்கள். சிந்தித்து பாருங்கள்.

நீங்கள் கூறுவது எப்படி என்றால் வீடு வைத்திருக்கும் ஒருவர் ஏதாவது  காரணத்தால்  வீட்டை இழப்பேனோ  நிலை வந்த போது   தனது வீட்டை இழந்தாலும் பரவாயில்லை என் வீட்டில் இருந்த அழுக்கு மூட்டைகளை மட்டும் என்னிடம்  தந்து விடுங்கள். வாடகை வீட்டில் எனது அடையாளத்தை  பாதுகாக்க  அந்த அழுக்கு மூட்டைகளை வைத்துக்கொள்ளுகிறேன் என்று கூறுவதற்கு நிகரானது. 

Link to comment
Share on other sites

57 minutes ago, tulpen said:

நீங்கள் கூறுவது எப்படி என்றால் வீடு வைத்திருக்கும் ஒருவர் ஏதாவது  காரணத்தால்  வீட்டை இழப்பேனோ  நிலை வந்த போது   தனது வீட்டை இழந்தாலும் பரவாயில்லை என் வீட்டில் இருந்த அழுக்கு மூட்டைகளை மட்டும் என்னிடம்  தந்து விடுங்கள். வாடகை வீட்டில் எனது அடையாளத்தை  பாதுகாக்க  அந்த அழுக்கு மூட்டைகளை வைத்துக்கொள்ளுகிறேன் என்று கூறுவதற்கு நிகரானது. 

அது அழுக்கு மூட்டையா இல்லை அவரது சொத்தா என்பது அதை வைத்திருப்பவரின் பார்வையைப் பொறுத்தது. உங்கள் பார்வையில் அழுக்கு மூட்டையாக தெரிவது அவருக்கு மாபெரும் பொக்கிஷமாக இருக்கலாம். வெளியே நின்று பார்த்து எப்படி நீங்கள் யூகிக்க முடியும்? எல்லோருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும் என்று முற்போக்குவாதியான உங்களுக்கு தெரியாது போனதன் காரணம் என்ன???

அது சரி பிறர் வீட்டு சமாச்சாரங்களில் அப்படி என்ன அக்கறை உங்களுக்கு? உங்கள் மன அழுக்குகளை முதலில் களையுங்கள்; சூழல் அழகாய் தெரியும் உங்களுக்கு. 😊

5 hours ago, goshan_che said:

நீ வேற்று மதத்தான் நீ என் மதத்தை பற்றி கதைக்கபடாது அல்லது நீ நம்பிக்கை அற்றவன் நீயும் கதைக்க கூடாது என்பதெல்லாம் குழு மனோநிலையே அன்றி வேறில்லை.

இது குழு மனோநிலை அல்ல.

மற்றய மதங்களை முழுவதுமாக புரியாமல், ஏன் சொந்த மதத்தை பற்றிய அரைகுறை அறிவோடு பிறரின் நம்பிக்கையை கேவலப்படுத்த வேண்டாம் என்ற கோரிக்கை. 

அவ்வாறு மற்ற மதங்களை புரிந்து கொள்ள முயலும் போது இவ்வாறான வீண் விவாதங்கள் எழாது.

5 hours ago, goshan_che said:

மனித குலத்துக்கு விரோதமான செயலகளை கண்டிக்க அது என்ன மதத்தில் இருந்து வருகிறது என்று பார்ப்பது தேவை அற்றது.

இது மனித குலத்துக்கு விரோதமா இல்லையா எனத் தீர்மானிக்க திரியின் ஆரம்பத்தில் தரப்பட்ட படம் மட்டும் போதாது. உரியவர்களிடம் தீர விசாரித்தே முடிவு செய்யலாம்.

Link to comment
Share on other sites

5 hours ago, goshan_che said:

எங்கள் இனத்தின் வழமை என்பதால், வயசுக்கு வந்த பிள்ளையை - புலம் பெயர் நாட்டில், மாதம் 3 நாள் வீட்டு கார்டனில் கொட்டில் போட்டு வைக்கிறோமா?

இறந்த பிணத்தை வெட்ட வெளியில் நெஞ்சாங் கட்டை வைத்து ஏரிக்கிறோமா?

நாம் புலம்பெயர்ந்திருக்கும் இடத்தில் செய்ய முடியாத சூழ்நிலை என்பதால், செய்யக் கூடிய நிலையில் இருப்பவர்கள் அதைச் செய்வது தவறு என முடிவு பண்ணக்கூடாது. அவனவன் மனத் திருப்திக்காகவோ இல்லையேல் உண்மையான காரணங்களுக்காகவோ செய்யலாம். அது தவறில்லை. நாங்கள் அது புரியாமல் கண்டதையும் விமர்சிப்பது தான் தவறு.

5 hours ago, ampanai said:

தமிழே இல்லாத நாடுகளிலும் கலாச்சாரம் உலக வாழ் தமிழர்களை இணைக்கலாம். அந்த கலாச்சாரம் என்பது மரபு, பண்பாடு, உணவு, உடை மற்றும் மதமும் சார்ந்து இருக்கலாம். 

எம்மால் நாட்டைதான் உருவாக்க முடியவில்லை மொழியை தான் வளர்க்க முடியவில்லை கலாச்சாரம் ஆவது அந்த நாடுகளில் அவற்றின் சட்ட்ங்களுக்கு அமைய வாழட்டும். அதற்கு உதவாவிட்டாலும் அறிவியல், விளக்கம் எனக்கேட்டு இருப்பதையும் அழிக்காமல் விட்டுவிடுவோம். 

இதே தான் எனது கருத்தும். 😊

Link to comment
Share on other sites

நாட்டை  உருவாக்க முடியவில்லை. மொழியை காப்பாற்ற முடியவில்லை. மூடத்தனத்தை மட்டும்  எதிர்காலசந்ததியிடம் திணிப்போம்.  இது தான் எம் முன்னோர் எமக்கு காட்டிய வழி. அவர்இகளைம் அதையே எமக்கு செய்தார்கள். நல்ல வேளை புலம் பெயர் நாடுகளில் பல அறிவுள்ள தமிழ் பிள்ளைகளை சந்தித்தேன். அவர்களவது இந்த மூடர்களில் இருந்து தப்பி மனித கலாச்சாரத்தில் வாழட்டும். 

வயசுக்கு வந்த பெண்பிள்ளையை மாதம்  மூன்று நாள் வெளியில் கொட்டில் போட்டு விடுவதைக் கூட சந்தர்பம் கிடைத்தால் அதை செய்தால் என்ன என்று  ஆதரிப்பவர்களை மூடர்கள் என்று கூறாமல் வேறு  எப்படி கூறுவது. 

எதிர்கால் தமிழ்பிள்ளைகளே இந்த தலிபான் காட்டுமிராண்டிகளிடம் இருந்து தப்பிப் போய் மனி நாகரீகத்தோடு வாழுங்கள் என்று கூறுவதை தவிர வேறு என்ன சொல்ல. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.