Jump to content

இதற்குப் பெயர் பக்தியா?


Recommended Posts

55 minutes ago, மல்லிகை வாசம் said:

மூடத்தனம் மூடத்தனம் என்று மீண்டும் மீண்டும் கூறுவதால் மூடத்தனமாக முடியாது. 

நான் முன்னர் எழுதியது போல் எனது நம்பிக்கையில் நான் தெளிவாக உள்ளேன். பிறர் நம்பிக்கையை அவமதிப்பது ஒரு மனநோய். ஆக்கபூர்வமான கருத்தாடலுக்கும் உங்களுக்கும் வெகுதாரம். எனவே உங்களுக்கு பதில் தர வேண்டிய அவசியம் இனியும் எனக்கில்லை. நன்றி

உண்மையில் வரி வரி மூடத்தனத்தை ஆதரித்து தமிழ் மொழி அழிந்தாலும் பரவாயில்லை கலாச்சாரம்  என்ற போர்வையுடனான மூடத்தனமும் காட்டுமிராண்டித்தனமும் காப்பாற்றப்பட்டால் மட்டும்  போதும் என்று  வெட்கமின்றி  எழுதிய  உங்கள் பதிலை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் பல முற்போக்காளர்கள் இவ்விவாதத்தில் இணைந்தது எனக்கு மகழ்ச்சியை  தந்தது. பல காலம் மெளனமாக  இருந்த கோசன் சே போன்ற முற்போக்கு கருத்தாளர்களையே  உங்களது பழமைவாத மூடக்கருத்துகள்  கருத்துக்கள் தூண்டி விட்டது. அந்த வகையில் மகிழ்ச்சியே

கடவுள் நம்பிக்கை வேறு மதத்தின் பெயரால் பரப்படும் பைத்தியக்காரத்தனங்கள் வேறு என்பதைக் கூட புரியும் ஆற்றல் உங்களுக்கு இல்லை. இந்து மதம் பரப்பிய நச்சு விதைகளான மூடபழக்கங்கள் என்று நான் தெளிவாக எழுதியும. அதை வாசித்து கிரகிக்க முடியாத அளவுக்கு இருக்கிறது உங்கள் நிலமை மற்றும் புரிதல் . 

 

Link to comment
Share on other sites

  • Replies 186
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எல்லாவற்றையும் மீறி ஒரு சக்தி இருக்கின்றது. அது பல்வேறு வடிவங்களில்......

 

 

Link to comment
Share on other sites

23 hours ago, குமாரசாமி said:

அதல்லாம் எனக்கு சரிவராது.நான் நம்பமாட்டன். எனக்கு வெள்ளைக்காரன் சொல்லோணும்.கேம்பிரிஜ் யூனிவசிற்றி சொல்லோணும்.வெள்ளைக்கார அமெரிக்கன் சொல்லோணும். அப்பதான் நம்புவன்.😎
 

என்ன செய்ய அறிவியல் விடயங்களில் வெள்ளைகார அறிஞர்களும் பல்கலை கழகங்களும் சொல்வதை கேட்கவேண்டிய நிலையை உருவாக்கிவிட்டார்கள் எம் முன்னோர்கள். யோசிக்காதேங்கோ இட்லி, வடை,  சாம்பார், புளியோதரை எப்படி எப்படி செய்வது என்பதற்கு வெள்ளைகாரன் சொல்வதை  கடைசிவரை கேட்கமாட்டோம். எமது முன்னோர்கள் சொன்னதை மட்டும் தான் கேட்போம். 🤣🤣

இப்ப நாம் திருந்தினோம் என்றால் எதிர்கால சந்த‍தியாவது அறிவியல் விடயல்களில்  இந்த தலைமுறை சொன்னதை கேட்கும். இல்லை என்றால் அது தொடர்கதை தான்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

 

. இந்து மதம் பரப்பிய நச்சு விதைகளான மூடபழக்கங்கள்

 

இந்த மூடப் பழக்க வழக்கங்கள் எவை என்று தயவு செய்து பட்டியலிட்டு தர முடியுமா ( நீங்கள் முன்னரே பட்டியலிட்டிருந்தாலும் நான் தவற விட்டுவிட்டேன் போலிருக்கிறது )

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மல்லிகை வாசம் said:

உடுக்கடித்து, பூசை செய்வது நாத்திகரான உங்களுக்கு இழிவாகத் தோன்றலாம். நமக்கு அப்படி அல்ல. உங்கள் எழுத்து இன்னொருவரின் நம்பிக்கை மீதான காழ்ப்புணர்ச்சியையே காட்டுகிறது.

இவ்வாறான காழ்ப்புணர்ச்சியை வைத்துக்கொண்டு சக கருத்தாளரை மதிக்கிறீர்கள் என்பது வேடிக்கையான பேச்சு. 

நான் எனது அபிப்பிராயத்தை ஏற்கனவே பல முறை எழுதிவிட்டேன். மேலே கிருபனுக்கும் ஏற்கனவே மீண்டும் பதிலளித்தாயிற்று. 

எனது கருத்தைத் திரித்து நீங்கள் உங்கள் முற்போக்கு வாதத்தை நிலைநாட்ட முயல்கிறீர்கள். மேலும், குழந்தைகளை விலங்குகளுடன் ஒப்பிட்டு நீங்கள் எழுதிய கருத்துக்கான பதிலைத் தான் அப்படி எழுதினேன்.

முடிந்தால் - மீண்டும் இந்த திரியில் நான் எழுதியவற்றை வாசியுங்கள். நான் எங்கேயும் நான் நாத்திகன் என்று எழுதியதில்லை. நீங்களாக என்னை அப்படி கற்பனை செய்து கொண்டு எழுதினால் அது உங்கள் விளக்கவீனம்.

எப்படி நான் மனித நேயம்/சிறுவர்கள் நலம் பேசுவது உங்களுக்கு முற்போக்கு போலிவாதமாக, முற்போக்கு படங்காட்டலாக தெரிகிறதோ, அதே போல நீங்கள் எதோ இந்து மதத்தின் பாதுகாவலன் என்ற ரேஞ்சில் பேசுவது எனக்கு உங்கள் இந்து மத பற்றை நீங்கள் “உடுக்கடித்து” படம் காட்டுவதாகவே தெரிகிறது. 

இந்த திரியில் நான் எங்கேயும் இந்து மதத்தை பற்றியோ அதன் சடங்குகள் பற்றியோ கதைக்கவே இல்லை. நான் சொன்ன 2 விடயம்கள்.

1. நம்பிக்கையின் பெயரால் எந்த மதமாயினும் - வன்முறையை சிறுவர் மீது ஏவுவது தப்பு

2. இங்கே யாழில் இந்த விடயத்தை குழுமனநிலையில் அணுகின்றார்கள்.   

இதில் எங்கே வந்தது இந்து சமயத்தின் மீதான காழ்ப்புணர்வு? இதில் எங்கே இன்னொருவரின் நம்பிக்கையை நான் எள்ளி நகையாடினேன்?

சும்மா உங்களை இந்து சமய காவலராக காட்ட வேணும் என்ற அவசரத்தில், போறவன், வாறவன் போத்தீட்டு படுக்கிறவன் எல்லாரையும் நீங்கள் இந்து மத விரோதியாக சித்தரித்தால் அதுக்கு நான் பொறுப்பல்ல.

விலங்கு-குழந்தை, ஒன்றில் உங்களுக்கு நான் எழுதியதை வாசித்து கிரகிக்க முடியாமல் உள்ளது, அல்லது வேணுமெண்டே பிழையாகன விளக்கத்தை முன்வைக்கிரீகள்.

மாட்டுக்கு “கூட” என்பதில் தொனிக்கும் அர்த்தம் யாது என்பது, எல்லாருக்கும் தெரியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிகு:   திரியை மீளாய்வு செய்ததில்:

மல்லிகை,

நீங்கள் துல்பென் எழுதியவற்றை என் தலையில் கட்டி, எனக்கும் சேர்த்து பயான் ஓதுகிறீர்கள் (கவனிக்க: தனியே உடுக்கடித்தல் என்ற சொல்லாடலை மட்டும் பாவிக்கவில்லை 😂).

துல்பென் இந்த திரியை அணுகும் கோணத்துக்கும் நான் அணுகும் கோணத்துக்கும் பாரிய இடைவெளி இருக்கிறது.

ஆனால் குழுநிலைவாதம், இந்து மதத்தின் பாப்பரசராக உங்களை நிறுவும் ஆர்வம், உங்கள் கண்களுக்கு இந்த இடைவெளியை மறைத்து விட்டிருக்கிறது.

அதுதான் துல்பெனுக்கு எழுத வேண்டியதை எனக்கு பதிலாக எழுதிக் கொண்டிருகிறீர்கள்.  

காலக்கொடுமடா சாமி 🤦‍♂️

Link to comment
Share on other sites

56 minutes ago, goshan_che said:

பேசுவது உங்களுக்கு முற்போக்கு போலிவாதமாக, முற்போக்கு படங்காட்டலாக தெரிகிறதோ, அதே போல நீங்கள் எதோ இந்து மதத்தின் பாதுகாவலன் என்ற ரேஞ்சில் பேசுவது எனக்கு உங்கள் இந்து மத பற்றை நீங்கள் “உடுக்கடித்து” படம் காட்டுவதாகவே தெரிகிறது. 

அவ்வாறான தேவை எனக்கில்லை. எனது நம்பிக்கையை கேவலப்படுத்த யாருக்கும் உரிமையும் இல்லை. 

1 hour ago, goshan_che said:

இதில் எங்கே வந்தது இந்து சமயத்தின் மீதான காழ்ப்புணர்வு? இதில் எங்கே இன்னொருவரின் நம்பிக்கையை நான் எள்ளி நகையாடினேன்?

சும்மா உங்களை இந்து சமய காவலராக காட்ட வேணும் என்ற அவசரத்தில், போறவன், வாறவன் போத்தீட்டு படுக்கிறவன் எல்லாரையும் நீங்கள் இந்து மத விரோதியாக சித்தரித்தால் அதுக்கு நான் பொறுப்பல்ல.

உங்கள் கருத்துக்களை நன்கு வாசித்தே அதற்கான விளக்கத்தை அதுவும் தெளிவாக quote பண்ணி தான் பதில் தந்துள்ளேன். மீண்டும் முழுமையாக வாசித்துப் பாருங்கள். புரியும்.

50 minutes ago, goshan_che said:

துல்பென் இந்த திரியை அணுகும் கோணத்துக்கும் நான் அணுகும் கோணத்துக்கும் பாரிய இடைவெளி இருக்கிறது.

அது எனக்கு நன்றாகவே தெரியும். நீங்கள் இருவரும் எழுதிய கருத்துக்களுக்கு தனித்தனியாக தெளிவான பதில்களையே தந்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

என்ன செய்ய அறிவியல் விடயங்களில் வெள்ளைகார அறிஞர்களும் பல்கலை கழகங்களும் சொல்வதை கேட்கவேண்டிய நிலையை உருவாக்கிவிட்டார்கள் எம் முன்னோர்கள். யோசிக்காதேங்கோ இட்லி, வடை,  சாம்பார், புளியோதரை எப்படி எப்படி செய்வது என்பதற்கு வெள்ளைகாரன் சொல்வதை  கடைசிவரை கேட்கமாட்டோம். எமது முன்னோர்கள் சொன்னதை மட்டும் தான் கேட்போம்🤣🤣

இப்ப நாம் திருந்தினோம் என்றால் எதிர்கால சந்த‍தியாவது அறிவியல் விடயல்களில்  இந்த தலைமுறை சொன்னதை கேட்கும். இல்லை என்றால் அது தொடர்கதை தான்.

 

அறிவியல் வளர்ச்சியையும் மக்களின் நம்பிக்கையையும் அவர்களின் அனுபவ ஆதாரங்களையும்  ஒன்றாக்கிச் சிலர் குழப்பமடைந்து மற்றவர்களையும் குழப்ப முயல்கினறனர்
இப்போது வளர்ந்திருக்கும் அறிவியல் எல்லாம் எமது முன்னோர்களின் நம்பிக்கையின்   ஆதாரத்தின்படிதான் வளர்த்துக்கொண்டு வருகின்றது

எமது முன்னோர்கள் அன்றே சூரிய மண்டலத்தையும் கிரகங்களையும்
அறிந்திருந்தார்கள்.
சமுதாயத்தில் சுகாதாரம் பேணுதல் நலமான வாழ்க்கை
எனப்பலவற்றையும் பேணி வந்துள்ளார்கள்

கருவிலே குழந்தை எப்போது ,  எப்படி வளர்ச்சியடையும் என்பதையும் அறிந்து வைத்திருந்தனர்
அதற்கு ஒரு உதாரணம்
 இந்த உடலும், உயிரும்
எப்போது எப்படித் தோன்றுகின்றன?
எது முதலில் உருவாகிறது?, உடலா?,
உயிரா?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் அகத்தியர்
தனது "அகத்தியர் ஆயுள் வேதம்” என்ற
தனது நூலில் பதில் வைத்திருக்கிறார்.

சென்மமனிதர் தாமுஞ் சென்மிக்கும்வாறு கேளாய் இன்னமுஞ் சுக்கிலத்தில் பிராணவாய்வதுவுஞ் சென்று தின்னமாய் பிராணவாயுவு சென்றது கோபமுற்றி யுன்னுமாமி ரத்தஞ்சூழ்ந்து வுதாரணவாய் வளர்க்கம் சூழ்ந்து சுக்கிலதில் சுரோணிதங் கலக்குமென்று பூந்திடும் வியாதி மூன்றும் பொருந்திடும் குமிழிபோல ஏந்தியே திரளுமேழிலீரேழு தன்னிலூர்க்கு மாய்ந்த நாளிருபத்தைந்தி லருங்முளை போற்றோன்றும்  -அகத்தியர்.

-முந்திய திங்கள்தன்னில் கருமுளைத்தது கட்டியாகும் பிந்திய திங்கள் தன்னிற் பிடரிதோள் முதுகுமன்றி யுதிக்கும் மூன்றாந்திங்க ளுடல்விலா யரையுங்கால்கள் ளுந்திக்கு யுயிரும்வந்தே யிணைந்திடுமென்றே. -அகத்தியர்

இதைவிட இன்னும்பல விடையங்களை நமது முன்னோர்கள் அறிவியல் வளர்ச்சிக்கு முன்னரே அறிந்து வைத்துள்ளார்கள்.

ஆகவே பொதுவாக நமது முன்னோர்களையும் அவர்களது அனுபவ ஆதாரங்களையும் நம்பிக்கைகளையும் மட்டந்தட்டுவதை நிறுத்துங்கள்


  

Link to comment
Share on other sites

52 minutes ago, goshan_che said:

ஆனால் குழுநிலைவாதம், இந்து மதத்தின் பாப்பரசராக உங்களை நிறுவும் ஆர்வம், உங்கள் கண்களுக்கு இந்த இடைவெளியை மறைத்து விட்டிருக்கிறது.

அதை இத் திரியை வாசிப்பவர்கள் முடிவு செய்வார்கள். 😊

நான் பொதுவாக இவ்வாறான விவாதங்களைத் தவிர்ப்பவன்.  இந்து மத நம்பிக்கைகளை அனாவசியமாகக் கேவலப்படுத்த முனையும் பல திரிகளை கண்டும் கருத்து எதுவும் எழுதாமல் கடந்து சென்றிருக்கிறேன். இங்குள்ள பலரும் இதைை அறிவர். ஆனால் எத்தனை நாளைக்கு வேடிக்கை பார்க்க முடியும்? 

ஆகவே இத்திரியில் எழுத வேண்டியதாயிற்று. தலைப்பை விட்டு விலகிச் செல்லும் வாதங்கள் முன் வைக்கப்பட்டதால். அதற்கும் பதில் தர வேண்டி இருந்தது. 

Link to comment
Share on other sites

28 minutes ago, வாத்தியார் said:

அறிவியல் வளர்ச்சியையும் மக்களின் நம்பிக்கையையும் அவர்களின் அனுபவ ஆதாரங்களையும்  ஒன்றாக்கிச் சிலர் குழப்பமடைந்து மற்றவர்களையும் குழப்ப முயல்கினறனர்
இப்போது வளர்ந்திருக்கும் அறிவியல் எல்லாம் எமது முன்னோர்களின் நம்பிக்கையின்   ஆதாரத்தின்படிதான் வளர்த்துக்கொண்டு வருகின்றது

எமது முன்னோர்கள் அன்றே சூரிய மண்டலத்தையும் கிரகங்களையும்
அறிந்திருந்தார்கள்.
சமுதாயத்தில் சுகாதாரம் பேணுதல் நலமான வாழ்க்கை
எனப்பலவற்றையும் பேணி வந்துள்ளார்கள்

கருவிலே குழந்தை எப்போது ,  எப்படி வளர்ச்சியடையும் என்பதையும் அறிந்து வைத்திருந்தனர்
அதற்கு ஒரு உதாரணம்
 இந்த உடலும், உயிரும்
எப்போது எப்படித் தோன்றுகின்றன?
எது முதலில் உருவாகிறது?, உடலா?,
உயிரா?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் அகத்தியர்
தனது "அகத்தியர் ஆயுள் வேதம்” என்ற
தனது நூலில் பதில் வைத்திருக்கிறார்.

சென்மமனிதர் தாமுஞ் சென்மிக்கும்வாறு கேளாய் இன்னமுஞ் சுக்கிலத்தில் பிராணவாய்வதுவுஞ் சென்று தின்னமாய் பிராணவாயுவு சென்றது கோபமுற்றி யுன்னுமாமி ரத்தஞ்சூழ்ந்து வுதாரணவாய் வளர்க்கம் சூழ்ந்து சுக்கிலதில் சுரோணிதங் கலக்குமென்று பூந்திடும் வியாதி மூன்றும் பொருந்திடும் குமிழிபோல ஏந்தியே திரளுமேழிலீரேழு தன்னிலூர்க்கு மாய்ந்த நாளிருபத்தைந்தி லருங்முளை போற்றோன்றும்  -அகத்தியர்.

-முந்திய திங்கள்தன்னில் கருமுளைத்தது கட்டியாகும் பிந்திய திங்கள் தன்னிற் பிடரிதோள் முதுகுமன்றி யுதிக்கும் மூன்றாந்திங்க ளுடல்விலா யரையுங்கால்கள் ளுந்திக்கு யுயிரும்வந்தே யிணைந்திடுமென்றே. -அகத்தியர்

இதைவிட இன்னும்பல விடையங்களை நமது முன்னோர்கள் அறிவியல் வளர்ச்சிக்கு முன்னரே அறிந்து வைத்துள்ளார்கள்.

ஆகவே பொதுவாக நமது முன்னோர்களையும் அவர்களது அனுபவ ஆதாரங்களையும் நம்பிக்கைகளையும் மட்டந்தட்டுவதை நிறுத்துங்கள்


  

வாத்தியார் எம் முன்னோர்கள் மட்டுமல்ல இந்த உலகில் வாழ்ந்தஅனைத்து முன்னோர்களும் இதுபற்றி அறிந்தே இருந்தார்கள். எம் முன்னோரின்  வாழ்வியலில் இந்து மதமே இருக்கவில்லை என்று கீழடி அகழ்வாராய்ய்ச்சி கூறுகிறது. இங்கு  விவாதம் அதுவல்ல. முன்னோர்களை மதிக்கும் அவ்வேளை அவர்கள் கைக்கொண்ட மூடத்தனங்களை தூக்கி எறிந்துவிட்டு நல்லவைகளை மட்டும் ஏற்றுக்கொள்வது பற்றியே இந்த விவாதம். நான் பல முறை சொன்னது போல முன்னோர்களும்  எம்மைப் போல் சாதாரண மனிதர்கள் தான். அவர்கள் கூறியதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம்  எமக்கும் இல்லை. நாம் கூறியதை ஆரயாமல் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் எமது பிள்ளைகளுக்கும் இல்லை. உலகத்தின. பாதை எப்போதும் forward தான். Backward இல்லை.

நீங்களே வாத்தியார் உங்களுக்கு இந்த விடயங்கள் தெரியாததல்ல. இருந்தாலும் subject மாறி வகுப்பு எடுக்கும் போது சில விடயங்கள் மறப்பது மனித இயல்பு. 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, மல்லிகை வாசம் said:

அதை இத் திரியை வாசிப்பவர்கள் முடிவு செய்வார்கள். 😊

நான் பொதுவாக இவ்வாறான விவாதங்களைத் தவிர்ப்பவன்.  இந்து மத நம்பிக்கைகளை அனாவசியமாகக் கேவலப்படுத்த முனையும் பல திரிகளை கண்டும் கருத்து எதுவும் எழுதாமல் கடந்து சென்றிருக்கிறேன். இங்குள்ள பலரும் இதைை அறிவர். ஆனால் எத்தனை நாளைக்கு வேடிக்கை பார்க்க முடியும்? 

ஆகவே இத்திரியில் எழுத வேண்டியதாயிற்று. தலைப்பை விட்டு விலகிச் செல்லும் வாதங்கள் முன் வைக்கப்பட்டதால். அதற்கும் பதில் தர வேண்டி இருந்தது. 

அதெல்லாம் சரி, துல்பெனின்ன்கருத்துக்கும் என் கருத்துக்கும் தனித்தனியே quote பண்ணித்தான் பதில் சொல்கிறீர்கள். ஆனால் எனது quote ற்கு கீழே நான் சொல்லாத விடயங்களுக்கு, துல்பென் சொல்லும் விடயங்களுக்கு பதில் சொல்லுவதோடு, சும்மா இருக்கும் எனக்கு இந்து சமயத்தை அகெளரவ படுத்தியதாக கதை வேறு கட்டுகிறீர்கள்.

மறுபடியும் திரியை வாசியுங்கள், நான் இங்கே குழந்தைநலன்-வன்முறை மற்றும் குழுநிலை மனோநிலை பற்றி மட்டுமே எழுதியுள்ளேன். அப்புறம் அக்குபஞ்சருக்கும் அலகு குத்துவதற்கும் உள்ள வேறுபாட்டை விளக்கினேன். பகிரப்பட்ட படத்தைப் பார்த்து அதில் உள்ள குழந்தையின் மனோநிலை எப்படி இருக்கும் என்று என் மனதில் பட்டதை எழுதினேன்.

இதில் எங்கே இந்து மத விரோதத்தை கண்டீர்கள்? இருந்தால் ஆதாரம் தாருங்கள். இல்லை என்றால், இந்து மதவிரோத, அகெளரவம் பற்றி என்னை quote செய்து எழுதியது அதிகபிரசிங்கித்தனம் என்றுதான் கொள்ளப்படவேண்டும்.

நீங்கள் இங்கே அதிகம் எழுதுபவரா இல்லையா என்பதெல்லாம் என் கவனத்துக்குரியது அல்ல. என் கருத்தை பற்றி கருத்துச் சொல்வதாயின் என் கருத்து பற்றி மட்டும் எழுதுங்கள். நான் நாத்திகனா, மாடு தின்னியா? முற்போக்குப் படம் காட்டுகிறேனா? நேரடி வர்ணனை செய்கிறேனா? என்பது உங்களுக்கும், திரிக்கும் தேவையில்லாத வெற்று அலம்பல்.

அதை விட மோசமான செயல் ஒரு ஆதாரமும் இல்லாமல் என்னை இந்து மத விரோதியாக சித்தரித்தது. 

பரவாயில்லை இப்போதானே அதிகம் எழுத தொடங்கியுள்ளீர்கள். போக போக கண்ணியமாக, பொறுப்பாக, உண்மைக்கு புறம்பாக அல்லாமல் கருத்தாடுவது எப்படி என்ற பக்குவம் தானாய் வரும். 

Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

அதெல்லாம் சரி, துல்பெனின்ன்கருத்துக்கும் என் கருத்துக்கும் தனித்தனியே quote பண்ணித்தான் பதில் சொல்கிறீர்கள். ஆனால் எனது quote ற்கு கீழே நான் சொல்லாத விடயங்களுக்கு, துல்பென் சொல்லும் விடயங்களுக்கு பதில் சொல்லுவதோடு, சும்மா இருக்கும் எனக்கு இந்து சமயத்தை அகெளரவ படுத்தியதாக கதை வேறு கட்டுகிறீர்கள்

மீண்டும் வாசித்துப் பாருங்கள். யாரை quote பண்ணினேனோ அவரது கருத்துக்குத் தான் அந்த quoted பகுதிக்குக் கீழே எனது பதிலை எழுதியுள்ளேன். ஒன்றுக்கு மேற்பட்ட quoted sections ஒரே பதிலில் merged reply ஆக வருவது தானே. 

Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

நீங்கள் இங்கே அதிகம் எழுதுபவரா இல்லையா என்பதெல்லாம் என் கவனத்துக்குரியது அல்ல. என் கருத்தை பற்றி கருத்துச் சொல்வதாயின் என் கருத்து பற்றி மட்டும் எழுதுங்கள். நான் நாத்திகனா, மாடு தின்னியா? முற்போக்குப் படம் காட்டுகிறேனா? நேரடி வர்ணனை செய்கிறேனா? என்பது உங்களுக்கும், திரிக்கும் தேவையில்லாத வெற்று அலம்பல்.

நீங்கள் தான்  முதலில் விலங்கு வதையுடன்/கொலையுடன் அலகு குத்துதலை ஒப்பிட்டு எழுதினீர்கள். அதற்கான பதிலில் நானும் நீங்கள் vegetarianஆ என்று கேட்டேன்.

இங்கு பகிரப்பட்ட படத்துக்கு வீர வசனம் பேசுவதை விட உரிய இடத்தில் விசாரித்து ஆலோசனை வழங்குவதே சரி என்று கூறினேன். அதைப் புரிந்து கொள்ளாமல் என்னைக் இரக்கமில்லாதவனாகச் சித்தரித்தீர்கள். ஒரு போலி முற்போக்குவாதி / போலி சமூகப் போராளி போல உங்கள் எழுத்துக்கள் இருந்தன. அதனால தான் நேரடி வர்ணனை செய்வதாக எழுதினேன். இவற்றில் தவறேதும் இல்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசித்துப் பார்த்த படியால்தான் எழுதுகிறேன். நான் சொல்லாத விடயங்களுக்கு எனக்கு பதில் எழுதுவதில் எந்த இயல்புமில்லை. அதைவிடக் காமெடி கருத்தாளர் மச்சம் சாப்பிடுபவரா இல்லையா என்ற தனிமனிதக் கேள்விகளும். என்னை நாத்திகனாக அறிவித்துகொண்ட அவசரக்குடுக்கைத்தனமும்.

குறைந்த பட்சம் விட்ட தவறுகளையாவது ஏற்கும் மனப்பக்குவம் இருக்கிறதா என்றால் அதுவுமில்லை. தொடர்ந்தும் “என்ன கையப்பிடிச்சி இழுத்தியா?” ரேஞ்சில் சுட்டிக் காட்டப் பட்ட உங்கள் தவறுகள் எதைப் பற்றியும் ஒன்றும் எழுதாமல் எதை எதையோ அடிச்சி விடுகிறீர்கள்.

ஆனால் இந்து மதப்பார்பரசர் தோரணையில் வகுப்பு எடுக்க மட்டும் தயார்.

#நினைப்புத்தான் பிழைப்பை கெடுப்பது 🤦‍♂️

Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

பரவாயில்லை இப்போதானே அதிகம் எழுத தொடங்கியுள்ளீர்கள். போக போக கண்ணியமாக, பொறுப்பாக, உண்மைக்கு புறம்பாக அல்லாமல் கருத்தாடுவது எப்படி என்ற பக்குவம் தானாய் வரும்

கண்ணியமான, பொறுப்பான கருத்தாடல் பற்றி நீங்கள் எனக்குச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அரசியல், மத விடயங்களை வாசிப்பவன் நான். இருந்தும் இங்குள்ள கருத்தாடல்களால் என்ன பயன் என்று ஒதூங்கியே இருந்துள்ளேன். மற்றய திரிகளில் நேரம் கிடைக்கும் போது எழுதியுள்ளேன். யாழ் களம் எனக்குப் புதிதல்ல. 😊

இந்த அறிவுரையை உங்களுக்கே சொல்லுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மல்லிகை வாசம் said:

நீங்கள் தான்  முதலில் விலங்கு வதையுடன்/கொலையுடன் அலகு குத்துதலை ஒப்பிட்டு எழுதினீர்கள். அதற்கான பதிலில் நானும் நீங்கள் vegetarianஆ என்று கேட்டேன்.

இங்கு பகிரப்பட்ட படத்துக்கு வீர வசனம் பேசுவதை விட உரிய இடத்தில் விசாரித்து ஆலோசனை வழங்குவதே சரி என்று கூறினேன். அதைப் புரிந்து கொள்ளாமல் என்னைக் இரக்கமில்லாதவனாகச் சித்தரித்தீர்கள். ஒரு போலி முற்போக்குவாதி / போலி சமூகப் போராளி போல உங்கள் எழுத்துக்கள் இருந்தன. அதனால தான் நேரடி வர்ணனை செய்வதாக எழுதினேன். இவற்றில் தவறேதும் இல்லை. 

ஒமோம் நீங்கள் தனிமனிதக் கேள்விகளும் தாக்குதலும் செய்யலாம் தவறேதும் இல்லை. ஆனால் இன்னொருவர், தன் மதத்தை பற்றி தானே சுய விமர்சனம் செய்தால் - குய்யோ முறையோ என்று குத்தி முறிவீர்கள். 

நீங்கள் யாரய்யா என் மதம் பற்றி நான் சொல்லுவதை எனக்கே வகுப்பெடுக்க? நவீன ஆதி சங்கரரா?

போலி முற்போக்குவாதிகளளை விட பச்சை திடுடர்களும், காமாந்தகர்களும், குழந்தைகளை பாலியல் துஸ்பிரயோகிகம் செய்பவர்களும் போலி மதவாதிகளாக, இந்து சமயத்யின் காப்பர்களாக தம்மை காட்டி, உடுக்கடிப்பதை நாமும் பார்க்கத்தான் செய்கிறோம்.

Link to comment
Share on other sites

4 minutes ago, goshan_che said:

அதைவிடக் காமெடி கருத்தாளர் மச்சம் சாப்பிடுபவரா இல்லையா என்ற தனிமனிதக் கேள்விகளும். என்னை நாத்திகனாக அறிவித்துகொண்ட அவசரக்குடுக்கைத்தனமும்.

இவை நீங்கள் கொடுத்த விளக்கத்தை வைத்து எழுந்த கேள்விகள் / எடுகோல்கள். இதில் ஒரு தவறுமில்லை. 

நீங்கள் தேவையில்லாமல் விலங்குகளை இதற்குள் இழுத்ததன் விளைவு இது. இனிமேலாவது விவாதத்துடன் தொடர்பான விளக்கத்தை தர முயலுங்கள்.

3 minutes ago, goshan_che said:

நீங்கள் யாரய்யா என் மதம் பற்றி நான் சொல்லுவதை எனக்கே வகுப்பெடுக்க? நவீன ஆதி சங்கரரா?

இந்தக் கேள்வியைத் தான் நானும் உங்களிடமும், என் நம்பிக்கையை அல்லது இந்து மதத்தை இழிவு படுத்துபவர்களிடமும் கேட்கிறேன். பதில் இன்னும் இல்லை. எங்கள் நம்பிக்கையை கேள்வி கேட்க நீங்கள் யார்??? 

Link to comment
Share on other sites

6 minutes ago, goshan_che said:

போலி முற்போக்குவாதிகளளை விட பச்சை திடுடர்களும், காமாந்தகர்களும், குழந்தைகளை பாலியல் துஸ்பிரயோகிகம் செய்பவர்களும் போலி மதவாதிகளாக, இந்து சமயத்யின் காப்பர்களாக தம்மை காட்டி, உடுக்கடிப்பதை நாமும் பார்க்கத்தான் செய்கிறோம்.

போலி முற்போக்கு வாதிகளுக்கும், மேலே நீங்கள் குறிப்பிட்டோருக்கும் நன்கு ஒத்துப் போகுமே! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர், உங்களுக்கு நான் சொன்னது விளங்கவில்லை -அதனால் ஒரு முட்டாள்தனமான எடுகோளாக, “நான் ஆத்திகன், நான் சொல்லுவது இவர் சொல்லுவற்கு எதிராக இருக்கிறது, எனவே இவர் நாத்திகன்” எனும் அரிவரி பிள்ளைகளின் “black or white”  logic ஐ கைக்கொண்டு என்னை நாத்திகன் என்றதும் மட்டுமல்லாமல், அது சரி எனவும் தொடர்ந்து வாதாடுகிறீர்கள் 🤦‍♂️.

மாட்டுக்கு “கூட” தீமை நேர்ந்தால் தட்டி கேட்க ஆளுண்டு, குழந்தைகளுக்கு இல்லையே - என்ற ஆதங்கத்திக்கும், நான் மச்சம் சாப்பிடுவதற்க்கும் இப்படி ஒரு முட்டாள்தனமான லாஜிக் இருக்கும் போல.

 

Link to comment
Share on other sites

9 minutes ago, goshan_che said:

ஒமோம் நீங்கள் தனிமனிதக் கேள்விகளும் தாக்குதலும் செய்யலாம் தவறேதும் இல்லை. ஆனால் இன்னொருவர், தன் மதத்தை பற்றி தானே சுய விமர்சனம் செய்தால் - குய்யோ முறையோ என்று குத்தி முறிவீர்கள். 

நான் தனிமனித தாக்குதல் நடத்தவில்லை. உங்கள் கற்பனைக்கு வந்ததை எழுதி எனது நேரத்தை விரயமாக்க வேண்டாம். 

நன்றி

வணக்கம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, மல்லிகை வாசம் said:

 

இந்தக் கேள்வியைத் தான் நானும் உங்களிடமும், என் நம்பிக்கையை அல்லது இந்து மதத்தை இழிவு படுத்துபவர்களிடமும் கேட்கிறேன். பதில் இன்னும் இல்லை. எங்கள் நம்பிக்கையை கேள்வி கேட்க நீங்கள் யார்??? 

உங்கள் விளக்கமின்மைக்கு இந்த ஒரு கேள்வி - ஒரு சோறு பதம்.

இந்த கேள்வியை ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்? இதை உங்கள் மதத்தை இழிவு படுத்துபவரிடம் கேளுங்கள். 

நான் மத நம்பிக்கை பற்றியோ, அலகு குத்துவது மூடநம்பிக்கையா இல்லையா என்று எதுவுமே எழுதவில்லை. என் கருத்து பூராவும் குழந்தைகள் நலன், குழந்தைகள் உடல் மீது பெற்றாருக்கு இருக்கும் உரிமை பற்றியதாகவே இருந்ததது.

உங்கள் நம்பிக்கையை நான் எங்கேயும் கேள்வி கேட்காதபோது, எல்லா கருத்தாளரையும் ஒரே சட்டியில் போட்டு வறுப்பது ஏன்?

விளக்க குறைவா? 

குழு மனோநிலை கண்ண மறைக்கிறதா?

இந்து மத ஆபந்தாண்டவனாக காட்டிக் கொள்ளும் முனைப்பா?

அல்லது மேற்சொன்ன எல்லாமுமேயா?

 

 

Link to comment
Share on other sites

6 minutes ago, goshan_che said:

மாட்டுக்கு “கூட” தீமை நேர்ந்தால் தட்டி கேட்க ஆளுண்டு, குழந்தைகளுக்கு இல்லையே - என்ற ஆதங்கத்திக்கும், நான் மச்சம் சாப்பிடுவதற்க்கும் இப்படி ஒரு முட்டாள்தனமான லாஜிக் இருக்கும் போல.

இது உங்கள் ஆதங்கம் அல்ல. நீலிக்கண்ணீர்.

உண்மையான ஆதங்கம் இருந்தால் இங்கு நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டியதில்லை. அதனால் ஒரு பயனுமில்லை. உங்களைச் சூழ உள்ள இடத்தில் உள்ள அநீதிகளை தட்டிக்கேளுங்கள்.

உங்கள் வீரசாகசங்களை / மனுநீதி சோழன் நடிப்பை காட்டும் இடமல்ல யாழ் களம். சொல்லை விட செயல் தான்  முக்கியம்.

நன்றி

மேலும் உங்களுடன் கருத்தாடி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, மல்லிகை வாசம் said:

இது உங்கள் ஆதங்கம் அல்ல. நீலிக்கண்ணீர்.

உண்மையான ஆதங்கம் இருந்தால் இங்கு நீலிக்கண்ணீர் வடிக்க வேண்டியதில்லை. அதனால் ஒரு பயனுமில்லை. உங்களைச் சூழ உள்ள இடத்தில் உள்ள அநீதிகளை தட்டிக்கேளுங்கள்.

உங்கள் வீரசாகசங்களை / மனுநீதி சோழன் நடிப்பை காட்டும் இடமல்ல யாழ் களம். சொல்லை விட செயல் தான்  முக்கியம்.

நன்றி

மேலும் உங்களுடன் கருத்தாடி என் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. 

தனிமனித தாக்குதல் செய்யாது கருத்தாடுவது என்பது இதுதான் போலும்.😂

நீங்கள் எழுதுவதும் விடுவதும் உங்கள் முடிவு.

ஆனால் தேவையில்லாமல் எனக்கு, நாத்திகன், இந்து மதவிரோதி இப்படி பொய்பட்டங்கள் கட்ட முனைந்தால் அதுக்கு தக்க பதில் எப்போதும் தரப்படும்.

Link to comment
Share on other sites

23 hours ago, சாமானியன் said:

இந்த மூடப் பழக்க வழக்கங்கள் எவை என்று தயவு செய்து பட்டியலிட்டு தர முடியுமா ( நீங்கள் முன்னரே பட்டியலிட்டிருந்தாலும் நான் தவற விட்டுவிட்டேன் போலிருக்கிறது )

 

அவைகள் முழுவதையும. எழுதினால் யாழ் இணைய சேர்வரில் இடப்பற்றாக்குறை ஏற்படும். அந்தளவுக்கு  மூடத்தனம் இந்து மதத்தால் தன்னைப்பின்பற்றும் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. என்றாலும் அவைகளின் ஆரம்பப்புள்ளியான சிறிய துளியை மட்டும் இணைக்கிறேன். 

சதுர்வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம் குணகர்மவிபாகஸ:
தஸ்ய கர்தாரமபி மாம் வித்த்யகர்தாரமவ்யயம்.
கீதை. அத்தியாயம் 4, சுலோகம் 13

நான்கு வர்ணங்களை உருவாக்கியவன் நானே. ஒருவனின் குணத்திற்கும் கர்மத்திற்கும் ஏற்றவாறு நான் உருவாக்கினேன். மனிதர்கள் தம்மை செம்மைப்படுத்தி மேன்மை அடைய நாம் அவற்றை படைத்தோம், அவற்றை நான் படைத்திருப்பினும், நான் செயலற்றவன், அழிவற்றவன் என்று உணர்.

"யாதயாமம் கதரசம் பூதி பர்யுஷிதம் ச யத்; உச்சிஷ்டமபி சாமேத்யம் போஜனம் தாமச்ப்ரியம்"; 

யாமம் கழிந்த, சுவையற்ற, துர்நாற்றம் எடுத்த, பழைய, எச்சிலான, தூய்மையற்ற உணவு சூத்திரர்களுக்கு பிரியமானது. " அத்தியாயம் 17, சுலோகம் 9

"க்ருஷிகொரஷயவாநிஜயம் வைச்ய கர்ம ஸ்வபாவஜம்; பரிசர்யாத்மகம் கர்ம சூத்ரஸ்யாபி ஸ்வபாவஜம்;" 

உழவும், கால்நடை காத்தலும், வாணிபமும் வைசியர்கள் செய்யவேண்டியது. இட்டபணி ஆற்றுவது சூத்திரனுக்கு இயல்பாய் உண்டாகிய கர்மம்." 
கீதை. அத்தியாயம் 18, சுலோகம் 44

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.