Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இதற்குப் பெயர் பக்தியா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, வாத்தியார் said:

இதற்கும் பக்திக்கும் இந்தத் தொடர்பும் இல்லை
இதுவும் குழந்தைகள் மீதான ஒரு வன்முறைதான் .
விபரம் தெரிந்து அவர்களால் செய்யும் ஒரு விடையத்தில் காரண காரியமும் அதன் பலனும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் தாக்கங்கள் என பலதையும் உணர்ந்து செய்வது வேறு.

இது வேறு

 

என்னது மதகுருவாக வருவதற்கு வயது எல்லை உள்ளதா ? உயர்தரம் படித்த பின்னரே .....அதுவும் 18   வயதிற்கு மேலே .....
அது எங்கே எழுதப்பட்டுள்ளது என்று உங்களால் காட்ட முடியுமா ?

கத்தோலிக்க சமயத்தில் வாத்தியார், இது பைபிளில் எழுதப் படவில்லை, நிறுவனமயமான கத்தோலிக்க மதத்தில்  canon law இருக்கிறது. உயர்தரம் படிக்க முதல் போனால், போடிங்கில் வைத்து உயர்தரம் படிக்க வைத்து, பல்கலை போனால் பல்கலை அனுப்புவர். பல்கலை போகவில்லையெனில் ஜூனியர் செமினாறியில் தத்துவம் 3 வருடம் (யாழ் பிரதான வீதியில் இருந்தது). அடுத்து பெரிய செமினாறியில் 3 வருடம் இறையியல் என்கிற தியோலொஜி (கொழும்புத்துறையிலும் அம்பிரியாவிலும் இருந்தன). போய் ஏ.எல் எடுத்த பிறகு ஒரு குறூப் விட்டுக்கு வரும். பல்கலை கிடைத்தால் ஒரு குறூப் வீட்டுக்கு வரும். ஏன், கடைசி வருடம் வரை போய் விட்டு  தியாக்கோன் பட்டம் பெறும் தருவாயில் திரும்பி வந்தோரும் உள்ளனர்.

சரி, இப்ப என் வாய்ப்பு: உயர்தரம் படிக்காமலே கத்தோலிக்க பாதிரியானவரின் பெயரைத் தருகிறீர்களா?

Link to comment
Share on other sites

  • Replies 186
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மல்லிகை வாசம் said:

இதற்கும் பெயர் பக்தி தானா, ஜஸ்ரின்??? இவ்வாறான செய்திகள் உங்கள் கண்ணின் தென்படுவதில்லை என நினைக்கிறேன். ➡️

George Pell's conviction of child sex crimes sparks 'unprecedented' crisis for Vatican

https://www.google.com/amp/amp.abc.net.au/article/10846434

உங்களுக்காக மேலும் சில செய்திகள்:

He Says a Priest Abused Him. 50 Years Later, He Can Now Sue:

https://www.google.com/amp/s/www.nytimes.com/2019/08/13/nyregion/child-victims-act-lawsuit.amp.html

Roman Catholic Church Sex Abuse Cases:

https://www.nytimes.com/topic/organization/roman-catholic-church-sex-abuse-cases

முதலில் உங்கள் நாட்டில், மதத்தில் உள்ள அழுக்குகளைக் கழுவி விட்டு வாருங்கள். எங்கள் மதத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். வெளயாரின் அநாவசிய தலையீடு தேவையில்லை. 

 

மல்லிகைவாசம்,

இதில் மதவாதம் பேசவும் கோபம் கொள்ளவும் எதுவும் இல்லை! ஜோர்ஜ் பெல்லும், அவர் போன்ற குற்றவாளிகளும் நீண்ட காலத்திற்கு முதலே பொலிசில் கொடுக்கப் பட்டிருக்க வேண்டியவர்கள். அவரைப் போன்றோர்களைக் கவனிக்காமல் விட்டதால் தான் ரட்சிங்கர் போப் பதவியிலிருந்து விலகிப் போனதை பல கத்தோலிக்கர்கள் கொண்டாடினர். நான் இவர்கள் செய்ததை குற்றம் என்று சொல்லும் நேர்மையுடன் இருக்கிறேன்! சின்னக் குழந்தைகளை வலிக்குள்ளாக்கும் சடங்குகள் பற்றி உங்கள் கண்டனம் எங்கே? தாயகத்தில் மிசினில் கட்டி தேரிழுத்தவர்கள் மீதான கண்டிப்பு எங்கே? கோதுகளான மத அனுஷ்டானங்களைக் கட்டிக் கொண்டு மாரடிப்பதை விட்டு விட்டு, அன்பையும் நேர்மையையும்  பின் தொடரப் பாருங்கள்! மதமே தேவையில்லை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

ஹாஹா என்ன இன்னும் சின்ன பிள்ளைகளாக  அவர்களை உயர்தரம் படிப்பிப்பது சொந்த செலவில் (சபை) அதுக்காகத்தானே ஒருவர் விலகி வந்தார் பெயர் வேண்டுமானாலும் சொல்லலாம் ஆனால் தவிர்க்கிறேன் காரணம் குடும்ப சூழ்நிலை என்று சொன்னார் தன் குடும்ப வறுமையால் தன்னை சபையிடம் கொடுத்ததாகவும் ஆனால்  அதைகடைப்பிடிக்க முடியவில்லையெனவும் கூறினார் ஆக ஒரு குழந்தையின் விருப்பத்துக்கு மாறாக பெற்றோர்கள் செயற்பட்டு இருக்கிறார்கள் அப்படி பார்த்தால் அங்கே பெற்றோர்கள் தான் குற்றவாளிகள்

சொல்லமாட்டார்களே

பெயர் முகவரி எதற்கு? தரமான ஆங்கிலம் படிக்க வேண்டுமென்று போய் விட்டு திரும்பி வந்து பெற்றோர் சொன்னார்கள் போனேன் என்போர் இருக்கிறார்கள். நான் வாத்தியாருக்கு எழுதிய பதிலில் விபரம் இருக்கிறது. ஆனால், திரும்பி வந்தவரை கூப்பிட்டு அலகு குத்தி விட்டார்களா? அல்லது சிறையில் போட்டு விட்டார்களா? அது தான் சுதந்திரம் என்பது. பிக்குச் சிறுவர் போல மொட்டை போட்டு விகாரை கூட்ட விடும் வேலையை விட இது எவ்வளவு சுதந்திரமானது? பச்சிளம் பாலகர்களை அலகு குத்தி அழ விடுவதை விட எவ்வளவு கொடுமை குறைந்தது? 

இப்படி மதகுருவாக விரும்பியோ விரும்பாமலோ வந்தவரைத் திரும்பிச் செல்ல அனுமதிக்கும் மதத்தின் மீது இருக்கும் "காண்டு", கோயிலுக்குள் குறைந்த சாதி என்று முத்திரை குத்தியோரை வரவிடாமல் தடுக்கும் மதத்தின் மீது உங்களுக்கு வரவே வராதே? எப்படி வரும்?

Link to comment
Share on other sites

14 minutes ago, Justin said:

ஜோர்ஜ் பெல்லும், அவர் போன்ற குற்றவாளிகளும் நீண்ட காலத்திற்கு முதலே பொலிசில் கொடுக்கப் பட்டிருக்க வேண்டியவர்கள். அவரைப் போன்றோர்களைக் கவனிக்காமல் விட்டதால் தான் ரட்சிங்கர் போப் பதவியிலிருந்து விலகிப் போனதை பல கத்தோலிக்கர்கள் கொண்டாடினர்.

இவ்வாறான குழந்தைகளைச் சீரழிக்கும் நிகழ்ச்சிகள் கிறிஸ்தவ சேர்ச்சுக்கள் பலவற்றிலும் காலம் காலமாக நிகழ்கின்றன. ஏதோ அந்த மதத்தில் குறைகள் இல்லை என்ற ரீதியில் நீங்கள் எழுதும் போது அதைச் சுட்டிக்காட்டினால் மத வாதம் என்பதா???

7 hours ago, Justin said:

பிரம்மச்சரியம் பேணவேண்டிய கத்தோலிக்க மதத்திலேயே உயர்தரம் முடித்த பிரகு தான் எடுக்கிறார்கள் உள்ளே. இது எங்கே நடக்கிறது

 

18 minutes ago, Justin said:

சின்னக் குழந்தைகளை வலிக்குள்ளாக்கும் சடங்குகள் பற்றி உங்கள் கண்டனம் எங்கே?

காது குத்தினாலும் வலிக்கும், மூக்கு குத்தினாலும் வலிக்கும், ஊசி போட்டாலும் வலிக்கும்.

இதற்காக அவரவர் நம்பிக்கையை கேவலப்படுத்தி பேசுவது தவறு. இதற்கு கண்டனம் தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனிக்காட்டு ராஜா said:

குறிப்பு எனக்கு கிறிஸ்த்தவ மக்கள் மீதோ முஸ்லீம்கள் மீதோ எந்த கோபமும் இல்லை 

ஆனால் இந்த உலகை திருத்தும் வெள்ளைவான் கும்பல்கள் ஏன் பிற மதங்களை ஆராயக்கூடாது அவர்களுக்கும் இது மூட நம்பிக்கை முட்டாள் தனமானது என கூற முடியவதில்லை இதற்கு பதில் சொல்லுங்கோ உடனே வந்து உன்னை திருத்து உலகம் திருந்தும் என்று சொல்லக்கூடாது 

உலகம் என்பது உருண்டை என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளக்கூடிய சமுதாயம் இப்ப வரைக்கும் இருக்கு 

எங்கயோ வாசித்த ஞாபகம் ஒன்று உலகம் சுத்துவதாக இருந்தால் விமானம் ஏன் பல மணிநேரம் பறக்க வேண்டும்  ? இப்படி கேள்வி கேட்ட ஆட்களும் உண்டு 

இதே குறிப்புத் தான் நானும் இங்கே தரப் போகிறேன்: எனக்கு இந்துக்கள் மீது மட்டுமல்ல, எந்த மதத்தினர் மீதும் கோபம் கிடையாது. என் கோபமெல்லாம் உங்கள் போன்ற tunnel vision உடைய பேர்வழிகளிடம் தான்., மேலே படத்தில் இருப்பது போன்ற ஒரு பிழையை பிழை என்று சொல்ல உங்கள் போன்ற ஒருவருக்கு நேர்மை இல்லை!  வேறு இரண்டு மதங்களை இழுத்து அதிலேயும் பொய் செய்தியைக் கலந்து தான் சமாளிபிகேசன் செய்ய வேண்டியிருக்கிறது! அப்படியானால் உங்கள் தனிப்பட்ட உள்ளக நேர்மையை விட ஒரு மதத்தின் சடங்கு தான் உங்களை பெருமைக்குள்ளாக்குகிறது! இப்படியான ஒரு பக்தன் தன் மதத்தை பெருமைப்படுத்துகிறானா? இல்லை என்று தான் நினைக்கிறேன்.  

Link to comment
Share on other sites

20 minutes ago, Justin said:

தாயகத்தில் மிசினில் கட்டி தேரிழுத்தவர்கள் மீதா கண்டிப்பு எங்கே?

இதனால் என்ன பாதிப்பு???? இதனைவிட கிறிஸ்தவ பாதிரியார்கள் செய்யும் குழந்தைச் சீரழிப்புகள் உயர்ந்த பண்பு, அப்படித்தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, மல்லிகை வாசம் said:

இவ்வாறான குழந்தைகளைச் சீரழிக்கும் நிகழ்ச்சிகள் கிறிஸ்தவ சேர்ச்சுக்கள் பலவற்றிலும் காலம் காலமாக நிகழ்கின்றன. ஏதோ அந்த மதத்தில் குறைகள் இல்லை என்ற ரீதியில் நீங்கள் எழுதும் போது அதைச் சுட்டிக்காட்டினால் மத வாதம் என்பதா???

 

காது குத்தினாலும் வலிக்கும், மூக்கு குத்தினாலும் வலிக்கும், ஊசி போட்டாலும் வலிக்கும்.

இதற்காக அவரவர் நம்பிக்கையை கேவலப்படுத்தி பேசுவது தவறு. இதற்கு கண்டனம் தேவையில்லை.

எங்கே அப்படி எழுதியிருக்கிறேன் என்று காட்டுங்கள்! 

Just now, மல்லிகை வாசம் said:

இதனால் என்ன பாதிப்பு???? இதனைவிட கிறிஸ்தவ பாதிரியார்கள் செய்யும் குழந்தைச் சீரழிப்புகள் உயர்ந்த பண்பு, அப்படித்தானே?

மல்லிகை வாசம், எங்கே நான் பாதிரிமாரின் பாலியல் குற்றத்திற்கு வக்காலத்து வாங்கினேன் என்று காட்டுங்கள்?

குறைந்த சாதி என்று ஒதுக்கப் பட்டவர்களால் ஏனைய மதங்கள் நிறைவதும், இந்துமதம் ஆட்களை இழப்பதும் தீமைகள் அல்ல என்று நீங்கள் சொன்னால், நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்!

Link to comment
Share on other sites

22 minutes ago, Justin said:

மத அனுஷ்டானங்களைக் கட்டிக் கொண்டு மாரடிப்பதை விட்டு விட்டு, அன்பையும் நேர்மையையும்  பின் தொடரப் பாருங்கள்! மதமே தேவையில்லை!

ஒருவரது மத நம்பிக்கையை அவமதித்துவிட்டு இப்போ அன்பு, நேர்மை பற்றி பேசுகிறீர்கள். எங்கள் மத நம்பிக்கையை விட்டுவிடச் சொல்ல நீங்கள் யார்? ஒருவரது மத நம்பிக்கையை புண்படுத்தாமல் இருப்பதும் அன்பு தான். அது உங்களிடம் அறவே இல்லை. 

எங்களிடம் நேர்மையும், அன்பும் உண்டு. அதற்காக பிற மதத்தினர் நம் நம்பிக்கையை கேவலப்படுத்தும் போது மௌனித்து இருக்கமுடியாது.

5 minutes ago, Justin said:

எங்கே அப்படி எழுதியிருக்கிறேன் என்று காட்டுங்கள்! 

ஏற்கனவே மேலே மேற்கோள் காட்டிவிட்டேன். 

12 minutes ago, மல்லிகை வாசம் said:
  8 hours ago, Justin said:

பிரம்மச்சரியம் பேணவேண்டிய கத்தோலிக்க மதத்திலேயே உயர்தரம் முடித்த பிரகு தான் எடுக்கிறார்கள் உள்ளே. இது எங்கே நடக்கிறது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, மல்லிகை வாசம் said:

ஒருவரது மத நம்பிக்கையை அவமதித்துவிட்டு இப்போ அன்பு, நேர்மை பற்றி பேசுகிறீர்கள். எங்கள் மத நம்பிக்கையை விட்டுவிடச் சொல்ல நீங்கள் யார்? ஒருவரது மத நம்பிக்கையை புண்படுத்தாமல் இருப்பதும் அன்பு தான். அது உங்களிடம் அறவே இல்லை. 

எங்களிடம் நேர்மையும், அன்பும் உண்டு. அதற்காக பிற மதத்தினர் நம் நம்பிக்கையை கேவலப்படுத்தும் போது மௌனித்து இருக்கமுடியாது.

மேலே இருப்பது மட்டுமல்ல, சாதி ஒதுக்கல், பெண் தீட்டு என்ற கருத்து போன்ற மத அனுஷ்டானங்கள் அன்பின் அடையாளங்கள் அல்ல! அவை கோதுகள் மட்டுமே என்பதை நான் கிறிஸ்தவனாக இருந்தாலும் சொல்வேன், இந்துவாக இருந்தாலும் சொல்வேன்! பின்பற்றுபவர் தவிர ஏனையோரைப் பாதிக்கும் பிற்போக்குத் தனத்தைச் சுட்டிக் காட்டும் உரிமையை மனிதனாக இருப்பவன் யாரும் கொண்டிருக்கிறான்!  

Link to comment
Share on other sites

7 minutes ago, Justin said:

குறைந்த சாதி என்று ஒதுக்கப் பட்டவர்களால் ஏனைய மதங்கள் நிறைவதும், இந்துமதம் ஆட்களை இழப்பதும் தீமைகள் அல்ல என்று நீங்கள் சொன்னால், நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்!

கிறிஸ்தவ மதம் இறைக்கும் பணம் தான் இதற்கு காரணம். மத வியாபாரம் செய்வது யார் என்று உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். இது காலம் காலமாக நடப்பது. வரலாறு!

இந்து மதம் அவ்வாறு மதமாற்ற வியாபாரம் செய்வதில்லை. வசதிக்காக இந்து மதத்தை விட்டு கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் அவமானம் இந்து மதத்துக்கு அல்ல. கிறிஸ்தவ மதத்துக்கே!

3 minutes ago, Justin said:

பின்பற்றுபவர் தவிர ஏனையோரைப் பாதிக்கும் பிற்போக்குத் தனத்தைச் சுட்டிக் காட்டும் உரிமையை மனிதனாக இருப்பவன் யாரும் கொண்டிருக்கிறான்!  

ஏனையோரைப் பாதிக்கவில்லை என பலமுறை சொல்லியாயிற்று. மேலதிக விளக்கம் தேவையில்லை. 

முதலில் உங்கள் அழுக்குகளைக் களையுங்கள், பின்னர் இந்து மதத்தை புரிந்து கொள்ள முயலுங்கள். வீண் வாதம் தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, மல்லிகை வாசம் said:

கிறிஸ்தவ மதம் இறைக்கும் பணம் தான் இதற்கு காரணம். மத வியாபாரம் செய்வது யார் என்று உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். இது காலம் காலமாக நடப்பது. வரலாறு!

இந்து மதம் அவ்வாறு மதமாற்ற வியாபாரம் செய்வதில்லை. வசதிக்காக இந்து மதத்தை விட்டு கிறிஸ்தவ மதத்துக்கு மாறினால் அவமானம் இந்து மதத்துக்கு அல்ல. கிறிஸ்தவ மதத்துக்கே!

பணம் இருக்கட்டும் இல்லாமல் இருக்கட்டும், சாதிவாதத்தினால் ஒரு பக்கம் கிறிஸ்துவக் குழுக்களுக்கும், முஸ்லிம் மதத்திற்கும் மக்கள் மாறுவது உண்மையல்லவா? மக்கள் நல்லது என்று (அது என்ன நல்லதாக இருந்தாலும்) வருவது ஒரு மதத்திற்கு என்ன தீமையைத் தரும்? எல்லாம் இறுதியில் தனிபட்ட மனிதனின் முயற்சியேயொழிய கடவுள் தூக்கிக் கொடுப்பதல்லவே? அது பிரச்சினையிலையென்றால் ஏன் மதமாற்றம் பற்றி ஒப்பாரி வைக்க வேண்டி வருகிறது? 

Link to comment
Share on other sites

1 minute ago, Justin said:

மக்கள் நல்லது என்று (அது என்ன நல்லதாக இருந்தாலும்) வருவது ஒரு மதத்திற்கு என்ன தீமையைத் தரும்? எல்லாம் இறுதியில் தனிபட்ட மனிதனின் முயற்சியேயொழிய கடவுள் தூக்கிக் கொடுப்பதல்லவே?து பிரச்சினையிலையென்றால் ஏன் மதமாற்றம் பற்றி ஒப்பாரி வைக்க வேண்டி வருகிறது?

இது ஒரு மத வியாபாரம் என்று பலருக்கும் தெரிந்த விடயத்தை நீங்கள் நியாயப்படுத்த முயல்வது தெரிகிறது. கடவுள் தூக்கிக் கொடுக்காவிட்டாலும் கடவுள் பெயரில் தான் நடக்கிறது. கடவுள் பெயரில் வியாபாரம்.

நான் ஒப்பாரி வைக்கவில்லை. நீங்கள் மதமாற்றம் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் மட்டும் தந்தேன். மத மாற்றம் அவரவர் இஷ்டம். ஆனால், மிஷனரிகள் செய்வது வியாபாரம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, மல்லிகை வாசம் said:

இது ஒரு மத வியாபாரம் என்று பலருக்கும் தெரிந்த விடயத்தை நீங்கள் நியாயப்படுத்த முயல்வது தெரிகிறது. கடவுள் தூக்கிக் கொடுக்காவிட்டாலும் கடவுள் பெயரில் தான் நடக்கிறது. கடவுள் பெயரில் வியாபாரம்.

நான் ஒப்பாரி வைக்கவில்லை. நீங்கள் மதமாற்றம் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் மட்டும் தந்தேன். மத மாற்றம் அவரவர் இஷ்டம். ஆனால், மிஷனரிகள் செய்வது வியாபாரம்.

யாரும் தான் தனக்கு முக்கியம் என்று கருதும் ஒரு காரணத்திற்காக மதம் மாறலாம் என்பது என் நிலைப்பாடு! மதங்கள் ஒன்றும் சட்டத்தால் பிறந்த நிலையிலேயே இருக்க வேண்டும் என்று நிர்ணயிக்கப் பட்ட கூறு அல்ல! இதை ஒரு அமைப்பு ஊக்குவித்தால் அதில் தவறில்லை! தலையில் துவக்கு வைத்து ஐசிஸ் போல செய்தால் தவறு, குற்றம்! மாறுபவன் சொல்லும் காரணம் வலுவான காரணமா இல்லையா என்று மதிப்பிடும் உரிமை யாருக்கும் கிடையாது! இது கறுப்பு வெள்ளை நிலைமை, இதில் உங்களுக்குக் குழப்பம் இருப்பது என் தவறல்ல! 

Link to comment
Share on other sites

4 hours ago, மல்லிகை வாசம் said:

இது ஒரு மத வியாபாரம் என்று பலருக்கும் தெரிந்த விடயத்தை நீங்கள் நியாயப்படுத்த முயல்வது தெரிகிறது. கடவுள் தூக்கிக் கொடுக்காவிட்டாலும் கடவுள் பெயரில் தான் நடக்கிறது. கடவுள் பெயரில் வியாபாரம்.

நான் ஒப்பாரி வைக்கவில்லை. நீங்கள் மதமாற்றம் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் மட்டும் தந்தேன். மத மாற்றம் அவரவர் இஷ்டம். ஆனால், மிஷனரிகள் செய்வது வியாபாரம்.

மல்லிகை வாசம்,  என்னைப்பொறுத்தவரை நான்  மதங்களை நம்புபவன் அல்ல. ஆனால் நீங்கள் ஆன்மீக வாதி. கடவுளை நம்பிக்கை உள்ளவர். கடவுள் நம்பிக்கையுடன் சேர்தது அதை விட மேலதிகமாக  இந்து மதம் பரப்பிய விரல் விட்டு எண்ண முடியாத பொய் புரட்டு, மூடத்தனங்களை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு பொறுமையுடைய உங்களால்  ஒரு சிலர் அவர் மதம் மாறுவதை பொறுக்கமுடியவில்லையா?  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதங்கள் எக்கேடும் கெட்டுப் போகட்டும். இப்ப இந்தப்பிள்ளைகளின் பெற்றோரை செருப்பால் அடிக்கவேண்டும், பிடித்து ஜெயிலுக்குள் போடவேண்டும். பிறகு பிள்ளைகளை கருணையுடன் அநாதை ஆசிரமத்தில் சேர்த்து விடலாம். இல்லையென்றால் அனாமத்தாய் தெருவில விடலாம். அப்பாடா நிம்மதி......!  😥

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இளம் சிறார்களை அலகு குத்தி எலுமிச்சைப் பழங்களையும் கோர்த்து பொதுவெளியில் படங்களையும் பகிர்ந்தவர்கள் உண்மையில் பக்தியுள்ள சாதாரணர்களாகத்தான் இருப்பார்கள். அதனை நாகரீக உலகக் கண்ணாடியோடு பார்க்கும்போது தப்பாகத்தான் தெரியும். உலகமே இப்போது சமூகவலையில் நெருக்கியடித்துக்கொண்டு உள்ளதால் இப்படியான சம்பவங்களின் எதிரொலி பலருக்குக் கேட்கும் என்பதால் இவை எதிர்காலத்தில் குறைந்து காணாமல்போகும்!

14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

வேறு எந்த மதத்திலும் மூட நம்பிக்கை இல்லையா  என நான் கேட்கிறேன் உங்களிடம் ?

 

ஒரு கோட்டுக்கு மேலால் இன்னொரு கோட்டை பெரிதாகக் கீறுவதால் முன்னைய கோடு அழியாது.

ஆனால் இங்கு நடப்பதோ ஒரு கோட்டுக்கு குறுக்காக இன்னொன்றைக் கீறி விதண்டாவாதம் புரிவதுதான்.

எல்லா மதங்களிலும் உள்ள காலத்திற்கு ஒவ்வாத சம்பிரதாயங்கள் மாறவேண்டும். அதனை விடுத்து ஒன்றைக் காட்டி இன்னொன்றை நியாயப்படுத்துவது சரியல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, மல்லிகை வாசம் said:

காது குத்தினாலும் வலிக்கும், மூக்கு குத்தினாலும் வலிக்கும், ஊசி போட்டாலும் வலிக்கும்.

இதற்காக அவரவர் நம்பிக்கையை கேவலப்படுத்தி பேசுவது தவறு. இதற்கு கண்டனம் தேவையில்லை.

இதைத்தான் நாகரீகமாக ஆங்கிலத்தில் mind your own business என்று சொல்வது. ஆனால் கருத்தாடலில் பாவிப்பது தவறு.

Link to comment
Share on other sites

48 minutes ago, tulpen said:

கடவுள் நம்பிக்கையுடன் சேர்தது அதை விட மேலதிகமாக  இந்து மதம் பரப்பிய விரல் விட்டு எண்ண முடியாத பொய் புரட்டு, மூடத்தனங்களை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு பொறுமையுடைய உங்களால்  ஒரு சிலர் அவர் மதம் மாறுவதை பொறுக்கமுடியவில்லையா?  

ருல்பென், நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன், மூடநம்பிக்கைகளை நம்புபவன் அல்ல. 

ஆனால், இங்கே சிக்கலே எது மூடநம்பிக்கை என்பது தான். நவீன விஞ்ஞான முறையில் நிரூபிக்கப்பட முடியாது என்பதற்காக ஒரு நம்பிக்கை மூடநம்பிக்கை ஆகிவிடாது. விஞ்ஞானமே நாளுக்கு நாள் புதுப்புது விடயங்களை கண்டறியும் ஓர் பரிசோதனை / ஆராய்ச்சியாகத் தான் இருக்கிறது. விஞ்ஞானம் என்பது ஒரு complete tool கிடையாது, ஒரு நம்பிக்கையின் உண்மைத் தன்மையை அறிய. ஒரு காலத்தில் பூமியைச் சூரியன் சுற்றுகிறது என்ற விஞ்ஞானம் பின்னாளில் அது தவறு என்றது. இன்று சரியாக இருப்பது நாளை விஞ்ஞான முறைப்படி தவறாகலாம். எனவே, விஞ்ஞான முறைப்படி இந்து மத நம்பிக்கையின் சரி பிழைகளைக் கணிப்பது நூறு வீதம் நம்பகரமானதாக இருக்க முடியாது.

அத்துடன் நான் நம்பாத ஒரு மத நம்பிக்கையை மற்றவர்கள் நம்பினால் எடுத்த எடுப்பில் அது மூட நம்பிக்கை என்று கூறமாட்டேன். அது அவரவர் நம்பிக்கை. அதைக் கேள்வி கேட்க நான் யார்?

மதம் மாறுதலை என்னால் பொறுக்க முடியவில்லையா?!மேலே எல்லாக் கருத்துக்களையும் வாசித்து விட்டுத் தான் இதைக் கேட்கிறீர்களா? 

ஜஸ்ரின் அது தொடர்பாகக் கேட்ட கேள்விக்கு எனது பதிலைச் சொன்னேன்.

5 hours ago, மல்லிகை வாசம் said:

நான் ஒப்பாரி வைக்கவில்லை. நீங்கள் மதமாற்றம் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் மட்டும் தந்தேன். மத மாற்றம் அவரவர் இஷ்டம். ஆனால், மிஷனரிகள் செய்வது வியாபாரம்

 

5 hours ago, Justin said:

குறைந்த சாதி என்று ஒதுக்கப் பட்டவர்களால் ஏனைய மதங்கள் நிறைவதும், இந்துமதம் ஆட்களை இழப்பதும் தீமைகள் அல்ல என்று நீங்கள் சொன்னால், நான் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன்!

 

Link to comment
Share on other sites

5 hours ago, Justin said:

தலையில் துவக்கு வைத்து ஐசிஸ் போல செய்தால் தவறு, குற்றம்! மாறுபவன் சொல்லும் காரணம் வலுவான காரணமா இல்லையா என்று மதிப்பிடும் உரிமை யாருக்கும் கிடையாது! இது கறுப்பு வெள்ளை நிலைமை, இதில் உங்களுக்குக் குழப்பம் இருப்பது என் தவறல்ல! 

15ஆம், 16ஆம், 17ஆம், 18ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியர் கிறிஸ்தவ மதத்தை பரப்ப உலகின் பல நாடுகளில் உள்ள தேசிய குடிகளை ஆயுதம் கொண்டும் மிரட்டினர்.

அது போக, ஒழுக்கமற்ற பாதிரியார்கள் நிறைந்த கிறிஸ்துவம் பணத்தை அள்ளி இறைத்ததும் வரலாறு. இன்னும் தொடர்கிறது. எனவே இது கறுப்பு வெள்ளை நிலைமை அல்ல. கிறிஸ்தவ மதத்தில் ஏற்பட்ட கரும்புள்ளி! மாறுபவனைப் பற்றிய கவலை நமக்கில்லை.

Link to comment
Share on other sites

மேலே உள்ள படத்தை தவிர மேலதிகமாக எங்கே எப்படி நடந்தது என்ற விபரம் இல்லை.  இதை மத அடிப்படையில் அணுகுவதும் பொருத்தமில்லை. 

அவனவன் குலசாமிகள், குல வழக்கங்கள் சம்பிரதாயங்கள் சடங்குகள் என அனைத்து சாமிகளும் இந்து என்றதுக்குள் கொண்டுவருகின்றார்கள். போதாக்குறைக்கு நித்தியானந்தா சாயிபாபா பங்காரு அம்மாபகவான் என ஆயிரத்தெட்டு ஆசாமிகளும் இந்துவுக்குள் வந்துவிடும்.  இந்தியா என்பது பல நாடுகளை இணைத்த ஒரு நிலப்பரப்பின் பெயர் போல்தான் இந்து மதம் என்பதும். 

ஈழத்தமிழர்கள் இந்துக்களா இல்லை சைவர்களா எப்படி தம்மை வெளிப்படுத்துவது என்பதில் இன்னும் தெளிவில்லை. சைவர்கள் என்று தம்மை தனித்துவப்படுத்திக்கொண்டால் அவற்றில் உள்ள நல்லது கெட்டதுகளை சீர்தூக்கிப் பார்த்து மாற்றங்கள் செய்து சைவமும் தமிழும் என்று தொடரலாம். இந்து என்று வில்லங்கத்துக்கு தலையை கொடுத்து வக்காலத்து வாங்கினால் பொல்லு கொடுத்து அடிவாங்கிறதாகத்தான் முடியும். ஏனெனில் இந்து என்பதற்கு எந்த வரையறையும் கிடையாது. அதை ஒரு கட்டமைப்புக்குள்கொண்டுவரவும் முடியாது.  அதில் எக்காலத்திலும் எந்த மாற்றமும் செய்யவும் முடியாது. இந்து என்பது ஆன்மீகம் பக்தி சார்ந்த பதம் இல்லை மாறாக இந்து என்பது இந்திய மைய அரசியல் சார்ந்த பதம். 

Link to comment
Share on other sites

51 minutes ago, கிருபன் said:

இதைத்தான் நாகரீகமாக ஆங்கிலத்தில் mind your own business என்று சொல்வது. ஆனால் கருத்தாடலில் பாவிப்பது தவறு.

அதனால் தான் கூடியவரை நாகரீகமான சொற்களை இங்கு பயன்படுத்த முயல்கிறேன். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

பணம் இருக்கட்டும் இல்லாமல் இருக்கட்டும், சாதிவாதத்தினால் ஒரு பக்கம் கிறிஸ்துவக் குழுக்களுக்கும், முஸ்லிம் மதத்திற்கும் மக்கள் மாறுவது உண்மையல்லவா? மக்கள் நல்லது என்று (அது என்ன நல்லதாக இருந்தாலும்) வருவது ஒரு மதத்திற்கு என்ன தீமையைத் தரும்? எல்லாம் இறுதியில் தனிபட்ட மனிதனின் முயற்சியேயொழிய கடவுள் தூக்கிக் கொடுப்பதல்லவே? அது பிரச்சினையிலையென்றால் ஏன் மதமாற்றம் பற்றி ஒப்பாரி வைக்க வேண்டி வருகிறது? 

எங்கட மதத்தில் சாதிய வெறி தலை விரித்தாடுகிறது...உண்மையில் வெட்கப்பட வேண்டிய விசயம்...அதற்காக உங்கட மதத்திற்கு மாறுபவர்களை உங்களுக்கு சமமாய் வைத்து நடத்துவீர்களா?...உங்கள் மனசாட்சியை  தொட்டு சொல்லுங்கள்...உங்கள் மதத்தில் சாத்திய வேறுபாடு இல்லையா?....நான் படித்தது எல்லாம் கத்தோலிக்க பாடசாலையில் 😐இங்கு ஏட்டிக்கு போட்டியாய் எழுதுவதால் எதுவும் மாறி விடப் போவதில்லை 

Link to comment
Share on other sites

14 minutes ago, ரதி said:

எங்கட மதத்தில் சாதிய வெறி தலை விரித்தாடுகிறது...உண்மையில் வெட்கப்பட வேண்டிய விசயம்...அதற்காக உங்கட மதத்திற்கு மாறுபவர்களை உங்களுக்கு சமமாய் வைத்து நடத்துவீர்களா?...உங்கள் மனசாட்சியை  தொட்டு சொல்லுங்கள்...உங்கள் மதத்தில் சாத்திய வேறுபாடு இல்லையா?....நான் படித்தது எல்லாம் கத்தோலிக்க பாடசாலையில் 😐இங்கு ஏட்டிக்கு போட்டியாய் எழுதுவதால் எதுவும் மாறி விடப் போவதில்லை 

எனது கத்தோலிக்க நண்பர்கள் ஏனைய கிறிஸ்தவர்களை கொஞ்சமும் மதிப்பதில்லை.

11 hours ago, குமாரசாமி said:

கிறிஸ்தவ மதகுருவும் கன்னியாஸ்திரிகளும் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு காரணம் ஏதும் இருக்கின்றதா? ண்மையாகவே தெரியாதபடியால் கேட்கின்றேன்.

Pentecost கிறிஸ்தவர்கள் தொலைக்காட்சிகள் பார்க்க தடை, மருந்துகள் எடுக்க தடை.

வருத்தத்திற்கு மருந்து எடுக்காமல் உயிரிழந்த சிலர் உள்ளார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இந்த விடயத்தில் நீள நீளமாக எழுத ஒன்றும் இல்லை! சிறுவர் துன்புறுத்தல் சட்ட ரீதியிலும் தவறு தார்மீக ரீதியிலும் தவறு! இதை இன மத பேதமில்லாமல் யாரும் சுட்டிக்காட்டவும் கண்டிக்கவும் வேண்டும். அந்தக் கண்டனம் வரமுதல் மனதில் "ஐயோ என் மதநம்பிக்கை!" என்ற கணநேரத்தயக்கம் ஒருவருக்கு வந்தால், அப்படிப்பட்டவருக்கு ஆழமான பிரச்சினைகள் இருக்கின்றன என்று அர்த்தம்! அமெரிக்க கிளிஷேயில் சொல்வது போல: I do not envy them!

அவ்வளவு தான் இந்தத் திரிக்கு என் நேரக் கோட்டா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவன் செய்யும் தீமைகளை காட்டி 
தமது தீமைகளை நியாயப்படுத்தும் எவனும் 

அடுத்தவன் செய்யும் நன்மைகளை காட்டி 
எந்த நன்மையையும் செய்கிறான் இல்லை 

இவர்கள் இங்கு என்ன பேச முனைகிறார்கள் என்பது கூட புரியவில்லை 
நேரடியான கேள்விகள்  கூட பலருக்கு புரிகிறது இல்லை.

நான்தான் உலக அரசன் என்று நானே சொல்வதால் 
உலகில் ஏதும் மாறிவிடாது என்ற சின்ன புரிதல்கூட பலருக்கு புரியவில்லை. 

ஓரளவு எழுத வாசிக்க ஆவல் உள்ளவர்கள் நிலைமை இப்படி இருக்கும்போது 
தமிழருக்கான தீர்வு  மேம்பாடு  பொருளாதார வளர்ச்சி போன்ற சிக்கலான விடயங்களை 
எப்படி பேசி முடிவை எட்டுவது என்ற கேள்விதான் எனக்குள் இப்போது அதிகமா எழுகிறது. 

சைகோலோஜி மிகவும் முக்கியமான பகுதி ........... பிள்ளைகளில் இப்படி ஊசிகளையும் 
தேசிக்காய்களையும் குத்துவோரின் மனோநிலை மிக எளிதாக புரிய கூடியது ... அவர்களிடம் அறியாமை 
அடிமைத்தனம் இரண்டும் குடிகொண்டு இருக்கும் ஆதலால் அவர்கள் முழுதாக இறைபக்த்தி என்று நம்புகிறார்கள். இன்னும் கொஞ்சம் முறுக்கேத்தி சூலத்தை எடுத்து பிள்ளைகள் வயிறில் குத்தினால் உங்கள் பிள்ளைகள் எதிராக்காலம்  நன்றாக இருக்கும் என்று சொல்லி அவர்களை குத்த வைப்பது மிக சுலபம். 

ஆனால் இரண்டாம் நபராக இவற்றை வெளியில் இருந்து பார்க்கும் ஒரு மனிதனின் மூளை  
இதுதான் சரியானது என்று நம்புவது என்ன விதமான சைகோலாஜி என்பது புரியவே இல்லை.
இப்படியொருவன் நம்புவான் என்று நான் சைகோலொஜியில் படிக்கவில்லை ........ இதை நான் நம்பவும் இல்லை. 

நித்தியானந்தா கபடமானவன் என்பதை அவரது சீடர்கள் மறுப்பது என்பது ஒருவித 
விசுவாச சிந்தனை அவர்கள் மூளை அப்படி சிந்திக்க இடம் கொடுக்காது.
ஆனால் நித்தியானந்தாவையே அறியாத ஒரு ஆப்ரிக்கனுக்கு நித்தியின் கபடங்களை வீடியோயாவாக 
போட்டுக்காட்டும்போது அவன் அதை நம்ப மறுத்தால்? அப்படி ஒரு நிலை மனித அறிவில் மூளையில் இருக்கிறதா? 

இதை ஏன் எழுதுகிறேன் என்றால் .........
யாரையும் புண்படுத்தாமல் எனக்கு சரி என்று படுவதை எழுத முடியுமா? என்று பல தடவை எனக்குள் நான் எண்ணுவது உண்டு. காரணம் முன்பு இங்கு ஈசன் என்று ஒரு சக கருத்தாளர் இருந்தார் மிக நல்ல கருத்துக்களை எழுதுபவர்  எனக்கு அவரின் பல கருத்துக்கள் பிடிக்கும். இப்படி ஒரு இந்துசமய சம்மந்தமான திரி ஒன்றில்  நான் எழுதும்போது அவர் கோபம் அடைந்து தேவையற்றதை எல்லாம் எழுத் தொடங்கினார்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது .... என்னுடைய மதம் பற்றிதானே நானும் எழுதுகிறேன் இவர் ஏன் இப்படி குதிக்கிறார்  என்று. பின்பு ஒரு கட்டத்தில் அவர்  முற்றுமுழுதாக தன்னிலை கடந்து என்மீது தனிமனித தாக்குதலை நீ குரங்கு  பூனை ஆடு மாடு என்று எழுத தொடங்கிவிட்டார். அதை மட்டுறுத்தினார்கள் வெட்டி அவருக்கு ஒரு எச்சரிக்கை புள்ளியும் கொடுத்து இருந்தார்கள் ....... அன்றோடு அவர் இந்த களத்துக்கு வருவதில்லை. அவர் வருவதில்லையே தவிர அவரை பற்றிய தேடல் எனக்கு இன்னமும் நிற்கவில்லை... அவருடைய அறிவை புரிந்துகொள்வதுக்கான  முயற்சி என்பதை இப்போதும் செய்துகொண்டு இருக்கிறேன். 
நான் அவரது மதத்துக்கும் அவருக்கும் எதிரியாக இருப்பின் ...... இப்போதுதான் அவர் நிறைய எழுத வேண்டும். நான் இங்குதானே எழுதுகிறேன்........... யாழ்களத்துக்கு ஏன் எழுத தொடங்கினார்? அதுக்கும் இதுக்கும் எந்த தொடர்பும்  இல்லையே? போன்ற விடைதெரியாத வினாக்கள் மட்டுமே என்னிடம்.

மேலே கருத்து எழுதும் சிலரின் மனோநிலையும் உண்மையில் புரியவில்லை 
ஒரு சிநேகித பூர்வமான கருத்தாடலை ஏன் செய்யமுடியாமல் போகிறது?

ஒரு குழந்தையின் உடலில் ஊசியை குத்துங்கள் என்று எந்த இந்துமத புத்தகமும் சொல்லவில்லை 
அதை எதாவது இந்து கடவுள் ஞானிகள் வலியுறுத்துகிறார்களா? என்றாலும் இல்லை 
இந்த காட்டுமிராண்டி வேலையை 
எப்படி கிறிஸ்தவ மத குருக்கள் சிறுவர்களை கெடுப்பதும் 
முஸ்லிம்கள் மக்களை கொல்வதும் நியாய படுத்தும்? 
இது என்ன மனோநிலை? 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விலாசம் இன்றிய விந்துகளின் சேமிப்பிடங்களாய் எம் தமிழ்ப் பெண்கள்..! பத்தினிகளும் பதிவிரதைகளும் புராணங்களில்… பால பாடங்களில்… பக்கம் பக்கமாய் படித்த மண்ணில் படி தாண்டிய பத்தினிகளும் மாதவிகளும் பெருகி விட்ட நிலை..! மாங்கல்யம் இன்றி மண மேடையின்றி கன்னிகள் வாழ்வு…! விலாசமின்றிய விந்துகளின் சேமிப்பிடங்களாய் அவர் தம் தேகம் இன்று..! சராசரி பாலியல் அறிவு கூடவா இல்லை… ஆண்டு ஒன்பதில் கற்றது கூடவா நினைவில் இல்லை…. தனி மனித ஒழுக்கம் என்ன பல்கலைக்கழகப் பாடமா வாத்தியார் கற்றுத்தர..?! முளைக்க முதல் பொத்திப் பிடிக்கும் கூட்டம் இன்று சந்தி தோறும் முந்தி விரித்துக் கிடக்கிறது.. ஏனிந்த அவலம்..???! பெண்கள்… புலிகளாய் வாழ்ந்த மண்ணில் வீரம் விதைத்து வீழ்ந்த இடத்தில் இன்று அந்நியரின் அயோக்கியரின் அனாதை விந்துகளின் அநியாயப் பாய்ச்சலில் சரிகிறார் மங்கையர்..! தூக்கிலும் கிணற்றிலும் சாவுகள்..! இது என்ன இன அழிப்பா சுய இருப்பழிப்பா.. சிந்தியுங்கள்..! முதிர் கன்னிகளாய் இளம் கன்னிகளாய் பள்ளிச் சிறுமிகளாய் பேரிளம் பெண்களாய் எல்லா நிலையிலும் அவர் வாழ்வு சீரழிவு..! அன்று அண்ணன் வழியில் அடைந்த ஒழுக்கம் இன்று அந்நியர் வழியில் அடைகிறது சாவு..! இப்படியே போனால் புவிதனில்.. எங்கே வாழும் எம் தமிழினம்..???! முடிவு தான் என்ன..????! சத்தமின்றி யுத்தமின்றி தமிழினம் தானே அழியும்..!   2012 இல் எழுதியது.. இன்னும் தொடருது அதே துன்பம்.  https://kuruvikal.wordpress.com/page/21/
    • Published By: VISHNU 02 APR, 2023 | 03:57 PM   கணினி குற்றங்களை மேற்கொள்ள  திட்டமிட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரில் சீனப் பிரஜைகள் 38 பேர் நேற்று சனிக்கிழமை (1 ) கைது செய்யப்பட்டதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர். நிதி மோசடி தொடர்பான கணினி குற்றங்களை மேற்கொள்ளும் நோக்கில் குறித்த சீனப் பிரஜைகள் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சீன தூதரகத்தின் உதவியுடன் இந்தச்  சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் 33 ஆண்கள், 5 பெண்களும் அடங்குவர்.    சந்தேக நபர்கள் வசமிருந்த 40 மடிக்கணினிகள், 120 கையடக்கத் தொலைபேசிகள், பல கணினி உபகரணங்கள் மற்றும் பணம் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.  சந்தேகநபர்கள் களுத்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். https://www.virakesari.lk/article/151955
    • வெடுக்குநாறி மலையில் விக்கிரகங்களை மீள் பிரதிஷ்டை : பின்வாங்கிய அமைச்சர்கள்   Published By: NANTHINI 02 APR, 2023 | 04:08 PM   வெடுக்குநாறி மலையில் சிதைக்கப்பட்ட விக்கிரகங்கள் இன்றைய தினம் (2) மீண்டும் வைக்கப்படும் என்று உறுதியளித்திருந்த அமைச்சர்கள், நீதிமன்றில் வழக்கு இருப்பதால் அது தொடர்பாக பின்னர் தீர்மானிப்போம் என்று அதிலிருந்து பின்வாங்கியுள்ளனர். அண்மையில் வவுனியா நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஷ்வரர் ஆலய வளாகத்தில் இருந்த தெய்வ சின்னங்கள் அழிக்கப்பட்டிருந்தன.   இதனையடுத்து ஆலயத்தின் நிர்வாகத்தினரால் நெடுங்கேணி பொலிஸ் மற்றும் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன், அமைச்சர்களான டக்ளஸ், ஜீவன் தொண்டமான், மற்றும் ஜனாதிபதியின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டிருந்தது.  இந்நிலையில் கடந்த வாரம் சர்வமத தலைவர்களின் பங்களிப்புடன் வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் கலந்துரையாடலொன்று நடத்தப்பட்டது.  அதன் பிரகாரம், முன்னர் வைக்கப்பட்டிருந்த இடத்தில் மீண்டும் சிவலிங்கம் உட்பட சேதப்படுத்தப்பட்ட விக்கிரகங்களை வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் இன்று (2) அதிகாலை விக்கிரகங்களை மீள் பிரதிஷ்டை செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.   எனினும், நேற்று (1) ஆலய நிர்வாகத்தினரை மீறி ஆலய வளாகத்தில் பிரதிஷ்டை நிகழ்வுக்கான பணிகளில் ஈடுபட்டிருந்த மூன்று பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டதுடன், விக்கிரகங்களை நிலைநிறுத்தும் நிர்வாகத்தின் எண்ணம் ஈடேறாமல் போய்விட்டது.  இதேவேளை இன்று விக்கிரகங்கள் நிச்சயம் வைக்கப்படும் என்று அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஜீவன் தொண்டமான் ஆகியோர் அனைத்து தரப்புக்கும் உறுதிபட தெரிவித்திருந்தனர்.   அந்த வகையில் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, ஜீவன் தொண்டமான் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான கு. திலீபன், ம. ராமேஸ்வரன் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர் இன்றைய தினம் காலை ஆலயத்துக்கு வருகை தந்திருந்தனர். எனினும், நீதிமன்றில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தற்போது விக்கிரகங்களை வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், எதிர்வரும் 10ஆம் திகதிக்கு பின்னர் கலந்துரையாடி, இது தொடர்பாக தீர்மானிக்க முடியும் என அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.  அவர்களது கருத்து அங்கிருந்தவர்கள் மத்தியில் ஏமாற்றத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  நீங்கள் 'சிலைகளை வைப்போம்' என்று அறிக்கை விட்டபோது நீதிமன்றில் வழக்கு இருப்பது தெரியவில்லையா என ஊடகவியலாளர்களால் அமைச்சர்களிடம் கேட்கப்பட்டபோது அதற்குரிய பதில் அவர்களால் வழங்கப்படவில்லை.  ஆகவே, இன்றைய தினம் எப்படியும் விக்கிரகங்களை வைத்துவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த ஆலய நிர்வாகத்தினர் ஏமாற்றமும் கவலையும் அடைந்துள்ளனர்.  அத்துடன் நேற்று ஒரு சிலர் எடுத்த தன்னிச்சையான முடிவுகளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இது எம்மை ஏமாற்றும் செயற்பாடாகவே இருக்கிறது என ஆலய நிர்வாகத்தினர் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். https://www.virakesari.lk/article/151954
    • உலகிலேயே வெண்பனி (snow) இல் போரிடுவதில் பின்லாந்தை மிஞ்ச யாரும் இல்லையாம்.  நேட்டோவுக்கும் கூட பின்லாந்தின் இணைவு ஒரு வரமே. இந்த அணுகுமுறை குர்தீக்களுக்கு பல புதிய கதவுகளை திறக்க கூடும். பினிஷ் மக்களை போலவே, குர்தீக்களும் உணர்ச்சிவசப்படாமல், புத்தியை பாவிக்கிறார்கள் என்பதை அறிய மகிழ்ச்சியே.
    • மகாராஷ்டிராவில் நடந்த வங்கிக் கொள்ளையின் பின்னணியில் வட கொரியா? ஹேக்கர்கள் செயல்படுவது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,ஜீன் லீ, ஜெஃப் ஒயிட், விவ் ஜோன்ஸ் பதவி,பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் 21 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவில் கூலித்தொழிலாளியாக இருக்கும் உங்களுக்கு பாலிவுட்டில் தலை காட்டும் வாய்ப்பு கிடைப்பதாக வைத்துக் கொள்வோம். உங்களது கதாபாத்திரம் என்ன? நேராக ஏடிஎம் சென்று பணத்தை எடுப்பது மட்டுமே அது. 2018-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் பலரும் இப்படித்தான் பாலிவுட்டில் தலை காட்டப் போவதாக நம்பினார்கள். ஆனால், உண்மையில் வங்கிக் கொள்ளையின் ஒரு அங்கமாக தாங்கள் பயன்படுத்தப்படுகிறோம் என்பதை அவர்கள் அறியாத வகையில் ஏமாற்றப்பட்டிருந்தார்கள். புனே நகரை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் காஸ்மோஸ் கூட்டுறவு வங்கியை மையமாகக் கொண்டு 2018-ம் ஆண்டு ஆகஸ்ட்டில் ஒரு வார இறுதியில் சோதனை நடத்தப்பட்டது.   சனிக்கிழமை பிற்பகலில் அந்த வங்கியின் தலைமையகத்தில் இருந்த ஊழியர்களுக்கு திடீரென தொடர்ச்சியான எச்சரிக்கை தகவல்கள் வந்தன.   அமெரிக்காவைச் சேர்ந்த ஏ.டி.எம். கார்டு சேவை வழங்கும் நிறுவனமான விசா நிறுவனம் அனுப்பிய எச்சரிக்கைத் தகவல்கள் அவை. காஸ்மோஸ் வங்கி ஏ.டி.எம். அட்டைகளைப் பயன்படுத்தி பல்வேறு இடங்களில் பணத்தை எடுப்பதற்காக பல ஆயிரம் கோரிக்கைகள் குவிந்து கொண்டிருப்பதாக விசா நிறுவனம் அனுப்பிய எச்சரிக்கை அது. ஆனால், காஸ்மோஸ் ஊழியர்கள் அவர்களது கணினி கட்டமைப்பை சரிபார்த்த போது, வழக்கத்திற்கு மாறாக ஏதும் புலப்படவில்லை. சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகு, பாதுகாப்புக் காரணத்திற்காக காஸ்மோஸ் வங்கி ஏ.டி.எம். அட்டைகளில் இருந்து பணம் எடுக்கும் சேவையை நிறுத்தி வைக்குமாறு விசா நிறுவனத்தை அவர்கள் கேட்டுக் கொண்டனர். ஆனால், இந்த முடிவுக்கு வருவதற்கு அவர்கள் எடுத்துக் கொண்ட அரை மணி நேர கால தாமதம் வங்கிக்கு பெரிய இழப்பை ஏற்படுத்திவிட்டது. மறுநாள், சந்தேகத்திற்கிடமான பணப் பரிமாற்றங்கள் என்று குறிப்பிட்டு ஒரு பட்டியலை காஸ்மோஸ் வங்கி தலைமையகத்திடம் விசா நிறுவனம் அளித்தது. உலகம் முழுவதும் வெவ்வேறு ஏ.டி.எம். மையங்களில் நடந்த சுமார் 12 ஆயிரம் பணப் பரிமாற்ற தகவல்கள் அதில் இடம் பெற்றிருந்தன. அதன் மூலம் காஸ்மோஸ் வங்கி சுமார் 116 கோடி ரூபாயை இழந்துவிட்டிருந்தது. இது துல்லியமாக ஒருங்கிணைக்கப்பட்டு பெரிய அளவில் நடந்த ஒரு துணிச்சலான வங்கிக் கொள்ளையாகும். அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ரஷ்யா உட்பட 28 வெவ்வேறு நாடுகளில் ஏடிஎம்களில் அவர்கள் கொள்ளையடித்துள்ளனர். இவை அனைத்தும் இரண்டு மணி நேரம் 13 நிமிட இடைவெளியில் நடந்தவை. இது உலகளவில் நடைபெற்ற ஒரு அசாதாரண குற்றமாகும். ஆனால், இந்த குற்றத்தைப் பொருத்தவரை, ஏராளமான ஆண்கள் ஏ.டி.எம். மையங்கள் வரை நடந்து செல்வது, வங்கி அட்டைகளை செருகுவது மற்றும் பணக்கட்டுகளை பைகளில் திணிப்பது போன்ற சிசிடிவி காட்சிகளைக் கண்டு மகாராஷ்டிரா சைபர் கிரைம் பிரிவு அதிகாரிகள் வியப்படைந்தனர். அப்போது, அவர்கள் இந்த குற்றத்தின் முழு பரிணாமத்தை அறிந்திருக்கவில்லை. "இதுபோன்ற பண மோசடி நெட்வொர்க் பற்றி எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை" என்று இந்த விசாரணைக்கு தலைமை தாங்கிய ஐ.ஜி. பிரிஜேஷ் சிங் குறிப்பிட்டார். ஏ.டி.எம். மையங்களுக்குச் சென்று பணம் எடுக்கும் நபர்களை ஒரு குழு லேப்டாப் மூலம் கண்காணித்துக் கொண்டிருந்ததாக அவர் கூறினார். பணத்தை எடுக்கும் நபர்கள், அதை மறைத்து வைக்க எத்தனிக்கும் போதெல்லாம், அதனைக் கண்டுபிடித்து அந்த நபரை கண்காணிப்பவர்கள் அடிப்பதை சிசிடிவி வாயிலாக பார்த்து வியந்ததாக பிரிஜேஷ் சிங் தெரிவித்தார். சிசிடிவி காட்சிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மொபைல் போன் தரவுகளைப் பயன்படுத்தி அடுத்து வந்த வாரங்களில் 18 சந்தேக நபர்களை, இந்திய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இப்போது சிறையில் உள்ளனர், விசாரணைக்காக காத்திருக்கிறார்கள். இவர்கள் யாரும் குற்றப்பின்னணி கொண்டவர்கள் அல்ல என்று சிங் கூறுகிறார். கைது செய்யப்பட்டவர்களில் ஒரு ஓட்டல் பணியாளர், ஓட்டுநர் மற்றும் செருப்புத் தைப்பவர் ஒருவரும் அடங்குவர். மற்றொருவர் பார்மசி பட்டதாரி. "அவர்கள் சராசரி மனிதர்கள்," என்று அவர் கூறுகிறார். ஆனாலும் கூட, பாலிவுட் காட்சிகளில் தலை காட்டுவதாக பணியமர்த்தப்பட்டதாக கூறப்பட்டாலும் அவர்களுக்கு உண்மையில் தாங்கள் என்ன செய்கிறோம் என்பது தெரிந்திருக்கும் என்று பிரிஜேஷ்சிங் எண்ணுகிறார். ஆனால் யாருக்காக வேலை செய்திருக்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரியுமா? உலகில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட, ரகசியமாக இயங்கும் வடகொரிய அரசே இந்தக் கொள்ளையின் பின்னணியில் இருப்பதாக புலனாய்வு அதிகாரிகள் நம்புகின்றனர். வட கொரியா உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்று. ஆனாலும் கூட, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலால் தடைசெய்யப்பட்ட அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை தயாரிக்க தன் வளங்களில் குறிப்பிடத்தக்க அளவை வடகொரியா பயன்படுத்துகிறது. இதன் விளைவாக, ஐநா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்திருப்பதால் அந்நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வட கொரியாவில் 11 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிக்கு வந்த கிம் ஜாங் உன், இதற்கு முன்பு யாரும் செய்யாத வகையில் 4 அணு ஆயுத சோதனைகள் உட்பட பல ஆயுத சோதனைகள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனைகளை மேற்பார்வையிட்டுள்ளார். பட மூலாதாரம்,KRT/REUTERS தன்னுடைய பொருளாதாரத்தை நிலைநிறுத்தவும், ஆயுதத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவும் தேவையான பணத்தை திருடுவதற்கு மேம்பட்ட ஹேக்கர்களின் குழுவை வட கொரிய அரசு பயன்படுத்துவதாக அமெரிக்க அதிகாரிகள் நம்புகின்றனர். இந்த ஹேக்கர்களை கொண்டு பல்வேறு உலக நாடுகளில் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் வட கொரியா பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்கிறது. வட கொரியாவின் சக்திவாய்ந்த இராணுவ புலனாய்வு அமைப்பால் இயக்கப்படும் லாசரஸ் குரூப் என்ற புனைப்பெயர் கொண்ட ஹேக்கர்கள் உலகெங்கிலும் உள்ள வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்குள் நுழைந்து கொள்ளையடிப்பதாக அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர். இறந்த பின் மீண்டு வந்ததாக பைபிளில் கூறப்படும் லாசரஸின் பெயரை, இந்த ஹேக்கர்களுக்கு சைபர்-பாதுகாப்பு வல்லுநர்கள் சூட்டினார். ஏனெனில் அவர்களின் வைரஸ்கள் கணினி நெட்வொர்க்குகளுக்குள் நுழைந்தவுடன், அவற்றைக் கொல்வது கிட்டத்தட்ட சாத்தியமில்லாத ஒன்றாகிவிடுகிறது. 2014-ம் ஆண்டில் சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் கணினி நெட்வொர்க்கை வட கொரியா ஹேக் செய்ததாக அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா குற்றம் சாட்டினார். அப்போதுதான் இந்த ஹேக்கர்கள் குழு முதன் முதலில் சர்வதேச முக்கியத்துவம் பெற்றது. கிம் ஜாங் உன் கொலை செய்யப்படுவது போல சித்தரிக்கப்படும் "தி இன்டர்வியூ" என்ற திரைப்படத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஹேக்கர்கள் சைபர் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI குற்றம் சாட்டியது. பட மூலாதாரம்,ROBYN BECK 2016ஆம் ஆண்டில் வங்கதேசத்தின் மத்திய வங்கியிலிருந்து 1 பில்லியன் டாலர் பணத்தை திருட முயன்றதாகவும், பிரிட்டனில் உள்ள தேசிய சுகாதார சேவை அமைப்பு உட்பட உலகெங்கிலும் பல அமைப்புகளிடம் இருந்தும் பிணைத்தொகையைப் பெற முயன்ற WannaCry இணையத் தாக்குதலை நடத்தியதாகவும் லாசரஸ் குழு மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் வட கொரியா, லாசரஸ் குழு என்ற ஒன்று இருப்பதாகக் கூறுவதையே கடுமையாக மறுக்கிறது. ஹேக்கிங் மூலம் பணம் பறிப்பு என்பது போன்ற குற்றச்சாட்டுகளையும் வடகொரியா நிராகரித்துள்ளது. ஆனால் முன்னணி சட்ட அமலாக்க முகமைகளோ, வட கொரியாவின் இணைய ஊடுருவல்கள் முன்னெப்போதையும் விட மேம்பட்டவை, பெரிய இலக்குகளைக் கொண்டவை என்று கூறுகின்றன. காஸ்மோஸ் வங்கிக் கொள்ளையைப் பொருத்தவரை, ஹேக்கர்கள் அதற்கு "ஜாக்பாட்டிங்" என்ற நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளனர். ஏனெனில், ஏ.டி.எம். இயந்திரம் பணத்தைக் கொட்டுவது என்பதுபரிசு இயந்திரத்தில் ஜாக்பாட் அடிப்பது போன்றதுதான். தொடக்கத்தில், வங்கியின் கணினி கட்டமைப்புகள் வழக்கமான முறையிலேயே ஹேக் செய்யப்பட்டுள்ளன. அதாவது, யாரோ ஒரு ஊழியர் திறந்து பார்த்த மின்னஞ்சல் மூலம் கணினி நெட்வொர்க்கில் ஹேக்கர்கள் ஊடுருவியுள்ளனர். ஊடுருவியபின், ஏ.டி.எம். சுவிட்ச் எனப்படும் ஒரு சிறிய மென்பொருளை ஹேக்கர்கள் கையாண்டுள்ளனர். அதுதான் ஏ.டி.எம். மையங்களில் பணத்தை வழங்குவதற்கான ஒப்புதல் அளிக்க வங்கிக்கு செய்திகளை அனுப்புகிறது. இது உலகின் எந்த மூலையில் இருந்தும் தங்களது கூட்டாளிகள் ஏ.டி.எம். மையங்கள் வாயிலாக பணத்தை எடுக்க அனுமதிக்கும் அதிகாரத்தை ஹேக்கர்களுக்கு வழங்கியது. ஒவ்வொரு முறையும் எடுப்பதற்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச தொகையை மாற்றுவது மட்டுமே அவர்களால் முடியாத காரியமாக இருந்தது. ஆகவே, களத்தில் அவர்களுக்கு நிறைய ஆட்களும், ஏராளமான ஏ.டி.எம். அட்டைகளும் தேவையாக இருந்தது. வங்கியின் உண்மையான தரவுகளைப் பயன்படுத்தி நகல் ஏ.டி.எம். அட்டைகளை அவர்கள் தயாரித்துள்ளனர். பிரிட்டிஷ் பாதுகாப்பு நிறுவனமான BAE சிஸ்டம்ஸ் உடனடியாக இது லாசரஸ் குழுவின் வேலை என்று சந்தேகித்தது. பல மாதங்களாக அவர்களைக் கண்காணித்து வந்த அவர்கள் இந்திய வங்கியைத் தாக்க சதி செய்வதை அறிந்து கொண்டிருந்தனர். ஆனால், எந்த வங்கி என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. "இது மற்றொரு குற்றச் செயலாக இருந்திருக்குமானால் மிகவும் தற்செயல் நிகழ்வாக இருந்திருக்கும்" என்கிறார் BAE பாதுகாப்பு ஆய்வாளர் அட்ரியன் நிஷ். காஸ்மாஸ் வங்கி திருட்டில் பயன்படுத்தப்பட்டுள்ள தளவாடங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. வட கொரிய குடிமக்கள் சட்டப்பூர்வமாகச் செல்ல முடியாத நாடுகள் உட்பட 28 நாடுகளில் ஹேக்கர்கள் எவ்வாறு கூட்டாளிகளைக் கண்டுபிடித்தனர்? என்பதே இதில் மிகப்பெரிய கேள்வி. பட மூலாதாரம்,JEAN H. LEE/GETTY IMAGES 'டார்க் வெப்'பில் ஒரு முக்கிய உதவியாளரை லாசரஸ் குழுமம் சந்தித்ததாக அமெரிக்க தொழில்நுட்ப பாதுகாப்பு புலனாய்வு அதிகாரிகள் நம்புகிறார்கள். 'டார்க் வெப்' என்பது முழுமையாக ஹேக்கிங் திறன்களை பரிமாறிக் கொள்ள அர்ப்பணிக்கப்பட்ட ஒரு வலையமைப்பு. ஹேக்கிங் சேவைகள், உபகரணங்கள் கூட பலராலும் அங்கே விற்கப்படுகின்றன. 2018ம் ஆண்டு பிப்ரவரியில், தன்னை பிக் பாஸ் என்று குறிப்பிடும் ஒருவர் கிரெடிட் கார்டு மோசடியை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த குறிப்புகளை வெளியிட்டார். நகல் ஏ.டி.எம். கார்டுகளை தயாரிப்பதற்கான உபகரணங்கள் தன்னிடம் இருப்பதாகவும், அமெரிக்கா மற்றும் கனடாவில் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை அனுப்பும் குழுவை அணுகியதாகவும் அவர் கூறினார். காஸ்மோஸ் வங்கியில் கொள்ளையடிக்க லாசரஸ் குழுமத்திற்கு தேவையான சேவை இதுவே. பிக் பாஸுடன் அவர்கள் இணைந்து பணியாற்றத் தொடங்கினர். அமெரிக்காவின் தொழில்நுட்ப பாதுகாப்பு நிறுவனமான Intel 471 இன் தலைமை உளவுத்துறை அதிகாரி மைக் டிபோல்ட்டிடம் பிக்பாஸ் பற்றி மேலும் அறிய விழைந்தோம். பிக் பாஸ் குறைந்தது 14 ஆண்டுகள் செயல்பாட்டில் இருந்ததையும், ஜி, ஹபீபி மற்றும் பேக்வுட் போன்ற மாற்றுப்பெயர்களைக் கொண்டிருப்பதையும் டிபோல்ட் குழு கண்டுபிடித்தது. வெவ்வேறு தளங்களில் ஒரே மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தியதால், அவரை பாதுகாப்புத் துறையினரால் இனங்காண முடிந்துள்ளது. "அடிப்படையில், அவர் சோம்பேறியாக இருந்தார்," என்கிறார் டிபோல்ட். "நாங்கள் இதை மிகவும் பொதுவான ஒன்றாகப் பார்க்கிறோம்: அவர்கள் ஒவ்வொரு தளத்திலும் வெவ்வேறு மாற்றுப் பெயர்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் ஒரே மின்னஞ்சல் முகவரியை வைத்திருக்கிறார்கள்." என்று அவர் கூறுகிறார். 2019ம் ஆண்டு அமெரிக்காவில் பிக் பாஸ் கைது செய்யப்பட்டார். அவர் 36 வயதான கனடிய குடிமகனான கலேப் அலுமாரி என்பது உலகிற்கு தெரியவந்தது. வட கொரியாவின் பின்னணியில் நடத்தப்பட்ட வங்கிக் கொள்ளைகளில் இருந்து நிதி மோசடி செய்தல் உள்ளிட்ட குற்றங்களை ஒப்புக்கொண்ட அவருக்கு, 11 ஆண்டுகள், எட்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. காஸ்மோஸ் வங்கிக் கொள்ளை அல்லது வேறு எந்த ஹேக்கிங் சதியிலும் தங்களுக்கு தொடர்பு இருந்ததாக வட கொரியா ஒப்புக்கொண்டதில்லை. லண்டனில் உள்ள வட கொரியாவின் தூதரகத்திற்கு காஸ்மோஸ் தாக்குதலில் தொடர்பு இருப்பதாக பிபிசி குற்றச்சாட்டுகளை முன்வைத்தது, ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. எவ்வாறாயினும், தூதர் சோ இ-லை நாங்கள் முன்பு தொடர்பு கொண்டபோது, வட கொரிய அரசு மீதான ஹேக்கிங் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் "ஒரு கேலிக்கூத்து" என்றும், "எங்கள் நாட்டின் நற்பெயரைக் கெடுக்கும் அமெரிக்காவின் முயற்சி" என்றும் பதிலளித்திருந்தார். 2021-ம் ஆண்டு பிப்ரவரியில், லாசரஸ் குழுக்களைச் சேர்ந்த ஹேக்கர்களாக சந்தேகிக்கப்பட்ட ஜோன் சாங் ஹியோக், கிம் இல் மற்றும் பார்க் ஜின் ஹியோக் ஆகிய 3 பேர் மீது அமெரிக்க புலனாய்வுத்துறை (FBI), அமெரிக்க ரகசிய சேவை மற்றும் நீதித்துறை ஆகியவை குற்றச்சாட்டுகளை அறிவித்தன: வட கொரியாவின் இராணுவ புலனாய்வு நிறுவனத்தில் பணிபுரிவதாக கூறிய அவர்கள், இப்போது பியோங்யாங் திரும்பி விட்டதாக கருதப்படுகிறது. பட மூலாதாரம்,DOJ வட கொரியாவில் 7,000 பயிற்சி பெற்ற ஹேக்கர்கள் இருப்பதாக அமெரிக்கா மற்றும் தென் கொரிய அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர். மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே இணையம் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ள வடகொரியாவிற்குள் இருந்து அவர்கள் அனைவரும் செயல்படுவது சாத்தியமில்லை, அவர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். ஒரு முன்னாள் வட கொரிய ராஜிய அதிகாரியும், கிம் ஜாங் உன் ஆட்சியை விட்டு வெளியேறிய மிக மூத்த நபர்களில் ஒருவருமான Ryu Hyeon Woo, ஹேக்கர்கள் வெளிநாட்டில் எவ்வாறு வேலை செய்கிறார்கள் என்பது பற்றிய விவரங்களை வழங்கினார். 2017-ம் ஆண்டில், குவைத்தில் உள்ள வட கொரிய தூதரகத்தில் அவர் பணிபுரிந்தார். அந்த பிராந்தியத்தில் சுமார் 10,000 வட கொரியர்களின் வேலைவாய்ப்பை மேற்பார்வையிட உதவினார். அந்த நேரத்தில், பலர் வளைகுடா முழுவதும் கட்டுமானத் தளங்களில் வேலை செய்து கொண்டிருந்தனர். அனைத்து வட கொரிய தொழிலாளர்களையும் போலவே ஊதியத்தின் பெரும்பகுதியை சொந்த நாட்டு அரசிடம் அவர்கள் ஒப்படைக்க வேண்டியிருந்தது. துபாயில் 19 ஹேக்கர்களை கையாளும் மேற்பார்வையாளரிடம் இருந்து தனது அலுவலகத்திற்கு தினசரி அழைப்புகள் வந்ததாக அவர் கூறினார். "உண்மையில் இணையத்துடன் இணைக்கப்பட்ட ஒரு கணினி மட்டுமே அவர்களுக்குத் தேவை" என்கிறார் அவர். ஆனால் வெளிநாடுகளில் எந்த ஹேக்கர்களும் இல்லை என்று மறுக்கும் வட கொரியா, செல்லத்தக்க விசாக்களுடன் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்கள் மட்டுமே இருப்பதாக கூறுகிறது. ஆனால். உலகம் முழுவதும் இருந்து செயல்படும் இணையப் பிரிவுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றிய எப்.பி.ஐ. குற்றச்சாட்டுகளுடன் Ryu Hyeon Woo அளித்துள்ள விளக்கம் பொருந்திப் போகிறது. 2017 செப்டம்பரில், வட கொரியா மீது அதுவரை இல்லாத கடுமையான தடைகளை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் விதித்தது. எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்தியது; ஏற்றுமதியை மேலும் கட்டுப்படுத்தியது; அத்துடன் நில்லாது, வட கொரிய தொழிலாளர்களை 2019ம் ஆண்டு டிசம்பருக்குள் வீட்டிற்கு அனுப்[பமாறு ஐநா உறுப்பு நாடுகளை அது கேட்டுக் கொண்டது. இருப்பினும், ஹேக்கர்கள் இன்னும் செயல்பட்டுக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது. அவர்கள் இப்போது கிரிப்டோ-கரன்சி நிறுவனங்களை குறிவைத்து, $3.2 பில்லியன் திருடியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. துப்பாக்கிகளை விடுத்து கீ போர்டுகளை பயன்படுத்தும் உலகின் முன்னணி வங்கிக் கொள்ளையர்கள் என்று அவர்களை அமெரிக்க அதிகாரிகள் வர்ணிக்கின்றனர். https://www.bbc.com/tamil/articles/cq5zqzd281po
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.