Jump to content

சிறுமிகளுடன் பாலுறவு கொண்டதாக கைது: தொழிலதிபர் சிறையில் மரணம்


ampanai

Recommended Posts

பதினெட்டு வயதுக்கும் குறைவான சிறுமிகளுடன் பாலுறவு கொண்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் புகழ்பெற்ற நிதி முதலீட்டு நிர்வாகிகளில் ஒருவரான ஜெப்ரே எப்ஸ்டெய்னின் உடல், சனிக்கிழைமை சிறையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் தமது சிறை அறையில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கருத்துப்படுகிறது.

2002 முதல் 2005 வரை 18 வயதுக்கும் குறைவான பல சிறுமிகளுடன் பாலுறவு கொண்ட குற்றச்சாட்டுகளின் பேரில் கைதான அவர் மீது, பாலுறவுக்காக சிறுமிகளைக் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Donald Trump, Epstein

படத்தின் காப்புரிமைGETTY IMAGES

2005இல் அவரால் பாதிக்கப்பட்டதாக 14 வயது சிறுமி ஒருவரின் குடும்பம் புகார் கூறியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளியில் தெரியவந்தது.

2002இல் ஓர் ஊடக நேர்காணலில், "அவர் ஒரு பயங்கரமான ஆள்; என்னைப்போலவே அவருக்கும் அழகான பெண்களைப் பிடிக்கும் என்று கூறுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் பெண்கள்," என்று இப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார்.

66 வயதான எப்ஸ்டெய்ன், கடந்த மாதம் சிறையில் பாதி மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அது ஒரு தற்கொலை முயற்சி என்று அப்போது கூறப்பட்டது.

https://www.bbc.com/tamil/global-49309648

The Justice Department's inspector general is opening an investigation into the circumstances surrounding the death of multimillionaire financier and accused sex trafficker Jeffrey Epstein, Attorney General William Barr announced on Saturday.

The Federal Bureau of Prisons confirmed Epstein's death, saying he was found unresponsive in his cell on Saturday at New York's Metropolitan Correctional Center around 6:30 a.m. ET. The bureau's release called it "an apparent suicide," and said the FBI is investigating. Two law enforcement sources told CNN that Epstein died by suicide.
 
Barr said he was "appalled" to learn of Epstein's death while in federal custody awaiting trial.
 
Link to comment
Share on other sites

அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் ஆகியோரின் நெருங்கிய நண்பரான கோடீஸ்வரர் ஜெவ்ரே எப்ஸ்டெய்ன் சிறுமிகளை பாலியல் நோக்கத்திற்காக கடத்தினார் என  எப்பிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

2002 முதல் 2005 வரையான காலப்பகுதியில் புளோரிடா மற்றும் நியுயோர்க்கில் பல சிறுமிகளை எப்ஸ்டெய்ன் துஸ்பிரயோகம் செய்தார் என குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள அதிகாரிகள் இது தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் அதனை தெரிவிக்குமாறு  பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

சிறுமிகளை கடத்தினார் மற்றும் துஸ்பிரயோகம் செய்தார் என்ற இரு குற்றச்சாட்டுகளை எவ்பிஐ  அதிகாரிகள் சுமத்தியுள்ளனர்.

எவ்பிஐ அதிகாரிகள் சோதனை நடவடிக்கையின் போது ஜெவ்ரே எப்ஸ்டெய்னின் மாளிகையிலிருந்து  சிறுமிகளின் நிர்வாணப்புகைப்படங்களை மீட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்

சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பின்னர் தனது தவறை மறைப்பதற்காக பெருமளவு பணத்தை ஜெவ்ரே எப்ஸ்டெய்ன் வழங்கினார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

அவர் தான் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கியவர்களிற்கு பணம் கொடுத்து புதிதாக சிறுமிகளை அறிமுகப்படுத்தும் படி கேட்டுக்கொண்டார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் அவர் ஒரு வலையமைப்பை உருவாக்கியிருந்தார் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

செல்வந்தரிடம் பணிபுரிந்தவர்கள் உட்பட அவரிற்கு நெருக்கமான பலர் இந்த துஸ்பிரயோக நடவடிக்கைகளிற்கு உதவியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிலர் ஜெவ்ரே எப்ஸ்டெய்னின் இச்சையை பூர்த்தி செய்வதற்காக சிறுமிகளை நியுயோர்க்கிற்கு அழைத்து வந்தனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/60056

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

US-financier-Epstein-commits-suicide-.jpg

சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய அமெரிக்க கோடீஸ்வரர் சிறையில் தற்கொலை!

சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய வழக்கில் கைதான அமெரிக்க கோடீஸ்வரர் ஒருவர், மன்ஹட்டன் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவில் நிதி நிறுவன தலைவராகவும், கோடீஸ்வரருமான ஜெப்ரி எப்ஸ்டீன் என்பவரே தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மன்ஹட்டன் மற்றும் புளோரிடாவில் உள்ள தனது சொகுசு வீடுகளில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை பல சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் எப்ஸ்டீனை கடந்த மாதம் கைது செய்து, மன்ஹட்டன் சிறையில் தடுத்து வைத்தனர்.

இந்த நிலையில், மன்ஹட்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் சிறை அறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணம் வௌியிடப்படவில்லை.

இதுதொடர்பாகவும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

http://athavannews.com/சிறுமிகளை-பாலியல்-வன்புண/

############    #################    #######################

எவ்வளவு பணம், செல்வாக்கு இருந்தும்... அவரின் வாழ்வு, அற்ப புத்தியால்.... முடிந்து விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

US-financier-Epstein-commits-suicide-.jpg

சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய அமெரிக்க கோடீஸ்வரர் சிறையில் தற்கொலை!

சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய வழக்கில் கைதான அமெரிக்க கோடீஸ்வரர் ஒருவர், மன்ஹட்டன் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவில் நிதி நிறுவன தலைவராகவும், கோடீஸ்வரருமான ஜெப்ரி எப்ஸ்டீன் என்பவரே தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மன்ஹட்டன் மற்றும் புளோரிடாவில் உள்ள தனது சொகுசு வீடுகளில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை பல சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் எப்ஸ்டீனை கடந்த மாதம் கைது செய்து, மன்ஹட்டன் சிறையில் தடுத்து வைத்தனர்.

இந்த நிலையில், மன்ஹட்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் சிறை அறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணம் வௌியிடப்படவில்லை.

இதுதொடர்பாகவும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

http://athavannews.com/சிறுமிகளை-பாலியல்-வன்புண/

############    #################    #######################

எவ்வளவு பணம், செல்வாக்கு இருந்தும்... அவரின் வாழ்வு, அற்ப புத்தியால்.... முடிந்து விட்டது.

தற்போதைய சிறைகளில் தற்கொலை செய்வது என்பது  சாத்தியம் இல்லாத ஒன்று.
இவருக்கும் இவருடைய [பாலியல் துஸ்பிரயோககளுக்கும் 
பங்காளிகளாக ட்ரம் கிளின்டன் உட்பட பல அரசியல் பிரமுகங்கள் உண்டு 
இவர்களினால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யபட்ட பெண்களில் இரண்டு மூன்று பேர் 
மட்டுமே இப்போது கோர்டில் தமது சாட்ச்சிகளை பதிவு செய்து இருக்கிறார்கள் .... அதுக்கே கோர்ட் ஆடிப்போய் இருக்கிறது மற்றவர்கள் வாய் திறந்தால் எவ்வாறு இருக்கும் இருக்கும் என்பது கற்பனைக்கும் வாராது.


இது திட்டமிட்ட ஒரு கொலை 
வாய் அடித்து மூட வைக்க பட்டு உள்ளது. 
இவருக்கு பெண்களை வயது குறைந்த குமரிகளை கூட்டி கொடுத்தவர் ஒரு பெண் 
அவருக்கு எதிராக வழக்கை மாற்றி தொடர முடியும் 

இங்கு நீதிபதிகள் அரசியலவாதிகள் எல்லோரும் விலை போனவர்கள் 
எந்த நீதியும் உண்மையும் வெளிவர போவதில்லை. 

தரம் கெட்ட நாதாரிகள் கோட் சூட்டுடன் 
வெள்ளையார்போலவும்  நல்லவர்கள் கூனி குறுகுவதும் என்பது 
எழுதப்படாத விதியாகி விட்டது. 

Link to comment
Share on other sites

43 minutes ago, Maruthankerny said:

இங்கு நீதிபதிகள் அரசியலவாதிகள் எல்லோரும் விலை போனவர்கள் 
எந்த நீதியும் உண்மையும் வெளிவர போவதில்லை. 

பொதுவாக நீதிபதிகள் நியமிக்கப்படுவர். அமெரிக்காவில் இவர்கள் மக்களால் தெரிவு செய்யப்படுவார்கள்? அப்படி எனில் இவர்கள் அடுத்த தெரிவில் தோல்வியடையலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ampanai said:

பொதுவாக நீதிபதிகள் நியமிக்கப்படுவர். அமெரிக்காவில் இவர்கள் மக்களால் தெரிவு செய்யப்படுவார்கள்? அப்படி எனில் இவர்கள் அடுத்த தெரிவில் தோல்வியடையலாம்?

மக்க்களால் ............
இதுதான் அமெரிக்காவில் கேலி கூத்தான விடயம்.
மக்கள் ஆண்டாண்டு காலமாக இங்கே மூளை சலவை செய்து வைக்க பட்டு உள்ளார்கள்.

ஆப்ரிக்க  மக்கள் எப்படி மருத்துவ பரிசோதனை எலியாக 
மேலைநாட்டு நிறுவனங்களாலும் அரசுகளாலும் பாவிக்க படுகிறார்களோ 
அமெரிக்கர்கள் மூளை சலவை சைக்கோலஜி என்பவற்றுக்கு பாவிக்க படுகிறார்கள் 
இங்கு வெற்றியானதை பின்பு இந்தியா ஐரோப்பா தென் அமேரிக்கா என்று விரிவாக்குவார்கள்.
நீங்கள் உலக மாற்றங்கள் ஒழுங்குகளை சரியாக கவனித்து வந்தால் இது விளங்கும். 

இங்கு யார் என்ன தராதரம் என்று எல்லாம் யாரும் பார்ப்பதில்லை 
தேர்தல் வந்தால்  எந்த கட்சி  என்றுதான் பார்ப்பார்கள்  நீலமா  சிவப்பா என்று பார்த்து 
வாக்கு போட்டு தமது தலையில் மண்ணை போடுவது அமெரிக்கர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

தற்போதைய சிறைகளில் தற்கொலை செய்வது என்பது  சாத்தியம் இல்லாத ஒன்று.
இவருக்கும் இவருடைய [பாலியல் துஸ்பிரயோககளுக்கும் 
பங்காளிகளாக ட்ரம் கிளின்டன் உட்பட பல அரசியல் பிரமுகங்கள் உண்டு 
இவர்களினால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யபட்ட பெண்களில் இரண்டு மூன்று பேர் 
மட்டுமே இப்போது கோர்டில் தமது சாட்ச்சிகளை பதிவு செய்து இருக்கிறார்கள் .... அதுக்கே கோர்ட் ஆடிப்போய் இருக்கிறது மற்றவர்கள் வாய் திறந்தால் எவ்வாறு இருக்கும் இருக்கும் என்பது கற்பனைக்கும் வாராது.


இது திட்டமிட்ட ஒரு கொலை 
வாய் அடித்து மூட வைக்க பட்டு உள்ளது. 
இவருக்கு பெண்களை வயது குறைந்த குமரிகளை கூட்டி கொடுத்தவர் ஒரு பெண் 
அவருக்கு எதிராக வழக்கை மாற்றி தொடர முடியும் 

இங்கு நீதிபதிகள் அரசியலவாதிகள் எல்லோரும் விலை போனவர்கள் 
எந்த நீதியும் உண்மையும் வெளிவர போவதில்லை. 

தரம் கெட்ட நாதாரிகள் கோட் சூட்டுடன் 
வெள்ளையார்போலவும்  நல்லவர்கள் கூனி குறுகுவதும் என்பது 
எழுதப்படாத விதியாகி விட்டது. 

ஸ்ரீலங்காவில் ... அரசியல் கைதிகளாக இருந்த குட்டிமணியையும், சக தமிழ் கைதிகளையும்.... கண்ணை தோண்டி  கொலை செய்தார்கள்.  உலகம் ரசித்தது.

தமிழ் நாட்டு  சிறையில் ....  ரவி என்பவர், மின்சார இணைப்பை கடித்து மரணம் அடைந்தார்  எனும் போதும்... உலகம் கண்டு கொள்ளவில்லை.

ஆசிய நாடுகளில்... இது, சாதாரணமானது என விட்டதன் பலன்... அமேரிக்கா வரை வந்துள்ளது.

எந்தக் குற்றத்தை... செய்த கைதியாக இருந்தாலும்,
அவர் சிறைக்குள் வந்தவுடன்....  அவரின் உயிருக்கு பாதுகாப்பு கொடுப்பது,
சிறைச்சாலை.....  உத்தியோகத்தினர்களது கடமை.
அதற்காகத்தான்... அவர்ககளுக்கு, அரசு சம்பளம் கொடுக்கின்றது.
ஒரு பொறுப்பான  வேலையை... நம்பி, செய்பவர்கள்,
அதற்கு.... கண்ணும் கருத்துமாக.. வேலை செய்ய வேண்டும்.

அந்த  அமெரிக்கரின்... செய்த செய்கையை... யாருமே மன்னிக்க முடியாது என்றாலும்,
அவரின்.. சிறைச் சாலை மரணம், மனதை உறுத்துகின்றது.  

இதுக்கெல்லாம்.... குரல் கொடுக்காத ஐ.நா.வை....
நாற்சந்தியில் வைத்து.... சாணி அடி  கொடுக்க வேண்டும் என்று,  கைகள் துடிக்கின்றது.  🤬

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.