Jump to content

சிறுமிகளுடன் பாலுறவு கொண்டதாக கைது: தொழிலதிபர் சிறையில் மரணம்


ampanai

Recommended Posts

பதினெட்டு வயதுக்கும் குறைவான சிறுமிகளுடன் பாலுறவு கொண்டதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமெரிக்காவின் புகழ்பெற்ற நிதி முதலீட்டு நிர்வாகிகளில் ஒருவரான ஜெப்ரே எப்ஸ்டெய்னின் உடல், சனிக்கிழைமை சிறையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் தமது சிறை அறையில் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கருத்துப்படுகிறது.

2002 முதல் 2005 வரை 18 வயதுக்கும் குறைவான பல சிறுமிகளுடன் பாலுறவு கொண்ட குற்றச்சாட்டுகளின் பேரில் கைதான அவர் மீது, பாலுறவுக்காக சிறுமிகளைக் கடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Donald Trump, Epstein

படத்தின் காப்புரிமைGETTY IMAGES

2005இல் அவரால் பாதிக்கப்பட்டதாக 14 வயது சிறுமி ஒருவரின் குடும்பம் புகார் கூறியதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளியில் தெரியவந்தது.

2002இல் ஓர் ஊடக நேர்காணலில், "அவர் ஒரு பயங்கரமான ஆள்; என்னைப்போலவே அவருக்கும் அழகான பெண்களைப் பிடிக்கும் என்று கூறுகிறார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் இளம் பெண்கள்," என்று இப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார்.

66 வயதான எப்ஸ்டெய்ன், கடந்த மாதம் சிறையில் பாதி மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அது ஒரு தற்கொலை முயற்சி என்று அப்போது கூறப்பட்டது.

https://www.bbc.com/tamil/global-49309648

The Justice Department's inspector general is opening an investigation into the circumstances surrounding the death of multimillionaire financier and accused sex trafficker Jeffrey Epstein, Attorney General William Barr announced on Saturday.

The Federal Bureau of Prisons confirmed Epstein's death, saying he was found unresponsive in his cell on Saturday at New York's Metropolitan Correctional Center around 6:30 a.m. ET. The bureau's release called it "an apparent suicide," and said the FBI is investigating. Two law enforcement sources told CNN that Epstein died by suicide.
 
Barr said he was "appalled" to learn of Epstein's death while in federal custody awaiting trial.
 
Link to comment
Share on other sites

அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் ஆகியோரின் நெருங்கிய நண்பரான கோடீஸ்வரர் ஜெவ்ரே எப்ஸ்டெய்ன் சிறுமிகளை பாலியல் நோக்கத்திற்காக கடத்தினார் என  எப்பிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

2002 முதல் 2005 வரையான காலப்பகுதியில் புளோரிடா மற்றும் நியுயோர்க்கில் பல சிறுமிகளை எப்ஸ்டெய்ன் துஸ்பிரயோகம் செய்தார் என குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள அதிகாரிகள் இது தொடர்பில் தகவல்கள் தெரிந்தால் அதனை தெரிவிக்குமாறு  பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

சிறுமிகளை கடத்தினார் மற்றும் துஸ்பிரயோகம் செய்தார் என்ற இரு குற்றச்சாட்டுகளை எவ்பிஐ  அதிகாரிகள் சுமத்தியுள்ளனர்.

எவ்பிஐ அதிகாரிகள் சோதனை நடவடிக்கையின் போது ஜெவ்ரே எப்ஸ்டெய்னின் மாளிகையிலிருந்து  சிறுமிகளின் நிர்வாணப்புகைப்படங்களை மீட்டுள்ளனர் எனவும் அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்

சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த பின்னர் தனது தவறை மறைப்பதற்காக பெருமளவு பணத்தை ஜெவ்ரே எப்ஸ்டெய்ன் வழங்கினார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

அவர் தான் பாலியல் துஸ்பிரயோகத்திற்குள்ளாக்கியவர்களிற்கு பணம் கொடுத்து புதிதாக சிறுமிகளை அறிமுகப்படுத்தும் படி கேட்டுக்கொண்டார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் அவர் ஒரு வலையமைப்பை உருவாக்கியிருந்தார் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்

செல்வந்தரிடம் பணிபுரிந்தவர்கள் உட்பட அவரிற்கு நெருக்கமான பலர் இந்த துஸ்பிரயோக நடவடிக்கைகளிற்கு உதவியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சிலர் ஜெவ்ரே எப்ஸ்டெய்னின் இச்சையை பூர்த்தி செய்வதற்காக சிறுமிகளை நியுயோர்க்கிற்கு அழைத்து வந்தனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/60056

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

US-financier-Epstein-commits-suicide-.jpg

சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய அமெரிக்க கோடீஸ்வரர் சிறையில் தற்கொலை!

சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய வழக்கில் கைதான அமெரிக்க கோடீஸ்வரர் ஒருவர், மன்ஹட்டன் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவில் நிதி நிறுவன தலைவராகவும், கோடீஸ்வரருமான ஜெப்ரி எப்ஸ்டீன் என்பவரே தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மன்ஹட்டன் மற்றும் புளோரிடாவில் உள்ள தனது சொகுசு வீடுகளில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை பல சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் எப்ஸ்டீனை கடந்த மாதம் கைது செய்து, மன்ஹட்டன் சிறையில் தடுத்து வைத்தனர்.

இந்த நிலையில், மன்ஹட்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் சிறை அறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணம் வௌியிடப்படவில்லை.

இதுதொடர்பாகவும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

http://athavannews.com/சிறுமிகளை-பாலியல்-வன்புண/

############    #################    #######################

எவ்வளவு பணம், செல்வாக்கு இருந்தும்... அவரின் வாழ்வு, அற்ப புத்தியால்.... முடிந்து விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

US-financier-Epstein-commits-suicide-.jpg

சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய அமெரிக்க கோடீஸ்வரர் சிறையில் தற்கொலை!

சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய வழக்கில் கைதான அமெரிக்க கோடீஸ்வரர் ஒருவர், மன்ஹட்டன் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

அமெரிக்காவில் நிதி நிறுவன தலைவராகவும், கோடீஸ்வரருமான ஜெப்ரி எப்ஸ்டீன் என்பவரே தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மன்ஹட்டன் மற்றும் புளோரிடாவில் உள்ள தனது சொகுசு வீடுகளில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை பல சிறுமிகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் எப்ஸ்டீனை கடந்த மாதம் கைது செய்து, மன்ஹட்டன் சிறையில் தடுத்து வைத்தனர்.

இந்த நிலையில், மன்ஹட்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் சிறை அறையிலேயே தற்கொலை செய்துகொண்டார். அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணம் வௌியிடப்படவில்லை.

இதுதொடர்பாகவும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

http://athavannews.com/சிறுமிகளை-பாலியல்-வன்புண/

############    #################    #######################

எவ்வளவு பணம், செல்வாக்கு இருந்தும்... அவரின் வாழ்வு, அற்ப புத்தியால்.... முடிந்து விட்டது.

தற்போதைய சிறைகளில் தற்கொலை செய்வது என்பது  சாத்தியம் இல்லாத ஒன்று.
இவருக்கும் இவருடைய [பாலியல் துஸ்பிரயோககளுக்கும் 
பங்காளிகளாக ட்ரம் கிளின்டன் உட்பட பல அரசியல் பிரமுகங்கள் உண்டு 
இவர்களினால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யபட்ட பெண்களில் இரண்டு மூன்று பேர் 
மட்டுமே இப்போது கோர்டில் தமது சாட்ச்சிகளை பதிவு செய்து இருக்கிறார்கள் .... அதுக்கே கோர்ட் ஆடிப்போய் இருக்கிறது மற்றவர்கள் வாய் திறந்தால் எவ்வாறு இருக்கும் இருக்கும் என்பது கற்பனைக்கும் வாராது.


இது திட்டமிட்ட ஒரு கொலை 
வாய் அடித்து மூட வைக்க பட்டு உள்ளது. 
இவருக்கு பெண்களை வயது குறைந்த குமரிகளை கூட்டி கொடுத்தவர் ஒரு பெண் 
அவருக்கு எதிராக வழக்கை மாற்றி தொடர முடியும் 

இங்கு நீதிபதிகள் அரசியலவாதிகள் எல்லோரும் விலை போனவர்கள் 
எந்த நீதியும் உண்மையும் வெளிவர போவதில்லை. 

தரம் கெட்ட நாதாரிகள் கோட் சூட்டுடன் 
வெள்ளையார்போலவும்  நல்லவர்கள் கூனி குறுகுவதும் என்பது 
எழுதப்படாத விதியாகி விட்டது. 

Link to comment
Share on other sites

43 minutes ago, Maruthankerny said:

இங்கு நீதிபதிகள் அரசியலவாதிகள் எல்லோரும் விலை போனவர்கள் 
எந்த நீதியும் உண்மையும் வெளிவர போவதில்லை. 

பொதுவாக நீதிபதிகள் நியமிக்கப்படுவர். அமெரிக்காவில் இவர்கள் மக்களால் தெரிவு செய்யப்படுவார்கள்? அப்படி எனில் இவர்கள் அடுத்த தெரிவில் தோல்வியடையலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ampanai said:

பொதுவாக நீதிபதிகள் நியமிக்கப்படுவர். அமெரிக்காவில் இவர்கள் மக்களால் தெரிவு செய்யப்படுவார்கள்? அப்படி எனில் இவர்கள் அடுத்த தெரிவில் தோல்வியடையலாம்?

மக்க்களால் ............
இதுதான் அமெரிக்காவில் கேலி கூத்தான விடயம்.
மக்கள் ஆண்டாண்டு காலமாக இங்கே மூளை சலவை செய்து வைக்க பட்டு உள்ளார்கள்.

ஆப்ரிக்க  மக்கள் எப்படி மருத்துவ பரிசோதனை எலியாக 
மேலைநாட்டு நிறுவனங்களாலும் அரசுகளாலும் பாவிக்க படுகிறார்களோ 
அமெரிக்கர்கள் மூளை சலவை சைக்கோலஜி என்பவற்றுக்கு பாவிக்க படுகிறார்கள் 
இங்கு வெற்றியானதை பின்பு இந்தியா ஐரோப்பா தென் அமேரிக்கா என்று விரிவாக்குவார்கள்.
நீங்கள் உலக மாற்றங்கள் ஒழுங்குகளை சரியாக கவனித்து வந்தால் இது விளங்கும். 

இங்கு யார் என்ன தராதரம் என்று எல்லாம் யாரும் பார்ப்பதில்லை 
தேர்தல் வந்தால்  எந்த கட்சி  என்றுதான் பார்ப்பார்கள்  நீலமா  சிவப்பா என்று பார்த்து 
வாக்கு போட்டு தமது தலையில் மண்ணை போடுவது அமெரிக்கர்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

தற்போதைய சிறைகளில் தற்கொலை செய்வது என்பது  சாத்தியம் இல்லாத ஒன்று.
இவருக்கும் இவருடைய [பாலியல் துஸ்பிரயோககளுக்கும் 
பங்காளிகளாக ட்ரம் கிளின்டன் உட்பட பல அரசியல் பிரமுகங்கள் உண்டு 
இவர்களினால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யபட்ட பெண்களில் இரண்டு மூன்று பேர் 
மட்டுமே இப்போது கோர்டில் தமது சாட்ச்சிகளை பதிவு செய்து இருக்கிறார்கள் .... அதுக்கே கோர்ட் ஆடிப்போய் இருக்கிறது மற்றவர்கள் வாய் திறந்தால் எவ்வாறு இருக்கும் இருக்கும் என்பது கற்பனைக்கும் வாராது.


இது திட்டமிட்ட ஒரு கொலை 
வாய் அடித்து மூட வைக்க பட்டு உள்ளது. 
இவருக்கு பெண்களை வயது குறைந்த குமரிகளை கூட்டி கொடுத்தவர் ஒரு பெண் 
அவருக்கு எதிராக வழக்கை மாற்றி தொடர முடியும் 

இங்கு நீதிபதிகள் அரசியலவாதிகள் எல்லோரும் விலை போனவர்கள் 
எந்த நீதியும் உண்மையும் வெளிவர போவதில்லை. 

தரம் கெட்ட நாதாரிகள் கோட் சூட்டுடன் 
வெள்ளையார்போலவும்  நல்லவர்கள் கூனி குறுகுவதும் என்பது 
எழுதப்படாத விதியாகி விட்டது. 

ஸ்ரீலங்காவில் ... அரசியல் கைதிகளாக இருந்த குட்டிமணியையும், சக தமிழ் கைதிகளையும்.... கண்ணை தோண்டி  கொலை செய்தார்கள்.  உலகம் ரசித்தது.

தமிழ் நாட்டு  சிறையில் ....  ரவி என்பவர், மின்சார இணைப்பை கடித்து மரணம் அடைந்தார்  எனும் போதும்... உலகம் கண்டு கொள்ளவில்லை.

ஆசிய நாடுகளில்... இது, சாதாரணமானது என விட்டதன் பலன்... அமேரிக்கா வரை வந்துள்ளது.

எந்தக் குற்றத்தை... செய்த கைதியாக இருந்தாலும்,
அவர் சிறைக்குள் வந்தவுடன்....  அவரின் உயிருக்கு பாதுகாப்பு கொடுப்பது,
சிறைச்சாலை.....  உத்தியோகத்தினர்களது கடமை.
அதற்காகத்தான்... அவர்ககளுக்கு, அரசு சம்பளம் கொடுக்கின்றது.
ஒரு பொறுப்பான  வேலையை... நம்பி, செய்பவர்கள்,
அதற்கு.... கண்ணும் கருத்துமாக.. வேலை செய்ய வேண்டும்.

அந்த  அமெரிக்கரின்... செய்த செய்கையை... யாருமே மன்னிக்க முடியாது என்றாலும்,
அவரின்.. சிறைச் சாலை மரணம், மனதை உறுத்துகின்றது.  

இதுக்கெல்லாம்.... குரல் கொடுக்காத ஐ.நா.வை....
நாற்சந்தியில் வைத்து.... சாணி அடி  கொடுக்க வேண்டும் என்று,  கைகள் துடிக்கின்றது.  🤬

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.