Jump to content

தட்டி வான்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: outdoor

"தட்டி வான்"
-------------------

 
'தட்டி வான்' 
எங்கள் ஊர் 
எல்லைகளை 
தொட்டுச் 
செல்லும் 
'சிற்றி' வான்

அச்சுவேலி 
தொடங்கி
ஆவரங்கால் 
ஊடறுத்து 
'குரும்பசிட்டி'க்கு
கூடச் சென்று 

சில்லாலை, 
பண்டத்தரிப்பில் 
சிலிர்த்து நிற்கும்

'கொத்தியாலடி' 
ஆசுப்பத்திரிக்கும் 
'கூத்தஞ்சிமா' 
சந்தைக்கும் 
அத்தனாசியாரின் 
'சித்த' 
வைத்தியசாலைக்கும் 
சிறப்பான 
சேவை செய்யும்

காலைப் பொழுது 
'தெல்லிப்பளை'யில் 
'கரிக்கோச்சி'
இரயிலின் 
வருகைக்காய்
'படலை' ஓரம் 
பார்த்து நிற்கும்

விவசாயிகளின் 
விளைச்சல்களை 
சலிக்காமல் 
சுமந்து செல்லும்

இரயிலடி அம்மனையும் 
'தவளக்கிரி'முத்துமாரியையும 
தப்பாமல் தரிசிக்கும்

'அம்பனை' 
சந்தியில் 
அளவோடு 
ஓய்வெடுக்கும்

'முருகன் விலாஸ்'
தேனீர் கடையும் 
சாரதிகளை
சந்திக்கும்

'கும்பிளாவளையான்'
திருவிழாவிற்கு 
கூட மாடாய் 
உதவி செய்யும்

பண்டத்தரிப்பு 'பாண்' 
பேக்கரிக்கும் - இதன் 
பங்களிப்புண்டு

பள்ளித்
தோழர், தோழிகளை 
பக்குவமாய் 
காவிச்செல்லும்

ஓடிப் பாய்ந்தேறி 
ஒற்றைக்கால் 
ஊன்றி 
ஒற்றைக்கை 
ஏந்தி 
வாசல் கதவோரம் 
தொங்கிச் 
செல்கையில்
எதிர்க்காற்று 
முகத்தை 
தடவிச் செல்ல 
எண்ணங்கள் 
வண்ண வண்ண
சிறகடிக்கும்

'ஒருதலை ராகம்' 
'அலைகள் ஓய்வதில்லை' 
'உயிர் உள்ளவரை உஷா'
'பயணங்கள் முடிவதில்லை' 
பாடல்கள் ஒலிக்கையில் 
பயணங்களின் சிந்தனையை
சிதறவிடும்

இறங்கும் இடம் 
தவறி விடும்

தூரத்தே வரும் 
'உறுமல்' 
ஒலிகேட்டு 
வயல்வெளி 
வரம்புகள் ஊடே 
வழுக்கி 
விழுந்தெழும்பி
ஓடிவரும் 
கமக்காரர்களுக்காய் 
காத்திருக்கும்

எங்கள் 
கல்லூரி வாசலில் 
'கடலை' விற்கும் 
'இலட்சுமி' ஆச்சியின் 
நாளாந்த 
பயண ஊர்தியும் கூட

வாழ்வோடு 
ஊன்றிய 
விழாக்களுக்கு 
உலாப்போகும் 
'தங்க இரதம்'
எங்கள் தோழன் 
ஏழைகளின் தோழன்.

- இ.ஜெயக்குமார் -
(Scotland
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கிருந்த போதும் மறக்கமுடியுமா ......!

சந்தைகள் ஓரம் வரு வான் 

சாமான்கள் இறக்கு வான் 

கிராமங்கள் தோறும் உலவு  வான் 

கிடுகிடுவென ஓடி  வருவோரை  ஏத்து வான் 

கன்னியரை உள்ளே இருத்து  வான் 

காளையரை வெளியே நிறுத்து  வான்.....!

----தட்டி வான்----

Link to comment
Share on other sites

  • 1 month later...
18 minutes ago, Gowin said:

எதனால தட்டி என்கிறாங்க?

தட்டி என்பது மறைப்புக்காக பனை ஓலை அல்லது கிடுகால் மறைப்பாக கட்டி வைக்கப்படுவதாகும்.  அதே சாயலால் தான் வாகனம் மறைக்கப்பட்டிருக்கும். அத்துடன் பின்னுக்கு ஏறி நிற்பதற்கும் ஒரு தட்டு வைத்திருப்பார்கள்.

Link to comment
Share on other sites

தட்டி வான்(Van)!

 
'என்ன பிளைட் அது!யன்னலெல்லாம் லொட லொடன்னு சத்தம் போட்டுக்கொண்டு...  தட்டிவான் மாதிரி!'
 
ஏ -9 திறக்கப்படாத போர்க்காலத்தில், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற தனது விமானப்பயண அனுபவத்தைத்தான் ஒருவர் இப்படிக் கூறினார்.
 
28411352.vehiclesinEelamDSC_0175.jpg
 
 

தட்டிவான்! - நீண்ட நாட்களாக அந்தப் பெயரே சொல்லக் கேள்விப்படாமல் ஏறக்குறைய நினைவிலிருந்து மறைந்து போன ஒரு அடையாளம்! ஒரு காலத்தில் தட்டிவான் பயணம் என்பது கேட்ட மாத்திரத்திலேயே மனதில் குதூகலத்தை ஏற்படுத்தும் கொண்டாட்டமான வார்த்தையாக இருந்திருக்கிறது!
 
ஒரு லொறி போல, அளவில் கொஞ்சம் சின்னதாக இருக்கும். ஒரு பழைய காலத்து Chevrolet கார் (அல்லது லொறி? - எதற்காகச் சொல்லி வைத்ததுபோல Chevrolet? ஒருவேளை அந்தக்காலத்தில் நிறைய Chevrolet கார்கள் யாழ்ப்பாணத்தில் இருந்திருக்குமோ? ) முன் பாகமும், பின்பாகம் ஒரு லாரியின் பெட்டி போல இரும்புச்சட்டத்தில் மரப்பலகைகளைப் பிணைத்தும் தட்டிவான் தயாரிக்கப்பட்டிருக்கும்! என்ன ஒரு வித்தியாசம் யன்னல்கள்! அதுவும் கண்ணாடிகள் இல்லாமல்! மற்றும் மரக்கதிரை போன்ற இருக்கைகள்! மிக முக்கியமாக தட்டிவான்களுக்கே உரிய பிரத்தியேக காற்றை அமுக்கி ஒலிக்கச் செய்யப்படும் ஹார்ன்களின் 'பாப்! பாப்!' சத்தம்!
 
 
bus.jpg
 
இன்றும் அமெரிக்கா உட்பட சில நாடுகளில் லொறிகளின் தோற்றத்தை ஒத்த பேரூந்துகள் இயக்கப்படுகின்றன. அவை வெளித் தோற்றத்தில் மட்டுமே அப்படியிருக்கின்றன  என நினைக்கிறேன்.
 
சின்ன வயதில் தெல்லிப்பளையிலிருந்து அளவெட்டி செல்லும்போது முதன்முறையாக பயணித்ததாக ஞாபகம். அதுபோல் சுன்னாகத்திலிருந்து ஊரெழு செல்லும்போதும் அதே இனிய அனுபவம்! வேறு எந்தெந்த ரூட்களில் ஓடியதென்று எனக்குத் தெரியவில்லை.
 
உண்மையில் அதற்கு என்ன பெயர்? எதற்கு அப்படியொரு பெயர் என்று தெரியவில்லை. யாழ்ப்பணத்தில்  தட்டிவான் என்றுதான் அழைப்பார்கள். தட்டி என்று தற்காலிகமாக அமைக்கப்படும் சிறிய கூரையைச் சொல்வார்கள் என்று நினைக்கிறேன். யாழ்ப்பணத்தில் சில இடங்களிலும், வன்னியிலும் மட்டுமே பார்த்திருக்கிறேன். வன்னியிலும் அப்படித்தான் அழைப்பார்களா என்று தெரியவில்லை!
உள்ளே சிறுவர்கள் தவிர யாரும் நின்று கொண்டு பயணிக்க முடியாது. இட வசதியும் இருக்காது தாழ்வான மேற்கூரையும் அனுமதிக்காது! நாலரை ஐந்தடி உயரம்தான் இருக்கும்! அதனால் பெண்கள், வயோதிபர்கள், சிறுவர்கள் உள்ளே அமர்ந்திருக்க,  பின்பக்கம் இருக்கும் அரைக் கதவை திறந்துவிட்டு, சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கும் அந்தப்பலகையின் மேல் நின்று கொண்டு ஆண்கள் கும்பல் பயணிக்கும்!
 
மூன்றரை அடி உயரம் வரை வளர்ந்த நானும் எப்படியாவது அடம்பிடித்து, அந்தக்கும்பலில் அப்பாவோடு நின்று பயணித்த ஞாபகங்கள் இன்றும் பசுமையாய்.
 
அது ஒரு செம்ம த்ரில்லான அனுபவம். பள்ளங்களில் ஏறி இறங்கும்போது குலுங்கிக் குலுங்கி ஒருவரையொருவர் பார்த்து சிரித்தவாறு..அது போன்ற ஒரு கிக்கான அனுபவம் வேறு எதிலுமே கிடைத்ததில்லை! அந்தச் சங்கிலி மட்டும் மாட்டப்பட்டிருக்கும் கொளுக்கியிலிருந்து கழன்றுவிட்டால் சங்குதான் என்பது வேறு விஷயம்!
 
ஒரு கதையில் சுஜாதா எழுதியிருப்பார் மாருதி வேன் ஒன்று குதித்துக் குதித்து  ஓடி வந்து நின்றது! அது எப்படியிருக்கும் என்பதைத் தட்டி வானில் ஒருமுறையாவது சென்றவர்களால் இலகுவாக உணரமுடியும்.
 
பொதுவாக சந்தைக்கு காய்கறிகளை ஏற்றிப் போகும் ஆச்சிமார்தான் பெரும்பான்மையான பயணிகளாக இருப்பார்கள்.நடத்துனரின் 'ரைட் ரைட்!' சத்தம் கேட்குதோ இலையோ 'கெதியா ஏறணை ஆச்சி!', 'அந்தப்பெட்டியத் தள்ளி வையுங்கோ அம்மா' என்ற சத்தம் கேட்காமல் அந்தப் பயணங்கள் சாத்தியமில்லை.
 
கிறீச் கிறீச்சென்ற பிணைச்சல்கள், பலகைகளின் சத்தத்தோடு தாலாட்டுவதுபோல அசைந்துகொண்டு..செம்மண் புழுதியையும் தாரளமாக தெளித்துக் கொள்ளும் இனிமையான பயணங்கள் என்றும் மறக்க முடியாதவை! 
 
தொண்ணூறாம் ஆண்டிற்குப் பிறகு யாழ் நகரப் பகுதியில் இருந்தகாலத்தில் தட்டிவானைப் பார்த்ததில்லை. அப்பப்போ அந்த நினைவுகள் வரும். சில வருடங்கள் கழித்து வன்னியில் நிறையத் தட்டிவான்களைப் பார்க்க முடிந்தது. யாழில் பார்த்தது போலன்றி கலர் கலராகப் புதுப் பொலிவுடன்! ஒருநாள் மாங்குளத்திலிருந்து கனகராயன் குளம் வரை பயணிக்கச் சந்தர்ப்பம் வாய்த்தது!
 
அப்போதுதான் முதன்முறையாக உள்ளே இருக்கையில் அமர்ந்து பயணம். காலி இருக்கைகள் இருந்தது மட்டுமல்ல. உடலும் அதைவிட மனமும் ஏற்கனவே பல பயணங்களினால் நிறையக் களைத்திருந்ததுதான் காரணம்! 
 
பயணத்தில் கூடவே துணையாக சினிமாப்பாடல்களும் ஒலித்துக் கொண்டிருந்தன.. அப்பொழுது பிரபலமாகி அடிக்கடி வானொலிகளில் ஒலிக்கும் 'ராசிதான் கை ராசிதான்' பாடல் அந்தப் பயணத்தில் கேட்ட ஞாபகம் இருக்கிறது. இப்பொழுதும் அந்தப் பாடலைக் கேட்க நேரும்போதெல்லாம்  கண்களை மூடிக்கொள்ள, கடைசியாக நான் தட்டிவானில் பயணித்தது காட்சியாக மனத்திரையில் விரியும்!
 
எமது மண்ணுக்குரிய, கிராமங்களுக்குரிய அடையாளங்களில் ஒன்றாக தட்டிவானையும் கொள்ளலாம். இப்போதும் தட்டி வான்கள் எங்கேயாவது ஓடுகின்றனவா?
 
samoa11.jpg
அமெரிக்காவிலோ, வேறு வளர்ந்த நாடுகளிலோ பழைய பாணியில், லொறி வடிவிலான பேரூந்துகளைப் பயன்படுத்துவதற்கான அவசியம் என்ன இருக்கிறது? நிச்சயம் பழமையை மறக்கக் கூடாது என்ற காரணம் இருக்கும்!

அது போல நாங்களும் தட்டிவான்களை பயன்படுத்தலாம்! ஆனால், சாதாரண போக்குவரத்தில் ஈடுபடுத்தப்படுவதைத் தவிர்த்து அமைதியான, பொழுது போக்கான சவாரிக்கு, வெளிநாட்டுப் பிரயாணிகள் மெதுவாகச் சுற்றிப்பார்க்க - இப்படியான தேவைகளுக்காக புதிய, அழகிய தட்டிவான்களை தயாரித்து உபயோகப்படுத்தலாம்.

அது எமது பழைய அடையாளங்களை, பாரம்பரிய வாழ்க்கையை நினைவூட்டும் அதேவேளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் ஒரு நல்ல முயற்சியாகவும் இருக்கும்!    
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.