Jump to content

கோத்தபாயவே ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்- அறிவித்தார் மகிந்த


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, சாமானியன் said:

அது வேலை வாய்ப்பு சம்பந்தமான விடயமெல்லோ,   மணித்தியாலத்திற்கு பேசிச்சினமோ இல்லை மொத்தமாக குடுத்தினமோ  ….. 

என்ன இழவோ...  தெரியாது, சாமானியன்.
நாவல் நிற உடுப்புடன் நின்று, சாப்பாட்டு  பொதிகளும்..  கொடுத்தார்கள்.
வெடித்த  வெடிகளின் புகை.. மண்டலமே... என்னை திகைக்க வைத்து....
இப்படியும்.. மனிதர்களா? என்று... மனதை, பாதித்த நிகழ்வுகள் அவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இரத்த ஆறு பெருக்கு எடுத்து ஓட இனி மேல் என்ன இருக்கு?...இவர்களது குடும்ப ஆட்சி வந்தால் தான் தமிழருக்கு ஒர் தீர்வு வரும் 

அப்ப இந்தமுறை கூத்தமைப்பு மற்ற குதிரையிலை ஏறி ஓடப்போயினம்.ஒவ்வொரு லெக்சனுக்கும் குதிரையை மாத்தி மாத்தி ஓடுறது எங்கடை அரசியல்வாதியளின்ரை வழமையான வேலைதானே.

 

Link to comment
Share on other sites

தமிழ் மக்கள் கோத்தாவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் ; சாந்தி எம்.பி.

தமிழ் மக்கள் பொதுஜன பெரமுனக் கட்சியினுடைய ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்களென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார்.

20190813_061222.png

ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷவை அறிவித்தமை தொடர்பில் கருத்துத் அதரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நான் இந்த யுத்தத்திலே பாதிக்கப்பட்டவள் என்பதற்கு அப்பால், அந்த யுத்தத்தின் பின்பு மீள்குடியேறிய காலத்திலேயும், யுத்த காலத்திலேயும் மக்களோடு சேர்ந்து வாழ்பவள் என்ற வகையில், இந்த கோத்தபாய ராஜபக்சவை எங்களது மக்கள் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

அவர்களது ஆட்சி என்பது ஒரு அசுர ஆட்சி என்றுதான் நான் கூறிக்கொள்வேன்.

இந்த மக்களுக்கு இப்பொழுது ஒரு பயமாகவிருக்கின்றது.

வெள்ளை வேன் கடத்தல், பிள்ளைகளைக் காணாமலாக்குதல், ஊடகவியலாளர்களைக் கடத்துதல், கப்பங் கேட்டல் போன்ற பல்வேறுவிதமான அநாகரீகமான வேலைகள் அரங்கேற்றியது இந்த கோத்தபாய ராஜபக்சவோடு இணைந்த அந்த மகிந்த குடும்பம், ராஜபக்ச குடும்பம். எனவே கோத்தபாய ராஜபக்சவை எங்களது மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்து எனக்கு நன்கு தெரியும் என்றார்.

https://www.virakesari.lk/article/62556

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில வெடிகள் கொழுத்தி கொண்டாடி இருக்கிரார்கள் இதுவே கிழக்கு என்றால் எப்படி இருந்து இருக்கும் என நினைத்துப்பார்த்தேன் 

 

வாழ்த்துக்கள் கோட்டா பாயா

Link to comment
Share on other sites

கோத்தா சனாதிபதியானால் உண்மையில் அவர் ஒரு இராணுவத்தளபதி போலவே இயக்குவார் என பலர் எண்ணுகிறார்கள். காரணம், அதுதான் அவருக்கு அதிகம் தெரிந்தது.

அவரை பின்னால் வைத்து இயக்க விரும்புவது, அண்ணன் மகிந்த. தனது மற்றைய குடும்ப அங்கத்தவர்களை விட கோத்தாவையே இலகுவாக இயக்கலாம் என அவர் நம்பி முடிவெடுத்துள்ளார். 

ஆனால், மக்களுக்கு கூற விரும்புவது, நாட்டின் பாதுகாப்பே இன்றைய முதல் தேவை. அதை செய்யக்கூடியவர் கோத்தா ஒருவரே.

இதில் இரணிலுக்கும் ஒரு சம்பந்தம் உள்ளது. உயிர்த்த ஞாயிறு பற்றிய விசாரணைக்குழுவில் தானும் தனது அரசும் பொறுப்பு ஏற்பதாக கூறி இருந்தார். ஆனால், பதவியை துறக்கவில்லை (ஓ, இது சிறி லங்கா). அதன் மூலம், மக்களுக்கு மகிந்த குடும்பம் இதை செய்திருக்காது என்ற சந்தேகத்தையும் விலக்கி இருக்கின்றார். 
  

Link to comment
Share on other sites

14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

யாழ்ப்பாணத்தில வெடிகள் கொழுத்தி கொண்டாடி இருக்கிரார்கள் இதுவே கிழக்கு என்றால் எப்படி இருந்து இருக்கும் என நினைத்துப்பார்த்தேன் 

 

வாழ்த்துக்கள் கோட்டா பாயா

உங்கட பிரதேசவாத சிந்தனை அப்பிடி என்னதான் சொல்லுது யாழ்பாணத்தைப் பற்றி?

Link to comment
Share on other sites

12 hours ago, ampanai said:

கோத்தா சனாதிபதியானால் உண்மையில் அவர் ஒரு இராணுவத்தளபதி போலவே இக்குவார் என பலர் எண்ணுகிறார்கள். காரணம், அதுதான் அவருக்கு அதிகம் தெரிந்தது.

கோத்தா முன்பு கூறியிருந்தார் தான் டொனால்ட் ட்ரம்ப் மாதிரி ஆட்சி புரிவேன் என. 😀

கோத்தா ஜனாதிபதியாக வந்தால் ஜோன் பொல்டனுக்கு படு குஷியாக இருக்கும். 😎

Link to comment
Share on other sites

கோத்தபாய அமெரிக்க அதிபர் ட்ரம்பின் பிரச்சாரத்தில் இருந்து ஒரு பக்கத்தை எடுத்துள்ளார். அவரது கட்சியின் முகநூலில் இது உள்ளது : ?nrslppofficial

ட்ரம்ப் : மேக் அமெரிக்க கிரேட் எகெய்ன் ( அமெரிக்காவை மீண்டும் உயர்ந்த நாடாக்கு ) 
கோத்தா :  மேக் சிறிலங்கா கிரேட் எகெய்ன்  ( அமெரிக்காவை மீண்டும் உயர்ந்த நாடாக்கு ) 

பà®à®¤à¯à®¤à¯à®ªà¯ பறà¯à®±à®¿à®¯ à®à¯à®±à®¿à®ªà¯à®ªà¯ à®à®²à¯à®²à¯.

 

Link to comment
Share on other sites

கோத்தா அமெரிக்க பிரசையா? (Gota still American?) 

  • அமெரிக்க அரசு ஆனி மாதம் முடிந்த  காலாண்டு  பிரசா உரிமையை இழந்தவர்களின் பட்டியலை  விபரங்களை பிரசுரித்தது  
  • US Government publishes June quarter list of people who lost citizenship 
  • அந்த பட்டியலில் கோத்தாவின் பெயர் இல்லை 
  • Gota’s name missing from new list covering period of claimed renunciation

http://www.ft.lk/top-story/Gota-still-American/26-683980

Link to comment
Share on other sites

22 minutes ago, ampanai said:

கோத்தா :  மேக் சிறிலங்கா கிரேட் எகெய்ன்  ( அமெரிக்காவை மீண்டும் உயர்ந்த நாடாக்கு

அமெரிக்காவை அல்ல ஶ்ரீலங்காவை. ஆனால் இதுவும் பொருந்துகிறது. :grin:

26 minutes ago, ampanai said:

 

பà®à®¤à¯à®¤à¯à®ªà¯ பறà¯à®±à®¿à®¯ à®à¯à®±à®¿à®ªà¯à®ªà¯ à®à®²à¯à®²à¯.

 

வட்டத்திற்குள் ஶ்ரீலங்கா. வட்டம் என்ன சந்திரனா? :grin:

Link to comment
Share on other sites

18 minutes ago, ampanai said:

கோத்தா அமெரிக்க பிரசையா? (Gota still American?) 

  • அமெரிக்க அரசு ஆனி மாதம் முடிந்த  காலாண்டு  பிரசா உரிமையை இழந்தவர்களின் பட்டியலை  விபரங்களை பிரசுரித்தது  
  • US Government publishes June quarter list of people who lost citizenship 
  • அந்த பட்டியலில் கோத்தாவின் பெயர் இல்லை 
  • Gota’s name missing from new list covering period of claimed renunciation

http://www.ft.lk/top-story/Gota-still-American/26-683980

கோத்தா முக்கிய புள்ளி என்பதால் அவரை பற்றிய விபரங்களை இரகசியமாக வைத்திருக்கிறார்களோ தெரியாது.

Link to comment
Share on other sites

'பேச்சுவார்த்தையின் இறுதியில் வேட்பாளர் மாறலாம்’

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியவற்றுக்கு இடம்பெறும் பேச்சுவார்த்தை நிறைவடையும்போது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக இல்லாமல் போவதற்கும் சந்தர்ப்பம் உள்ளதாக அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தம்புத்தேகம பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

 

http://www.tamilmirror.lk/செய்திகள்/பேச்சுவார்த்தையின்-இறுதியில்-வேட்பாளர்-மாறலாம்/175-236797

Link to comment
Share on other sites

%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AF+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D

கதிர்காமத்திற்கு கோட்டாபய ராஜபக்ஷ விஜயம்

சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்றையதினம் கதிர்காமம் புனித பூமிக்கான விஜயத்தை மேற்கொண்டார்

அங்கு அவருக்காக விசேட பூஜைகள் நட்தப்பட்டதுடன், இந்த விஜயத்தில் எதிர்கட்சித் தலைவர் மகிந்தராஜபக்ஷவும் கலந்து கொண்டார்.

http://www.hirunews.lk/tamil/222322/கதிர்காமத்திற்கு-கோட்டாபய-ராஜபக்ஷ-விஜயம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/14/2019 at 12:09 PM, Rajesh said:

உங்கட பிரதேசவாத சிந்தனை அப்பிடி என்னதான் சொல்லுது யாழ்பாணத்தைப் பற்றி?

அதாவது வந்து கோட்டாவைக்கூட ஆதரிக்க ஆட்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கு என்று  

Link to comment
Share on other sites

On 8/13/2019 at 12:36 PM, ampanai said:

அவரை பின்னால் வைத்து இயக்க விரும்புவது, அண்ணன் மகிந்த. தனது மற்றைய குடும்ப அங்கத்தவர்களை விட கோத்தாவையே இலகுவாக இயக்கலாம் என அவர் நம்பி முடிவெடுத்துள்ளார். 

பல ஆய்வாளர்கள் இந்த கருத்துடன் உடன்படவில்லை.
கோத்தாவை தவிர மற்றவர்கள் வெற்றி பெறும் வாய்ப்பு குறைவு என்ற 
காரணம் மற்றும் கோத்தா தனித்து களம் இறங்கும் சாத்தியம் காரணமாகவே 
மகிந்த இவரை ஏற்று கொண்டார்.

Link to comment
Share on other sites

On 8/13/2019 at 5:49 PM, தனிக்காட்டு ராஜா said:

யாழ்ப்பாணத்தில வெடிகள் கொழுத்தி கொண்டாடி இருக்கிரார்கள் இதுவே கிழக்கு என்றால் எப்படி இருந்து இருக்கும் என நினைத்துப்பார்த்தேன் 

 

வாழ்த்துக்கள் கோட்டா பாயா

மட்டக்களப்பிலும் வெடி கொளுத்தப்பட்டிருப்பதாக தமிழ்சிறி அவர்கள் எழுதியிருந்தார்.

2 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அதாவது வந்து கோட்டாவைக்கூட ஆதரிக்க ஆட்கள் யாழ்ப்பாணத்தில் இருக்கு என்று  

யாழ்ப்பாணத்தில் கோத்தாவுக்கு முன்பும் ஆதரவு இருந்தது தான். டக்ளஸ் போன்றவர்களே உள்ளார்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/17/2019 at 12:44 AM, Lara said:

மட்டக்களப்பிலும் வெடி கொளுத்தப்பட்டிருப்பதாக தமிழ்சிறி அவர்கள் எழுதியிருந்தார்.

யாழ்ப்பாணத்தில் கோத்தாவுக்கு முன்பும் ஆதரவு இருந்தது தான். டக்ளஸ் போன்றவர்களே உள்ளார்களே.

ஓம் ஒம்

Link to comment
Share on other sites

கோத்தபாய வேட்பாளராக அறிவிக்கபட்டாலும் சிராந்தியே தேர்தலில் களமிறங்குவார் - சந்திமா கமகே 

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது  பல்வேறு குற்றசாட்டுக்கள் உள்ளன. அந்த குற்றசாட்டுக்கள் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவ்வாறானதொரு சூழ்நிலையில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி ஜனாதிபதி வேட்பாராக கோத்தபாயவை அறிவித்திருந்தாலும் தேர்தல் நெருங்கியவுடன் முன்னாள் ஜனாதிபதியின் மனைவி சிராந்தி ரஜபக்ஷவே ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சந்திமா கமகே தெரிவித்தார்.  

chandima-gamage_29072019_MPP.jpg?itok=7a

அலரிமாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது ;

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவரான சஜித் பிரேமதாசவினதும் பங்கேற்புடனேயே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் களமிறங்குவோம். இந்த விடயத்தில் ஐக்கிய தேசிய முன்னணிக்குள் எந்த முரண்பாடும் கிடையாது.  

நிச்சயமாக ஐக்கிய தேசிய கட்சியின் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக இருப்பார். அதில் எந்த மாற்றமும் கிடையாது. அந்த வேட்பாளர் சஜித் பிரேமதாசவாகவோ அல்லது வேறு ஒருவாராக இருந்தாலும் அவருக்கு எங்களின் முழு ஆதரவையும் வழங்குவோம். இருப்பினும் இதுவரையில் ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட வில்லை. இவ்வாறானதொரு நிலைமையில் இரண்டு கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவித்துள்ளன.  

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி சார்பில்  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.  ஆகவே இதுவரை காலமும் சுதந்திரமாக கருத்து வெளியிட்ட வந்த ஊடகங்கள் எதிர்வரும் காலங்களில் கோத்தபாய கூறும் விடயங்களை மாத்திரமே வெளியிட வேண்டிவரும் என்பது உறுதி. 

தற்போது அவரின் அமெரிக்க குடியுரிமை தொடர்பிலும் பிரச்சினை எழுந்துள்ளது. கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவதில் இதுபோன்ற சவால்கள் தோன்றியிருக்கும் நிலையில் யாரை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. எங்களுக்கு கிடைத்துள்ள  தகவல்களுக்கு அமைய  தற்போது கோத்தபாய வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தாலும் இறுதியில் மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி  சிராந்தி ராஜபக்ஷவே வேட்பாளராக  களமிறங்குவார் என்று தெரியவருகிறது என்றார்.

https://www.virakesari.lk/article/63027

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.