Jump to content

பார்த்திபனின் வரவு - பாகம் 2


shanthy

Recommended Posts

பார்த்திபனின் வரவு - பாகம் 2

 
IMG_20190728_201408.jpg

16. 07. 1996 காலை...,
எனது அறையில் மேலும் இருவர் குழந்தைகளைப் பெற்றவர்கள் இருந்தார்கள்.  அவர்கள் அருகில் தொட்டில்களில் குழந்தைகளை வளர்த்தியிருந்தார்கள். எனக்கருகில் தொட்டில் இல்லை.

ஒன்பது மணிக்கு பிறகு மருத்துவர்கள் பரிசோதனைக்கு வந்தார்கள். இரத்த அழுத்தம் உடல் வெப்பநிலை யாவும் எழுதினார்கள். 

வலிக்கிறதா?  வயிற்றை அழுத்திய மருத்துவர் கேட்டார். 
இல்லை...,
ஒற்றைக்கையைத் தந்து கட்டிலில் இருந்து நிலத்தில் நிற்கச் சொன்னார். எழுந்து நின்றது மட்டுமே நினைவில் தெரியும். 

அதன் பின்னர் 2மணிநேரம் கழித்து விழித்த போது வேறொரு அறையில் கிடந்தேன்.  துளித்துளியாய் மருந்து ஏறிக்கொண்டிருந்தது. அருகில்  இருந்த இயந்திரத்தில் இருந்து எனது சுவாசத்துடிப்பு இரத்த அழுத்தம் மாறி மாறி ஓடிக்கொண்டிருந்தது.

தாதியொருத்தி அருகில் வந்தாள். 
இப்ப எப்படி இருக்கு?
தண்ணி வேணும்... கேட்டேன்.

ஏறிக்கொண்டிருந்த மருந்து முடியும் வரை தண்ணீர் தரமாட்டோமென்றாள். துவாயொன்னை நனைத்து முகத்தைத் துடைத்து விட்டு தலையைத் தடவிவிட்டு கொஞ்சம் பொறுத்திரு என்றாள்.

மருந்து ஏறி முடிய மதியச்சாப்பாட்டு நேரமாகிவிட்டது.  கட்டிலோடு உருட்டிப்போய் எனக்கான அறையில் விடப்பட்டேன்.  மருந்து கழற்றப்பட்ட பிறகும் மணிக்கட்டில் ஏற்றப்பட்டிருந்த உரசி கழற்றப்படவில்லை.  நெருப்பு பட்டது போல கை வலித்துக் கொண்டிருந்தது.

எனது அறைக்கு கொண்டு வந்த பிறகும் என் பார்த்திக்குட்டியை கொண்டு வர அது தரவில்லை. மற்றவர்கள் இருவரும் தங்கள் குழந்தைகளை தூக்கி வைத்திருந்தார்கள்.

அவசர அழைப்புமணியை அழுத்தினேன்.  சற்று நேரத்தில் தாதியர்கள் வந்தார்கள்.  ஏன் அழைத்தாயெனக் கேட்டார்கள். 

எனது குழந்தையை ஏன் கொண்டு வரவில்லை? 

உங்கள் மகன் குழந்தைகள் கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிலநாட்கள் அங்கே அவர் கண்காணிக்கப்படுவார்.  நாளைக்கு பிறகு தான் நீங்கள் அவரைப் பார்க்க அனுமதிப்பார்கள். நீங்கள் தனியாக குளியலறை போக வேண்டாம்.  எங்களை அழையுங்கள்.  சொன்னவர்கள் போய்விட்டார்கள்.

தந்த சாப்பாடு மறந்து போனது.  கண்ணீர் தான் வந்தது.  சாப்பாட்டை விலத்திவிட்டு மறுபக்கம் திரும்பிப் படுத்தேன். 

என் குழந்தைக்கு என்ன நடந்தது? குழந்தைகள் கிளினிக்கில் ஏன் வைத்திருக்கிறார்கள் ?

மனம் தன்பாட்டில் கற்பனைகளில் மிதக்கத் தொடங்கியது.  வீட்டில் சிகரெட் வாடை வந்தாலே கதவுகளைத் திறந்து விட்டு அந்தப்புகை கருவறையில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு வரக்கூடாதென்ற என் கவனம்.... வெளியே போகும் நேரத்தில் சிகரெட் பிடிக்கும் ஆட்களின் பகுதியை தவிர்த்து எத்தனை கவனமெல்லாம் பார்த்தேன்...?

வீட்டுக்கு தொலைபேசியெடுத்தேன். மறுமுனையில் கலோ... என்ற குரல் கேட்டதும் அழுகை தான் வந்தது. பிள்ளையை நான் பாக்க தரேல்ல. குழந்தைகள் கிளினிக்கில் வைச்சிருக்கினமாம்.

ஏதாவது வருத்தங்கள் இருக்கோண்டு பாக்கவாயிருக்கும்.  நான் பின்னேரம் வாறன்.  இன்னும் ஆட்களுக்கு பிள்ளை பிறந்தது சொல்லி முடியேல்ல. சரி நான் வாறன் வந்து  கதைக்கிறேன். தொலைபேசி தொடர்பு அறுபடுகிறது.

மனம் அமைதி இல்லாமல் போனது. அப்படியே உறங்கிப் போயிருந்தேன். ஆட்களின் சத்தம் கேட்டு விழித்த போது அங்கிருந்த தாயர்களின் உறவினர்கள் நின்றார்கள்.   

பின்னேரப் பரிசோதனை நேரம்.  இரத்த அழுத்தம் காச்சல் பரிசோதிககப்பட்டுக் கொண்டிருக்க  அறைக்கதவைத் தட்டிக் கொண்டு வந்த நபரைக் கண்டதும் குழந்தை பற்றிய விபரம் கிடைக்குமென்ற நம்பிக்கை வந்தது.

இரத்த அழுத்தம் மிகவும் குறைவாகவே இருப்பதாகச் சொன்னார்கள்.  இன்னும் ஒருமணிநேரம் கழித்து மருந்து மீண்டும் ஏற்றப்படுமென்றாள் தாதி.

என் குழந்தையைக் காட்டினால் நான் உயிர்த்து விடுவேன் எனக்கத்த வேண்டும் போலிருந்தது.

அதொரு பிரச்சினையும் இல்லையாம் பிள்ளை மஞ்சள் நிறமாயிருக்கிறானாம்.  அதுதான் கண்ணாடிப்பெட்டியில வைச்சிருக்கிறாங்களாம்.  மூண்டு கிழமை செல்லுமாம் தர.

என் குழந்தை என் கையை விட்டுப் போனதான உணர்வு. அழுகை அழுகை அதுதவிர வேறெதுவும் தெரியவில்லை.

நான் பிள்ளையைப் பாக்க வேணும்.  கேளுங்கோ. 
நீ கேக்கிறமாதிரி காட்டமாட்டாங்கள் பேசாமல் இரு. அதற்கு மேல் என் துயரைப் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லையென்பது புரிந்தது.

நான் பிள்ளை பிறந்ததுக்கு பெடியளுக்கு பாட்டி வைக்க வேணும்.  எல்லாரும் கேட்டுக் கொண்டிருக்கிறாங்கள். பிறந்த குழந்தையின் முகத்தைப் பார்க்க அந்தரிக்கும்  எனது தவிப்பு புரிந்து கொள்ளப்படவில்லை. அதற்கு மேல் எதுவும் பேசும் மனநிலையும் எனக்கில்லை. எனக்குள் எல்லாத் துயரையும் விழுங்கிக் கொள்ளென்றது விதி.

நண்பர்களுக்கு குழந்தை பிறந்த மகிழ்வைக் கொண்டாட போய்விட்டார்.  மீண்டும் மருத்துவமனையில் நான்.

குழந்தைக்குப் பால் கொடுக்காத வலி உயிரைத்தின்றது. மார்பு கட்டிப் போனது. வுலியைக் குறைக்க மெசினில் பாலை எடுத்து குளிர்சாதனப் பெட்டியில் பார்த்திபன் என எழுதி வைக்கச் சொன்னார்கள். குழந்தைகள் கிளினிக்கிற்கு பாலை அனுப்புவோமென்றார்கள். எனக்காக ஒரு மெசின் தரப்பட்டது. பால்கட்டி வலியெடுக்கும் நேரம் பாலை மெசினில் எடுத்து கொடுக்க வேண்டும்.

பால்கொடுக்காமல் விட்டால் எவ்வளவு வலியென்பதை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. இதைவிடக் குழந்தைப் பேற்று வலியைக் கூட தாங்கிவிடலாம் போலிருந்தது. அந்தளவு வலி. வலிகளால் மட்டுமே என் வாழ்வு ஏனோ சபிக்கப்பட்டிருந்தது.

17. 07. 1996 காலை பரிசோதனைக்கு மருத்துவர்கள் வந்தார்கள். என் குழந்தையைப் பார்க்க வேண்டும் என கேட்டேன்.  மறுநாள் குழந்தையைப் பார்க்க அழைத்துப் போவதாக மருத்துவர் சொன்ன பதில் பாரமொன்று இறங்கிய அமைதியைத் தந்தது.

18.07.1996. காலை பத்துமணிக்கு தாதியொருவர் குழந்தையைப் பார்க்க அழைத்துப் போக வந்திருந்தார். கட்டிலால் இறங்க கைதந்தாள் வந்திருந்த தாதி. எழுந்து நிற்க தலைசுற்றியது.

நடக்க ஏலுமோ ? கேட்டவளுக்கு ஓமென்றேன். அறைக்கதவு வரை வந்ததன் பிறகு ஞாபகம் இல்லை. சில நிமிடங்களில் கண்விழித்தால் கட்டிலில் கிடந்தேன். தாழ் இரத்த அழுத்தம் எனச் சொன்னார்கள். மீண்டும் சேலைன் ஏறத்தொடங்கியது.

அந்த 3நாட்களும் வந்த மருத்துவமனைச் சாப்பாட்டை சரியாகச் சாப்பிடவில்லை. கட்டாயமாகச் சோறு சாப்பிட்டுப் பழகிய என்னால் உப்புச்சுவை குறைந்த உறைப்பே இல்லாத மருத்துவமனைச் சாப்பாட்டைச் சாப்பிட முடியவில்லை.

குழந்தையைப் பார்க்க பின்னேரம் அழைத்துப் போக வந்திருந்த மருத்துவத்தாதி சக்கரநாற்காலியொன்றைக் கொண்டு வந்து நிறுத்தினாள். அதிலே என்னை இருக்க வைத்து உருட்டிச் சென்றாள் 35ம் இலக்க கட்டடத்திற்கு. அங்கே அனுமதியின்றி எல்லோரும் போக முடியாதபடி கதவுகள் பூட்டப்பட்டிருந்தது. அழைப்பு மணியை அழுத்தினாள் கதவு திறபட்டது.

உள்ளே போனதும் ஒரு இடத்தைக் காட்டிச் சொன்னாள். கைளைக் கழுவிவிட்டு அந்தப் பகுதியில் போட வேண்டிய அங்கியொன்றும் தொப்பியும் தந்தாள். இனி எப்பொது வந்தாலும் இதுபோலவே கிருமிநீக்கியில் கைகழுவி அந்தப்பகுதிக்கான தண்ணீர்ப்பச்சை அங்கியும் வெள்ளைநெற் தொப்பியும் அணிந்து தான் உள்ளே போக வேண்டுமெனச் சொன்னாள்.

பெற்றோர் தவிர வேறுயாரையும் உள்ளே கூட்டிவரக் கூடாதெனவும் கூறப்பட்டது. என்னைக் கூட்டிவந்த தாதி குழந்தையைப் பார்க்கும் நேரம் முடியும் போது தங்களுக்கு தொலைபேசியில் அறிவிக்கச் சொன்னாள். மீண்டும் ஒருவர் என்னை அழைத்துப் போக ஒருவர் வருவார் எனச் சொல்லிவிட்டு அவள் போய்விட்டாள்.

அவர்கள் சொன்ன யாவற்றையும் செய்து உள்ளே கூட்டிச் செல்லப்பட்டேன். கண்ணாடிப் பெட்டிகளுக்குள் குழந்தைகள். மாதங்கள் முழுமையடையாது பிறந்த குழந்தைகளுக்கு பெரிய மெசின்களில் உணவு உயிர்க்காற்று யாவும் போய்க் கொண்டிருந்தது. பார்க்கவே பயமாக இருந்தது.

அவசர சிகிச்சைப் பிரிவுபோல மெசின்கள் கண்ணாடிப் பெட்டிகள் அவற்றுள் குழந்தைகள் பொம்மைகள் போலக் கிடந்தார்கள். கால்கள் நடுங்கத் தொடங்கியது. தொண்டை வரண்டு போனது. 4வுது கண்ணாடி அறையினுள் கண்ணாடிப் பெட்டிகளில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் ஒவ்வொருவருக்கும் அவர்களது பெயர் பிறந்த திகதி நேரம் நிறை உயரம் தலைச்சுற்றளவு எழுதி தொங்கவிடப்பட்டிருந்தது. ஏனது குழந்தையை அந்த அடையாளத்தைப் பார்த்துப் போனேன்.

என் குழந்தை ஒரு பொம்மை போலக் கிடந்தான். கண்ணை மூடி வெள்ளைத்துணி போன்ற அகலமான பஞ்சினால் பாதிமுகம் கட்டப்பட்டிருந்தது. வெறும் மேலில் கட்டப்பட்ட பம்பஸ் மட்டுமே அவனது ஆடையாக இருந்தது. வெள்ளை நிறத்தில் மின்குமிழ் அந்தக் கண்ணாடிப் பெட்டியில் எரிந்து கொண்டிருந்தது. அந்த வெளிச்சம் கண்ணைப் பாதிக்காமல் இருக்க அந்த மின்குமிழ் போடப்பட்டிருப்பதாக அந்த அறைக்கு பொறுப்பாக நின்ற தாதி சொன்னாள். 5.30இற்கு பால் கொடுக்க வேண்டும் இன்னும் அரை மணித்தியாலத்தில் குழந்தையை வெளியில் தூக்கி வைத்திருக்க தருவதாகச் சொன்னார்கள். என் குழந்தையின் அருகில் எனக்கு ஒரு கதிரை தரப்பட்டது. அதில் இருந்து என் குழந்தையைப் பார்த்தேன்.

என் குழந்தைக்கு என்ன நடந்தது ? ஏன் இப்படி வைக்கப்பட்டுள்ளான் என்பதற்கான சரியாக விளக்கம் ஏதும் எனக்கு முழுமையாகச் சொல்லப்படவில்லை. ஆனால் குறைந்தது  மூன்று வாரங்கள் இப்படியே வைத்துத் தான் வீட்டுக்கு போக விடுவார்கள் எனச் சொல்லப்பட்டது. அது பற்றி மேலதிகமாக விசாரித்து விளங்கிக் கொள்ளும் அளவுக்கு எனக்கு மொழியாற்றலும் இல்லை.

என் பார்த்திக்குட்டி அந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் குப்புற கால்களைக் குடக்கிக் கொண்டு படுத்திருந்தான். அப்படியே அவனைப் பார்க்க அழுகைதான் மேலிட்டது.

5.35 மணிக்கு பார்த்திக்குட்டி அழத் தொடங்கினான். அங்கிருந்த சில குழந்தைகள் மெல்ல மெல்ல அழத் தொடங்கினார்கள். அந்த அறையில் இருந்த 8கண்ணாடிப் பெட்டிகளில் இருந்த குழந்தைகளின் தாய்களும் தந்தையர்களும் வந்து நின்றார்கள்.

வுந்தவர்கள் அவரவர் தங்கள் குழந்தைகளின் கண்ணாடிப் பெட்டியில் மின்குமிழை நிறுத்தினார்கள். பிறகு கண்ணைக் கட்டியிருந்த பஞ்சுத்துணியைக் கழற்றிக் குழந்தைகளைக் கையில் எடுத்தார்கள். எனது குழந்தையை எப்படி வெளியில் தூக்குவதென எனக்குத் தெரியவில்லை. அங்கு நின்ற ஒரு பெண் எனக்கு உதவினாள்.

மெசினில் எடுக்கப்படும் தாய்ப்பாலை பாதுகாக்க இருந்த குளிர்சாதனப் பெட்டியில் தனது குழந்தைக்கான பாலையும் எனது குழந்தைக்கான பாலையும் எடுத்து வந்து சூடாக்கித் தந்தாள்.

முதல் முதலாக குழந்தைக்குத் தாய்ப்பாலை சூப்பிப் போத்தலில் ஊட்டினேன். பால் குழந்தைகள் குடித்து முடித்ததும் தோழில் போட்டு முதுகைத் தடவிக் கொடுத்தார்கள். மற்றவர்கள் செய்வது போல நானும் பாலைக் கொடுத்துவிட்டு தோழில் போட்டு என் குழந்தையை முதகில் தடவினேன்.

அருகில் இருந்த மேசையில் வைக்கப்பட்ட பம்பஸ் பெட்டியை நானும் எடுத்துக் குழந்தைக்கு பம்பஸ் மாற்றத் தொடங்கினேன். அவன் கால்களை உதறிக் கொண்டிருந்தான். என்னால் மாற்ற முடியாதிருந்தது. என் போராட்டத்தை அவதானித்த மருத்துவத்தாதி எனக்கு உதவினாள்.

பார்த்திக்குட்டியைக் கையில் ஏந்திக் கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன். என் உலகத்திற்கு வெளிச்சமாய் வந்த என் குழந்தையின் கைவிரல்களை கன்னங்களை தலையை எல்லாம் வருடினேன். அந்தச் சின்னக் கண்ணால் என்னைப் பார்த்தான். அவனோடு கதைபேசினேன். அவன் விரைவில் என்னோடு வர வேண்டுமென்று அவனுக்குச் சொன்னேன்.

ஏழுமணிக்கு பார்வையாளர் நேரம் முடிகிறதென அறிவித்தார்கள். மீண்டும் குழந்தையை வாங்கி கண்ணைக் கட்டி மின்குமிழ் ஒளியில் கண்ணாடிப் பெட்டியினுள் குழந்தையைப் படுக்க வைத்தார்கள்.

 

 

பார்த்திபன் வரவு பாகம் ஒன்று கீழே உள்ள இணைப்பில் வாசிக்கலாம்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "தைரியமானவள்"     வவுனியாவில் உள்ள  ஒரு குக்கிராமம் இது. இங்கு பெருமளவில் இந்துக்களையும் சிறிய அளவில் கிறித்தவர்களையும் கொண்டுள்ள போதிலும் மக்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டு ஒரு குடும்பம்போல் வாழ்கின்ற ஒரு சமாதானம் நிலவும் கிராமம் இதுவாகும்.  இக் கிராமமானது அங்கு உள்ள ஒரு பெரும் குளத்தைச் சேர்ந்த நிலங்களைக் காடு வெட்டி துப்புரவு செய்து கமம் செய்து உருவாக்கப்பட்டது என்பது வரலாறு ஆகும்.    அங்கு தான் கமங்களில் கூலிவேலை செய்யும் தாய் தந்தையரின் இளைய மகளாக, அவள் இருந்தாள். கோவலன் கண்ட கண்ணகியின் அழகு கூட இவளுக்கு நிகரில்லை!         "மாயிரும் பீலி மணி நிற மஞ்சை நின் சாயர் கிடைந்து தங்கான் அடையவும் ......... அன்ன நன்னுதல் மென்னடை கழிந்து நன்னீர்ப் பண்ணை நளி மலர் செரியவும் ........... அளிய தாமே சிறு பசுன் கிளியே குழளும் யாழும் அமிழ்துங் குழைத்த நின் மழைக் கிளவிக்கு வருந்தின வாகியும் மட நடை மாது நின் மலர்க்கையீ நீங்காது"   கரிய பெரிய மயில்கள் உன் தோற்றத்தை கண்டு தோற்று அவைகள் கூட்டை சென்று அடைகின்றன .. அன்னப் பறவைகள் உன் மேன்மையுடைய நடைக்கு பயந்து நன்னீர் பூக்கள் பின் சென்று மறைகின்றன .. பசுங் கிளிகள் குழழின் இசையையும், யாழின் இசையையும்,அமிர்த்தத்யும் கலந்த உன் சொற்களுக்கு போட்டி இட முடியாமல் வருந்தி அதனை கற்பதற்காக உன்னை பிரியாமல் உள்ளன என்றான் கோவலன். ஆனால் இவள் அதற்கும் மேலாக, "அரிசந்திர புராணம்" வர்ணிக்கும் பெண்களின் விழி அழகை அப்படியே கொண்டு இருந்தாள்   "கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக் காவியை கருவிள மலரை வடுவினைக் கொடிய மறலியை வலையை வாழை வெண் ர்ரவுநீன் டகன்று கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக் குமிழையும் குழைyaiயும் சீறி விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை வேலினும் கூறிய விழியால்"   ஒப்புமையில் கடலினையும், மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும், பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும், விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடையவள் இவள். அதனால்தானோ என்னவோ பெயர்கூட ' மலர்விழி'    காட்டோடு அண்டிய ஒரு இடத்தில், சிறு குடிசை ஒன்றில் பெற்றோருடனும் ஒரு அண்ணனுடனும் வாழ்ந்து வந்தாள். அவள் பாடசாலைக்கு மூன்று மைல் , காட்டோடும்   கமமோடும் நடந்து தான் போவாள். குடிசையும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஆனால், பெற்றோருக்கு  கமத்துக்கு கூலிவேலைக்கு போக வசதியான இடமாக இருந்தது.    அவள் இப்ப பத்தாம் வகுப்பு மாணவி, பெண்மை பூரித்து துள்ளும் வயது. பாடசாலைக்கு அருகில் ஒரு பெரிய பலசரக்கு கடையும், அதனுடன் கூடிய  சிற்றுண்டிச்சாலையும் புடவை கடையும் இருந்தது. இந்த மூன்றுக்கும் முதலாளி ஒருவரே, பெரும் பணக்காரர். அவரின் ஒரு மகன், யாழ் பல்கலைக்கழகத்தில் படித்தவர்,  பரீடசை எடுத்து விட்டு வீட்டில் மறுமொழி வரும் மட்டும் காத்து இருக்கிறார். எனவே அவ்வவ்போது தந்தைக்கு ஓய்வு கொடுத்து, கடையை கவனிக்க தொடங்கினார்.    மலர்விழி தோழிகளுடன், பாடசாலை முடிய கடைப்பக்கம் போவார். ஆனால் தோழிகள் வாங்குவதை, மற்றும் அங்கு உள்ளவற்றை பார்ப்பதை தவிர, மற்றும் படி ஒன்றும் வாங்குவதில்லை. அந்த வசதி ஒன்றும் அவருக்கு இல்லை. அது மட்டும் அல்ல, ஒரு சில வினாடிகளே அங்கு நிற்பார். காரணம் மூன்று மைல் நடந்து வீடு போகவேண்டும். அவருடன் ஒரு சில பிள்ளைகளும் சேர்ந்து நடப்பதால், ஆளுக்கு ஆள் துணையாக.    கம்பனின் மகன் அம்பிகாபதி போல இந்த முதலாளியின் மகன், சங்கரும் அவளை முதல் முதல் பார்த்தவுடன், அவன் கண்ணுக்கு அவள் உருவம் மனித உருவமாகவே தெரியவில்லை. அவன் கற்பனை  கொடியோடும் குளத்தோடும் மீனோடும் உறவாடிற்று    “மைவடிவக் குழலியர்தம் வதனத்தை         நிகர்‘ஒவ்வா மதியே! மானே!! செய்வடிவைச் சிற்றிடையை வேய்தோளைத்         திருநகையைத் தெய்வ மாக இவ்வடிவைப் படைத்தவடி வெவ்வடிவோ         நானறியேன்! உண்மை யாகக் கைபடியத் திருமகளைப் படைத்திவளைப்         படைத்தனன் நல்கமலத் தோனே! ”      பொற்கொடியாளே,  வாடாத உன் தலையில் மழைமேகத்தை சுமந்தவளே. பிறை அணிந்த தாமரை முகத்தாளே, நீ கேட்டாள், உனக்காக  எதையும் தரத் தயாராக உள்ள கற்பகத்தரு போல் நான் நிக்கிறேன் என்று அவன் சொல்லாமல் அவளிடம் சொல்லிக்கொண்டு தன்னை மறந்து நின்றான்.    ஒரு சில நாட்கள் ஓட, அவன் மெல்ல மெல்ல அவளுடன் கதைக்க தொடங்கினான். அவனும் அழகில் கம்பீரத்தில் குறைந்தவன் அல்ல.    "எண் அரும் நலத்தினாள்     இனையள் நின்றுழி, கண்ணொடு கண் இணை     கவ்வி, ஒன்றை ஒன்று உண்ணவும், நிலை பெறாது     உணர்வும் ஒன்றிட, அண்ணலும் நோக்கினான்!     அவளும் நோக்கினாள்."   அழகின் எல்லை இது தான் என்று நினைப்பதற்கும் அரிய அழகுடைய அவளை, ஒருவர் கண்களோடு, மற்றொருவர் கண்கள் கவர்ந்துப் பற்றிக் கொண்டு, ஒன்றை ஒன்று கூடி ஒன்று படவும், அவனும் அவளை பார்த்தான். அவளும் அவனை பார்த்தாள்.  அவளுக்கும் உண்மையில் ஆசை இருந்தாலும், அவளின் நிலைமை, கவனமாக இருக்க வேண்டும் என்று உறுத்தியது. காரணம் இவன் பெரும் பணக்கார பையன், மற்றும் பட்டதாரி ஆகப்போகிறவன். என்றாலும் அவன் வாக்குறுதிகள் நம்பிக்கைகள் கொடுத்து, அவளும் அப்பாவிதானே, நம்பி இருவரும் கொஞ்சம் கொஞ்சம் நெருங்க தொடங்கினார்கள். அவளின் பெற்றோர் கூலி வேலைக்கு போனால், வீடு திரும்ப இரவாகிடும், அண்ணனும் , நண்பர்களுடன் போய்விடுவார். எனவே, சங்கர் இப்ப அவளை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இறக்குவதும், அப்படியே , அந்த சின்ன குடிசையில் தனிய கதைத்து மகிழ்வதும், சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் எடுத்துக்கொண்டு போய் இருவரும் அங்கு அவையை அனுபவிப்பதும் என காலம் போகத் தொடங்கியது. அத்துடன் அவன் அவளுக்கு தெரியாத பாடங்களும் படிப்பித்தான். எனவே சிலவேளை பெற்றோர்கள் அறிய வந்தாலும், அது ஒரு சாட்டாகவும் அவர்களுக்கு இருந்தது. ஆனால் அது தான் அவர்களை மேலும் இறுக்கமாக இணைத்ததும் எனலாம்.   "இசை போன்ற மெல்லிய  மொழி இடைவெளி குறைக்க வழி சமைக்க   இறைவி நேரே வந்தது போல  இதயம் மகிழ பாடம் புகட்டினான்! "   "இருசொல் இணைதல் புணர்ச்சி என்று  இரண்டு பொருள்பட இலக்கணம் சொல்லி  இங்கிதமாய் விளக்கி அவளைத் தழுவி  இருவரும் கூடி இன்பம் கண்டனர்!"   மறுமொழியும் வர, அவன் மேற்படிப்புக்கு வெளிநாடு போய்விட்டான் அதன் பிறகு தான் அவளின் வாழ்வில் வெறுமை தோன்ற தொடங்கியது. அவளின் உடலிலும் மாற்றம் தென்பட்டது. அவள் இப்ப ஒரு குழந்தைக்கு தாயென மருத்துவரும் உறுதி செய்து விட்டனர். தந்தை அந்த முதலாளியிடம் நடந்தவற்றை சொல்லி, மகளை மருமகளாக ஏற்கும் படி மற்றும் அவரின் மகனின் விலாசத்தை எடுத்தால், அவனுக்கு செய்தி அனுப்பலாம் என்று போனவர்தான், பின் வீடு திரும்பவே இல்லை. அன்று அங்கு போர்க்காலம். ஆகவே உண்மையில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியாது? அண்ணனும் தந்தையை தேட போனவர், இடையில் ஷெல் பட்டு இறந்துவிட்டார். இப்ப தான் அவள் தன் அப்பாவி தனத்தை உணர்ந்தாள். முன்பு, அவனுடன் பழகும் பொழுது  தைரியமாக இருந்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது. நம்பி கெட்டது அவளை வருத்தியது. "சாது மிரண்டால் காடு கொள்ளாது". அவள் துணிந்து விட்டாள். தைரியம் பெற்றாள்.    அவளின் கதை அந்த ஊரில் பரவத் தொடங்கியது. அந்த முதலாளி பணத்தை கொடுத்து சமாளிக்க எத்தனித்தார். கருவை கலைக்கும் படியும் வேண்டினார். ஆனால் அவள் இப்ப தைரியமானாள். அதை ஏற்கவில்லை. அவளின் ஒரே குரல், இவன் உங்கள் பேரன், உங்க மகனின் மகன். அதில் மாற்றம் இல்லை. எந்த பேச்சுக்கும் இனி இடமில்லை, பணத்தை அவள் மதிக்கவே இல்லை. தூக்கி எறிந்தாள். தந்தை, அண்ணன் இருவரையும் இழந்துவிட்டாள். இனி தானே தன் வாழ்வை தீர்க்க தைரியமாக புறப்பட்டாள்!    கண்ணகி அரசசபையில் தைரியம் கொண்டு போனது போல,    ‘தேரா மன்னா! செப்புவது உடையேன்'    ஆராய்ந்து பார்க்காத முதலாளி நான் சொல்வதைக் கேள் என, வாயும் வயிறுமாக முதலாளியின் வீட்டின் கதவில் நின்ற காவலாளியிடம் உரக்க சொன்னாள்.    "வாழ்தல் வேண்டி, ஊழ்வினை துரப்ப, சூழ் கழல் மன்னா! நின் நகர்ப் புகுந்து,"   கூலி செய்து, எம் கையையால் நாமே வாழ்வதற்காக உன் ஊருக்கு வந்தோம். ஊழ்வினை துரத்திக்கொண்டு வர வந்தோம் என்று துணிச்சலாக கூறினாள். அவளின் துணிவு, புத்திகூர்மை, அழகு, கோபத்திலும் அவளின் நளினம், உண்மையான பேச்சு சங்கரின் தாயை நன்றாகவே கவர்ந்தது. சங்கரின் தாய் அவளை உள்ளே வரும் படி அழைத்து, அங்கு முன் விறாந்தையில் இருந்த சோபாவில் அமரச் சொன்னாள். பின் சங்கரின் தந்தையுடன் எதோ கதைத்தார். அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. எதாவது தந்திரமோ என்று தைரியமாக, எதையும் எதிர்க்க துணிந்து நின்றாள். இந்த இடைவெளியில், அவர்களின் வேலைக்காரி காப்பி கொண்டுவந்து அவளுக்கு கொடுத்தார். ஆனால் அதை அவள் வாங்க மறுத்தார். சிற்றுண்டி பெற்று தானே இன்று இந்த நிலை என்று அவள் மனது கொதித்துக்கொண்டு இருந்தது.   "நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு நீதியின் கண்களை திறந்து விடு நச்சு பாம்புகள் படமெடுத்தால் அச்சம் வேண்டாம் அழித்து விடு"   "பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன் மகனில்லை ஓர் மகனில்லை"   அவர்களுக்கு அது புரிந்துவிட்டது. தாய் அவள் அருகில் வந்து, மகனுக்கு தொலைபேசி அழைப்பு விட்டுள்ளோம். எமக்கு உண்மை தெரியாது. அது  சரியாக அறிந்ததும் , உன் பிரச்னைக்கு தீர்வு காண்போம் என்றனர். அவளின் துணிந்த பார்வை, தைரியமாக எடுத்த முடிவு, ஒரு பதிலை நோக்கி அசைவதை காண்டாள்.      சங்கரும் கொஞ்ச நேரத்தால் தொலைபேசியில் வந்தும் வராததுமாக, முதலில் மலர்விழியையே கூப்பிட்டான். அவளுடன் ஏதேதோ கதைதான். வீறாப்புடன், தைரியமாக வந்தவள், தன் வேலை முடிந்தது கண்டு, இப்ப ஒரு மணமகள் மாதிரி கால் விரலால் கொடு போட தொடங்கி விட்டாள். பெற்றோருக்கும் விளங்கிவிட்டது. சங்கரும் பின் பெற்றோருடன் எதோ பயந்து பயந்து கூறிக்கொண்டு இருந்தார். எல்லோர் முகத்திலும் நிம்மதி, மகிழ்ச்சி  நிழலிட்டிருந்தது அங்கு ஒரு சுமுக நிலையை ஏற்படுத்தியது.    "தைரியம் என்பது பயம் இல்லாதது அல்ல, அதன் மீதான வெற்றி என்பதை அவள் காண்டாள். தைரியமானவள் பயப்படாதவள் அல்ல, அந்த பயத்தை வெல்பவளே"    நன்றி     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • ஒருவர் எழுதும் கருத்துக்களை பொறுத்தே பதில் கருத்துக்களும் வரும் மற்றும்படி தனிப்பட்ட கோபதாபங்கள் எதுவும் இல்லை!
    • "என் அன்பு மகளே"     "யாயே, கண்ணினும் கடுங் காதலளே, எந்தையும், நிலன் உரப் பொறாஅன்;  ‘சீறுடி சிவப்ப, எவன், இல! குறு மகள்!  இயங்குதி! என்னும்;’யாமே,"      தாய் தன் மகளை தன் கண் மாதிரி அன்பு செலுத்துகிறாள் அப்பனோ "என் சிறு மகளே, ஏன் நடந்து உன் அழகிய காலை வருத்துகிறாய்?" என கேட்டு தவிக்கிறார். அப்படித் தான் என் அன்பு மகள் எனக்கு அன்று இருந்தாள். அவள் கடைசி பிள்ளை என்பதால் ஒரு படி மேல் அதிகமாகவே செல்லமாக இருந்தாள். அதன் விளைவு எப்படி வரும் அன்று எனக்கு புரியவில்லை.      வீட்டில் எப்பவும் அவள் செல்லப்பிள்ளை தான். எனவே அவள் இட்டது தான் சட்டம். என்றாலும் அவளுக்கு என்று ஒரு தனிக் குணமும் உண்டு. அது தான் அவளை மேலும் மேலும் செல்லப்பிள்ளை ஆக்கியது. நல்ல புரிந்துணர்வுடன் இனிமையாக மகிழ்வாக பழகுவாள். எமக்கு ஒரு கவலை என்றால், அவளை பார்த்தாலே போய்விடும். அவளின்   குறும்புத்தனம் எவரையும் எந்த நிலையிலும் மகிழ்விக்கும்!     "உள்ளம் களிக்க உடனே சிரிக்க உதிர்மா வேண்டுமம்மா! .     துள்ளித் திரிந்து துயரை மறந்திடத் துளிமா வேண்டுமம்மா!"     அவள் இதை துள்ளி ஆடி பாடும் பொழுது எம்மை அறியாமலே கவலை பறந்திடும். அத்தனை நளினம், தானே கற்று தானே ஆடுவாள்!  அவளுக்கு என்று ஒரு பாணி / போக்கு உண்டு !! படிப்பிலும் சூரி , குழப்படி தான் கொஞ்சம் கூட, அத்துடன் பிடிவாதமும் பிடித்தவள், ஆனால் இரக்கம், அன்பு, மரியாதை எல்லாம் உண்டு. நாளும் ஓட, அவளும் பல்கலைக்கழகம் மிகச் சிறந்த பெறுபேருடன் நுழைந்தாள்.     "இருண்ட மேகஞ்ச்சுற்றி சுருண்டு சுழி எரியுன் கொண்டையாள் குழை ஏறி ஆடி நெஞ்சை சூறையாடும் விழிக் கெண்டையாள் திருந்து பூ முருக்கின் அரும்பு போலிருக்கும் இதழினால் வரிச் சிலையை போல் வளைந்து பிறையை போல் இலங்கு நுதுலினால்"     மேகங்கள் சில சுருண்டு சுழித்தது போன்ற கூந்தலுடன்..  காது வரை நீண்டு ஆடவர் மனதை கொள்ளை கொள்ளும் கெண்டை விழியுடன் ,  அழகான அரும்பை போன்ற இதழுடன், அழகிய வில்லை போல் வளைந்து மூன்றாம் பிறை திங்களை போன்று ஒளி விடும் நெற்றி உடன் அவள் திகழ்ந்தது தான் எமக்கு கொஞ்சம் அச்சத்தை கொடுத்தது. இனி அவள் மிக தூர, வேறு ஒரு நகரத்தில் உள்ள பல்கலைக்கழகம் போகப் போகிறாள். படிப்பை பற்றி பிரச்சனை இல்லை. அது அவளுடன் பிறந்தது. தனிய, அதுவும் இந்த பொங்கி பூரிக்கும் அழகுடன், தந்திரமாக சமாளிப்பாளா என்ற ஒன்று மட்டுமே கொஞ்சம் கவலை அளித்தது. காரணம் அவளுக்கு எல்லாமே நாமே செய்து, எம்மை சுற்றியே பழக்கி விட்டோம் என்பதால். அதுவும் நான் இல்லாமல் எங்கும் தனிய போனதும் இல்லை.  கையை இறுக்க பிடித்துக் கொண்டு தான் போவாள். இப்ப தான் எம் வளர்ப்பின் சில சில தவறுகள் தெரிந்தன. ஆனால் இது நேரம் கடந்த ஒன்று!     "பூக்களின் அழகை வண்டுகள் அறியும் பூங்கா முழுவதும் மயங்கி திரியும்  பூவையரின் அழகை ஆண்கள் அறிவர்  பூரிப்பு கொண்டு மயங்கி திரிவர்"      அவள் எப்படியும் பாடத்தில் கவனம் செலுத்தி, இவை எல்லாம் சமாளிப்பாள் என்று என் நெஞ்சை நானே தேற்றினேன்! . ஆனால் அவளின் சந்தேகமற்ற தூய மனம், பிள்ளைத்தனம் நிறைந்த இயல்பான குணம், இலகுவாக நம்பும் இரக்க தன்மை அவள் வாழ்வை ஏமாற்றி விளையாடி விட்டது அவள் முதலாம் ஆண்டு விடுதலையில் வந்து என் மடியில் இருந்து , என் கைகளால் தன் முகத்தை பொற்றி அழும் பொழுது தான் தெரிந்தது அவளின் வேதனை.!     ஆனால் ஒன்றை கவனித்தேன். இப்ப அவள் நாம் முன்பு கண்ட சின்னப் பிள்ளை அல்ல, அவளின் மற்றும் ஒரு குணமான பிடிவாதம், அவளை நிலைகுலைய  வைக்கவில்லை. தன்னை ஆசைகாட்டி மோசம் செய்தவன், அதே பல்கலைக்கழக, அதே மருத்துவ பீடத்தின் மூன்றாம் வகுப்பு மாணவன். பகிடிவதையில் நண்பர்களாகி, காலப்போக்கில் அவனை உண்மையான காதலன் என் அவள் நம்பியதை, அவன் தந்திரமாக தன் ஆசையை தீர்க்க பாவித்துள்ளான் என்பதை அறிந்தோம். ஆனால், 'நான் பார்த்துக்கொள்வேன்' , கவலை வேண்டாம் அப்பா , அவனை என்னால் திருத்தமுடியும். அவனே உங்கள் மருமகன், எனவே கவலை வேண்டாம் என தைரியமாக மடியில் இருந்து இறங்கி படுக்க போனாள்.     “கற்பும் காமமும் நாற்பால் ஒழுக்கமும் நல்லிதின் புரையும் விருந்து புறந்தருதலும் சுற்றம் ஓம்பலும் பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”        என்று கற்பு நிலை, ஒழுக்க நிலை, நன்னெறி, பிறரை உபசரித்தல் பெண்ணின் கடமை என்றனர் அன்று. ஆனால் என் மகள் தான் நினைத்தவனையே , தன்னை ஏமாறியவனையே திருத்தி மனிதனாக்கி , தன் துணைவனாகவும் மாற்ற புறப்பட்டாள்!. கட்டாயம் அவள் வெற்றி பெறுவாள். அவளின் துணிவு, இன்றைய அனுபவம், வாழ்வை அலசும் திறன், இப்ப அவள் செல்லப் பிள்ளை அல்ல, ஒரு முழுமையான அறிவு பிள்ளை!     என் அன்பு மகளே,  தந்தைக்கு உபதேசம் செய்தான் என்கிறது ஒரு புராணம். அது கட்டுக்கதையாக இருந்தாலும், தந்தை மகன் முன் சீடனாகி உபதேசம் கேட்பது என்பது அகந்தை துறந்து மகனின் கருத்து என்ன என்று அறிந்துகொள்ள ஒரு தந்தை தயாராகும் வாழ்க்கைத் தத்துவம் அது. இன்று குடும்பங்களில் பெரும் பிரச்னையாக இருப்பது இந்த சுய அகந்தைதான். வயதில் சிறியவர்கள் பெரியவர்களின் பேச்சைக் கேட்க வேண்டும் என்று அடம்பிடிப்பது. இன்று நீ சொல்லாமலே என் தவறை சுட்டிக்காட்டி விட்டாய். நீ இனி எனக்கு அம்மாவும் கூட! அவளுக்கு இரவு முத்தம் கொடுத்து, முத்தம் வாங்கி நித்திரைக்கு அனுப்பினேன்!      "பிரசம் கலந்த வெண்சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொற்கலத்து ஒரு கை ஏந்திப், புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறு கோல் ‘உண்’ என்று ஓக்குபு புடைப்ப தெண் நீர் முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று,  5 அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி, ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள் கொல்"     தேன் கலந்த வெண்மையான சுவையான இனிய பாலைக் கொண்ட விரிந்த ஒளியையுடைய பொற்கலத்தை ஒரு கையில் ஏந்தியவண்ணம், மென்மையான நுனியைக் கொண்ட சிறிய கோலை உயர்த்தி என் மகளை அச்சமூட்டிக் ‘இதைக் குடி’ என்று அவளுடைய மென்மையாக நரைத்த கூந்தலையுடைய செவ்விதான முது செவிலித் தாயார்கள் கூறவும், அதனை மறுத்துத் தெளிந்த நீரின் முத்துக்கள் பரலாக உள்ள தன்னுடைய பொற்சிலம்புகள் ஒலிக்கப் பாய்ந்து அவள் ஓட, நடைத் தளர்ந்து அவள் பின்னால் ஓட முடியாமல் அவர்கள் இருக்க, அவள் எங்கள் இல்லத்திற்கு முன் இருக்கும் பந்தலுக்கு ஓடி விடுவாள்.  இவ்வாறு பாலைக் குடிக்க மறுத்த என்னுடைய விளையாட்டுப் பெண், இப்பொழுது எவ்வாறு அறிவையும் ஒழுக்கத்தையும் அறிந்தாள்? எனக்கு இன்னும் வியப்பாகவே அது இருக்கிறது. அந்த வியப்பான பெண் தான் என் அன்பு மகளே !!      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]     
    • எல்லா துன்பங்களில் இருந்தும் மீண்டுவர இறைவனை பிரார்த்திக்கிறேன் பையா 🙏 எங்களுக்கும் லண்டனிலை ஸ்லீப்பர் செல்ஸ் இருக்கினம் தெரியுமோ 😜
    • "பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம்! பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது!" பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம் என்பதில் ஐயப்பாடு ஒன்றும் இல்லை. புறநானுறு 312 இல் அப்படித்தான் கூறுகிறது.  "ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே; சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;" மகனைப் பெற்று வளர்த்தல் பெண்களின் கடமைகளுள் தலையான கடமையாகும்.அவனைச் சான்றோ னாக்குதல் (வீரன்) தந்தையின் கடமையாகும். இப்படி பெற்றோர் பிள்ளைகளை உருவாக்கலாம். ஆனால் பிள்ளைகள் பெற்றோரை உருவாக்க முடியாது என்பதில் தான் எனக்கு ஒரு சந்தேகம்   [1] நாம் இப்ப சொல்லின் கருத்தை பார்ப்போமா ? பெற்றோர் = தங்கள் வாரிசை(குழந்தை) வளர்க்கும் பாதுகாவலர் என்று கொள்ளலாம். அல்லது = பிள்ளை பெற்றவர்கள் / பெற்றோர் என்று கொள்ளலாம். ஆகவே பெற்றோர் என்ற சொல்லே பிள்ளை இல்லாமல் உருவாகாது.  பிள்ளை = குழந்தை, குட்டி , குஞ்சு  இதில் கவனியுங்கள் பெற்றோர் என்ற சொல் தொடர்பு படுத்தப் படவில்லை [2] மேலும் எப்படி பிள்ளைகளை ஒழுங்காக பெற்றோர்கள் உருவாக்கினார்களோ, அப்படியே, பிள்ளைகள் வளர்ந்து ஒரு நிலைக்கு வந்த பின், கெட்டுப்போன / தீய வழியில் சென்ற பெற்றோர்களை , பிள்ளைகள் நல்லவராக உருவாக்கலாம். இதற்கு உதாரணமாக இரணியன், அவன் மகன் பிரகலாதன் கதையை கூறலாம் ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.