Jump to content

தமிழ் - முஸ்லிம் இனவுறவு: பிள்ளையை கிள்ளிவிட்டுத் தொட்டிலை ஆட்டும் அரசியல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் - முஸ்லிம் இனவுறவு: பிள்ளையை கிள்ளிவிட்டுத் தொட்டிலை ஆட்டும் அரசியல்

மொஹமட் பாதுஷா / 2019 ஓகஸ்ட் 11 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 05:56 Comments - 0

இனங்களுக்கு இடையிலான உறவு பற்றி, ஒவ்வொரு பருவகாலத்திலும் பேசப்படுகின்றது.  

குறிப்பாக, தமிழ்பேசும் சூழலில், தமிழர் - முஸ்லிம்களுக்கு இடையிலான உறவு பற்றிய கருத்தாடல்கள், தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருவதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.  

உண்மையில், பெரும்பாலான சாதாரண, அடிமட்டத் தமிழ், முஸ்லிம் மக்களிடையே, சொல்லிக் கொள்ளும்படியாக எந்தவித இனமுறுகலும் குரோதமும் கிடையாது.   

இவ்வாறிருக்கையில், அரசியல், மார்க்கம், இயக்கம் ஆகிய பின்னணிகளைக் கொண்ட, இனக் குழுமத்தினரிடையே, மேலும் இனவுறவைப் பலப்படுத்துவதற்காக, உண்மைக்கு உண்மையாக, விரல்விட்டு எண்ணக்கூடிய வகையில், சிலர் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். 

ஆனால், பல அரசியல்வாதிகள் உள்ளடங்கலாக, இன நல்லிணக்கம் பற்றி, அதிகளவு பேசுவோர், ‘தொட்டிலைத் தாமே ஆட்டிவிட்டோம்’ என்று, நல்ல பெயர் எடுப்பதற்காகவே, ‘பிள்ளையைக் கிள்ளிவிடுகின்றார்கள்’. நடப்பு நிலைவரங்களைத் தொடர்ச்சியாகக் கூர்ந்து நோக்கி வருவோரால், இவ்வாறான செயற்பாடுகளை, இலகுவாக உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.  

தமிழ் - முஸ்லிம் உறவில், நம்பிக்கை இன்மையை அடிப்படையாகக் கொண்ட தேக்கநிலையில், ஏதாவது ஒரு விரிசல்  இருக்கின்றதென்றால், அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். எனினும், இரண்டு முழுமுதல் காரணங்களைக் குறிப்பிடலாம்.   

முதலாவது, ஆயுதக் கலாசாரம்; இரண்டாவது, இன ரீதியான அரசியல் போக்கு ஆகியவையே அவையாகும்.   

இந்த அடிப்படையில், ஆயுததாரிகளும் அரசியல்வாதிகளுமே இதற்குப் பிரதான பொறுப்பேற்க வேண்டிய தரப்பினராக இருக்கின்றனர்.  

தமிழ், முஸ்லிம் உறவு, எல்லா அடிப்படையிலும் (இப்போதிருப்பதை விடச் சிறப்பாக) பின்னிப் பிணைந்ததாக முன்பிருந்தது. மதத்தாலும் இனத்தாலும் வேறுபட்டாலும், பல விடயங்களில் பரஸ்பர ஒற்றுமையும் கலாசார வாழ்வியல் படிமானமும் இன்றுவரையும் இருக்கின்றன.   

இந்த நாட்டின் இறைமையை, முஸ்லிம்கள் பாதுகாத்த சமகாலத்தில், தமிழர்களின் நியாயபூர்வமான போராட்டத்துக்கும் எப்போதும் துணை நின்றிருக்கின்றனர். பெருந்தேசிய அரசியலோடும், தமிழர் அரசியலோடும் பயணித்துக் கொண்டு, சமகாலத்தில் விடுதலைப் போராட்டத்துக்கும் பங்களிப்பு வழங்கிய ஒரேயோர் இனம், முஸ்லிம்கள்தான் என்பதை, மறந்து விடக் கூடாது.  

தமிழர்களின் உரிமைகள், நிலைப்பாடுகளுக்கு, முஸ்லிம்கள்  எதிரானவர்கள் என்ற ஒரு பொய்யான தோற்றப்பாட்டை, சில தமிழ் அரசியல்வாதிகள், தமிழ்ச் சமூகத்துக்கு மத்தியில் இப்போது ஏற்படுத்தி இருக்கின்றனர். இது மிகத் தெளிவான, அரசியல் அவதந்திரமாகும்.  

தமிழர்களின் ஆயுதப் போராளிகளை, சிலபொழுதுகளில் முஸ்லிம்கள்  காட்டிக் கொடுத்தார்கள் என்றும், விடுதலைப் போராட்டத்துக்குப் பங்களிப்பு வழங்கவில்லை என்றும், வரலாற்றை மறந்த சில கதைகள், அண்மைக் காலமாகத் தமிழ் இளைஞர்கள் மத்தியில், பரப்பப்பட்டு  வருவதைக் கவனிக்கக் கூடியதாகவுள்ளது.   

இந்த இடத்தில், தமிழ்ச் சகோதரர்கள், குறிப்பாக இளைஞர் சமுதாயம், சில விடயங்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. இதே அறிவு, முஸ்லிம் இளைஞர்களுக்கும் அவசியமாகின்றது.  

முஸ்லிம் அரசியல்வாதிகளில் கணிசமானோர், பெரும்பான்மைக் கட்சிகளோடு பயணித்துக் கொண்டிருக்க, சுதந்திரத்துக்குப் பிறகு, முஸ்லிம் அரசியலானது, தமிழர் அரசியல் சார்பு நிலையைக் கொண்டதாகவும் சமாந்திரமாகவும் பயணிக்க ஆரம்பித்தது. 

இந்தப் புரிதலுக்கும் அந்நியோன்னியத்துக்கும், அப்போதிருந்த முற்போக்கான தமிழ்த் தலைமைகளே, அடிப்படைக் காரணம் எனக் கூறலாம்.   

தமிழரசுக் கட்சியோடு இணைந்து, முஸ்லிம்கள் பலர் அரசியல் கற்றார்கள்; அரசியல் செய்தார்கள்; செனட்டர் மசூர் மௌலானா முதல் எம்.எச்.எம். அஷ்ரப் மட்டுமன்றி, வேறுபலரும் இந்த வழித்தடத்திலேயே பயணித்திருந்தனர்.  

இதேவேளை, முஸ்லிம்களுக்குத் தனிநாடு தேவைப்படவில்லை; அரசாங்கத்தை எதிர்க்க வேண்டிய தேவையும் இல்லை. இருப்பினும், தமிழர்களின் சுதந்திர தாகத்துக்காகப் பல முஸ்லிம் இளைஞர்கள், விடுதலைப் புலிகள் அமைப்பு உள்ளடங்கலாகப் பல விடுதலைப் போராட்ட ஆயுத இயக்கங்களில் இணைந்து போரிட்டனர். அவர்களில் பலர், தமிழர்களின் சுதந்திர தாக உணர்வுக்காகத் தமது இன்னுயிரைத் தியாகமும் செய்திருந்தமையை யாரும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது. ஒரு குறிப்பிட்ட இயக்கத்தில் மாத்திரம், 35 இற்கும் மேற்பட்டவர்கள், மாவீரர்களாக அறிவிக்கப்பட்டமை, இதற்கு நல்ல சான்று.  

இந்தக் காலகட்டத்தில், குறிப்பாகத் ‘தமிழர் அரசியல்’, ‘முஸ்லிம் அரசியல்’ என இருபக்கங்களில் இருந்தும், நல்ல சமிக்ஞைகள் வெளிப்பட்டதை மறக்க முடியாது. 

இவ்வேளையிலேயே, மூத்த தமிழ் அரசியல்வாதிகள், உயர்ந்த பட்ச நல்லெண்ணத்தை முஸ்லிம்களுக்கு வெளிக்காட்டி, அவர்களது அபிலாஷைகளும் தீர்க்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்.  

அந்தவகையில், இணைந்த வடகிழக்கு மாகாண சபையில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எம்.எச். சேகு இஸ்ஸதீன், தனது நூலில், ‘1956ஆம் ஆண்டு, தமிழரசுக் கட்சியின் நான்காவது மாநாட்டிலும், 1961இல் அக்கட்சியின் ஒன்பதாவது மாநாட்டிலும் அதேபோன்று, 1977ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும், தமிழர்களைப் போலவே, முஸ்லிம்களுக்கும் ஒரு சுயாட்சி, முஸ்லிம் அரசை நிறுவுவது தொடர்பான முன்மொழிவுகளைத் தாமாகவே முன்வந்து, தமிழ்த் தரப்பு முன்வைத்தது நினைவு கொள்ளத்தக்கது, எனக் குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத்தக்கது.   

மறுபுறத்தில், தமிழர்களோடு சேர்ந்து இயங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்தனர். “அண்ணன் அமிர்தலிங்கம், தமிழீழத்தைப் பெற்றுத்தரவில்லை என்றால், தம்பி அஷ்ரப் பெற்றுத் தருவான்” என்று மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் சொன்னது, ஒரு வரலாற்று அறிவிப்பாகவும் அமைந்திருந்தது.  

இப்படியாக, ஒரு சமரசத்தோடு, இரு வழிகளிலும் தமிழர்களும் முஸ்லிம்களும் பயணப்பட்டுக் கொண்டிருந்த சமயத்திலேயே, இன விரிசலுக்கான அடித்தளம் இடப்பட்டது எனலாம்.   
அதாவது, எந்தத் தருணத்தில் முஸ்லிம்களை நோக்கி, ‘விடுதலைத் துப்பாக்கி’கள் திரும்பியதோ, அந்த வேளையில்தான், இனநல்லிணக்கத்துக்கு வேட்டு வைக்கப்பட்டது. 

முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டும், பள்ளிவாசல்களில் பலியெடுக்கப்பட்டுக் கொண்டும் இருந்த வேளையில், தமிழ் அரசியல்வாதிகள் கடைப்பிடித்த அச்சம் கலந்த மௌனவிரதம், ‘இனி இவர்களோடு சேர்ந்தியங்க முடியாது’ என்ற உணர்வுத் தூண்டுதலை, முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தியது.  

அதன்பிறகுதான், அஷ்ரப் தலைமையில், புதிய முஸ்லிம் கட்சியொன்று உருவாக்கப்பட்டு, முஸ்லிம்களின் அரசியல், தனித்துவ வழியில் பயணிக்கத் தொடங்கியது. அரசியல் உறவு இல்லையென்ற நிலையும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளின் காரணமாக, தமிழ் மக்களைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்ற நிலையும் ஏற்பட்ட பிறகுதான், சாதாரண தமிழ், முஸ்லிம் மக்களிடையே காணப்பட்ட அந்நியோன்யம், குறைவடையத் தொடங்கியது.   

இதுதவிர, தமிழர்களின் நியாயமான உரிமைக் கோரிக்கைகளுக்காகவோ, முஸ்லிம்கள் தங்களைத் தனியோர் இனமாக அடையாளப்படுத்த முனைந்த முன்னெடுப்புகளின் காரணங்களாலோ, இவ்விரு இனங்களுக்கும் இடையில், இனவிரிசல் ஏற்படவில்லை. 
அத்துடன், அண்மைக்காலம் வரை, அது மத அடிப்படையிலான முரண்பாடாக, உருமாற்றப்படவும் இல்லை என்பதையும் சொல்ல வேண்டியிருக்கின்றது.  

ஆனால், இந்த இனமுறுகல் நிலை இன்னும் தொடர்ந்து, அப்படியே இருப்பதற்கும்  இன உறவு மீளக் கட்டியெழுப்பப்படாமல் இருப்பதற்கும் பிரதான காரணம், இரு பக்கங்களிலும் உள்ள சுயலாப அரசியல்வாதிகளும் பிரித்தாளும் பெருந்தேசிய அரசியலும்தான் என்பதை, வலியுறுத்தியும் அடிக்கோடிட்டும் குறிப்பிடாமல் விட முடியாது.   

இப்படியான அரசியல்வாதிகளே பெரும்பாலும், ‘நாங்கள்தான் தொட்டிலை ஆட்டுகின்றோம்’ என்பதை, வெளியுலகுக்குக் காண்பிப்பதற்காக, இரகசியமாகப் ‘பிள்ளையைக் கிள்ளிவிடும்’ கைங்கரியத்தைச் செய்து கொண்டிருக்கின்றனர்.   

இனவாதத்தை மட்டுமே மூலதனமாகக் கொண்ட, அரசியல்வாதிகளின் வயிற்றுப் பிழைப்பு என்பது, தமிழ், முஸ்லிம் பகைமை பாராட்டுதலிலேயே முற்றுமுழுதாகத் தங்கியிருக்கின்றது.  

அதுமாத்திரமன்றி, தமிழர்களுக்குள் ஊருடுவியுள்ள ‘இந்துத்துவா’ போன்ற இயக்கங்களும் முஸ்லிம்களுக்குள் மார்க்கத்தின் பெயர் சொல்லி உருவெடுத்துள்ள, புதுப்புது கொள்கைகளும் இயங்கங்களும், மேற்படி இனஉறவை, விரிசல் நிலையில் வைத்திருப்பதற்கே பெரிதும் முயற்சி செய்து, பங்களிப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றன. இதற்குப் பின்னால், பெரும் உள்நாட்டு, சர்வதேச அரசியலும் வணிகமும் இருக்கின்றன.  

ஆனால், இனமுரண்பாடு என்றும் இனவிரிசலை நீக்கி, இனநல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்றும், நாங்கள் பேசிக் கொள்கின்ற அதேநேரத்தில், இன நல்லிணக்கம் பற்றி, எந்தப் பிரக்ஞையும் இல்லாத மக்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றார்கள்.   

அவர்களுக்கு, இனமுரண்பாடு பற்றி எதுவும் தெரியாது. அவர்களுக்குள் கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ளவோ, பழகுவதற்கோ இனமோ மதமோ அரசியல் நிலைப்பாடுகளோ, தடையாக இருப்பதில்லை என்பதே, யதார்த்தமான நிலைமையாகும்.   

முஸ்லிம்களிலும் தமிழர்களிலும் இப்படியான மனநிலையில் உள்ள மக்கள்தான், நாட்டில் அதிகம் எனக் கணிக்க முடிகின்றது. அவர்களுக்கு இனநல்லிணக்கமோ, நல்லுறவுக் கோட்பாடுகளோ அவசியமில்லை. ஏனெனில், அவர்கள் எப்போதும் போல, நல்லுறவாகவே இருக்கின்றார்கள். அன்றாட வாழ்க்கையில் தொடர்புபட்டும், முஸ்லிமும் தமிழனும் ஒருவரை ஒருவர் கண்டு, ஓடிவிடாதவாறும் அனுசரித்து வாழ்கின்றார்கள்.  

அப்துல்லாவின் கடையில்தான் ஐயாதுரை பொருள்களைக் கொள்வனவு செய்வார்; அப்துல்லாவுக்கு வீடுகட்ட ஐயாதுரைதான் அழைக்கப்படுவார். இவர்களுக்கு இடையில் இனம், மதம், அரசியல் சார்ந்த எந்த வாதங்களும் தாக்கம் செலுத்துவதில்லை. இவ்வகையாக, இலட்சக்கணக்கான தமிழர்களும் முஸ்லிம்களும் நாட்டில் இருக்கின்றார்கள்.  

இது, ‘பகைமறப்புக் காலம்’ என்ற நூலின் ஆசிரியர் குறிப்பிட்டிருப்பதைப் போல, ‘உண்மையிலேயே இன முரண்பாட்டினாலும் போராலும் இலங்கைச் சமூகங்கள், ஆழமாகப் பிளவுபட்டு, துருவங்களாகி உள்ளன என்பது யதார்த்தமே. அதனை மீறிச் செல்வதற்கான வழிமுறைகளே, இன்று அவசியமாகின்றன. அதற்குத்தான், ‘பகைமறப்பு’ச் செயற்பாடுகளை, மேற்கொள்ள வேண்டியிருக்கின்றது, என்கிறார்.   

மேற்குறிப்பிட்டவாறு, இனநல்லுறவுடன் இன்னும் இருக்கும் சாதாரண தமிழ், முஸ்லிம் மக்களை, இந்த இனமுரண்பாடு எனும் நச்சு வட்டத்துக்குள் விழுந்து விடாது பாதுகாப்பதுடன், ஏற்கெனவே இந்த நச்சு வட்டத்துக்குள் இருக்கின்ற மக்கள் கூட்டத்தாரை, வெளியில் கொண்டு வரவேண்டிய முக்கிய கடமையும் தேவையும் இருக்கிறது.   

அந்தவகையில், முஸ்லிம்களும் தமிழர்களும் முன்னைய காலங்களில் எவ்வாறு உறவாக இருந்தார்கள் என்பதையும் எங்கே அது விரிசலடைந்தது என்பதையும் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும்.   

குறிப்பாக, முஸ்லிம்கள் செய்த பங்களிப்பைச் சில அரசியல்வாதிகள் கேலிக்குள்ளாக்கத் தமிழ்ச் சமூகம் இடமளிக்கக் கூடாது. அதேபோன்று, இவ்விரு சமூகங்களும் தமக்கிடையில் இடம்பெற்ற, சரி பிழைகளைச் சரியாக மீட்டுப் பார்ப்பதுடன், பிழைகளைப் பிழை என்றும் சரியைச் சரி என்றும் திறந்த மனதுடன் ஏற்றுக்கொள்வது, பகைமறப்புக்கு அவசியமாகும். அரசியல், ஆயுதம்சார் சிந்தனைகளுக்காக, யதார்த்தங்களை, இருட்டிப்புச் செய்யத் தேவையில்லை.  

‘ஒரு மனிதன், இன்னொரு மனிதனை, அவனது தோலின் நிறம், அவனது பின்னணி, அவனது மதம் காரணமாகப் பிறப்பிலிருந்தே வெறுப்பதில்லை; மாறாக, மக்கள்தான் வெறுப்பதற்குக் கற்றுக் கொள்கின்றார்கள்’ என்று, நெல்சன் மண்டேலா கூறினார். ‘வெறுக்கக் கற்றுக் கொள்ள முடியுமாயின், அதனைவிட அவர்களுக்கு, அன்பு செலுத்தவும் கற்றுக் கொடுக்க முடியும்’ என்றும் அவர் சொல்லியுள்ளார்.   

ஆனால் அதைவிடுத்து, நல்லிணக்கம் பற்றிப் பேசிப் பேசியே, இனவாதத்தைக் கற்பிக்கும் பெருந்தேசிய, குறுந்தேசிய அரசியல்வாதிகளிடம், எச்சரிக்கையாக இருப்பது மட்டுமன்றி, இன்னும் இனநல்லுறவுடன் இருக்கும் சாதாரண தமிழ், முஸ்லிம் மக்களையும் இந்த இனமுரண்பாடு எனும் நச்சுவட்டத்துக்குள் விழுந்து விடாது, பாதுகாக்க வேண்டியுள்ளது; அது நம் எல்லோரினதும் நியாயபூர்வமான கடமையாகும்.   

‘பெற்றிகலோ கெம்பஸ்’
ஆதாரமற்ற கதைகளால் தொடரும் சர்ச்சைகள்

‘பெற்றிகலோ கெம்பஸ்’ எனப்படும் கல்வி நிறுவகம் பற்றிய சர்ச்சைகளும் உருப்பெருப்பிக்கப்பட்ட, கட்டுக் கதைகளும் இன்னும் தீர்ந்தபாடில்லை.  
மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பகுதியில், அதாவது பொலன்னறுவை மாவட்டத்தில் இருந்து, சில கிலோமீற்றர் தொலைவில் உள்ள புணானை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்பல்கலைக்கழகக் கல்லூரியை “மூட வேண்டும்; தடைசெய்ய வேண்டும்; அரசாங்கம் சுவீகரிக்க வேண்டும்” என்ற குரல்கள், தொடர்ச்சியாகக் கேட்ட வண்ணமே இருக்கின்றன.  
முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ், இந்தக் கல்வி நிறுவகத்தை நிறுவுவதற்கு, அரபு நாடொன்று நிதி (கடன்) வசதியளித்துள்ளது. இது தொடர்பாக, ஆரம்பத்தில் எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்கு ஹிஸ்புல்லாஹ், நாடாளுமன்ற தெரிவுக்குழு, தொலைக்காட்சி விவாதங்கள் உட்படப் பல இடங்களிலும் பதிலளித்து விட்டார்.  
எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்குத் தக்க ஆதாரங்களாக அவர், தம்மிடமுள்ள சட்டவலுவுடைய ஆவணங்களைக் காண்பித்து, போலிக் குற்றச்சாட்டுகள் என்பதை உறுதிப்படுத்தி வருகின்றார். “இது தனியே முஸ்லிம்களுக்கான ஒரு பல்கலைக்கழகமோ, ஷரிஆ சட்டத்தைப் போதிப்பதற்காகவோ நிறுவப்படவில்லை” என்பதைப் பல தடவைகள் சொல்லிவிட்டார்.  
ஆனால், அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இக்கல்வி நிறுவகத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் முடிச்சுப் போடுவதை விடுத்து, குற்றச்சாட்டுகளை நிரூபித்துக் காட்டுங்கள் என்று இனவாத சக்திகளிடம் கோரப்பட்டது.  
ஆனால், அரச உயர்மட்டக் குழுவினராலோ அன்றேல் பாதுகாப்புத் தரப்பினராலோ, அவர்கள் சொல்வதைப் போன்ற, ஓர் அடிப்படைவாதக் கல்லூரிதான் இது என்பதை, நிரூபிப்பதற்கு இந்த வினாடி வரையும் எந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை.  
ஆனால், ‘விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை’ என்ற நிலைப்பாட்டிலேயே, இனவாதிகள் இன்னும் இதுபற்றிப் புதுப்புதுக் கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இப்பல்கலைக்கழகம் பற்றி ஆராய, நான்கு அமைச்சர்களைக் கொண்ட ஒரு குழுவும் இப்போது நியமிக்கப்பட்டுள்ளது.  
இந்தக் கதைகளில் மிகப் பிந்தியதாக, அத்துரலிய ரத்தன தேரர் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது, “ஹிஸ்புல்லாஹ் உருவாக்கும் இந்தப் பல்கலைக்கழகம், தற்கொலைதாரிகளைத் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலை” என்று, அவர் குறிப்பிட்டுள்ளார். 20 முஸ்லிம் எம்.பிகளைக் கொண்ட உயரிய சபையான நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே, அவர் இதைக் கூறியுள்ளார்.  
இந்தப் பல்கலைக்கழகம் ஏன், எவ்வாறு உருவாக்கப்பட்டது என்று ஹிஸ்புல்லாஹ் தரப்பு விலாவாரியாகக் கூறிவிட்டது. ஆனால், ஆதாரத்தை முன்வைக்க முடியாத தரப்பினரால், சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால், இன்னும் விசாரணைகள், கள ஆய்வுகள் தொடர்கின்றன.  
இந்தப் பல்கலைக்கழகத்தை, ஒரு முறை சென்று பார்ப்பவர்கள், இது எந்தளவுக்குப் பிரமாண்டமான வேலைத்திட்டம் என்று, புரிந்து கொள்வார்கள். ஹிஸ்புல்லாஹ் சொல்வதில் நம்பிக்கையில்லை என்றாலும் கூட, இத்தனையும் நடந்த பிறகு, இப்பல்கலைக்கழகத்தை முஸ்லிம்களுக்கு மட்டுமான ஒரு பல்கலைக்கழகமாக, அடிப்படைவாதக் கல்வி மய்யமாக நடத்திச் செல்ல, எந்த முட்டாளும் முன்வரமாட்டான் என்பதை விளங்கிக் கொள்ளக் கூடாது என்பதில், சில அதிபுத்திசாலிகள் பிடிவாதமாக இருக்கின்றனர்.  
இனவாதம் தவிர, அரசியல், பொறாமை, வஞ்சகப் புத்தி, குறுகிய மனப்பாங்கு எல்லாம் இந்தச் சர்ச்சைகளுக்குத் தூபமிட்டுக் கொண்டிருக்கின்றன.  

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/தமிழ்-முஸ்லிம்-இனவுறவு-பிள்ளையை-கிள்ளிவிட்டுத்-தொட்டிலை-ஆட்டும்-அரசியல்/91-236583

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.