Jump to content

`அன்பே சிவம்’ படத்துல கமல் போட்டிருந்த கண்ணாடிக்குப் பின்னாடி ஒரு கதை இருக்கு!


Recommended Posts

Kamal Haasan

கமல் ஹாசனுக்குக் கொடுக்கப்பட்ட நம்மவர் என்கிற பெயர், வெறும் சாதாரண சொல்லோ பெயரோ அல்ல. அது ஓர் உணர்வு. பொதுவாக சினிமாவில் 'ஹீரோ' என்பவருக்கு ஓர் அங்கீகாரமும், பிம்பமும் உண்டு. படத்துடைய கதாநாயகனுக்கு முக்கியமான குணாதிசியமாகக் கருதப்படுவது, 'தப்பை தட்டிக் கேட்கும் ஒருவர்'. இதுதான் கதாநாயகனுக்குக் கொடுக்கப்படும் உச்சக்கட்ட அங்கீகாரம். ஆனால் அதைத் தகர்தெறிந்து நம்மவரானவர், கமல். அந்தச் சொல்லுக்கான அர்த்தம் அந்த வார்தையிலே உள்ளது. 'உலக நாயகன்' என்ற பட்டத்தைவிட 'நம்மவர்' என்பதுதான் அவருக்கான சரியான அடையாளம். கதாநாயகனுடைய பிம்பத்தை உடைத்து நம்மில் ஒருவனாக சினிமாவில் இவர் தோன்றி 60 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன!

 

நம்மைத் திரையில் காணும்போது எந்தளவிற்கு ஒரு சந்தோஷம் எழுமோ நம்மில் ஒருவனை, நம்முள் இருக்கும் ஒருவனை திரையில் காணும்போது மனம் அளவில்லா ஆர்ப்பரிப்பைப் பெறும். அப்படி நம்முள் ஒருவனாக, நம்மில் ஒருவனாக இவர் தோன்ற ஆரம்பித்த படம், `களத்தூர் கண்ணம்மா'. இவருக்குக் கடவுளின் மீது நம்பிக்கையில்லை. ஆனால், தடுக்கிவிழப்போகும் பெருமாளை தாங்கிப் பிடிக்கும் ரங்கராஜ நம்பியாக நம் முன் அவதரிப்பார். காந்தி மீது இவருக்கு எந்த கோபமும் தொடர்பும் இல்லை. காந்தியின் பேரன் என சொல்லிக் கொள்வதில் தனி கர்வம் கொண்டவர் கமல். ஆனால், அவரைக் கொல்லத் துடிக்கும் கோட்சேவின் பணியாளாக, பின் விஷயம் தெரிந்து திருந்தும் சாமானியனாக வருவார். தனக்கு முரண்பாடான கதைகளிலும் கமல் நடித்திருக்கிறார் என்பதற்கு இவையெல்லாம் சாட்சி. ஆனால், தன் கொள்கைக்கு நேரெதிர் கருத்துக்களை கொண்ட படங்களை கமல் பெரும்பாலும் ஏற்பதில்லை. ஜென்டில்மேன் திரைப்படத்தில் நடிக்க மாட்டேன் என மறுத்தது ஒரு சிறு உதாரணம். ஒரு நல்ல நடிகனுக்கு அடையாளம் முதலில் அவர் வாங்கும் விருதுகள். நடிகர்கள் அதைப் பெறும்போதும், கையில் பிடிக்கும்போது ஒருவித பெருமிதத்துடன் சிரிப்பார்கள். ஆனால், இவர் வாங்கும் விருதுகளுக்கு உயிரிருந்தால் அது பெருமிதத்துடன் சிரிக்கும். இப்படிப்பட்ட கலைஞனின் கையில் நாம் இருக்கிறோம் என!

பல வருடங்களாக சினிமா என்பது ஒரு பொழுதுபோக்காக மட்டுமே பார்க்கப்பட்டு வந்தது. அதற்குப் பின் சில அரசியல் ஆதாயங்கள் அவரவர் படங்களில் இடம்பெற ஆரம்பித்து. இன்னும் சில படிகட்டுகள் தாண்டி தன்னுடைய சக நடிகர்களை அவரவர் படத்தின் வாயிலாக பாடல்களிலோ, வசனங்களிலோ விமர்சித்தும்கொண்டார்கள். இதற்கெல்லாம் அப்பாற்பட்டது சினிமா என்பதைக் கலையின் புரிதலோடு ஒவ்வொரு படைப்புகளிலும் வழங்கினார் கமல். தமிழ் சினிமாவின் 'பரிசோதனை எலி'யும் இவரே, அந்த முயற்சியைச் செய்து பார்க்கும் விஞ்ஞானியும் இவரே. பொதுவாக ஏதோவொரு விஷயத்தை முதலில் பரிசோதித்துப் பார்க்கும்போது அது தோல்வியில்தான் முடியும். பின் நாள்களில்தான் அதைச் சாதனையாகக் கொண்டாடுவார்கள். சோதனையில் பயணித்து சாதனையில் முடிந்த படைப்புகள், தமிழ் சினிமாவில் ஏராளமாக உள்ளது. அப்படியான படைப்புகளின் பட்டியலில் கமலின் படங்கள் கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.

à®à®®à®²à¯ ஹாà®à®©à¯

எதையும் முன்கூட்டியே சிந்திக்கும் கெட்டபழக்கம் கமலுக்கு உள்ளது. அப்படி இவர் யோசித்து எடுத்த படங்களில் முக்கியமான ஒரு படைப்புதான் 'ஹேராம்'. கலைத் துறையின்படி ஒவ்வொரு ஜானர்களிலும் ஒவ்வொருவர் இருப்பார். நகைச்சுவை என்று சொல்லும்போது சிலருக்கு சார்லி சாப்ளின், சிலருக்கு லாரல் அண்ட் ஹார்டி, சிலருக்கும் வடிவேலு. சிரிக்க வைக்க சில கலைஞர்கள், சிந்திக்க வைக்க சில கலைஞர்களை என நம்முடைய உணர்வுக்குத் தீனி போடுவதற்கு தகுந்த சில கலைஞர்களை நாம் தேடியிருப்போம். ஆனால், கமலைப் பொறுத்தவரை இவருக்கு வரையறையே கிடையாது. கூண்டுக்குள் சிக்காத கலைக் கிளி, கமல். விஞ்ஞானி, வைணவர், அமெரிக்கப் பிரதமர், களரி வீரன், சி.ஐ.ஏ வில்லன், காவல்துறை அதிகாரி, பாட்டி, பஞ்சாப் பாடகர், ஏழடி கலிஃபுல்லா, புரட்சியாளன்... எனப் பத்து அவதாரங்களெடுத்த விஸ்வரூபனாக இவரை ’தசாவதாரம்’ படத்தில் பார்த்திருப்போம்.
 
ஆனால், இவர் திரைத்துறையில் எத்தனை அவதாரங்கள் எடுத்திருக்கிறார் என்பது தெரியுமா. குழந்தை நட்சத்திரத்தில் ஆரம்பித்து உதவி இயக்குநர், மேடை அமைப்பு, நடன இயக்கம், பின்னணி பாடகர், பாடலாசிரியர், கதாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குநர் எனத் திரைத்துறையிலே பத்து அவதாரங்களை எடுத்தவர். 'இது எப்படி பதிலாவும்?' என கேலியாக இவர் கேட்டால், நடிகர் என்ற பெரிய அவதாரமும் இவர் தன்னுடைய படைப்புகளில் எடுப்பார். இது கண்டிப்பாக 'இந்தியன் 2' வரை தொடரும். ஒவ்வொரு துறையிலும் அந்தத் துறைக்கான தீர்க்கதரிசி என்று ஒருவர் இருப்பார். ஆனால், இவர் எல்லாத் துறைகளிலும் கால் பதித்த சகலகலா வல்லவன். அந்தத் துறையைச் சேர்ந்தவருக்கே இவரைக் கண்டால் பொறாமையாக இருக்கும் அளவிற்கு வல்லமை படைத்த ஆளென்றால் அது கமல்தான்.
 
à®à®®à®²à¯ ஹாà®à®©à¯
இவர் கொடிகட்டி பறந்த காலகட்டத்தில்தான் ரஜினிகாந்த்தும் இமய மலையின் உச்சியில் இருந்தார். பல தடைகளைக் கடந்து சூப்பர் ஸ்டாருமானார். தமிழ் சினிமாவின் சாபக்கேடாக இருப்பது ஒப்பீட்டுச் சண்டை. இது சில வகையில் ஆரோக்கியமாக இருந்தாலும், பல வகையில் தேவையற்ற வாக்குவாதங்களையும், சண்டைகளையும் மட்டுமே கிளப்பிவிடுகிறது. முக்கியமாக சமூக வலைதளங்களில் இதன் வீச்சு இன்னும் அதிகமாக உள்ளது. எம்.ஜி.ஆர் - சிவாஜியில் ஆரம்பித்து ரஜினி - கமல், விஜய் அஜித், சிம்பு - தனுஷ்... என இவர்கள் வழியே, தற்போதுவரை பயணித்து வந்துகொண்டிருக்கிறது. ஆனால், அவரவராக இருப்பது அவரவருக்குத்தான் தெரியும். இவ்வளவு ஏன். ரஜினிகாந்த் கமலைப் பற்றி ஒரு நிகழ்ச்சியில், "நான் 'அவர்கள்' பட ஷூட்டிங் சமயத்துல வெளியில சும்மா உட்கார்ந்திருந்தேன். கே.பி சார் என்னைக் கோபமா கூப்பிட்டு 'என்னடா தம் அடிக்கப் போனியா. கமல் நடிச்சிட்டிருக்கான் அங்க பாருடா. அப்போதான் உனக்கு நடிப்பு நல்லா வரும்' "னு என்கிட்டச் சொன்னார். இப்படித்தான் இருவருக்குமான நட்பு உள்ளது.
 
தன்னுடைய சொந்த விஷயத்தை ஒருபோதும் கமல் தன்னுடைய படைப்புகளில் பேச மாட்டார். கதையும் கதாபாத்திரமும் எதை வழியுறுத்துமோ அதை பாரபட்சமே பார்க்காமல் வழங்குவார். 'கடவுள் இல்லைனு சொல்லல. இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன்' என நாத்திகத்துக்கு புது விளக்கம் கொடுத்தவர், இவர். ஆனால், இவர் ஆத்திகனாக எத்தனை படத்தில் நடித்திருப்பார்.
à®à®®à®²à¯ ஹாà®à®©à¯

அதே சமயம் இவர் மிகப் பெரிய புத்திசாலியும்கூட. உதாரணத்திற்கு 'அன்பே சிவம்' படத்தைச் சொல்லலாம். படத்தில் இவரது புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் காட்சி எக்கச்சக்கமாக இருந்தாலும், படத்திற்காக இவர் செய்த புத்திசாலித்தனத்தை இங்கே பகிர்கிறேன். படத்தில் இவர் அணிந்திருக்கும் கண்ணாடியின் பவர் -10. சாதாரணமாக அப்படியெல்லாம் இதை அணிந்து, பார்த்து, நடித்துவிட முடியாது. ஆனால், கேமராவின் ஃப்ரேமில் அந்தக் கண்ணாடியும் உள்ளே இருக்கும் கண்களும் தத்ரூபமாகத் தெரிய வேண்டுமென்பதற்காக, +10 லென்ஸை தனது கண்களில் அணிந்து ஈக்குவல் செய்து நடித்தவர், கமல்.

குறிப்பாக இவருக்கு வழங்கப்பட்ட 'ஆண்டவர்' என்ற பெயருக்கே தனி விளக்கம் கொடுக்கலாம். இவருக்கு ஆண்டவர் என்ற பெயரை வழங்கியது வேறு யாரோ இல்லை, இவரேதான். இவரது படங்களில், தன்னைத்தானே கடவுள் என்று பல இடங்களில் உணர்த்துவார். சில சமயம் வசனங்கள் வாயிலாகவும், சில சமயம் கேமராவின் ஃப்ரேம்களின் வாயிலாகவும் உணர்த்திக்கொண்டே இருப்பார்.

'நானும் கடவுள்தான்' என அன்பே சிவத்தில், 'எங்க அம்மாகிட்ட சொல்லியிருக்கேன். நீதான் என்னுடைய கடவுள்’ என வசூல் ராஜாவில் ஜாகீர் கமலைப் பார்த்து சொல்வதில் போன்ற சில வசனங்களிலும் சரி, சில ஃப்ரேம்களில் சரி இதை நம்மிடையே வெளிப்படுத்திக்கொண்டே இருப்பார். இதே கமல்தான் 'வசூல் ராஜா' படத்தில், 'கடவுள் இல்லைங்கிறான் பார், அவனை நம்பலாம். கடவுள் இருக்குங்கிறான் பார், அவனைக்கூட நம்பலாம். ஆனா, நான்தான் கடவுள்ங்கிறான் பார் அவனை மட்டும் நம்பாத... பூட்ட கேசாகிடுவ' என்று ஒரு வசனம் பேசியிருப்பார். இதை இறுதியில் ஜாகீரைக் காப்பாற்ற முடியாத கமல், இதை நிரூபித்துக் காட்டியிருப்பார்.

à®à®®à®²à¯ ஹாà®à®©à¯ - à®°à®à®¿à®©à®¿à®à®¾à®¨à¯à®¤à¯

இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள்தான் எத்தனை எத்தனை. ’களத்தூர் கண்ணம்மா’வில் 'செல்வக்' குழந்தை நட்சத்திரமாக அவதரித்த பின் 'அரங்கேற்றம்' தியாகுவாக, 'அவள் ஒரு தொடர்கதை'யின் பிரசாத்தாக, 'சினிமா பைத்தியம்' நடராஜனாக, 'மன்மத லீலை' செய்யும் மதுவாக, '16 வயதினிலே' சப்பானியாக, 'சிகப்பு ரோஜாக்கள்' திலீப்பாக, கல்யாண- ராமனாக, 'வாழ்வே மாயம்' ராஜாவாக, 'மூன்றாம் பிறை' சீனுவாக, 'சகலகலா வல்லவன்' வேலுவாக, 'காக்கிச் சட்டை' முரளியாக, 'புன்னகை மன்னன்' சாப்ளினாக, 'நாயகன்' வேலுநாயக்கராக, 'உன்னால் முடியும் தம்பி' உதய மூர்த்தியாக, 'வெற்றிவிழா' வெற்றிவேலாக,'குணா'வில் குணசேகரனாக, 'நம்மவர்' செல்வமாக, 'இந்தியனி'ன் சேனாபதியாக, 'ஹேராமி'ல் சாகெத் ராமாக, சம்மந்தமாக, ராமசந்திர மூர்த்தியாக, விஸாமாக, சுயம்புலிங்கமாக, உத்தமனாக, மனோரஞ்சனாக நடித்து, தன்னுடைய ஒற்றை உருவத்தை வைத்து எத்தனை பரிமாணத்தைக் காட்டியிருக்கிறார்.

இவர் பிறந்து 64 வருடங்கள் ஆகிவிட்டன. அதில் கலைக்கென தன்னுடைய 60 வருடங்களை எழுதி வைத்துவிட்டார். இவருடைய 60 வருட கலைப் பயணத்தை சுருங்கச் சொல்வது ரொம்பவே கடினம். இருப்பினும் ஒரு கலைஞனின் பயணத்தை வாழ்த்துவது ரசிகனின் கடமை. வாழ்த்துகள் கமல்ஹாசன்!

https://cinema.vikatan.com/tamil-cinema/60-years-of-kamalism

 

 

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

இவர் பிறந்து 64 வருடங்கள் ஆகிவிட்டன. அதில் கலைக்கென தன்னுடைய 60 வருடங்களை எழுதி வைத்துவிட்டார். இவருடைய 60 வருட கலைப் பயணத்தை சுருங்கச் சொல்வது ரொம்பவே கடினம். இருப்பினும் ஒரு கலைஞனின் பயணத்தை வாழ்த்துவது ரசிகனின் கடமை. வாழ்த்துகள் கமல்ஹாசன்!

நம்மவர் 💪👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அற்புதமான கலைஞர்,பாராட்டுக்கள்......!   😁 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..💐

Link to comment
Share on other sites

எனக்கு நடிப்பில் மிகவும் பிடித்த படங்களில் ஒன்று - நாயகன், இந்த வேலு நாயக்கர் கதை. 

இடம்பெயர்ந்த வாழ்க்கை; வித்தியாசமான காதல்; புரியாத தொழில்; கைவிட முடியாத வாக்குறுதிகள்; 
பிள்ளைகள் மீதான பாசம்; இப்படி பல. 

எத்தனை முறையும் பார்க்க கூடிய ஒரு படம் ! 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் சிரித்திரன் சுந்தர்.  கல்லறைக்குள் இருந்து நெளிவார் என நினைக்கிறேன். 
    • இதென்ன பிரமாதம்…. நான் ஒரு முடா குடியன் எண்டும்…லண்டனில் ஹரோ பகுதி பப் ஒன்றில் வெறியில் அரசியல் கதைக்கும் ஆள் நான் தான் என்று சத்தியம் செய்ததோடு… அந்த நபரோடு டெலிபோன் தொடர்பை ஏற்படுத்தி…அவரும் ஓம் நான் கோஷாந்தான் என சொல்லி…. இவரை ஒரு சில மாதம் ஓட்டு…ஓட்டு எண்டு ஓட்டி🤣. இன்னும் அந்த மனுசன் இவரை உசுபேத்தி கொண்டு இருக்கோ தெரியாது🤣.   கேட்டா எண்ட சாதகம் மோகனிடம் இருக்கு, நிழலிட்ட இருக்கு என்பார். அந்த தகவலை அவர்கள் தந்தாலும்…அதை வச்சு நான் என்ன செய்யலாம்? கலியாணம் பேசவோ🤣
    • 28 MAR, 2024 | 11:04 AM   நியூமோனியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 59 வயதுடைய நபரொருவரின் சடலத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது அவரது நுரையீரலில் காணப்பட்ட பல் ஒன்று பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் பல வருட காலமாக நியூமோனியா மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின்போதே இந்த பல் கண்டுபிடிக்கப்பட்டதாக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி பத்மேந்திர விஜேதிலக தெரிவித்தார். பலாங்கொடை - பின்னவலை பிரதேசத்தை சேர்ந்த எஸ் . கருணாரத்ன என்பவரின் நுரையீரலில் இருந்தே இவ்வாறு பல் கண்டுப்பிடிகக்ப்பட்டுள்ளது. இவர் மதுபானத்துக்கு அடியானவர் என்பதுடன் நியூமோனியா நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சில வருடங்களுக்கு முன்னர் இவரது பல் ஒன்று உடைந்துள்ள நிலையில், அந்த பல் நுரையீரலில் சிக்கியிருக்கலாம் என வைத்தியர்கள் சந்தேகிக்கின்றனர். https://www.virakesari.lk/article/179883
    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.