Jump to content

தனிமனித பொருளியல் : 5 கேள்விகள்/பதில்கள் : உழைக்காத வருமானம்; ..


Recommended Posts

பொருளியல் நிபுணர் கூறுவது இந்தியா சார்ந்து இருந்தாலும், அடிப்படை பொருளியல் தத்துவங்கள் தங்கள் தங்கள் நாடுகளிலும் பொருந்துவனவாக இருக்கும். 


குறிப்பு : பொதுவாக கிழமைக்கு சராசரியாக 40 மணித்தியாலங்கள் வேலை செய்யும் நாங்கள் முதலீடுகள் பற்றி 4 நிமிடங்கள் கூட சிந்திப்பதில்லை 😞 

உழைக்காத வருமானம்; 

வாகன காப்புறுதி; 

 

Link to comment
Share on other sites

வங்கிக் கடனை சுமையின்றி நிர்வகிப்பது எப்படி?

கடன் வாங்குவது சுமையில்லை; மாறாக, குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் கடன் உதவுகிறது என்று இந்தியர்களில் 50% பேர் குறிப்பிடுவதாக ஓர் ஆய்வு சொல்கிறது. இந்தியாவில் உள்ள 12 முக்கிய நகரங்களின் வசிக்கும் 2,571 பேரிடம், கடன் சார்ந்த பல கேள்விகள் கேட்டதில், பாதிப் பேர் மேலே சொன்ன விஷயங்களைச் சொன்னதாக அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இதற்கு அடுத்ததாக 12.5 சதவிகிதத்துடன் கார் கடனும், 12 சதவிகிதத்துடன் வீட்டுக்கடனும், 10.5 சதவிகிதத்துடன் நகைக்கடனும் இடம்பிடித்திருக்கின்றன. டிராவல் லோன், விவசாயக் கடன், கிரெடிட் கார்டு கடன், மெடிக்கல் லோன் ஆகியவை குறைந்த அளவில் இருப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடன் மேலாண்மை அவசியம்!

இப்படி, அலுவலக நண்பர்களிடம், அக்கம்பக்கத்தில் இருப்பவர்களிடம் எனக் கைமாத்தாக வாங்கும் கடனில் தொடங்கி, அடிப்படைத் தேவைகளான ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்களை வாங்கக் கடன், அவசியத் தேவைகளான சொந்த வீடு, வாகனம் வாங்கக் கடன் என நம் அனைத்துத் தேவைகளை கடன் வாயிலாகப் பூர்த்தி செய்து கொள்கிறோம். கடன் வாங்கும்போது அடுத்த சில மாதங்களில் எப்படியாவது கட்டிவிடலாம் என்று நினைத்துதான் வாங்குகிறோம். ஆனால், அந்தக் கடன்களிலிருந்து வெளியே வரமுடியாதபடி மாட்டிக்கொள்கிறோம். இதற்கு மிக முக்கிய காரணம் கடன் மேலாண்மையைச் சிறப்பாகச் செய்யாததுதான்.

 

கடன் எங்கே தொடங்குகிறது?

நம் வாழ்க்கையில் கடன் என்கிற சமாசாரம் எங்கே தொடங்குகிறது என்பதை அறிவது முக்கியமான விஷயம். அத்தியாவசியத்துக்கும் அநாவசியத்துக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைப் புரிந்துகொள்ளாமல் இயங்குவதுதான் கடன் என்கிற பிரச்னையின் தொடக்கப்புள்ளி என்கிறார்கள் நிதி ஆலோசகர்கள்.  

உயர் பதவியிலிருக்கும் நீங்கள் அலுவலகம் சென்றுவர ஒரு கார் வாங்குவது அவசியம். இதற்கு ஆரம்ப விலையில் உள்ள ஒரு கார் போதும். ஆனால், உங்கள் வருமான எல்லையைத் தாண்டி சொகுசு கார் வாங்குவது அநாவசியம். 

நம்மூரில் இருக்கும் டாப் கல்வி நிறுவனத்தில் உங்கள் பிள்ளைகள் மேற்படிப்புப் படிப்பதற்காக அவசியம் கடன் வாங்கலாம். ஆனால், வாங்கும் கடனை எப்படித் திரும்பச் செலுத்தப்போகிறோம்,  படிக்கிற படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்குமா என்பதை எல்லாம் யோசித்துப் பார்க்காமல் எக்கச்சக்கமாகக் கல்விக் கடன் வாங்கி வெளிநாட்டுக் கல்லூரியில் படிக்க வைப்பது என்பது அநாவசியம். இதற்காக, கடன் வாங்குவதே தவறு என்று சொல்ல வரவில்லை. கடன் மூலம் நாம் வாங்கும் சொத்தின் மதிப்பு பல மடங்காகப் பெருகி வளரும் என்கிற பட்சத்தில் வீட்டுக் கடன் வாங்குவது தவறே இல்லை.

பஸ்ஸில் ஏறி ஆபீஸுக்குப் போய் வர முடியவில்லை. அலுவலகத்தில் பெட்ரோல் செலவுக்குப் பணம் தருகிறார்கள். எனவே, வங்கியில் கடன் வாங்கி, அதை அடுத்த சில வருடங்களில் பெரிய கஷ்டம் ஏதும் இல்லாமல் திரும்பக் கட்ட முடியும் என்கிற நம்பிக்கையும் தெளிவான திட்டமும் இருக்கிறபோது, கார் அல்லது இருசக்கர வாகனக் கடனை வாங்குவது தவறே இல்லை.

 

 

யோசித்து கிரெடிட்கார்டு வாங்குங்கள்!

இன்றையத் தேதியில் நகர்ப்புறங்களில் வசிக்கும் மிடில் கிளாஸ் மனிதர்களில் பலரும் கிரெடிட் கார்டு கடனில் மாட்டித் தவிக்கிறார்கள். ரூ.25,000-க்கு மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு தற்போதெல்லாம் கிரெடிட் கார்டு கடனைத் தேடி வந்துகொடுப்பதால், எல்லோரும் இந்தக் கடனை வாங்கிவிடுகின்றனர்.

தவிர, கிரெடிட் கார்டின் மூலம் ஷாப்பிங் செய்வதும் இன்றைக்குச் சர்வ சாதாரணமாகிவிட்டது. குடும்ப உறுப்பினர்களின் திடீர் ஆசையை நிறைவேற்ற கிரெடிட் கார்டை தேய்ப்பதுதான் மிடில் கிளாஸ்வாசிகளின் ஒரே வழியாக இருக்கிறது. ஆனால், இருப்பதிலே அதிக வட்டியுள்ள கடன் என்பது கிரெடிட் கார்டின் மூலம் வாங்கும் கடன்தான். கிரெடிட் கார்டு தரும் கெடு நாள்களுக்குள் நீங்கள் வாங்கிய பொருள்களுக்கான தொகையைக் கண்டிப்பாகச் செலுத்திவிடுவது அவசியம். அப்படிச் செலுத்த முடியாது என உங்களுக்கு நன்கு தெரியும்பட்சத்தில் கிரெடிட் கார்டு கடனை வாங்காமல் தவிர்த்துவிடுவதே புத்திசாலித்தனம்.

 

கடனை முன்கூட்டியே கட்டி முடியுங்கள்!

ஜாமீன், அடமானம் எதுவும் இல்லாமல் இருப்பதால் நம்மவர்கள் கல்யாணம் தொடங்கிக் காதுகுத்து வரை எதற்கெடுத்தாலும் தனிநபர் கடன் வாங்கிக் குவிக்கிறார்கள். பொதுவாக, தனிநபர் கடன் பெறுபவர்கள் செய்யும் ஒரு தவறு என்னவென்றால், ‘எதிர்பார்க்கும் ஒரு தொகை வந்துவிடும். அந்தப் பணத்தைக் கட்டி, பர்சனல் லோனிலிருந்து வெளியே வந்துவிடலாம்’ என்கிற நம்பிக்கையில் கடன் வாங்குகிறார்கள். ஆனால், எதிர்பார்த்தபடி பணம் கிடைக்காமல் அசல்கூட கட்ட முடியாமல் போகும்போது, வட்டி குட்டி போட்டு ‘நாணயம் தவறிய கடன்தாரர்’ என நம் போட்டோ போடும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிடுகிறது.

கடன் பெறுவதில் சில சலுகைகளை அரசாங்கம் நமக்கு வழங்குகிறது. உதாரணத்துக்கு வீட்டுக்கடனுக்கு வரிச்சலுகை பெற முடியும். இப்படி நமக்குச் சலுகைகள் தரக்கூடிய கடன்களைத் தவிர, இதர கடன்களை போனஸ் தொகை சேமிப்புத்தொகையைக் கொண்டு முன்கூட்டியே முடிப்பது நல்லது. கடனைக் கட்டி முடிப்பது சேமிப்புக்கு ஈடான ஒரு விஷயம்.

 

தேவையான கடனை மட்டுமே பெறுங்கள்!

தெளிவான எந்தத் திட்டமும் இல்லாமல் வாங்கப்படும் கடன்கள் அனைத்தும் பிற்பாடு நம் கழுத்தை நெரிக்கத்தான் செய்யும். எந்தக் காரணத்துக்காக நீங்கள் கடனை வாங்கப்போவதாக இருந்தாலும் சரி, உங்களுக்கு எந்த வகை கடன் தேவை என்பதை நன்கு புரிந்துகொண்டு அந்தக் கடனையே வாங்குவது அவசியம். காரணம், கடன் வகைக்கேற்ப வட்டி விகிதமும் மாறுபடும். மேலும் கடன் எதற்காக வாங்குகிறோம், வட்டி எத்தனை சதவிகிதம், எவ்வளவு காலத்துக்குள் திரும்பக் கட்ட முடியும் ஆகியவற்றையெல்லாம் யோசித்து வாங்கினால், கடன் சிக்கலில் நாம் சிக்கித் தவிக்க வேண்டிய அவசியமே இருக்காது.

https://www.vikatan.com/business/banking/loan-management-tips

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே அவ‌ர் சொல்ல‌ வ‌ருவ‌து நாம் த‌மிழ‌ர் க‌ட்சி...........திமுக்கா ஆதிமுக்கா வீஜேப்பி இவ‌ர்க‌ளுக்கு அடுத்து 4வ‌து இட‌த்துக்கு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ரும் என்று எழுதி இருக்கிறார் சில‌ தொகுதிக‌ளில் மூன்றாவ‌து இட‌ம் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி வ‌ர‌லாம் இது அதான் க‌ந்த‌ப்பு அண்ணாவின் தேர்த‌ல் க‌ணிப்பு.................
    • Published By: SETHU    28 MAR, 2024 | 02:08 PM   சுவீடனில் புனித குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்திய நபர், ஈராக்குக்கு நாடு கடத்தப்படவுள்ள நிலையில் நோர்வேயில் புகலிடம் கோருவதற்கு முயற்சிக்கிறார். ஈராக்கியரான சல்வான் மோமிகா எனும் இந்நபர், 2021 ஆம் ஆண்டில் சுவீடனில் வதிவிட உரிமை பெற்றவர்.  கடந்த பல வருடங்களில் அவர் பல தடவைகள் குர்ஆனை எரித்து சர்ச்சை ஏற்படுத்தினார்.  இச்சம்பவங்களுக்கு எதிராக பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.  கடந்த ஒக்டோபர் மாதம் அவரின் வதிவிட அனுமதி இரத்துச் செய்யப்பட்டது. வதிவிட அனுமதி கோரிக்கைக்கான விண்ணப்பத்தில் தவறான தகவல்களை அளித்திருந்தமை இதற்கு காரணம் என சுவீடன் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.  அவரை ஈராக்குக்கு நாடு கடத்த சுவீடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. எனினும், ஈராக்கில் தனது உயிருக்கு ஆபத்துள்ளதாக மோமிகா தெரிவித்ததையடுத்து நாடு கடத்தல் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. அவருக்கு வழங்கப்பட்டிருந்த புதிய தற்காலிக அனுமதிப்பத்திரம் எதிர்வரும் ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் காலவாதியாகிறது. இந்நிலையில், தான் நோர்வேயில் புகலிடம் கோரவுள்ளதாக சுவீடன் ஊடகமொன்றுக்கு அளித்த செவ்வியில் மோமிகா தெரிவித்துள்ளார். இது குறித்து நோர்வே அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. https://www.virakesari.lk/article/179895
    • இருக்கலாம்.  இருக்க வேண்டும் என்பதே என் பிரார்தனையும் கூட🙏
    • கனிய மணலில் இருந்து சிர்கோனியம் (Zirconium) எனப்படும் தனிமத்தை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை இலங்கை ஆய்வாளர்கள் குழுவொன்று கண்டறிந்துள்ளது. ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை மேற்கொண்டிருந்தனர். பிரித்தெடுக்கப்பட்ட சிர்கோனியம் தீவிர வெப்பநிலையைத் தாங்கும் திறன் கொண்ட வலுவான தயாரிப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படுவதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர தெரிவித்துள்ளார். புல்மோட்டை தாது மணல் படிவுகளில் சிர்கோனியம் இருப்பதை அடையாளம் காண முடியும். கனிய மணலில் இருந்து சிர்கோனியத்தை பிரித்தெடுக்கும் முறைமைக்காக ரஜரட்ட பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சிர்க்கோனியம் (Zirconium) என்பது Zr என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு தனிமமகும். இதன் அணு எண் 40 ஆகும். இத்தனிமத்தின் அணு நிறை 91.22, அடர்த்தி 6490 கிகி /கமீ, உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 1852 பாகை செல்சியஸ் ,4371 பாகை செல்சியஸ் ஆகும். https://thinakkural.lk/article/297390
    • தமிழ்நாட்டு தொகுதிகளே 39 என்று சொன்னார்கள். சீமான் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்றால் 35  இடங்களில் தானே  திமுக கூட்டணி வெற்றிபெற முடியும்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.