Jump to content

'உறுப்புகள வித்தா நிறையா பணம் கிடைக்கும்னு சொன்னாங்க, ஆனா மனசு கேட்கல'


Recommended Posts

'உயிரோட இருக்கும்போதே ஒரு குடும்பத்தையே காப்பாத்தினவன்தான் ஶ்ரீகாந்த. இறந்த பிறகும்கூட பல பேரோட குடும்பத்தைக் காப்பாத்திட்டு இருக்கான். இந்தப் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும். அந்த மனநிறைவுதான் எங்களுக்கு கிடைச்ச ஒரே ஆறுதல்' என்கிறார் ராஜா. மூளைச்சாவு அடைந்த தன் அண்ணன் மகன் ஸ்ரீகாந்த் பற்றி ராஜா நெகிழ்வோடு பேசிய வார்த்தைகள் இவை.

சென்னை அண்ணாநகர் புது காலனியைச் சேர்ந்தவர் பழனி, பெயின்டராக வேலை பார்க்கிறார், மனைவி மல்லிகா அக்கம் பக்கத்தில் வீட்டு வேலை செய்துவருபவர். இவர்களின் மூத்த மகன் ஶ்ரீகாந்த். ஏழ்மை காரணமாக ஶ்ரீகாந்தால் மேல்படிப்பைத் தொடர முடியவில்லை. பள்ளிப் படிப்பை முடித்த பின்பு, மெடிக்கல் ரெப்பாக வேலை செய்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்ததால், அவரது உறுப்புகள் பலருக்கும் தானமாக வழங்கப்பட்டுள்ளன.

 

ஶ்ரீகாந்த் இறந்து இரண்டு வருடங்கள் கடந்தாலும், இன்னமும் அவரது இழப்பை ஈடுசெய்ய முடியாமல் திக்கற்று நிற்கும் குடும்பத்தாரிடம் பேசினோம்.

"என் அண்ணன் மகன்தான் ஶ்ரீகாந்த். ரொம்ப துடிப்பான பையன். கானா பாட்டெல்லாம் அழகா பாடுவான், அதனால எப்பவும் அவன சுத்தி பசங்க கூட்டம் இருந்துட்டே இருக்கும். நிறைய படிக்கணும்னு ஆசைப்பட்டான், குடும்ப கஷ்டத்தில அது முடியாம போச்சு. அவன் அப்பாவுக்கு குடிப்பழக்கம் இருக்கு. அதனால அவன் அம்மாதான் வீட்டு வேலை செஞ்சு குடும்பத்தை நடத்திக்கிட்டு வந்தாங்க. அவங்களால ஶ்ரீகாந்த்தை ப்ளஸ் டூ வரைதான் படிக்க வைக்க முடிஞ்சது. அவனுக்கு அடுத்து தங்கச்சி வேற படிச்சிட்டு இருந்தாள்...

குடும்ப கஷ்டத்தை உணர்ந்த ஶ்ரீகாந்த், மேல படிக்காம வேலைக்குப் போக ஆரம்பிச்சுட்டான். அவன் படிப்பை நிறுத்திட்டாலும் அவன் தங்கச்சியைப் படிக்க வச்சான். சின்ன வயசிலேயே அவ்வளவு பொறுப்பா இருந்தான். கொஞ்சநாள் வீட்டு விஷேசங்களுக்கு பந்தல் போடுறது, பசங்களோட சேர்ந்து தினக்கூலி வேலைக்குப் போறதுனு ஏதாவது ஒரு வேலைக்குப் போய்கிட்டிருந்தான். அவனோட வருமானத்துலதான் குடும்பம் ஓடிச்சு. அவன்தான் குடும்பத்தைக் காப்பாத்துவானு நினைச்சிட்டு இருந்தோம். ஆனா, எங்க நம்பிக்கையெல்லாம் வீணாப்போச்சு" என்று கலக்கத்துடன் பேசத்தொடங்கினார் ஶ்ரீகாந்த்தின் சித்தப்பா ராஜா.

"படிச்சிட்டு ஏன் தினக்கூலிக்கு வேலைக்குப் போறே?'னு சொந்தகாரங்க திட்டினதைக் கேட்டுத்தான் மெடிக்கல் ரெப் வேலையில சேர்ந்தான். ஆனா, அதுவே அவனுக்கு ஆக்ஸிடென்ட் நடக்கக் காரணமாப்போச்சு. வேலையில சேர்ந்து மூணு மாசம்தான் இருக்கும். 2017-ம் வருஷம் டிசம்பர் 20-ம் தேதி காலையில சந்தோஷமா, வீட்டுல இருந்து வேலைக்குக் கிளம்பினவன் திரும்ப வரல. 'பைக் ஆக்சிடென்ட் ஆகி தலையில் அடிபட்டு சேர்க்கப்பட்டிருக்காருனு' ஸ்டான்லி ஆஸ்பிட்டல இருந்து போன்தான் வந்துச்சு. நாங்கெல்லாம் குடும்பத்தோட அடிச்சுபிடிச்சு ஓடுனோம். எப்படியாச்சும் அவனைக் காப்பத்திடணும்னு நினைச்சோம். ஆனா, இரண்டு நாளு ஐசியூவிலேயே வெச்சிருந்தாங்க, திடீர்னு 22-ம் தேதி ராத்திரி 7.30-மணிக்கு அவன் மூளைச்சாவடைஞ்சிட்டதா சொன்னாங்க...

à®®à¯à®³à¯à®à¯à®à®¾à®µà®à¯à®¨à¯à®¤ ஶà¯à®°à¯à®à®¾à®¨à¯à®¤à¯

மூளைச்சாவடைந்த ஶ்ரீகாந்த்

எப்படியாவது பொழைச்சு வந்துருவானு எதிர்பாத்துக் காத்திட்டு இருந்தோம். நடந்தது ரெம்ப அதிர்ச்சியா இருந்தது. 'ஶ்ரீகாந்தைக் காப்பாத்த முடியாது'னு சொல்லிட்டாங்க. 'நீங்க சம்மதிச்சா அவன் உடல் உறுப்புகளைத் தானமா எடுத்துக்கிறோம். அது மூலமா உறுப்பு கிடைக்காம உயிருக்குப் போராடிட்டு இருக்கிற, எட்டு பேரைக் காப்பத்த முடியும்'னு சொன்னாங்க. ஏற்கெனவே எங்க சொந்தத்தில் ஒரு சின்ன வயசு பையன் கிட்னி ஃபெயிலியராகி தானம் கிடைக்காம இறந்தே போனான். அந்த மாதிரி நெறைய பேரு உறுப்பு தானம் கிடைக்காம இறந்துபோறாங்கனு பேப்பர்ல படிச்சிருக்கோம். 'நம்ம பையன்தான் பொழக்கிறதுக்கு வழியில்ல. அவனால நாலு பேர் உயிரைக் காப்பத்தலாம்'னு முடிவு செஞ்சு, முழு மனசோட உறுப்புகளைத் தானம் கொடுத்தோம்.

அவன் உயிரோட இருக்கும்போதே ஒரு குடும்பத்தையே காப்பாத்தினான். இறந்த பிறகும்கூட பலர் குடும்பத்தைக் காப்பாத்தியிருக்கான். உயிரைக் காப்பாத்துற பாக்கியம் யாருக்குக் கிடைக்கும். அந்த மனநிறைவுதான் எங்களுக்குக் கிடைச்ச ஆறுதல். நாங்க தானம்செய்ய முடிவு செஞ்சதும், 'உறுப்புகளை வித்தா நிறைய பணம் கிடைக்கும்'னு சொந்தக்காரங்க தொடங்கி, பலபேரு சொன்னாங்க. ஆனா, 'அது புள்ளையோட உயிருக்கு விலைபேசுறத்துக்கு சமம்'னு மறுத்துட்டோம்.

ஶ்ரீகாந்தோட இதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்கள், தோல், நுரையீரல்னு மொத்தம் 8 உறுப்புகளைத் தானம் எடுத்துக்கிட்டாங்க. அதை யாருக்குக் கொடுக்குறோம்னு ஆஸ்பிட்டல சொல்லமாட்டாங்க. ஆனா, அதுல, இதயத்தைத் தானம் வாங்கினவரு ஒரு இஸ்லாமியர். அவர் மட்டும் எங்க அட்ரஸை எப்படியோ வாங்கி, இரண்டு முறை எங்கள நேருல வந்து பாத்தாரு. ஶ்ரீகாந்த்தோட அம்மா, அப்பா, தங்கச்சிக்கு டிரெஸ் எல்லாம் எடுத்துட்டு வந்தாரு. 'பண உதவி செய்யவா?'னு கேட்டாரு. ஆனா நாங்க மறுத்துட்டோம். ஒரு பக்கம் பணக் கஷ்டம் இருக்கத்தான் செய்யுது. அவன் தங்கிச்சி இப்போ படிப்பை நிறுத்திட்டா, வருமானத்துக்கு வழியில்லை. இருந்தாலும், பையன் உறுப்புகளுக்காக காசு வாங்கி அதுல எப்படி வாழ முடியும்? அந்தப் பாவத்தை எப்படி நாங்க கழிக்கிறது. அதனால 'வேணாம்!'னு சொல்லிட்டோம். மறுஜென்மம் மேலெல்லாம் எங்களுக்கு நம்பிக்கையில்லை. ஆனா, ஶ்ரீகாந்த மற்றவங்களுக்குள்ள வாழ்ந்துட்டு இருக்கான்கிறதுதான் எங்களுக்கான ஒரே ஆறுதல்" என்கிறார் அவர்.

உடல் உறுப்பு தானம்... மரணத் தருவாயில் இருக்கும் நோயாளிகளுக்குக் கிடைத்த வரப்பிரசாதம்; உயிர்காக்கும் உயரிய சிகிச்சை. உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை மூலம் ஒருவரிடமிருந்து 20-க்கும் மேற்பட்ட உறுப்புகளையும் திசுக்களையும் தானமாகப் பெற முடியும். நவீன மருத்துவத்தின் துணையுடன் எண்ணற்ற மனித உயிர்களுக்கு மறுவாழ்வைச் சாத்தியமாக்கியிருக்கிறது உடல் உறுப்பு தானம்.
 
அதே நேரத்தில் ஶ்ரீகாந்த் போன்று ஒரு குடும்பத்தின் அச்சாணியாக இருக்கக்கூடியவர்களின் இழப்பு என்பது அந்தக் குடும்பத்தினரால் ஈடு செய்ய முடியாததாக இருக்கும். அதனால்தான், 'உடலுறுப்பு தானம் செய்யக்கூடியவரின் குடும்பத்தினர் அல்லது வாரிசுகளுக்கு அரசு சார்பில் நிவாரணம், வேலைவாய்ப்பில் முன்னுரிமை போன்ற சலுகைகளை அளிக்க வேண்டும்' என்ற கோரிக்கைகளை சமூக ஆர்வலர்கள் முன்வைக்கிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்கும்போது, உடல் உறுப்பு தானம் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். ஆட்சியாளர்கள் மனது வைப்பார்களா?
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
    • 28 MAR, 2024 | 12:07 PM சிறுவர்களின் ஆபாசக் காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றுவது தொடர்பான முறைப்பாடுகளைப் வழங்குவதற்கு  புதிய முறைமையொன்றை  இன்று வியாழக்கிழமை (28) அறிமுகப்படுத்தவுள்ளதாகத்  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.  தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் இணையத்தளத்தினூடாக இன்று முதல் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்ய  சந்தர்ப்பம் வழங்கப்படும் என அதன் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.   இதன் மூலம் பெறப்படும்  முறைப்பாடுகள்  நேரடியாக இங்கிலாந்தில் உள்ள "Internet Watch Foundation" க்பகு தெரிவிக்கப்படுவதுடன் அதனுடன் தொடர்புடைய ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்களை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.    மேலும், இந்த முறைப்பாடுகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் யார் என்பதைக் கண்டறிந்து, சர்வதேச  பொலிஸார் மூலமாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.    கடந்த காலங்களில் சிறுவர்களின் ஆபாசமான காணொளிகள் மற்றும் நிர்வாண புகைப்படங்கள் இணையத்தில் வெளியானமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .   ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில் முறைப்பாடு வழங்க புதிய வழிமுறை | Virakesari.lk
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.