Jump to content

சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வு


Recommended Posts

தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை  ஒன்றை  நடத்தி, அவர்களின் பெரும்பான்மையுடன் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

முல்லைத் தீவில் நேற்று(12) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,  

“தமிழர்களின் நிலங்களை ஒரு அங்குலமேனும் கையகப்படுத்த நாம் ஒருபோம் நினைக்கவில்லை. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை தமிழர்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும். காணி, பொலிஸ் அதிகாரங்கள் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்பதே எனது தனிப்பட்ட கருத்து.” என்று கூறியுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/சர்வஜன-வாக்கெடுப்பை-நடத்தி-இனப்பிரச்சினைக்கு-தீர்வு/175-236698

Link to comment
Share on other sites

கூட்டமைப்புக்கு ஒரு கோரிக்கை!

 

  • சில வெளிநாடுகளில் செய்வது போன்று இரண்டு கடசிகளின் பிரதான வேட்ப்பாளர்களையும் ஒரே மேடையில் அமர்த்துங்கள்.
  • நேரடி ஒளி பரப்பை செய்யுங்கள்.
  • இரண்டு கட்சிகளையும் ஒரு சில முக்கியமான கேள்விகளை கேளுங்கள்
  • மக்கள் சரியான முடிவை எடுப்பார்கள்.
Link to comment
Share on other sites

20 minutes ago, ampanai said:

தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை  ஒன்றை  நடத்தி, அவர்களின் பெரும்பான்மையுடன் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

இந்த விதி முறையானது ஐ.நா. சரத்துக்களுக்கு அமைவானது. இது பற்றி நாடு கடந்த தமிழீழ அரசு உட்பட முன்னர் கூறி இருந்தனர்.

இவ்வாறு கூறி சிங்களம் ஏமாற்றும். எனவே, இதை ஐ. நா. வுடன் சம்பந்தரின் சாணக்கியம் இணைத்துவிட்டால்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13 வது சரத்தின் ஊடாகவோ அல்லது ஒரு சமஸ்டி ரீதியிலானா தீர்வின் அடிப்படையில் இந்த சர்வசன வாக்கெடுப்பு சர்வதேசத்தின் அனுசரணையுடன் நடத்தப்பட்டால் நன்று .இதற்கு மேலாக நமது அனைத்து தமிழர் கட்சியும் ஒன்று இணைந்து 
இதை அரசியல் சாணக்கியதோடு அணுகவேண்டும் .இருந்தும் இதுகும் ஒரு சிங்கள இராசதந்திரத்தின் ஒரு ஏமாத்து வேலையோ என்றும் எண்ண தோன்றுகின்றது .

Link to comment
Share on other sites

வரலாற்றில் சந்தர்ப்பங்களை நழுவ விட்டவர்கள் நாங்கள்.

வரும் காலங்களில் சந்தர்ப்பங்களுக்கான சந்தர்ப்பங்கள் இல்லாமலே போய்விடும். 

எம்மில் சிலர் தமிழீழம் மட்டுமே ஒரே தீர்வு என  விரும்பலாம், அதற்கு தீர்வையும் நிராகரிப்பார்கள். அதில் நியாயமும் உள்ளது. வேறு எந்த தீர்வையும் ஏற்பவர்களை 'துரோகிகள்' எனவும் பார்க்கப்படுவார்கள்.

ஆனால், கள; பூகோள அரசியல் நிலைகளை பார்த்து கடலில் தத்தளிக்கும் மக்களுக்காக ஒரு தற்காலிக தீர்வாக இது  அமையலாம். 
  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கான தீர்வை தமிழர்கள் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர சிங்களவர்கள் அல்ல.

பிரித்தானியாவில் ஸ்கொட்லன்ட் பிரியனுமா இல்லையா என்பதை இங்கிலாந்து மக்கள் தீர்மானிக்கவில்லை.. ஸ்கொட்லாந்து மக்கள் தான் வாக்குகளால் தீர்மானிக்கிறார்கள்.

அதேபோல்.. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் பிரியனுமா இல்லையா என்பதை பிரித்தானிய மக்கள் தான் தீர்மானிக்கிறார்களே தவிர ஐரோப்பியர்கள் அல்ல.

கனடாவில் கியுபெக் பிரியனுமா இல்லை என்பதை கியுபெக் மக்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.

அதேபோல் தென் சூடான் பிரிவினையின் போதும் கூட. 

கிழக்குத்திமோர் பிரிவினையில் கூட.. 

கொசவா பிரிவினை..

அண்மைய கிரிமியா பிரிவினை..

எல்லாவற்றிலும் அந்தப் பிராந்திய மக்கள் தான் தீர்மானிக்கிறார்களே தவிர.. மற்றவர்கள் அல்ல. 

அதென்ன சிங்கள அரசியல்வாதிகள் தான் இப்படி சனநாயக முரணாக சிந்திக்கின்றனர்..?! இது ஒன்றே போதும் சொறீலங்கா ஒரு சனநாயக நாடு அல்ல என்பதை இனங்காட்ட. 

Link to comment
Share on other sites

2 hours ago, nedukkalapoovan said:

பிரித்தானியாவில் ஸ்கொட்லன்ட் பிரியனுமா இல்லையா என்பதை இங்கிலாந்து மக்கள் தீர்மானிக்கவில்லை.. ஸ்கொட்லாந்து மக்கள் தான் வாக்குகளால் தீர்மானிக்கிறார்கள்.

அதேபோல்.. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் பிரியனுமா இல்லையா என்பதை பிரித்தானிய மக்கள் தான் தீர்மானிக்கிறார்களே தவிர ஐரோப்பியர்கள் அல்ல.

கனடாவில் கியுபெக் பிரியனுமா இல்லை என்பதை கியுபெக் மக்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.

அதேபோல் தென் சூடான் பிரிவினையின் போதும் கூட. 

கிழக்குத்திமோர் பிரிவினையில் கூட.. 

கொசவா பிரிவினை..

அண்மைய கிரிமியா பிரிவினை..

எல்லாவற்றிலும் அந்தப் பிராந்திய மக்கள் தான் தீர்மானிக்கிறார்களே தவிர.. மற்றவர்கள் அல்ல. 

அவர்களுக்கு உள்ள தன் மக்களை ஏமாற்றாத, சாணக்கிய அரசியல் தலைமைகள் எங்களிடம் இல்லாதது தான் காரணமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

அவர்களுக்கு உள்ள தன் மக்களை ஏமாற்றாத, சாணக்கிய அரசியல் தலைமைகள் எங்களிடம் இல்லாதது தான் காரணமா?

அதேதான் காரணம். வேறு ஒரு காரணமும் இல்லை.
எமது தமிழ் அரசியல்வாதிகள் எல்லாம் வியாபாரிகள்.
விபச்சாரம் செய்பவர்களுக்கு சமமானவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் சரியாக சொன்னார் அதில் முற்றிலும் எனக்கு உடன்பாடு உண்டு. சிங்கள அரசியல்வாதிகளுக்கு தெரியும் அவர்கள் விரும்புவதுபோன்று சிங்கள மக்களையும் உள்ளடக்கிய சர்வஜன வாக்கெடுப்பில் எந்த தமிழரின் தீர்வுத்திட்டமும் தோற்கடிக்கப்படும் எனவே மக்கள் தீர்ப்பே இறுதியான தீர்ப்பாகி காலாதி காலத்துக்கு நாங்களும் அடிமையாக காலத்தை ஓட்டணும். இதுபோன்ற நரிகளின் தந்திரத்தை மக்கள்முன் போட்டுடைக்க தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிசெய்வதில்லை.

தமிழரின் கட்சிகள் ஏட்டிக்கு போட்டியாக நிற்கும்போது இதுபோன்ற வார்த்தைகளை அள்ளிவீசி தமிழ் மக்களை குளப்பி வாக்குகளை சிதறடிப்பது இவர்களின் நோக்கம். தமிழர் கட்சிகளுக்கு ஏற்ற வேலைத்திட்டங்களை பிரித்து வழங்குவதற்கு ஒரு நடுநிலையான துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய மத்திய கொள்கை வகுப்பு குழு ஒன்று அத்தியாவசியம். தீர்வுத்திட்டங்களில் உள்ளடக்கப்படவேண்டிய முக்கிய கருப்பொருள்களை சம்பந்தன் சுமந்திரன் உட்பட எமது அரசியல்வாதிகள் சரியாக புரிந்துவைத்திருக்கிறார்களா என்பதில் நீண்டகாலமாக எனக்கு சந்தேகமுண்டு.

Link to comment
Share on other sites

10 hours ago, nedukkalapoovan said:

தமிழர்களுக்கான தீர்வை தமிழர்கள் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர சிங்களவர்கள் அல்ல.

பிரித்தானியாவில் ஸ்கொட்லன்ட் பிரியனுமா இல்லையா என்பதை இங்கிலாந்து மக்கள் தீர்மானிக்கவில்லை.. ஸ்கொட்லாந்து மக்கள் தான் வாக்குகளால் தீர்மானிக்கிறார்கள்.

அதேபோல்.. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் பிரியனுமா இல்லையா என்பதை பிரித்தானிய மக்கள் தான் தீர்மானிக்கிறார்களே தவிர ஐரோப்பியர்கள் அல்ல.

கனடாவில் கியுபெக் பிரியனுமா இல்லை என்பதை கியுபெக் மக்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.

அதேபோல் தென் சூடான் பிரிவினையின் போதும் கூட. 

கிழக்குத்திமோர் பிரிவினையில் கூட.. 

கொசவா பிரிவினை..

அண்மைய கிரிமியா பிரிவினை..

நீங்கள் சொல்வது தமிழர்கள்  பிரிந்து தனி நாடு உருவாக்குவதா இல்லையா என்று முடிவெடுப்பது பற்றி.

12 hours ago, ampanai said:

தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை  ஒன்றை  நடத்தி, அவர்களின் பெரும்பான்மையுடன் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

அவர் சொல்வது தமிழர்கள் பிரியாமல் இருப்பதை சிங்களவர்கள் விரும்புவதால் அதற்காக அவர்கள் தர விரும்பும் தீர்வு பற்றி. அதை அவர்கள் தானே சொல்ல வேண்டும்?

5 hours ago, vanangaamudi said:

நெடுக்கர் சரியாக சொன்னார் அதில் முற்றிலும் எனக்கு உடன்பாடு உண்டு. சிங்கள அரசியல்வாதிகளுக்கு தெரியும் அவர்கள் விரும்புவதுபோன்று சிங்கள மக்களையும் உள்ளடக்கிய சர்வஜன வாக்கெடுப்பில் 

அவர் “உள்ளடக்கிய” என்றோ அல்லது அப்படி கருத்து படவோ சொல்லவில்லை.

12 hours ago, ampanai said:

தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை  

இது வித்தியாசமான கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Jude said:

தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை  

தமிழருக்கு இருக்கும் பிரச்சினைகள் பற்றி சிங்களவர்களில் எத்தனை பேருக்கு நடுநிலமையான, சரியான விளக்கம் இருக்கிறதென்பதின் அடிப்படையிலேயே தமிழருக்குத் தரக்கூடிய தீர்வு என்னவென்பதை சிங்கள மக்கள் தீர்மானிப்பது தங்கியிருக்கிறது. இது கொலையாளியிடம் போய், உனக்கு என்ன தண்டனை தரவேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாய் என்று கேட்பதற்குச் சமனானது. 

இதுவரையில் சாதாரண சிங்களவருக்கோ அல்லது சிங்களத் தலைவர்களுக்கோ தமிழர் பிரச்சினை தொடர்பில் தெளிவான சிந்தனை இருப்பதாக நான் நினைக்கவில்லை. பெரும்பான்மையினருக்கு தமிழர்கள் சிங்கள நாட்டைப் பிரித்துத் தனிநாடாக மாற்ற முயலும் பிரிவினைவாதிகள். இன்னும் சிலருக்கு, தமிழருக்குப் பிரச்சினையில்லை, இருந்ததெல்லாம் பயங்கரவாதப் பிரச்சினையே, அதையும் அழித்தாயிற்று, ஆகவே இனிப் பிரச்சினையென்று எதுவுமில்லை, ஆகவே இல்லாத பிரச்சினைக்கு ஏன் தீர்வு தரவேண்டும்? இன்னும் கொஞ்சப் பேருக்கு தமிழர்கள் வடக்குக் கிழக்கு மட்டுமல்லாமல், முழு இலங்கையையுமே கைப்பற்றி, இந்தியாவின் தமிழ்நாட்டுடன் சேர்த்துவிடப் போராடுகிறார்கள். வெகு சொற்பப் பேருக்குத்தான், தமிழர்கள் உண்மையாகவே அடக்கப்படுகிறார்கள், அவர்களுக்குப் பிரியாத நாட்டிற்குள் நியாயமான தீர்வொன்று தேவை என்கிற எண்ணம் இருக்கிறது.

இந்த லட்சணத்தில் சிங்களவரிடம் மட்டுமோ அல்லது சிங்களவர் உள்ளடக்கியோ சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை நடத்துவது எந்தவிதத்திலும் எமக்குச் சார்பாக முடியப்போவதில்லை.  இன்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் காட்டி எந்தத் தீர்விற்கும் எதிர்க்கட்சியைக் குற்றம்சாட்டிக் கொண்டு காலம் கடத்துவதுபோல, இந்த சர்வஜன வாக்கெடுப்பையும் சிங்களம் இன்னும் பல தசாப்த்தங்களுக்கு சாட்டாக வைத்து தீர்வொன்றைத் தருவதைத் தட்டிக் கழிக்கலாம்.


தமிழருக்குத் தேவையான தீர்வு என்னவென்பதை தமிழர்களைத்தவிர வேறு எவராலும் சரியாகக் கூறிவிட முடியாது. அத்தீர்வு பிரியாத நாட்டிற்குள் (இப்போதைக்கு தனிநாடெல்லாம் சாத்தியப்படாது) சுயநிர்ணய உரிமையுடனோ அல்லது சமஷ்ட்டி அடிப்படையிலோ சுதந்திரமாக வாழ தமிழருக்கு வழிசமைத்துக் கொடுத்தாலே போதுமானது.

Link to comment
Share on other sites

"13வது திருத்தத்திலுள்ள அனைத்து உரிமைகளும் தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும்"

அரசியலமைப்பின் 13 வது திருத்தச் சட்டத்தில் உள்ள சகல அதிகாரங்களும் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று பெற்று கொடுக்கப்பட வேண்டும். அதற்கமைய 13வது திருத்தச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சகல அதிகாரங்களும் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். 13 ஆம் திருத்தசட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காணி அதிகாரம், காவற்துறை அதிகாரம் என்பன தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதற்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் சிங்கள மக்களின் பெரும்பான்மையான விருப்பத்தை பெற முடியும் என அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

http://www.hirunews.lk/tamil/222171/13வது-திருத்தத்திலுள்ள-அனைத்து-உரிமைகளும்-தமிழ்-மக்களுக்கு-வழங்க-வேண்டும்

 

 

Link to comment
Share on other sites

6 hours ago, ரஞ்சித் said:


தமிழருக்குத் தேவையான தீர்வு என்னவென்பதை தமிழர்களைத்தவிர வேறு எவராலும் சரியாகக் கூறிவிட முடியாது. அத்தீர்வு பிரியாத நாட்டிற்குள் (இப்போதைக்கு தனிநாடெல்லாம் சாத்தியப்படாது) சுயநிர்ணய உரிமையுடனோ அல்லது சமஷ்ட்டி அடிப்படையிலோ சுதந்திரமாக வாழ தமிழருக்கு வழிசமைத்துக் கொடுத்தாலே போதுமானது.

யார் வழி சமைத்துக் கொடுக்க வேண்டும் அல்லது கொடுக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? அவர்கள் சிங்கள பெரும்பான்மையே அன்றி வேறு எவருமல்லர்.

6 hours ago, ரஞ்சித் said:

இந்த லட்சணத்தில் சிங்களவரிடம் மட்டுமோ அல்லது சிங்களவர் உள்ளடக்கியோ சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை நடத்துவது எந்தவிதத்திலும் எமக்குச் சார்பாக முடியப்போவதில்லை.  இன்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் காட்டி எந்தத் தீர்விற்கும் எதிர்க்கட்சியைக் குற்றம்சாட்டிக் கொண்டு காலம் கடத்துவதுபோல, இந்த சர்வஜன வாக்கெடுப்பையும் சிங்களம் இன்னும் பல தசாப்த்தங்களுக்கு சாட்டாக வைத்து தீர்வொன்றைத் தருவதைத் தட்டிக் கழிக்கலாம்.

எப்படி அதை தவிர்க்கலாம் என்று நினைக்கிறீர்கள்? இந்த சிங்களவருக்கான சர்வஜன வாக்கெடுப்பு எந்த தீர்வை வழங்குவது பற்றியது. ஆகவே வாக்கெடுப்பில் அவர்கள் தர தயாராக இருக்கும் ஏதோ ஒன்று தெரிவு செய்யப்படும்.  அது தவிர வேறு எதுவும் தமிழருக்கு கிடைக்காது. அதை வேண்டாம் என்றால் தனிநாடே கேட்கலாம். கிடைக்காததை கேட்பதாக இருந்தால் எதையும் கேட்கலாம் தானே?

 

6 hours ago, ரஞ்சித் said:

தமிழருக்கு இருக்கும் பிரச்சினைகள் பற்றி சிங்களவர்களில் எத்தனை பேருக்கு நடுநிலமையான, சரியான விளக்கம் இருக்கிறதென்பதின் அடிப்படையிலேயே தமிழருக்குத் தரக்கூடிய தீர்வு என்னவென்பதை சிங்கள மக்கள் தீர்மானிப்பது தங்கியிருக்கிறது.

அந்த விளக்கத்தை கொடுப்பதற்கு ஒரு பெரிய சந்தர்ப்பம் இவ்வாறான  சிங்களவருக்கான சர்வஜன வாக்கெடுப்பு. சிங்களம் சரளமாக பேசும் சுமேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன் போன்றவர்கள் சிங்களவர்களுக்கு நாடு முழுவதும் போய் சிங்களத்தில் தமிழருக்கு என்ன பிரச்சினை, என்ன தேவை, அதனால் சிங்கவருக்கு என்ன நன்மை, என்ன பாதகம் என்பது பற்றி விளக்கி வாக்கு கேட்க இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. இந்த வாக்குகள் மட்டும் தான் தமிழருக்கு தீர்வு தர முடியும். ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, இந்தியா, சர்வதேச நீதி மன்றம் எல்லாம் இலங்கை அரசையும் இராணுவத்தையும் மீறி எதுவும் செய்ய முடியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.