Jump to content

சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி இனப்பிரச்சினைக்கு தீர்வு


Recommended Posts

தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை  ஒன்றை  நடத்தி, அவர்களின் பெரும்பான்மையுடன் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

முல்லைத் தீவில் நேற்று(12) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர்,  

“தமிழர்களின் நிலங்களை ஒரு அங்குலமேனும் கையகப்படுத்த நாம் ஒருபோம் நினைக்கவில்லை. அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை தமிழர்களுக்கு முழுமையாக வழங்க வேண்டும். காணி, பொலிஸ் அதிகாரங்கள் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டுமென்பதே எனது தனிப்பட்ட கருத்து.” என்று கூறியுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/சர்வஜன-வாக்கெடுப்பை-நடத்தி-இனப்பிரச்சினைக்கு-தீர்வு/175-236698

Link to comment
Share on other sites

கூட்டமைப்புக்கு ஒரு கோரிக்கை!

 

  • சில வெளிநாடுகளில் செய்வது போன்று இரண்டு கடசிகளின் பிரதான வேட்ப்பாளர்களையும் ஒரே மேடையில் அமர்த்துங்கள்.
  • நேரடி ஒளி பரப்பை செய்யுங்கள்.
  • இரண்டு கட்சிகளையும் ஒரு சில முக்கியமான கேள்விகளை கேளுங்கள்
  • மக்கள் சரியான முடிவை எடுப்பார்கள்.
Link to comment
Share on other sites

20 minutes ago, ampanai said:

தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை  ஒன்றை  நடத்தி, அவர்களின் பெரும்பான்மையுடன் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

இந்த விதி முறையானது ஐ.நா. சரத்துக்களுக்கு அமைவானது. இது பற்றி நாடு கடந்த தமிழீழ அரசு உட்பட முன்னர் கூறி இருந்தனர்.

இவ்வாறு கூறி சிங்களம் ஏமாற்றும். எனவே, இதை ஐ. நா. வுடன் சம்பந்தரின் சாணக்கியம் இணைத்துவிட்டால்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13 வது சரத்தின் ஊடாகவோ அல்லது ஒரு சமஸ்டி ரீதியிலானா தீர்வின் அடிப்படையில் இந்த சர்வசன வாக்கெடுப்பு சர்வதேசத்தின் அனுசரணையுடன் நடத்தப்பட்டால் நன்று .இதற்கு மேலாக நமது அனைத்து தமிழர் கட்சியும் ஒன்று இணைந்து 
இதை அரசியல் சாணக்கியதோடு அணுகவேண்டும் .இருந்தும் இதுகும் ஒரு சிங்கள இராசதந்திரத்தின் ஒரு ஏமாத்து வேலையோ என்றும் எண்ண தோன்றுகின்றது .

Link to comment
Share on other sites

வரலாற்றில் சந்தர்ப்பங்களை நழுவ விட்டவர்கள் நாங்கள்.

வரும் காலங்களில் சந்தர்ப்பங்களுக்கான சந்தர்ப்பங்கள் இல்லாமலே போய்விடும். 

எம்மில் சிலர் தமிழீழம் மட்டுமே ஒரே தீர்வு என  விரும்பலாம், அதற்கு தீர்வையும் நிராகரிப்பார்கள். அதில் நியாயமும் உள்ளது. வேறு எந்த தீர்வையும் ஏற்பவர்களை 'துரோகிகள்' எனவும் பார்க்கப்படுவார்கள்.

ஆனால், கள; பூகோள அரசியல் நிலைகளை பார்த்து கடலில் தத்தளிக்கும் மக்களுக்காக ஒரு தற்காலிக தீர்வாக இது  அமையலாம். 
  

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கான தீர்வை தமிழர்கள் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர சிங்களவர்கள் அல்ல.

பிரித்தானியாவில் ஸ்கொட்லன்ட் பிரியனுமா இல்லையா என்பதை இங்கிலாந்து மக்கள் தீர்மானிக்கவில்லை.. ஸ்கொட்லாந்து மக்கள் தான் வாக்குகளால் தீர்மானிக்கிறார்கள்.

அதேபோல்.. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் பிரியனுமா இல்லையா என்பதை பிரித்தானிய மக்கள் தான் தீர்மானிக்கிறார்களே தவிர ஐரோப்பியர்கள் அல்ல.

கனடாவில் கியுபெக் பிரியனுமா இல்லை என்பதை கியுபெக் மக்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.

அதேபோல் தென் சூடான் பிரிவினையின் போதும் கூட. 

கிழக்குத்திமோர் பிரிவினையில் கூட.. 

கொசவா பிரிவினை..

அண்மைய கிரிமியா பிரிவினை..

எல்லாவற்றிலும் அந்தப் பிராந்திய மக்கள் தான் தீர்மானிக்கிறார்களே தவிர.. மற்றவர்கள் அல்ல. 

அதென்ன சிங்கள அரசியல்வாதிகள் தான் இப்படி சனநாயக முரணாக சிந்திக்கின்றனர்..?! இது ஒன்றே போதும் சொறீலங்கா ஒரு சனநாயக நாடு அல்ல என்பதை இனங்காட்ட. 

Link to comment
Share on other sites

2 hours ago, nedukkalapoovan said:

பிரித்தானியாவில் ஸ்கொட்லன்ட் பிரியனுமா இல்லையா என்பதை இங்கிலாந்து மக்கள் தீர்மானிக்கவில்லை.. ஸ்கொட்லாந்து மக்கள் தான் வாக்குகளால் தீர்மானிக்கிறார்கள்.

அதேபோல்.. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் பிரியனுமா இல்லையா என்பதை பிரித்தானிய மக்கள் தான் தீர்மானிக்கிறார்களே தவிர ஐரோப்பியர்கள் அல்ல.

கனடாவில் கியுபெக் பிரியனுமா இல்லை என்பதை கியுபெக் மக்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.

அதேபோல் தென் சூடான் பிரிவினையின் போதும் கூட. 

கிழக்குத்திமோர் பிரிவினையில் கூட.. 

கொசவா பிரிவினை..

அண்மைய கிரிமியா பிரிவினை..

எல்லாவற்றிலும் அந்தப் பிராந்திய மக்கள் தான் தீர்மானிக்கிறார்களே தவிர.. மற்றவர்கள் அல்ல. 

அவர்களுக்கு உள்ள தன் மக்களை ஏமாற்றாத, சாணக்கிய அரசியல் தலைமைகள் எங்களிடம் இல்லாதது தான் காரணமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

அவர்களுக்கு உள்ள தன் மக்களை ஏமாற்றாத, சாணக்கிய அரசியல் தலைமைகள் எங்களிடம் இல்லாதது தான் காரணமா?

அதேதான் காரணம். வேறு ஒரு காரணமும் இல்லை.
எமது தமிழ் அரசியல்வாதிகள் எல்லாம் வியாபாரிகள்.
விபச்சாரம் செய்பவர்களுக்கு சமமானவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் சரியாக சொன்னார் அதில் முற்றிலும் எனக்கு உடன்பாடு உண்டு. சிங்கள அரசியல்வாதிகளுக்கு தெரியும் அவர்கள் விரும்புவதுபோன்று சிங்கள மக்களையும் உள்ளடக்கிய சர்வஜன வாக்கெடுப்பில் எந்த தமிழரின் தீர்வுத்திட்டமும் தோற்கடிக்கப்படும் எனவே மக்கள் தீர்ப்பே இறுதியான தீர்ப்பாகி காலாதி காலத்துக்கு நாங்களும் அடிமையாக காலத்தை ஓட்டணும். இதுபோன்ற நரிகளின் தந்திரத்தை மக்கள்முன் போட்டுடைக்க தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிசெய்வதில்லை.

தமிழரின் கட்சிகள் ஏட்டிக்கு போட்டியாக நிற்கும்போது இதுபோன்ற வார்த்தைகளை அள்ளிவீசி தமிழ் மக்களை குளப்பி வாக்குகளை சிதறடிப்பது இவர்களின் நோக்கம். தமிழர் கட்சிகளுக்கு ஏற்ற வேலைத்திட்டங்களை பிரித்து வழங்குவதற்கு ஒரு நடுநிலையான துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய மத்திய கொள்கை வகுப்பு குழு ஒன்று அத்தியாவசியம். தீர்வுத்திட்டங்களில் உள்ளடக்கப்படவேண்டிய முக்கிய கருப்பொருள்களை சம்பந்தன் சுமந்திரன் உட்பட எமது அரசியல்வாதிகள் சரியாக புரிந்துவைத்திருக்கிறார்களா என்பதில் நீண்டகாலமாக எனக்கு சந்தேகமுண்டு.

Link to comment
Share on other sites

10 hours ago, nedukkalapoovan said:

தமிழர்களுக்கான தீர்வை தமிழர்கள் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர சிங்களவர்கள் அல்ல.

பிரித்தானியாவில் ஸ்கொட்லன்ட் பிரியனுமா இல்லையா என்பதை இங்கிலாந்து மக்கள் தீர்மானிக்கவில்லை.. ஸ்கொட்லாந்து மக்கள் தான் வாக்குகளால் தீர்மானிக்கிறார்கள்.

அதேபோல்.. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் பிரியனுமா இல்லையா என்பதை பிரித்தானிய மக்கள் தான் தீர்மானிக்கிறார்களே தவிர ஐரோப்பியர்கள் அல்ல.

கனடாவில் கியுபெக் பிரியனுமா இல்லை என்பதை கியுபெக் மக்கள் தான் தீர்மானிக்கிறார்கள்.

அதேபோல் தென் சூடான் பிரிவினையின் போதும் கூட. 

கிழக்குத்திமோர் பிரிவினையில் கூட.. 

கொசவா பிரிவினை..

அண்மைய கிரிமியா பிரிவினை..

நீங்கள் சொல்வது தமிழர்கள்  பிரிந்து தனி நாடு உருவாக்குவதா இல்லையா என்று முடிவெடுப்பது பற்றி.

12 hours ago, ampanai said:

தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை  ஒன்றை  நடத்தி, அவர்களின் பெரும்பான்மையுடன் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். 

அவர் சொல்வது தமிழர்கள் பிரியாமல் இருப்பதை சிங்களவர்கள் விரும்புவதால் அதற்காக அவர்கள் தர விரும்பும் தீர்வு பற்றி. அதை அவர்கள் தானே சொல்ல வேண்டும்?

5 hours ago, vanangaamudi said:

நெடுக்கர் சரியாக சொன்னார் அதில் முற்றிலும் எனக்கு உடன்பாடு உண்டு. சிங்கள அரசியல்வாதிகளுக்கு தெரியும் அவர்கள் விரும்புவதுபோன்று சிங்கள மக்களையும் உள்ளடக்கிய சர்வஜன வாக்கெடுப்பில் 

அவர் “உள்ளடக்கிய” என்றோ அல்லது அப்படி கருத்து படவோ சொல்லவில்லை.

12 hours ago, ampanai said:

தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை  

இது வித்தியாசமான கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Jude said:

தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மக்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை  

தமிழருக்கு இருக்கும் பிரச்சினைகள் பற்றி சிங்களவர்களில் எத்தனை பேருக்கு நடுநிலமையான, சரியான விளக்கம் இருக்கிறதென்பதின் அடிப்படையிலேயே தமிழருக்குத் தரக்கூடிய தீர்வு என்னவென்பதை சிங்கள மக்கள் தீர்மானிப்பது தங்கியிருக்கிறது. இது கொலையாளியிடம் போய், உனக்கு என்ன தண்டனை தரவேண்டும் என்று நீ எதிர்பார்க்கிறாய் என்று கேட்பதற்குச் சமனானது. 

இதுவரையில் சாதாரண சிங்களவருக்கோ அல்லது சிங்களத் தலைவர்களுக்கோ தமிழர் பிரச்சினை தொடர்பில் தெளிவான சிந்தனை இருப்பதாக நான் நினைக்கவில்லை. பெரும்பான்மையினருக்கு தமிழர்கள் சிங்கள நாட்டைப் பிரித்துத் தனிநாடாக மாற்ற முயலும் பிரிவினைவாதிகள். இன்னும் சிலருக்கு, தமிழருக்குப் பிரச்சினையில்லை, இருந்ததெல்லாம் பயங்கரவாதப் பிரச்சினையே, அதையும் அழித்தாயிற்று, ஆகவே இனிப் பிரச்சினையென்று எதுவுமில்லை, ஆகவே இல்லாத பிரச்சினைக்கு ஏன் தீர்வு தரவேண்டும்? இன்னும் கொஞ்சப் பேருக்கு தமிழர்கள் வடக்குக் கிழக்கு மட்டுமல்லாமல், முழு இலங்கையையுமே கைப்பற்றி, இந்தியாவின் தமிழ்நாட்டுடன் சேர்த்துவிடப் போராடுகிறார்கள். வெகு சொற்பப் பேருக்குத்தான், தமிழர்கள் உண்மையாகவே அடக்கப்படுகிறார்கள், அவர்களுக்குப் பிரியாத நாட்டிற்குள் நியாயமான தீர்வொன்று தேவை என்கிற எண்ணம் இருக்கிறது.

இந்த லட்சணத்தில் சிங்களவரிடம் மட்டுமோ அல்லது சிங்களவர் உள்ளடக்கியோ சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை நடத்துவது எந்தவிதத்திலும் எமக்குச் சார்பாக முடியப்போவதில்லை.  இன்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் காட்டி எந்தத் தீர்விற்கும் எதிர்க்கட்சியைக் குற்றம்சாட்டிக் கொண்டு காலம் கடத்துவதுபோல, இந்த சர்வஜன வாக்கெடுப்பையும் சிங்களம் இன்னும் பல தசாப்த்தங்களுக்கு சாட்டாக வைத்து தீர்வொன்றைத் தருவதைத் தட்டிக் கழிக்கலாம்.


தமிழருக்குத் தேவையான தீர்வு என்னவென்பதை தமிழர்களைத்தவிர வேறு எவராலும் சரியாகக் கூறிவிட முடியாது. அத்தீர்வு பிரியாத நாட்டிற்குள் (இப்போதைக்கு தனிநாடெல்லாம் சாத்தியப்படாது) சுயநிர்ணய உரிமையுடனோ அல்லது சமஷ்ட்டி அடிப்படையிலோ சுதந்திரமாக வாழ தமிழருக்கு வழிசமைத்துக் கொடுத்தாலே போதுமானது.

Link to comment
Share on other sites

"13வது திருத்தத்திலுள்ள அனைத்து உரிமைகளும் தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும்"

அரசியலமைப்பின் 13 வது திருத்தச் சட்டத்தில் உள்ள சகல அதிகாரங்களும் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்று பெற்று கொடுக்கப்பட வேண்டும். அதற்கமைய 13வது திருத்தச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சகல அதிகாரங்களும் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். 13 ஆம் திருத்தசட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காணி அதிகாரம், காவற்துறை அதிகாரம் என்பன தமிழ் மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். இதற்கான கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் சிங்கள மக்களின் பெரும்பான்மையான விருப்பத்தை பெற முடியும் என அமைச்சர் நவீன் திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

http://www.hirunews.lk/tamil/222171/13வது-திருத்தத்திலுள்ள-அனைத்து-உரிமைகளும்-தமிழ்-மக்களுக்கு-வழங்க-வேண்டும்

 

 

Link to comment
Share on other sites

6 hours ago, ரஞ்சித் said:


தமிழருக்குத் தேவையான தீர்வு என்னவென்பதை தமிழர்களைத்தவிர வேறு எவராலும் சரியாகக் கூறிவிட முடியாது. அத்தீர்வு பிரியாத நாட்டிற்குள் (இப்போதைக்கு தனிநாடெல்லாம் சாத்தியப்படாது) சுயநிர்ணய உரிமையுடனோ அல்லது சமஷ்ட்டி அடிப்படையிலோ சுதந்திரமாக வாழ தமிழருக்கு வழிசமைத்துக் கொடுத்தாலே போதுமானது.

யார் வழி சமைத்துக் கொடுக்க வேண்டும் அல்லது கொடுக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? அவர்கள் சிங்கள பெரும்பான்மையே அன்றி வேறு எவருமல்லர்.

6 hours ago, ரஞ்சித் said:

இந்த லட்சணத்தில் சிங்களவரிடம் மட்டுமோ அல்லது சிங்களவர் உள்ளடக்கியோ சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை நடத்துவது எந்தவிதத்திலும் எமக்குச் சார்பாக முடியப்போவதில்லை.  இன்று பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் காட்டி எந்தத் தீர்விற்கும் எதிர்க்கட்சியைக் குற்றம்சாட்டிக் கொண்டு காலம் கடத்துவதுபோல, இந்த சர்வஜன வாக்கெடுப்பையும் சிங்களம் இன்னும் பல தசாப்த்தங்களுக்கு சாட்டாக வைத்து தீர்வொன்றைத் தருவதைத் தட்டிக் கழிக்கலாம்.

எப்படி அதை தவிர்க்கலாம் என்று நினைக்கிறீர்கள்? இந்த சிங்களவருக்கான சர்வஜன வாக்கெடுப்பு எந்த தீர்வை வழங்குவது பற்றியது. ஆகவே வாக்கெடுப்பில் அவர்கள் தர தயாராக இருக்கும் ஏதோ ஒன்று தெரிவு செய்யப்படும்.  அது தவிர வேறு எதுவும் தமிழருக்கு கிடைக்காது. அதை வேண்டாம் என்றால் தனிநாடே கேட்கலாம். கிடைக்காததை கேட்பதாக இருந்தால் எதையும் கேட்கலாம் தானே?

 

6 hours ago, ரஞ்சித் said:

தமிழருக்கு இருக்கும் பிரச்சினைகள் பற்றி சிங்களவர்களில் எத்தனை பேருக்கு நடுநிலமையான, சரியான விளக்கம் இருக்கிறதென்பதின் அடிப்படையிலேயே தமிழருக்குத் தரக்கூடிய தீர்வு என்னவென்பதை சிங்கள மக்கள் தீர்மானிப்பது தங்கியிருக்கிறது.

அந்த விளக்கத்தை கொடுப்பதற்கு ஒரு பெரிய சந்தர்ப்பம் இவ்வாறான  சிங்களவருக்கான சர்வஜன வாக்கெடுப்பு. சிங்களம் சரளமாக பேசும் சுமேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், விக்னேஸ்வரன் போன்றவர்கள் சிங்களவர்களுக்கு நாடு முழுவதும் போய் சிங்களத்தில் தமிழருக்கு என்ன பிரச்சினை, என்ன தேவை, அதனால் சிங்கவருக்கு என்ன நன்மை, என்ன பாதகம் என்பது பற்றி விளக்கி வாக்கு கேட்க இந்த சந்தர்ப்பம் வழங்கப்படுகிறது. இந்த வாக்குகள் மட்டும் தான் தமிழருக்கு தீர்வு தர முடியும். ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா, இந்தியா, சர்வதேச நீதி மன்றம் எல்லாம் இலங்கை அரசையும் இராணுவத்தையும் மீறி எதுவும் செய்ய முடியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.