Jump to content

டெல்லியில் சம்பந்தன் – மருத்துவ சிகிச்சைக்காகவா? ஜனாதிபதியை தீர்மானிக்கவா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் டெல்லியில் முகாமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் எதிர் வரும் நவம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார். கோத்தாபய ராஜபக்ச வுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் கோத்தாபய ராஜபக்சவை சந்திக்க இந்திய பிரதமர் மோடி மறுத்து உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

இதேவேளை கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியானால் நாடு அபிவிருத்தி அடையாது நாசமாகிவிடும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கா பண்டாரநாயக்கா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ராஜபக்ச குடும்பம் ஒரு கொலைகார கும்பல் அவர்களை தான் ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை என்றும் சந்திரிகா கூறியுள்ளார்.

கோத்தாபய ராஜபக்சவை எதிர்த்து ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாச களமிறங்கக் கூடும் என கூறப்படுகிறது. நவம்பரில் தானே தேசத்தின் தலைவராவேன் என சஜித் பிரேமதாச கூறி வருகிறார்.

சிங்கள கட்சிகள் ஜனாதிபதி தேர்தலில் தீவிரமாக இருக்கும் நிலையில் தமிழ் அரசியல் கட்சிகள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அனைத்து அரசியல் கட்சிகளும் அதிகாரப்பூர்வமாக வேட்பாளர்களை அறிவித்த பின்னர் நிலைப்பாட்டை அறிவிக்கலாம் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருந்து வருகிறது.

பொதுவாக இலங்கை அதிபர் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது குறித்து இந்தியாவுடன் ஆலோசனை நடத்திய பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுப்பது வழக்கம். அதனால் இம்முறையும் இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் டெல்லியில் முகாமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. ஆனால் மருத்துவ சிகிச்சைக்காக மட்டுமே இரா. சம்பந்தன் டெல்லி சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

http://globaltamilnews.net/2019/128751/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DX18IbvXkAE71si.jpg

ஒம்.. ஓனர கேட்டுதான் முடிவு செய்வினம்..👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவை கொழும்பில் வைத்தே அதிர விட்டவர்! இந்தியாவை அதிரவிட டெல்லி போயிருக்கிறார் போல!

Link to comment
Share on other sites

On 8/13/2019 at 8:15 PM, பிழம்பு said:

ராஜபக்ச குடும்பம் ஒரு கொலைகார கும்பல் அவர்களை தான் ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை என்றும் சந்திரிகா கூறியுள்ளார். 

ராஜபக்ச குடும்பம் ஒரு கொலைகாரக் கும்பல் என்று கூறி அவர்களின் மிலேச்ச பயங்கரவாதத்தை, போர்க்குற்றங்களை, கொள்ளைகளை மறைத்துவிட முடியாது.  

இந்த நூற்றாண்டின் மிக மோசமான மிலேச்ச பயங்கரவாதியான கோட்டாபய ராஜபக்சவை முன்னனிலைப்படுத்தி சிங்கள-பௌத்த இனமதவெறியர்களின் வாக்குகளை வென்று ராஜபக்ச குடும்ப பயங்கரவாதக் கும்பல் தாங்கள் ஏற்கனவே கொள்ளையடித்த சொத்துக்களை காப்பற்றுவது அவர்களின் முதலாவது குறிக்கோள்.

அடுத்தாக, இலங்கை மண்ணின் பூர்வீக குடிகளாக தமிழரை முடிந்தவரை அழிப்பது ராஜபக்ச குடும்ப பயங்கரவாதக் கும்பலின் மட்டுமல்ல சிங்கள-பௌத்த இனமதவெறியர்களினதும் இரண்டாவது குறிக்கோள்.

மூன்றாவதாக, இலங்கையில் வந்தேறுகுடிகளான சிங்கள-பௌத்த காடையர்கள் பெரும்பான்மை சமூகமாக மாறிய அதே வழியில், இஸ்லாமிய மதவெறியர்களும் தங்கள் தொகையை பெருக்கிவருவது இன்னொரு 60 வருடங்களில் இலங்கையின் பெரும்பான்மை சமூகமாக இஸ்லாமிய மதவெறியர்கள் மாறிவிடுவதை பலவழிகளில் தடுப்பது ராஜபக்ச குடும்ப பயங்கரவாதக் கும்பலின் மட்டுமல்ல சிங்கள-பௌத்த இனமதவெறியர்களினதும் மூன்றாவது குறிக்கோள்.

 

Link to comment
Share on other sites

On 8/13/2019 at 8:15 PM, பிழம்பு said:

கோத்தாபய ராஜபக்ச வுக்கு அமெரிக்கா ஆதரவு வழங்குவதாக கூறப்படுகிறது.

இந்த தவறான தகவல் திட்டமிட்ட முறையில் இந்த நூற்றாண்டின் மிக மோசமான மிலேச்ச பயங்கரவாதியான கோட்டாபய ராஜபக்சவின் கும்பலால் பரப்பப்படுகிறது. மிலேச்ச பயங்கரவாதி கோட்டாபய ராஜபக்சவின் பின்னணியில் பெருமளவு ஆதரவை வழங்குவது உண்மையில் சீனாவாகும்!

பயங்கரவாதி கோட்டாபய ராஜபக்ச கொள்ளையடித்த சொத்துக்கள் பெருமளவில் சீனாவின் ஆதரவுடன் பெரும் முதலீடுகளாக மாற்றப்பட்டு வருவதை பலர் அறிந்திருக்கவில்லை. இதனாலும், ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களின் எதிர்ப்பை குறைக்கவும் இந்த தவறான தகவல் திட்டமிட்ட முறையில் இந்த நூற்றாண்டின் மிக மோசமான மிலேச்ச பயங்கரவாதியான கோட்டாபய ராஜபக்சவின் கும்பலால் பரப்பப்படுகிறது.

 

 

On 8/13/2019 at 8:15 PM, பிழம்பு said:

இந்தியாவுடன் ஆலோசனை நடத்திய பின்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுப்பது வழக்கம். அதனால் இம்முறையும் இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் டெல்லியில் முகாமிட்டுள்ளார் என கூறப்படுகிறது.

தமிழின அழிப்பில் முக்கிய பங்காளிகளாக இருந்துவரும் வட ஹிந்திய பயங்கரவாதிகளின் கைக்கூலிகளாக சம்மந்தன், மாவை தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சித்தார்த்தன் செல்வம் அடைக்கலநாதன் போன்ற கைக்கூலி கொலைகாரக் கும்பல்களும் இயங்கிவருவது புதிய தகவல் இல்லை.

எனவே சம்மந்தன் டெல்கிக்கு வட ஹிந்திய பயங்கரவாதிகளின் அழைப்பில் தான் சென்றிருக்கிறார்.

Link to comment
Share on other sites

On 8/15/2019 at 8:04 AM, போல் said:

தமிழின அழிப்பில் முக்கிய பங்காளிகளாக இருந்துவரும் வட ஹிந்திய பயங்கரவாதிகளின் கைக்கூலிகளாக சம்மந்தன், மாவை தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சித்தார்த்தன் செல்வம் அடைக்கலநாதன் போன்ற கைக்கூலி கொலைகாரக் கும்பல்களும் இயங்கிவருவது புதிய தகவல் இல்லை.

எனவே சம்மந்தன் டெல்கிக்கு வட ஹிந்திய பயங்கரவாதிகளின் அழைப்பில் தான் சென்றிருக்கிறார்.

முதுகெலும்பற்ற ஜீவன்கள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏.............................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.