Jump to content

பிரித்தானியாவின் புதிய சிக்கல் – போரிஸ் ஜோன்சன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவின் புதிய சிக்கல் – போரிஸ் ஜோன்சன்

August 8, 2019
25716-696x464.jpg

159 . Views .

பிரக்சிட் நெருக்கடியினால் முன்னால் பிரதமர்  தெரேசா மே பதவி விலகியதைத் தொடர்ந்து போரிஸ் ஜோன்சன் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இப்சோஸ் மோரி (Ipsos Mori) என்னும் நிறுவனம், இவ்னிங் ஸ்டாண்டர்ட் (Evening Standard) பத்திரிகைக்காக நடத்திய கருத்துக் கணிப்பின்படி கன்சர்வேடிவ் கட்சிக்கான ஆதரவு தற்பொழுது பத்துப் புள்ளிகளால் அதிகரித்துள்ளது எனக் கூறப்படுகிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பினை விட முன்னணியில் அவர் நிற்பதாக அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. பிரக்சிட்டினால் ஏற்பட்ட நெருக்கடியின் காரணமாகவே அடுத்த பிரதமராக வரக்கூடிய சாத்தியம் அதிகமாயிருந்த ஜெரமி கோர்பின் பின்னுக்கு தள்ளப்பட்டு வலதுசாரி கட்சித் தலைவர் போரிஸ் ஜோன்சன் தற்பொழுது முன்னணிக்கு வந்துள்ளார். இதனால் பிரக்சிட் தொடர்பாக புதிய பிரதமர் எடுக்கும் முடிவுக்கு மக்கள் ஆதரவு உண்டு என்று அர்த்தமில்லை. ஐரோப்பிய யூனியனுடன் எந்த வித உடன்படிக்கையும் மேற்கொள்ளாமல் முற்றாக பிரிதல் (No Deal Brexit) என்ற போரிஸ் ஜோன்சனின் முடிவுக்கு இன்றும் பல மக்களும், அமைப்புகளும் தமது எதிர்ப்பை வெளியிட்ட வண்ணமிருக்கின்றன. 

போரிஸ் ஜோன்சன் கொண்டு வரவிருக்கும் பிரக்சிட்டானது முதாலாளிகாளுக்கான பிரக்சிட்டே தவிர மக்களுக்கான பிரக்சிட் அல்ல. இதன் மூலம் பெரும் வர்த்தக நிறுவனங்களும், பெரும் முதலாளிகளும், கன்சர்வேடிவ் கட்சிக்கு நிதி அளிக்கும் மில்லியனர்களுமே லாபம் அடைவர்களே தவிர சாதாரண மக்கள் மிகுந்த நெருக்கடிக்குள்ளாவார்கள். ஆனால் போரிஸ் ஜோன்சனோ மக்களைப் பற்றிக் கவலை கொண்டு இயங்குபவர் அல்ல. தாம் பிரதிநிதித்துவம் செய்யும் பெரும் வியாபாரிகளுக்கு லாபம் பெருக்குவதும் ஜெரமி கோபின் ஆட்சியினைக் கைப்பற்றுவதை தடுப்பதும் அவரது முக்கிய நோக்கங்கள். ஐரோப்பிய யூனியனுடன் உடன்படிக்கை எதனையும் மேற்கொள்ளாமல் பிரக்சிட்டினை கொண்டுவர முயற்சிப்பதால் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார் போரிஸ். அத்தகைய பிரக்சிட்டினால் மருந்துப்பொருட்கள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை அதிகரிக்கும் எனவும், வைத்தியசாலைகளில் மிகுந்த நெருக்கடிகள் ஏற்படும் எனவும், வைத்தியருக்காக காத்திருக்கவேண்டிய நாட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும், உணவு வங்கியில் உணவுக்கு காத்திருக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகாரிக்கும் எனவும் சொல்லப்படுகிறது. மிகுந்த பொருளாதார நெருக்கடியை பிரித்தானிய சந்திக்க வேண்டி வரலாம் எனக் கருதப்படுகிறது. 

பிரித்தானியாவின் ட்ரம்ப் என அழைக்கபடும் போரிஸ் ஜோன்சன் ஐரோப்பிய யூனியனிலிருந்து, உடன்படிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் பிரிந்த பின்பு அமெரிக்காவுடன் இறுக்கமான வர்த்தக உடன்பாடிக்கைகளை மேற்கொள்ள விருக்கின்றார் என சொல்லப்படுகிறது. அதன் பிரகாரம் ஆஸ்துமா, நீரிழிவு, புற்றுநோய் போன்ற நோய்களின் மருந்துகளின் விலையானது ஏழு மடங்கு வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. நீரிழிவு நோய்க்கான ஊசியின் செலவு 14.08 இலிருந்து 105.60 பவுண்ஸ் ஆகவும், புற்றுநோய் ஊசிக்கான செலவு 686.36 இலிருந்து 2333.62 பவுண்ஸ் ஆகவும், ஆஸ்துமா நோய்க்கு ஒரு தரம் கொடுக்க வேண்டிய மருந்தின் செலவு 33.50 இலிருந்து 105.60 பவுண்ஸ் ஆகவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் மருந்து தயாரிக்கும் நிறுவனங்களே அதிக லாபத்தை சம்பாதிக்கப் போகின்றன. அமெரிக்க மருந்து நிறுவனங்களின் நலனுக்காக பிரித்தானிய மக்களின் நலன்கள் தாரை வார்த்துக் கொடுக்கப்படுகின்றன. 

பிரக்சிட் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்பதே ஜெரமி கோர்பின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு ஆகும். ஆனால் போரிஸ் ஜோன்சன் போல் கடுமையான நிலைப்பாட்டை – அதாவது ஐரோப்பிய யூனியனுடன் எந்தவித உடன்படிக்கையையும் மேற்கொள்ளாமல் பிரிதல் என்ற நிலைபாட்டை (Hard Brexit)  எடுக்க முடியாது என்பது கோபினின் நிலைப்பாடு. அதனாலேதான் ஜெரமி கோர்பின் மென்மையான போக்கை (Soft Brexit) கடைப்பிடிப்பவாராகக் காணப்படுகின்றார். 

ஐரோப்பிய ஒன்றியத்தை கடுமையாக எதிர்க்கும் தொழிற்சங்கமான RMT உட்பட பல சோஷலிச மற்றும் மக்கள் சார்ந்து இயங்கும் அமைப்புகள் போரிஸ் ஜோன்சன் கொண்டுவர இருக்கும் பிரக்சிட்டை எதிர்த்து வருகின்றன. தொழிலாளர் பிரக்சிட் அல்லது மக்கள் பிரக்சிட் என இவர்கள் பேசுவதற்கும் போரிஸ் பேசும் லாபத்தை முதன்மைப்படுத்தும் பிரக்சிட்டுக்கும் ஏராளாமான மாறுபாடுகள் உண்டு. போரிஸ் ஜோன்சன் மக்கள் நலனுக்கு நேர் எதிர் திசையில் நின்று இயங்கி வருகிறார். இது பற்றிய புரிதல் இல்லாமல் சில தமிழ் மக்களும் அவர் சார்ந்த அமைப்புகளும் போரிஸ் ஜோன்சனுக்கு ஆதரவு அளிக்ககின்றனர். பிரித்தானியாவில் வாழ்ந்தாலும் பிரித்தானிய அரசியல் பற்றிய அடிப்படை ஆறிவு அற்றவர்களாகவே இன்னும் சில தமிழர்கள் இங்கு வாழ்கின்றார்கள். 

பாராளுமன்ற கணித முறைமையினால் பிரக்சிட் நெருக்கடிக்கு தீர்வு கிடைக்காது. கடந்த வருடம் இலங்கையில் பாராளுமன்ற நெருக்கடி ஏற்பட்பட்டபோதும் நாம் இதனையே வலியுறுத்தி வந்தோம். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் தம் வர்த்தக நண்பர்களுக்கு சார்பான அல்லது தமது கட்சிக்கு நிதி அளிக்கும் நிறுவனங்களுக்கு சார்பான பிரக்சிட் நடவடிக்கைகளை மேற்கொள்வார்களே தவிர மக்கள் நலன் சார்ந்த பிரக்சிட்டினை நடைமுறைப்படுத்த மாட்டார்கள். ஆகவேதான் பாராளுமன்ற கணித முறைமை பிரக்சிட் நெருக்கடிக்கு சரியான தீர்வினைத் தராது எனக் கூறப்படுகிறது.

பாராளுமன்றத்தினால் தற்போதைய பிரதமர் போரிஸ் ஜோன்சன் முடக்கப்பட்டால் பிரக்சிட் நெருக்கடியினை சமாளிக்க இன்னுமொரு தேர்தலுக்கு அழைப்பு விடலாம். அவ்வாறு இன்னுமொரு தேர்தல் இடம்பெறுமானால் அது பிரித்தானிய வரலாற்றில் இடம்பெறும் மிக முக்கியமான தேர்தலாகக் காணப்படும். ஏனெனில் அத்தேர்தலின் போது கன்சர்வேட்டிவ் கட்சி, தொழிலாளர் கட்சிகளுக்கிடையே கடுமையான பிளவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. கன்சர்வேட்டிவ் கட்சியில் உள்ளவர்களில் சிலர் வெளியேறி லிபரல் கட்சியுடன் இணைந்து புதிய கட்சி ஒன்றினை உருவாக்குவது பற்றியும் பேசப்படுகிறது. இருப்பினும் மக்கள் மத்தியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மேல் இருக்கும் வெறுப்பு மற்றும் பொருளாதார நெருக்கடி என்பனவற்றை போரிஸ் தனது பிரச்சாரத்துக்கு பாவிக்கும் வாய்ப்புண்டு. இதனால் அவர் அடுத்த தேர்தலில் வெல்லும் வாய்ப்பு உண்டு. 

அதனை முறியடிக்க ஜெரமி கோர்பின் சரியான நிலைப்பாடு ஒன்றினை எடுத்து பிரச்சாரம் செய்ய வேண்டும். இது ஜெரமிக் கோர்பினுக்குக் கடைசித் தேர்தலாக அமையலாம். அதில் அவர் தோற்கும் பட்சத்தில் அவரின் ஆரசியல் வாழ்வு அத்துடன் மடிந்து போய்விடக் கூடிய சாத்தியமும் உண்டு. பிரக்சிட், கோர்பின் மற்றும் இங்கிலாந்தின் முக்கிய கட்சிகளின் எதிர்காலம் ஆகியவற்றை தீர்மானிக்கும் முக்கிய தேர்தலாக இருக்கும் அடுத்த தேர்தல்.

RMT போன்ற தொழிற் சங்கங்கள் கோர்பினுக்கு தமது ஆதரவை வழங்குகின்றன, கோர்பினுக்கு அவரது கட்சிக்கு வெளியில் நிறைய ஆதரவு உண்டு. ஆகவே  பாராளுமன்றம் மற்றும் தொழிலாளர் கட்சியின் வலதுசாரிகளின் நெருக்கடிக்கு விட்டுக் கொடுக்காமல் அவர் இயங்க வேண்டும். கடந்த தேர்தலில் முன் வைத்ததை விட சிறந்த முற்போக்கு – சோஷலிச கொள்கையுடன் அவர் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்குவாராயின் கோர்பின் வெல்வதற்கு சாத்தியமுண்டு. கோர்பின் வெற்றிதான் மக்கள் சார் பிரக்சிட்டுக்கான வாய்ப்பை ஏற்படுத்தும்.

சட்டவிரோதமாக தங்கியுள்ள 500,000 பேருக்கு குடியுரிமை வழங்குவதற்கு ஆதரவு அளித்துள்ளார் போரிஸ் ஜோன்சன். இதனால் சில தமிழ் மக்கள் அவரை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகின்றனர். பிரித்தானியா ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிந்த பின்னர் ஏற்படப் போகும் தொழிலாளர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யவே இத்தகைய ஒரு முடிவை எடுத்துள்ளாரே தவிர குடியேற்றவாசிகள்  மீதான அக்கறையினால் அல்ல. இது தெரியாத சில தமிழர்கள் எமக்காகவே இவ் முடிவை பிரித்தானிய பிரதமர் எடுத்துள்ளார் என பினாத்தித் திரிகின்றனர். முதலாளித்துவத்தின் பிரதிநிதியாக தெளிவாக சிந்தித்து செயற்படுகின்றார் போரிஸ் ஜோன்சன் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இங்கிலாந்தில் வாழும் அனைத்து ஐரோப்பிய தொழிலாளர்களும் தாங்கும் உரிமை – அகதிகளுக்கான உரிமைகள் – மற்றும் தடுப்பு முகாம்களை மூடுதல் – போன்ற பல்வேறு கொள்கைகளை கோர்பின் கடந்த தேர்தலிலேயே முன் வைத்ததை இவர்கள் கவனிக்கவில்லை.

பிரக்சிட் தொடர்பான எந்தவிதக் கலந்துரையாடல்களிலும் விவாதங்களிலும் ஈடுபடாத தமிழ் அமைப்புகள் பல எழுந்தமானமாக கருத்துக்களை முன்வைத்து வருகின்றன.  பிரக்சிட்டினை ஏன் ஆதரிக்க வேண்டும் அல்லது ஏன் எதிர்க்க வேண்டும், அதன் பின்னணி என்ன  எனத் தெரியாத சில தமிழர்களும் அவர் சார்ந்த அமைப்புகளும் கண் மூடித்தனமாக போரிஸ் ஜோன்சனினை ஆதரிக்கின்றனர். புதிய பிரதமரால் பிரக்சிட் நெருக்கடிக்கு தீர்வு வரும் என நம்புகின்றனர். தாம் ஏன் ஆதரவு வழங்குகிறோம், தாம் எந்தப் பக்கம் நிற்கிறோம் என்பது கூட இத் தமிழர்களுக்குத் தெரிவதில்லை. ஆனால் இவர்கள் மிக சிறுபான்மையர். பெரும்பான்மை தமிழ் இளையோர் மற்றும் தொழிலாளர்கள் கோர்பினுக்கு ஆதரவு என்பதை கடந்த தேர்தலை கூர்மையாக கவனித்தோருக்குத் தெரியும்.

பிரித்தானியாவிலுள்ள தமிழ் சொலிடாரிட்டி அமைப்பானது பிரெக்சிட் தொடர்பாக பல்வேறு கலந்துரையாடல்கள், விவாதங்களை மேற்கொண்டது. இதில் கூட கலந்து கொள்ள முடியாத ஒரு சிலர்தான் வலைத்தளங்களில் சுழன்றடித்து கன்சவேடிவ் கட்சிக்கு ஆதரவு செய்து வருகின்றனர். பெரும்பாலான பிரித்தானிய தமிழ் மக்கள் பிரித்தானிய அரசியலில் அல்லது அது தொடர்பான கலந்துரையாடல்களிலோ அல்லது விவாதங்களிலோ ஈடுபடுவதில்லை. புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கூட அவ்வாறான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதில்லை. இவ்வாறான நிலையில் அமைப்புகள், பிரித்தானிய அரசியல் தொடர்பான விடயங்களில் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை எடுக்கும் என்பது சந்தேகத்திற்குரியதே. அதனால்தான் பெரும்பாலான தமிழ் அமைப்புகள் பிரக்சிட் தொடர்பான தமது நிலைபாட்டை வெளிப்படையாக அறிவிக்கவில்லை, இது அவர்களின் வங்குரோத்து அரசியலையே எடுத்துக் காட்டுகின்றது. தமிழீழத்தை நோக்கிப் பயணிப்போம் என வெற்றுச் சவால்கள் விடுவது மட்டுமே இவ்வைகையான அமைப்புகளின் தலையாய பணியாகும். இது போன்ற அரசியல் தெளிவற்ற அமைப்புகளின் பின்னால் செல்லாமல் மக்கள் நலன் சார்ந்து இயங்கும் பிரித்தானிய அமைப்புகளுடன் இணைந்து இயங்க மக்கள் முன் வர வேண்டும்

சு. கஜமுகன்

 

http://ethir.org/பிரித்தானியாவின்-புதிய-ச/

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.