Jump to content

சஜித் பிரேமதாசவைப் பொது வேட்பாளராக அறிவிக்க மைத்திரி திட்டம்!


Recommended Posts

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் நகர்வுகள் - அமெரிக்காவின் இரட்டை முகம்

சஜித் பிரேமதாசவைப் பொது வேட்பாளராக அறிவிக்க மைத்திரி திட்டம்!

ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்தால் அதற்கும் ஆதரவு வழங்க வேண்டுமென மைத்திரியிடம் சஜித் வேண்டுதல்
 
 
main photo
 
இலங்கையில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை நியமிக்க வேண்டுமென கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலரும் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மாத்தறை, அம்பாந்தோட்டை, பதுளை உள்ளிட்ட பல பிரதேசங்களில் கட்சி உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகின்றனர். சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதியாக்குவதே தமது நோக்கமென அமைச்சர் ஹரின் பொர்ணான்டோ கூறியுள்ளார். பதுளைப் பிரதேசத்தில் நேற்றுத் திங்கட்கிழமை சஜித் பிரேமதாசவுக்கு மாபெரும் வரவேற்பு நிகழ்வு ஒன்றும் இடம்பெற்றது. 
 
சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டுமென கையெழுத்துப் போராட்டங்களும் ஆரம்பிக்கப்படுமென கட்சியின் பதுளைத் தொகுதி அமைப்பாளர் கூறியுள்ளார்.

 

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அழுத்தங்களினால் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கான ஆதரவை வழங்குவது குறித்து அமெரிக்கத் தூதரகம் தற்போது தீவிரமாக ஆலோசித்து வருகின்றது. அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு வேண்டப்பட்டவர் என்ற அடிப்படையில், அமெரிக்கத் தூதரகம் கடந்த சில நாட்களாக மங்கள சமரவீரவுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளது

 

சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்குமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அனுப்பி வருகின்றனர்.

சஜித் பிரேமதாசவே ஜனாதிபதி வேட்பாளரென அமைச்சர் மங்கள சமரவீர கொழும்பில் செய்தியாளர்களிடம் ஏற்கனவே கூறியுள்ளார். இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய குழு விரைவில் முடிவெடுக்குமென கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகராகவுள்ள கட்சியின் மூத்த உறுப்பினர் கரு ஜயசூரியவே ஜனாதிபதி வேட்பாளரென ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே கூறியிருந்தார். ஆனால் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான உறுப்பினர்கள் அதனை ஏற்கவில்லை. பகிரங்கமாகவே எதிர்க்க ஆரம்பித்தனர்.

அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியில் தனக்கு ஆதரவான உறுப்பினர்களோடு சஜித் பிரேமதாச வெளியே வந்தால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைத்துப் பொது வேட்பாளராக சஜித் பிரேமதாசவை அறிவிக்க விருப்பம் கொண்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன.

இது தொடர்பாக மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே சஜித் பிரேமதாசவுடன் பேசியிருந்தார். தற்போது ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளினால் சஜித் பிரேமதாசவுடன் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ள மைத்திரிபால சிறிசேன, பொது வேட்பாளராக வருமாறு சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்க வேண்டுமெனக் கோரி ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன கட்சி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய பேச்சுக்கள் வெற்றியளிக்கவில்லை. இதனால் சஜித் பிரேமதாசவை பொது வேட்பாளராக நியமிக்கும் முயற்சியில் மைத்திரிபால சிறிசேன தீவிரமாகச் செயற்படுவதாகக் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

 

இந்தோ - பசுபிக் பிராந்திய நலன் உள்ளிட்ட பூகோள அரசியல்த் தேவைக்காக இலங்கைத் தீவில் நிரந்தரமாகவே காலூன்றத் துடிக்கும் அமெரிக்கா, வடக்குக் - கிழக்குத் தாயகக் கடற்பிரதேசங்களை மையமாகக் கொண்டே சிங்கள ஆட்சியாளர்களுடன் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. இதனாலேயே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு விடயத்தை அமெரிக்கா கையிலெடுத்துள்ளது

 

கோட்டாபய ராஜபக்சவை ஆதரிக்க விருப்பமில்லாத குமார் வெல்கம போன்ற உறுப்பினர்கள் பலர் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனக் கட்சியில் உள்ளனர். அவர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பாக மைத்திரிபால சிறிசேனவோடு பேசியதாகக் கூறப்படுகின்றது.

ஆனாலும் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்தால் அதனை மைத்திரிபால சிறிசேன ஆதரிப்பாரா இல்லையா என்பது குறித்து முடிவுகள் இல்லை.

எனினும் ஐக்கிய தேசியக் கட்சி தன்னை வேட்பாளராக அறிவித்தால் அதனை ஏற்று ஆதரவு வழங்க வேண்டுமென சஜித் பிரேமதாச மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுள்ளாரென்றும் மற்றுமொரு உயர்மட்டத் தகவல் கூறுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய புதிய அரசியல் கூட்டணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இணைய முடியும் எனவும் சஜித் ஆலோசனை வழங்கியுள்ளார்.

சஜித் பிரேமதாச வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் அமெரிக்காவின் ஆதரவைப் பெற முடியுமென அமைச்சர் மங்கள சமரவீர நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவோடும் சென்ற ஞாயிற்றுக்கிழமை மங்கள சமரவீர பேசியுள்ளார். மைத்திரிபால சிறிசேனவுடனும் மங்கள சமரவீர இது பற்றி உரையாடியுமுள்ளதாகக் கட்சித் தகவல்கள் கூறுகின்றன.

கோட்டாபய ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்த வேண்டுமெனக் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாகவே கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முயற்சி எடுத்திருந்தது. ஆனால் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பாக அமெரிக்கத் தூதரகம் எந்தவொரு சந்திப்பையும் இதுவரை நடத்தவில்லை.

எனினும் கோட்டாபய ராஜபக்சவுக்கு உள்ளக எதிர்ப்புகள் கடுமையாக நிலவியதால் கரு ஜயசூரியவை வேட்பாளராக நிறுத்தும் விடயத்தில் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்கவுடன் அமெரிக்கத் தூதுவர் பேசியிருந்தார்.

 

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் நீடிக்குமானால் சில சமயங்களில் ரணில் விக்கிரமசிங்கவையே வேட்பாளராக அறிவிக்கும் நிலையும் ஏற்படலாம். இது குறித்தும் மங்கள சமரவீர சஜித் பிரேமதாசவுடன் பேசியதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன

 

கண்டி பௌத்த மகாநாயக்கத் தேரர்களின் அரசியல்ச் செல்வாக்கு இலங்கையில் அதிகளவு உள்ளதை உணர்ந்து கொண்ட அமெரிக்கா, பௌத்த தேரர்களின் விருப்பத்திற்குரிய ஒருவரை வேட்பாளராக நிறுத்தும் முயற்சியில் தீவிரமாகவே ஈடுபட்டு வருகின்றது.

அதனடிப்படையிலேயே கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கரு ஜயசூரியவை ரணில் விக்கிரமசிங்க தன்னிச்சையாக ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருந்தார். இதனாலேயே ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எதிர்ப்புகளும் ஏற்பட்டிருந்தன.

இந்த நிலையிலேயே ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அழுத்தங்களினால் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டால் அது குறித்தும் பரிசீலிக்க அமெரிக்கத் தூதரகம் தயாராகியுள்ளது.

அமைச்சர் மங்கள சமரவீர அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்திற்கு வேண்டப்பட்டவர் என்ற அடிப்படையில், கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் கடந்த சில நாட்களாக அமைச்சர் மங்கள சமரவீரவுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் கொழும்பு உயர்மட்டத் தகவல்கள் கூறுகின்றன.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடுகள் நீடிக்குமானால் சில சமயங்களில் ரணில் விக்கிரமசிங்கவையே வேட்பாளராக அறிவிக்கும் நிலையும் ஏற்படலாம். இது குறித்தும் மங்கள சமரவீர சஜித் பிரேமதாசவுடன் பேசியதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மைத்திரி - ரணில் அரசாங்கத்தை அமெரிக்காவின் ஆதரவுடன் அமைப்பதில் அமைச்சர் மங்கள சமரவீர தீவிரமாக ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, முல்லைத்தீவுக் கடற்பகுதி உள்ளிட்ட கிழக்குக் கடற்பிரதேசங்களையும் திருகோணமலைத் துறைமுகத்தையும் கையகப்படுத்தும் நோக்கில் சோபா எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்வதற்கு அமெரிக்கா கடந்த சில வருடங்களாக முயற்சி எடுத்து வருகின்றது.

இந்தோ - பசுபிக் பிராந்திய நலன் உள்ளிட்ட பூகோள அரசியல் தேவைக்காக இலங்கைத் தீவில் நிரந்தரமாகவே காலூன்றத் துடிக்கும் அமெரிக்கா தற்போது வடக்குக் - கிழக்குக் கடற் பிரதேசங்களை மையமாகக் கொண்டே சிங்கள ஆட்சியாளர்களுடன் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் காரணத்தினாலேயே இலங்கை ஜனாதிபதித் தேர்தலில், வேட்பாளர் தெரிவு விடயத்தை அமெரிக்கா கையிலெடுத்துள்ளதாக அவதானிகள் கூறுகின்றனர்.

https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=1142&fbclid=IwAR0aXt6FaV7fRsQhZAnp8OjhKXfG_kc8_GRALVpklYlOyCfek7hOhO5rLJk

Link to comment
Share on other sites

On 8/13/2019 at 6:27 PM, nunavilan said:

அதேவேளை, முல்லைத்தீவுக் கடற்பகுதி உள்ளிட்ட கிழக்குக் கடற்பிரதேசங்களையும் திருகோணமலைத் துறைமுகத்தையும் கையகப்படுத்தும் நோக்கில் சோபா எனப்படும் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்வதற்கு அமெரிக்கா கடந்த சில வருடங்களாக முயற்சி எடுத்து வருகின்றது.

இந்தோ - பசுபிக் பிராந்திய நலன் உள்ளிட்ட பூகோள அரசியல் தேவைக்காக இலங்கைத் தீவில் நிரந்தரமாகவே காலூன்றத் துடிக்கும் அமெரிக்கா தற்போது வடக்குக் - கிழக்குக் கடற் பிரதேசங்களை மையமாகக் கொண்டே சிங்கள ஆட்சியாளர்களுடன் சந்தர்ப்பங்களுக்கு ஏற்ற அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.

இது ஒரு திறவுகோலாக அமைந்துவிட்டால்... 
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.