Jump to content

மந்தமடையும் உலக பொருளாதாரமும் பூச்சியத்தை நோக்கிய மத்திய வங்கிகளும் 


Recommended Posts

மந்தமடையும் உலக பொருளாதாரமும் பூச்சியத்தை நோக்கிய மத்திய வங்கிகளும் 

கடந்த உலக பொருளாதார வங்கிகள் ஊடான சிக்கல் நடந்தது 2007-2008 காலப்பகுதியில். அதன் பின்னராக உலக பொருளாதாரம் வளர்ந்தே வந்தது. ஆனால், உலக மத்திய வங்கிகளின் பண முறிவு வீதம், உலகம் ஒரு பொருளாதார தேக்க நிலையை நோக்கி நகருவதாக எதிர்வு கூறுகிறது. 

இதை சமாளிக்க இல்லை தாக்கத்தை குறைக்க பல நாட்டு மத்திய வங்கிகளும் தங்கள் வட்டி வீதத்தை குறைத்துள்ளன. வரும் மாதங்களில் மேலும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இறுதியில் பூச்சியம் என மத்திய வங்கி வர்த்தக வங்கிகளுக்கு கொடுக்கும். இதனால், மக்கள் மேலும் கடன் வாங்க தூண்டிடப்படுவார்கள். இது, பொருளாதார சீரமைப்பிற்கு உதவும் என்பது கணிப்பு. 

சீன- அமெரிக்க பொருளாதார யுத்தம் ஒரு பக்கம், ஆசியாவின் பொருளாதார முயங்களில் ஒன்றான ஹாங்கோங் போராட்டங்கள் ( பத்தாவது வாரமாக தொதரும் போராட்டங்கள், இத்தாலி அரசின் விருப்பாளர்களின் போராட்டங்கள், ஆர்ஜெண்டீனா தேர்தலால் ஏற்பட்ட  50% பங்கு சரிவும் நாட்டின் பண சரிவும் என உலக பொருளாதாரத்தை ஒரு நிலையற்ற நிலையில் வைத்துள்ளன. மேலும், பிரித்தானியாவின் ஐரோப்பிய யூனியன் ஊடான பிரிவும் உதவவில்லை. 


ஆக்கம் : சுய தேடல், தொகுப்பு 

Link to comment
Share on other sites

மந்தமடையும் உலக பொருளாதாரத்தால், உலக மசகு எண்ணெய் விலை குறைந்தே காணப்படும். சீன, இந்தியா நாடுகளின் கொள்வனவு குறைந்து வருகின்றது, அமெரிக்க நாடானது அதிகளவில் உற்பத்தி செய்வதும் ஒரு காரணம். 

மக்கள் ஒரு பாதுகாப்பான முதலீட்டை நோக்கி நகர்வதால் உலகத்தில் தங்க, வெள்ளி விலை அதிகரித்து செல்வதையம் காணக்கூடியதாக உள்ளது.

Link to comment
Share on other sites

இன்று உலகம் முழுவதும் பங்கு சந்தைகள் சரிந்தன. காரணம் ?

அமெரிக்க திறைசேரியின் இரண்டு ஆண்டு கால பண முறிவின் வட்டி வீதம் பத்து ஆண்டு கால பண முறிவின் வட்டி வீதத்தை விட குறைவாக இருப்பது. 

அதாவது நீண்ட கால முதலீட்டில் அது அமெரிக்க பொருளாதார தேக்கத்தை குறிக்கின்றது, இவ்வான சுட்டிகள் காட்டிய வரலாற்றில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டது. ஆனால், அது நிச்சயம் நடக்கும் என்றோ இல்லை எப்பொழுது நடக்கும் என்றோ உறுதியாக கூற முடியாது. 

இதனால் மிகவும் அதிருப்தி அடைந்த அமெரிக்க அதிபர், உலகின் மிகப்பலம் வாய்ந்த அமெரிக்க  மத்திய வங்கி  வட்டி வீதத்தை உடனடியாக குறைக்க வேண்டும் என குறுஞ்செய்தி அனுப்பி, அரசியல் கலக்காத வங்கி ஆளுனரை தூண்டி உள்ளார். 

இவ்வாறு தங்கள் வட்டி வீதத்தை குறைத்த ஜப்பான் போன்ற நாடுகள் தங்கள் வசம் வேறு கருவிகள் இல்லாமலும் பொருளாதாரத்தை மீளமைக்க முடியாமலும் உள்ளன.   

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

அமெரிக்க திறைசேரியின் இரண்டு ஆண்டு கால பண முறிவின் வட்டி வீதம் பத்து ஆண்டு கால பண முறிவின் வட்டி வீதத்தை விட குறைவாக இருப்பது.

நான் நினைகிறேன், எதிர் மறைதான் சரியானதென்று. பத்து ஆண்டு கால பண முறிவின் வட்டி வீதம் இரண்டு ஆண்டு கால பண முறிவின் வட்டி வீதத்தை விட குறைவாக இருப்பது. 

The 10-year Treasury bondyield fell below 1.6% Wednesday morning, dropping just below the yield of the 2-year Treasury bond." (cnn.com)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய பொருளாதார வளர்ச்சி பிரக்சிட் நிச்சயமற்ற தன்மையால் தள்ளாடி வரும் நிலையில் கடைசிக் காலாண்டில்.. பூச்சியத்துக்கு கீழ்.. - 0.2 என்ற நிலையை எட்டி உள்ளது. பவுன்சின் பெறுமதியிலும் பிரக்சிட் வாக்களிப்பின் பின் கிட்டத்தட்ட தொடர் வீழ்ச்சி அவதானிக்கப்படுகிறது. 

ஜேர்மனியின் கடைசிக் காலாண்டு வளர்ச்சியும் பூச்சியத்துக்கு கீழ்.

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில் மட்டும் வளர்ச்சி பூச்சியத்துக்கு மேல் உள்ளது. 

இத்தாலி பூச்சியமாக உள்ளது.

Link to comment
Share on other sites

பிரபா,நெடுக்ஸ்,
உங்கள் இருவருக்கும் இந்த திரியில் கருத்துக்களை தெரிவித்தமைக்கு நன்றி.
இதையும் வாசிப்பதுடன், நான் எழுதியதில் உள்ளதா தவறு மற்றும் கருத்துக்களை தெரிவிப்பது மகிழ்ச்சியை தருகின்றது.

நன்றிகள்.

Link to comment
Share on other sites

பண முறிவு வட்டி வீதங்கள் பற்றிய தகவல்களும் அதன் தாக்கம் சம்பந்தப்பட்ட எதிர்வுகூறலும் குழப்பமாக இருந்தது. இறுதியில் சந்தைகள் சற்று எழுந்தன. 
 

 

Link to comment
Share on other sites

பொருளாதார மந்தநிலை மிகவும் கவலையளிக்கிறது : ரகுராம் ராஜன் பேட்டி

Dkn_Tamil_News_2019_Aug15__843013942241669.jpg

 

புதுடெல்லி : ‘‘நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை மிகவும் கவலையளிக்கிறது. இப்பிரச்னைகளை சரிசெய்ய, தனியார் முதலீடுகளை அதிகரிக்கும் வகையில் புதிய சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வர வேண்டும்’’ என ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2018-19ம் நிதியாண்டில் 6.8 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த 2014-15ம் நிதியாண்டிலிருந்து மிகவும் குறைவான அளவு. தற்போதைய நிதியாண்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி(ஜிடிபி) 7 சதவீதமாக இருக்கும் என மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது. ஆனால் வளர்ச்சி இதைவிட குறைவாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது நிலவும் பொருளாதார மந்தநிலை குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: தொழில்கள் கவலையளிப்பதாக உள்ளது என பலர் கூறுவதை இப்போது நம்மால் கேட்க முடிகிறது.  இதற்கு ஏதோ ஒரு ஊக்குவிப்பு தேவை என தொழிலதிபர்கள் கூறுகின்றனர். பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி வீதத்தை அதிகரிக்க நமக்கு புதிய சீர்திருத்தங்கள் தேவை. சர்வதேச நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்குவது சீர்திருத்தம் அல்ல. அது ஒரு யுக்தி நடவடிக்கை.

நாட்டின் வளர்ச்சி வீதத்தை 2 அல்லது 3 புள்ளிகள் அதிகரிக்க, நாட்டை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்ற புரிதல்தான் நமக்கு இப்போது தேவை. மின்துறை மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களில் நிலவும் பிரச்னைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும். தனியார் துறை முதலீடுகளை அதிகரிக்க புதிய சீர்திருத்தங்கள் தேவை. தற்போதுள்ள நிதி நெருக்கடியில் சலுகைகள், ஏதோ ஒருவிதமான ஊக்குவிப்பு போன்றவை நீண்ட காலத்துக்கு பயன் அளிக்காது. இந்திய சந்தைகள், இந்திய தொழில்கள், நாட்டு மக்களை ஊக்குவிக்கும் வகையில் நன்கு சிந்தித்து எடுக்கப்படும் சீர்திருத்தங்கள்தான் நமக்கு இப்போது தேவை. ஜிடிபி வளர்ச்சி குறித்து முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கூறிய சில விவாதங்கள் மீது நாம் கவனம் செலுத்த வேண்டும். சில ஜிடிபி புள்ளிவிவரங்களை வைத்து, நாம் வளர்ச்சி வீதத்தை மிகை மதிப்பீடு செய்யலாம். ஜிடிபி கணக்கிடும் முறையை நாம், தனியான நிபுணர் குழு மூலம் ஆய்வு செய்ய வேண்டும். ஜிடிபி எண்கள், தவறான கொள்கை திட்டங்கள் வகுக்க காரணமாக இருந்துவிடக்கூடாது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

கடந்த 2008ம் ஆண்டு நிலவிய சர்வதேச நிதி நெருக்கடியை ஒப்பிடும்போது, உலக முழுவதும் வங்கிகள் தற்போது மோசமான நிலையில் இல்லை.


நிதித்துறைகளில் தற்போது பெரியளவில் பிரச்னை இல்லை. வர்த்தகம் மற்றும் சர்வதே முதலீடுகளில்தான் உண்மையான பிரச்னை உள்ளது. அதில் போதிய கவனம் செலுத்தவில்லை என்றால், உலக நாடுகள் தங்கள் சொந்த நலனுக்காக சில நடவடிக்கைகளை எடுக்கலாம். இது வித்தியாசமான உலகம். 2008ம் ஆண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடி மீண்டும் வருமா என எனக்கு தெரியாது. ஆனால் வேறு வழிகளில் பிரச்னைகள் ஏற்படும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, புதிய பிரச்னைகளை தடுத்து நிறுத்தாது. இவ்வாறு அவர் கூறினார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=519485

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

ஏன் மத்திய வங்கிகள் பணத்தை மக்களுக்கு இறைக்கின்றன .... 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.