Jump to content

தமிழ் மக்­களின் உரிமைக்குர­லாக செயற்­பட்ட குமார் பொன்­னம்­பலம்!


ampanai

Recommended Posts

அண்ணல் குமார் பொன்­னம்­பலம் என்னும் உரிமைக்­குரல் எம்­மி­ட­மி­ருந்து பறிக்­கப்­ப­டாமல் வாழ்ந்­தி­ருந்தால் இன்று ஆகஸ்ட் 12 இல் அவ­ருக்கு 81 வய­தாகும்.

Maamanithar-Kumaar-Ponnampalam-Aiyaa-8-660x330.jpg

அர­சியல் கார­ணங்­க­ளுக்­காகக் கைது செய்­யப்­பட்ட தமிழ் இளை­ஞர்கள் சார்பில் நீதி­மன்­றங்­களில் வாதா­டினார். எவ்­வி­டத்­திலும், தமிழ் மக்­க­ளுக்குச் சார்­பான கருத்­துக்­களைத் துணி­வாக வெளி­யிட்டு வந்தார். இதனால்,  இதன் உச்சக் கட்­ட­மாக இன­வா­தி­களால் குமார் சுட்டுக் கொல்­லப்­பட்டார்.

தமிழர் தம் அடிப்­படை அபி­லா­சை­களை இடித்து வலி­யு­றுத்­தி­யவர் அவர். திம்­புக்­கோட்­பா­டு­களையே  தமிழர் தம் அடிப்­படை அபி­லா­சை­க­ளாக  கொண்­டி­ருந்தார். எந்த  ஒரு  சிங்­கள தலை­மையும்  வடக்கு கிழக்கு எனும் தமிழர் தம் பூர்­வீக நிலத்­தையும் பிறப்­பு­ரி­மை­யான  சுய­நிர்­ணய  உரி­மை­யையும் ஏற்று கொள்­வார்­க­ளானால் அர­சியல் தீர்­வைத்­தர வல்­ல­வர்­க­ளாவர் அன்றேல் இல்லை  என்­பதே அவ­ரது நிலைப்­பா­டாக இருந்­தது. ஒன்றுபட்ட இலங்­கைக்­குள்­ளான சக வாழ்வு சாத்­தி­யப்­ப­டு­மென நம்­பினார். அதுவே அவர் அடிப்­படை அபி­லா­சை­களை என்று வலி­யு­றுத்த கார­ண­மா­னது.

இதனை ஊர்­ஜிதம் செய்யும் வகையில்  பார்ப்போம் ஆனால் இந்­திய ஈடு­பாடு குறித்த அவ­ரது நிலைப்­பா­டா­னது திரு­மதி பண்­டா­ர­நா­யக்க மற்றும் இட­து­சாரிக் கம்­யூ­னிஸ்ட்­டுகள் என்­போரின் நிலைப்­பா­டு­க­ளுக்கு நெருங்­கி­ய­தாக நகர்ந்­தது. அபி­லா­சை­களை அடி­யொற்­றிய DPA Manifesto எனும்­ அ­ர­சியல் உடன்­பாடு ஊடாக 1988 ஜனா­தி­பதித் தேர்­தலில் திரு­ம­தி­ ஸ்ரீ­மாவோ பண்­டா­ர­நா­யக்­கவை ஆத­ரிப்­ப­தற்­காக வடக்கின் இட­து­சாரிக் கம்­யூ­னிஸ்ட்கள் ஏனைய முற்­போக்குச் சக்­தி­க­ளுடன் இணைந்­த­போது குமார் பெறு­ம­தி­மிக்க பங்­க­ளிப்பை ஆற்­றினார். அது திரு­மதி ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்கவுட­னான நட்­பு­ற­விற்குக் கார­ண­மா­யிற்று. சம்­பிக்க ரண­வக்கவும் பல்­க­லை­க்க­ழக மாணவர் அமைப்பின் சார்­பாக இதில் கையொப்­ப­மிட்­டி­ருந்தார். அவ­ரி­டம் ­நேர்­மை­யி­ருந்­ததால் அர­சியல் நேர்­மையும் இருந்­தது.

கடைசி வரு­டங்­க­ளின்­போது அவர் ஆற்­றிய பங்­க­ளிப்பை நினை­வூட்­டு­வது சில­ருக்குப் பிடிக்­காது. அவ­ரது கடைசி வரு­டங்­க­ளின்­போது அவர் காட்­டிய மன வலி­மை­யா­னது அதீ­த­மா­னது. எம் தலைவர்  குமாரின் அர­சியல் நிலைப்­பா­டா­னது ஏறு­மா­றா­ன­தா­கவோ சந்­தர்ப்­ப­வாத போக்­கு­டை­ய­தா­கவோ இருக்­க­வில்லை. ஆனால் கொள்­கை­ நி­லை­யைத்­த­மிழர் தம் அபி­லா­சை­களை வலி­யு­றுத்­து­வ­தா­கவே இருந்­தது. அவ­ரது முயற்சிகள் நம்­பிக்­கையின் தோல்­வி­யா­னது. குமாரின் மனப்­பாங்­கில் ­மாற்றம் ஏற்­பட வழி­கோ­லிற்று.

அவ­ரி­ட­மி­ருந்து நான்  இன்றும் கைக்­கொள்ளும் ஒரு பண்பு, கருத்து வேற்­று­மைகள் வேறு, மனித அன்­பும் ­ம­னித பண்பும்  வேறு. இறு­திக்­காலம் வரை அனைத்து இயக்­கங்­க­ளையும் வர­வேற்று தனது இல்­லத்தில் விருந்­தோம்பி ஒன்­று­ப­டுத்தி பொது கருத்­திற்­காக சந்­திப்­புக்­களை ஏற்­ப­டுத்­தினார். இதன் விளை­வு­தான் ­அ­வரின்  பின்­னாளில் பத்து பதி­னொரு கட்­சி­களின் கூட்­ட­மைப்­பாக நாம் ஒன்­று­பட்டு செயற்­பட, போராட்டம் நடத்த வழி­வ­குத்­தது.

அதே­வேளை தமிழ் மக்­களின் அபி­லா­சை­க­ளுக்குச் சார்­பாக நின்ற ஒரே­யொரு உண்­மை­யான சக்­தி­யாக விடு­தலைப்புலிகள் என அவ­ருக்குத் தென்­பட்­டது. அவர் இரத்­தத்­தையும் துன்­பி­ய­லையும் பார்க்­க­மு­டி­யா­தவர். இந்­நி­லைப்­பாட்­டிற்கு ஒரு தமிழ்த் தேசி­ய­வாதி என்ற கோணத்­தி­லி­ருந்து குரல் கொடுத்தார்.

பிரச்­சி­னைக்கு நீதி­யா­னதும் நிலை­யா­ன­து­மான ஒரு தீர்வைக் காண்­பது தொடர்பில் உள்­ளொன்றும் புற­மொன்­று­மாக விளங்கும் குறு­கிய எண்ணங்கொண்ட நாட்டுப் பற்­றை­ வ­லி­யு­றுத்தும் சக்­தி­களும் தேசிய அர­சியல் கட்­சி­களும் தான் சுய­நிர்­ணய கோரிக்­கைக்குப் பாரிய அளவில் பாத­க­மேற்­ப­டுத்­தி­ய­தாக கூறுவார்.

குமார் வாழ்ந்த காலம் மிக­மிக கடி­ன­மான கால­மாகும். இது­வரை ஆயுதம் ஏந்­தாத எந்­த­வொரு தமிழ் அர­சியல் வாதி­யை­விட  அதிக பிரச்­ச­ினைக்கு தனது எதிர் நீச்­சலை, ஆபத்தை ஏற்­றுக்­கொண்ட அவர், அவ­ரது எந்­த­வொரு பாரா­ளு­மன்ற அர­சியல் எதி­ரி­யை­வி­டவும் நேர்­மை­யாக அதி­க­மாகச் சாதித்தார்.

சில்­லறை அர­சியல் வாதி­க­ளைப்­போ­லன்றி பாரிய சர்­வ­தேச உற­வு­க­ளையும்,இவரை அவர்கள் நாட­வேண்­டிய தேவை­யையும்  முற்­றிலும் தமி­ழி­னத்­திற்­கா­கவே ஏற்­ப­டுத்தி செயற்­பட்டார் என்­பதை அவரின் மறை­வின்­பின்­னான ஐ.நா. உள்­ளிட்ட சர்­வ­தே­சத்­தா­ரது பதி­வுகள், இரங்­கல்கள், பாராட்­டு­களும்  துயர்­ப­கிர்வுப் பதி­வு­களும் எடுத்துக்காட்­டி­ன.

இலங்கை வாழ் தமிழ் சமூ­கத்­தின்­அ­ர­சியல் நலன்­களில்  அவ­ருக்­கி­ருந்த அர்ப்பணிப்பு  முக்கியத்துவம் கொண்டதாக விளங்கியது.அரசியல் சதுரங்கத்தில்  தாக்கத்தையும்  விழிப்புணர்வையும் ஏற்படுத்தியது. அவருடைய அரசியலுடன் பாரிய ஈடுபாட்டுடன் செயற்பட்டு இக்கட்டான நேரத்தில் அவருயிர் பறிக்கப்பட்டவுடன் அவர் தம் அரசியல் வழி தொடர பொதுச்செயலாளர் பணியை அன்று ஏற்றவன் இன்றும் என்றும் என் அரசியற் தலைவனாக கொண்டவன் எனும் வகையில் இன்றைய அவரது பிறந்த நாளில்  இப்பதிவு காலத்தின் தேவை என உணர்கின்றேன்.

கலாநிதி நல்லையா குமரகுருபரன் 

(தலைவர் தமிழ் தேசிய பணிக்குழு)

https://eelamurasu.com.au/?p=20865&fbclid=IwAR0dmEQDA7ap6D1N0-sL2gRhXVqrDKuQuCanvgg9CuJFRmlNShA0Std88TE

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.