Jump to content

இளம் மொட்டுக்கள் சருகாகிய கோர தினம் செஞ்சோலை படுகொலை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Senjolai-4-720x450.jpg

இளம் மொட்டுக்கள் சருகாகிய கோர தினம் செஞ்சோலை படுகொலை!

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த போதிலும் யுத்தத்தினால் ஏற்பட்ட வடுக்கள் தமிழர்கள் மனதில் ஆறாத ரணமாகவே உள்ளன.

யுத்தத்தின்போது எத்துனையோ தாக்குதல்கள் தமிழர்கள் மீது அரங்கேற்றப்பட்டிருந்தன. அவற்றுள் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தற்போதும் நெஞ்சை பிசைகின்ற நிகழ்வாக மக்களின் மனங்களில் ஆழப் பதிந்திருக்கின்றன.

ஆம், கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி இதேபோன்றதொரு நாளில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வள்ளிபுனம் பகுதியில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகம் மீது இலங்கை விமானப் படையின் நான்கு அதிவேக யுத்தவிமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய 16 குண்டுகள் 61 பாடசாலை மாணவிகளின் உயிர்களை பறித்தது. அத்துடன், 129இற்கும் அதிகமான மாணவிகள் அவயவங்களை இழக்கச் செய்தது.

இந்த கொடூரமான சம்பவம் இடம்பெற்ற நாள் தற்போதும் நம் கண்முன்னே காட்சியளிக்கின்றன. அன்றைய தினம்… கொல்லப்பட்டவர்களில் சிலரது உடல்கள் சிதறியபடி ஆங்காங்கே காணப்பட்டன. காயமடைந்தவர்களில் பலர் அவயவங்களை இழந்தனர். பூவாக மலரவிருந்த இளம் மொட்டுக்கள் சருகாகின.

காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தர்மபுரம், கிளிநொச்சி ஆகிய பொது வைத்தியசாலைகளிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.

தமது பிள்ளைகள் தங்கியிருந்த பகுதி மீது குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றதை அறிந்த பெற்றோர், சொல்லொனாத் துயரத்துடன் செஞ்சோலை வளாகத்தை சூழ்ந்திருந்தனர்.

கொல்லப்பட்டவர்களில் தமது பிள்ளைகளும் உள்ளனரா என்ற ஏக்கத்துடன் இறந்து கிடந்த மாணவிகளைத் தேடிய குடும்பத்தினர் கொல்லப்பட்டவர்கள் தமது பிள்ளைகள்தான் என தெரிந்ததும் கதறிய கதறல்கள் எழுத்திலடங்காதவை.

இந்த சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 13 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த தாக்குதல்களுக்கு சர்வதேசங்கள் கண்டனம் தெரிவித்திருந்தன. இருந்தபோதிலும் தமிழர்களுக்கு எதிரான இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்று காலங்கள் கழிகிறதே ஒழிய நீதி கிடைக்கவில்லையென்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

ஆண்டுகள் 13ஆன போதிலும் அன்றைய கொடூர தாக்குதல்களும் கோரமான உயிரிழப்புகளும் எம் மனக்கண் முன்னே தற்போதும் ஆறாத சுவடுகளாய் பதிந்துள்ளன.

எனினும் அன்று பாதிக்கப்பட்டவர்கள், அவயவங்களை இழந்த சிறுமிகள் அவர்களின் நிலைமை தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளதென்பது மறுக்கப்பட முடியாத உண்மையே..

http://athavannews.com/இளம்-மொட்டுக்கள்-சருகாகி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செஞ்சோலை படுகொலை ஒரு மோசமான தினம்.....அரும்புகளுக்கு  ஆழ்ந்த இரங்கல்கள்......!

Link to comment
Share on other sites

செஞ்சோலைப் பிஞ்சுகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.!!

1 hour ago, தமிழ் சிறி said:

இந்த சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 13 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த தாக்குதல்களுக்கு சர்வதேசங்கள் கண்டனம் தெரிவித்திருந்தன. இருந்தபோதிலும் தமிழர்களுக்கு எதிரான இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்று காலங்கள் கழிகிறதே ஒழிய நீதி கிடைக்கவில்லையென்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

சிங்களவர் ஆட்சியில் கருணையை எதிர்பார்க்க முடியாது. எதிர்பார்ப்பது கானல் நீரைக் கண்டு தாகம்தீர்க்க ஓடும் மான்களுக்கு இணையானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அஞ்சலிகள்...இச் சிறுவர்களது மரணத்திற்கு நேரடியாய் சிங்கள ஆமி./அரசு காரணமாயிருந்தாலும் , வலுக் கட்டாயப்படுத்தி பயிற்சிக்கு என்று ஒழுங்கு படுத்திய புலிகளுக்கும், அதை இணையங்களில் விளம்பரப்படுத்தி அப்பட்டமாய் அது நடக்கும் இடத்தை காட்டிக் கொடுத்த  புலி வால் இணையங்களுக்கும் என் கண்டனங்கள் 

Link to comment
Share on other sites

4 hours ago, ரதி said:

ஆழ்ந்த அஞ்சலிகள்...இச் சிறுவர்களது மரணத்திற்கு நேரடியாய் சிங்கள ஆமி./அரசு காரணமாயிருந்தாலும் , வலுக் கட்டாயப்படுத்தி பயிற்சிக்கு என்று ஒழுங்கு படுத்திய புலிகளுக்கும், அதை இணையங்களில் விளம்பரப்படுத்தி அப்பட்டமாய் அது நடக்கும் இடத்தை காட்டிக் கொடுத்த  புலி வால் இணையங்களுக்கும் என் கண்டனங்கள் 

அன்றும் இன்றும் 10 வருடங்கள்தான்..... எவ்வளவு மாற்றங்கள்.!!!! 😲 

On 1/8/2009 at 2:20 PM, ரதி said:

புலிகள் கூட கேள்வி கேட்பவர்களை தடுப்பவர்கள் இல்லை.புலிகள் மக்களூக்கு பேச்சு சுதந்திரம்,கருத்து சுதந்திரம் கொடுப்பவர்கள் ஆனால் இங்கு புலிக்கு ஆதரவு கொடுப்போர் என்றூ கூறீக் கொள்பவர்களீன் தொல்லை தான் தாங்க முடியாது உள்ளது.புலிகள் படங்களையோ,செய்தியோ வெளீயிடும் போது தங்களூக்கு சாதகமானவற்றேயே வெளீயிடுவார்கள்.அவர்களூக்கு தெரியும் எதை,எங்கு,எப்போது வெளீயிட வேண்டும் என்றூ.தேசியத்திற்கு எதிரானவர்களை கூட நல்ல கருத்துக்களை கூறீ அவர்களை மாற்ற வேண்டும்.அதை விடுத்து அவர்களை அவமதிக்கும் செயல்களை நிறூத்த வேண்டும்.100 ற்றூக்கு 60% மக்கள் புலிகளூக்கும்,ஈழத்திற்கும் உதவி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.அதை 100ற்றூக்கு100% நாங்கள் தான் மாற்ற வேண்டும்.இது தொடர்பான உங்கள் ஆக்க பூர்வமான கருத்துகளை எதிர் பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

16 , 17 வ‌ய‌து சிறுமிக‌ல‌ யார் ப‌யிற்ச்சிக்கு அழைத்து சென்ற‌து /

க‌ற்ப‌னை உல‌கில் வாழும் ம‌னித‌ர்க‌ளை என்ன‌ என்று சொல்லுவ‌து /

அந்த‌ பிள்ளைக‌ள் பிற‌ந்த‌ ஆண்டுக‌ளை வ‌டிவாய் பார்க்க‌வும் , அந்த‌ பிஞ்சு முக‌ங்க‌ள் போர் க‌ள‌ம் நோக்கி போர‌ வ‌ய‌தா /

என்ன‌ எழுதுறோம் என்று கூட‌ தெரியாமா எப்ப‌வும் புலி வாந்தி எடுப்ப‌தே ஒரு சில‌ருக்கு வேலையாய் போச்சு / 

6 hours ago, suvy said:

செஞ்சோலை படுகொலை ஒரு மோசமான தினம்.....அரும்புகளுக்கு  ஆழ்ந்த இரங்கல்கள்......!

அந்த‌ நாள் ப‌ல‌ரின் ம‌ன‌தில் வ‌லி ஏற்ப‌ட்ட‌ நாள் சுவி அண்ணா 😓 /
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

இளம் மொட்டுக்கள் சருகாகிய கோர தினம் செஞ்சோலை படுகொலை!

மொட்டுக்கள் மலராமலேயே கருகிப் போய்விட்டது.

இறக்கும் வரை மறக்கவோ மன்னிக்கவோ முடியாத சம்பவம்.

இந்தக் குழந்தைகள் எமது மனங்களில் மட்டுமல்ல எதிரிகளின் மனங்களிலும் நிச்சயம் வாழ்வார்கள்.

சிங்கள தளங்களுடன் தொடர்புள்ளவர்கள் சிங்களம் எழுதக் கூடயவர்கள் தயவு செய்து இந்த நிகழ்வை படங்களுடன் அவர்களுக்கு புரியும் வண்ணம் எழுதுமாறு கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, ஈழப்பிரியன் said:

மொட்டுக்கள் மலராமலேயே கருகிப் போய்விட்டது.

இறக்கும் வரை மறக்கவோ மன்னிக்கவோ முடியாத சம்பவம்.

இந்தக் குழந்தைகள் எமது மனங்களில் மட்டுமல்ல எதிரிகளின் மனங்களிலும் நிச்சயம் வாழ்வார்கள்.

சிங்கள தளங்களுடன் தொடர்புள்ளவர்கள் சிங்களம் எழுதக் கூடயவர்கள் தயவு செய்து இந்த நிகழ்வை படங்களுடன் அவர்களுக்கு புரியும் வண்ணம் எழுதுமாறு கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன்.

என‌து மாமா ந‌ல்லா சிங்க‌ள‌ம் க‌தைப்பார் , ஆனால் அவ‌ரால் சிங்க‌ள‌ம் எழுத‌ தெரியுமோ என்று தெரியாது ,

இந்த‌ மேட்ட‌ர‌ இல‌ங்கை காசுக்கு 2000 ரூபாய் ஓட‌ முடிச்சிட்டு போக‌லாம் , கொழும்பில் சிங்க‌ள‌ பெடிய‌ங்க‌ளுட‌ன் ப‌டிக்கும் த‌மிழ் பெடிய‌ங்க‌ளை தொட‌ர்வு கொண்டா ஒரு வார‌த்துக்க‌ செய்து த‌ருவாங்க‌ள் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

என‌து மாமா ந‌ல்லா சிங்க‌ள‌ம் க‌தைப்பார் , ஆனால் அவ‌ரால் சிங்க‌ள‌ம் எழுத‌ தெரியுமோ என்று தெரியாது ,

இந்த‌ மேட்ட‌ர‌ இல‌ங்கை காசுக்கு 2000 ரூபாய் ஓட‌ முடிச்சிட்டு போக‌லாம் , கொழும்பில் சிங்க‌ள‌ பெடிய‌ங்க‌ளுட‌ன் ப‌டிக்கும் த‌மிழ் பெடிய‌ங்க‌ளை தொட‌ர்வு கொண்டா ஒரு வார‌த்துக்க‌ செய்து த‌ருவாங்க‌ள் ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 👏

பையா
நடந்த எத்தனையோ விடயங்கள் அப்பாவி சிங்கள மக்களுக்கு தெரியாது.ஆனபடியால் இது போன்ற சம்பவங்களை நினைவு கூரும் போது இயன்றளவு பொதுமக்களுக்கு போய்ச் சேரும்படி செய்ய வேண்டும்.
நன்றி பையா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா
நடந்த எத்தனையோ விடயங்கள் அப்பாவி சிங்கள மக்களுக்கு தெரியாது.ஆனபடியால் இது போன்ற சம்பவங்களை நினைவு கூரும் போது இயன்றளவு பொதுமக்களுக்கு போய்ச் சேரும்படி செய்ய வேண்டும்.
நன்றி பையா.

உண்மை அண்ணா /

இப்ப‌டியான‌ ப‌ர‌ப்புரையை முக‌ நூல் ம‌ற்றும் யூடுப் ஊடாக‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ள் பார்க்கும் ப‌டி செய்ய‌லாம் /

நோட்டிஸ் அடிச்சு சிங்க‌ள‌ தேச‌த்தில் ஒட்டுவ‌து கொஞ்ச‌ம் சிர‌ம‌ம் , முக‌ நூல் யூடுப் தான் சிற‌ந்த‌து என்று என‌க்கு தோனு ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 👏 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  சிங்கள பேரினவாதத்தால்  பலியாக்கப்பட்ட சிறார்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

1 hour ago, பையன்26 said:

உண்மை அண்ணா /

இப்ப‌டியான‌ ப‌ர‌ப்புரையை முக‌ நூல் ம‌ற்றும் யூடுப் ஊடாக‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ள் பார்க்கும் ப‌டி செய்ய‌லாம் /

நோட்டிஸ் அடிச்சு சிங்க‌ள‌ தேச‌த்தில் ஒட்டுவ‌து கொஞ்ச‌ம் சிர‌ம‌ம் , முக‌ நூல் யூடுப் தான் சிற‌ந்த‌து என்று என‌க்கு தோனு ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா 👏 /

 

பையா,

சிங்களவர்களில் அனேகமானோருக்கு உண்மை தெரியும். கொல்லப்பட்டது தமிழ் மக்கள் என்பதால் அவர்களுக்கு மகிழ்ச்சியே தவிர அனுதாபம் வரப் போவதில்லை. அப்படி அனுதாபம் கொள்கின்ற சிங்கள மக்களும் உண்டுதான். ஆனால் அது 10 வீதத்துக்கும் குறைவானது.

போலி புனைவுகளால் உருவான மகாவம்ச கோட்பாடுகளுக்கூடாகத்தான் சிங்கள மக்கள் ஏனைய சிறுபான்மை தேசிய இனங்களை அணுகுவார்கள். அப்படியான அணுகு முறையில் தமிழ் மக்களின் சாவு என்பது வரவேற்பிற்குதியதாகத்தான் இருக்கும். 2009 காலப்பகுதியில் எம் பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி மார்பை அறுத்து எறிந்த வீடியோக் காட்சிகளைக் கூட கொழும்பு பல்கலைக்கழகத்தில் படித்த சிங்கள மாணவர்கள் தமக்கிடையே பகிர்ந்து மகிழ்ந்த சம்பவங்கள் கூட உள்ளன. சனல் 4 இல் காட்டப்பட்ட காட்சிகளை விட குரூரமான காட்சிகளை தமக்குள் பகிர்ந்து ரசித்து இருந்தனர்.

சிங்கள மக்களின் இந்த மனப்பான்மையைக் கூட புரிந்து கொள்ள முடியும். ஆனால் இதற்கும் புலிகளை காரணம் காட்டும் தமிழர்கள் சிலரது மனப்பான்மையைத் தான் புரிந்து கொள்ள முடிவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, நிழலி said:

 

பையா,

சிங்களவர்களில் அனேகமானோருக்கு உண்மை தெரியும். கொல்லப்பட்டது தமிழ் மக்கள் என்பதால் அவர்களுக்கு மகிழ்ச்சியே தவிர அனுதாபம் வரப் போவதில்லை. அப்படி அனுதாபம் கொள்கின்ற சிங்கள மக்களும் உண்டுதான். ஆனால் அது 10 வீதத்துக்கும் குறைவானது.

போலி புனைவுகளால் உருவான மகாவம்ச கோட்பாடுகளுக்கூடாகத்தான் சிங்கள மக்கள் ஏனைய சிறுபான்மை தேசிய இனங்களை அணுகுவார்கள். அப்படியான அணுகு முறையில் தமிழ் மக்களின் சாவு என்பது வரவேற்பிற்குதியதாகத்தான் இருக்கும். 2009 காலப்பகுதியில் எம் பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி மார்பை அறுத்து எறிந்த வீடியோக் காட்சிகளைக் கூட கொழும்பு பல்கலைக்கழகத்தில் படித்த சிங்கள மாணவர்கள் தமக்கிடையே பகிர்ந்து மகிழ்ந்த சம்பவங்கள் கூட உள்ளன. சனல் 4 இல் காட்டப்பட்ட காட்சிகளை விட குரூரமான காட்சிகளை தமக்குள் பகிர்ந்து ரசித்து இருந்தனர்.

சிங்கள மக்களின் இந்த மனப்பான்மையைக் கூட புரிந்து கொள்ள முடியும். ஆனால் இதற்கும் புலிகளை காரணம் காட்டும் தமிழர்கள் சிலரது மனப்பான்மையைத் தான் புரிந்து கொள்ள முடிவதில்லை.

நீங்க‌ள் சொல்வ‌தும் ச‌ரி தான் , 2009ம் ஆண்டு அவ‌ங்க‌ள் வெடி கொழுத்தி எல்லாம்  கொண்டாடின‌வ‌ங்க‌ள் / 

ஒரு சில‌ சிங்க‌ள‌ ம‌க்க‌ள் ந‌ல்ல‌து இருக்குதுங்க‌ள் / நூற்றுக்கு 90வித‌ சிங்க‌ள‌வ‌ருக்கு த‌மிழ‌ர‌ பிடிக்காது , 

த‌மிழ‌ர்க‌ளின் அழிவில் ம‌கிழ‌ கூடிய‌ சிங்க‌ள‌வர்க‌ள் தான் அதிக‌ம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

20190814-183550.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாபெரும் த‌லைவ‌ர் சிறுமிக‌ளுட‌ன்  செஞ்சோலையை திற‌ந்து வைத்த‌ போது எடுத்த‌ புகைப் ப‌ட‌ம் 🙏

20190814-185945.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, தமிழ் சிறி said:

Senjolai-4-720x450.jpg

இளம் மொட்டுக்கள் சருகாகிய கோர தினம் செஞ்சோலை படுகொலை!

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்த போதிலும் யுத்தத்தினால் ஏற்பட்ட வடுக்கள் தமிழர்கள் மனதில் ஆறாத ரணமாகவே உள்ளன.

யுத்தத்தின்போது எத்துனையோ தாக்குதல்கள் தமிழர்கள் மீது அரங்கேற்றப்பட்டிருந்தன. அவற்றுள் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தற்போதும் நெஞ்சை பிசைகின்ற நிகழ்வாக மக்களின் மனங்களில் ஆழப் பதிந்திருக்கின்றன.

ஆம், கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் திகதி இதேபோன்றதொரு நாளில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வள்ளிபுனம் பகுதியில் உள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகம் மீது இலங்கை விமானப் படையின் நான்கு அதிவேக யுத்தவிமானங்கள் மிலேச்சத்தனமாக வீசிய 16 குண்டுகள் 61 பாடசாலை மாணவிகளின் உயிர்களை பறித்தது. அத்துடன், 129இற்கும் அதிகமான மாணவிகள் அவயவங்களை இழக்கச் செய்தது.

இந்த கொடூரமான சம்பவம் இடம்பெற்ற நாள் தற்போதும் நம் கண்முன்னே காட்சியளிக்கின்றன. அன்றைய தினம்… கொல்லப்பட்டவர்களில் சிலரது உடல்கள் சிதறியபடி ஆங்காங்கே காணப்பட்டன. காயமடைந்தவர்களில் பலர் அவயவங்களை இழந்தனர். பூவாக மலரவிருந்த இளம் மொட்டுக்கள் சருகாகின.

காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, தர்மபுரம், கிளிநொச்சி ஆகிய பொது வைத்தியசாலைகளிலும் தனியார் வைத்தியசாலைகளிலும் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.

தமது பிள்ளைகள் தங்கியிருந்த பகுதி மீது குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றதை அறிந்த பெற்றோர், சொல்லொனாத் துயரத்துடன் செஞ்சோலை வளாகத்தை சூழ்ந்திருந்தனர்.

கொல்லப்பட்டவர்களில் தமது பிள்ளைகளும் உள்ளனரா என்ற ஏக்கத்துடன் இறந்து கிடந்த மாணவிகளைத் தேடிய குடும்பத்தினர் கொல்லப்பட்டவர்கள் தமது பிள்ளைகள்தான் என தெரிந்ததும் கதறிய கதறல்கள் எழுத்திலடங்காதவை.

இந்த சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 13 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த தாக்குதல்களுக்கு சர்வதேசங்கள் கண்டனம் தெரிவித்திருந்தன. இருந்தபோதிலும் தமிழர்களுக்கு எதிரான இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெற்று காலங்கள் கழிகிறதே ஒழிய நீதி கிடைக்கவில்லையென்பதே மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

ஆண்டுகள் 13ஆன போதிலும் அன்றைய கொடூர தாக்குதல்களும் கோரமான உயிரிழப்புகளும் எம் மனக்கண் முன்னே தற்போதும் ஆறாத சுவடுகளாய் பதிந்துள்ளன.

எனினும் அன்று பாதிக்கப்பட்டவர்கள், அவயவங்களை இழந்த சிறுமிகள் அவர்களின் நிலைமை தற்போதும் கேள்விக்குறியாகவே உள்ளதென்பது மறுக்கப்பட முடியாத உண்மையே..

http://athavannews.com/இளம்-மொட்டுக்கள்-சருகாகி/

63 மாணவிகள் உயிரிழந்து இருந்தார்கள் 
இதில் 61 என்று இருக்கிறது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Maruthankerny said:

63 மாணவிகள் உயிரிழந்து இருந்தார்கள் 
இதில் 61 என்று இருக்கிறது 

எழுதும் போது சிறு பிழை விட்டிட்டின‌ம் போல‌ /
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Paanch said:

அன்றும் இன்றும் 10 வருடங்கள்தான்..... எவ்வளவு மாற்றங்கள்.!!!! 😲 

ஒரு மாற்றமும் இல்லை ஐயா ...இன்னும் அதே ரதி தான் ...உண்மை தெரிந்த பல பேர் இன்னும் இருக்கினம்...பூனை கண்ணை மூடிட்டு உலகம் இருட்டாயிருக்குது என்ட கதை தான் ...தாங்கள் உண்மையை சொன்னால் சர்வதேசத்திற்கு தெரிந்திடும் அல்லது தங்களை துரோகியாக்கி விடுவார்கள் என்று எல்லாத்துக்கும் ஆமாம் போட்டு கொண்டு இருக்கினம் அல்லது அமைதியாய் இருக்கினம் ...ஏன் இப்படியான படுகொலைகளை கூட சர்வதேசம் கண்டு கொள்ளவில்லை என்று தேடுங்கோ...உண்மை விளங்கும் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரதி said:

ஒரு மாற்றமும் இல்லை ஐயா ...இன்னும் அதே ரதி தான் ...உண்மை தெரிந்த பல பேர் இன்னும் இருக்கினம்...பூனை கண்ணை மூடிட்டு உலகம் இருட்டாயிருக்குது என்ட கதை தான் ...தாங்கள் உண்மையை சொன்னால் சர்வதேசத்திற்கு தெரிந்திடும் அல்லது தங்களை துரோகியாக்கி விடுவார்கள் என்று எல்லாத்துக்கும் ஆமாம் போட்டு கொண்டு இருக்கினம் அல்லது அமைதியாய் இருக்கினம் ...ஏன் இப்படியான படுகொலைகளை கூட சர்வதேசம் கண்டு கொள்ளவில்லை என்று தேடுங்கோ...உண்மை விளங்கும் 

 

உங்களுக்கு தெரிந்த உண்மைகளை தொகுத்து ஏன் நீங்கள் ஒரு புத்தகம் எழுத கூடாது?
இப்போது இருப்பவர்கள் வாசிக்காது போனாலும் 
எதிர்கால சந்ததிகள் வாசித்து பயன்பெறும் இல்லையா?

உண்மைகள் ஓரிடத்தில் ஒதுங்கி இருப்பதாலும் ...
மற்றவர்கள் அறியாமல் இருக்கலாம் அல்லவா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Maruthankerny said:

உங்களுக்கு தெரிந்த உண்மைகளை தொகுத்து ஏன் நீங்கள் ஒரு புத்தகம் எழுத கூடாது?
இப்போது இருப்பவர்கள் வாசிக்காது போனாலும் 
எதிர்கால சந்ததிகள் வாசித்து பயன்பெறும் இல்லையா?

உண்மைகள் ஓரிடத்தில் ஒதுங்கி இருப்பதாலும் ...
மற்றவர்கள் அறியாமல் இருக்கலாம் அல்லவா? 

நீங்கள் பதிப்பிட நிதியுதவி செய்தீர்கள் என்றால் நான் தயார் 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.