Jump to content

சம்மந்தரின் தீர்மானத்தினால் அதிர்ந்துபோயுள்ளது அமெரிக்கா – போட்டுடைத்தார் சுமந்திரன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%93-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-720x450.jpeg

சம்மந்தரின் தீர்மானத்தினால் அதிர்ந்துபோயுள்ளது அமெரிக்கா – போட்டுடைத்தார் சுமந்திரன்

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அமெரிக்காவின் நிகழ்ச்சி நிரலுக்கு கேடு நேராதவாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இருக்கும் எதிர்பார்க்க கூடாது என்ற கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தனின் தீர்மானத்தினால் அமெரிக்க அதிர்ச்சியடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் களுவாஞ்சிக்குடியில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்த மக்கள் தெளிவூட்டல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,“இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் மத்திய மற்றும் தெற்காசியாவிற்கான உதவி இராஜங்க செயலாளர் எலிஸ் வேல்ஸ் அம்மையாரை, சம்மந்தன் ஐயாவும் நானும் சந்தித்து கலந்துரையாடினோம்.

2011 ஆண்டு உங்களுடைய நாட்டிற்கு (அமெரிக்காவிற்கு) நாங்கள் வருகை தந்து பல்வேறு மட்டத்தினரையும் சந்தித்து கலந்துரையாடி தீர்க்கமான முடிவு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் 3 தீர்மானங்களை அமெரிக்க கொண்டு வந்திருந்தது. அவற்றை இலங்கை அரசாங்கமும் ஏற்றுக் கொண்டிருந்தது.

ஆனால், அவை தொடர்பாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்ற போதிலும் எதுவும் பூரணப்படுத்தப்படவில்லை. குறிப்பாக மீளநிகழாமையை உறுதிப்படுத்துவதற்கான புதிய அரசியலமைப்பு உருவாக்கும் முயற்சிகள் பூரணப்படுத்தப்படவில்லை. இவற்றையெல்லாம் எவ்வாறு முன்னகர்த்துவது என்று அமெரிக்க பிரதிநிதியிடம் சம்மந்தன் ஐயா கேட்டார்.

அதற்கு பதிலளித்த அமெரிக்க உதவி இராஜங்க செயலாளர், தேர்தல் வருகின்றதல்லவா, அதில் எவ்வாறான கேடும் நேராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தார்.

அதனை உடனடியாக மறுத்த சம்மந்தன் ஐயா, முடியாது – கேடு நிகழக்கூடாது என்பதற்காக செயற்பட்டு நாங்கள் களைத்துப் போய் விட்டோம் என்பதையும் எதிர்காலத்தில் அதற்காக எமது மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதை உறுதியாக தெரிவித்துவிட்டு சம்மந்தன் ஐயா எழுந்து சென்று விட்டார்.

சம்மந்தன் ஐயாவின் இந்த தீர்மானத்தினால் உதவி இராஜங்க செயலாளர் எலிஸ் வேல்ஸ் அம்மையார் அதிர்ச்சியடைந்து விட்டார்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/சம்மந்தரின்-தீர்மானத்தி/

##########   ##############  #############   ###############

Donald Trump GIF  Bildergebnis für shocked trump gif

Link to comment
Share on other sites

6 minutes ago, தமிழ் சிறி said:

எதிர்காலத்தில் அதற்காக எமது மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதை உறுதியாக தெரிவித்துவிட்டு சம்மந்தன் ஐயா எழுந்து சென்று விட்டார்.

கூட்டமைப்பின் கைக்கூலி அரசியல் இனியும் மக்களிட்டை எடுபடாது என்ட கவலை சம்பந்தனுக்கு முத்திப்போச்சு!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

tenor.gif

 ரத்தம் .. வருகுது..

Link to comment
Share on other sites

"சம்மந்தன் ஐயாவின் இந்த தீர்மானத்தினால் உதவி இராஜங்க செயலாளர் எலிஸ் வேல்ஸ் அம்மையார் அதிர்ச்சியடைந்து விட்டார்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்." 

மெரிக்க வெளிவிவாகர கற்கை துறையில் சம்பந்தர் அய்யாவின் அரசியல் வாழ்கையை பற்றி ஒரு அத்தியாயத்தை திறக்க அம்மையார் வலியுறுத்தி இருப்பார்.

சம்பந்தன் ஐயாவின் சாணக்கியம், அரசியல் வெற்றிகள்... என அமெரிக்கர்கள் படிக்கும் காலம் வந்துவிட்டது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தரின் தீர்மானத்தினால் அதிர்ந்துபோயுள்ளது அமெரிக்கா – போட்டுடைத்தார் சுமந்திரன்

 

சும்மா  அதிருதில்ல

தேர்தல் வருவதால்  இவ்வாறான அதிர்வுகள்  கனக்க  எதிர்பார்க்கலாம்

சுணை  கெட்ட  தமிழரின்  தலையில் ....??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?!

 

Link to comment
Share on other sites

2 hours ago, விசுகு said:

சம்மந்தரின் தீர்மானத்தினால் அதிர்ந்துபோயுள்ளது அமெரிக்கா – போட்டுடைத்தார் சுமந்திரன்

 

சும்மா  அதிருதில்ல

தேர்தல் வருவதால்  இவ்வாறான அதிர்வுகள்  கனக்க  எதிர்பார்க்கலாம்

சுணை  கெட்ட  தமிழரின்  தலையில் ....??

😂😂😂

அமெரிக்கா சொல்வதெற்கெல்லாம் பூம் பூம் மாடு போல் தலையாட்டி விட்டு வந்திருப்பார் சம்பந்தன். 

பின் தமிழர் தலையில் மிளகாய் அரைப்பதற்காக இப்படியான செய்திகள். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நான் வாயை திறந்து சொல்லா விட்டாலும் 
எதோ ஒருமாதிரி அவர்கள் நான் சம்மந்தன் நாட்டுகாரன் என்பதை கண்டுபிடித்த்து விடுகிறார்கள்.

கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கினால் 
என்னிடம் காசு வாங்குகிறார்கள் இல்லை 
எதுக்கு காசு என்று இழுக்கிறார்கள் 

அடிமாட்ட்த்தில் இருந்து ஜனாதிபதிவரை ... சம்மந்தன் என்றால் 
அதிர்ந்துபோய் கிடக்கிறார்கள். 
இன்று எல்லாம் பெரிதாக யாரும் வேலைக்கு கூட போனதாக தெரியவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Maruthankerny said:

இங்கு நான் வாயை திறந்து சொல்லா விட்டாலும் 
எதோ ஒருமாதிரி அவர்கள் நான் சம்மந்தன் நாட்டுகாரன் என்பதை கண்டுபிடித்த்து விடுகிறார்கள்.

கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கினால் 
என்னிடம் காசு வாங்குகிறார்கள் இல்லை 
எதுக்கு காசு என்று இழுக்கிறார்கள் 

அடிமாட்ட்த்தில் இருந்து ஜனாதிபதிவரை ... சம்மந்தன் என்றால் 
அதிர்ந்துபோய் கிடக்கிறார்கள். 
இன்று எல்லாம் பெரிதாக யாரும் வேலைக்கு கூட போனதாக தெரியவில்லை. 

எனது  வாகனம்  செல்ல

 இங்கு  காவல்த்துறையினர் பாதையமைத்து  தருகிறார்கள்

நான் உங்கள்  நண்பன்  என்பது தெரிந்து  விட்டதோ??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, விசுகு said:

எனது  வாகனம்  செல்ல

 இங்கு  காவல்த்துறையினர் பாதையமைத்து  தருகிறார்கள்

நான் உங்கள்  நண்பன்  என்பது தெரிந்து  விட்டதோ??

இந்த சந்தர்ப்பத்தை நாம் நழுவ விடக்கூடாது 
சம்மந்தன் பெயரை சொல்லி இங்கு இருக்கும் வங்கிகளில் காசுகளை வாங்கிவந்து 
வீட்டில் வைத்து பூட்டிவைத்து விட வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Maruthankerny said:

இந்த சந்தர்ப்பத்தை நாம் நழுவ விடக்கூடாது 
சம்மந்தன் பெயரை சொல்லி இங்கு இருக்கும் வங்கிகளில் காசுகளை வாங்கிவந்து 
வீட்டில் வைத்து பூட்டிவைத்து விட வேண்டும். 

பெயரை  சொல்ல  வேண்டிய  அவசியமே  இல்லைப்போலுள்ளது

சம்  என்று  சொல்ல  முன்பே

காலில்  விழாத குறையாக  அழுகிறார்கள்  பதறுகிறார்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

எனது  வாகனம்  செல்ல

 இங்கு  காவல்த்துறையினர் பாதையமைத்து  தருகிறார்கள்

நான் உங்கள்  நண்பன்  என்பது தெரிந்து  விட்டதோ??

அடபாவி
அமெரிக்கா தான் அதிர்ந்தது என்றால் பிரான்சுமா?

வேற இடங்களிலும் அதிர்ந்திருக்கா?

Link to comment
Share on other sites

2 hours ago, ஈழப்பிரியன் said:

அடபாவி
அமெரிக்கா தான் அதிர்ந்தது என்றால் பிரான்சுமா?

வேற இடங்களிலும் அதிர்ந்திருக்கா?

பிரான்ஸ் அதிர்ந்தால் அந்த அதிர்விலேயே சுவிஸ், ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெயின் எல்லாம் அதிர்ந்திருக்கும். 😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

அடபாவி
அமெரிக்கா தான் அதிர்ந்தது என்றால் பிரான்சுமா?

வேற இடங்களிலும் அதிர்ந்திருக்கா?

 

13 minutes ago, Lara said:

பிரான்ஸ் அதிர்ந்தால் அந்த அதிர்விலேயே சுவிஸ், ஜேர்மனி, இத்தாலி, ஸ்பெயின் எல்லாம் அதிர்ந்திருக்கும். 😀

ஜேர்மனியில்,  நான் வேலை செய்யும்  இடத்தில்...
எனது மனேஜரும்  சம்பந்தரின் சாணக்கிய செய்தியை... பார்த்து இருப்பார் போலுள்ளது.

காலையில்... என்னிடம் வந்து... "தமிழ்சிறி... நீர், தமிழ் ஆளோ  என்று கேட்டார்"
நான்...  "ஓம்.... ஏன்  அப்பிடி, கேட்கிறியள்"  என்று வினவிய போது....  

என்னை கட்டிப் பிடித்து.... முத்தமிட்டு....
இவ்வளவு பெரிய பக்கா அரசியல்வாதி உள்ள, தமிழ் இனத்தில்  இருந்து வருகின்ற நீங்கள்,
இங்கு வேலை செய்து கஸ்ரப்  பட வேண்டாம்.பென்சன்  எடுக்கும் மட்டும்,  
தாங்களே... முழு சம்பளத்தையும் வீட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறினார்.  

இப்ப எனக்கு... சம்பந்தன் ஐயாவால், 
வீட்டில் காலாட்டிக் கொண்டிருக்க சம்பளம் வர போகுது. ஜாலி....  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழும் அதிருதுங்கோ! கொஞ்சம் கூட அவிச்சுப்போட்டார் பேச்சாளர்.

Link to comment
Share on other sites

McDonalds இன்று big Mac இனை அரைவாசி விலையில் (வழக்கமாக $6, இன்று $3) விற்கின்றார்கள் என்று சொல்லும் போது ஏன் என தெரியாமல் இருந்தது.... , ரொரண்டோவில் நிறைய தமிழ் ஆக்கள் இருக்கினம் என்பதால் தான் என இப்ப விளங்கிட்டுது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனுசன் எப்ப பார்த்தாலும் அரைத்தூக்கத்திலதான் திரியுது. ஏதாச்சும் கனவில, கினவில பேசியிருக்கும். கொறட்டைச் சத்தத்தில அம்மணி அதிர்ந்துபோனா போல !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

 

ஜேர்மனியில்,  நான் வேலை செய்யும்  இடத்தில்...
எனது மனேஜரும்  சம்பந்தரின் சாணக்கிய செய்தியை... பார்த்து இருப்பார் போலுள்ளது.

காலையில்... என்னிடம் வந்து... "தமிழ்சிறி... நீர், தமிழ் ஆளோ  என்று கேட்டார்"
நான்...  "ஓம்.... ஏன்  அப்பிடி, கேட்கிறியள்"  என்று வினவிய போது....  

என்னை கட்டிப் பிடித்து.... முத்தமிட்டு....
இவ்வளவு பெரிய பக்கா அரசியல்வாதி உள்ள, தமிழ் இனத்தில்  இருந்து வருகின்ற நீங்கள்,
இங்கு வேலை செய்து கஸ்ரப்  பட வேண்டாம்.பென்சன்  எடுக்கும் மட்டும்,  
தாங்களே... முழு சம்பளத்தையும் வீட்டிற்கு அனுப்பி வைப்பதாக கூறினார்.  

இப்ப எனக்கு... சம்பந்தன் ஐயாவால், 
வீட்டில் காலாட்டிக் கொண்டிருக்க சம்பளம் வர போகுது. ஜாலி....  :grin:

உலகமே அதிருது போல.

யாராவது வேலையிடங்களில் பதவி உயர்வு வேண்டுமென்றால் இது தான் தருணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஈழப்பிரியன் said:

உலகமே அதிருது போல.

யாராவது வேலையிடங்களில் பதவி உயர்வு வேண்டுமென்றால் இது தான் தருணம்.

நான் இருக்கிற இடத்துக்கு  இனி நான் தானாம் விதானையார். நானும் ஓமெண்டுட்டன். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் ஜோன்சனோட வலும் காறாராய் பேசி - நாளைக்கே பிரெக்சிட்டை வாபஸ் வாங்கிறாராம் ஜோன்சன்.

ஐயா குடுத்த குடுவையில, ஜோன்சனுக்கு தலை மயிரெல்லாம் பழுத்துப் போச்சாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ட்ரம்பிற்குத் தேவையில்லாத பிரச்சினை.வடகொரியா,ஈரான் போன்ற நாடுகளுடன் பிரச்சினைப் படுவமா பேசித்தீர்ப்பமா என்று இருக்கிறதை விட்டிட்டு தேவையில்லாமல் எங்கடை வாழும் வீரர் சம்பந்தரோடை கேமைக் கேட்டது எவ்வளவு பெரிய தப்பாய் போச்சு.சிங்கன் சன்னதமாடினதைப்பார்த்த சுமத்திரன் குடுத்த தகவலைத்தான் இணையத்தில் செய்தியாய் போட்டிருக்கிறார்கள்.வல்லரசுகள் பாடு ஒரே ரணகளமாக இருக்கப்போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/14/2019 at 7:25 AM, தமிழ் சிறி said:

அதனை உடனடியாக மறுத்த சம்மந்தன் ஐயா, முடியாது – கேடு நிகழக்கூடாது என்பதற்காக செயற்பட்டு நாங்கள் களைத்துப் போய் விட்டோம் என்பதையும் எதிர்காலத்தில் அதற்காக எமது மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பதை உறுதியாக தெரிவித்துவிட்டு சம்மந்தன் ஐயா எழுந்து சென்று விட்டார்.

சம்மந்தன் ஐயாவின் இந்த தீர்மானத்தினால் உதவி இராஜங்க செயலாளர் எலிஸ் வேல்ஸ் அம்மையார் அதிர்ச்சியடைந்து விட்டார்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

 

ஆஹா, இன்னொரு சாதனை எங்கள் சோர்ட் வேர்சொன் (short version) உண்ணா விரதம் மாதிரி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.