Jump to content

ரணிலின் கைகளில், கோட்டாவின் வெற்றி-தோல்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலின் கைகளில், கோட்டாவின் வெற்றி-தோல்வி

புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஓகஸ்ட் 14 புதன்கிழமை, மு.ப. 04:37 Comments - 0

எதிர்பார்க்கப்பட்டது போல, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக, நந்தசேன கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவிக்கப்பட்டிருக்கிறார்.   

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்‌ஷக்கள் தோற்கடிக்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பப்பட்ட போது, அவர்களின் மீளெழுகை இவ்வளவு துரிதமாக நிகழும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.   

அதுவும், ஐந்து வருடங்களுக்குள்ளேயே, ‘ராஜபக்‌ஷக்கள் எதிர் இன்னொருவர்’ என்கிற நிலையை, ஜனாதிபதித் தேர்தல் களத்தில் உருவாக்கி இருக்கிறார்கள்.  

ஆட்சியில் இருக்கும் தரப்புக்கு எதிராக, வேட்பாளர்களைக் கண்டுபிடிப்பதும், அவரை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதும்தான், எப்போதுமே சிக்கலானது. ஏனெனில், எப்போதுமே ஆட்சியில் இருக்கும் தரப்பு, தங்களுடைய ஆட்சிக்காலம் பூராவும், அடுத்த வேட்பாளரை முன்னிறுத்தும் செயற்றிட்டங்களைச் செய்ய முடியும்.   

ஆனால், இன்றைக்குத் தென் இலங்கையில் நிகழ்ந்திருப்பது தலைகீழானது. கோட்டாவுக்கு எதிராக யாரை நிறுத்தினால், வெற்றிபெற முடியும் என்கிற விடயத்தை, ஆட்சித் தரப்பான ஐக்கிய தேசியக் கட்சி, எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.  

ராஜபக்‌ஷக்கள் தங்கள் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் கடப்பதற்கான ஒற்றை ஆயுதமாக, போர் வெற்றிக் கோசத்தை முன்வைக்கிறார்கள். கடந்த ஜனாதிபதித் தேர்தலில், போர் வெற்றிக் கோசத்தை தாண்டிய அதிருப்தி, ராஜபக்‌ஷக்கள் மீது நாட்டு மக்களுக்கு இருந்தது.   

அது ஓர் அலையாக எழுந்த போது, ராஜபக்‌ஷக்களின் தோல்வி தவிர்க்க முடியாமல் போனது. ஆனால், இறுதிப்போர் முடிவுக்கு வந்து, பத்து வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், போர் வெற்றிக் கோசம், தென் இலங்கையில் தன்னுடைய தாக்கத்தை குறிப்பிட்டளவில் செலுத்திக் கொண்டே இருக்கின்றது.   

அதற்கு, நூற்றாண்டு காலமாகப் புரையோடிப் போயிருக்கின்ற பௌத்த சிங்கள அடிப்படைவாத சிந்தனை, முக்கியமான காரணியாகும். அத்தோடு, ராஜபக்‌ஷக்களைத் தோற்கடித்துக் கொண்டு, ஆட்சி பீடமேறியவர்கள், செய்து முடித்திருக்க வேண்டிய வேலைகளைவிட்டு, தங்களது பலவீனங்களை வெளிப்படுத்திக் கொண்டிருந்தமை, நாட்டு மக்களிடம் எரிச்சலை ஏற்படுத்திருக்கின்றது. அதுவே, ராஜபக்‌ஷக்கள் மீளெழுவதற்கான பெரும் சுவடாகவும் மாறியிருக்கின்றது.  

கோட்டா, ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு மறுநாள், அரச நிகழ்வொன்றில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, “...மஹிந்த ஆட்சிக் காலத்தில், இடம்பெற்ற கொலைகள், கடத்தல்கள் உள்ளிட்ட பாரிய குற்றங்களுக்காக ராஜபக்‌ஷக்கள், (குறிப்பாக கோட்டா) மன்னிப்புக் கோரிவிட்டார்களா...?“ என்றொரு கேள்வியை எழுப்பினார்.  

 கடந்த ஜனாதிபதித் தேர்தல் கால பிரசார மேடைகளில் ரணிலும் அவரது பரிவாரங்களும் ராஜபக்‌ஷக்களுக்கு எதிராக, என்னென்ன குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்களோ, அதனையேதான், எந்தவித மாற்றங்களும் இன்றி, ஐந்து வருடங்களுக்குப் பின்னரும், இப்போதும் முன்வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.   

அந்தப் பாரிய குற்றங்கள் தொடர்பில், நீதியான விசாரணைகளை நடத்தி, குற்றவாளிகளைத் தண்டித்து, பாதிக்கப்பட்டவர்கள் எதிர்பார்க்கும் நீதியை வழங்கக் கூடிய அனைத்துச் சந்தர்ப்பங்களும் ரணிலுக்கும் அவரது அரசாங்கத்துக்கும் இருந்தது.   

ஆனால், அதற்கான வாய்ப்புகளை எல்லாம் ஒத்திப்போட்டு, ராஜபக்‌ஷக்கள் மீதான குற்றச்சாட்டுகளை, அரசியல் ரீதியாக மாத்திரம் கையாண்டது ரணிலும் மைத்திரியும்தான்.   
ராஜபக்‌ஷக்கள் நிகழ்த்திய குற்றங்களும் அதற்கான ஆதாரங்களும் இன்னமும் அனைவர் முன்னாலும் இருக்கின்றன. அப்படியான நிலையில், ரணில் மீண்டும் மீண்டும், பழைய பல்லவியைப் பாடுவது, அபத்தமான ஒன்றாகவே மக்களால் உணரப்படும்.  

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில், ராஜபக்‌ஷக்கள் வெற்றி பெறுவது, அவ்வளவுக்கு இலகுவான ஒன்றல்ல. ஆனால், அவர்கள் வெற்றிக்கு அருகில் வந்திருப்பதாக, தென் இலங்கையை நம்ப வைத்திருக்கிறார்கள்.   

கிட்டத்தட்ட, அது என்னமாதிரியாகப் பிரதிபலிக்க ஆரம்பித்திருக்கிறது என்றால், ‘...ஆம் ராஜபக்‌ஷக்கள் நாட்டைக் கொள்ளையடித்தார்கள்; சர்வாதிகார ஆட்சி நடத்தினார்கள்; ஆனால், அவர்களால் நாட்டின் பாதுகாப்பும் ஸ்திரத்தன்மையும் காக்கப்பட்டது. பலவீனமான ஆட்சியாளர்களைக் காட்டிலும், சர்வாதிகாரி மேல்...’ என்கிற நிலைக்கு வந்திருக்கின்றது.   

இந்த நிலை, படித்த, மத்தியதர வர்க்க சிங்களவர்களே, ராஜபக்‌ஷக்களை ஏற்றுக்கொள்வதற்கான நியாயப்படுத்தல்களாகச் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அப்படியான நிலையில், பாமர மக்கள் ராஜபக்‌ஷக்களைக் கொண்டாடுவதற்கான காரணங்களைத் தேட வேண்டியதில்லை.  

ராஜபக்‌ஷக்களின் கடந்தகால வெற்றிகளிலும் தோல்விகளிலும் ரணிலின் பங்கு கணிசமாக இருந்திருக்கின்றது. 2005ஆம் ஆண்டு, ஜனாதிபதித் தேர்தல் காலத்தில், மஹிந்தவைக் கணிக்கத்தவறி, சில இலட்ச வாக்குகளில் ராஜபக்‌ஷக்களிடம் வெற்றியைக் கையளித்தார்.   

அதுபோல், 2015இல் அவர்களிடத்தில் இருந்து வெற்றியைப் பறித்தெடுத்ததிலும் ரணிலின் பங்கு முதன்மையானது. இந்த முறையும், ராஜபக்‌ஷக்களின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் கட்டத்தில் ரணில் இருக்கிறார்.   

கோட்டாவுக்கு எதிராகத் தகுதியான வெற்றி வேட்பாளரை, அவரின் சுயநல கட்டங்களைத் தாண்டி நின்று, ரணில் முன்மொழியவில்லை என்றால், அது பெரும் தோல்வியாகவே முடியும். அது, ஐ.தே.கவின் வரலாற்றுத் தோல்விகளுக்கும் மீண்டும் வித்திடும்.  எப்போதுமே, வெளியில் ராஜபக்‌ஷக்களும் ரணிலும் எதிரெதிர் துருவங்களில் நின்று அடித்துக் கொண்டாலும், தனிப்பட்ட ரீதியில் இணக்கமான நட்புறவைப் பேணுபவர்கள்.   

ஐ.தே.க தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாஸவிடம் கையளிக்க வேண்டும் என்ற கோசம், 2010களுக்குப் பின்னராக பெருமெடுப்பில் எழுந்த போது, ரணிலைக் காப்பாற்றிவிட்டதில் மஹிந்தவின் பங்கு கணிசமானது. (குறிப்பாக, சிறிகொத்தாவில் ரணிலுக்கு எதிராகத் திரண்ட, ஐ.தே.க தொண்டர் படையை விரட்டியடித்து, ரணிலைக் காப்பாற்றினார் மஹிந்த)   
அதுபோல, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதும், மஹிந்த உடனடியாகத் தேடியது, ரணிலையேதான். தன்னையும் தன்னுடைய குடும்பத்தினரையும் காப்பாற்றும் பொறுப்பை, ரணில் ஏற்றுக்கொள்வார் என்று மஹிந்த நம்பினார். இன்றளவும் அதை, ரணில் நிரூபித்து வந்திருக்கிறார்.  

தற்போதும், தேர்தல் களத்தில் நேரடியாக மோதிக்கொள்வது போல, ரணில் காட்டிக் கொண்டாலும், ராஜபக்‌ஷக்களுடன், குறிப்பாக கோட்டாவுடன் இணக்கமான உறவொன்றை இரகசியமாகப் பேணும் கட்டத்தில், அவர் இருக்கிறார் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.   
குறிப்பாக, ஜனாதிபதித் தேர்தலில் கோட்டா வெற்றிபெற்றால், தேசிய அரசாங்கமொன்றை அமைத்துக் கொண்டு, தான் மீண்டும் பிரதமராக முடியும் என்கிற எண்ணத்தின் போக்கிலும், அவர் காய்களை நகர்த்தி வருவதாகக் கூறப்படுகின்றது.   

அதனூடாக, கட்சியின் தலைமைத்துவத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் தன்னால் தக்க வைக்க முடியும் என்றும் ரணில் நம்புகிறார். ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பொறுப்பில், கால் நூற்றாண்டு காலம் இருந்திருக்கின்ற ரணிலால், அந்தக் கட்சியை, சுமார் ஏழு ஆண்டுகள் மாத்திரமே ஆட்சியதிகாரத்தில் (அதுவும் முழுமையாக அல்லாமல்) வைத்திருக்க முடிந்திருக்கின்றது. 18 ஆண்டுகள் எதிர்க்கட்சியாக, அதுவும் மிகவும் பலவீனமான எதிர்க்கட்சியாகவே வைத்திருந்திருக்கிறார்.   

அப்படியான நிலையில், கட்சியின் தலைமைப் பொறுப்பைத் தொடர்ந்தும் பேணுவதற்காக, வெற்றியை ராஜபக்‌ஷக்களிடம் கையளிப்பதற்கும் தயாராகிவிட்டாரா என்கிற கேள்வி, ஐக்கிய தேசியக் கட்சியினரிடம் எழுந்திருக்கின்றது.   

அதுதான், அவரின் வழக்கமான வாக்குறுதி, சமாளிப்புகளைத் தாண்டிய ஒரு நிலையை, கட்சிக்குள்ளும் கூட்டணிக்குள்ளும் எடுக்கும் கட்டங்களைத் தூண்டியிருக்கின்றது.  

கோட்டாவைத் தோற்கடிக்கக் கூடிய பலத்துடன், ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இருக்கும் ஒரே தலைவர் சஜித் என்பதே, கட்சித் தொண்டர்களின் நம்பிக்கை; தென் இலங்கையிலும் அதுவே உணர்நிலை.   

அப்படியிருக்க, சஜித்துக்குப் பதிலாக இன்னொருவரை ரணில் முன்வைக்க முனைவதன் பின்னாலுள்ள செய்தி, சஜித் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றால், கட்சித் தலைமைத்துவம் எந்தக் கேள்விகளும் இன்றி, தன்னிடம் இருந்து பறிக்கப்பட்டுவிடும் என்பதாகும். அதன்போக்கிலேயே, இன்றைக்கு அவர் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.   

கோட்டாவின் வெற்றி என்பது, போர் வெற்றிக் கோசத்தால் மாத்திரமல்ல, ரணிலின் சுயநல ஆட்டத்தாலும் நிகழ்ந்துவிடுமோ என்பதுதான், பொதுவான பார்வை.  

கட்சியின் தலைமைத்துவத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக, கட்சிக்குள்ளேயே ரணில் குழப்பங்களை ஏற்படுத்தி விட்டிருக்கின்றார். இன்றைக்கு, அது, ஊடக வெளியில் முட்டிமோதும் கட்டத்துக்கு வந்திருக்கின்றது.   

ராஜபக்‌ஷக்கள் தேர்தலை வெற்றிகொள்ளும் வேலைத்திட்டங்களில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது, ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள், ஒருவர் மீது ஒருவர், சேறடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால், தொண்டர்கள் சோர்வடைய ஆரம்பித்து விட்டார்கள்.   

ஆனாலும், ஹரீன் பெர்னாண்டோ, அஜித் பெரேரா போன்ற இரண்டாம் தலைமுறைக்காரர்கள், ரணிலுக்கு எதிராக, சஜித்தை முன்னிறுத்தி, வெற்றியடைய வேண்டுமெனப் போராடுகிறார்கள்.   

ஏனெனில், இன்னொரு தோல்வி என்பது, ஆட்சி அதிகாரங்களை அடையும் கட்டங்களில் இருந்து, தங்களை இன்னொரு பத்து வருடங்கள் விலத்தி வைத்துவிடும் என்று, அவர்கள் நம்புகிறார்கள். அதனால்தான், ரணிலைத் தூக்கியெறிந்துவிட்டு, சஜித்தை முன்னிறுத்தவும் அவர்கள் துணிந்தார்கள். அது, ‘கோட்டா எதிர் சஜித்’ என்கிற தேர்தல் களத்தை, இறுதி செய்யும் கட்டத்துக்கு வந்திருக்கின்றது.   

அப்படியான நிலையில், இனிவரும் நாள்களில் கோட்டாவும் சஜித்தும் யார் உண்மையான பௌத்த சிங்களப் பேரினவாதி என்று நிரூபிக்கவே, போராட வேண்டியிருக்கும். ஏனெனில், அதுதான் இறுதி வெற்றியைத் தீர்மானிக்கப் போவதாக, அவர்கள் நம்புகிறார்கள்.    

 

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/ரணிலின்-கைகளில்-கோட்டாவின்-வெற்றி-தோல்வி/91-236702

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.