Jump to content

‘தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் கூட்டமைப்பு பின்நிற்காது’


Recommended Posts

image_b5c2102690.jpg

தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்நிற்காதென, கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன், தற்போது நாட்டுக்கு ஜனாதிபதித் தேர்தல் முக்கியமில்லை எனத் தெரிவித்த அவர், புதிய அரசமைப்பே தேவை. இதனைச் செய்வதற்கு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் துணிச்சல் இல்லையெனக் குற்றஞ்சாட்டினார்.  

அம்பாறை, திருக்கோவில் பிரதேச கலாசார மண்டபத்தில், நேற்று (13) மாலை இடம்பெற்ற தற்கால அரசியல் தொடர்பான மக்கள் சந்திப்பின் போதே, இவ்வாறு அவர் குற்றஞ்சாட்டினார்.

அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், சிங்கள, முஸ்லிம் மக்களை எதிரிகளாகக் கொண்டு, நாட்டில் சண்டையிட்டுக் கொண்டு தமிழ் மக்கள் வாழ விரும்பவில்லை எனவும் இன நல்லிணக்கத்துடன்தான் வாழ்வதற்கான முயற்சிகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதய சுத்தியுடன் முன்னெடுத்து வருகின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருப்பதைத் தவிர, தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பு எதையும் செய்யவில்லை எனப் பாரிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றமை அப்பட்டமான பொய் எனவும் அவர் தெரிவித்தார்.  

80 சதவீதமான காணி விடுவிப்பு, ஒரு தொகுதி அரசியல் கைதிகளின் விடுவிப்பு, தமிழ்ப் பிரதேச அபிவிருத்திகள், புதிய அரசமைப்புக்கான பேச்சுகள் எனப் பல்வேறு விடயங்களை பெற்றுக் கொடுத்திருக்கின்றோம் எனவும், சுமந்திரன் எம்.பி சுட்டிக்காட்டினார்.

மேலும், புதிய அரசமைப்பை உருவாக்குவதில் ஆட்சியாளர்கள் பின்நிற்கின்றார்கள் எனவும் இதனை நிறைவேற்றிவிட்டால் எங்கே தேர்தலில் தோற்றுவிடுவோம் என அவர்கள் அச்சுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/அம்பாறை/தமிழ்-மக்களின்-தீர்வு-விடயத்தில்-கூட்டமைப்பு-பின்நிற்காது/74-236723

Link to comment
Share on other sites

56 minutes ago, ampanai said:

மேலும், புதிய அரசமைப்பை உருவாக்குவதில் ஆட்சியாளர்கள் பின்நிற்கின்றார்கள் எனவும் இதனை நிறைவேற்றிவிட்டால் எங்கே தேர்தலில் தோற்றுவிடுவோம் என அவர்கள் அச்சுகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த கூற்றை நம்ப முடியாமல் உள்ளது. இது பற்றி வேறு யாரும் பேசினார்களா என தெரியவில்லை.

58 minutes ago, ampanai said:

80 சதவீதமான காணி விடுவிப்பு, ஒரு தொகுதி அரசியல் கைதிகளின் விடுவிப்பு, தமிழ்ப் பிரதேச அபிவிருத்திகள், புதிய அரசமைப்புக்கான பேச்சுகள் எனப் பல்வேறு விடயங்களை பெற்றுக் கொடுத்திருக்கின்றோம் எனவும், சுமந்திரன் எம்.பி சுட்டிக்காட்டினார்.

காணி விடயத்தில் வீதத்தை கூறியவர் ஏன் அரசியல் கைதிகளின் விபரத்தை தருகிறார் இல்லை?

Link to comment
Share on other sites

14 hours ago, ampanai said:

தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்நிற்காதென, கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இங்கே சில சொற்களைக் காணவில்லை. அதனால் செய்தி பிழையாகிவிட்டது/

தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் பின்நிற்காதென, கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழினக் கொலைகாரர்களின் பின்னால் தான் நிற்கும் என்று சுத்துதுமாத்து சுமந்திரன் கூறியிருக்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் வரும் நேரம் என்றால் 
இனி சின்னராசுவை கையிலேயே பிடிக்க முடியாது.
ஒரே தீர்வுதான் .... தமிழர்கள் போதும் போதும் என்றாலும் 
சின்ராசு விடமாட்டான் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

hqdefault.jpg

உங்களத்தான் நம்புது இந்த பூமி..

இனி எங்களுக்கு நல்ல வழி காமி..!

👍

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.