Jump to content

காஷ்மிர் குறித்து தமிழ் தலைமைகளின் மௌனம்


Recommended Posts

இன்று, காஷ்மிர் கொதி நிலையில் உள்ளது. உலகிலுள்ள ஒடுக்கப்பட்ட மக்கள், காஷ்மிரியர்களுக்காகத் தமது ஆதரவை வழங்கியுள்ளார்கள். காஷ்மிரில் நிகழ்த்தப்பட்டது, மிகப்பெரிய அநியாயம் என்பதை ஒடுக்கப்பட்ட, உரிமைகளுக்காகப் போராடும் மக்கள் அறிந்திருக்கிறார்கள். 

உலகெங்கிலுமிருந்து காஷ்மிரியர்களுக்கு ஆதரவாகக் குரல்கள் தொடர்ந்து ஒலிக்கின்றன. ஆனால், உலகில் நீண்ட காலமாக, ஒடுக்கப்பட்ட ஓர் இனமான தமிழ் இனத்தின் அரசியல் பிரதிநிதிகள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டு, நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் அமர்ந்திருக்கும் தலைமைகள், ஒரு புறமும் தமிழ்த் தேசியத்தை முன்னெடுப்பதாகச் சொல்வோர்; மறுபுறமுமாக, காஷ்மிர் தொடர்பில், வாய் பொத்தி மௌனம் காக்கிறார்கள்.   

இந்த மௌனம் சொல்லும் செய்தி கனமானது. இது, தங்கள் இந்திய எஜமானர்களுக்கு எதிராக, எந்தக் கணத்திலும் குரல் கொடுக்கத் தயாராக இல்லை என்பதை, இன்னொரு முறை ஆணித்தரமாக நிறுவுகிறது. 

இவர்களது அரசியல், மக்கள் நல அரசியலன்று; அதிகார ஆசைக்கான அரசியல் என்பது புலனாகிறது. 

தமிழ்த் தேசியத்தின் பெயரால், வாக்கு வங்கி அரசியலும் உணர்ச்சி அரசியலையும் முன்னெடுக்கும் பிற்போக்குத்தனத்தின் வெளிப்பாடுதான் இந்த மௌனம்.   

உலகில் நீண்ட காலமாக, ஒடுக்கப்பட்டு வரும் சமூகங்களில் ஒன்றாக, தமிழ்ச் சமூகம், தொடர்ச்சியாக இருந்து வருகிறது. ஆனால், நமது ஆண்ட பரம்பரைக் கனவுகளில், நாம் ஆழ்ந்து இருக்கிறோம். 

பழைய புண்ணைச் சொறிந்து சொறிந்து, சுகம் காண்பது போல, பழைய கதைகளில் திழைத்துத் திழைத்து, காலத்தைக் கடத்துகிறோம்.   

ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் என்ற வகையில், நமது நிலை என்ன? 

நம்மையொத்த நிலையில் உள்ள, உலகின் பிற மக்கள் யார்? 

நாம் யாருடன், நம்மை அடையாளப்படுத்துவது? இந்த மாதிரி, விடயங்களில் சரியான தளத்தை வந்தடைய, நமக்கு உலக நிலைமைகள் பற்றிய உண்மைகள், தெரிய வேண்டும்; நமது வரலாறு பற்றிய உண்மைகள், தெரிய வேண்டும். அவை, ஏன் சொல்லப்படுவதில்லை என்பதை, நாம் கவனமாக ஆராய வேண்டும்.   

1950களில், குறிப்பாக, 1961ஆம் ஆண்டு நடைபெற்ற சத்தியாக்கிரகத்தின் தோல்வியை அடுத்து, ஏற்பட்ட திகைப்பின் தொடர்ச்சியாக, நமக்கு முன்னுதாரணமான ஒரு நாடாக, இஸ்‌ரேல் காட்டப்பட்டது.

இஸ்‌ரேல் அரங்கேற்றி வந்த கொடுமைகள் பற்றிப் பேச, இஸ்‌ரேலின் உருவாக்கம் எவ்வளவு அநீதியானது என்று நமக்குச் சொல்லப்பட்டதில்லை. ‘மீண்டும் ஒருமுறை ஆளுகிறார்கள்’ என்ற அந்தப் ‘பொதுமை’, தமக்குப் போதுமானதாகவே தலைவர்களுக்குத் தெரிந்தது. 

நமது நிலை, பலஸ்தீனத்தின் அராபியர்களது நிலை போன்றது என்பதையும் அந்த ஒற்றுமை, பல வகைகளிலும் பொருந்தி வருகிறது என்பதையும் நாம் உணரவில்லை. 

இன்றும் இஸ்‌ரேலிய உதாரணம் பற்றி மெச்சப்படுகிறது. இஸ்‌ரேல் எவ்வாறு பலஸ்தீனத்தில் குடியேற்றங்களை அமைத்ததோ, அதைப்போன்றே இன்று இலங்கையின் வடக்கு, கிழக்கில் நடக்கிறது. ஆனால் நமக்கு, இஸ்‌ரேல் உதாரணமாகக் காட்டப்படுகிறது.   

கொஞ்சக் காலம், பங்களாதேஷ் விடுதலையை வென்று தந்த இந்தியாவே, தமிழீழ விடுதலையை வென்று தரும் என்ற கனவு, ஊட்டி வளர்க்கப்பட்டது. இந்தியாவின் சேவகன் போன்று செயற்பட்ட முஜிபுர் ரஹ்மான், மக்களின் ஆதரவை இழந்து, இராணுவச் சதியில் உயிரிழந்த நாள் வரை, முஜிபுர் தமிழருக்கு முன்னுதாரணமாகக் காட்டப்பட்டு வந்தார். இவ்வாறு, தவறான உதாரணங்களே நமக்குக் காட்டப்பட்டு வந்துள்ளன.   

இன்று, ஒடுக்கப்படும் காஷ்மிரியர்களுக்குக் குரல் கொடுக்க வேண்டியது ஈழத் தமிழர்களின் கடமையாகிறது. இதை நாம் செய்தாக வேண்டும். 

ஒடுக்கப்பட்ட சமூகமாகிய நாம், ஆதரவை வேண்டி நிற்கவேண்டியது, ஒடுக்கப்பட்ட சமூகங்களிடமே; ஒடுக்குமுறையாளர்களிடம் அல்ல.  

தமது சொந்த மக்களையே ஒடுக்கும், அதிகாரங்களைப் பறிக்கும், வன்முறையை ஏவும் ஒரு நாடு, இன்னொரு நாட்டில், அதே அவலங்களுக்கு உட்படும் ஒரு சமூகத்துக்கு விடுதலையைப் பெற்றுத்தரும் என்று நம்பச் சொல்வது, அயோக்கியத்தனமானது. 

ஒடுக்கப்பட்ட சமூகமொன்றின் பிரதிநிதிகள், ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல்கொடுக்கத் தவறுவது தற்செயலானதல்ல; அவர்களின் நடத்தை, அவர்களின் நோக்கங்களைப் பிரதிபலிக்கிறது.  

‘இந்தியாவை நம்பலாம்’ என்று சொல்லிய, சொல்லி வருகின்ற ஒவ்வொருவரும், காஷ்மிர் விடயத்தில், இந்தியாவின் நடத்தை பற்றி முதலில் வாய்திறக்கட்டும். 

விடுதலை என்பது, அறம் சார்ந்தது என்ற உண்மை, எமக்கு உறைக்கிற வரை, நாம் முன்செல்ல இயலாது.   

http://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/காஷ்மிர்-குறித்து-தமிழ்-தலைமைகளின்-மௌனம்/91-236761

Link to comment
Share on other sites

  • Replies 156
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கூரை  ஏறி.... கோழி பிடிக்க முடியாதவனை, 
வானம் ஏறி... வைகுண்டம் போவான் என்று எதிர்பார்க்கக் கூடாது. 

கூட்டமைப்பு.... உள்ளூர் அரசியலேயே,  உளறிக்  கொட்டிக் கொண்டு  நிற்கும் போது...
காஷ்மீர் பக்கம் போய்... அடி  வாங்கிக் குடுக்காதேங்கோ.....   :grin:

Link to comment
Share on other sites

14 hours ago, ampanai said:

இன்று, ஒடுக்கப்படும் காஷ்மிரியர்களுக்குக் குரல் கொடுக்க வேண்டியது ஈழத் தமிழர்களின் கடமையாகிறது. இதை நாம் செய்தாக வேண்டும். 

 

ஈழத்தமிழர்களுக்கு ஒரு நாடு இருந்திருந்தால் நிச்சயம் குரல் கொடுக்கப்பட்டிருக்கும்.

 

Link to comment
Share on other sites

ஏன் குரல் கொடுக்க வேண்டும்?

எம் மீது மிகப் பெரும் இனவழிப்பு இடம் பெற்ற போது எந்த எதிர்ப்புக் குரலும் கொடுக்காது காஷ்மீரிகள், காஷ்மீரத்து முஸ்லிம் தலைவர்கள் தம் எஜமானர்களின் மீதான (பாகிஸ்தானியர்கள் மீதான) விசுவாசத்தை காட்டிக் கொண்ட மாதிரி நாம் மெளனமாக இருப்பதில் தவறில்லை. இது பாலஸ்தீனர்களுக்கும் பொருந்தும்.

விடுதலை என்பது வெறுமனே அறம் சார்ந்தது மட்டுமல்ல, அரசியல் சார்ந்ததும் ஆகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ampanai said:

இன்று, ஒடுக்கப்படும் காஷ்மிரியர்களுக்குக் குரல் கொடுக்க வேண்டியது ஈழத் தமிழர்களின் கடமையாகிறது. இதை நாம் செய்தாக வேண்டும்.

காஷ்மீரிகள் எந்த அடிப்படையில் ஒடுக்கப்படுகிறார்கள் என்று தெளிவு படுத்தினால், ஆதரவை பற்றி கதைக்கலாம்.

காஷ்மீரிகள் ஒடுக்கப்படவில்லை. அங்கு ஹிந்தியை ராணுவத்தால் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகிறது என்பது உண்மை.

ஆட்சிக்கலையில் (statecraft) நான்கு அம்சங்களை, பாதுகாப்பு, வெளிநாட்டுக் அலுவல்கள் , நிதி, தொடர்பாடல் என்பதை தவிர, மிகுதி எல்லாமே காஷ்மீர் நிர்வாகத்திற்கு உட்பட்டது.

குடி வரவு குடியகல்வு கூட (உண்மையில் வெளிநாட்டுக்கு கொள்கையின் ஓர் பகுதி), கமீரிகளின் முடிவே இறுதியானது.

காஷ்மீரிகள் போராட்டம் தொடங்கியது, உரிமைகளை கேட்டு அல்ல, பாகிஸ்தானுடன் இணைவதற்கு, நடத்தப்படவேண்டிய சர்வசன வாக்கெடுப்பை வலியுறுத்தி. இப்பொது, தனி நாட்டில் வந்து நிக்கிறது.

அவர்களுடைய குடிப்பரம்பல், கலாசாரம், மதம், நிலம், வளம், மற்றும் எல்லாவற்றையும்  கிந்தியா விரும்பியோ விரும்பாமலோ பாதுகாத்தே வந்துள்ளது.

காஸ்மீரின் இயற்கை சனத்தொகை வளர்ச்சி பாதிக்கப்படவே இல்லை.

இதுவா, ஈழத்தமிழரின் நிலை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ampanai said:

 

ஈழத்தமிழர்களுக்கு ஒரு நாடு இருந்திருந்தால் நிச்சயம் குரல் கொடுக்கப்பட்டிருக்கும்.

 

இது தெரிந்துதான் இந்தியா அப்படி ஒரு தேசமே வரக்கூடாது என்பதில் அவ்வளவு கவனமாக இருக்கிறார்கள்.

இந்த வீண் ஜம்பம் எல்லாம் நமக்கு தேவையா?

நமக்கும் கச்மீருக்கும் என்ன உறவு?

நாம் அழிந்த போது பாருக் அப்துல்லா மத்திய அமைச்சர் என்று நினைகிறேன்.

மூஞ்சூறு தான் போகவே வழியில்லையாம், தும்புக் கட்டையையும் தூக்கிச்சாம்.

57 minutes ago, Kadancha said:

காஷ்மீரிகள் எந்த அடிப்படையில் ஒடுக்கப்படுகிறார்கள் என்று தெளிவு படுத்தினால், ஆதரவை பற்றி கதைக்கலாம்.

காஷ்மீரிகள் ஒடுக்கப்படவில்லை. அங்கு ஹிந்தியை ராணுவத்தால் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகிறது என்பது உண்மை.

ஆட்சிக்கலையில் (statecraft) நான்கு அம்சங்களை, பாதுகாப்பு, வெளிநாட்டுக் அலுவல்கள் , நிதி, தொடர்பாடல் என்பதை தவிர, மிகுதி எல்லாமே காஷ்மீர் நிர்வாகத்திற்கு உட்பட்டது.

குடி வரவு குடியகல்வு கூட (உண்மையில் வெளிநாட்டுக்கு கொள்கையின் ஓர் பகுதி), கமீரிகளின் முடிவே இறுதியானது.

காஷ்மீரிகள் போராட்டம் தொடங்கியது, உரிமைகளை கேட்டு அல்ல, பாகிஸ்தானுடன் இணைவதற்கு, நடத்தப்படவேண்டிய சர்வசன வாக்கெடுப்பை வலியுறுத்தி. இப்பொது, தனி நாட்டில் வந்து நிக்கிறது.

அவர்களுடைய குடிப்பரம்பல், கலாசாரம், மதம், நிலம், வளம், மற்றும் எல்லாவற்றையும்  கிந்தியா விரும்பியோ விரும்பாமலோ பாதுகாத்தே வந்துள்ளது.

காஸ்மீரின் இயற்கை சனத்தொகை வளர்ச்சி பாதிக்கப்படவே இல்லை.

இதுவா, ஈழத்தமிழரின் நிலை?

இதுவரை கஸ்மீரின் இனப்பரம்பலும் வளங்களும், தனித்துவமும் பேணப்படக் காரணமே 370 மற்றும் 35 சரத்துகள்தாம்.

இனித்தான் இருக்கு விளையாட்டே. பூரா ஹிந்திய மயாமாக்கி, கஸ்மீரில் கஸ்மீரிககளையே சிறுபான்மை ஆக்குவதே மோடியின் திட்டம்.

திட்ட மேல் ஆலோசனை : சாட்சாத் இஸ்ரேல்.

Link to comment
Share on other sites

1 hour ago, Kadancha said:

காஷ்மீரிகள் எந்த அடிப்படையில் ஒடுக்கப்படுகிறார்கள் என்று தெளிவு படுத்தினால், ஆதரவை பற்றி கதைக்கலாம்.

காஷ்மீரிகள் ஒடுக்கப்படவில்லை. அங்கு ஹிந்தியை ராணுவத்தால் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகிறது என்பது உண்மை.

ஆட்சிக்கலையில் (statecraft) நான்கு அம்சங்களை, பாதுகாப்பு, வெளிநாட்டுக் அலுவல்கள் , நிதி, தொடர்பாடல் என்பதை தவிர, மிகுதி எல்லாமே காஷ்மீர் நிர்வாகத்திற்கு உட்பட்டது.

குடி வரவு குடியகல்வு கூட (உண்மையில் வெளிநாட்டுக்கு கொள்கையின் ஓர் பகுதி), கமீரிகளின் முடிவே இறுதியானது.

காஷ்மீரிகள் போராட்டம் தொடங்கியது, உரிமைகளை கேட்டு அல்ல, பாகிஸ்தானுடன் இணைவதற்கு, நடத்தப்படவேண்டிய சர்வசன வாக்கெடுப்பை வலியுறுத்தி. இப்பொது, தனி நாட்டில் வந்து நிக்கிறது.

அவர்களுடைய குடிப்பரம்பல், கலாசாரம், மதம், நிலம், வளம், மற்றும் எல்லாவற்றையும்  கிந்தியா விரும்பியோ விரும்பாமலோ பாதுகாத்தே வந்துள்ளது.

காஸ்மீரின் இயற்கை சனத்தொகை வளர்ச்சி பாதிக்கப்படவே இல்லை.

இதுவா, ஈழத்தமிழரின் நிலை?

இது 2016 இல் வினவில் வந்தது. 

காஷ்மீர் மக்கள் வஞ்சிக்கப்பட்ட வரலாறு

ஆங்கிலேயரின் நேரடி ஆதிக்கத்தின்கீழ் இருந்த இந்தியாவின் பகுதி (பிரிட்டிஷ் இந்தியா) 1947 ஆகஸ்ட் 15-இல் மவுண்ட் பேட்டன் திட்டத்தின்படி, இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாகத் துண்டாடப்பட்டது. நூற்றுக்கணக்கான சமஸ்தானங்கள் தொடர்பாக ஆங்கிலேய ஏகாதிபத்தியம் சூழ்ச்சிகரமான ஒரு திட்டத்தை அறிவித்தது. இந்தியாவுடன் சேருவதா, பாகிஸ்தானுடன் சேருவதா, அல்லது தனிநாடாக இருந்து கொள்வதா என்பதை அந்தந்த சமஸ்தான மன்னர்களே தீர்மானித்துக் கொள்வார்கள் என்பதுதான் அந்தத் திட்டம்.

அப்பொழுது காஷ்மீர் சமஸ்தானத்திற்கு டோக்ரா வம்சத்தைச் சேர்ந்த இராஜபுத்திர அரசர் ஹரிசிங் என்பவர் மன்னராக இருந்தார். இவர் இந்து; மக்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள். இவர் இந்தியா, பாகிஸ்தான் எதனுடனும் சேராமல் தனி நாடாக இருக்கப் போவதாக அறிவித்தார். ஆனால் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த ஆளும் வர்க்கங்களும், ஆட்சியாளர்களும் ஆசை காட்டுதல், திரைமறைவுச் சூழ்ச்சிகள், மிரட்டுதல், நேரடியாகப் படையெடுத்தல் போன்ற எல்லா வழிமுறைகளையும் கையாண்டு எப்படியாவது காஷ்மீரைத் தங்களது ஆதிக்கத்தில் கொண்டுவந்துவிட வேண்டுமென்று முயன்று கொண்டிருந்தார்கள்.

1947-க்கு முன்பிருந்தே காஷ்மீர் தனி நாடாகவே இருக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்து 1932-இல் அமைக்கப்பட்ட “அனைத்து ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு” என்ற கட்சி போராடி வந்தது. இதன் தலைவர்தான் ஷேக் அப்துல்லா.

ஆரம்பத்தில் முஸ்லிம் மத உணர்வைப் பயன்படுத்தி செல்வாக்கு தேட முயன்ற தேசிய மாநாட்டுக் கட்சி, பின்னர் மத வேறுபாடின்றி போராட ஆரம்பித்தது. 1944-இல் “புதிய காஷ்மீர்” என்ற பெயரில் ஒரு கொள்கை அறிக்கை வெளியிட்டது. அதில், “காஷ்மீர், பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபட்ட தனிநாடாக வேண்டும்; சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்; தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட அவை மற்றும் அதற்குப் பொறுப்பான அமைச்சரவை; கேந்திர தொழிற்சாலைகள் தேசியமயம்; ஏகபோக தனியார் முதலாளித்துவம் ஒழிக்கப்படும்; தேர்ந்தெடுக்கவும் தேர்ந்தெடுக்கப்படவும் ஆண்களோடு சமமாக பெண்களுக்கு உரிமை” – போன்ற திட்டங்கள் அதில் வெளியிடப்பட்டிருந்தன.

ஆரம்பத்திலிருந்தே ஷேக் அப்துல்லாவைத் தனது செல்வாக்கிற்குள் கொண்டுவர முயன்றார் முகமது அலி ஜின்னா. காஷ்மீரைப் பாகிஸ்தானுடன் இணைத்துக் கொள்ள ஷேக் அப்துல்லாவைப் பயன்படுத்த ஜின்னா எண்ணினார். ஊசலாட்டத்தைக் காண்பித்தாலும் ஷேக் அப்துல்லா, ஜின்னாவின் வலையில் விழவில்லை. “எல்லா மதத்தினரும் சமமாகவும் இணக்கமாகவும் வாழுகின்ற சுதந்திர தனி நாடாகவே காஷ்மீர் இருக்க விரும்புகிறது. இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ அது சேர விரும்பவில்லை” என அறிவித்து ஷேக் அப்துல்லா மக்களைத் திரட்டினார். காஷ்மீர் மக்களும் இதையே விரும்பினர். 1947 ஆகஸ்டில், காஷ்மீர் தனி நாடாகவே இருக்கும் என மன்னர் ஹரிசிங் அறிவித்திருந்தார்.

1947 அக்டோபர் 22-இல் பாகிஸ்தான் படைகள் காஷ்மீருக்குள் நுழைந்து ஆக்கிரமித்தன. மன்னர் ஹரிசிங்கின் இராணுவம் பலவீனமான நிலையில் இருந்ததால், பாகிஸ்தான் படைகள் வேகமாக முன்னேறின. பெரிய அளவுக்கு எதிர்ப்பு இல்லாமல் காஷ்மீரைச் சூறையாடி முன்னேறி, தலைநகர் சிறீநகரையே வளைத்துக் கொண்டன பாகிஸ்தான் படைகள். ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சித் தொண்டர்கள்தான் பாக் படையை எதிர்த்து ஆங்காங்கே போராடினர்.

மன்னர் ஹரிசிங் இந்தியாவின் இராணுவ உதவியை நாடினார். இதன் பொருட்டு காஷ்மீரை இந்தியாவுடன் இடைக்காலமாக (தற்காலிகமாக) இணைத்தார். 1947 அக்டோபர் 26-இல் இணைப்புக்கான ஒப்பந்தத்தில் மன்னர் ஹரிசிங் கையெழுத்திட்டார். ஷேக் அப்துல்லாவும் அந்த ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்ட பின்னரே, இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. உடனே பாகிஸ்தான் படையின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தி பின்னோக்கி விரட்ட இந்தியப் படைகள் அனுப்பப்பட்டன. சிறீநகர் முற்றுகையை உடைத்து இந்தியப் படைகள் முன்னேறின.

காஷ்மீர் இந்தியாவுடன் இடைக்காலமாகத்தான் (தற்காலிகமாக) இணைக்கப்பட்டது. அதாவது, காஷ்மீரின் பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள், தகவல் தொடர்பு -ஆகிய மூன்று விசயங்களை மட்டும் இந்தியா கவனித்துக் கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டது. மற்றபடி இந்த இணைப்பு ஒப்பந்தம் வேறு எதையும் குறிக்கவில்லை. தற்காலிகமாக காஷ்மீர் இந்தியாவின் பகுதியாகிவிட்டது என்ற பாத்தியதையை அந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு அளிக்கவில்லை.

மவுண்ட் பேட்டனின் ஆலோசனையின் பேரில் ஒரு நிபந்தனையும் அந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. அதாவது, “படையெடுப்பாளர்கள் துரத்தப்பட்டு அமைதி சூழ்நிலை நிலைநாட்டப்பட்டபின், காஷ்மீர் மக்களது விருப்பத்தின் அடிப்படையில் காஷ்மீரின் இணைப்பு பற்றி இறுதி முடிவெடுக்கப்படும்” என்பதே அது. ‘இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் படேல், பின்னாளில் ஜனசங்கத் தலைவராக மாறிய ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆகிய அமைச்சர்கள் உள்ளிட்ட மத்திய அமைச்சரவையின் ஏகமனதான ஒப்புதலோடுதான் அந்த ஒப்பந்தத்தை இந்தியா ஏற்றுக் கொண்டது. (ஆதாரம்: “காஷ்மீர் – உண்மையில் நடந்தது என்ன?” என்ற நூலில் பக்கம் 12-24, ஆசிரியர்: அஜித் பிரசாத் ஜெயின், 1950-இன் ஆரம்ப ஆண்டுகளில் நேரு அமைச்சரவையில் நிவாரணம் மற்றும் புனர்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தவர்.)

இதற்கிடையே பாகிஸ்தானின் போர் நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி ஐ.நா.சாசனத்தின் 3-வது விதியைக் காட்டி ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலிடம் இந்தியா முறையிட்டது. ஐ.நா. சபையின் தலையீட்டால் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இரு நாட்டுப் படைகளும் ஆக்கிரமித்திருந்த காஷ்மீரத்தின் பகுதிகள் அந்தந்த அரசின் – படைகளின் ஆதிக்கத்தில் இருக்கும். ஐ.நா.சபையின் மேற்பார்வையில் காஷ்மீரின் எதிர்காலம் குறித்து “காஷ்மீர் மக்களிடையே ஒரு கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்தி காஷ்மீரின் எதிர்காலம் பற்றித் தீர்மானிக்கப்படும்” என்று ஐ.நா. சபை தீர்மானித்தது. இதை இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்றுக் கொண்டன. இவ்வாறுதான் காஷ்மீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பங்கு போட்டுக் கொண்டன.

அதன் பின்னர் நேரு முதல் இன்றைய மோடி வரையிலான எல்லா பிரதமர்களும், எல்லா அரசுகளும் காஷ்மீர் மக்களை முதுகிலும் நெஞ்சிலும் குத்தி வருகின்றனர் என்பதுதான் வரலாறு. 1947 இல் பாகிஸ்தான் படைகளிடமிருந்து விடுதலை பெறுவதற்கு காஷ்மீர் மக்களுக்கு உதவுவது என்ற பெயரில் உள்ளே சென்றது இந்திய இராணுவம். இன்று இந்தியாவிடமிருந்து விடுதலை கேட்கும் காஷ்மீர் மக்களை ஒடுக்குவதற்கு இந்திய இராணுவத்தின் பெரும்பகுதி காஷ்மீரில் நிரந்தரமாகவே நிலை கொண்டிருக்கிறது.

https://www.vinavu.com/2016/08/18/the-history-of-indian-betrayal-of-kashmir/

பி.கு: இப்பொழுது 370 பிரிவு, 35A பிரிவு ரத்து செய்யப்பட்டு விட்டது. எனவே இதுவரை வழங்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகளும் இனி இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு திருத்தம், 1947 இல் உள்ளே புகுந்தது பாகிஸ்தான் ராணுவமல்ல, பாகிஸ்தானின் நோர்த் வெஸ்ட் புரொண்டியர் பகுதியில் வாழ்ந்த பதான் இன ஆயுதக் கும்பல். பாகிஸ்தான் அரசின், கீழ் நிலை ராணுவத்தினரின் மறைமுக ஆதரவுடன்.

முதலில் ராணுவத்தை நேரடியாக இறக்க ஜின்னா தயங்கினார், கூடவே அப்போதைய பாகிஸ்தானிய ராணுவத்தின் கட்டளை அதிகாரிகள் ஆங்கிலேயர்கள் - அவர்கள் இந்திய துணைக் கண்ட பாகப் பிரிவினை திட்டத்துக்கு மாறாக எதையும் செய்ய இணங்கவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, Lara said:

காஷ்மீர் மக்கள் வஞ்சிக்கப்பட்ட வரலாறு

ஆங்கிலேயரின் நேரடி ஆதிக்கத்தின்கீழ் இருந்த இந்தியாவின் பகுதி (பிரிட்டிஷ் இந்தியா) 1947 ஆகஸ்ட் 15-இல் மவுண்ட் பேட்டன் திட்டத்தின்படி, இந்தியா, பாகிஸ்தான் என இரு நாடுகளாகத் துண்டாடப்பட்டது. நூற்றுக்கணக்கான சமஸ்தானங்கள் தொடர்பாக ஆங்கிலேய ஏகாதிபத்தியம் சூழ்ச்சிகரமான ஒரு திட்டத்தை அறிவித்தது. இந்தியாவுடன் சேருவதா, பாகிஸ்தானுடன் சேருவதா, அல்லது தனிநாடாக இருந்து கொள்வதா என்பதை அந்தந்த சமஸ்தான மன்னர்களே தீர்மானித்துக் கொள்வார்கள் என்பதுதான் அந்தத் திட்டம்.

அப்பொழுது காஷ்மீர் சமஸ்தானத்திற்கு டோக்ரா வம்சத்தைச் சேர்ந்த இராஜபுத்திர அரசர் ஹரிசிங் என்பவர் மன்னராக இருந்தார். இவர் இந்து; மக்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள். இவர் இந்தியா, பாகிஸ்தான் எதனுடனும் சேராமல் தனி நாடாக இருக்கப் போவதாக அறிவித்தார். ஆனால் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த ஆளும் வர்க்கங்களும், ஆட்சியாளர்களும் ஆசை காட்டுதல், திரைமறைவுச் சூழ்ச்சிகள், மிரட்டுதல், நேரடியாகப் படையெடுத்தல் போன்ற எல்லா வழிமுறைகளையும் கையாண்டு எப்படியாவது காஷ்மீரைத் தங்களது ஆதிக்கத்தில் கொண்டுவந்துவிட வேண்டுமென்று முயன்று கொண்டிருந்தார்கள்.

1947-க்கு முன்பிருந்தே காஷ்மீர் தனி நாடாகவே இருக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்து 1932-இல் அமைக்கப்பட்ட “அனைத்து ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு” என்ற கட்சி போராடி வந்தது. இதன் தலைவர்தான் ஷேக் அப்துல்லா.

ஆரம்பத்தில் முஸ்லிம் மத உணர்வைப் பயன்படுத்தி செல்வாக்கு தேட முயன்ற தேசிய மாநாட்டுக் கட்சி, பின்னர் மத வேறுபாடின்றி போராட ஆரம்பித்தது. 1944-இல் “புதிய காஷ்மீர்” என்ற பெயரில் ஒரு கொள்கை அறிக்கை வெளியிட்டது. அதில், “காஷ்மீர், பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுபட்ட தனிநாடாக வேண்டும்; சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்; தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட அவை மற்றும் அதற்குப் பொறுப்பான அமைச்சரவை; கேந்திர தொழிற்சாலைகள் தேசியமயம்; ஏகபோக தனியார் முதலாளித்துவம் ஒழிக்கப்படும்; தேர்ந்தெடுக்கவும் தேர்ந்தெடுக்கப்படவும் ஆண்களோடு சமமாக பெண்களுக்கு உரிமை” – போன்ற திட்டங்கள் அதில் வெளியிடப்பட்டிருந்தன.

ஆரம்பத்திலிருந்தே ஷேக் அப்துல்லாவைத் தனது செல்வாக்கிற்குள் கொண்டுவர முயன்றார் முகமது அலி ஜின்னா. காஷ்மீரைப் பாகிஸ்தானுடன் இணைத்துக் கொள்ள ஷேக் அப்துல்லாவைப் பயன்படுத்த ஜின்னா எண்ணினார். ஊசலாட்டத்தைக் காண்பித்தாலும் ஷேக் அப்துல்லா, ஜின்னாவின் வலையில் விழவில்லை. “எல்லா மதத்தினரும் சமமாகவும் இணக்கமாகவும் வாழுகின்ற சுதந்திர தனி நாடாகவே காஷ்மீர் இருக்க விரும்புகிறது. இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ அது சேர விரும்பவில்லை” என அறிவித்து ஷேக் அப்துல்லா மக்களைத் திரட்டினார். காஷ்மீர் மக்களும் இதையே விரும்பினர். 1947 ஆகஸ்டில், காஷ்மீர் தனி நாடாகவே இருக்கும் என மன்னர் ஹரிசிங் அறிவித்திருந்தார்.

1947 அக்டோபர் 22-இல் பாகிஸ்தான் படைகள் காஷ்மீருக்குள் நுழைந்து ஆக்கிரமித்தன. மன்னர் ஹரிசிங்கின் இராணுவம் பலவீனமான நிலையில் இருந்ததால், பாகிஸ்தான் படைகள் வேகமாக முன்னேறின. பெரிய அளவுக்கு எதிர்ப்பு இல்லாமல் காஷ்மீரைச் சூறையாடி முன்னேறி, தலைநகர் சிறீநகரையே வளைத்துக் கொண்டன பாகிஸ்தான் படைகள். ஷேக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சித் தொண்டர்கள்தான் பாக் படையை எதிர்த்து ஆங்காங்கே போராடினர்.

மன்னர் ஹரிசிங் இந்தியாவின் இராணுவ உதவியை நாடினார். இதன் பொருட்டு காஷ்மீரை இந்தியாவுடன் இடைக்காலமாக (தற்காலிகமாக) இணைத்தார். 1947 அக்டோபர் 26-இல் இணைப்புக்கான ஒப்பந்தத்தில் மன்னர் ஹரிசிங் கையெழுத்திட்டார். ஷேக் அப்துல்லாவும் அந்த ஒப்பந்தத்தை ஒப்புக்கொண்ட பின்னரே, இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. உடனே பாகிஸ்தான் படையின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தி பின்னோக்கி விரட்ட இந்தியப் படைகள் அனுப்பப்பட்டன. சிறீநகர் முற்றுகையை உடைத்து இந்தியப் படைகள் முன்னேறின.

காஷ்மீர் இந்தியாவுடன் இடைக்காலமாகத்தான் (தற்காலிகமாக) இணைக்கப்பட்டது. அதாவது, காஷ்மீரின் பாதுகாப்பு, வெளிநாட்டு விவகாரங்கள், தகவல் தொடர்பு -ஆகிய மூன்று விசயங்களை மட்டும் இந்தியா கவனித்துக் கொள்ளும் அதிகாரம் வழங்கப்பட்டது. மற்றபடி இந்த இணைப்பு ஒப்பந்தம் வேறு எதையும் குறிக்கவில்லை. தற்காலிகமாக காஷ்மீர் இந்தியாவின் பகுதியாகிவிட்டது என்ற பாத்தியதையை அந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு அளிக்கவில்லை.

மவுண்ட் பேட்டனின் ஆலோசனையின் பேரில் ஒரு நிபந்தனையும் அந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது. அதாவது, “படையெடுப்பாளர்கள் துரத்தப்பட்டு அமைதி சூழ்நிலை நிலைநாட்டப்பட்டபின், காஷ்மீர் மக்களது விருப்பத்தின் அடிப்படையில் காஷ்மீரின் இணைப்பு பற்றி இறுதி முடிவெடுக்கப்படும்” என்பதே அது. ‘இரும்பு மனிதர்’ சர்தார் வல்லபாய் படேல், பின்னாளில் ஜனசங்கத் தலைவராக மாறிய ஷியாமா பிரசாத் முகர்ஜி ஆகிய அமைச்சர்கள் உள்ளிட்ட மத்திய அமைச்சரவையின் ஏகமனதான ஒப்புதலோடுதான் அந்த ஒப்பந்தத்தை இந்தியா ஏற்றுக் கொண்டது. (ஆதாரம்: “காஷ்மீர் – உண்மையில் நடந்தது என்ன?” என்ற நூலில் பக்கம் 12-24, ஆசிரியர்: அஜித் பிரசாத் ஜெயின், 1950-இன் ஆரம்ப ஆண்டுகளில் நேரு அமைச்சரவையில் நிவாரணம் மற்றும் புனர்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்தவர்.)

இதற்கிடையே பாகிஸ்தானின் போர் நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி ஐ.நா.சாசனத்தின் 3-வது விதியைக் காட்டி ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சிலிடம் இந்தியா முறையிட்டது. ஐ.நா. சபையின் தலையீட்டால் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இரு நாட்டுப் படைகளும் ஆக்கிரமித்திருந்த காஷ்மீரத்தின் பகுதிகள் அந்தந்த அரசின் – படைகளின் ஆதிக்கத்தில் இருக்கும். ஐ.நா.சபையின் மேற்பார்வையில் காஷ்மீரின் எதிர்காலம் குறித்து “காஷ்மீர் மக்களிடையே ஒரு கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு நடத்தி காஷ்மீரின் எதிர்காலம் பற்றித் தீர்மானிக்கப்படும்” என்று ஐ.நா. சபை தீர்மானித்தது. இதை இந்தியாவும் பாகிஸ்தானும் ஏற்றுக் கொண்டன. இவ்வாறுதான் காஷ்மீரை இந்தியாவும் பாகிஸ்தானும் பங்கு போட்டுக் கொண்டன.

அதன் பின்னர் நேரு முதல் இன்றைய மோடி வரையிலான எல்லா பிரதமர்களும், எல்லா அரசுகளும் காஷ்மீர் மக்களை முதுகிலும் நெஞ்சிலும் குத்தி வருகின்றனர் என்பதுதான் வரலாறு. 1947 இல் பாகிஸ்தான் படைகளிடமிருந்து விடுதலை பெறுவதற்கு காஷ்மீர் மக்களுக்கு உதவுவது என்ற பெயரில் உள்ளே சென்றது இந்திய இராணுவம். இன்று இந்தியாவிடமிருந்து விடுதலை கேட்கும் காஷ்மீர் மக்களை ஒடுக்குவதற்கு இந்திய இராணுவத்தின் பெரும்பகுதி காஷ்மீரில் நிரந்தரமாகவே நிலை கொண்டிருக்கிறது.

https://www.vinavu.com/2016/08/18/the-history-of-indian-betrayal-of-kashmir/

பி.கு: இப்பொழுது 370 பிரிவு, 35A பிரிவு ரத்து செய்யப்பட்டு விட்டது. எனவே இதுவரை வழங்கப்பட்டு வந்த சிறப்பு சலுகைகளும் இனி இல்லை.

 

காஸ்மீரிகள் முதலில் ஆரம்பித்தது முஸ்லீம் என்ற (மத) அடையாளத்துடன். இது நிச்சயமாக, பாகிஸ்தானுடன் இணைவதை (அப்படி இல்ல விட்டாலும்) என்ற புரிதலே. ஏனெனினுள் ஹிந்தியா பன்முகத்தன்மை என்கிறது, பாக்கிதான் முஸ்லீம் என்கிறது.


அதாவது, ஓர் புவி சார்ந்த மக்கள் அடையாளத்தை வைத்து அல்ல.  ஓர் புவி சார்ந்த ஓர் பகுதி மக்கலின் மத  அடையாளத்தை வைத்து.

நீங்கள் தமிழீழம் எனப்துடன் ஒப்பிட்டு பாருங்கள். ஓர் புவி சார்ந்த மக்கள் அடையாளத்தை வைத்து, தமிழீழம் என்ற கோரிக்கை எழுந்தது.

370 ஐ  நீக்கியதி இப்பொது உள்ள பிரச்னை. இது எவ்வளவு நிறு பிடிக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

35 ஐ எடுத்தது லடாக்கும் எதிர்க்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, Kadancha said:

1947 இல் பாகிஸ்தான் படைகளிடமிருந்து விடுதலை பெறுவதற்கு காஷ்மீர் மக்களுக்கு உதவுவது என்ற பெயரில் உள்ளே சென்றது இந்திய இராணுவம். இன்று இந்தியாவிடமிருந்து விடுதலை கேட்கும் காஷ்மீர் மக்களை ஒடுக்குவதற்கு இந்திய இராணுவத்தின் பெரும்பகுதி காஷ்மீரில் நிரந்தரமாகவே நிலை கொண்டிருக்கிறது.

இதை பிரபாகரன், ஏறத்தாழ நிரந்தரமாகவே தடுத்து விட்டார்.

சிங்களம் வேறு எதாவது படைகளை இலங்கைத் தீவில் இடம் கொடுக்காத வரைக்கும், கிந்தியா நேரடியாக படைகளை இறக்குவது மிகவும் கடினம். 

Link to comment
Share on other sites

17 hours ago, goshan_che said:

திட்ட மேல் ஆலோசனை : சாட்சாத் இஸ்ரேல்.

ஆலோசனை மட்டுமல்ல, ஆயுதங்களையும் இஸ்ரேல் இந்தியாவுக்கு தொடர்ந்து வழங்கி வருகிறது.

இஸ்ரேலிடம் வாங்கிய கடுகளவிலான பெல்லட் ரவைகளை கொண்ட துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தி பாதிக்கப்பட்ட, கண்பார்வையிழந்த பலர் உள்ளார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழப்போராட்டம் பற்றி எமது நிலையென்பது, காஷ்மீர் போரட்டம்பற்றி பேசும்போது மட்டும் மாறிவிடுவது ஏனென்பது விசித்திரமாக இருக்கிறது. காஷ்மீர் மக்களின் அவலம் பற்றிப் பேசும்போது நாம்கூட சாதாரண இந்தியர்களின் மனநிலைக்கு வந்துவிடுவது விந்தையானது.

இதற்கான காரணம் என்ன?

ஈழத்தமிழர்கள் பாதிக்கப்படும்பொழுது காஷ்மீர்களும், அவர்களது அரசியல்த் தலைவர்களும் பேசாமலிருந்தார்கள் என்பதனால், அவர்களது போராட்டம் தவறென்றாகிவிடுமா? பாலஸ்த்தீன அரசியல்;வாதிகளும், பாலஸ்த்தீன மக்களும் எமது அவலங்கள் பற்றிப் பேசாமலிருந்ததினால் எமது போராட்டம் தவறென்றாகிவிடுமா? இல்லையே? 

ஈழமாகவிருந்தாலென்ன, பாலஸ்த்தீனப் போராட்டமாகவிருந்தாலென்ன, காஷ்மீர்ப் போராட்டமாக இருந்தாலென்ன, எல்லாமே அடக்குமுறைக்கெதிரான விடுதலைப் போராட்டங்கள் தான்.

ஈழத்தமிழர்கள் இலங்கையின் அடக்குமுறையாளர்களிடம் அகப்பட்டுப் படும் அதே அவலங்களைத்தான் காஷ்மீர்களும் இந்திய அடக்குமுறையாளர்களிடம் பட்டுவருகிறார்கள். பாலஸ்த்தீனத்திலும் இதே நிலைதான்.

காஷ்மீரை இந்தியா உள்ளங்கையில் வைத்துப் பாதுகாத்தது என்று இங்கே வந்து வாய்கூசாமல் இந்தியாவிற்குப் பல்லக்குத் தூக்கும் அன்பர்கள், 1989 இலிருந்து இன்றுவரை காஷ்மீர்ல் இந்திய ராணுவம் கொன்ற மக்களின் எண்ணிக்கை குறைந்தது ஒரு லட்சம் என்பதை அறிவீர்களா? 1987 இலிருந்து 1990 வரை இலங்கையின் வடக்குக் கிழக்கு பிரதேசங்களில் ஆக்கிரமித்து நின்ற இந்திய ராணுவம் எமது பெண்கள் மேல் கட்டவிழ்த்துவிட்ட பாலியல் வன்கொடுமைகளின் அளவினைக் காட்டிலும் பன்மடங்கு கொடுமைகளை இந்திய ராணுவம் காஷ்மீரத்துப் பெண்கள் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது தெரியுமா?

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட பல காஷ்மீரத்துப் பெண்களிடம் பேட்டி கண்டதில், பல பெண்கள் தமது குடும்பத்தில், கணவன், பிள்ளைகளை தம்முன்னே பலவந்தமாக நிறுத்திவைத்துத் தம்மைக் கற்பழித்ததாகக் கூறியிருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல், தேடுதல் வேட்டை என்று வரும் ராணுவம், வீட்டிலிருக்கும் ஆண்களை ஒன்றில் விரட்டி விட்டோ அல்லது கொன்றுவிட்டோதான் தம்மைக் கூட்டாகப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாகக் கூறியிருக்கிறார்கள். 

காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலம் இல்லையென்பதும், முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு ராச்சியத்தின் மன்னர் பிரிவினையின்போது இந்தியாவுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் ஒன்றிற்கு அமைவாகவே இந்தியாவுடன் காஷ்மீர் அன்று இணைக்கப்பட்டதென்றும் வாய்கிழியக் கத்தும் நாங்கள், இன்றுமட்டும் அவர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துவது ஏன்?

பாலியல் வன்கொடுமையினை யுத்தத்தில் ஒரு ஆயுதமாக இந்திய ராணுவம் பாவிப்பதை சாட்சியங்களினூடாக ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை அமைப்பொன்று உறுதிப்படுத்தியிருக்கிறது. சாதாரண சிப்பாய்கள் முதல், உயர் அதிகாரிகள் வரை இந்திய அரசின் சட்டங்களைப் பாவித்து தமது குற்றங்களிலிருந்து தப்பிவருவதாகவும் அது கூறுகிறது. இன்று இலங்கையினை ஈழத்தமிழினம் மீதான கொடுமைகளுக்குக் குற்றம்சாட்டும் நாம், இந்தியா அதே கொடுமைகளை காஷ்மீரிகள் மீது கட்டவிழ்த்துவிடும்போது அது தவறில்லை என்று வாதிடுவது எப்படி? ஏன், நாம் இன்னமும்கூட இந்திய அபிமானிகளாக மனதளவில் இருப்பதாலா? இந்தியா இதுவரையில் எமக்குச் செய்த அனைத்து கொடுமைகளைக் கண்டபின்னருமா இந்தியாவை ஆதரிக்கத் தூண்டுகிறது?

வெறுமனே பாக்கிஸ்த்தான் காரன் உசுப்பேற்றிவிட்டதால்த்தான் காஷ்மீர் பிரச்சினை உருவாகியது என்னும் மிக முட்டாள்த்தனமான உங்களின் இந்திய அபிமான சராசரிக் கருத்துக்களை தூக்கியெறியுங்கள். அங்கே நடப்பது ஒரு திட்டமிட்ட இனக்கொலைதான் என்று சர்வதேச மன்னிப்புச்சபை கூறியிருக்கிறது.

பாக்கிஸ்த்தான் காரன் உதவித்தான் காஷ்மீர் போராட்டம் நடக்கிறது, உண்மையாகவே அங்கு காஷ்மீரிகளுக்கு ஒரு பிரச்சினையுமில்லை என்று நீங்க்கள் நினைத்தால், 1980 களில் என்ன பிரச்சினை இருந்ததென்று இந்தியா வந்து உதவி புரிந்தது என்று சொல்கிறீர்கள்?  ஆக, இந்தியா வந்து நுழைந்ததால்த்தான் ஈழத்தில் பிரச்சினையே ஆரம்பமாகியது, இல்லாவிட்டால் தமிழர்க்கு ஒரு பிரச்சினையுமில்லை என்று சிங்களவன் சொல்வதை நீங்களும் ஆமோதிக்கிறீர்களா?

இன்றுவரை, தான் ஆறு லட்சம் ராணுவத்தை (உலகில் அதிக ராணுவ மயமாக்கப்பட்ட பிரதேசம் காஷ்மீர்) நிறுத்திவைத்து, காஷ்மீரத்து மக்களின் அன்றாட வாழ்வினுள் ராணுவத்தை ஒரு அங்கமாக்கி வைத்து முற்றான ஆக்கிரமிப்பினுள் வைத்திருக்கும் இந்தியா, அவர்களின் பிரச்சினை என்னவென்று அறிய சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றினை இன்றுவரை நடத்துவதை ஏன் நிராகரித்து வருகிறதென்றாவது யோசித்தீர்களா? காஷ்மீரிகளில் ஒரு பகுதியினர்தான் பாக்கிஸ்த்தானுடன் சேர்வதை விரும்புகிறார்கள் என்பதும், பெரும்பாலானவர்கள் இந்தியா, பாக்கிஸ்த்தான் ஆகிய இரு நாடுகளிலிருந்தும் இருந்து தம்மை விலக்கி தனியாக வாழவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்களா? 

காஷ்மீரிகள் முஸ்லீம்கள், ஆகவே இந்துக்களுக்கு எதிரானவர்கள், ஆகவே அவர்களை அழிப்பது சரிதான் என்று சொல்லும் நீங்கள், அதே இந்து இந்தியாதான் 2009 இல் எம்மில் ஒன்றரை லட்சம் பேரைக் கொல்லத் துணைபோனதென்பதை எப்படி மறந்தீர்கள்?

எனக்கு வந்தால் இரத்தம், மற்றவனுக்கு வந்தால் தக்காளிச் சட்னி என்று சொல்லும் இந்த மூடத்தனத்தை விட்டகலுங்கள். நீங்கள் ஆதரவு கொடுத்தாலென்ன கொடுக்காது விட்டாலென்ன, ஏற்றுக்கொண்டாலென்ன இல்லாவிட்டாலென்ன, காஷ்மீரில் இந்தியா செய்வது ஒரு திட்டமிட்ட இனவழிப்புத்தான். நாம் பட்ட அதே அவலங்களை அவர்கள் இன்று அனுபவிக்கிறார்கள், அது இன்னும் மோசமடையப் போகிறது.  உங்களின் ஆதரவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களின் அவலங்களைக் கொச்சைப்படுத்தவேண்டாம்.

இந்தியாவில்க் கூட பலவிடங்களில் மனித நேயம் உள்ளவர்கள தமது அரசும் ராணுவமும் காஷ்மீரில் செய்துவருவதை வெளிப்படையாகக் கண்டிக்கிறார்கள். அவர்களுக்கில்லாத இந்திய தேசபக்தியும் விசுவாசமுமா உங்களிடம் இருக்கிறது?? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/16/2019 at 3:22 AM, நிழலி said:

ஏன் குரல் கொடுக்க வேண்டும்?

எம் மீது மிகப் பெரும் இனவழிப்பு இடம் பெற்ற போது எந்த எதிர்ப்புக் குரலும் கொடுக்காது காஷ்மீரிகள், காஷ்மீரத்து முஸ்லிம் தலைவர்கள் தம் எஜமானர்களின் மீதான (பாகிஸ்தானியர்கள் மீதான) விசுவாசத்தை காட்டிக் கொண்ட மாதிரி நாம் மெளனமாக இருப்பதில் தவறில்லை. இது பாலஸ்தீனர்களுக்கும் பொருந்தும்.

விடுதலை என்பது வெறுமனே அறம் சார்ந்தது மட்டுமல்ல, அரசியல் சார்ந்ததும் ஆகும்.

ஏன் நிழலி, காஷ்மீர்களைத்தவிர மற்ற எல்லாருமே எமக்கெதிரான போருக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தார்களா? அவர்கள் எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை என்பதனால் மட்டும் எமக்கு நடந்த அவலங்கள் பொய்யென்று ஆகிவிடுமா? ஒரு முற்போக்கான நீங்களா இப்படிப் பேசுவது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூல் டவுன் ரஞ்சித்,

இங்கே யாரும் இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரிக்கவும் இல்லை. கஸ்மீரிகளின் போராட்டத்தை கொச்சை படுத்தவும் இல்லை. இந்தியா காஸ்மீரை கொள்ளை அடிக்கிறது என்பதே ஈழத்தமிழர் பெரும்பாலானோரின் நிலைப்பாடு. எம்மை அழித்ததில் இந்தியாவே பிரதானம் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் நாங்கள் ஏற்கனவே இந்தியாவின் மேலாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட இனம்.

இனியும் எம்மக்களுக்கு ஒரு கொஞ்சமேனும் நன்மை நடப்பதாயின், அது இந்திய கயவர்கள் கண் அசைத்தால் மட்டுமே முடியும்.

இப்படி பட்ட நிலையில்,பாகிஸ்தானில் இருந்து எம்மை அழிக்க உதவி பெற்ற இலங்கையே லாவகமா “உள்நாட்டு விசயம்” என ஒதுங்க, எம்மை ஒழிக்க ஆயுதம் வளங்கிய பாகிஸ்தான் பக்கம் நின்று,  நம் தலைமைகள் வெளிப்படையாக இந்திய எதிர் நிலை எடுப்பதை போல ஒரு முட்டாள்தனம் வேறொன்றும் இருக்கவியலாது.

Ethics based foreign policy எல்லாம் நெல்சன் மண்டேலா, அரபாத்தே நம் விடயத்தில் செய்யாத போது, நாம் மட்டும் ஊருக்கு நல்லவர்களாய் இருக்கத் தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

கூல் டவுன் ரஞ்சித்,

இங்கே யாரும் இந்தியாவின் நிலைப்பாட்டை ஆதரிக்கவும் இல்லை. கஸ்மீரிகளின் போராட்டத்தை கொச்சை படுத்தவும் இல்லை. இந்தியா காஸ்மீரை கொள்ளை அடிக்கிறது என்பதே ஈழத்தமிழர் பெரும்பாலானோரின் நிலைப்பாடு. எம்மை அழித்ததில் இந்தியாவே பிரதானம் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் நாங்கள் ஏற்கனவே இந்தியாவின் மேலாதிக்கத்தால் பாதிக்கப்பட்ட இனம்.

இனியும் எம்மக்களுக்கு ஒரு கொஞ்சமேனும் நன்மை நடப்பதாயின், அது இந்திய கயவர்கள் கண் அசைத்தால் மட்டுமே முடியும்.

இப்படி பட்ட நிலையில்,பாகிஸ்தானில் இருந்து எம்மை அழிக்க உதவி பெற்ற இலங்கையே லாவகமா “உள்நாட்டு விசயம்” என ஒதுங்க, எம்மை ஒழிக்க ஆயுதம் வளங்கிய பாகிஸ்தான் பக்கம் நின்று,  நம் தலைமைகள் வெளிப்படையாக இந்திய எதிர் நிலை எடுப்பதை போல ஒரு முட்டாள்தனம் வேறொன்றும் இருக்கவியலாது.

Ethics based foreign policy எல்லாம் நெல்சன் மண்டேலா, அரபாத்தே நம் விடயத்தில் செய்யாத போது, நாம் மட்டும் ஊருக்கு நல்லவர்களாய் இருக்கத் தேவையில்லை.

கோஷான், நீங்கள் சொல்வது சரி. காஷ்மீரிகளுக்குச் சார்பான நிலைப்பாட்டினை ஈழத்தமிழர்களின் அரசியல் தலைமைகள் இன்று எடுப்பார்களானால், அது நிச்சயமாக இந்தியாவை ஆத்திரப்படவைக்கும். 

ஆனால், நாம் காஷ்மீர் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கவில்லையென்றால்க் கூட இந்தியா எமக்கு சாதகமான தீர்வொன்றினைத் தரும் என்பதற்கும் உத்தரவாதம் இல்லை. ஆக, இந்தியா எனக்கொரு தீர்வைத் தரலாம் என்று நாங்களே நம்புகின்ற ஒரு கனவுநிலைக்கு வேண்டுமென்றால் எமது காஷ்மீர் ஆதரவு நிலைப்பாடு ஒரு பிரச்சனையாகலாம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். 

இங்கே பிரச்சினையென்னவென்றால், காஷ்மீரில் இந்தியாவின் நிலைப்பாட்டினை நாம் ஆதரிப்பதென்பது, இலங்கையில் எமது நிலையினை இன்னும் பலவீனப்படுத்தும் என்பது நாம் பலரும் பார்க்கத் தவறும் ஒரு விடயம். காஷ்மீர் தனக்கான சலுகைகளை இழப்பதையும், பெயரளவிலிலேயே மட்டும் இருக்கும் சிறப்புரிமைகளையும் இழப்பதையும் நாம் ஆதரிப்பதென்பது, எமக்கு வரக்கூடிய (நாம் இன்றுவரை இந்தியா மூலமாகக் கிடைக்கலாம் என்று நம்பும்) ஒரு சில சலுகைகளையும் இல்லாமல் ஆக்கிவிடாதா?

காஷ்மீரிகளுக்குத் தரமறுக்கும் ஒரு உரிமையை, இந்தியா எமக்குத் தருவதற்கான சாத்தியம் என்ன? அப்படி இந்தியாவிற்கு இருக்கும் தேவை என்ன?

ஆனால், இந்த அரசியல் தளம்பற்றி நான் மேலே பேசவில்லை கோஷான். எனது ஆதங்கம் காஷ்மீரத்து மக்களின் போராட்டம் தொடர்பாகவும், அதற்கான காரணங்கள் தொடர்பாகவும், அவர்களின் அவலங்கள் தொடர்பாகவும் எமக்கிருக்கும் புரிதலையும், நிலைப்பாட்டையும்தான்.

Link to comment
Share on other sites

இன ஒடுக்குதல் போரினால் பாதிக்கபட்ட ஒரு  இனத்தின் இராஜதந்திரத்தின் அடிப்படை 1. முதல் எதிரி யார்? 2. முதல் எதிரியின் அணியில் உள்ளவர்கள் யார்? என்கிற இரண்டு அடிப்படையில் இருந்தே எல்லாவற்றையும் சிந்தித்தலை வலியுறுத்துகிறது. இந்த அணுகுமுறை இனம் எவ்வளவு சிறியதாக  பலகீனாமக இருக்கிறதோ அதற்கேப அதிகரித்த முக்கியத்துவத்தைப் பெறும். நம்மைப் பொறுத்து அதன் அர்த்தம் பாகிஸ்தான் சீனா அணி தொடர்பாக மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்  என்பதாகும். நுணி மரத்தில் இருந்துகொண்டு அடி மரத்தை வெட்டாதே என்பது அடிப்படை இராஜதந்திர பாடமாகும். - வ.ஐ.ச.ஜெயபாலன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, poet said:

இன ஒடுக்குதல் போரினால் பாதிக்கபட்ட ஒரு  இனத்தின் இராஜதந்திரத்தின் அடிப்படை 1. முதல் எதிரி யார்? 2. முதல் எதிரியின் அணியில் உள்ளவர்கள் யார்? என்கிற இரண்டு அடிப்படையில் இருந்தே எல்லாவற்றையும் சிந்தித்தலை வலியுறுத்துகிறது. இந்த அணுகுமுறை இனம் எவ்வளவு சிறியதாக  பலகீனாமக இருக்கிறதோ அதற்கேப அதிகரித்த முக்கியத்துவத்தைப் பெறும். நம்மைப் பொறுத்து அதன் அர்த்தம் பாகிஸ்தான் சீனா அணி தொடர்பாக மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்  என்பதாகும். நுணி மரத்தில் இருந்துகொண்டு அடி மரத்தை வெட்டாதே என்பது அடிப்படை இராஜதந்திர பாடமாகும். - வ.ஐ.ச.ஜெயபாலன்

 

நீங்கள் ஏன் இதை இங்கே சொல்கிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை. சீனாவையும் பாக்கிஸ்த்தானையும் நாம் ஆதரிக்கவேண்டும் என்று நான் சொல்லவில்லை, ஆனால் இந்தியாவின் அழுங்குப் பிடியிலிருந்து எமது வாழ்வை மீட்டெடுப்பதற்கு வேறு தெரிவுகள் இருந்தால் அவை பற்றிச் சிந்திப்பதிலும் தவறிருப்பதாக நான் நினைக்கவில்லை.

ஆனால், இந்த ராஜதந்திர இடியப்பச் சிக்கல்களுக்கப்பால், காஷ்மீரிகளின் உண்மையான அவலங்கள் அடிபட்டுப் போகின்றன என்பதுதான் எனது கருத்து.

இந்தியா மீதான எமது அபிமானமும், விசுவாசமும், நம்பிக்கைகளும் இதுவரையில் எமக்கு எதைக் கொணர்ந்தன என்று பார்த்தால் நாம் ஏறியிருக்கும் மரமே தவறென்று எனக்குப் புரியும். அதுமட்டுமல்லாமல், அது எனக்காக கழுமரம் என்பதும் துலங்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ர‌ஞ்சித் அண்ணா , உங்க‌ளின் அனைத்து ப‌திவுக‌ளும் அருமை 👏, நிழ‌லி அண்ணா சொல்லுவ‌தும்  ச‌ரி தான் 👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே நியாயம்  தர்மம்

தோழன் பகைவன்  என்றெல்லாம்   பார்க்கக்கூடாது ராசாக்கள்

இப்ப  காஷ்மீரிகளுக்கு  எப்படி  எண்ணெய்  ஊத்தி  எரிய  விடப்போறம்

இதன்  மூலம்   இந்தியை  எப்படி  துண்டாக்கலாம்

பலவீனப்படுத்தலாம்

அதை   மட்டும்  சிந்தியுங்கள்

ஆனால்   இது இந்திக்கு  தெரியாமல் பார்த்துக்கொள்ளணும்

Link to comment
Share on other sites

20 hours ago, ரஞ்சித் said:

ஏன் நிழலி, காஷ்மீர்களைத்தவிர மற்ற எல்லாருமே எமக்கெதிரான போருக்கு எதிர்ப்புக் குரல் கொடுத்தார்களா? அவர்கள் எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை என்பதனால் மட்டும் எமக்கு நடந்த அவலங்கள் பொய்யென்று ஆகிவிடுமா? ஒரு முற்போக்கான நீங்களா இப்படிப் பேசுவது?

தனிப்பட்ட ரீதியில் நானோ நீங்களோ அல்லது குப்பனோ சுப்பனோ காஷ்மீரிகளுக்காக அனுதாபம் கொள்வது வேறு, அரசியல் ரீதியில் காஷ்மீரிகளுக்கு ஆதரவு வழங்குவது வேறு.

அரசியல் என்று வரும் போது வெறுமனே அறத்தில் வழி நின்று மட்டுமே முடிவுகளை எடுக்க முடியாது, இலாப நட்டம் பார்த்து எதில் அதிக அனுகூலம் இருக்கின்றதோ அதை ஒட்டித்தான் முடிவுகளை எடுத்தல் வேண்டும். இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்குள்ளாகி அதற்கெதிராக போராடும் பாலஸ்தீனமும் , அமெரிக்காவின் அருகில் இருந்து கொண்டு அதன் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய கியூபாவும், அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆயுதப் போராட்டம் செய்த வியட்னாமும், காஷ்மீர விடுதலை அமைப்புகளும் இந்த லாப நட்டக் கணக்குகளால் தான் எம்  போராட்டம் இனப்படுகொலை ஒன்றின் மூலம் அழித்தொழிக்கப்படும் போது அமைதி காத்தன.

அமெரிக்காவும், சீனாவும், இஸ்லாமிய அரசுகளும், ஏனைய நாட்டும் முஸ்லிம்களும் காஷ்மீர் விடயத்தில் ஒன்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்க்கவும் என்று ஆலோசனைய் கூறுகின்றனர் அல்லது அமைதியாக இருக்கின்றனர். நிலமை அப்படி இருக்க சுண்டங்காயின் விதை சைசில் இருக்கும் நாங்கள் முந்திக் கொண்டு ஆதரவு கொடுப்பதால் நன்மைக்கு பதிலாக தீமை தான் கிடைக்கும்.

காஷ்மீரிகளுக்காக எம் தமிழ் தலைமைகள் ஆதரித்தால் அதனால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை. அவ்வளவு ஏன் காஷ்மீரிகளே அதை கணக்கெடுக்கப் போவதில்லை. அப்படி இருக்க எதற்காக தமிழ் தலைமைகள் குரல் கொடுக்க வேண்டும் என்கின்றீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, நிழலி said:

தனிப்பட்ட ரீதியில் நானோ நீங்களோ அல்லது குப்பனோ சுப்பனோ காஷ்மீரிகளுக்காக அனுதாபம் கொள்வது வேறு, அரசியல் ரீதியில் காஷ்மீரிகளுக்கு ஆதரவு வழங்குவது வேறு.

அரசியல் என்று வரும் போது வெறுமனே அறத்தில் வழி நின்று மட்டுமே முடிவுகளை எடுக்க முடியாது, இலாப நட்டம் பார்த்து எதில் அதிக அனுகூலம் இருக்கின்றதோ அதை ஒட்டித்தான் முடிவுகளை எடுத்தல் வேண்டும். இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்குள்ளாகி அதற்கெதிராக போராடும் பாலஸ்தீனமும் , அமெரிக்காவின் அருகில் இருந்து கொண்டு அதன் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய கியூபாவும், அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக ஆயுதப் போராட்டம் செய்த வியட்னாமும், காஷ்மீர விடுதலை அமைப்புகளும் இந்த லாப நட்டக் கணக்குகளால் தான் எம்  போராட்டம் இனப்படுகொலை ஒன்றின் மூலம் அழித்தொழிக்கப்படும் போது அமைதி காத்தன.

அமெரிக்காவும், சீனாவும், இஸ்லாமிய அரசுகளும், ஏனைய நாட்டும் முஸ்லிம்களும் காஷ்மீர் விடயத்தில் ஒன்றில் இந்தியாவும் பாகிஸ்தானும் பேசி தீர்க்கவும் என்று ஆலோசனைய் கூறுகின்றனர் அல்லது அமைதியாக இருக்கின்றனர். நிலமை அப்படி இருக்க சுண்டங்காயின் விதை சைசில் இருக்கும் நாங்கள் முந்திக் கொண்டு ஆதரவு கொடுப்பதால் நன்மைக்கு பதிலாக தீமை தான் கிடைக்கும்.

காஷ்மீரிகளுக்காக எம் தமிழ் தலைமைகள் ஆதரித்தால் அதனால் ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை. அவ்வளவு ஏன் காஷ்மீரிகளே அதை கணக்கெடுக்கப் போவதில்லை. அப்படி இருக்க எதற்காக தமிழ் தலைமைகள் குரல் கொடுக்க வேண்டும் என்கின்றீர்கள்?

எனது ஆதங்கம் குரல் கொடுக்க வேண்டும் என்பதில்லை நிழலி,

நாங்களும் சாதாரண இந்தியத் தேசியவாதிகள் போல காஷ்மீரத்து மக்களின் விடுதலைப் போராட்டத்தை முஸ்லீம் தீவிரவாதம் என்று சொல்லிவிட்டுப் போவதுதான். காஷ்மீரிகளின் அவலங்களை வெறுமனே பாக்கிஸ்த்தானின் தூண்டுதலால் ஏவிவிடப்பட்ட ட் தீவிரவாதிகளின் செயல்ப்பாடென்றும், காஷ்மீர்களுக்குப் பிரச்சினையென்றும், ஈழத்தமிழரின் பிரச்சினையையும், காஷ்மீரிகளின் பிரச்சினையையும் ஒன்றாகப் பார்க்க முடியாதென்றும் பேசுவதுதான்.

ஒரு முற்றான இனக்கொலையை அனுபவித்த நாமே இன்னொரு இனக்குழுமம் அதை இன்று எதிர்நோக்கும்பொழுது வெறுமனே அதைக் கொச்சைப்படுத்துவது சரியல்ல. 

எவருக்கு எவர் ஆதரவு கொடுத்தார் என்கிற கேள்விகளுக்கு அப்பால், இன்று காஷ்மீரில் நடப்பதுதான் 2009 வரை ஈழத்தில் நடந்தது என்கிற உண்மை எம்மில் பலருக்குத் தெரியாது.

இந்தியாவுக்கு எதிராக, காஷ்மீரிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் என்னாகும் என்று தெரியாது. ஆனால், இந்தியாவினால் எம்மீது நடத்தப்பட்ட அனைத்து அக்கிரமங்களையும் தாங்கிக்கொண்டு இன்னும் தந்தை நாடு, தாய்நாடு, நேச நாடென்று சொல்லித்திரியும் எமக்கு என்ன கிடைத்ததென்று பார்த்தால் எஞ்சியிருப்பது முள்ளிவாய்க்கால் '09 மட்டும்தான் !

மற்றும்படி, நீங்கள் சொல்லியவாறு சுண்டைக்காய் இனமான எம்மில் இருக்கும் நிழலியோ, ரஞ்சித்தோ, சுப்பனோ குப்பனோ சொல்வதால் மட்டும் எதுவுமே மாறிவிடப்போவதில்லையென்பது உண்மைதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, விசுகு said:

இங்கே நியாயம்  தர்மம்

தோழன் பகைவன்  என்றெல்லாம்   பார்க்கக்கூடாது ராசாக்கள்

இப்ப  காஷ்மீரிகளுக்கு  எப்படி  எண்ணெய்  ஊத்தி  எரிய  விடப்போறம்

இதன்  மூலம்   இந்தியை  எப்படி  துண்டாக்கலாம்

பலவீனப்படுத்தலாம்

அதை   மட்டும்  சிந்தியுங்கள்

ஆனால்   இது இந்திக்கு  தெரியாமல் பார்த்துக்கொள்ளணும்

அண்ணோய், நல்லாத்தான் யோசிக்கிறியள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, ரஞ்சித் said:

எவருக்கு எவர் ஆதரவு கொடுத்தார் என்கிற கேள்விகளுக்கு அப்பால், இன்று காஷ்மீரில் நடப்பதுதான் 2009 வரை ஈழத்தில் நடந்தது என்கிற உண்மை எம்மில் பலருக்குத் தெரியாது.

இந்தியாவுக்கு எதிராக, காஷ்மீரிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தால் என்னாகும் என்று தெரியாது. ஆனால், இந்தியாவினால் எம்மீது நடத்தப்பட்ட அனைத்து அக்கிரமங்களையும் தாங்கிக்கொண்டு இன்னும் தந்தை நாடு, தாய்நாடு, நேச நாடென்று சொல்லித்திரியும் எமக்கு என்ன கிடைத்ததென்று பார்த்தால் எஞ்சியிருப்பது முள்ளிவாய்க்கால் '09 மட்டும்தான் !

மற்றும்படி, நீங்கள் சொல்லியவாறு சுண்டைக்காய் இனமான எம்மில் இருக்கும் நிழலியோ, ரஞ்சித்தோ, சுப்பனோ குப்பனோ சொல்வதால் மட்டும் எதுவுமே மாறிவிடப்போவதில்லையென்பது உண்மைதான். 

ஆயுதப்போராட்டம்  மூலம்  ஈழம் வெற்றியடைந்தால்????  என்ற   இந்தியர்களின்  கேள்விக்கான  விடையே  முள்ளிவாய்க்கால்

நாம்  அதை  மறக்கலாகாது.

தலைவர்  தனது ஒவ்வொரு  உரையிலும் இந்தியாவுக்கு நட்புக்கரம்  நீட்டிப்பேசியது 

அவர்களின்  இந்த முடிவு  தெரிந்ததால்  தான்.

இதில்  வரலாற்றுப்படி

சுதந்திரத்துக்காக  போராடி அதன்   தார்ப்பரியத்தை உணர்ந்த

அதனை  எட்டிய  தேசங்கள்  கூட

மேலே  நிழலி  குறிப்பிட்டது  போன்று

இன்றைய  கூட்டுப்பொருளாதாரம்  சார்ந்து  சுயநலமாகி  எம்மை  கைவிட்டமை  நாம்  எம் கண்முன்னே அனுபவித்தவை.

இனி  தர்மம் பாவம் அனுதாபம்  அனைத்தையும் களட்டி  வைத்துவிட்டு

நரி  மூளைக்கு முதலிடம் கொடுத்தலே உலக வெற்றிகள்  தரும்  பாடம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இங்கே நியாயம்  தர்மம்

தோழன் பகைவன்  என்றெல்லாம்   பார்க்கக்கூடாது ராசாக்கள்

இப்ப  காஷ்மீரிகளுக்கு  எப்படி  எண்ணெய்  ஊத்தி  எரிய  விடப்போறம்

இதன்  மூலம்   இந்தியை  எப்படி  துண்டாக்கலாம்

பலவீனப்படுத்தலாம்

அதை   மட்டும்  சிந்தியுங்கள்

ஆனால்   இது இந்திக்கு  தெரியாமல் பார்த்துக்கொள்ளணும்

இந்தியா சுத‌ந்திர‌ தின‌த்தை இப்ப‌ த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் பெரிசா கொண்டாடுவ‌து இல்லை /

இர‌ண்டு தேசிய‌ க‌ட்சியில் இருப்ப‌வ‌ர்க‌ள் தான் , சுத‌ந்திர‌ தின‌த்தை த‌மிழ் நாட்டில் கொண்டாடின‌ம் , திராவிட‌ம் ம‌ற்றும் த‌மிழ் தேசிய‌ம் இவ‌ர்க‌ள் கொஞ்ச‌ம் வில‌கி நிப்ப‌து வெளிப்ப‌டையாய் தெரியுது /

எப்ப‌டியோ உந்த‌ நாடு நாச‌மாய் போய் இந்த‌ உல‌க‌ வ‌ர‌ ப‌ட‌த்தில் இருந்து இந்தியா என்ர‌ நாடு காணாம‌ல் போக‌னும் /

த‌மிழ் நாட்டில் க‌ஸ்மீர் ம‌க்க‌ளுக்கான‌ ஆத‌ர‌வு குர‌ல் தான் பெருகுது , 

வைக்கோ சொன்ன‌ மாதிரி நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ர‌ நாடு இருக்காது என்று  , 
அது ந‌ட‌ந்தா முத‌ல் ச‌ந்தோச‌ ப‌டுவ‌து ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் தான் 😁 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பையன்26 said:

இந்தியா சுத‌ந்திர‌ தின‌த்தை இப்ப‌ த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் பெரிசா கொண்டாடுவ‌து இல்லை /

இர‌ண்டு தேசிய‌ க‌ட்சியில் இருப்ப‌வ‌ர்க‌ள் தான் , சுத‌ந்திர‌ தின‌த்தை த‌மிழ் நாட்டில் கொண்டாடின‌ம் , திராவிட‌ம் ம‌ற்றும் த‌மிழ் தேசிய‌ம் இவ‌ர்க‌ள் கொஞ்ச‌ம் வில‌கி நிப்ப‌து வெளிப்ப‌டையாய் தெரியுது /

எப்ப‌டியோ உந்த‌ நாடு நாச‌மாய் போய் இந்த‌ உல‌க‌ வ‌ர‌ ப‌ட‌த்தில் இருந்து இந்தியா என்ர‌ நாடு காணாம‌ல் போக‌னும் /

த‌மிழ் நாட்டில் க‌ஸ்மீர் ம‌க்க‌ளுக்கான‌ ஆத‌ர‌வு குர‌ல் தான் பெருகுது , 

வைக்கோ சொன்ன‌ மாதிரி நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ர‌ நாடு இருக்காது என்று  , 
அது ந‌ட‌ந்தா முத‌ல் ச‌ந்தோச‌ ப‌டுவ‌து ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் தான் 😁 /

அது  என்   கனவு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.