Jump to content

காஷ்மிர் குறித்து தமிழ் தலைமைகளின் மௌனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ரஞ்சித் said:

பெயரளவிலிலேயே மட்டும் இருக்கும் சிறப்புரிமைகளையும் இழப்பதையும் நாம் ஆதரிப்பதென்பது, எமக்கு வரக்கூடிய (நாம் இன்றுவரை இந்தியா மூலமாகக் கிடைக்கலாம் என்று நம்பும்) ஒரு சில சலுகைகளையும் இல்லாமல் ஆக்கிவிடாதா?

நீங்கள் கிந்தியாவின் அட்டூழியங்கள், காஷ்மீரின் இப்போது 370 ஐ நீக்கியது என்ற கோணத்தில் மட்டும் பார்க்கிறீர்கள்.

ஆனால், மோடியும், BJP உம இந்த முடிவை எடுத்து, வெளிப்படையாக அறிவிக்கவில்லை ஆயினும், வரலாற்றின் அடிப்படையில்.

காஷ்மீர் வரலாற்றை சுருக்கமாக பின்பு பார்க்கலாம்.

ஆனால், காஷ்மீரில் பிஜேபி செய்திருப்பது, அவரவர் பிரதேசங்களை அவரவர் நிர்வாகம் செய்யும் நிலையை அடைவதற்கு.

காஷ்மீரில் 4 பூர்விக இனங்கள், அவர்களின் பூர்விக பிரதேசத்தை கொண்டுள்ளார்கள்.

1) இ(கி)ந்திய காஸ்மீர்
2) ஜம்மு
3) லடாக்
4) பாகிஸ்தான் காஷ்மீர்

1) இ(கி)ந்திய காஸ்மீர்

சமகால வரலாற்றில், முஸ்லீம் தீவிரவாதம்  இ(கி)ந்திய காஸ்மீர்  இல் ஊடுருவி, 1980 களில் அங்கிருந்த இந்து பண்டிட்ஸ் எனப்படும் சைவ சமயத்தவரை துரத்தி விட்டது, இவர்கள் ஏறத்தாழ 600,000.

துரத்தப்பட்டவர்களின் சொத்துக்கள், காஷ்மீர் முஸ்லிம்கள் எடுத்து விட்டனர்.

இதுவும் , கிந்தியாவின் ராணுவப் பிடியை இறுக்கியதற்கு மிக முக்கியமான காரணம்.

ஆனாலும், துரத்தப்பட்டவர்களை ஹிந்தியா கவனிக்கவேயில்லை.

இந்த 370 ஐ வைத்து, காஷ்மீர் முஸ்லிம்கள்,  மற்ற இனங்கள், மற்றும் அவர்களின் பிரதேசத்தில் நிர்வாக உரிமையை அனுபவித்து வந்தனர்.

காஸ்மீர் உண்மையில் சைவ சமயத்தவரே  தொன்று தொட்டு பூர்விகமாக இருந்தனர். இவர்கள் காஸ்மீர் மொழியை உடையவர்கள். 

இப்போதும் காஷ்மீரில், காஷ்மீரி மொழியே வழங்குகிறது. இது டார்டிக் (DARDIC) எனும் வகையை சேர்ந்த இந்தோ ஆரியன்  மொழியாகும்.

1500 களில் ஆப்கனிஸ்தான் இல் இருந்து வந்த முஸ்லீம் ஆயுதக்க கும்பல்களின் படையெடுப்பால் (கவனிக்கவும் இவ்வாறே பாகிஸ்தான் ஆப்கான் பஸ்தூன் ஆயுதக்க கும்பல்களை அனுப்பியது முதலில்), காஸ்மீரிகள் பலவந்தமாக  இஸ்லாம் சமயத்திற்கு மாற்றப்பட்டனர். இஸ்லாம் சமயத்தை தழுவாவிட்டால், சிரச்சேதமே தெரிவாக இந்த ஆப்கானிஸ்தான் முள்சிம் ஆயுதக்க கும்பல்காளால் வழங்கப்பட்டது.

அப்படி மாற்றப்படாமல் தப்பிய சைவ இந்துக்களும், பின்பு வாய்ப்பு கிடைத்த பொது மீண்டும் சைவ மதத்தை தழுவியவர்களுமே இந்த காஸ்மீர் ஹிந்து பண்டிட்ஸ் என்போர்.

காஷ்மீரி சைவ இந்துக்கள் துரத்தப்படுவதற்கு முதல், 90% காஷ்மீரி முஸ்லிகள், 10% காஷ்மீரி சைவ இந்துக்கள், அதாவது காஷ்மீரி பண்டிட்ஸ்.  

காஷ்மீரி சைவ இந்துக்களே காஸ்மீரின் உண்மையான பூர்விக குடிகள். அதாவது, சைவத் தமிழர்களே இலங்கையின் பூர்விக குடிகள் போல.


தற்போது காஷ்மீர் பள்ளத்தாக்கு  முஸ்லிம்கள், முழு காஷ்மீரையும் தமது  எனவும், தாமே நிர்வகிக்க வேண்டும் எனவும் உரிமை கோருகிறார்கள். இதற்கு, 370 முண்டு கொடுத்து நின்றது.

அதாவது,   கட்டுக் கதை  ஆரிய வழி    சிங்களமும்,  கட்டுக் கதை அரேபிய வழி முஸ்லிம்களும், தாமே இலங்கையின் பூர்விக குடிகள் தாமே, தமிழர்கள் வந்தேறிகள் என்று சாதிப்பது போல.


370 இ நீக்கியதன் மூலம், தற்போதைய நிலையில்  நிலையில், அவரவர் பிரதேசங்களை அவரவர் நிர்வகிப்பதற்கு பாதை திறந்து விட்டுள்ளது.   

இதை BJP இலங்கைத் தீவிற்கும் அறிவுறுத்தலாக, இந்த 370 ஐ நீக்கிய கையுடன், ராஜபக்ஸவிற்கு எழுதிய கடிதத்தில், இலங்கை தீவில் தொன்று தொட்டு சைவ சமயத்தவர்கள் இரு தனர் என்றும் , அதில் ஓர் பகுதியினர் பௌத்தத்திற்கு மாறியுள்ளனர் என்றும், இப்போதைய நிலையில் சைவ இந்துக்கள் அவர்களின் பிரதேசத்தில்(north east) ஆட்சி செய்வதற்கு உரிமை உள்ளவர்கள் என்றும் பொருள் பட கடிதத்தில் எழு தியுள்ளது. இத பற்றி சிங்களம் மூச்சு இல்லை. வழமையான, கீழ்த்தரமான கிந்தியவை பற்றிய நக்கல்களோ, நளினங்களோ சிங்களம் வெளிப்படுத்தவில்லை.

https://en.wikipedia.org/wiki/Exodus_of_Kashmiri_Hindus

https://vedicfeed.com/ancient-hindu-temples-of-kashmir/

https://en.wikipedia.org/wiki/Amarnath_Temple


2) ஜம்மு

ஜம்மு இல் உள்ளவர்கள் இந்து டோக்ராஸ் (Dogras), இவர்கள் பஞ்சாபியர்களுடன் வரலாற்று உறவு  கொண்டவர்கள். இவர்கலின் மொழி டோகிரி (Dogri). இந்தோ ஐரோப்பிய மொழியாகும்.

தற்போதையா நிலையில், ஜம்முவில் 67% இந்து டோக்ராஸ், மிகுதி,  பஞ்சாபி இந்துக்கள், மேற்கு பஞ்சாபில் இருந்து பிரிவின் பொது ஜம்முவிற்கு வந்தவர்கள், 1980 துரத்தப்பட்ட காஸ்மீரி இந்துக்களும் ஜம்முவில் உள்ளார்கள், சில மாவட்டங்களில் காஸ்மீரி முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளார்கள்.

3) லடாக்

புவியியல் அடிப்படையில் காஷ்மீரின் மிகப் பெரிய, பாலைவனத் தமையான பிரதேசம். இங்கு உள்ளவர்கள் திபெத்திய இனத்தவர்கள், சமயத்தில் பௌத்தர்கள். சிறிய அளவு காஷ்மீரி முஸ்லிம்கள் இங்கு உள்ளனர்.

4) ) பாகிஸ்தான் காஷ்மீர்

ஏறத்தாழ, காஷ்மீரின் 1/3 புவிப்  பரப்புடையது.

இங்கு காஷ்மீரிகளை தவிர, பல்டிஸ்டான் (Baltistan ) எனும் இனம் தன பூர்விக பிரதேசத்தை கொண்டுள்ளது.


இந்த நான்கு வேவ்வேறு இனங்களின், பூர்விக நில பரப்புக்களை கொண்டதே இந்து மஹாராஜாவால் ஆட்சி செய்யப்பட்ட காஷ்மீர் ஆகும். இந்து மகாராஜாவின் முன்பு இப்பிரதேசங்களை சீக்கியார்களே ஆண்டனர். இதுவே ஜம்மு-காஸ்மீர் என்ற அரசு அமைந்ததன் வரலாறு.

லடாக்கும், ஜம்முவும் என்றைக்குமே முஸ்லீம் காஸ்மீரின் பகுதியாகவோ அல்லது ஆட்சியையோ ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்து மகாராஜா ஆட்சி அகன்றவுடன், ஜம்முவும், லடடக்கும் கி(இ)நதியாவின் பகுதியாக விரும்பியே இணைந்தன. ஏனெனில், அவர்களுடைய மொழி, கலாசாரம், சமயம், பூர்விங்க்ம் எல்லாமே தனித்துவமானதும், காஷ்மீர் முஸ்லிம்களளோடு தொடர்பில்லாததும்.

இதனாலேயே, முஸ்லீம் கஸ்மீறி ஆரம்பகால போராட்டம், இஸ்லாமியா காஷ்மீரிகள் என்ற அடையாளத்தை கொண்டிருந்தது.

தட்றபோதைய நிலைமையில், இந்த ஜம்மு, காஷ்மீர், லடாக் ஒன்றிப்பு, அதாவது 370 தேவையற்றதும், மேலாக ஓர் இனம் மற்ற இனத்தின் நிர்வாகத்தில், தயவில் இருப்பதற்கானா ஏதுக்களை செயற்கையாக வழிகோலுமாகவுள்ளது.

அதானல், தற்போது பிஜேபி எடுத்த முடிவான, 370 ஐ நீக்கியது, அதுவும் முஸ்லீம் காஷ்மீரிற்கு, துரத்தப்பட்ட ஹிந்து pandits ஐ பற்றி கரிசனை காட்டாமல், தனியான மாநிலமாக வழங்கபட்டது, வரலாற்று தவறை BJP திருத்தி உள்ளது என்றே எண்ணப்பட வேண்டும்

இன்னும் சிலவற்றை பின்பு எழுதுகிறேன்.

 

Link to comment
Share on other sites

  • Replies 156
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, விசுகு said:

அது  என்   கனவு

உங்க‌ளின் க‌ன‌வு ஒரு நாள் ந‌ன‌வாக‌ட்டும் 😍😍🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

நரி  மூளைக்கு முதலிடம் கொடுத்தலே உலக வெற்றிகள்  தரும்  பாடம்

 

2 hours ago, பையன்26 said:

எப்ப‌டியோ உந்த‌ நாடு நாச‌மாய் போய் இந்த‌ உல‌க‌ வ‌ர‌ ப‌ட‌த்தில் இருந்து இந்தியா என்ர‌ நாடு காணாம‌ல் போக‌னும்

 

2 hours ago, பையன்26 said:

வைக்கோ சொன்ன‌ மாதிரி நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ர‌ நாடு இருக்காது என்று  , 
அது ந‌ட‌ந்தா முத‌ல் ச‌ந்தோச‌ ப‌டுவ‌து ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் தான்

 

நரி மூளையின் படி இது மிகவும் கடினம்.

சிங்களம், கிந்தியாவை  தமிழர்களுடன் பகைக்க வைத்தது.  

சிங்களத்தை, கிந்தியவுடன் பகைக்க வைப்பது எமது 2ஆம் படிநிலை முனைவாக இருக்க வேண்டும்.

இதற்கு, கோத்த ஆட்சி வருவதே சிறந்த அரங்காக  இருக்கும், தமிழ்டர்ற்க்கு பாதிப்பாயினும்.  

கிந்தியாவில், பிஜேபி இருப்பது, களம் தானாகவே அமைந்தாயிற்று.

பிஜேபி இன் இந்த ராஜபக்ச விற்கான கடிதம், சில வேளைகளில் கிருஷ்ண தூதாக கூட இருக்கலாம்.

மலையாளிகளை, பிஜேபி விலத்தி வைத்திருப்பதற்கு, ஒர் பிரச்சார உத்தி - தந்தை மேனன் சீனாவை வடக்கில் கொண்டு வாந்தி நிறுத்தினார். மகன் மேனன் சீனாவை தெற்கில் நிறுத்தினார் என்பதை அடிக்கடி நினைவு படுத்துவது. 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஞ்சித்,

மேலே விசுகு கோடிட்டதுதான் இப்போதைக்கு எமது அணுகுமுறையாக இருக்கவேண்டும். 

தனிப்பட்ட ரீதியில், இந்து மதவாத சிந்தனை உள்ளோர்களை தவிர பெரும்பாலான ஈழத்தமிழ் மக்கள் கஸ்மீரிகளின் பக்கமே என்பது என் அனுமானம்.

இஸ்ரேலும் ஆர் எஸ் எஸ் சும் ஒரே சிந்தனை உள்ளவர்கள். 

1. 2000 வருடங்களுக்கு முன் இஸ்ரேல் யூத பூமி. பின்னர் சிலுவை யுத்தங்களில் அது கிறீஸ்தவ/முஸ்லிம் அரசுகளிடையே மாறி, மாறி கைமாறி, அதன் பின் ஓட்டமான் ஆளுகைக்கு மத்திய கிழக்கு வந்தபின் அந்த நிலத்தின் ஆளுகை பன்னெடுங்காலமாக முஸ்லீம்கள் வசமிருந்தது. 1ம் உலக யுத்ததில், லாரண்ஸ் ஓப் அரேபியா உதவியுடன் அரபு புரட்சி நடந்து, அங்கிருந்து ஓட்டமான் (துருக்கி) அரசு அகற்றப்பட்டு அங்கே, யுகேயின் காபாந்து நிர்வாகம் அமைந்தது (protectorate). இதன் பின்னரே, 2ம் உலக யுத்த முடிவில் அதே மண்ணில் மீண்டும் இஸ்ரவேல் சிருஸ்டிக்கப் பட்டது.

இங்கே நடந்தது என்ன?

யூதரின் பார்வையில்- 2000 ஆண்டு வரலாற்று தோல்வியில் இருந்து மீண்டு - யூதர்கள் தமக்கென ஒரு நாட்டை அதே நிலத்தில் மீள அமைத்தனர்.

பலஸ்தீனரின் பார்வையில் - 2000 ஆண்டாக தாம் வாழ்ந்த நிலத்தை பால்வோர் ஒப்பந்தம் மூலம் ஆங்கிலேயே சதியுடன் யூதர்கள் பறித்து கொண்டனர்.

2. இதே கொள்கையைதான் மோடியும் எடுக்கிறார். கிபி 700 வரை கஸ்மீர் ஒரு இந்து தேசமே. ஆனால் தொடர் இஸ்லாமிய படை எடுப்புக்களால் இப்போ கஸ்மீர் பள்ளத்தாக்கு 97% முஸ்லீம் பகுதி ஆகி விட்டது. ஜம்மு இப்போதும் இந்து பெரும்பான்மை. லடாக் பெளத்த பெரும்பானமை.

இங்கே இந்துத்துவாவின் வாதம் - நாங்கள் 8ம் நூற்றாண்டில் இழந்த கஸ்மீரை மீட்கிறோம்.

கஸ்மீரிகளின் வாதம் - நாம் 1200 ஆண்டுகளாய் வாழ்ந்த சுயநிர்ணயத்தை கோருகிறோம்.

3. அவரவர்கு அவரவர் நியாயம். ஆனால் கஸ்மீரை 1947 இல் இந்தியா ஒரு தனிநாடாக அங்கீகரித்துளது. அதன் பின் ஒரு சர்வததேச ஒப்பந்தத்தை ராஜா ஹரிசிங்கின் கஸ்மீருடன் செய்து, அதன் படி கஸ்மீருக்கு சில சலுகைகளை வழங்கி இந்தியா காஸ்மீரின் இந்திய கட்டுப்பாட்டு பகுதியை தன்னோடு இணத்தது. இப்போ இவ்வாறு கஸ்மீரிகளுக்கு கொடுத்த வாக்கை காற்றில் பறக்க விட்டு இந்த சலுகைகளை இந்தியா நீக்கியுள்ளது. ஆனால் இதே மாதிரி, நாகலாந்து, சிக்கிம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு கொடுக்கப்பட்ட சிறப்புரிமை சலுகைகள் ரத்து செய்யப்படவில்லை. இது கஸ்மீரிகள் முஸ்லீம்கள் என்ற ஒரே காரணதுக்காக செய்யபட்ட செயல். இது 1200 வருச வரலாற்று சமன்பாட்டை மீள எழுதும் ஹிந்துதுவாவின் முனைப்பே அன்றி வேறில்லை.

பிகு: இந்திய பாக் பிரிவின் போது, தனி நாடாக அறிவிக்கப் பட்ட கஸ்மீரின் நிலப்பரப்பு இப்போ 5 ஆக பிரிக்கப் பட்டுளது.

1. இந்திய ஆக்கிரமிப்பு கஸ்மீர்( லடாக், கஸ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு)

2. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஸ்மீர் (மீர்பூர், முசபரபாத்)

3. ஜில்ஜிட் பாலிஸ்தான் - கஸ்மீரின் வட பகுதி. ஆப்கானின் வக்கான் காரிடார் (Wakkan Corridor) மற்றும் சீனாவுடன் தொடர்புள்ள பகுதி. இதை சத்தமில்லாமல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கஸ்மீரில் இருந்து பிரித்து ஒரு தனி பாகிஸ்தானிய மாகாணமாக பாகிஸ்தான் அறிவித்து கொண்டுளது. இதனூடாகவே சீனா-பாகிஸ்தானை இணைக்கும், சீனாவின் புதிய பட்டுப்பாதை, கக்கோரம் நெடுஞ்சாலை போகிறது.

4. அக்சய் சின் - லடாக்கின் எல்லையோரமாக இருக்கும் பகுதி. தற்போது சீனாவின் கட்டுப்பாட்டில்.

5. Trans Kakoram tract அல்லது ஷாக்ஸ்காம் tract - உலகின் அதி உயரமான யுத்த பூமியான சியாச்சின் பனிச்சிகரத்துக்கு வடக்கே உள்ள பகுதி. முன்பு பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் இருந்து பின், பாகிஸ்தானல் சீனாவுக்கு விட்டுக்கொடுக்கப் பட்டது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது பார்வையில்:

எமக்கு ஒரு விடிவெண்டால் அது இந்தியா சிதறுவதில் இருந்தே ஆரம்பமாகும். ஆனால் இதை நாம் இப்போதே சொன்னால், அடித்து நொருக்கி விடுவார்கள். யூதர்களை போல 2000 ஆண்டுகள் கூட காத்திருக்க நேரலாம். 

 

Link to comment
Share on other sites

11 minutes ago, goshan_che said:

தனிப்பட்ட ரீதியில், இந்து மதவாத சிந்தனை உள்ளோர்களை தவிர பெரும்பாலான ஈழத்தமிழ் மக்கள் கஸ்மீரிகளின் பக்கமே என்பது என் அனுமானம்.

கனம் கோட்டார், ச்சீ கோசான் அவர்களே,
மறுத்த தரப்பு விவாதத்தையும், அதாவது யூதர்கள் போன்று காஸ்மீர் இந்துக்களும் இழந்த நிலத்தை தான் இப்பொழுது  மீட்டிருக்கின்றார்கள் என்ற விவாதக்காரணத்தையும் உள்வாங்கி பார்த்தால் தீர்ப்பு மாறிவிடலாம்.

எமது வாதத்தையும் கருத்தில் கொள்வீர்கள் என நம்புகின்றோம் 🙂 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, goshan_che said:

எனது பார்வையில்:

எமக்கு ஒரு விடிவெண்டால் அது இந்தியா சிதறுவதில் இருந்தே ஆரம்பமாகும். ஆனால் இதை நாம் இப்போதே சொன்னால், அடித்து நொருக்கி விடுவார்கள். யூதர்களை போல 2000 ஆண்டுகள் கூட காத்திருக்க நேரலாம். 

 

இது தான் உண்மையும் கூட‌ பிரோ /
இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு பிரிந்தா ஒரு க‌ல்லில் இர‌ண்டு மாங்காய் ந‌ம‌க்கு /

முன்னால் யூகோசுலோபியா உடைந்த‌து போல் / 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய‌ன் என்று சொல்லி பெருமை ப‌ட‌ என்ன‌ இருக்கு , பெருத்த‌ அவ‌மான‌ம் தான் இந்திய‌ன் என்று சொன்னா /

எல்லாத்திலும் பின் நோக்கி போன‌ நாடு இந்தியா , ஊழ‌லில் முத‌லாவ‌து நாடு இந்தியா, ஒலிம்பிக் போன்ற‌ புக‌ழ் பெற்ற‌ விளையாட்டில் க‌ட‌சி இட‌த்தில் இந்தியா  , 
சுத‌ந்திர‌ இந்தியாவில் ம‌க்க‌ளின் அன்ராட‌ வாழ்க்கையை பாருங்கோ /

வ‌ட‌ நாட்டானின் ஆனுவ‌ம் ம‌ற்ற‌ மானில‌க் கார‌ங்க‌ள் த‌ங்க‌ளின் ஹிந்தி மொழிக்கு அடிமையாய் இருக்க‌னும் என்று /

த‌மிழ் நாட்டில் இருக்கிற‌ பெரும்பாலான‌ த‌மிழ‌ர்க‌ளுக்கு இந்தியா என்ர‌ ந‌ச்சு கூடார‌த்துக்கை இருந்து தாங்க‌ள் எவ‌ள‌வ‌த்தை இழ‌ந்து இருக்கிறோம் என்று கூட‌ தெரியாம‌ வாழுகின‌ம் /
ஆண்ட‌வ‌ர் தான் அந்த‌ ம‌க்க‌ளுக்கு ந‌ல்ல‌ சிந்திக்கிர‌ புத்தியை குடுக்க‌னும் / 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:

கனம் கோட்டார், ச்சீ கோசான் அவர்களே,
மறுத்த தரப்பு விவாதத்தையும், அதாவது யூதர்கள் போன்று காஸ்மீர் இந்துக்களும் இழந்த நிலத்தை தான் இப்பொழுது  மீட்டிருக்கின்றார்கள் என்ற விவாதக்காரணத்தையும் உள்வாங்கி பார்த்தால் தீர்ப்பு மாறிவிடலாம்.

எமது வாதத்தையும் கருத்தில் கொள்வீர்கள் என நம்புகின்றோம் 🙂 

வக்கீல் அம்பனை அவர்களே 😂,

மேலே நான் சொல்லிவிட்டேனே 8ம் நூற்றாண்டிலும் அதன் பின் முகமது கஜினி போன்றோராலும் இந்துக்கள் வசமிருந்து முஸ்லீம்களிடம் போன நிலம்தான் காஸ்மீர். அதில் மாற்றுக் கருத்து இல்லை.    

ஆனால் யூதர்களுக்கும் கஸ்மீரிகளுக்கும் உள்ள வித்தியாசம் யாதெனில், ஓட்டமான் ஆக்கிரமிப்பின் பின் யூதர்கள் இஸ்ரேலை விட்டு வெளியேறினர்/துரத்தப் பட்டனர்.

ஆனால் கஸ்மீரிகள் அப்படியல்ல, குறிப்பாக பள்ளத்தாக்கில் உள்ளவர்கள், அவர்கள் இந்துக்கள், முஸ்லீம்களாக மாறியவர்கள். தைமூர், கஜினி, கோரி, பாபர் இப்படி படை கொண்டு வந்தோரும், அரேபியர்களும், இவர்களை முஸ்லீமாக்கிவிட்டார்கள். ஆகவே அவர்கள்தான் கஸ்மீரின் மண்ணின் மைந்தர்கள். அவர்களிடம் இருந்து, குஜராத்தி மோடியும், அமித்தும் கஸ்மீரை மீட்பதாக சொல்வதை, யூதர்கள் இஸ்ரேலை மீட்டதுடன் ஒப்பிட முடியாதல்லவா?

 

பிகு: ஆனால் இந்த லொஜிக்கின் படி பார்த்தால், காந்தாரியின் நாடானா கந்தஹார் (ஆப்கானிஸ்தான்) வரை மோடிஜி படை நடத்த வேண்டிவரும் 😂.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, goshan_che said:

ஆகவே அவர்கள்தான் கஸ்மீரின் மண்ணின் மைந்தர்கள். அவர்களிடம் இருந்து, குஜராத்தி மோடியும், அமித்தும் கஸ்மீரை மீட்பதாக சொல்வதை

முஸ்லீம் அல்லாத, காஷ்மீருடன் தொடர்பில்லாத மக்களை இணைத்து, காஷ்மீர் முஸ்லிமகளை சிறுபான்மை ஆக்கவில்லை.

35 ஐ எடுத்ததால் எல்லோருக்கும் வந்துள்ள பயமே தவிர, ஹிந்திய கட்டாயமான குடியேற்றம் செய்கிறதா என்பதை பொறுத்திருக்கிறது.

மற்றது, காஷ்மீரில் 370 வந்தபோது, 90% காணிகள் காஷ்மீர் இந்துக்களிடம் இருந்ததாகவும், அதனை பஞ்சாபிகளிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கிலேயே 370, 35 சரத்துக்கள் சேர்த்துக்கொள்வதற்கு கிந்தியா இணங்கியது என்பதுவே யதார்த்தமானது.

காஷ்மீரி முஸ்லிம்கள், ஏறத்தாழ 10% காணிகளையே 370 வந்தபோது வைத்திருந்தனர்.

வணிகமும், வர்த்தகமும் காஷ்மீரி இந்துக்கள் வசமே பெரும்பாலும் இருந்தது, 370 வந்த போது.  

பின்னர், காணி அதிகாரம் இருந்ததாலும், 1980 களில் காஸ்மீரி இந்துக்கள் துரத்தப்பட்டதன் விளைவாகவே, காஸ்மீரி முஸ்லிம்கள் பெருமளவில் காணிகளுக்கு உரிமையாளராக வர முடிந்தது  என்பதும் உண்மையாகவே  இருக்கிறது.             


முக்கியமாக, இந்த கொள்கையின் பரந்த யதார்த்தமானது, எமது தற்போதைய பிரச்னையுடன் ஒத்துப்போகிறது.

அதாவது, கிழக்கிலே தமிழர்களின் காணிகளை சிங்களமும், முஸ்லிம்களும் பங்கு போட்டுக்கொண்டிருப்பது, கல்லோயாவில் தொடங்கி, 1970 தொடக்கம் சிறிமமா / பதியுதீன் காலத்தில் தீவிரமடைந்து, இற்றைவரைக்கும் தொடர்வது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kadancha said:

முஸ்லீம் அல்லாத, காஷ்மீருடன் தொடர்பில்லாத மக்களை இணைத்து, காஷ்மீர் முஸ்லிமகளை சிறுபான்மை ஆக்கவில்லை.

35 ஐ எடுத்ததால் எல்லோருக்கும் வந்துள்ள பயமே தவிர, ஹிந்திய கட்டாயமான குடியேற்றம் செய்கிறதா என்பதை பொறுத்திருக்கிறது.

மற்றது, காஷ்மீரில் 370 வந்தபோது, 90% காணிகள் காஷ்மீர் இந்துக்களிடம் இருந்ததாகவும், அதனை பஞ்சாபிகளிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கிலேயே 370, 35 சரத்துக்கள் சேர்த்துக்கொள்வதற்கு கிந்தியா இணங்கியது என்பதுவே யதார்த்தமானது.

காஷ்மீரி முஸ்லிம்கள், ஏறத்தாழ 10% காணிகளையே 370 வந்தபோது வைத்திருந்தனர்.

வணிகமும், வர்த்தகமும் காஷ்மீரி இந்துக்கள் வசமே பெரும்பாலும் இருந்தது, 370 வந்த போது.  

பின்னர், காணி அதிகாரம் இருந்ததாலும், 1980 களில் காஸ்மீரி இந்துக்கள் துரத்தப்பட்டதன் விளைவாகவே, காஸ்மீரி முஸ்லிம்கள் பெருமளவில் காணிகளுக்கு உரிமையாளராக வர முடிந்தது  என்பதும் உண்மையாகவே  இருக்கிறது.             


முக்கியமாக, இந்த கொள்கையின் பரந்த யதார்த்தமானது, எமது தற்போதைய பிரச்னையுடன் ஒத்துப்போகிறது.

அதாவது, கிழக்கிலே தமிழர்களின் காணிகளை சிங்களமும், முஸ்லிம்களும் பங்கு போட்டுக்கொண்டிருப்பது, கல்லோயாவில் தொடங்கி, 1970 தொடக்கம் சிறிமமா / பதியுதீன் காலத்தில் தீவிரமடைந்து, இற்றைவரைக்கும் தொடர்வது.

கடஞ்சா,

உங்கள் பதிவில் இருந்து எனக்கு எழுந்த கேள்விகள் பின்வருமாறு.

1. கஸ்மீரி இந்துக்கள் வெளியேற்றம் நிகழ்ந்தது 1988-1990 காலப்பகுதியில். வெளியேற்றம் பள்ளதாக்கில் மட்டுமே நிகழ்ந்தது. 370 வந்தது 1948(?). 1948 இல் 10% காணிகள்தான் கஸ்மீர்பள்ளதாக்கில், கஸ்மீரி முஸ்லீம்கள் வசம் இருந்தது என்பதற்கு நீங்கள் காட்டும் ஆதாரம் என்ன? இந்துக்கள் வெளியேற முன்னரே பள்ளத்தாக்கு முஸ்லிம் பெரும்பான்மை பகுதி, அதில் 10% மட்டுமே பெரும்பான்மையான மக்களிடம் இருந்தது என்பது, நம்பகமான தகவலாக தெரியவில்லை.

2. கஸ்மீரிய இந்துக்கள் வெளியேற்றம் என்றதும், அவர்கள் ஏதோ முழு மாநிலத்தையும் விட்டு வெளியேறியதாக அர்த்தமில்லை. பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறியவர்களில் பெரும்பாலானோர் - ஏலவே இந்து பெரும்பான்மை பகுதியாக இருந்த ஜம்முவில் மீள்குடியேறி விட்டனர். ஆகவே கஸ்மீர் மாநிலத்தின் இந்துக்கள் அளவில் இது மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இவர்களுக்கு நிகழ்ந்தது, உள்ளக இடப்பெயர்வு. வெளியேற்றம் அல்ல.

3. பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறிய கஸ்மீரி இந்துக்களின் மொத்த எண்ணிக்கை 300,000 என்பதே, பக்கம் சாராதவர்களின் கணிப்பு. தற்போதைய கஸ்மீரின் மொத்த சனத்தொகை 7 மில்லியன். 90 இல் இது 5 மில்லியனாக இருந்ததாக ஒரு எடுகோளை வைத்தாலும், வெளியேற்றப் பட்ட இந்துக்களின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் குறைந்த (ஆனால் கணிசமான) சதவீதமே. இவர்களிடத்தில் பள்ளத்தாக்கில் இருந்த சொத்துக்களளை இவர்கள் பெரும்பாலானோர் விற்கவில்லை எனவும் அந்த சொத்துக்கள் சிதிலமாய் உள்ளன என்பதுமே நான் கேள்விப்பட்டது.

5. நடந்தது அநியாயமே என்றாலும் தம் அநியாயத்தை மறைக்க, இந்துதுவாவினரும், இந்தியாவும் கஸ்மீர் இந்துக்கள் உள்ளக இடெப்பெயர்வை இனச்சுத்தீகரிப்பு ரேஞ்சுக்கு தூக்கி பிடிப்பதும் வழமை. 

6. கஸ்மீர் பள்ளத்தாக்கில் 1948இலும், 1990இலும், இன்றும் கஸ்மீரி முஸ்லீம்களே அறுதிப் பெரும்பான்மை. அந்த மண் 8ம் நூற்றாண்டுக்கு முன் இந்துக்களாக இருந்த போதும் அவர்களுடையது. 8 ம் நூற்றாண்டில் இருந்து முஸ்லீம்களாக மாறிய பின்பும் அவர்களுடையதே. ஆகவே அவர்கள்தான் அந்த மண்ணின் மைந்தர்கள். 

Link to comment
Share on other sites

ரஞ்சித் 

என் மூளைக்கு எட்டினதை எழுதினேன். மற்றபடிக்கு கடல் வற்றி கருவாடு தின்ன வேண்டாமென்று சொல்லவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

6.

15 hours ago, goshan_che said:

5. நடந்தது அநியாயமே என்றாலும் தம் அநியாயத்தை மறைக்க, இந்துதுவாவினரும், இந்தியாவும் கஸ்மீர் இந்துக்கள் உள்ளக இடெப்பெயர்வை இனச்சுத்தீகரிப்பு ரேஞ்சுக்கு தூக்கி பிடிப்பதும் வழமை. 

6. கஸ்மீர் பள்ளத்தாக்கில் 1948இலும், 1990இலும், இன்றும் கஸ்மீரி முஸ்லீம்களே அறுதிப் பெரும்பான்மை. அந்த மண் 8ம் நூற்றாண்டுக்கு முன் இந்துக்களாக இருந்த போதும் அவர்களுடையது. 8 ம் நூற்றாண்டில் இருந்து முஸ்லீம்களாக மாறிய பின்பும் அவர்களுடையதே. ஆகவே அவர்கள்தான் அந்த மண்ணின் மைந்தர்கள். 


6. இதை ஒருவருமே குழப்பவில்லை.   

5. இனச்சுத்திகரிப்பு நடந்தது, நடக்கவில்லை என்பதற்கப்பால், காஸ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து ஜம்முவை பிரிக்கவில்லை.  ஆனால், அதற்காக லடாக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கு நிர்வாகத்தின் கீழ் இருக்க வேண்டுமா?

அந்த அநியாயம் நடந்திருப்பினும், பாதிக்கப்பட்டவர்கள் இந்து மதத்தவராக இருந்தும், அவர்கள் இன்னமும் அகதிகளாகவும், அலைபவர்களாகவும் இருந்தும், பிஜேபி பழி தீர்க்கும் வண்ணமாக நடக்கவில்லை, அதாவது, ஜம்முவை பிரிக்கவில்லை.

இன்னும் ஒன்றையும் கவனிக்க வேண்டும். baltistan ஐ பிரித்து பாகிஸ்தான் தனது நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்த போது, ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் மூச்சு கூட காட்டவில்லை.

எவர் எது சொன்னாலும், ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் பாகிஸ்தானின் செயலை மிக கடுமையாக கண்டித்திருக்க வேண்டும்.

இவ்வளவுக்கும் மத்தியில், கிந்தியா ஜம்மு-காஷ்மீர் என்பதை பிரிக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

உங்கள் பதிவில் இருந்து எனக்கு எழுந்த கேள்விகள் பின்வருமாறு.

1. கஸ்மீரி இந்துக்கள் வெளியேற்றம் நிகழ்ந்தது 1988-1990 காலப்பகுதியில். வெளியேற்றம் பள்ளதாக்கில் மட்டுமே நிகழ்ந்தது. 370 வந்தது 1948(?). 1948 இல் 10% காணிகள்தான் கஸ்மீர்பள்ளதாக்கில், கஸ்மீரி முஸ்லீம்கள் வசம் இருந்தது என்பதற்கு நீங்கள் காட்டும் ஆதாரம் என்ன? இந்துக்கள் வெளியேற முன்னரே பள்ளத்தாக்கு முஸ்லிம் பெரும்பான்மை பகுதி, அதில் 10% மட்டுமே பெரும்பான்மையான மக்களிடம் இருந்தது என்பது, நம்பகமான தகவலாக தெரியவில்லை.

2. கஸ்மீரிய இந்துக்கள் வெளியேற்றம் என்றதும், அவர்கள் ஏதோ முழு மாநிலத்தையும் விட்டு வெளியேறியதாக அர்த்தமில்லை. பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறியவர்களில் பெரும்பாலானோர் - ஏலவே இந்து பெரும்பான்மை பகுதியாக இருந்த ஜம்முவில் மீள்குடியேறி விட்டனர். ஆகவே கஸ்மீர் மாநிலத்தின் இந்துக்கள் அளவில் இது மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இவர்களுக்கு நிகழ்ந்தது, உள்ளக இடப்பெயர்வு. வெளியேற்றம் அல்ல.

3. பள்ளத்தாக்கில் இருந்து வெளியேறிய கஸ்மீரி இந்துக்களின் மொத்த எண்ணிக்கை 300,000 என்பதே, பக்கம் சாராதவர்களின் கணிப்பு. தற்போதைய கஸ்மீரின் மொத்த சனத்தொகை 7 மில்லியன். 90 இல் இது 5 மில்லியனாக இருந்ததாக ஒரு எடுகோளை வைத்தாலும், வெளியேற்றப் பட்ட இந்துக்களின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் குறைந்த (ஆனால் கணிசமான) சதவீதமே. இவர்களிடத்தில் பள்ளத்தாக்கில் இருந்த சொத்துக்களளை இவர்கள் பெரும்பாலானோர் விற்கவில்லை எனவும் அந்த சொத்துக்கள் சிதிலமாய் உள்ளன என்பதுமே நான் கேள்விப்பட்டது.

1, 3.

நானும் முதல் நம்பவில்லை தான். ஏனெனில், வரலாறாக ஒரு குறிப்புக்களும் இல்லை.

காஷ்மீரின் காணிகள் நிலச்சுவாந்தர், ஜமீன் போன்றோர்களிடமே இருந்தது. இவர்கள், காஷ்மீர் இந்துக்கள்.   

https://kashmirlife.net/costly-land-reforms-issue-16-vol-11-215417/

https://thewire.in/government/radical-land-reforms-key-sheikh-abdullahs-towering-influence-kashmir

செய்தியின் படி, 250,000 சாதி குறைவான (செய்தியின் படி) இந்துக்களும் தாம் பாவித்த காணிகளுக்கு உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது.  

https://www.dailyo.in/politics/article-370-kashmiriyat-nehru-sheikh-abdullah-referendum-in-kashmir-kashmir-s-land-reforms/story/1/31905.html

இது இன்னுமோர் குறிப்பு.

https://nlsiumppblog.wordpress.com/2016/09/06/trajectory-of-land-reforms-in-jk-and-its-outcomes/

1950 இல், 250,000 காஷ்மீர் இந்துக்கள்,  செய்தியின் படி, மற்ற இந்துக்களை கணக்கில் எடுக்காமல்.

எனவே, 1980 - 1990 களில், 300, 000 நம்பும் படியாக இல்லை.   500, 000 - 600, 000 அண்ணளவாக சரியாக இருபதற்கே, குழந்தை இறப்பு வீதத்தையும் உள்ளடக்கி, வாய்ப்புக்கள் அதிகம். ஏனெனில், 1950 - 1990 வரையில், குழந்தைகள் 3 க்கு மேற்றப்பட்டே குடும்பங்கள் வளர்ந்தன. அதுவம் peasants இல், இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

 

2. துரத்தபட்டவர்களில், ஒரு தொகுதியினர் ஜம்முவில், ஆனால் அகதிகளாக. ஒரு தொகுதியினர் முற்றாக வெளியேறி விட்டார்கள்.  

 

கிந்தியா, வலுக்கட்டாயமாக குடியேற்றம் செய்யாதவிடத்து, ஜம்மு-காஷ்மீர் குடிப் பரம்பல், இனப் பரம்பலை மாற்றுவது மிகவும் கடினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்முடைய தற்போதைய பிரச்சனைக்கு (வடக்கு கிழக்கு இணைப்பு, எமது குடிப் பரம்பல் போன்றவை), பிஜேபி இந்த கொள்கையின் யதார்த்தில் ஒத்துப்போகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Kaanjcha,

நல்ல அருமையானதொரு உரையாடலை தொடங்கி விட்டு, விடுமுறையில் வந்துவிட்டேன். மன்னிக்கவும். விடுமுறை முடியவந்து நீங்கள் தந்த தரவுகளையும் படித்து விட்டு, பதிலிடுகிறேன். 

Link to comment
Share on other sites

தனி தமிழீழம் தனி காஸ்மீர் ?
ஏன் 2009இல் 40 உறுப்பினர்களை கொண்ட தி.மு.க. ஏன் அன்று டெல்லியில் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை ஆனால் இன்று ஏன் காசுமீருக்கு ஆகி செய்கின்றது ? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/19/2019 at 9:36 PM, பையன்26 said:

எல்லாத்திலும் பின் நோக்கி போன‌ நாடு இந்தியா , ஊழ‌லில் முத‌லாவ‌து நாடு இந்தியா, ஒலிம்பிக் போன்ற‌ புக‌ழ் பெற்ற‌ விளையாட்டில் க‌ட‌சி இட‌த்தில் இந்தியா  , 
சுத‌ந்திர‌ இந்தியாவில் ம‌க்க‌ளின் அன்ராட‌ வாழ்க்கையை பாருங்கோ /

எமக்கு இருக்கும் ஆத்திரத்தில், மற்றும் எமது நோக்கங்களுக்கு எதிராக இருப்பவர்கைளயும், குறைத்து  மதிப்பிடக்கூடாது.

நீங்கள், கிந்தியா பற்றி எல்லாவற்றையும் சீர்துக்கிப் பாருங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

எமக்கு இருக்கும் ஆத்திரத்தில், மற்றும் எமது நோக்கங்களுக்கு எதிராக இருப்பவர்கைளயும், குறைத்து  மதிப்பிடக்கூடாது.

நீங்கள், கிந்தியா பற்றி எல்லாவற்றையும் சீர்துக்கிப் பாருங்கள்.

 

அண்ணா , ஜ‌ரோப்பாவில் இருக்கும் குட்டி நாடுக‌ள் அபிவிருத்து அடைஞ்சு முன்னேறிட்டு போராங்க‌ள் , 

இந்தியா என்ன‌த்தில் முன்னோரி இருக்கு என்று நீங்க‌ள் தான் என‌க்கு விள‌க்கி சொல்ல‌னும் , இந்தியாவின் காசின் வீழ்ச்சி அடையுது , அதோடு அந்த‌ நாட்டு ம‌க்க‌ளின் நிலையை பாருங்கோ நாட்டையும் பாருங்கோ , இந்தியா த‌லைந‌க‌ர‌மான‌ டெல்லி ஒரு குப்பை கூடார‌ம் அதோடு டெல்லியில் இப்ப‌வும் ம‌க்க‌ள் குடிசை வீட்டில் வாழ்கிறார்க‌ள் /

அணுகுண்டு வைச்சு இருப்ப‌து பெருமை இல்லை , பெருத்த‌ ஆவ‌த்து , சுத‌ந்திர‌ம் கிடைச்சு 70 வ‌ருட‌ம் தாண்டி விட்ட‌து , கோயில் வாச‌லில் பிச்சை எடுக்கின‌ம் ம‌க்க‌ள் ,ஒட்டு மொத்த‌ இந்திய‌ர்க‌ள் மூன்று நேர‌ சாப்பாடு சாப்பிடின‌மா இல்லை , எத்த‌னையோ கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்க‌ போகின‌ம் ,
இந்தியா நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ளின் ந‌ரி த‌ன‌ம் இருக்கும் வ‌ர‌ நாடும் முன்னேராது ம‌க்க‌ளும் ந‌ல்ல‌ நிலைக்கு வ‌ர‌ மாட்டின‌ம் /

உல‌கிலையே ஓட்டுக்கு காசு குடுத்து ஓட்டை ம‌க்க‌ளிட‌த்தில் இருந்து வாங்கி , நாட்டை நாச‌ம் செய்யும் அர‌சிய‌ல் வாதிக‌ள் ப‌ல‌ர் இந்தியாவில் / 

சைனா ம‌க்க‌ளோடு இந்திய‌ ம‌க்க‌ளை ஒப்பிட்டு பார்த்தா , இந்திய‌ ம‌க்க‌ளுக்கு அறிவு க‌ம்பி / 

இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு , நீங்க‌ள் நான் எழுதின‌துக்கு ப‌தில் அளியுங்கோ உங்க‌ளின் ப‌திவுக்கு நான் ப‌தில் அளிக்கிறேன் அண்ணா 

Link to comment
Share on other sites

On 8/21/2019 at 4:12 PM, goshan_che said:

நல்ல அருமையானதொரு உரையாடலை தொடங்கி விட்டு, விடுமுறையில் வந்துவிட்டேன்.

விடுமுறை மகிழ்வுடன் கழிய வாழ்த்துக்கள். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Lara said:

விடுமுறை மகிழ்வுடன் கழிய வாழ்த்துக்கள். 😊

நன்றி💐

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/22/2019 at 8:25 AM, பையன்26 said:

இந்தியா என்ன‌த்தில் முன்னோரி இருக்கு என்று நீங்க‌ள் தான் என‌க்கு விள‌க்கி சொல்ல‌னும் , இந்தியாவின் காசின் வீழ்ச்சி அடையுது , அதோடு அந்த‌ நாட்டு ம‌க்க‌ளின் நிலையை பாருங்கோ நாட்டையும் பாருங்கோ , இந்தியா த‌லைந‌க‌ர‌மான‌ டெல்லி ஒரு குப்பை கூடார‌ம் அதோடு டெல்லியில் இப்ப‌வும் ம‌க்க‌ள் குடிசை வீட்டில் வாழ்கிறார்க‌ள் /

 

 

On 8/22/2019 at 8:25 AM, பையன்26 said:

சுத‌ந்திர‌ம் கிடைச்சு 70 வ‌ருட‌ம் தாண்டி விட்ட‌து , கோயில் வாச‌லில் பிச்சை எடுக்கின‌ம் ம‌க்க‌ள் ,ஒட்டு மொத்த‌ இந்திய‌ர்க‌ள் மூன்று நேர‌ சாப்பாடு சாப்பிடின‌மா இல்லை , எத்த‌னையோ கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்க‌ போகின‌ம் ,

On 8/22/2019 at 8:25 AM, பையன்26 said:

சுத‌ந்திர‌ம் கிடைச்சு 70 வ‌ருட‌ம் தாண்டி விட்ட‌து , கோயில் வாச‌லில் பிச்சை எடுக்கின‌ம் ம‌க்க‌ள் ,ஒட்டு மொத்த‌ இந்திய‌ர்க‌ள் மூன்று நேர‌ சாப்பாடு சாப்பிடின‌மா இல்லை , எத்த‌னையோ கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்க‌ போகின‌ம் ,

 

On 8/22/2019 at 8:25 AM, பையன்26 said:

இந்தியா நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ளின் ந‌ரி த‌ன‌ம் இருக்கும் வ‌ர‌ நாடும் முன்னேராது ம‌க்க‌ளும் ந‌ல்ல‌ நிலைக்கு வ‌ர‌ மாட்டின‌ம் /

உல‌கிலையே ஓட்டுக்கு காசு குடுத்து ஓட்டை ம‌க்க‌ளிட‌த்தில் இருந்து வாங்கி , நாட்டை நாச‌ம் செய்யும் அர‌சிய‌ல் வாதிக‌ள் ப‌ல‌ர் இந்தியாவில் / 

சைனா ம‌க்க‌ளோடு இந்திய‌ ம‌க்க‌ளை ஒப்பிட்டு பார்த்தா , இந்திய‌ ம‌க்க‌ளுக்கு அறிவு க‌ம்பி / 

இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு , நீங்க‌ள் நான் எழுதின‌துக்கு ப‌தில் அளியுங்கோ உங்க‌ளின் ப‌திவுக்கு

நீங்கள் சொல்லிய எல்லாமும்,  மேலதிகமாக சொல்லாமல் விட்டதையும் (உங்களின் எழுத்துப்படி) இருந்த போதும், ஈழத்தமிழர்களின் மிகவும் வலிமையன, அதி உச்ச திறனுள்ள சக்தியான விடுதலைப் புலிகள், வரலாற்றில் தமது வலிமையில்  அதி உச்ச நிலையிலும், கிந்தியாவை  பெருந்தன்மையாக இருக்கும் படி வேண்டிக் கேட்டுக் கொண்டார்கள்.

வரலாற்றில் விடுதலைப் புலிகள் தமது வலிமையில்  அதி உச்ச நிலையிலும், சுந்ததிர  தமீழீழ தனியரசை பிரகடனம் செய்ய முன்வரவில்லை.

விடுதலைப் புலிகள், கிந்தியாவைப் பொறுத்த வரை, வேண்டிக் கேட்டதும், விடுதலைப் புலிகளால் சர்வ  சாதாரணமாக  செய்யக் கூடிய சுதந்திர  தமீழீழ தனியரசை பிரகடனம் செய்யாமல் விட்டதிற்கும்  ஆனா retrospective thought space இல் உங்களின் ஹிந்தியா  பற்றிய மதிப்பீட்டிட்ற்கு பதில் இருக்கிறது  என்றே எண்ணுகிறேன்.

Link to comment
Share on other sites

அரபு நாடுகளும் பாகிஸ்தானும் இலங்கை அரசை ஆதரித்தத சூழலில்  பலஸ்தினிய அமைப்புகளோ காஸ்மீர் மக்கள் அமைப்புகளோ இறுதி யுத்தத்தில் இனக்கொலை சூழலில்கூட ஈழத் தமிழர்களை ஆதரிக்கவில்லை. அதன் அர்த்தம் அவர்களுக்கு எங்கள்மீது அனுதாபம் இருந்திருக்காதென்பது அல்ல. அதன் அர்த்தம் அவர்களுக்கு புவிசார் அணிகள் தொடர்பான தெளிவும்  அது சார்ந்த தங்கள் எதிர்காலம் தொடர்பான பொறுப்புணர்வும் ராஜதந்திரமும் இருந்தது என்பதுதான்.

காஸ்மீர் பிரச்சினை தொடர்பாக ஈழத் தமிழர் எவ்வாறு நிலைபாடு எடுக்க வேண்டுமென்கிற செயல்பாட்டு முறைமையை ஈழத் தமிழர்கள் காஸ்மீரிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்.  

Link to comment
Share on other sites

On 8/15/2019 at 9:53 PM, Kadancha said:

காஸ்மீரிகள் முதலில் ஆரம்பித்தது முஸ்லீம் என்ற (மத) அடையாளத்துடன். இது நிச்சயமாக, பாகிஸ்தானுடன் இணைவதை (அப்படி இல்ல விட்டாலும்) என்ற புரிதலே. ஏனெனினுள் ஹிந்தியா பன்முகத்தன்மை என்கிறது, பாக்கிதான் முஸ்லீம் என்கிறது.

ஷேக் அப்துல்லா ஆரம்பத்தில் முஸ்லிம் என்ற மத அடையாளத்துடன் போராட்டத்தை ஆரம்பித்த போது பாக்கிஸ்தான் என்ற நாடு இல்லை.

மன்னர் ஹரிசிங்கின் நிலப்பிரபுத்துவ கொடுங்கோலாட்சிக்கு எதிராகவும் பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்தவர். ஹரிசிங்கின் ஆட்சியில் முஸ்லிம் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டனர். ஆரம்பத்தில் மக்கள் இயக்கமாக இருந்து பின் “அனைத்து ஜம்மு மற்றும் காஷ்மீர் முஸ்லிம் மாநாட்டு கட்சி” உருவாக்கப்பட்டது. இதை மதசார்பற்று மாற்றும் நோக்கில் முஸ்லிம் என்ற பெயரை நீக்கி 1939 இல்“ஜம்மு மற்றும் காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி” என மாற்றினார். மன்னராட்சி நீங்கி மக்களாட்சி வரவேண்டும் என்றும் குரல் கொடுத்தார்.

1947 இல் தான் பிரிட்டிஷ் இந்தியா பிரிந்து முஸ்லிம்களை அதிகமாக கொண்ட பகுதி பாக்கிஸ்தான் என்றும் இந்துக்களை அதிகமாக கொண்ட பகுதி இந்தியா என்றும் உருவானது. அத்துடன் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலையும் கிடைத்தது. அந்நேரம் ஏனைய சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைவதா பாக்கிஸ்தானுடன் இணைவதா அல்லது தனிநாடாக இருப்பதா என்பதை அவர்களை முடிவு செய்யும்படி ஆங்கிலேயர்கள் கூறினார்கள். அந்நேரம் காஷ்மீர் தனிநாடாக இருக்க தான் விரும்பியது. 

பின்னர் தான் இந்திய இராணுவ உதவியை பெற்றுக்கொள்வதற்காக இந்தியாவுடன் தற்காலிகமாக இணைக்கப்பட்டது. அதன் பின்னான இந்தியாவின் குளறுபடிகள் தெரிந்ததே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

ஷேக் அப்துல்லா ஆரம்பத்தில் முஸ்லிம் என்ற மத அடையாளத்துடன் போராட்டத்தை ஆரம்பித்த போது பாக்கிஸ்தான் என்ற நாடு இல்லை.

மன்னர் ஹரிசிங்கின் நிலப்பிரபுத்துவ கொடுங்கோலாட்சிக்கு எதிராகவும் பிரிட்டிஷ் காலனித்துவத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்தவர். ஹரிசிங்கின் ஆட்சியில் முஸ்லிம் மக்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டனர். ஆரம்பத்தில் மக்கள் இயக்கமாக இருந்து பின் “அனைத்து ஜம்மு மற்றும் காஷ்மீர் முஸ்லிம் மாநாட்டு கட்சி” உருவாக்கப்பட்டது. இதை மதசார்பற்று மாற்றும் நோக்கில் முஸ்லிம் என்ற பெயரை நீக்கி 1939 இல்“ஜம்மு மற்றும் காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி” என மாற்றினார். மன்னராட்சி நீங்கி மக்களாட்சி வரவேண்டும் என்றும் குரல் கொடுத்தார்.

1947 இல் தான் பிரிட்டிஷ் இந்தியா பிரிந்து முஸ்லிம்களை அதிகமாக கொண்ட பகுதி பாக்கிஸ்தான் என்றும் இந்துக்களை அதிகமாக கொண்ட பகுதி இந்தியா என்றும் உருவானது. அத்துடன் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலையும் கிடைத்தது. அந்நேரம் ஏனைய சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைவதா பாக்கிஸ்தானுடன் இணைவதா அல்லது தனிநாடாக இருப்பதா என்பதை அவர்களை முடிவு செய்யும்படி ஆங்கிலேயர்கள் கூறினார்கள். அந்நேரம் காஷ்மீர் தனிநாடாக இருக்க தான் விரும்பியது. 

பின்னர் தான் இந்திய இராணுவ உதவியை பெற்றுக்கொள்வதற்காக இந்தியாவுடன் தற்காலிகமாக இணைக்கப்பட்டது. அதன் பின்னான இந்தியாவின் குளறுபடிகள் தெரிந்ததே.

நீங்கள் எழுதியவை facts.

இதை, நான் எழுதியதற்கு  பதிலாக ஏன் எழுத வேண்டும்?

அதன் மூலம் உங்கள் எண்ணம் என்ன?

 

2 hours ago, Lara said:

1947 இல் தான் பிரிட்டிஷ் இந்தியா பிரிந்து

ஒரே ஒரு திருத்தம், உத்தியோக பூர்வமாக இந்தியா பிரிந்து.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.