Jump to content

காஷ்மிர் குறித்து தமிழ் தலைமைகளின் மௌனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Lara said:

பின் அதே நேரு பொதுவாக்கெடுப்பு மேற்கொள்ளாமல் காஷ்மீரை தன்னிச்சையாக இந்தியாவுடன் இணைக்கும் வேலையில் ஈடுபட்டார். சட்டங்களையும் இந்தியாவுக்கு சார்பாக மாற்றியமைத்தார். 

 

20 minutes ago, Lara said:

நேரு ஒரு காஷ்மீர் பண்டிட் என்பதால் காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என கருதியவர்.

இப்போதா உங்களுக்கு தெரிகிறது நரி நேரு நரி என்று?  

பிஜேபி நரி அல்ல, தன எண்ணியதை சொன்னது. செய்யும் வாய்ப்பு கிடைத்த போது செய்தது.

23 minutes ago, Lara said:

காஷ்மீரை இந்தியா உரிமை கோருவதற்கு காஷ்மீர் இந்தியாவின் பகுதியல்ல. பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

இது அப்போதே நடக்கவில்லை. வாக்கெடுப்பும், இரு பக்கமும் (இந்திய, பாக்) காஸ்மீர் இல் இல்லாமல் நடக்கவேண்டும் என்று. இப்போது இது சாத்தியமா?

35 minutes ago, Lara said:

இந்தியா காஷ்மீரை ஏமாற்றியது, காஷ்மீர் சட்டதிட்டங்களை மாற்றியது, காஷ்மீரில் பொம்மை அரசை நிறுவியது, இந்திய இராணுவத்தின் அடாவடி போன்றன காரணமாக தான் அங்கு ஆயுதக்குழுக்கள் உருவாகின.

இப்பொழுது 370 ஐ நீக்கி காஷ்மீரை இரு யூனியன் பகுதியாக பிரித்து அவற்றை இந்தியாவின் பகுதிகளாக்கி காஷ்மீருக்கு இருந்த மிச்ச சொச்ச உரிமையும் நீக்கியுள்ளது.

காஷ்மீர் பண்டிட்கள் என்பவர்கள் பிராமணர்கள் என்பதால் அவர்களை இது பெரிதாக பாதிக்கப்போவதில்லை. முஸ்லிம்களை இந்தியா தொடர்ந்து கொன்று குவிக்கும்.

இதனால் தான் கிந்தியா என்றே சொல்லிக்கொண்டே வருகிறேன். இந்திய அரசு என்பதே சரி. அரசு எனும் முறையில் இந்தியா செய்வது சரி, எமக்கு பிழையாக, அட்டூழியமாக, சித்திரவதையாக, கொன்று குவித்தலாக தெரிந்தாலும்.

37 minutes ago, Lara said:

பிஜேபி ஆதரவு மனநிலையை விட்டு வெளியில் வந்து பார்த்தால் பல விடயங்கள் புரியும்.

இதனால் தான் கிந்தியா என்றே சொல்லிக்கொண்டே வருகிறேன். இந்திய அரசு என்பதே சரி. அரசு எனும் முறையில் இந்தியா செய்வது சரி, எமக்கு பிழையாக, அட்டூழியமாக, சித்திரவதையாக, கொன்று குவித்தலாக தெரிந்தாலும்.

இந்தியா என்பதையே ஏற்றுக்கொள்ளாத நான், எவ்வாறு பிஜேபி ஆதரவு இருக்கமுடியும்?

இதுவும், பாகிஸ்தானின் உண்மையான வரலாற்றை கிந்தியா மறைக்கும் முயதர்சியின் ஒரு பகுதியாகவே, 19ம் நூற்றாண்டு பாகிஸ்தானை கிந்தியா அழிக்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளதா என்று சந்தேகிக்க வேண்டி இருக்கிறது. இதை பற்றி நீங்களே தேடிப் பாருங்கள்.

எனது கருத்து, காஷ்மீர் ஓ, இலங்கை வடக்கு கிழக்கோ இருப்பதை தக்கவைக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதற்கு, ஆங்காங்கு கிடைக்கும் சிறு இடைவெளிகள், வாய்ப்புகளை பயப்படுத்துவது.

இதற்கு, நான் அறிந்த  வரையிலும், பிஜிபி சொல்லும் இந்து, பௌத்த பிரதேசங்களாக இலங்கைத் தீவில் அமைவது, எமது நலன்களை பாதுகாக்க உதவும். இது கூட அவரவரின் நலனை அடிப்படையாக வைத்தே.

Link to comment
Share on other sites

  • Replies 156
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Lara said:

Syed Ahmed Khan பாகிஸ்தான் என்ற பெயரை உருவாக்கியவர் அல்ல, அதற்கு தூய்மையானவர்களின் இடம் என அர்த்தம் கொடுக்கவுமில்லை.

ரஹ்மத் அலி உருவாக்கிய பாகிஸ்தானுக்கு தான் பின்னர் PAK, STAN என்பவற்றுக்கு அர்த்தம் வழங்கி பாகிஸ்தானுக்கு தூய்மையானவர்களின் இடம் என இன்னொரு அர்த்தமும் வழங்கலாம் என கூறப்பட்டது.

அவ் அர்த்தத்தை ரஹ்மத் அலியே கூறியிருந்தார்.

1933, PAKSTAN ஐ நான் மறுக்கவில்லை.

சி.ர்.அலி இன் விளக்கம், தூய்மையின் தானம் அல்லது இடம்  என்பது அவரின் விளக்கம் என்றால், bengal எங்கே போனது (territorial population basis, இது சி.ர். அலியின் வாதத்தின் முக்கிய கருத்தோட்டங்களில் ஒன்று ) PAKSTAN இல்?. bengal தான் முதலில் வந்திருக்க வேண்டும்.

நீங்கள் சொல்லியபடியே, அதுவும் ஓர் விளக்கம் என்று சி.ர்.அலி யே ஏற்பதால், ஏலவே அது இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கே வர வேண்டி இருக்கிறது.

Link to comment
Share on other sites

12 minutes ago, Kadancha said:

1933, PAKSTAN ஐ நான் மறுக்கவில்லை.

சி.ர்.அலி இன் விளக்கம், தூய்மையின் தானம் அல்லது இடம்  என்பது அவரின் விளக்கம் என்றால், bengal எங்கே போனது (territorial population basis, இது சி.ர். அலியின் வாதத்தின் முக்கிய கருத்தோட்டங்களில் ஒன்று ) PAKSTAN இல்?. bengal தான் முதலில் வந்திருக்க வேண்டும்.

நீங்கள் சொல்லியபடியே, அதுவும் ஓர் விளக்கம் என்று சி.ர்.அலி யே ஏற்பதால், ஏலவே அது இருந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கே வர வேண்டி இருக்கிறது.

கடஞ்சா, 

அரைகுறையாக வாசிக்காமல் நான் என்ன எழுதியுள்ளேன் என ஒழுங்காக வாசியுங்கள். 

ரஹ்மத் அலி பாகிஸ்தான் பெயரை உருவாக்கிய போது அதில் வங்காளத்தை உள்ளடக்கவில்லை. அதை PAKSTAN என்ற பெயரில் உள்ளடக்கப்பட்ட பிரதேசங்களூடு காணலாம்.

PAK, STAN என்பதற்கு தனி தனி அர்த்தம் கொடுத்து அதற்கு தூய்மையானவர்களின் இடம் என்ற இன்னொரு விளக்கத்தையும் கொடுக்க முடியும் என பின்னைய காலங்களில் குறிப்பிட்டார். அது பின்னர் உருவாக்கப்பட்ட விளக்கம்.

பாகிஸ்தான் என்ற பெயரை ரஹ்மத் அலி உருவாக்காத வரை பாகிஸ்தான் என்ற பெயரும் இல்லை, பாகிஸ்தானுக்கு தூய்மையானவர்களின் இடம் என்ற விளக்கமும் இல்லை. அதை மறுத்து உங்களுக்கேற்ப வரலாறை திரிக்காதீர்கள்.

முஸ்லிம் லீக் ரஹ்மத் அலியின் பாகிஸ்தான் என்ற பெயரை முஸ்லிம்களின் தேசத்திற்கு வைத்தார்களே தவிர ரஹ்மத் அலி உள்ளடக்கிய பிரதேசங்களை கொண்டு தான் பாகிஸ்தான் உருவாக்கப்பட வேண்டும் என நினைக்கவில்லை. அதை ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளேன். 

முஸ்லிம் லீக்கின் 1940 லாகூர் பிரகடனத்தில் “முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட இந்தியாவின் வடமேற்கு, கிழக்கு பகுதிகள்” என குறிப்பிடும் போது அங்கு தான் வங்காளம் உள்ளடக்கப்பட்டது.

Link to comment
Share on other sites

59 minutes ago, Kadancha said:

இப்போதா உங்களுக்கு தெரிகிறது நரி நேரு நரி என்று?  

பிஜேபி நரி அல்ல, தன எண்ணியதை சொன்னது. செய்யும் வாய்ப்பு கிடைத்த போது செய்தது.

நேரு எதை செய்தாரோ அதையே பிஜேபி தனது ஆட்சியிலும் செய்தது, செய்கிறது. 

நேருவை விட ஒருபடி மேலே போய் அடாவடித்தனமாக தன்னிச்சையாக 370 ஐ நீக்கி காஷ்மீரை இரு யூனியன் பகுதியாக்கி இந்தியாவுக்கு சொந்தமில்லாத பகுதியை இந்தியாவுக்கு சொந்தமாக்கியுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Lara said:

ரஹ்மத் அலி பாகிஸ்தான் பெயரை உருவாக்கிய போது அதில் வங்காளத்தை உள்ளடக்கவில்லை. அதை PAKSTAN என்ற பெயரில் உள்ளடக்கப்பட்ட பிரதேசங்களூடு காணலாம்.

 

24 minutes ago, Lara said:

(territorial population basis, இது சி.ர். அலியின் வாதத்தின் முக்கிய கருத்தோட்டங்களில் ஒன்று ) PAKSTAN இல்

அதன் படி Bengal வந்திருக்க வேண்டும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடஞ்சா,

1. வரலாறு எப்போதும் வெற்றியாளர்களால் உருவாக்கப்படுகிறது என்பது எவ்வளவு உண்மையோ அந்தளவுக்கு உண்மை போலியான வரலாறு கட்டுகதை சொல்பவர்களால் கட்டமைக்கப்படுகிறது என்பதும். வரலாற்றை பற்றி இரு வேறுபட்ட வியாக்கியானங்கள் வருவது இயல்பு. அப்படி வரும் போது, எந்த பக்கம் அதிகம் சாட்சிகள் வைக்கப்பசுகிறன என்பதை வைத்தே நடுநிலையாளர் தம் முடிவை எடுப்பர். பல நண்பர்கள் சொல்லக் கேட்டேன். பாகிஸ்தானியர்கள் மத்தியில் இப்படி பேசிக்கொண்டார்கள் என்பதெல்லாம் உங்கள் subjective நம்பிக்கைக்கு உரமாகலாம் ஆனால் objective ஆக எடுபடாது. 

2. கஸ்மீரின் வரலாறு என்ன.

அ. இந்திய துணைக்கண்ட பிரிவினையின் போது தனிநாடு. தனிக்கொடி, தனி பிரதமர்.

ஆ. பாகிஸ்தான் பதான் ராணுவகுழு எனும் பெயரில் கஸ்மீரை ஆக்கிரமிக்க முனைந்தது.

இ. இந்த நாடு தனது இறைமையை இந்தியாவோடு பகிர்ந்து ஏற்படுத்தபட்ட ஒப்பந்தமே கஸ்மீர்-இந்திய ஒப்பந்தம் (shared  sovereignty)  . இந்த ஒப்பந்தம் நிச்சயமாக இந்தியாவின் ஏனைய மாநிலங்கள் போலல்லாது கஸ்மீர் சிறப்பு அந்தஸ்து  பகுதி என்பதை ஏற்று, அதை இந்தியாவின் அரசியல் அமைப்பிலும் ஏற்றியது. இவை எல்லாம் அந்த நேரத்தில் இந்தியாவுடன் சேர்ந்தாலும் உங்கள் தனித்துவம் பேணப்படும் என்பதை உறுதி செய்ய கஸ்மீரிகளுக்கு வழங்கப்பட்ட guarantees. அந்த நேரத்தில் தனிநாடாக கஸ்மீர் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ சேர்ந்திருக்க முடியும். கஸ்மீரை தன்பக்கம் இழுக்க இந்தியா விரித்த வலையே சிறப்பு அந்தஸ்து. இந்த வலையில் கஸ்மீர் விழுந்த பின், மேலே லாரா சொன்னதுபோல் படிப்படியாக பிரதமரை நீக்கி, ஜனாதிபதியை நீக்கி, கஸ்மீரின் அந்தஸ்தை குறைத்து. ஈற்றில் இந்தியா, கஸ்மீரை லடாக், கஸ்மீர் எனத் துண்டாடி இப்போ, மாநில அந்தஸ்து கூட இலாத இரெண்டு யூனின் பகுதிகளாக்கி உள்ளது. இவ்வளவுத்துக்கும் காரணம் கஸ்மீரை ஆக்கிரமிக்க வேண்டும் என்ற அவாவும், கஸ்மீரை 1200 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்து பெரும்பான்மை நிலைக்கு கொண்டுவரவேண்டும் என்ற இந்துதுவ கொள்கையும்தான். இதில் நேரு, சங்பரிவார் எல்லாரும் ஒரே மாதிரியான நரிகள்தான்.

ஈ. பாகிஸ்தான் மட்டும் என்ன திறமா? என்றால் இல்லை என்பதே பதில். இப்போ இந்திய ஆக்கிரமிப்பு கஸ்மீரில் இந்தியா செய்வதை எப்போதோ பாக் ஆக்கிரமிப்பு கஸ்மீரில் பாகிஸ்தான் செய்துவிட்டது. ஆக மொத்தம் - ஆங்கிலேயர் போனபின், தனிநாடாக வாழத் தலைப்பட்ட கஸ்மீரை, இந்தியாவும் பாகிஸ்தானும் கொள்ளை அடித்துள்ளார்கள். இதுதான் வரலாறு.

உ. இந்த சங்கிகளை நம்பி நாம் இலங்கையில் ஏதும் நன்மை அடையலாம் என்பது என்னை பொறுத்தவரை, ஒருவித முகாந்திரமும், நண்பகத்தன்மையும் அற்ற மனப்பால். இவர்களை எங்கே, எப்படி வெட்டி ஆடவேண்டும் என்பது சிங்கள-பெளத்ததுக்கு அத்துப்படி.

6 hours ago, Kadancha said:

 

இப்போதா உங்களுக்கு தெரிகிறது நரி நேரு நரி என்று?  

பிஜேபி நரி அல்ல, தன எண்ணியதை சொன்னது. செய்யும் வாய்ப்பு கிடைத்த போது செய்தது.

இது அப்போதே நடக்கவில்லை. வாக்கெடுப்பும், இரு பக்கமும் (இந்திய, பாக்) காஸ்மீர் இல் இல்லாமல் நடக்கவேண்டும் என்று. இப்போது இது சாத்தியமா?

இதனால் தான் கிந்தியா என்றே சொல்லிக்கொண்டே வருகிறேன். இந்திய அரசு என்பதே சரி. அரசு எனும் முறையில் இந்தியா செய்வது சரி, எமக்கு பிழையாக, அட்டூழியமாக, சித்திரவதையாக, கொன்று குவித்தலாக தெரிந்தாலும்.

இதனால் தான் கிந்தியா என்றே சொல்லிக்கொண்டே வருகிறேன். இந்திய அரசு என்பதே சரி. அரசு எனும் முறையில் இந்தியா செய்வது சரி, எமக்கு பிழையாக, அட்டூழியமாக, சித்திரவதையாக, கொன்று குவித்தலாக தெரிந்தாலும்.

இந்தியா என்பதையே ஏற்றுக்கொள்ளாத நான், எவ்வாறு பிஜேபி ஆதரவு இருக்கமுடியும்?

இதுவும், பாகிஸ்தானின் உண்மையான வரலாற்றை கிந்தியா மறைக்கும் முயதர்சியின் ஒரு பகுதியாகவே, 19ம் நூற்றாண்டு பாகிஸ்தானை கிந்தியா அழிக்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளதா என்று சந்தேகிக்க வேண்டி இருக்கிறது. இதை பற்றி நீங்களே தேடிப் பாருங்கள்.

எனது கருத்து, காஷ்மீர் ஓ, இலங்கை வடக்கு கிழக்கோ இருப்பதை தக்கவைக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இதற்கு, ஆங்காங்கு கிடைக்கும் சிறு இடைவெளிகள், வாய்ப்புகளை பயப்படுத்துவது.

இதற்கு, நான் அறிந்த  வரையிலும், பிஜிபி சொல்லும் இந்து, பௌத்த பிரதேசங்களாக இலங்கைத் தீவில் அமைவது, எமது நலன்களை பாதுகாக்க உதவும். இது கூட அவரவரின் நலனை அடிப்படையாக வைத்தே.

 

Link to comment
Share on other sites

On 9/19/2019 at 4:09 PM, Kadancha said:

bengal எங்கே போனது (territorial population basis, இது சி.ர். அலியின் வாதத்தின் முக்கிய கருத்தோட்டங்களில் ஒன்று ) PAKSTAN இல்?. bengal தான் முதலில் வந்திருக்க வேண்டும்.

 

On 9/19/2019 at 5:15 PM, Kadancha said:

அதன் படி Bengal வந்திருக்க வேண்டும்?

நீங்கள் எங்கே எதை வாசித்து விட்டு எழுதுகிறீர்கள் என தெரியாது. 

ரஹ்மத் அலி இந்தியாவில் அந்நேரம் 80 மில்லியன் முஸ்லிம்கள் இருந்தும் வடபகுதியிலுள்ள 30 மில்லியன் முஸ்லிம்களை உள்ளடக்கிய 5 பகுதிகளை குறிப்பிட்டே பாகிஸ்தான் என்ற பெயரை உருவாக்கினார். 

“we address this appeal to you, in the name of our common heritage, and on behalf of our thirty million Muslim brethern who live in PAKSTAN by which we mean the five Northern units of India viz: Punjab, North-West Frontier Province (Afghan Province), Kashmir, Sind, and Baluchistan.”

வங்காளம் என்பது கிழக்கு பகுதியில் இருந்தது. அதனால் பாகிஸ்தான் கோரிக்கையில் அதை அந்நேரம் அவர் சேர்க்கவில்லை. 

அவர் மட்டுமல்ல, முகமது இக்பாலும் கூட்டாட்சி முறை பற்றி கூறும் போது அதில் இந்தியாவின் வடமேற்கு பகுதியை உள்ளடக்கியிருந்தாரே தவிர கிழக்கிலிருந்த வங்காளத்தை உள்ளடக்கவில்லை. 

“Personally, I would go farther than the demands embodied in it. I would like to see the Punjab, North-West Frontier Province, Sind and Baluchistan amalgamated into a single State. Self-government within the British Empire, or without the British Empire, the formation of a consolidated North-West Indian Muslim State appears to me to be the final destiny of the Muslims, at least of North-West India.”

முஸ்லிம் லீக் 1940 லாகூர் பிரகடனத்தில் வடமேற்கு மற்றும் கிழக்கு பகுதிகள் என அதில் கிழக்கை உள்ளடக்கியிருந்தது.

அத்துடன் ரஹ்மத் அலி வங்காளமும் அசாமும் இணைந்து தனி நாடாக உருவாக வேண்டும் என விரும்பியிருந்தார். பின்னைய காலத்தில் அதற்கு “Bangistan” எனவும் பெயர் சூட்டியிருந்தார்.

பாகிஸ்தான் கோரிக்கை வலுவடைந்த நேரம், பஞ்சாப் மற்றும் வங்காளத்திலுள்ள இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட பகுதிகள் பிரிக்கப்பட்டு இந்தியாவுடன் இணைக்கப்பட வேண்டும் என காங்கிரஸ், இந்துமகாசபை நின்ற போது வங்காளத்தை பிரதிநிதித்துவப்படுத்தியோர் வங்காளம் United Bengal (வங்காளம் + அன்றைய அசாம் மாகாணம்) ஆக இருக்க வேண்டும் எனவும் தனி சுதந்திர நாடாக இருக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்கள்.

அது பற்றிய விபரங்களை இதில் history என்பதில் சென்று வாசிக்கலாம்.

https://en.m.wikipedia.org/wiki/United_Bengal

அதன்படி கிழக்கில் தனி நாடு உருவாகியிருந்தால் அதற்கு “Bangistan“ என்ற பெயரையே வைத்திருந்தாலும் வைத்திருப்பார்கள். யாருக்கு தெரியும். 😀

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் (Iran) மீது இஸ்ரேல் (Israel) நடத்தியுள்ள ஏவுகணை தாக்குதலின் பின்னர் உலக சந்தையில் எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலை சடுதியாக உயர்வடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மோதல்கள் தொடருமானால் ஈரானுடன் (Iran) நேரடியாகவும் மறைமுகமாகவும் கையாளும் இலங்கையின் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை பேராதனை பல்கலைக்கழகத்தின் (University of Peradeniya) பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். எண்ணெய் ஏற்றுமதி பேராசிரியர் வசந்த அத்துகோரல மேலும் கருத்துத் தெரிவிக்கையில், எரிபொருளை இறக்குமதி செய்வதில் இலங்கை ஈரானுடன் (Iran) நேரடி தொடர்புகளை கொண்டிருக்காவிட்டாலும், இலங்கை (Srilanka) எரிபொருளை கொள்வனவு செய்யும் நாடுகளுக்கு ஈரானே பிரதான எரிபொருளை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் எண்ணெய் ஏற்றுமதியில் தொண்ணூறு சதவீதம் சீனாவுக்கே செல்கிறது. இதற்கு மேலதிகமாக, இந்தியா மற்றும் ஜப்பானுக்கும் ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்கின்றது. இந்நிலையில், இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து இலங்கை கணிசமான அளவு எரிபொருளை கொள்வனவு செய்கிறது. இதனால் மத்திய கிழக்கில் போர் தொடருமாயின் இலங்கையில் பெட்ரோலுக்கு நெருக்கடி நிலை ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது. உலகப் போராக உருவாகும் அபாயம் அத்துடன் இலங்கை ஈரானுக்கு சுமார் 80 மில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்வதுடன் 10 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருட்களை ஈரானில் இருந்து இறக்குமதி செய்கிறது.   இஸ்ரேல் நேற்று (19) மத்திய ஈரானில் உள்ள இஸ்ஃபஹான் (Isfahan) மாகாணத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், எஞ்சிய நாட்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல்களும் போட்டிகளும் மேலும் அதிகரிக்கலாம் எனவும், இந்த மோதல்கள் உலகப் போராக உருவாகும் அபாயம் இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.   https://tamilwin.com/article/israil-iran-war-tension-and-economy-crisis-1713593678?itm_source=article
    • ஈராக்கில் (Iraq) உள்ள ஈரானுக்கு (Iran) ஆதரவான கல்சோ இராணுவத் தளம் மீது மிகப்பெரிய குண்டுத்தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் அணிதிரட்டல் படையை சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த தாக்குதலுக்கு பின்னால் யார் உள்ளனர் என ஈராக்கின் பாதுகாப்பு வட்டாரங்கள் இன்னும் உறுதியான தகவல் எதையும் வெளியிடவில்லை. அத்துடன், குண்டுவெடிப்புக்கு முன்னதாக இப்பகுதியில் உள்ள வான்வெளியில் ட்ரோன்கள் அல்லது போர் விமானங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை எனவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய பதிலடி இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ளதால் மத்திய கிழக்கு நாடுகள் அனைத்தும் மிகவும் எச்சரிக்கையாக உள்ளன.   இந்நிலையில், இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் விதமாக நேற்று ஈரானின் இஸ்பஹான் நகர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.   அதேவேளை, ஈரானிய நலன்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உரிய பதிலடி வழங்கப்படும் என ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  https://tamilwin.com/article/iran-vs-israel-war-update-today-1713602121?itm_source=parsely-detail
    • 1. கருணாநிதி, குடும்பத்தையே தேர்தலில் மேடை போட்டு நாறடிச்சுவிட்டு, தேர்தலில் திமுக வென்றதும் - ஸ்டாலினை சந்தித்து அதே கருணாநிதி போட்டோ முன் பவ்வியமாக கைகட்டி கூழை கும்பிடு போட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 2. ஊழலை எதிர்த்து தொண்டை புடைக்க பேசி விட்டு, சசி ஜெயிலால் வந்து முகம் கழுவ முன்னம் அவரை போய் சந்தித்து விட்டு, பத்திரிகையாளருக்கு பயந்து பின் கதவால் ஓடியது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 3. விஜி அண்ணி புகாரில் இருந்து தப்பிக்க, உதய்யிடம் இரவு 2 மணிக்கு போன் பேசுவது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 4. தமிழ் இறையியலை மீட்ப்போம் என மார்தட்டி விட்டு - ஒரு பிராமணியை எதிர்க்க திராணி இல்லாமல் சமஸ்கிருதத்தில் மகனிற்கு காது குத்தும் மந்திரத்தை ஓத விட்டது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 5. குடும்ப அரசியலை ஒழிப்பேன் என கதறிவிட்டு - மனைவி சொல்லுக்கு பயந்து மச்சினன் அருண் காளிமுத்துக்கு சீட் கொடுத்தது தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். 6. தமிழ், தமிழ் என மேடை தோறும் கூவி விட்டு, அவர்களின் எதிர்கால வாய்ப்பு கெட்டு விடும் என பிழையாக பயந்து மகன்களை ஆங்கில வழி கல்வியில் சேர்த்தமை தைரியம் என்றால் - நாம் பயந்தவர்களாகவே இருந்து விட்டு போகிறோம். # பயம் #தான் #கொள்ளி🔥🔥🔥🤣
    • கலோ...ஒரு பொது தளத்தில் வருடத்திற்கு ஒரு பெயர் மாத்த ஏலாது..சும்மா ஏப்பிரல் பூலுக்கு ஏதாச்சும் ஏழுதினாலலே காவிட்டு திரியிற உலகம் இது..சோ..நாம் உலாவும் இடங்களில் மற்றவர்களின் சுதந்திரந்தையும் பார்த்துக்கொள்ள வேணும் புறோ..நீங்கள் நினைச்ச எல்லாம் செய்ய இயலாது..மற்ற பயனாளர்களின் சுதந்திரமும் , வாழ்வும் இதற்குள் அடங்கியிருக்கிறது.🙏🖐️
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.