Jump to content

இந்தியாவின் 73 வது சுதந்திர தினம் இன்று


Recommended Posts

இந்தியாவின் 73 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

1947, ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி என்பது இந்தியர்களின் வாழ்விலும், நினைவிலும் நிலைக்கும் புதிய இந்தியாவின் உதய நாள் ஆகும். இறையாண்மைக் கொண்ட நாடாகத் திகழும் இந்தியாவின் சுதந்திரம் என்பது, நூற்றுக்கணக்கான ஆன்மாக்கள், ஆயிரக்கணக்கானப் புரட்சியாளர்கள் மற்றும் தலைவர்களின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி எனலாம்.

இருநூறு ஆண்டுகளாக, சொந்த நாட்டிலேயே அந்நிய தேசத்தவரான வெள்ளையர்களிடம் அடிமைகளாக இருந்த போது, அவர்களை தைரியத்துடனும், துணிச்சலுடனும் பலரும் வீறு கொண்டு எதிர்த்து பல புரட்சிகளையும், கிளர்ச்சிகளையும், போர்களையும் நடத்தி, வெற்றியும், தோல்வியும் கண்டனர். 

சுதந்திரம் என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, தமது இன்னுயிரையும் துறந்த தியாக உள்ளங்களையும், அவர்கள் போராடி பெற்றுத்தந்த சுதந்திரத்தையும் இந்த நாளில் இந்தியர்கள் கொண்டாடுகின்றனர்.

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்த நாட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த தேசிய கொடியை ஏற்றவுள்ளதுடன் விஷேட ஒன்றையும் நிகழ்த்தவுள்ளனார். இதுதவிர, இந்தியாவில் இன்றைய தினம் பல நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன்காரணமாக முன்னர் எப்போதும் இல்லாத பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

http://www.hirunews.lk/tamil/222250/இந்தியாவின்-73-வது-சுதந்திர-தினம்-இன்று

Link to comment
Share on other sites

இந்திய சுதந்திர தினம் - செங்கோட்டையில் கொடியேற்றி பேசுகிறார் பிரதமர் மோதி

இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்து பிரதமர் நரேந்திர மோதி பேசத் தொடங்கியுள்ளார்.

காஷ்மீர் குறித்து பேசிய மோதி, " சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏவை ரத்து செய்தது மூலம் சர்தார் வல்லபாய் படேலின் கனவை நனவாக்கி உள்ளோம்" என்றார்.

மோதி பேசியவை,

  • முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களுகளுக்கு நீதியை வழங்கும்.
  • முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களுகளுக்கு நீதியை வழங்கும்.
கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @PMOIndia
 

We have to think about solutions to the problems people face.

Yes, there will be obstacles on the way but we have to work to overcome them.

Remember how scared the Muslim women were, who suffered due to Triple Talaq but we ended the practice: PM @narendramodi

 
 
 
முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @PMOIndia
 
  • விவசாயிகள் நலனுக்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம். குறைந்தப்பட்ச ஆதரவு விலை, ஓய்வூதியம் வழங்கி இருக்கிறோம்.
  • தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு காண ஜல்சக்தி அமைச்சகத்தை அமைத்துள்ளோம்.
  • ஆதிவாசிகள், சிறுபான்மையினர் மற்றும் சமூகத்தின் அனைத்து பிரிவினரின் ஒருங்கிணைத்த வளர்ச்சிக்காக நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
  • 2013- 14 தேர்தலின் போது, அனைவரும் நினைத்தார்கள் இந்த நாட்டை மாற்ற முடியுமா?. தேர்தல் வெற்றிக்கு பின் 5 ஆண்டுகள் நாங்கள் கடுமையாக பணியாற்றினோம். ஒட்டுமொத்த நாடும் எங்கள் பணியை பார்த்தது. எல்லாருக்கும் இந்த நாடு மாறும் என நம்பிக்கை வந்தது. இப்போது தங்களாலேயே மாற்றம் கொண்டு வர முடியும் என தனிநபர்கள் நம்புகிறார்கள்.
  • காஷ்மீர் குறித்து பேசிய மோதி, "காஷ்மீர் பெண்களுக்கான உரிமை இனி கிடைக்கும்.அங்குள்ள தலித் சகோதரர்களுக்கு, துப்புரவு தொழிலாளர்களுக்கு என அவர்களுக்கு உரிய உரிமை அவர்களுக்கு கிடைக்கும்."

https://www.bbc.com/tamil/india-49353861

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அங்கிட்டு முட்டாய் குடுப்பாங்கண்ணே ..!

ஏண்டா.. ! தம்மா துண்டு முட்டாய்க்கு தெரு தெருவா  லோ லோ .. என்டு அலையுறியல் ..☺️

Link to comment
Share on other sites

"பாதுகாப்புப் படைகளின் தலைவர் என்ற பதவி உருவாக்கப்படும்" - சுதந்திர தினத்தில் மோதி

பாதுகாப்புப் படைகளின் தலைவர் என்ற ஒரு பதவியை தமது அரசு உருவாக்கும் என்று தமது சுதந்திர தின உரையில் தெரிவித்தார் பிரதமர் மோதி.

இந்தப் பதவி, முப்படைகளுக்கு இடையில் ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, திறமையான தலைமையை வழங்கும் என்று அவர் அப்போது கூறினார்.

இந்திய சுதந்திர தினத்தை ஒட்டி டெல்லி செங்கோட்டையில் இந்திய தேசியக் கொடியை ஏற்றிவைத்து பிரதமர் நரேந்திர மோதி பேசும்போது அவர் இதைத் தெரிவித்தார்.

இரண்டாவது முறையாக தங்கள் அரசு பதவி ஏற்று 70 நாள்களுக்குள் சட்டப்பிரிவு 370ஐ நீக்குவது, முத்தலாக் தடை உள்ளிட்ட பல முக்கிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் மோதி தெரிவித்தார்.

காஷ்மீர் குறித்து பேசிய மோதி, " சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏவை ரத்து செய்தது மூலம் சர்தார் வல்லபாய் படேலின் ஒருங்கிணைந்த இந்தியா என்ற கனவை நனவாக்கி உள்ளோம்" என்றார்.

ஒரே நாடு ஒரே தேர்தல்

ஒரு நாடு, ஒரு வரி என்ற கனவுக்கு ஜி.எஸ்.டி. உயிர் கொடுத்தது. மின்சாரத் துறையிலும் ஒரு நாடு ஒரு தொகுப்பு என்ற திட்டம் நிறைவேற்றப்பட்டது என்று கூறிய பிரதமர் மோதி, நாடு முழுவதற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது பற்றி இந்தியா தற்போது பேசிவருகிறது. அது நல்ல விஷயம் என்று பேசினார்.

"குடும்பக் கட்டுப்பாடுதான் தேசபக்தி"

இன்று செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து மக்கள் தொகைப் பிரச்சனை பற்றி நான் பேச விரும்புகிறேன் என்று பேசிய மோதி, தங்கள் குழந்தைகளின் கனவுகளையும், அபிலாஷைகளையும் நிறைவேற்ற அவர்களால் முடியுமா என்பது பற்றி ஆழமாக சிந்திக்கவேண்டும். மக்கள் தொகைப் பெருக்கம் பற்றி பெரிய அளவில் விவாதமும், விழிப்புணர்வும் தேவை. முறையாக குடும்பக் கட்டுப்பாடு செய்தால், சிறிய குடும்பங்களால் மகிழ்ச்சியாக, ஆரோக்கியமாக, மன நிறைவோடு இருக்க முடியும் என்பதைப் பார்க்க முடியும்" என்று பேசிய மோதி, மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் கைகோர்த்து செயல்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சமூகத்தின் ஒரு பகுதி குடும்பக்கட்டுப்பாட்டில் நம்பிக்கை வைத்துள்ளது. அவர்களுக்கு நாம் நன்றியுடன் இருக்கிறோம். அவர்கள் தங்கள் குழந்தைகளின் குழந்தைகளின் தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றுகிறார்கள். நம் குழந்தைகளின் எதிர்காலம் சமூகத்தை சார்ந்திருக்க முடியாது. குடும்பக் கட்டுப்பாட்டின் மூலம் நாட்டின் மீதான அன்பை ஒருவர் காட்டமுடியும். அதுதான் உண்மையான தேசபக்தி. அத்தைய குடும்பங்களை நாம் மதிக்கவேண்டும்.

https://www.bbc.com/tamil/india-49353861

காஷ்மீரில் உரிமை

காஷ்மீர் குறித்து பேசிய மோதி, "காஷ்மீர் பெண்களுக்கான உரிமை இனி கிடைக்கும். அங்குள்ள தலித் சகோதரர்களுக்கு, துப்புரவு தொழிலாளர்களுக்கு என அவர்களுக்கு உரிய உரிமை அவர்களுக்கு கிடைக்கும் என்றார்.

மேலும் முத்தலாக் சட்டம் பற்றி பேசிய மோதி அது முஸ்லிம் பெண்களுக்கு நீதி வழங்கும் என்றார்.

கிராமப் புறங்களுக்கு குழாய் மூலம் குடிநீர்

ஜல் ஜீவன் மிஷனில் கவனம் செலுத்தி எல்லோருக்கும் தண்ணீர் கிடைப்பதை உத்தரவாதம் செய்வோம். சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் எல்லோருக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை என்பது துரதிருஷ்டம் என்று அவர் பேசினார்.

ஜல்ஜீவன் மிஷன் திட்டத்துக்கு 3.5 லட்சம் கோடி ஒதுக்கப்படும் என்று பேசிய மோதி, இதன் மூலம் ஒவ்வொரு கிராமப்புற வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீர் கிடைப்பதை உறுதி செய்யப்படும் என்றார்.

நீரின்றி அமையாது உலகு என்ற திருக்குறளையும் மேற்கோள் காட்டி அவர் பேசினார்.

"நாம் தேசத்திற்காக வாழ வேண்டிய கால கட்டத்தில் பிறந்திருக்கிறோம். தேசத்திற்காக உயிர் இழக்க வேண்டிய கால கட்டத்தில் இல்லை" - இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.

ப்ளாஸ்டிக் உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதற்கு தகுந்த மாற்று தர வேண்டும். அவ்வாறு மாற்று தருவது விவாசாயிகளுக்கு உதவும். நாம் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்து நாட்டிற்கு உதவ வேண்டும்.

நம்முடைய rupay சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ளது. ஆனால் கிராமங்களில் இது வர வேண்டும் என்றார் மோதி.

ரசாயன உரங்களை குறைக்க வலியுறுத்தல்

ரசாய உரங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதனால் பூமியை பாதுகாக்கலாம் என்று அவர் பேசினார்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.