Jump to content

எலும்பும் தோலுமான உடல்; கம்பீர யானையின் நிலை! - உலகை உலுக்கும் புகைப்படம்


Recommended Posts

Elephant Tikiiri

மனிதர்கள் சூழ் உலகில் கொஞ்சம் கொஞ்சமாக விலங்குகளுக்கு இடம் இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. பல்வேறு அரிய உயிரினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. சில உயிரினங்கள் மொத்தமாக அழிந்தேவிட்டன. உலகம் முழுவதும் உள்ள விலங்குகளின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம் என்றே கூறவேண்டும்.

 

காடுகள் ஆக்கிரமிப்பு, மனிதத் துன்புறுத்தல், உணவுப் பற்றாக்குறை, வேட்டை போன்ற காரணங்களால் பல உயிரினங்கள் தங்கள் இருப்பிடத்தை விடுத்து முற்றிலும் மாறுபட்ட சூழலில் வாழ்ந்து வருகின்றன. இப்படியான சூழலில் சேவ் எலிபேண்ட் (Save Elephant ) என்ற அறக்கட்டளை தங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. மனதை உலுக்கும் இந்தப் படத்தின் கதை கொடூரத்தின் உச்சம்.

’இலங்கையில் உள்ள கண்டியில் ஆண்டு தோறும் ஈசாலா பெரஹேரா என்ற திருவிழா கொண்டாடப்படும். பத்து நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழா இந்த வருடம் ஆகஸ்ட் 5-ம் தேதி தொடங்கி இன்று இரவுடன் நிறைவடையவுள்ளது. இந்தத் திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட யானைகளும், 200-க்கும் அதிகமான கலைஞர்களும் பங்கேற்பர். திருவிழாவில் கலந்துகொள்ளும் யானைகளில் 70 வயதான டிக்கிரி என்ற பெண் யானையும் ஒன்று.

Elephant Tikiiri

டிக்கிரி பற்றிக் குறிப்பிட்டுள்ள சேவ் எலிபேண்ட் (Save Elephant ) அறக்கட்டளை, “ டிக்கிரிக்கு உடல் நிலை சரியில்லை. திருவிழாவில் பங்கேற்கும் யானைகளில் இதுவும் ஒன்று. திருவிழா தொடங்கும் போது அதாவது மாலை நேரத்தில் பேரணியில் இணையும் டிக்கிரி நள்ளிரவில்தான் மீண்டும் தன் இடத்துக்குத் திரும்புகிறது. எலும்பும், தோலுமாக உள்ள டிக்கிரியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது, ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்களின் கூச்சல், புகை, பட்டாசு போன்றவற்றுக்கு நடுவே அதை அழைத்துச் செல்கின்றனர்.

டிக்கிரி தினமும் பல கிலோமீட்டர்களுக்கு நடந்து அழைத்துச் செல்லப்படுகிறது. அப்படிச் செல்லும் வழிகளில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆசீர்வாதம் செய்யவும் கட்டளையிடுகின்றனர். அவளின் உடல் முழுவதும் பட்டாடைகளால் மூடி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதனால் யானையின் எலும்பு உடம்பு மக்களுக்குத் தெரிவதில்லை. அதிக வெளிச்சத்தினால் அவளின் கண்களில் வரும் கண்ணீரையும் யாரும் கவனிப்பதில்லை.

விழா என்பது அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கக் கூடிய ஒன்று. ஆனால் அது பிறருக்கு எந்த கஷ்டத்தையும் அளிக்காமல் இருக்க வேண்டும். டிக்கிரியை கஷ்டப்படுத்திப் பெறப்படும் ஆசீர்வாதம் எப்படிச் சிறந்ததாக இருக்கும். டிக்கிரியின் புகைப்படம் ஏற்றுக்கொள்ள தக்கதாக இருந்தால் நம்மால் அவற்றுக்கு எப்போதும் அமைதியான வாழ்வைத் தர முடியாது. அன்பு செய்வது, எந்தத் தீங்கும் செய்யாதது மற்றும் இரக்கத்தின் பாதையைப் பின்பற்றுவது போன்றவை புத்தரின் வழி. அதைப் பின்பற்ற வேண்டிய நேரம் இது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

https://www.vikatan.com/living-things/animals/srilanka-festival-elephants-shocking-photos-revealed

Elephant Tikiiri

?type=3&theater

Link to comment
Share on other sites

இந்த செய்தி, ஒரு பெரிய 'வைரலாக' பரவி வருகின்றது.
 

#1 சி,என்,என். உல்லாசத்துறை பக்கம்:: 
Campaigners are urging a boycott of Sri Lanka's elephant attractions after these photos emerged
https://www.cnn.com/travel/article/elephant-festival-sri-lanka-intl-scli/index.html

#2 Oh my Lord! Campaigners are urging tourists to #boycottSriLanka's #elephant attractions after these photos emerged #torture

 

#3: Starving elderly elephant’s emaciated body is hidden by festival costume

Twitter: https://twitter.com/MetroUK | Facebook: https://www.facebook.com/MetroUK/

boycottsrilanka

 

?type=3&theater?type=3&theater

?type=3&theater

Link to comment
Share on other sites

புத்த கோயிலில் எலும்பும் தோலுமாக யானை : விசாரணைக்கு உத்தரவிட்ட வனவிலங்கு அமைச்சகம்

இலங்கையில் புத்த ‘பற்கள்' கோவிலில் ஆண்டு தோறும் ஈசாலா பெரஹேரா என்ற திருவிழா கொண்டாடப்படும். பத்து நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 50 மேற்பட்ட யானைகள் கலந்து கொள்ளும். திருவிழாவில் 70 வயதான டிக்கிரி என்ற பெண் யானையும் ஒன்று . எலும்பும் தோலுமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்த யானை ஊர்வலத்தில் பங்கேற்க நிர்பந்திக்கப்பட்டது குறித்து சுற்றுலா மற்றும் வனவிலங்கு அமைச்சர் ஜான் அமரதுங்கா  விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.  

டிக்கிரி பற்றிக் குறிப்பிட்டுள்ள சேவ் எலிபேண்ட் (Save Elephant ) அறக்கட்டளை, “ டிக்கிரிக்கு உடல் நிலை சரியில்லை. திருவிழாவில் பங்கேற்கும் யானைகளில் இதுவும் ஒன்று. திருவிழா தொடங்கும் போது அதாவது மாலை நேரத்தில் பேரணியில் இணையும் டிக்கிரி நள்ளிரவில்தான் மீண்டும் தன் இடத்துக்குத் திரும்புகிறது. எலும்பும், தோலுமாக உள்ள டிக்கிரியின் நிலை மிகவும் மோசமாக உள்ளது, ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்களின் கூச்சல், புகை, பட்டாசு போன்றவற்றுக்கு நடுவே அதை அழைத்துச் செல்கின்றனர்.

டிக்கிரி தினமும் பல கிலோமீட்டர்களுக்கு நடந்து அழைத்துச் செல்லப்படுகிறது. அப்படிச் செல்லும் வழிகளில் ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஆசீர்வாதம் செய்யவும் கட்டளையிடுகின்றனர். அவளின் உடல் முழுவதும் பட்டாடைகளால் மூடி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அதனால் யானையின் எலும்பு உடம்பு மக்களுக்குத் தெரிவதில்லை. அதிக வெளிச்சத்தினால் அவளின் கண்களில் வரும் கண்ணீரையும் யாரும் கவனிப்பதில்லை. என்று குறிப்பிட்டிருந்தது. 

இந்த பதிவுக்கு பின்னர் அந்த யானையை திருவிழாவை விட்டு விலக்கிக் கொண்டனர். சமூக வலை தளங்களிலும் யானைக்கு ஆதரவு தெரிவித்தும் கோயில் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர். 

https://www.ndtv.com/tamil/70-year-old-bony-elephant-tikiri-paraded-at-sri-lanka-fest-kandy-esala-perahera-probe-ordered-read-i-2085940?pfrom=home-lateststories

Link to comment
Share on other sites

Heartbreaking photos of emaciated elephant have people calling for action
"No one sees her bony body or her weakened condition, because of her costume."

 

Heart-rending images of an emaciated elephant at a festival in Sri Lanka have recently surfaced, prompting animal activists to urge tourists to boycott some attractions in the island nation.

"This is Tikiri, a 70 year old ailing female. She is one of the 60 elephants who must work in the service of the Perahera Festival in Sri Lanka this year," reads an Aug. 13 Facebook post written by Lek Chailert, founder of Save Elephant Foundation.

https://www.today.com/news/photos-emaciated-elephant-sri-lanka-spur-calls-action-t160853

 

Emaciated elephant forced to perform for festivalgoers in Sri Lanka

 

Animal rights campaigners have called on tourists in Sri Lanka to boycott elephant attractions after photographs of a malnourished female used in a festival were circulated online.

Images of the emaciated elephant were shared by Save Elephant Foundation to raise awareness of exploitation in captivity.

https://q13fox.com/2019/08/16/emaciated-elephant-forced-to-perform-for-festivalgoers-in-sri-lanka/

Link to comment
Share on other sites

26 minutes ago, ampanai said:

இலங்கையில் புத்த ‘பற்கள்' கோவிலில் ஆண்டு தோறும் ஈசாலா பெரஹேரா என்ற திருவிழா கொண்டாடப்படும். பத்து நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் 50 மேற்பட்ட யானைகள் கலந்து கொள்ளும்.

புத்த பிரானின் பல், அதனுடன் இணைந்த மகாவம்சம், மனித வதை, புத்த பிக்குகள் .....

 

Link to comment
Share on other sites

இலங்கைக்கான உல்லாசத்துறையை தவிக்குமாறு கோரிக்கைகள் எழுந்துள்ளன 

Boycott call for Sri Lanka's animal attractions as photos emerge of malnourished elephant Tikiri

Amy Woodyatt
CNN  Friday, 16 August 2019 12:01 am
 

Animal rights campaigners have called on tourists in Sri Lanka to boycott elephant attractions after photographs of a malnourished female used in a festival circulated online.

Images of the emaciated elephant were shared by Save Elephant Foundation to raise awareness of exploitation in captivity.

In the video above: An elephant charges at a jeep full of tourists on a safari in South Africa

"This is Tikiri, a 70-year-old ailing female. She is one of the 60 elephants who must work in the service of the Perahera Festival in Sri Lanka this year," Save Elephant Foundation shared to Facebook.

"Tikiri joins in the parade early every evening until late at night, every night for ten consecutive nights, amidst the noise, the fireworks, and smoke," the post read.

"She walks many kilometres every night so that people will feel blessed during the ceremony."

Petition

The Save Elephant Foundation, based in Thailand, provides care to captive elephants in the region.

"At this stage, we are asking people to lobby the Sri Lankan government to take immediate action," Save Elephant Foundation said.

A petition urging the country's leader to "end this barbaric torture and abuse" has gained more than 8,000 signatures.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ampanai said:

புத்த பிரானின் பல், அதனுடன் இணைந்த மகாவம்சம், மனித வதை, புத்த பிக்குகள் .....

 

இப்படி புத்த மதத்தின் குறைகளை சுட்டிக்காட்டினால், யாராவது நவீன பெளத்த மத இரட்சகள் கொதித்தெழும் அபாயம் இருக்கிறது. கவனம். 😂

Link to comment
Share on other sites

16 minutes ago, goshan_che said:

இப்படி புத்த மதத்தின் குறைகளை சுட்டிக்காட்டினால், யாராவது நவீன பெளத்த மத இரட்சகள் கொதித்தெழும் அபாயம் இருக்கிறது. கவனம். 😂

ஏனைய மதங்களிலுள்ள குறைகளை விட்டிட்டு தனியே இந்து மதத்தை விமர்சிப்பதாலும், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களிடம் கடவுள் இல்லை என்ற கொள்கையை திணிப்பதாலும், கடவுளை வணங்குவோரை மட்டம் தட்டுவதாலும் பலர் அதற்கு எதிராக இங்கு கருத்து எழுதுகிறார்கள்.

சிங்கத்துக்கும் இளவரசிக்கும் சிங்கபாகு பிறந்திருக்க முடியாது என்பது தெரிந்தாலும் சிங்களவர்கள் தம்மை சிங்கத்தின் பரம்பரையாக தான் கூறி வருகிறார்கள். 😀

அவர்களிடம் போய் அவர்கள் கடைப்பிடிக்கும் தேரவாத பௌத்தம் பற்றி பாடம் எடுத்து பாருங்கள். 😊

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Lara said:

ஏனைய மதங்களிலுள்ள குறைகளை விட்டிட்டு தனியே இந்து மதத்தை விமர்சிப்பதாலும், கடவுள் நம்பிக்கை உள்ளவர்களிடம் கடவுள் இல்லை என்ற கொள்கையை திணிப்பதாலும், கடவுளை வணங்குவோரை மட்டம் தட்டுவதாலும் பலர் அதற்கு எதிராக இங்கு கருத்து எழுதுகிறார்கள்.

சிங்கத்துக்கும் இளவரசிக்கும் சிங்கபாகு பிறந்திருக்க முடியாது என்பது தெரிந்தாலும் சிங்களவர்கள் தம்மை சிங்கத்தின் பரம்பரையாக தான் கூறி வருகிறார்கள். 😀

அவர்களிடம் போய் அவர்கள் கடைப்பிடிக்கும் தேரவாத பௌத்தம் பற்றி பாடம் எடுத்து பாருங்கள். 😊

உண்மைதான் இதனால்தான் நான் யாருக்கும் அவர்கள் மத நம்பிக்கை பற்றி பாடம் எடுப்பதில்லை. 

ஆனால் மதவாதிகள் மட்டுமில்லை, கடவுள் மறுப்பாளர்களிடம் போய் கடவுள் இருக்க கூடுமோ? என்ற ஐயத்தையேனும் சொல்லிப் பாருங்கள், பிச்சு மேய்ந்து விடுவார்கள். 😂.

இவ்வளவு ஏன் சதிக்கோட்பாட்டாளர்களிடம் போய், அவர்களின் ஒரு கோட்பாடு அவ்வளவாக நம்பும் படியாக இல்லை என ஒரு வார்த்தை தவற விட்டுப் பாருங்கள் - பக்கம் பக்கமாக தன்னிலை விளக்கம் தருவார்கள். 😂

எதன் மீதும் அதிக பற்றுக் கொண்டால் இதுதான் நிலை.

Link to comment
Share on other sites

4 minutes ago, goshan_che said:

உண்மைதான் இதனால்தான் நான் யாருக்கும் அவர்கள் மத நம்பிக்கை பற்றி பாடம் எடுப்பதில்லை. 

ஆனால் மதவாதிகள் மட்டுமில்லை, கடவுள் மறுப்பாளர்களிடம் போய் கடவுள் இருக்க கூடுமோ? என்ற ஐயத்தையேனும் சொல்லிப் பாருங்கள், பிச்சு மேய்ந்து விடுவார்கள். 😂.

இவ்வளவு ஏன் சதிக்கோட்பாட்டாளர்களிடம் போய், அவர்களின் ஒரு கோட்பாடு அவ்வளவாக நம்பும் படியாக இல்லை என ஒரு வார்த்தை தவற விட்டுப் பாருங்கள் - பக்கம் பக்கமாக தன்னிலை விளக்கம் தருவார்கள். 😂

எதன் மீதும் அதிக பற்றுக் கொண்டால் இதுதான் நிலை.

சதிக்கோட்பாடு வேறு கடவுள்/மத நம்பிக்கை வேறு.

கடவுள் மறுப்பாளர்களிடம் கடவுள் இருக்கிறார் என்ற கருத்தை இங்கு யாரும் திணிப்பதில்லை, கடவுள் மறுப்பாளர்கள் தான் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களிடம் தமது கொள்கையை திணித்து எழுதிய கருத்துகளை நான் வாசித்திருக்கிறேன்.

அதேபோல் தொடர்ச்சியாக பல திரிகளில் இந்து மதத்தை, அதை பின்பற்றுவோரை விமர்சித்தால் அதனால் கோபம் வருவது நியாயம்.

Link to comment
Share on other sites

இந்தியாவில் பல அமைப்புக்கள் உள்ளன, மிருகவதைகளை தடுக்க. அதில் ஒன்று பீட்டா (PETA) . 

இவர்கள் மத்தியில் அரசியல் நோக்கமே இல்லை என நம்புவர்களும் உண்டு, நம்பாதவர்களும் உண்டு.
 
தமிழகத்தின் பாரம்பரியமான, தமிழர்கள் கலாச்சாரத்துடன் இணைந்த காளைச்சவாரியை ( ஜல்லிக்கட்டு) இது குறிவைத்தது. மக்களின், மாணவர்களின் போராட்டத்தால் இது தோற்கடிக்கப்பட்டது.

இந்த பீட்டா அமைப்பு இலங்கையில் இல்லை என்று தெரிகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, Lara said:

சதிக்கோட்பாடு வேறு கடவுள்/மத நம்பிக்கை வேறு.

கடவுள் மறுப்பாளர்களிடம் கடவுள் இருக்கிறார் என்ற கருத்தை இங்கு யாரும் திணிப்பதில்லை, கடவுள் மறுப்பாளர்கள் தான் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களிடம் தமது கொள்கையை திணித்து எழுதிய கருத்துகளை நான் வாசித்திருக்கிறேன்.

அதேபோல் தொடர்ச்சியாக பல திரிகளில் இந்து மதத்தை, அதை பின்பற்றுவோரை விமர்சித்தால் அதனால் கோபம் வருவது நியாயம்.

எல்லாம் நம்பிக்கைதான். 

ஒருத்தருக்கு கடவுள்/ தன் மதம் மீது அசையாத நம்பிக்கை.

இன்னொருவருக்கு கடவுள் இல்லை என்பதன் மீது அசையாத நம்பிக்கை.

மற்றையவருக்கு தன் சதிக் கோட்பாடு சரி என்பதில் மீது அசையாத நம்பிக்கை.

எமது நம்பிக்கை அடிப்படையில் நாம் செய்யும் ஒரு செயலை வேறு ஒருவர் தட்டிக் கேட்டால் பொத்துக் கொண்டு வரும் கோபம், இன்னொருவரின் நம்பிக்கையை நாம் கேள்விக்குள்ளாக்கும் போது வருவது இல்லை.

உ+ம் : முன்னேஸ்வரத்தில் பலி கூடாது, முஸ்லீம்கள் போயாவில் மாடு வெட்டக் கூடாது எனும் பெளத்த புண்ணியவாங்களுக்கு 70 வயது என்புதோல் போர்த்திய யானையின் துயரம் கண்ணுக்குப் படாது. இது மறுவழமாக இந்துக்களுக்கும் ஏனைய எல்லா நம்பிக்கையினருக்கும், நம்பிக்கை இல்லாதோருக்கும் கூட பொருந்தும்.

எல்லாம் தக்காளி சோஸ்/இரத்தம் கதைதான் 😂

32 minutes ago, ampanai said:

இந்தியாவில் பல அமைப்புக்கள் உள்ளன, மிருகவதைகளை தடுக்க. அதில் ஒன்று பீட்டா (PETA) . 

இவர்கள் மத்தியில் அரசியல் நோக்கமே இல்லை என நம்புவர்களும் உண்டு, நம்பாதவர்களும் உண்டு.
 
தமிழகத்தின் பாரம்பரியமான, தமிழர்கள் கலாச்சாரத்துடன் இணைந்த காளைச்சவாரியை ( ஜல்லிக்கட்டு) இது குறிவைத்தது. மக்களின், மாணவர்களின் போராட்டத்தால் இது தோற்கடிக்கப்பட்டது.

இந்த பீட்டா அமைப்பு இலங்கையில் இல்லை என்று தெரிகின்றது. 

இது போல் ஒரு அமைப்பு இதில் தலையிட்டதாக எங்கோ படித்தேன்.

Link to comment
Share on other sites

உலகம் முழுவதுமாக 28000க்கும் அதிகமானோர் கையொப்பம் இட்டு விழிப்புணர்வையும் பிரச்சாரத்தையும் முன்னெடுக்கிறார்கள். 

https://www.change.org/p/ranil-wickremesinghe-save-tikiiri-from-barbaric-abuse

To love, to do no harm, to follow a path of kindness and compassion, this is the Way of Buddha. It is time to follow.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ampanai said:

உலகம் முழுவதுமாக 28000க்கும் அதிகமானோர் கையொப்பம் இட்டு விழிப்புணர்வையும் பிரச்சாரத்தையும் முன்னெடுக்கிறார்கள். 

https://www.change.org/p/ranil-wickremesinghe-save-tikiiri-from-barbaric-abuse

To love, to do no harm, to follow a path of kindness and compassion, this is the Way of Buddha. It is time to follow.

 

நல்ல விசயம். ஆனால் டிக்கிரியை 2ம் நாள் பெரெஹெரவோடு நிறுத்திவிட்டதாய் படித்தேன். ஆனால் இவர்கள் இன்னும் கையொப்பம் எடுக்கிறார்கள்?

Link to comment
Share on other sites

15 minutes ago, goshan_che said:

நல்ல விசயம். ஆனால் டிக்கிரியை 2ம் நாள் பெரெஹெரவோடு நிறுத்திவிட்டதாய் படித்தேன். ஆனால் இவர்கள் இன்னும் கையொப்பம் எடுக்கிறார்கள்?

 

We ask you the prime minister of Sri Lanka to end this barbaric torture and abuse

தொடர்ந்தும் இது நடக்க கூடாது என்ற நோக்கத்துடனேயே இந்த பிரச்சாரம் தொடர்கின்றது,

இதை இவர்கள் யானையை சின்னமாக கொண்ட இரணில் அவர்களிடம் சேர்ப்பிற்க முயலுகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் உலகத்தின் கவனம் இன்னொரு பக்கம் திரும்ப மறுபடியும் இதையோ அல்லது இதைபோல இன்னொரு வதையையோ ஆரம்பிப்பார்கள்.

Link to comment
Share on other sites

On 8/15/2019 at 8:06 PM, ampanai said:

#1 சி,என்,என். உல்லாசத்துறை பக்கம்:: 
Campaigners are urging a boycott of Sri Lanka's elephant attractions after these photos emerged
https://www.cnn.com/travel/article/elephant-festival-sri-lanka-intl-scli/index.html

#2 Oh my Lord! Campaigners are urging tourists to #boycottSriLanka's #elephant attractions after these photos emerged #torture

இலங்கைக்கு வரும் உல்லாச பிராணிகளை அங்குள்ள யானைகளை வைத்தும் கவரும் நெறிமுறைகள் நீண்ட காலமாக உள்ளது. அதை புறக்கணிக்கும் கோரிக்கைகளும் விடப்பட்டுள்ளன.

நலிந்து மெலிந்து போயுள்ள இலங்கை உல்லாசத்துறை இந்த 'உலக கவனத்தை' விரும்பவில்லை. 

Link to comment
Share on other sites

2 hours ago, goshan_che said:

எல்லாம் நம்பிக்கைதான். 

ஒருத்தருக்கு கடவுள்/ தன் மதம் மீது அசையாத நம்பிக்கை.

இன்னொருவருக்கு கடவுள் இல்லை என்பதன் மீது அசையாத நம்பிக்கை.

மற்றையவருக்கு தன் சதிக் கோட்பாடு சரி என்பதில் மீது அசையாத நம்பிக்கை.

எமது நம்பிக்கை அடிப்படையில் நாம் செய்யும் ஒரு செயலை வேறு ஒருவர் தட்டிக் கேட்டால் பொத்துக் கொண்டு வரும் கோபம், இன்னொருவரின் நம்பிக்கையை நாம் கேள்விக்குள்ளாக்கும் போது வருவது இல்லை.

உ+ம் : முன்னேஸ்வரத்தில் பலி கூடாது, முஸ்லீம்கள் போயாவில் மாடு வெட்டக் கூடாது எனும் பெளத்த புண்ணியவாங்களுக்கு 70 வயது என்புதோல் போர்த்திய யானையின் துயரம் கண்ணுக்குப் படாது. இது மறுவழமாக இந்துக்களுக்கும் ஏனைய எல்லா நம்பிக்கையினருக்கும், நம்பிக்கை இல்லாதோருக்கும் கூட பொருந்தும்.

எல்லாம் தக்காளி சோஸ்/இரத்தம் கதைதான் 😂

மதம் என்பது ஒருவர் பிறந்ததிலிருந்து கூட வருவது. இலங்கையில் இப்பொழுதும் சமயம் பாடசாலைகளில் ஒரு பாடமாக உள்ளது. அதை படித்து வளர்ந்து வருகிறார்கள். (பின் அதில் நம்பிக்கையில்லாமல் விலகுவது வேறு).

முன்னேஸ்வரத்தில் பலி கூடாது, முஸ்லிம்கள் மாடு வெட்ட கூடாது போன்றன சிங்கள பௌத்தர்கள் ஏனைய மத/இனங்கள் மீது தமது அரசியலை பிரயோகிக்கும் ஒரு நடவடிக்கையே தவிர ஜீவகாருண்யம் கிடையாது.

இன்று இலங்கையில் தமிழர் பகுதிகளில் சிங்கள பௌத்தர்களின் ஆக்கிரமிப்பு, முஸ்லிம்களின் ஆக்கிரமிப்பு/மதமாற்றங்கள், கிறிஸ்தவ மதமாற்ற குழுக்கள் இந்துக்களை மதம்மாற்றுதல் போன்றன முக்கிய பிரச்சினையாக உள்ளன. அவை பற்றி எழுதினால் பயனுண்டு.

Link to comment
Share on other sites

எமது மக்களும் பல புல வாசிகளும் கடைசி 3 நிலைகளிலேயே சிக்கி இருப்பதாக புரிகிறது. உங்கள் கருத்து என்ன? (bottom 3) 🙂🤣

Maslow's_Hierarchy_of_Needs.svg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ராஜராஜசோழன் said:

எமது மக்களும் பல புல வாசிகளும் கடைசி 3 நிலைகளிலேயே சிக்கி இருப்பதாக புரிகிறது. உங்கள் கருத்து என்ன? (bottom 3) 🙂🤣

Maslow's_Hierarchy_of_Needs.svg

கடைசி படிக்கும் கீழாக ஒரு படி இருக்கணுமே 😂 என்றுதான் எனக்குத் தோன்றுகிறது 😂.

Link to comment
Share on other sites

இலங்கை யானை: சமூக ஊடகங்களில் வைரலான புகைப்படம் - கானுயிரின் கதை

உடல்நலம் குன்றி, மெலிந்துபோன வயதான பெண் யானை ஒன்றை பௌத்த உற்சவத்தில் பங்கேற்க வைத்தது சமூக ஊடகங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் நிலையில், அதை நேர்த்திக்கடன் செலுத்தவே உற்சவத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், இனிவரும் காலங்களில் அதை உற்சவங்களில் பங்கேற்க வைப்பதில்லை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் யானை உரிமையாளர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகள் சொல்லப்பட்டது போல் இந்த யானை உற்சவத்தில் 10 தினங்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படவில்லை என்று அதன் உரிமையாளர் கூறியிருக்கிறார்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் இடம்பெறும் பௌத்த உற்சவம் இலங்கையில் மிக முக்கியமானதொரு உற்சவமாக கருதப்படுகின்றது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் பங்குப்பற்றுதலுடன் இந்த நிகழ்வு ஒவ்வொரு வருடமும் மிகவும் கோலாகலமான கொண்டாடப்பட்டு வருகின்றது.

குறிப்பாக புத்தரின் புனித சின்னங்கள் வீதி ஊர்வலமாக கொண்டு செல்லப்படுவது இந்த உற்சவத்தின் பிரதான நிகழ்வாக காணப்படுகின்றது.

இந்த உற்சவத்தை அலங்கரிக்கும் வகையில் சிங்கள பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், அலங்கரிக்கப்பட்ட யானைகள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெறுகின்றமை வழமையாகும்.

யானை

இந்த நிலையில், இந்த ஆண்டு உற்சவத்தில் கலந்துக்கொண்ட 'டிக்கிரி" என்ற பெயரை கொண்ட யானை குறித்து சமூக வலைத்தளங்களில் கடந்த சில தினங்களாக அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.

டிக்கிரி என்றழைக்கப்படும் இந்த பெண் யானைக்கு சுமார் 70 வயது என கூறப்படுகின்றது.

மிகவும் வயதான நிலையில் காணப்படும் இந்த யானை தொடர்பில் தாய்லாந்தை தளமாகக் கொண்டு இயங்கும் விலங்குகள் நல செயற்பாட்டாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சில படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர்.

அத்துடன், உற்சவத்தின்போது பயன்படுத்தப்படும் அதிக சத்தத்துடனான ஒலிபெருக்கிகள், தீ பந்தங்கள் மற்றும் புகை ஆகியவற்றுடன் இந்த யானை பல கிலோ மீட்டர் தூரம் நடப்பது மிகவும் சிரமமான ஒன்று என தாய்லாந்து விலங்குகள் நல செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டினர்.

வயதான நிலையில், சுகயீனமுற்றுள்ள இந்த யானை தொடர்பில் கவனம் செலுத்தி, அதனை எதிர்வரும் உற்சவங்களில் பங்குப்பற்றுவதனை நிறுத்துமாறும் விலங்குகள் நல செயற்பட்டாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் யானைகளுக்கு பொறுப்பான சங்கத்தின் செயலாளர் தம்சிறி பண்டார கருத்து வெளியிட்டிருந்தார்.

இந்த யானை சுமார் 50 வருடங்கள் கண்டி ஸ்ரீ தலதா மாளிகை உற்சவத்தில் கலந்துக்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இந்த நிலையில், 2018ஆம் ஆண்டு உற்சவத்தின் பின்னர் டிக்கிரி யானையின் உடல் நலம் குன்றியதாகவும், அதனை குணப்படுத்தும் வகையில் விஷ்ணு கடவுளுக்கு நேர்த்தி கடன் வைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

கடந்து செல்க யூடியூப் பதிவு இவரது BBC News Tamil
எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

முடிவு யூடியூப் பதிவின் இவரது BBC News Tamil

 

யானையின் உரிமையாளர் இந்த நேர்த்தி கடனையை செலுத்த வேண்டும் என தம்மிடம் கோரிக்கை விடுத்த நிலையிலேயே, இந்த யானை உற்சவத்தில் பங்குப்பற்றியதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

இந்த யானை நோய்வாய் பட்டிருந்த போது, அது குணமானால் அதை பெரஹரவில் ஒரு நாள் கலந்து கொள்ள வைப்பேன் என்று, தான் நேர்த்தி வைத்திருந்ததாகவும், அதற்கமைய வைத்தியர்களின் பரிசோதனைக்குப் பிறகே யானையை உற்சவத்துக்கு கொண்டு சென்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

டிக்கிரி யானைக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

டிக்கிரி யானை சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்க எந்தவொரு பிரச்சனையும் கிடையாது என மருத்துவர்கள் பரிந்துரை செய்தமையை அடுத்தே இந்த யானை உற்சவத்தில் கலந்துக்கொண்டதாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

டிக்கிரி யானையின் மீதுள்ள அன்பினால் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்படவில்லை என கூறிய அவர், கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடத்தப்படும் உற்சவத்தில் கலந்துக்கொள்ளும் யானைகளை நிறுத்தும் சூழ்ச்சிக்காகவே இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

எவ்வாறாயினும், டிக்கிரி யானையை இனிவரும் காலங்களில் உற்சவங்களில் பங்குப்பற்றுவதனை நிறுத்துவதற்கு தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கண்டி விஸ்ணு தேவாலயத்திற்கு பொறுப்பான பஸ்நாயக்க நிலமே மகேந்திர ரத்வத்த தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-49385923

Link to comment
Share on other sites

image_60a9481a4f.jpg

கேள்விகளும் பதில்களும் (With that in mind the Daily Mirror spoke to several individuals to find out what had happened to Tikiri, the status of captive elephants in Sri Lanka and the way forward.) 

Her worn-down, skeletal frame flooded social media posts in a matter of seconds. Online petitions were signed, others called for justice, some called to boycott peraheras while the international wildlife community criticised us once again. 

1. அமைச்சர் : இது பற்றிய அறிக்கைக்காக காத்திருக்கின்றேன் 

2. விகாரை பொறுப்பாளர் : இறைச்சிக்காக விலங்குகளை கொல்லும் பொழுது இந்த விலங்குகள் பாதுகாப்பு அமைப்புக்கள் கேள்வி எழுப்புவது இல்லை 

3. வேறு : காட்டில் இருந்திருந்தால் இந்த யானை இறந்திருக்கும் 

http://www.dailymirror.lk/news-features/Captive-elephants-and-the-way-forward-As-Tikiri-continues-to-live/131-173098

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.