Jump to content

பலாலி விமான நிலையத்திற்காக காணிகளை சுவீகரிப்பதை அனுமதிக்க முடியாது - மாவை


Recommended Posts

Published by Daya on 2019-08-16 14:45:25

பலாலி விமான நிலையத்தின் ஓடுதள விஸ்தரிப்பின் போது  மேலதிக காணிகளை சுவீகரிக்க அனுமதிக்க முடியாது.மாறாக தேவைப்படின் கடற்கரை பக்கமாக அதனை நிரவி ஓடுதளத்தை அமையுங்கள் அதற்கான வழிவகையை சம்பந்தப்படட அதிகாரிகள ஆராயுங்கள் என பாராளுமன்ற  உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க ஊடாக அதிகாரி களுக்கு தெரிவித்தார்.

பலாலி விமான நிலைய அபிவிருத்தி தற்போது நடைபெற்று வருகின்றது. விமான நிலையத்துக்கான ஓடுதளம் விஸ்தரிக்கப் படுமாயின் மக்களின் காணிகள் சிலவற்றை சுவீகரிக்க ஆலோசித்து வருவதாக அறிகின்றேன். அதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஓடுதளம் விஸ்தரிக்க வேண்டுமாயின் விமான நிலையத்தின் வடக்கு பக்கமாக உள்ள கடல் பகுதியை நிரவி அதன் ஊடாக ஊடுதளத்தை  அமைக்க முடியும் என்றார்.

இதன் போது கருத்து தெரிவித்த பாதுகாப்பு தரப்பினர், விமான நிலைய அபிவிருத்தியின் போது காணிகள் சுவீகரிப்பது தொடர்பில் இப்போது எந்த முயற்சியும் நடைபெறவில்லை. நீங்கள் சொல்வது போல கடலை நிரவி ஓடுதளம் அமைப்பது தொடர்பாக நாமும் சிவில் விமான போக்குவரத்து துறையினர் போன்ற பல தரப்புக்களுடனும் பேசி ஓர் முடிவுக்கு வரமுடியும் என்றனர்.

யாழ் மாவட்டத்தின் அபிவிருத்தி தொடர்பான கூட்டம் ஒன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ். மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த கலந்துரையாடலிலேயே பாராளுமனற உறுப்பினர் இதனை தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/62790

 

Link to comment
Share on other sites

15 hours ago, ampanai said:

நீங்கள் சொல்வது போல கடலை நிரவி ஓடுதளம் அமைப்பது தொடர்பாக நாமும் சிவில் விமான போக்குவரத்து துறையினர் போன்ற பல தரப்புக்களுடனும் பேசி ஓர் முடிவுக்கு வரமுடியும் என்றனர்.

ஏதோ அமெரிக்காட அப்போல்லோ விண்வெளி ஓடத்தை இங்க தரையிறக்கிற மாதிரி கதைவிடீனம்!

Link to comment
Share on other sites

காங்கேசன்துறை சீமெந்து ஆலையை இயங்க வைப்போம்

900 ஏக்கர் காணியே யாழில் விடுவிக்க வேண்டும்

கூட்டமைப்பு எம்.பிக்கள் முன்னிலையில் யாழில் பிரதமர் ரணில் தெரிவிப்பு

 

யாழில் இன்னமும் 900 ஏக்கர் காணியே விடுவிக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

மேலும் காங்கேசன்துறை சீமெந்து ஆலையை இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள வலி.வடக்கு தெல்லிப்பளைப் பிரதேச செயலர் பிரிவில் உள்ள மயிலிட்டி மீனவத்துறை அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தை மீண்டும் கட்டியெழுப்ப பல்வேறு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன் அதில் ஓர் அங்கமாக மயிலிட்டி மீனவத் துறைமுகத்தின் முதலாம் கட்டப்பணிகள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளது.

150 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்ட மயிலிட்டித் துறைமுகத்தின் முதலாம் கட்டப்பணிகளுக்கு 37 மில்லியன் ரூபாய் பணத்தை நோர்வே அரசாங்கம் வழங்கியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அடிக்கல் நாட்டப்பட்ட குறித்த  மீனவத் துறைமுகத்தைச் சூழவுள்ள பகுதிகளில் 200 வீடுகளை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள தோடு மீதமுள்ள 900 ஏக்கர் காணிகளையும் விடுவிக்கவுள்ளோம்.

வடக்குக் கிழக்கில் 2009-2015 வரை இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த 35 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவித்ததோடு 2015-2019 வரை ஏறக்குறைய 45 ஆயிரத்து ஐநூற்று எண்பது ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளோம்.

மேலும் உயர் பாதுகாப்பு வலயம் மெல்ல மெல்லச் சுருங்கிக் கொண்டு செல்லும் நிலையில் மீள்குடியேற்றப்படவுள்ள மக்களுக்குத் தேவையான நிதியை வழங்குவதில் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 10 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டத்தில் வட மாகாணத்தில் ஆயிரத்து ஐநூறு வீடுகள் அமைக்கப்பட் டுள்ளது. மூவாயிரம் ஆசிரியர்கள் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல் பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிக்காக சிறிய நிலப்பரப்புக் காணி தேவைப்படுகின்றது. அதேபோல்  30 வருட காலமாக இயங்காமல் இருக்கின்ற சீமெந்து ஆலையை மீண்டும் இயங்க வைக்க துறைசார் அமைச்சர் ரிசாத் பதியுதீனுடன் கலந்துரையாடி வருவதாக பிரதமர் ரணில் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, தர்மலிங்கம சித்தார்த்தன், ஈஸ்வரபாதம் சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன், கல்வி இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், விவசாய, கிராம பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம் மற்றும் கடற்றொழில் நீரியல் வளங்கள் அமைச்சர் பீ.ஹரிசன், மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் எஸ்.சிவ ஞானசோதி மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

http://valampurii.lk/valampurii/content.php?id=19256&ctype=news

Link to comment
Share on other sites

10 minutes ago, ampanai said:

மாவை சேனாதிராசா, ஈஸ்வரபாதம் சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன்,

இந்த கள்ளவோட்டு வெற்றியாளர்களோட ஸ்ரீதரனை காணேல?

கனநாளைக்கு பிறகு மக்கள் முன்னால நிற்கும் மிஸ்டர் சரவணபவன்! உங்கட வீட்டில பேர்த்டே ஒன்டும் இல்லையோ?

 

Link to comment
Share on other sites

On 8/16/2019 at 1:21 PM, ampanai said:

பலாலி விமான நிலைய அபிவிருத்தி தற்போது நடைபெற்று வருகின்றது. விமான நிலையத்துக்கான ஓடுதளம் விஸ்தரிக்கப் படுமாயின் மக்களின் காணிகள் சிலவற்றை சுவீகரிக்க ஆலோசித்து வருவதாக அறிகின்றேன். அதனை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஓடுதளம் விஸ்தரிக்க வேண்டுமாயின் விமான நிலையத்தின் வடக்கு பக்கமாக உள்ள கடல் பகுதியை நிரவி அதன் ஊடாக ஊடுதளத்தை  அமைக்க முடியும் என்றார்.

ஏற்கனவே காணி சுவீகரிப்பதற்கெதிராக மக்கள் போராட்டங்களை நடத்தி வந்து இறுதியில் மேலதிக காணி சுவீகரிக்கப்படாது என கூறி தானே அபிவிருத்தி ஆரம்பித்தார்கள். மீண்டும் சுவீகரிப்பு பற்றி ஆலோசிக்கினமோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓடுபாதையை வடக்கு புறமாக விஸ்தரிப்பதாயின் ஏன் கடல் வரை போக வேண்டும். தற்போது இருக்கும் ஓடுபாதையின் 3/2 பங்கு நீளாமன நிலப்பரப்பு கடற்கரைக்கு போகமும்னமே வருகிறதே?

இது போதாதா? கடலை நிரவுவது அதிக செலவான வேலை. 

Link to comment
Share on other sites

’மக்களுடைய நிலம் தொடர்ந்தும் படையினருடைய கட்டுப்பாட்டில் உள்ளது’
 
Editorial / 2019 ஓகஸ்ட் 17 சனிக்கிழமை, பி.ப. 01:39

-எஸ்.நிதர்ஷன்

தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகளை 2018ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்துக்குள் மக்களிடம் மீள வழங்குவேன் என ஜனாதிபதி கூறி 9 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான மக்களுடைய நிலம் தொடர்ந்தும் படையினருடைய கட்டுப்பாட்டில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்றய தினம் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது மீள்குடியேற்ற நிலமைகள் குறித்து ஆராயப்படுகையில் கருத்து கூறும் போதே, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

2018ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்துக்கு முன்னர் தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகள் அனைத்தும் மக்களிடமே மீள வழங்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா காலக்கெடு வழங்கினார். அந்த காலக்கெடு நிறைவடைந்து 9 மாதங்கள் கடந்து கொண்டிருக்கும் நிலையிலும் படையினரின் கட்டுப்பாட்டில் சுமார் 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலம் இருந்து கொண்டிருக்கின்றது.

மேலும், குறிப்பாக பலாலி வீதியின் கிழக்குப் புறமாக பெருமளவு நிலம் தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டிருக்கின்றது. அந்த நிலம் பொதுமக்களுக்குச் சொந்தமான மிக பெறுமதியான விவசாய நிலம் என, அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்விடயம் தொடர்பில், அங்கு தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறுகையில், பலாலி வீதியின் கிழக்கு புறமாக உள்ள வீதி என்பது மிக பெறுமதியான விவசாய நிலம். அதனை மக்களுக்கு விடுவிக்காமல் படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அது மட்டுமல்லாமல் மக்களுடைய நிலத்தில் விவசாயம் செய்கின்றார்கள்.

இது எங்களுடைய பொருளாதார விருத்திக்கு முரணான ஒரு செயலாக அமைகின்றது. அது மட்டுமல்லாமல் மயிலிட்டி பகுதியில் 3 கிராமசேவகர் பிரிவுகளும், வல்லை அராலி வீதியும் விடுவிக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து கருத்து கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வடமாகாண ஆளுநர் ஜனாதிபதியின் வடமாகாணத்துக்கான பிரதிநிதி என்ற அடிப்படையில் ஜனாதிபதியிடம் இந்த விடயங்களை கூறி மக்களுடைய காணிகளை மக்களிடம் மீள வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார். அதற்கு பதிலளித்த ஆளுநர் தாம் ஜனாதிபதிக்கு இந்த விடயத்தை நினைவுபடுத்துவதாக கூறினார்.

இதனை தொடர்ந்து யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதி கருத்து கூறுகையில், பலாலி வீதியின் கிழக்கு பகுதியில் உள்ள காணிகளை விடுவிக்க 1,200 மில்லியன் பணம் தேவை என கூறியதுடன் அந்த பணம் கிடைக்கவில்லை எனவும் கூறினார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/மக்களுடைய-நிலம்-தொடர்ந்தும்-படையினருடைய-கட்டுப்பாட்டில்-உள்ளது/71-236881

Link to comment
Share on other sites

1 hour ago, ampanai said:

தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகளை 2018ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்துக்குள் மக்களிடம் மீள வழங்குவேன் என ஜனாதிபதி கூறி 9 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், 3 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான மக்களுடைய நிலம் தொடர்ந்தும் படையினருடைய கட்டுப்பாட்டில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுமந்திரன் ஏன் காணிகளை விடுவிக்குமாறு ரணிலிடம் கேட்கவில்லை?
சுமந்திரன் எதற்காக மைத்திரி மேல் மட்டும் பழியைப் போட்டு ரணிலை காப்பாற்ற நினைக்கிறார்?
இதற்கான பதில்கள் சுமந்திரனின் அடிமைத்தன மனநிலையை, ரணிலின் சேவகனாக செயலாற்றுவதை வெளிப்படுத்துகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது பலாலி பகுதியில் எந்தளவு நிலம் இராணுவ வசம் உள்ளது என்பதை காட்டும் வரைபடம் ஏதேனும் உள்ளதா? 

Link to comment
Share on other sites

50 minutes ago, goshan_che said:

தற்போது பலாலி பகுதியில் எந்தளவு நிலம் இராணுவ வசம் உள்ளது என்பதை காட்டும் வரைபடம் ஏதேனும் உள்ளதா? 

https://satellites.pro/Palali_map.Sri_Lanka#

PalaliGraphic.jpg

Link to comment
Share on other sites

 

 

 

 

'வயாவிளான் மக்கள் போராட்டத்தில் குதிப்பர்’

Editorial / 2019 ஓகஸ்ட் 19 திங்கட்கிழமை, பி.ப. 05:12   

-செந்தூரன் பிரதீபன்

 

பலாலி விமான நிலையத்தின் நுழைவாயில் இருந்த இடத்திலே மீளவும் அமைக்கப்படவேண்டுமெனத் தெரிவித்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முண்ணணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், இல்லையேல் வயாவிளான் மக்கள் போராட்டத்தில் குதிப்பரெனவும் எச்சரிக்கை விடுத்தார்.

அவரது கட்சி அலுவலகத்தில், நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், நல்லாட்சி அரசாங்கத்தால் காணி விடுவிப்பை மேற்கொள்வோமெனச் சூளுரைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், மயிலிட்டி பகுதியில் விமான நிலைய விஸ்தரிப்புக்கென காணி சுவீகரிக்கும் நடவடிக்கையை வேடிக்கைப் பார்த்துக்கொண்டா இருக்கின்றார்களெனவும் கேள்வியெழுப்பினார்.

பலாலி விமான நிலையத்தை மீளவும் சிவில் மக்களுக்காக திறக்க முயல்வதும் அதனை பிராந்திய விமான நிலையமாக உருவாக்குவதும் வரவேற்கபட வேண்டிய விடயமெனத் தெரிவித்த அவர், ஆனால் இதுவரை காலமும் விமான நிலையம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், கிழக்கு பக்கமாகத்தான் அதனுடைய வாசல் இருந்தது என்பதும் போக்குவரத்துக்கான வழி இருந்தது என்பதும் வெளிப்படையான விடயமெனவும் கூறினார்.

தற்போது மேற்கு பக்கத்தில் நுழைவாயில் அமைக்கும் பணியில், இராணுவத்தினரும் விமானப்படையினரும் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்த அவர், கிழக்கு பக்கம் இருந்த நுழைவாயிலை மாற்றி, அதை மேற்கு பக்கமாக தெல்லிப்பளை வைத்தியசாலை வீதி வழியாக சென்று மேற்கு பக்கம் உள்ள நுழை வாயிலலை அடையவேண்டும் என்ற நோக்கத்தோடு அமைக்கப்படுகிறதெனவும் கூறினார்.

நிச்சியமாக அதனுடாக மக்களுக்குச் சொந்தமான பல நூற்றுக்கணக்காக காணிகள், அநியாயமாக சுவீகரிக்கப்படுமெனத் தெரிவித்த அவர், இது திட்டமிட்ட செயல் என்றே எண்ண தோன்றுகிறதெனவும் கூறினார்.

ஆகவே, விமான நிலையம் செயற்பட தொடங்குவதற்கு முன்னாக, நுழைவாயிலை மாற்ற வேண்டுமெனவும், அவர் மேலும் கூறினார்.

http://www.tamilmirror.lk/வன்னி/வயாவிளான்-மக்கள்-போராட்டத்தில்-குதிப்பர்/72-236990

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, ampanai said:

நன்றி அம்பனை. 

இதில் கடும் மஞ்சளாய் இருக்கும் இடம் மட்டும்தானா இப்போ ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கிறது?

நீங்கள் தந்த இணைப்பு தனியே சட்டிலைட் மேப்பையே காட்டுகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.