Jump to content

''அணு ஆயுத கொள்கை எதிர்காலத்தில் மாறலாம்'' : பாகிஸ்தானை எச்சரிக்கும் மத்திய அரசு!!


Recommended Posts

 

''அணு ஆயுத கொள்கை எதிர்காலத்தில் மாறலாம்'' : பாகிஸ்தானை எச்சரிக்கும் மத்திய அரசு!!

எதிரி நாடு அணு ஆயுதத்தை பயன்படுத்தாத வரையில் அதனை கையில் எடுக்க கூடாது என்ற கொள்கையை இந்தியா பின்பற்றி வருகிறது. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் அரசு இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து சதி செய்கிறது. இருப்பினும் இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டு வருகின்றன.

எதிரி நாடு அணு ஆயுதத்தை பயன்படுத்தாத வரையில் அதனை கையில் எடுக்க மாட்டோம் என்ற இந்தியாவின் கொள்கை எதிர்காலத்தில் நிலைமையை பொறுத்து மாறலாம் என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தொடர்ந்து சதிச் செயல்களில் ஈடுபட்டு வரும் நிலையில் அதனை எச்சரிக்கை செய்யும் விதமாக இந்த அறிவிப்பை மத்திய அரசு அறிவித்திருக்கிறது. 

இந்தியாவில் கடந்த 1974-ல் இந்திரா காந்தி  பிரதமராக இருந்தபோது ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது. அது மீண்டும் கடந்த 1998-ல் வாஜ்பாயி பிரதமராக இருந்தபோது மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில் வாஜ்பாயின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. அவருக்கு பாஜக மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதேபோன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜ்நாத் சிங், வாஜ்பாய் நினைவு நாளில் பொக்ரானில் நடைபெற்ற ராணுவ நிகழ்ச்சியின்போது மரியாதை செலுத்தினார்.  

6psgjsg4

 

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், 'இந்தியாவை அணு ஆயுத பலம் கொண்ட நாடாக மாற்ற வேண்டும் என்பதில் அடல் பிகாரி வாஜ்பாய் உறுதியாக இருந்தார். அதற்கான களமாக பொக்ரான் அமைந்தது. இந்தியா ஒரு அணுஆயுத சக்தி கொண்ட நாடு. இருப்பினும் எதிரிநாடு அணு ஆயுதத்தை எடுக்காத வரையில் இந்தியா அதனை கையில் எடுக்காது என்ற கொள்கையை வைத்துள்ளது. இதனை உறுதியாக பின்பற்றியும் வருகிறது. இருப்பினும். எதிர்காலத்தில் சூழலை கருத்தில் கொண்டு மாற்றம் ஏற்படலாம்' என்று தெரிவித்தார். 

ராஜ்நாத் சிங்கின் அறிவிப்பு பாகிஸ்தானுக்கு விடுக்கப்பட்டிருக்கும் நேரடி எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது. காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு சதித் திட்டங்களை நிறைவேற்ற பாகிஸ்தான் முனைப்பு காட்டி வருகிறது. 

கடந்த பிப்ரவரியில் நடந்த புல்வாமா தாக்குதலில் இந்தியா 40 துணை ராணுவத்தினரை பறிகொடுத்தது. இதன்பின்னர் இந்தியா நடத்திய பாலகோட் அதிரடி, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின தலைவர் மசூத் அசாரை பாகிஸ்தான் பாதுகாத்து வைத்திருப்பது உள்ளிட்டவைகளால் இரு நாடுகளின் உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் மத்திய அரசின் அறிவிப்பு சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. 

https://www.ndtv.com/tamil/rajnath-singh-says-india-has-been-firm-on-nuclear-no-first-use-policy-what-happens-in-future-depends-2086000?pfrom=home-tamil_bigstory

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதை மட்டும் கொடுத்துடாதீங்க... மோடி எங்களை சல்லி சல்லியா தொலைச்சுக் கட்டிடுவாரு... கதிகலங்கும் பாகிஸ்தான்..!

pjimage--15--jpg-710x400xt-jpg_1200x630x

நரேந்திர மோடி தலைமையில் செயல்பட்டு வரும் இந்திய அரசின் கட்டுபாட்டில் அணு ஆயுதம் இருந்தால், அது பாதுகாப்பாக இருக்காது என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அச்சம் தெரிவித்துள்ளார்.

வாஜ்பாய் பிரதமராக இருந்த போது பொக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை வாஜ்பாயின் நினைவு நாளில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பொக்ரானில் அவரது உருவபடத்துக்கு மரியாதை செலுத்தினார். பின்னர் அங்கு அணு ஆயுத சோதனை நடந்த இடத்தை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘’அணு ஆயுதங்களை இந்தியா முதலில் பயன்படுத்தாது. ஆனால், எதிர்கால சூழலுக்கு ஏற்ப, இந்தியாவின் அணு ஆயுத கொள்கையில் மாற்றம் வரலாம்’ என்று தெரிவித்து இருந்தார். 

ராஜ்நாத் சிங்கின் இந்த பேச்சு பாகிஸ்தானை கதிகலங்க வைத்துள்ளது. ஏற்கனவே, காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததால், பாகிஸ்தான் கடுப்பில் உள்ளது. பயங்கரவாதிகளை ஆதரித்து இந்தியாவுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த திட்டமிட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து தற்போது அணு ஆயுத கொள்கையில் இந்தியாவின் நிலைப்பாடு பற்றி ராஜ்நாத் பேசியது, பாகிஸ்தானை எச்சரிப்பதாக உள்ளது.

இந்நிலையில், மோடி அரசின் கீழ் அணு ஆயுதம் இருந்தால், அது பாதுகாப்பாக இருக்காது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இம்ரான்கான் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘’பாசிச, இந்து மேலாதிக்கம் உள்ள மோடி அரசின் கீழ் அணு ஆயுதம் இருந்தால் அது பாதுகாப்பாக இருக்காது. உலக நாடுகள் இதில் பொறுப்புடன் கவனம் செலுத்த வேண்டும். இது வெறும் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் உள்ள பிரச்னை அல்ல. இந்த பிரச்னை உலகம் முழுவதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

ஏற்கனவே 40 இஸ்லாமிய மக்கள், கைது முகாம்களையும், குடியுரிமை ரத்தையும் எதிர்கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் வெறிபிடித்தாற் போல் உள்ளனர். உலக நாடுகள் இப்போதே இந்த பிரச்னையில் தலையிட வேண்டும். இல்லையென்றால் இது மேலும் பரவும்’ என அவர் தெரிவித்துள்ளார்.

https://tamil.asianetnews.com/world/imran-khan-tweet-about-indias-nuclear-weapon-pwh9rg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.