Jump to content

கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை ஜனாதிபதி வேட்பாளர்: இலங்கை தமிழர்கள் கூறுவதென்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
 
கோட்டாபய ராஜபக்ஷபடத்தின் காப்புரிமை GOTABAYA RAJAPAKSA'S FACEBOOK PAGE Image caption கோட்டாபய ராஜபக்ஷ

இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தங்கள் கேள்விகளுக்கு முதலில் கோட்டாபய பதில் கூற வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடையும் நிலையில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் ஆரம்பித்துள்ளன.

இந்த நிலையில் தமிழ் மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்க சிறந்த தலைமைத்துவத்தை வழங்கும் ஒரே தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ என அவரது தரப்பை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிக்கின்றார்.

உள்நாட்டு யுத்தத்தின்போது வடக்கு,கிழக்கு பிரதேசங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் தமது கடுமையான எதிர்ப்பினை பிபிசி தமிழுடன் பகிர்ந்து கொண்டனர்.

அனந்தி சசிதரன் Image caption அனந்தி சசிதரன்

"கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கியிருப்பது இலங்கை ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது," என்கிறார் அனந்தி சசிதரன்

இறுதி யுத்தத்தில் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்த எழிலனின் மனைவியே அனந்தி சசிதரன்.

இவர் வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சரும் ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளர் நாயகமுமாக இருக்கின்றார்.

இவ்வாறான ஓர் அறிவிப்பின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்ப்பை பெறும் வகையில் பொதுஜன பெரமுன இந்த முடிவை எடுத்துள்ளது. தமிழ் மக்கள் மட்டுமல்ல சிங்கள மக்களும் கோட்டாபய ராஜபக்ஷவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அனந்தி சசிதரன் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

குறிப்பாக, வெள்ளை வேன் கடத்தல்களுக்கும், ஊடகவியலாளர் கொல்லப்பட்டமைக்கும், காணாமல் ஆக்கப்பட்டமைக்கும் பாதுகாப்புச் செயலராக இருந்த கோட்டாபயதான் பொறுப்பேற்க வேண்டும் என குற்றம் சாட்டும் அனந்தி, ஜனாதிபதி தேர்தலில் அவரை களமிறக்கியுள்ளமையை நாங்கள் முற்றாக வெறுக்கிறோம் என்கிறார்.

யோகராசா கனகரஞ்சினி. Image caption யோகராசா கனகரஞ்சினி.

"எமது இந்த அவல நிலைக்கு காரணம் கோட்டாபய ராஜபக்ஷதான். பதில் கூறவேண்டியவர் அவர்தான். அந்த வகையில் எமக்கான நீதியினை தரும் பட்சத்தில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் தமிழ் மக்களாக இருப்போம்" என்கிறார் வலிந்து காணாமல் ஆக்கபட்டவரின் உறவினர் யோகராசா கனகரஞ்சினி.

"யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த அந்த ஆட்சியின் சகோதரரான கோட்டபாய இன்று ஜனாதிபதி தேர்தல் களத்தில் இறக்கப்பட்டுள்ளார். எமக்கு எமது தாயகத்தில் வாழ்வதற்கு உரிமை உள்ளது. வருகின்றவர்கள் தமக்கு சாதகமாக தமிழ் பிரதிநிதிகளை பயன்படுத்தி தமது இருப்பை தக்கவைத்துக்கொள்பவர்களாக உள்ளனர். நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் அரசு மாறலாம், ஆட்சி மாறலாம், ஆனால் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா என்பது கேள்வியாக உள்ளது," என்கிறார் கனகரஞ்சினி.

விஸ்வநாதன் பாலநந்தினி Image caption விஸ்வநாதன் பாலநந்தினி

"நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலம் முடியும் இக்காலத்தில் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய போட்டியிடுகிறார். " அவரது பொறுப்புக்கு கீழ்தான் எமது பிள்ளைகள் சரணடைந்தார்கள் என உண்மையில் நான் நினைகிறேன்," என்கிறார் இறுதியுத்தத்தில் சரணடந்தவரது உறவினர் விஸ்வநாதன் பாலநந்தினி.

இறுதி யுத்தத்தின்போது பாதுகாப்பு செயலாளராக கோட்டாபய இருந்தபடியால் எமது பிள்ளைகளை ஒப்படைத்தமை அவருக்கு தெரியாமல் இருக்காது. இவ்வளவு காலமும் வெளிக்கொண்டுவரவில்லை. இனியேனும் வெளிக்கொண்டுவரவேண்டும். கேட்கும் கடப்பாடு எமக்கு உள்ளது. அதே நேரத்தில் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் அவர்கள்தான் என்கிறார் பாலநந்தினி.

"இறுதி யுத்தம் இடம்பெற்றபோது பாதுகாப்பு செயலாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ இன்று ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் கடந்த 10 வருடங்களாக நாம் வீதியில் ஏதிலிகளாக கண்ணீர் வடித்துக்கொண்டு எங்களுடைய உறவுகளை தேடிக்கொண்டிருக்கிறோம். எமக்கான நீதி, பொறுப்பு கூறலுடன் வேட்பாளர்கள் வரவேண்டும்," என்கிறார் விக்னேஸ்வரன் செல்வநாயகி.

விக்னேஸ்வரன் செல்வநாயகி. Image caption விக்னேஸ்வரன் செல்வநாயகி.

"என் பிள்ளையை தேடி பூசா முகாமில் போய் கேட்கும்போது கோட்டாபயவிடம் கையெழுத்து வாங்கி வாருங்கள், பிள்ளையைக் காட்டுகிறோம்," என சொன்னார்கள். அவரது கையெழுத்தை என்னால் பெறமுடியவில்லை. இன்றும் எனது பிள்ளையை தேடி காத்திருக்கிறேன்" என்கிறார் காணாமல் ஆக்கப்படவரின் உறவினர் செல்வநாயகி.

கோட்டாபய ஜனாதிபதியாக வரட்டும் அதபற்றி எமக்கு பிரச்சனையும் இல்லை, அக்கறையும் இல்லை. ஆனால் நாம் கையளித்த பிள்ளைகளை எம்மிடம் தந்து விட்டு ஜனாதிபதியாக வரட்டும். அவர் பாதுகாப்பு செயலாளராக இருந்த நேரத்தில் கையளித்த பிள்ளைகளைதான் நாம் கேட்கிறோம். அதற்கு அவர் பொறுப்புக் கூறவேண்டும் என்கிறார்.

யூடியூப் இவரது பதிவு BBC News Tamil: Gotabhaya Rajapaksa  இலங்கை அதிபர் தேர்தல் வேட்பாளர்  யார் இந்த கோட்டாபய ராஜபக்ஷ?புகைப்பட காப்புரிமை BBC News Tamil BBC News Tamil <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img alt="யூடியூப் இவரது பதிவு BBC News Tamil: Gotabhaya Rajapaksa இலங்கை அதிபர் தேர்தல் வேட்பாளர் யார் இந்த கோட்டாபய ராஜபக்ஷ?" src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://www.youtube.com/watch?v=QkBTDBcG3og~/tamil/sri-lanka-49351603" width="500" height="269"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை BBC News Tamil</span> <span class="story-image-copyright" aria-hidden="true">BBC News Tamil</span> </span> </figure>

'ராணுவ ஆட்சியை கொண்டு வந்திருக்க முடியும்'

யுத்தத்தை நிறைவு செய்த மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் தேவையேனில், யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் அப்போதே ராணுவ ஆட்சியை கொண்டு வந்திருக்க முடியும் என கூறிய கோட்டாபய ராஜபக்ஷ தரப்பை சேர்ந்த மஹிந்தானந்த அளுத்கமகே, அதற்கு மாறாக ஜனநாயகத்தை உறுதி செய்து, வடக்கில் துரித அபிவிருத்திகளை மேற்கொண்டதாக கூறினார்.

தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ளும் நோக்குடனேயே கோட்டாபய மீது ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாறான போலியான பிரசாரங்களை மேற்கொண்டு, தமிழ் மக்களை திசை திருப்பியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கோட்டபாய ராஜபக்ஷ

வெள்ளை வேன் கலாசாரம், ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் கோட்டாபய ராஜபக்ஷ மீது சுமத்தப்பட்டுள்ள போதிலும், ஐக்கிய தேசியக் கட்சியின் கடந்த நான்கு ஆண்டு காலப் பகுதியில் இந்த குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் அவர் கூறினார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு மாத்திரமே வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டிய அவர், அபிவிருத்தி பணிகள் முழுமைப்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், அரசியல் தீர்வை பெற்றுத்தருவதாக கூறிய ஐக்கிய தேசியக் கட்சி இதுவரை காலமும் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் அபிவிருத்தி என்ற ஒன்றையும் செய்யவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படும் பட்சத்தில், தமிழர்களுக்கான தீர்வுத்திட்டத்தை நிச்சயம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்தானந்த அளுத்கமகே நம்பிக்கை வெளியிட்டார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-49351603

Link to comment
Share on other sites

"எமக்கு எமது தாயகத்தில் வாழ்வதற்கு உரிமை உள்ளது. வருகின்றவர்கள் தமக்கு சாதகமாக தமிழ் பிரதிநிதிகளை பயன்படுத்தி தமது இருப்பை தக்கவைத்துக்கொள்பவர்களாக உள்ளனர். நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் அரசு மாறலாம், ஆட்சி மாறலாம், ஆனால் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா என்பது கேள்வியாக உள்ளது," என்கிறார் கனகரஞ்சினி."

இந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தில் தாயக பெண்கள் கூடுதலாக குரல் கொடுத்து, போராட்டங்களில் ஈடுபடுவது எங்கள் சமூகத்திற்கு ஆரோக்கியமானது. 

இவ்வாறான பெண்கள் உள்ளூர் அரசியலில் ஈடுபடவும், பொருளியல் மற்றும் முகாமைத்துவங்களிலும்  வளரவும் சமூகம் உதவவேண்டும்.  

Link to comment
Share on other sites

கோத்தபாய செய்த இனப்படுகொலைகளை, கடத்தல்களை, ஊடகவியலாளர் கொலைகளை, கொள்ளைகளை, கோத்தபாய தலைமையில் நடந்த பாலியல் பலாத்காரங்களை பலர் மறந்தமாதிரி நடிச்சாலும் அந்த உண்மைகள் வரலாற்றுப் பதிவுகள்.

கோத்தபாயவின் அக்கிரமங்களை சொறிலங்காவின் ரவுடிகளின் கையில் சிக்கி சீரழியும் சிங்கள பௌத்தம் ஆதரிக்கும் என்டு பிபிசி காரரும் உறுதி செய்யீனம்.

Link to comment
Share on other sites

"இறுதி யுத்தத்தின்போது பாதுகாப்பு செயலாளராக கோட்டாபய இருந்தபடியால் எமது பிள்ளைகளை ஒப்படைத்தமை அவருக்கு தெரியாமல் இருக்காது. இவ்வளவு காலமும் வெளிக்கொண்டுவரவில்லை. இனியேனும் வெளிக்கொண்டுவரவேண்டும். கேட்கும் கடப்பாடு எமக்கு உள்ளது. அதே நேரத்தில் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் அவர்கள்தான் என்கிறார் பாலநந்தினி."

மறுக்க முடியாத கருத்து. 

இப்படிப்பட்ட ஒருவரை ஒரு அரசியல் கட்சி சனாதிபதியாக்க எண்ணுவது இந்த மக்களை மிக கொடூரகமாக அவமதிப்பது மட்டுமல்ல இவர்கள் ஒப்படைத்த அந்த மக்களை தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் எதுவும் செய்யலாம், யாரும் கேட்க மாட்டார்கள் துர்ப்பாக்கிய  என்ற நிலை !

அறிவு ரீதியாக இதற்கு என்ன பதில் என்பதற்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை 😞 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ங்கிளாதேஸ்ச‌ சொந்த‌ ம‌ண்ணில் வெல்வ‌து க‌டின‌ம் ஆனால் 20 ஓவ‌ர் தொட‌ரில் இல‌ங்கை வெற்றி ஒரு நாள் தொட‌ரில் வ‌ங்க‌ளாதேஸ் வெற்றி 5நாள் தொட‌ரில் இல‌ங்கை அமோக‌ வெற்றி....................... இப்ப‌ எல்லாம் 5 நாள் விளையாட்டு சீக்கிர‌ம் முடிந்து விடுது  விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடிய‌னும் என்றால் ம‌ழை வ‌ந்தால் தான் இல்லையேன் ஏதோ ஒரு அணி வெல்லும் இதே 20வ‌ருட‌த்தை முன்னோக்கி பார்த்தா நிறைய‌ விளையாட்டு ச‌ம‌ நிலையில் முடியும்.....................20 ஓவ‌ர் வ‌ந்தாப் பிற‌க்கு ஜ‌ந்து நாள் விளையாட்டை கூட‌ 20ஓவ‌ர் விளையாட்டு போல் அடிச்சு ஆடுகின‌ம்😁.................................
    • சுனில் ந‌ர‌ன் இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ந‌ல்லா விளையாடுகிறார்🙏🥰.......................
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் மிஸ்ர‌ர் க‌ட்ட‌த்துரை🙏🥰...........................
    • 😔 ம்ம்ம்ம் குதிரையை குளம் வரை கூட்டிப்போகலாம், நீரை அதுதான் குடிக்க வேண்டும்.
    • நியூயோர்க் பங்கு சந்தை வெள்ளி 4 மணிக்கு மூட, சில options, swaps நடந்தேறிய பின், திங்கள் 8 EST க்கு முதல் எதாவது எதிர்வினை காட்டப்படலாம் என்கிறனர் சிலர். மீள நேற்று நான் எழுதியபோது சரிய தொடங்கிய எண்ணை 82 இல் தரித்து நிற்கிறது. சந்தை தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை என நினைத்தால் 76 க்கு வந்திருக்கும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.