Jump to content

கோமாளி: முதல் பார்வை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு விபத்தில் கோமா நிலைக்குச் சென்றவருக்கு 16 ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு திரும்பினால், அவர் இழந்தவற்றை மீட்க நினைத்தால் அதுவே 'கோமாளி'.

பிளஸ் 2 படிக்கும் ஜெயம் ரவி, தன் வகுப்புத் தோழி சம்யுக்தா ஹெக்டேவுக்கு காதலைச் சொல்ல அவர் ஏரியாவுக்குச் செல்கிறார். தன் குடும்பத்துப் பாரம்பரிய சிலையைப் பரிசளித்து காதலை வாழ்த்து மடலில் தெரிவிக்கிறார். அந்த நேரத்தில் ஏரியா ரவுடி பொன்னம்பலத்தைக் கொலை செய்துவிட்டு கே.எஸ்.ரவிகுமார் அண்ட் கோ அங்கிருந்து தப்பிக்க நினைக்கிறது. பொதுமக்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள சம்யுக்தா ஹெக்டேவின் கழுத்தில் கே.எஸ்.ரவிகுமார் ஆயுதம் வைத்து தப்பிக்கிறார். காதலியைக் காப்பாற்ற ஜெயம் ரவி முயல, விபத்தில் சிக்குகிறார். 16 வருடங்கள் சுயநினைவு இல்லாமல் படுக்கையில் கிடக்கிறார்.

சுய நினைவு வந்த பிறகு என்ன செய்கிறார், காதலி என்ன ஆனார், சென்னையின் வளர்ச்சியும் தொழில்நுட்பப் புரட்சியும் அவரை எப்படி மிரட்சிக்குள்ளாக்குகிறது, சிகிச்சை பணத்துக்காக வீட்டை அடமானம் வைத்த சூழலில் அதை மீட்க முடிந்ததா, பிளஸ் 2 முடிக்காத அவருக்கு வேலை கிடைத்ததா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

16 ஆண்டுகள் கோமாவில் இருந்துவிட்டு நினைவு திரும்பியவர் இந்த உலகை, நகரத்து வாழ்க்கையை, நவீனத்தை எப்படிப் பார்க்கிறார் என்ற ஒன்லைனில் சுவாரஸ்யம் சேர்த்து இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் எதிர்பார்ப்பை ஏற்படுத்தினார். ஆனால், அதை முழுமையாகப் பதிவு செய்யவில்லை.

ஜெயம் ரவி நினைவு தப்பியவராகவும், சுய நினைவுக்குப் பிறகு 17 வயது பள்ளி மாணவனின் இயல்பை அப்படியே பிரதி எடுத்த விதத்திலும் சிறப்பாக நடித்துள்ளார். குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பது, தங்கையின் அவமானத்தை ஏற்று பக்குவம் காட்டுவது, வேலை கேட்டு அலைவது, சாதிக்க நினைத்து எதுவும் செய்ய முடியாத இயலாமையை வெளிப்படுத்துவது, ட்ரெண்டுக்கு மாறுகிறேன் என்று மாட்டிக்கொண்டு முழிப்பது, எமோஷனையும் மனிதத்தையும் விழாமல் பிடிப்பது என்று தேர்ந்த நடிப்பில் மின்னுகிறார்.

ஜெயம் ரவி- காஜலுக்கான காதல் காட்சிகளில் எந்த ஈர்ப்பும் புதுமையும் இல்லை. ஆனால், சம்யுக்தா ஹெக்டேவுடனான காட்சிகளில் கொஞ்சம் காதலும் கொஞ்சம் நகைச்சுவையும் எடுபடுகிறது

யோகி பாபுவின் ஒன்லைனர் வசனங்களுக்கு தியேட்டரில் அப்ளாஸ் அள்ளுகிறது. நகைச்சுவை கலந்த குணச்சித்திர கதாபாத்திரத்தில் யோகி பாபு அசால்ட் நடிப்பை அள்ளிக் கொடுத்துள்ளார். கே.எஸ்.ரவிகுமார் ரவுடி எம்எல்ஏவாக தேர்ந்த நடிப்பில் மனதில் நிறைகிறார். ஷாரா, ஆர்.ஜே.ஆனந்தி, ராமர், பிஜிலி ரமேஷ் ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.

ரிச்சர்ட் எம்.நாதன் 1990 காலகட்டத்தையும் 2016 காலகட்டத்தையும் வித்தியாசப்படுத்தியுள்ளார். மழை வெள்ளத்தை சிறப்பாகப் பதிவு செய்துள்ளார். ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையில் ஒலியும் ஒளியும் பாடல் மட்டும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசை பரவாயில்லை ரகம். பிரதீப் ராகவ் எடிட்டிங்கில் நேர்த்தி பளிச்சிடுகிறது.

ஜவ்வு மிட்டாய், ஹவர் சைக்கிள், நிலாச்சோறு, பம்பரம் விளையாடுதல் என்று 90களின் குழந்தைப் பருவ விளையாட்டுகளை இயக்குநர் நினைவூட்டுவது ரசிக்க வைக்கிறது. செல்போன், வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என்று தொழில்நுட்ப வளர்ச்சிக்கு அடிமையான நாம் பக்கத்திலிருக்கும் உறவுகளுக்கான முக்கியத்துவத்தைக் கொடுப்பதில்லை என்ற மெசேஜை அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன். எல்லாம் மாறினாலும் எமோஷன் மாறாது, எதைப் பிரிக்க நினைத்தாலும் மனிதம் ஒன்றுசேர்க்கும், பிரச்சினையின் போது மட்டும் சேராமல் எப்போதும் சேர்ந்தே இருப்போம் என்கிறார். அவரின் கருத்து அவசியமானதுதான். வரவேற்க வேண்டியதும் கூட.

ஆனால், அதற்காக சென்னை மழை வெள்ளத்தைப் பயன்படுத்தியிருப்பது உணர்வுபூர்வமான காட்சியாக இல்லாமல் டெம்ப்ளேட்டாக உள்ளது. யூடியூப் பிரபலம் என்று சொல்வதும் நம்பும்படியாகக் காட்சிப்படுத்தவில்லை. இதைத் தவிர்த்துப் பார்த்தால் பொழுதுபோக்கு அம்சத்துக்காக 'கோமாளி'யை ரசிக்கலாம்.

https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/511574-comali-review-2.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.