Jump to content

Recommended Posts

நாட்டை அபிவிருத்தியை நோக்கிச் செலுத்தக் கூடிய நடைமுறைக்குச் சாத்தியமான செயற்திட்டம் தன்னிடம் உள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அம்பலந்தோட்டை பிரதேசத்தில் அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பு நிகழ்வில் இக்கருத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

தான் ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் ஆற்றிய உரையில் கூறியது போன்றே, நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பக் கூடிய, நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்தக் கூடிய, அபிவிருத்தியைத் துரிதப்படுத்தக் கூடிய செயற்பாட்டுத் திட்டம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

https://www.ibctamil.com/srilanka/80/126225

Link to comment
Share on other sites

கோட்டாபயவுக்கு அமெரிக்கா வைத்தது ஆப்பு? வன்னியிலிருந்து விடுக்கப்படும் எச்சரிக்கை!

அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் புதிய பட்டியலிலும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்வின் பெயர் இடம்பெறவில்லை.

இந்த நாட்டின் ஆட்சிக்கு கொடூரர்கள் மீண்டும் வருவார்களானால் மீண்டும் படையிரின் கைகள் கட்டவிழ்த்துவிடப்படும். வீதிகளில் சாரைசாரையாக படையினர் படையெடுத்து திரிவர்.

சரத் பொன்சேகா விரைவில் எம்முடன் இணைந்து செயற்படுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் - நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களின் நலன்கருதி விசேட பாதுகாப்பு இயந்திரம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொள்ளும் படைவீரர்களது குடும்பங்களுக்கு எவ்வித கொடுப்பனவும் வழங்கப்பட மாட்டாது என இராணுவம் அறிவித்துள்ளது.

மடு திருத்தலத்தின் ஆவணி மாத பெருந்திருவிழா திருப்பலி நேற்று வியாழக்கிழமை (15) காலை 6.15 மணிக்கு கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இது போன்ற செய்திகளோடு இன்றைய காலைநேர செய்திகள் அமைகின்றது.

 

https://www.ibctamil.com/srilanka/80/126178?ref=rightsidebar

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, போல் said:

கோட்டாபயவுக்கு அமெரிக்கா வைத்தது ஆப்பு? வன்னியிலிருந்து விடுக்கப்படும் எச்சரிக்கை!

அமெரிக்க குடியுரிமையை துறந்தவர்களின் புதிய பட்டியலிலும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்வின் பெயர் இடம்பெறவில்லை.

கோத்தபாயா... இலேசில், இவ்வளவு கெதியில்... 
அமெரிக்க குடியுரிமையை, ரத்து செய்து விட்டு வரமுடியாது.
அதற்குரிய  விளக்கங்களை,  கால அவகாசங்கங்களை கொடுத்து பதில் வர நீண்ட காலம் எடுக்கும்.

Link to comment
Share on other sites

2 hours ago, தமிழ் சிறி said:

கோத்தபாயா... இலேசில், இவ்வளவு கெதியில்... 
அமெரிக்க குடியுரிமையை, ரத்து செய்து விட்டு வரமுடியாது.
அதற்குரிய  விளக்கங்களை,  கால அவகாசங்கங்களை கொடுத்து பதில் வர நீண்ட காலம் எடுக்கும்.

அதான் எனக்கும் புரியவில்லை; இரட்டை குடியுரிமை இழக்காமல் எப்படி ஜனாதிபதியாக முடியும்? ஏன் மகிந்த இவரை வேட்பாளர் ஆக்கினார்....????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, Dash said:

அதான் எனக்கும் புரியவில்லை; இரட்டை குடியுரிமை இழக்காமல் எப்படி ஜனாதிபதியாக முடியும்? ஏன் மகிந்த இவரை வேட்பாளர் ஆக்கினார்....????

எதிர் கட்சிகளை.... குழப்பத்தில் வைத்திருக்க,
மகிந்த,  கோத்தாவை.... அறிவித்திருக்கலாம் என நினைக்கின்றேன்.
கடைசி நேரத்தில்... ஜனாதிபதி வேட்பாளார்  மாறலாம் என்றே  கருதுகின்றேன்.

"குழம்பிய குட்டையில்.... மின் பிடிப்பது இலகு." என்று நினைக்கின்றார்கள் போலுள்ளது.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Dash said:

அதான் எனக்கும் புரியவில்லை; இரட்டை குடியுரிமை இழக்காமல் எப்படி ஜனாதிபதியாக முடியும்? ஏன் மகிந்த இவரை வேட்பாளர் ஆக்கினார்....????

 

2 hours ago, தமிழ் சிறி said:

எதிர் கட்சிகளை.... குழப்பத்தில் வைத்திருக்க,
மகிந்த,  கோத்தாவை.... அறிவித்திருக்கலாம் என நினைக்கின்றேன்.
கடைசி நேரத்தில்... ஜனாதிபதி வேட்பாளார்  மாறலாம் என்றே  கருதுகின்றேன்.

"குழம்பிய குட்டையில்.... மின் பிடிப்பது இலகு." என்று நினைக்கின்றார்கள் போலுள்ளது.   

ரணில் தனது கூட்டணியில் யாரை வேட்பாளராகக் களம் இறக்குகின்றாரோ அந்த வேட்பாளர் தான்  கோத்தபாய அவர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பார்.
ஒருவர்  நாட்டின் அரசியலில் பிரதானியாக வரும் பட்ஷத்தில் அவர் தனது இரண்டாவது குடியுரிமையை அதன் பின்னரும் திறக்கலாம் என நினைக்கின்றேன்.
மக்கள் யாரை வேண்டாம் என நிராகரிக்கின்றார்களோ
அவர்கள் தான் இப்போது  வெற்றியடைகின்றனர்.
இதுதான் இன்றைய அரசியல்

Link to comment
Share on other sites

4 hours ago, Dash said:

அதான் எனக்கும் புரியவில்லை; இரட்டை குடியுரிமை இழக்காமல் எப்படி ஜனாதிபதியாக முடியும்? ஏன் மகிந்த இவரை வேட்பாளர் ஆக்கினார்....????

கோத்தா அமெரிக்க குடியுரிமையை துறந்தமைக்கான ஆவணம் மே மாதமே கிடைத்து விட்டதாக தான் முன்பிலிருந்தே கூறப்படுகிறது.

பெயர் பட்டியலில் இவர் பெயரை போடாமல் இரகசியமாக வைத்திருக்கிறார்களோ என தோன்றுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த மட்டில், 

ஒருவர் இரெட்டை குடியுரிமை வைத்திருக்கிறார் என்ற அடிப்படையில் தேர்தல்கள் ஆணையாளர் ஒருவரை தேர்தலில் இருந்து விலக்க முடியாதாம்.

தேர்தலில் வென்ற பின் தேர்வு செல்லாது என அறிவிக்கலாமாம். அதன் பின் அவர்கள் இதை எதிர்த்து நீதிமன்று போகலாமாம்.

இந்த இடைவெளியில் சட்டத்தை மாற்றிவிடலாம் என நினைக்கிறார்களோ தெரியாது.

அல்லது அடுத்த காலாண்டுக்கு பட்டியலில் பெயர் வரவும் கூடும்.

கடைச்சி நேரத்தில் வேட்பாளரை மாற்றுவது பல குழப்பங்களை தரும். எனவே இப்படி ஒரு திட்டம் இருக்க சாத்தியமில்லை. ஆனால் இலங்கை அரசியலில் எதுவும் சாத்தியமே/

Link to comment
Share on other sites

18 hours ago, தமிழ் சிறி said:

எதிர் கட்சிகளை.... குழப்பத்தில் வைத்திருக்க,
மகிந்த,  கோத்தாவை.... அறிவித்திருக்கலாம் என நினைக்கின்றேன்.
கடைசி நேரத்தில்... ஜனாதிபதி வேட்பாளார்  மாறலாம் என்றே  கருதுகின்றேன்.

"குழம்பிய குட்டையில்.... மின் பிடிப்பது இலகு." என்று நினைக்கின்றார்கள் போலுள்ளது.   

நிச்சயமாக இல்லை!

மகிந்த ராஜபக்ச பயங்கரவாதக் கும்பல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற நினைப்பது, அதற்காக நாய்படாதபாடாக அலைந்து திரிவதன் முக்கிய காரணங்கள் இரண்டு.

ஒன்று, தாங்கள் கொள்ளையடித்த சொத்துக்களை தமது நிரந்தர சொத்துக்களாக உறுதி செய்வது.

மற்றது தாங்கள் செய்த படுகொலைக்களுக்கான, சட்டவிரோத செயல்களுக்கான ஆதாரங்களை பூரணமாக அழித்து, தம்மை சர்வதேச சட்டங்களின் பிடிகளிலிருந்து காப்பாற்றிக் கொள்வது.

கடந்த வருடம் செப்டம்பரில் இருந்து, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற மகிந்த ராஜபக்ச பயங்கரவாதக் கும்பல் முயலுவதன் பிரதான நோக்கம் இது  தான்.

இவற்றை செயற்படுத்த தமது குடும்ப உறுப்பினர்களைத் தவிர வேறு எவரையும் நம்பமுடியாத நிலையில் தான், மகிந்த ராஜபக்ச பயங்கரவாதக் கும்பல் வேறு வழிகளின்றி பல்வேறு திருகுதாளங்கைச் செய்து, சிங்கள-பௌத்த இனமதவெறியர்களின் ஆதரவுள்ள  பயங்கரவாதி கோட்டாபயவை வேட்பாளராக அறிவித்துள்ளனர்.

Link to comment
Share on other sites

On 8/17/2019 at 10:07 AM, போல் said:

நாட்டை அபிவிருத்தியை நோக்கிச் செலுத்தக் கூடிய நடைமுறைக்குச் சாத்தியமான செயற்திட்டம் தன்னிடம் உள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அந்த திட்டங்களை எல்லாம் விலாவாரியா மக்களிட்டை சொல்லக் கூடாதோ?
அல்லது மக்களெல்லாம் படிப்பறிவில்லாத ஜீவன்கள் என்டு சொல்லாமல் சொல்றாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Rajesh said:

அந்த திட்டங்களை எல்லாம் விலாவாரியா மக்களிட்டை சொல்லக் கூடாதோ?
அல்லது மக்களெல்லாம் படிப்பறிவில்லாத ஜீவன்கள் என்டு சொல்லாமல் சொல்றாரோ?

திட்டம் 1

நாட்டில் வெள்ளை நிற வான்களுக்கான கேள்வியை அதிகரித்து, அதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவது.

இப்படி பல திட்டம் கைசவம் இருக்கு. 

#சொல்லாமலே

Link to comment
Share on other sites

On 8/17/2019 at 7:40 AM, வாத்தியார் said:

மக்கள் யாரை வேண்டாம் என நிராகரிக்கின்றார்களோ
அவர்கள் தான் இப்போது  வெற்றியடைகின்றனர்.
இதுதான் இன்றைய அரசியல்

தாயக  தமிழ் உறவுகள் இவ்வாறான ஒரு நிலையை கோத்தபாய விடயத்தில் எடுக்க கூடும்,

2006 அமெரிக்க அதிபர் தேர்தலில், ஹிலாரியை விரும்பாதவர்கள் ட்ரம்பிற்கு வாக்களித்தார்கள் என்றும் அதனாலேயே அவர் வென்றார் எனவும் கூறுபவர்கள் உள்ளனர். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.