Jump to content

இலங்கை தேர்தல்களும் சம்பந்தரும் - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

இலங்கை தேர்தல்களும் சம்பந்தரும்

- வ.ஐ.ச.ஜெயபாலன்

இலங்கையில் யார் அடுத்த ஜனாதிபதி என்கிற விவாதங்கள் சூடுபிடித்திருக்கிறது. இந்த சமயத்தில் சம்பந்தர் டெல்கி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. சம்பந்தரை எதிர்க்கிற பலர் தெரிந்தோ தெரியாமலோ தமிழர்களின் வாக்குகளை மகிந்தவுக்கு எதிராக போய்விடாமல் தடுக்கிற பணியையே செய்கின்றனர். அவர்களுள் ஒருவரான முன்னைநாள் வடக்கு முதல் அமைச்சர் விக்னேஸ்வரன் சுதந்திரக் கட்ச்சி தன்னை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு கேட்டுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார். எதிரிகளதும் அதிதீவிர வாதிகளும் சம்பந்தரை விழுத்துவது என்கிற ஒரே நோக்கத்தோடு வேலை செய்கிறார்கள். இந்த தருணத்தில் சம்பந்தரின் டெல்கிப் பயணம் பிரபல விவாதப் பொருளாகியுள்ளது. இன்று இலங்கை தமிழருக்கு அணுக்கக்கூடியதாக இந்தியாவும் அமரிக்க-மேற்க்கு நாடுகள் அணியும் மட்டுமே  உள்ளது. ஏனைய உலக சக்திகள் எதிர் நிலையில் உள்ளன. இதுதான் நிலவும் சர்வதேச அரசியல் சூழல். முதல் எதிரியை தவிர்த்து வேறு நிரந்தரமான எதிரிகள் இல்லை. நிரந்தரமானது தமிழரின் நலன்கள் மட்டுமே.   என்பதையே என்றும் வலியுறுத்தி வருகிறேன். முதல் எதிரி மகிந்த அணிதான். இன்றைய சூழலில் இது தொடர்பான தெளிவு சம்பந்தருக்கு மட்டுமே இருக்கிறது.

இன்று நாம் எதிர் நோக்குவது அரசியல் இராஜதந்திர ம் பற்றிய சிக்கலாகும். வரலாறு முழுவதும் எங்கள் தோல்விகள் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.

 இது. 2ம் உலக யுத்தத்தின்பின் தம்மை அழித்த நாடு என அமரிக்காவை ஜப்பானும் ஜெர்மனியும் புறக்கணிக்காமைக்கு என்ன காரணம்? ஜெர்மனிக்கும் ஜப்பானுக்கும் தெரிவு அமரிக்காவா சோவியத் யூனியனா என்றே அமைந்தது.  தங்கள் முதலாளித்துவ ஜனநாயக அமைப்பை காபாற்றுவது முக்கியமாக இருந்தது. மேலதிகமாக உலக யுத்ததின்போது ஜெர்மனி மற்றும் ஜப்பானின் பிரதேசங்களை சோவியத யூனியன் கைப்பற்றியிருந்தது.  எதிர்விமர்சனங்கள் இருந்தும் தமது அமைப்பைக் காப்பாற்றி யுத்த அழிவுகளில் இருந்து மேம்படுவதற்க்கு இருந்த சாத்தியமான  தெரிவு அமரிக்காவே என்கிற முடிவை மேற்படி நாடுகள் எடுத்தன. இத்தகைய இஅசதந்திர சிக்கல்களை உலக நாடுகள் அடிக்கடி எதிர்கொள்ளவே செய்கின்றன. வரலாற்றில் இத்தகைய இராஜதந்திரச் சிக்கல்கள் ஏற்பட்ட சந்தர்பங்களில் எடுக்கப்பட்ட பிழையான முடிவுகளே பெரும் தோல்விகளுக்கு வழிவகுத்துள்ளது. 

இன்று நாம் மீண்டும் இராஜதந்திர சிக்கல் ஒன்றுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. . நமது அணி இந்தியா அமரிக்கா மேற்குலகமென சம்பந்தர் தெரிவு செய்தமைக்கும் அதுதான் காரணம். அவர் அத்தகைய ஒரு முடிவை எடுத்தமை சர்யானதே. இல்லாவிட்டால் வடகிழக்கு இன்னும் இராணுவ சப்பாத்துக்களின்கீழ் சோமாலியாவாகி இருக்கும்.

இன்று பிரச்சினை சம்பந்தர் இந்திய மேற்க்குலக முகாம்களை தெரிவு செய்தமையல்ல. பிரச்சினை இலங்கை அரசியலில் தொடர்பாக இந்தியா அமரிக்கா நட்ப்பு அணிக்குள்  இடம்பெறும் பனிப்போர்தான். இரு அணிகளையும் ஆதரிக்கும் நாம் இரு அணிகளின் பனிபோருக்குள் அகப்படாமல் தப்பிப்பது எப்படி? இந்திய அமரிக்க அணிகள் எங்களுக்கும் வாய்ப்புள்ள ஒரு பொது முடிவுக்கு  வருவதை உறுதிப்படுத்துவது அவசியமாகும். அந்த முதிற்சி குறைந்த பட்ச்சமாவது சம்பந்தருக்கு உள்ளது என்று நம்புகிறேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, poet said:

நமது அணி இந்தியா அமரிக்கா மேற்குலகமென சம்பந்தர் தெரிவு செய்தமைக்கும் அதுதான் காரணம்

சம்பந்தர் ஐயா அலசி ஆராயந்து ஒன்றும் தெரிவு செய்யவில்லை. தனது மருத்துவ தேவைக்காக இந்தியாவுக்கு செல்வதற்கும், பிள்ளைகள், உறவினர்கள் நண்பர்களை மேற்கு நாடுகளில் காண்பதற்கும் உள்ள சொந்தத் தேவையால் இந்தியாவும், மேற்குநாடுகளும் சொல்வதைச் செய்கின்றார். இந்த நாடுகள் கோத்தாவை ஆதரி என்று சொன்னால் மறுக்காமல் தமிழர்களை கோத்தாவை ஆதரிக்கவும் கேட்பார். ஏற்கனவே இராணுவத் தளபதியாக இருந்து தமிழர்களை அழித்த பொன்சேகாவை ஆதரிக்கக் கேட்டவர்தானே! 

அத்தோடு கிழக்கு மாகாணசபையில் கூடிய உறுப்பினர்கள் இருந்தும் பெருந்தன்மையைக் காட்ட முஸ்லிம் முதலமைச்சருக்கு வழிவிட்டு கிழக்குத் தமிழரை காணிகளை இழக்கவும், அபிவிருத்தியில் பின்தங்கவும் சம்பந்தரின் “ராஜதந்திரம்” நன்றாகவே உதவியது.

Link to comment
Share on other sites

முதல் எதிரியை விழுத்தும் முயற்சியில் ஏனைய எதிரிகளை ஆதரித்தல் என்பது இராச தந்திரத்தின் முதல் பாடம். சில சமயங்களில் முதல் எதிரியை ஏனைய எதிரிகளின் பட்டியலுக்கு இறக்கி விடும் தவறுகள் நடந்துவிடுவதுண்டு.  அது நிகழாமல் பார்க்க வேண்டியது அவசியம். யுத்ததின்போது இயக்கம் பிரேமதாசவை ஆதரித்தது பற்றிய விடயம் பிரேமதாச முதல் எதியா இல்லையா என எதிர்கால அரசியல் மாணவர்களின் விவாதப் பொருளாக இருக்கும். மகிந்தவா பொன்சேகாவா முதல் எதிரி என்ற கேழ்வி குழந்தைகளும் பதில் சொல்லக்கூடிய கேழ்வியல்லவா? மேலும் சர்வதேச சமூகத்துக்கு இணங்கி யுத்தத்தில் நசிந்து சிதைந்திருந்த மக்களை ஒரு அணியாக்கி வாக்களிக்க வைத்ததன்மூலம்  ’தமிழர் அஞ்சி சரணாகதியாகவில்லை ஓரணியாக கட்டுபட்டு நிற்கிறார்கள்’ என்பதை உலகளாவ உணர்த்தியமை முக்கியமாகும். விவாதம் வேண்டாம். புரிந்துகொள்ள முயற்சிப்போம்

Link to comment
Share on other sites

6 hours ago, கிருபன் said:

இந்த நாடுகள் கோத்தாவை ஆதரி என்று சொன்னால் மறுக்காமல் தமிழர்களை கோத்தாவை ஆதரிக்கவும் கேட்பார்.

இதென்னவோ உண்மை தான். 😀

6 hours ago, கிருபன் said:

அத்தோடு கிழக்கு மாகாணசபையில் கூடிய உறுப்பினர்கள் இருந்தும் பெருந்தன்மையைக் காட்ட முஸ்லிம் முதலமைச்சருக்கு வழிவிட்டு கிழக்குத் தமிழரை காணிகளை இழக்கவும், அபிவிருத்தியில் பின்தங்கவும் சம்பந்தரின் “ராஜதந்திரம்” நன்றாகவே உதவியது.

பொயட் அவர்கள் முதலமைச்சர் பதவியை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்ததை சம்பந்தனின் சாணக்கிய அரசியல் என கருதுபவர். 😎

Link to comment
Share on other sites

7 hours ago, poet said:

சம்பந்தரை எதிர்க்கிற பலர் தெரிந்தோ தெரியாமலோ தமிழர்களின் வாக்குகளை மகிந்தவுக்கு எதிராக போய்விடாமல் தடுக்கிற பணியையே செய்கின்றனர். அவர்களுள் ஒருவரான முன்னைநாள் வடக்கு முதல் அமைச்சர் விக்னேஸ்வரன் சுதந்திரக் கட்ச்சி தன்னை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு கேட்டுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார். எதிரிகளதும் அதிதீவிர வாதிகளும் சம்பந்தரை விழுத்துவது என்கிற ஒரே நோக்கத்தோடு வேலை செய்கிறார்கள்.

விக்னேஸ்வரன் சுதந்திரக்கட்சியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக  இதுவரை கூறவில்லை.

இப்படியும் ஒரு செய்தி வந்திருக்கிறது.

தமிழர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதில் எந்தவித நன்மையும் கிடைக்க போவதில்லை என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், எந்த ஒரு தமிழனும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://yarl.com/forum3/topic/230994-எந்த-ஒரு-தமிழனும்-கோட்டாபய-ராஜபக்ஷவுக்கு-வாக்களிக்கக்கூடாது-விக்னேஸ்வரன்-கூறியதாக-வாசுதேவ-தகவல்/ 

Link to comment
Share on other sites

உண்மைதான் Lara. இப்பதிவு எழுதும்போது அவர் தன்னை அழைக்கிறார்கள் என்கிற முதல் அறிக்கையை எவ்வித கருத்துமின்றி வெளியிட்டிருந்தார். பின்னர் நீங்கள் கூறும் அறிக்கை வந்தது. 

Link to comment
Share on other sites

On 8/17/2019 at 12:56 AM, poet said:

முதல் எதிரியை தவிர்த்து வேறு நிரந்தரமான எதிரிகள் இல்லை. நிரந்தரமானது தமிழரின் நலன்கள் மட்டுமே.   என்பதையே என்றும் வலியுறுத்தி வருகிறேன். முதல் எதிரி மகிந்த அணிதான். இன்றைய சூழலில் இது தொடர்பான தெளிவு சம்பந்தருக்கு மட்டுமே இருக்கிறது.

" நிரந்தரமானது தமிழரின் நலன்கள் மட்டுமே " - என்பதை பல தமிழ் கட்சிகள் வெளிப்படையாக கூறும் ஒரு கருத்து. அதைக்கூறித்தான் ஆகவேண்டும். 

அவ்வாறு கூறும் கட்சிகளை சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பு அரவணைத்து தமது குடைக்குள் கொண்டுவர  தவறி உள்ளது.  அதனால், ஒட்டுமொத்த தமிழர் தரப்பும் பலவீனமாக உள்ளது.

முதல் எதிரி மகிந்த அணிதான் என்றும் அது தொடர்பான தெளிவு சம்பந்தருக்கு மட்டுமே இருக்கிறது என்றால், நாளை சம்பந்தரையும் மீறி மகிந்த அணி ஆட்சியை பிடித்துவிட்டால் சம்பந்தரால் அதற்கு என்ன மாற்று வழி? என்பதையும் அவர் தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு என்றாலும் தெளிவு படுத்தி இருக்க வேண்டும்.  

Link to comment
Share on other sites

31 minutes ago, ampanai said:

" நிரந்தரமானது தமிழரின் நலன்கள் மட்டுமே " - 

அவ்வாறு கூறும் கட்சிகளை சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பு அரவணைத்து தமது குடைக்குள் கொண்டுவர  தவறி உள்ளது.  அதனால், ஒட்டுமொத்த தமிழர் தரப்பும் பலவீனமாக உள்ளது.

 

நீங்கள் கூறுவதுபோல சம்பந்தர் பெரிய குடையை விரிக்க வேண்டும் என்பது முற்றிலும் உண்மை. சம்பந்தரின் இயலாமை அமைப்பு சார்ந்ததாகும். பெரிய குடை இல்லாவிட்டால் கிழக்கை நிச்சயம் இழந்துவிடுவோம்.

இலங்கை இந்தியா மற்றும் இயக்கம்  தொடர்பான நமது வரலாற்றின் இருண்ட பகுதிபற்றி நான்  சம்பந்தப்பட்ட அல்லது நான் கேழ்விபட்ட  சில விடயங்களை விரைவில் சொல்லியே ஆகவேண்டும் என்பதை உணர்கிறேன். 

Link to comment
Share on other sites

On 8/17/2019 at 5:47 PM, Lara said:

இதென்னவோ உண்மை தான். 😀

பொயட் அவர்கள் முதலமைச்சர் பதவியை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்ததை சம்பந்தனின் சாணக்கிய அரசியல் என கருதுபவர். 😎

இது பல தளங்களை கொண்ட விடயம். சம்பந்தர் முன் கூட்டமைப்பு முதல்வரா முஸ்லிம் முதல்வரா என்கிற கேழ்வி இருக்கவில்லை. அவர் முன்னம் இருந்த கேழ்வி முஸ்லிம் முதல் அமைச்சரா மகிந்த அணி முதல் அமைச்சரா என்பதுதான். இது இலகுவான கேழ்வியல்ல. 

Link to comment
Share on other sites

6 minutes ago, poet said:

நீங்கள் கூறுவதுபோல சம்பந்தர் பெரிய குடையை விரிக்க வேண்டும் என்பது முற்றிலும் உண்மை. சம்பந்தரின் இயலாமை அமைப்பு சார்ந்ததாகும். பெரிய குடை இல்லாவிட்டால் கிழக்கை நிச்சயம் இழந்துவிடுவோம்.

தலைமை என்பது பல குணாதிசயங்களை உள்ளடக்கியது.  ஆளுமை அதில் முக்கியம் பெறுகின்றது. மேலும், நேரம் : எந்த நேரத்தில் எதை செய்யவேண்டும் மற்றும் எதை செய்யக்கூடாது என்பது  அதைவிட முக்கியமாகின்றது. அடுத்து, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்திடும் தன்மை, தன்னை சுற்றி இருக்கும் ஆதரவாளர்கள் பற்றிய சரியான கணிப்பு என்பனவற்றையும் கூறலாம். 

சம்பந்தர் ஐயாவிடம் நிறைய அனுபவம் உள்ளது.  

ஆனால் மக்கள் எதிர்பார்ப்புக்கள் பல நிறைவேறாமலும் அநாதைகள் போன்ற உணர்வும் உள்ளது. தன்னால் முடியாவிட்டால், முடியாததை செய்யக்கூடிய அடுத்த தலைமுறை தலைவர்களை இனம்கண்டு  அவர்களுடன் சில காலம் பயணிக்க வேண்டும். அப்பொழுது தான் அரசியல் தலைமை பூரணமடையும்.  

Link to comment
Share on other sites

முப்பது வருட போரில் இழந்தவற்றை ஒரு இனக்கொலையின் பின்னர் எதிரியிடமிருந்து இராஜதந்திர அழுத்தங்களால் மட்டும் பெறுவது என்பது இலகுவான கலையல்ல. இனக்கொலையின் கையறு நிலையில் ஆரம்பித்த எங்களிடம் அதற்கான வல்லவர்களோ வளங்களோ குறைவு. போராட்டத்தால் நிமிர்ந்த புலம்பெயர் சமூகத்தின் உண்மையான பங்களிப்பு குறைவு. புலம்பெய்ர்ந்த நாடுகளில் படுபாவிகளான கொள்ளையர் குடும்பங்களால் அமுக்கபட்ட குல நாசமென நம்பப்படுகிற  தமிழர் இரத்தமும் சாபங்களும் தோய்ந்த பணத்தை மீட்டு போரில் ஈடுபட்ட பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு ஏழைக் கிரமங்களுக்கு திருப்பிவிடுவதில் புலம்பெயர்ந்த தமிழர்கள் அமைப்பு ரீதியாக அக்கறை  காட்டவில்லை. அமைப்புக்குள்ளும் சம்பந்தர்போல செயல்படுகிறவர்களை அதிகம் காணமுடியவில்லை. இவற்றையெல்லாம் மறந்துவிட்டு  சம்பந்தரை மதிப்பீடு செய்ய முடியுமா?  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.