Jump to content

இலங்கை தேர்தல்களும் சம்பந்தரும் - வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

இலங்கை தேர்தல்களும் சம்பந்தரும்

- வ.ஐ.ச.ஜெயபாலன்

இலங்கையில் யார் அடுத்த ஜனாதிபதி என்கிற விவாதங்கள் சூடுபிடித்திருக்கிறது. இந்த சமயத்தில் சம்பந்தர் டெல்கி வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. சம்பந்தரை எதிர்க்கிற பலர் தெரிந்தோ தெரியாமலோ தமிழர்களின் வாக்குகளை மகிந்தவுக்கு எதிராக போய்விடாமல் தடுக்கிற பணியையே செய்கின்றனர். அவர்களுள் ஒருவரான முன்னைநாள் வடக்கு முதல் அமைச்சர் விக்னேஸ்வரன் சுதந்திரக் கட்ச்சி தன்னை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு கேட்டுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார். எதிரிகளதும் அதிதீவிர வாதிகளும் சம்பந்தரை விழுத்துவது என்கிற ஒரே நோக்கத்தோடு வேலை செய்கிறார்கள். இந்த தருணத்தில் சம்பந்தரின் டெல்கிப் பயணம் பிரபல விவாதப் பொருளாகியுள்ளது. இன்று இலங்கை தமிழருக்கு அணுக்கக்கூடியதாக இந்தியாவும் அமரிக்க-மேற்க்கு நாடுகள் அணியும் மட்டுமே  உள்ளது. ஏனைய உலக சக்திகள் எதிர் நிலையில் உள்ளன. இதுதான் நிலவும் சர்வதேச அரசியல் சூழல். முதல் எதிரியை தவிர்த்து வேறு நிரந்தரமான எதிரிகள் இல்லை. நிரந்தரமானது தமிழரின் நலன்கள் மட்டுமே.   என்பதையே என்றும் வலியுறுத்தி வருகிறேன். முதல் எதிரி மகிந்த அணிதான். இன்றைய சூழலில் இது தொடர்பான தெளிவு சம்பந்தருக்கு மட்டுமே இருக்கிறது.

இன்று நாம் எதிர் நோக்குவது அரசியல் இராஜதந்திர ம் பற்றிய சிக்கலாகும். வரலாறு முழுவதும் எங்கள் தோல்விகள் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது.

 இது. 2ம் உலக யுத்தத்தின்பின் தம்மை அழித்த நாடு என அமரிக்காவை ஜப்பானும் ஜெர்மனியும் புறக்கணிக்காமைக்கு என்ன காரணம்? ஜெர்மனிக்கும் ஜப்பானுக்கும் தெரிவு அமரிக்காவா சோவியத் யூனியனா என்றே அமைந்தது.  தங்கள் முதலாளித்துவ ஜனநாயக அமைப்பை காபாற்றுவது முக்கியமாக இருந்தது. மேலதிகமாக உலக யுத்ததின்போது ஜெர்மனி மற்றும் ஜப்பானின் பிரதேசங்களை சோவியத யூனியன் கைப்பற்றியிருந்தது.  எதிர்விமர்சனங்கள் இருந்தும் தமது அமைப்பைக் காப்பாற்றி யுத்த அழிவுகளில் இருந்து மேம்படுவதற்க்கு இருந்த சாத்தியமான  தெரிவு அமரிக்காவே என்கிற முடிவை மேற்படி நாடுகள் எடுத்தன. இத்தகைய இஅசதந்திர சிக்கல்களை உலக நாடுகள் அடிக்கடி எதிர்கொள்ளவே செய்கின்றன. வரலாற்றில் இத்தகைய இராஜதந்திரச் சிக்கல்கள் ஏற்பட்ட சந்தர்பங்களில் எடுக்கப்பட்ட பிழையான முடிவுகளே பெரும் தோல்விகளுக்கு வழிவகுத்துள்ளது. 

இன்று நாம் மீண்டும் இராஜதந்திர சிக்கல் ஒன்றுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது. . நமது அணி இந்தியா அமரிக்கா மேற்குலகமென சம்பந்தர் தெரிவு செய்தமைக்கும் அதுதான் காரணம். அவர் அத்தகைய ஒரு முடிவை எடுத்தமை சர்யானதே. இல்லாவிட்டால் வடகிழக்கு இன்னும் இராணுவ சப்பாத்துக்களின்கீழ் சோமாலியாவாகி இருக்கும்.

இன்று பிரச்சினை சம்பந்தர் இந்திய மேற்க்குலக முகாம்களை தெரிவு செய்தமையல்ல. பிரச்சினை இலங்கை அரசியலில் தொடர்பாக இந்தியா அமரிக்கா நட்ப்பு அணிக்குள்  இடம்பெறும் பனிப்போர்தான். இரு அணிகளையும் ஆதரிக்கும் நாம் இரு அணிகளின் பனிபோருக்குள் அகப்படாமல் தப்பிப்பது எப்படி? இந்திய அமரிக்க அணிகள் எங்களுக்கும் வாய்ப்புள்ள ஒரு பொது முடிவுக்கு  வருவதை உறுதிப்படுத்துவது அவசியமாகும். அந்த முதிற்சி குறைந்த பட்ச்சமாவது சம்பந்தருக்கு உள்ளது என்று நம்புகிறேன்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, poet said:

நமது அணி இந்தியா அமரிக்கா மேற்குலகமென சம்பந்தர் தெரிவு செய்தமைக்கும் அதுதான் காரணம்

சம்பந்தர் ஐயா அலசி ஆராயந்து ஒன்றும் தெரிவு செய்யவில்லை. தனது மருத்துவ தேவைக்காக இந்தியாவுக்கு செல்வதற்கும், பிள்ளைகள், உறவினர்கள் நண்பர்களை மேற்கு நாடுகளில் காண்பதற்கும் உள்ள சொந்தத் தேவையால் இந்தியாவும், மேற்குநாடுகளும் சொல்வதைச் செய்கின்றார். இந்த நாடுகள் கோத்தாவை ஆதரி என்று சொன்னால் மறுக்காமல் தமிழர்களை கோத்தாவை ஆதரிக்கவும் கேட்பார். ஏற்கனவே இராணுவத் தளபதியாக இருந்து தமிழர்களை அழித்த பொன்சேகாவை ஆதரிக்கக் கேட்டவர்தானே! 

அத்தோடு கிழக்கு மாகாணசபையில் கூடிய உறுப்பினர்கள் இருந்தும் பெருந்தன்மையைக் காட்ட முஸ்லிம் முதலமைச்சருக்கு வழிவிட்டு கிழக்குத் தமிழரை காணிகளை இழக்கவும், அபிவிருத்தியில் பின்தங்கவும் சம்பந்தரின் “ராஜதந்திரம்” நன்றாகவே உதவியது.

Link to comment
Share on other sites

முதல் எதிரியை விழுத்தும் முயற்சியில் ஏனைய எதிரிகளை ஆதரித்தல் என்பது இராச தந்திரத்தின் முதல் பாடம். சில சமயங்களில் முதல் எதிரியை ஏனைய எதிரிகளின் பட்டியலுக்கு இறக்கி விடும் தவறுகள் நடந்துவிடுவதுண்டு.  அது நிகழாமல் பார்க்க வேண்டியது அவசியம். யுத்ததின்போது இயக்கம் பிரேமதாசவை ஆதரித்தது பற்றிய விடயம் பிரேமதாச முதல் எதியா இல்லையா என எதிர்கால அரசியல் மாணவர்களின் விவாதப் பொருளாக இருக்கும். மகிந்தவா பொன்சேகாவா முதல் எதிரி என்ற கேழ்வி குழந்தைகளும் பதில் சொல்லக்கூடிய கேழ்வியல்லவா? மேலும் சர்வதேச சமூகத்துக்கு இணங்கி யுத்தத்தில் நசிந்து சிதைந்திருந்த மக்களை ஒரு அணியாக்கி வாக்களிக்க வைத்ததன்மூலம்  ’தமிழர் அஞ்சி சரணாகதியாகவில்லை ஓரணியாக கட்டுபட்டு நிற்கிறார்கள்’ என்பதை உலகளாவ உணர்த்தியமை முக்கியமாகும். விவாதம் வேண்டாம். புரிந்துகொள்ள முயற்சிப்போம்

Link to comment
Share on other sites

6 hours ago, கிருபன் said:

இந்த நாடுகள் கோத்தாவை ஆதரி என்று சொன்னால் மறுக்காமல் தமிழர்களை கோத்தாவை ஆதரிக்கவும் கேட்பார்.

இதென்னவோ உண்மை தான். 😀

6 hours ago, கிருபன் said:

அத்தோடு கிழக்கு மாகாணசபையில் கூடிய உறுப்பினர்கள் இருந்தும் பெருந்தன்மையைக் காட்ட முஸ்லிம் முதலமைச்சருக்கு வழிவிட்டு கிழக்குத் தமிழரை காணிகளை இழக்கவும், அபிவிருத்தியில் பின்தங்கவும் சம்பந்தரின் “ராஜதந்திரம்” நன்றாகவே உதவியது.

பொயட் அவர்கள் முதலமைச்சர் பதவியை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்ததை சம்பந்தனின் சாணக்கிய அரசியல் என கருதுபவர். 😎

Link to comment
Share on other sites

7 hours ago, poet said:

சம்பந்தரை எதிர்க்கிற பலர் தெரிந்தோ தெரியாமலோ தமிழர்களின் வாக்குகளை மகிந்தவுக்கு எதிராக போய்விடாமல் தடுக்கிற பணியையே செய்கின்றனர். அவர்களுள் ஒருவரான முன்னைநாள் வடக்கு முதல் அமைச்சர் விக்னேஸ்வரன் சுதந்திரக் கட்ச்சி தன்னை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு கேட்டுள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார். எதிரிகளதும் அதிதீவிர வாதிகளும் சம்பந்தரை விழுத்துவது என்கிற ஒரே நோக்கத்தோடு வேலை செய்கிறார்கள்.

விக்னேஸ்வரன் சுதந்திரக்கட்சியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக  இதுவரை கூறவில்லை.

இப்படியும் ஒரு செய்தி வந்திருக்கிறது.

தமிழர் ஒருவர் தேர்தலில் போட்டியிடுவதில் எந்தவித நன்மையும் கிடைக்க போவதில்லை என விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அதேபோல், எந்த ஒரு தமிழனும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்கக்கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://yarl.com/forum3/topic/230994-எந்த-ஒரு-தமிழனும்-கோட்டாபய-ராஜபக்ஷவுக்கு-வாக்களிக்கக்கூடாது-விக்னேஸ்வரன்-கூறியதாக-வாசுதேவ-தகவல்/ 

Link to comment
Share on other sites

உண்மைதான் Lara. இப்பதிவு எழுதும்போது அவர் தன்னை அழைக்கிறார்கள் என்கிற முதல் அறிக்கையை எவ்வித கருத்துமின்றி வெளியிட்டிருந்தார். பின்னர் நீங்கள் கூறும் அறிக்கை வந்தது. 

Link to comment
Share on other sites

On 8/17/2019 at 12:56 AM, poet said:

முதல் எதிரியை தவிர்த்து வேறு நிரந்தரமான எதிரிகள் இல்லை. நிரந்தரமானது தமிழரின் நலன்கள் மட்டுமே.   என்பதையே என்றும் வலியுறுத்தி வருகிறேன். முதல் எதிரி மகிந்த அணிதான். இன்றைய சூழலில் இது தொடர்பான தெளிவு சம்பந்தருக்கு மட்டுமே இருக்கிறது.

" நிரந்தரமானது தமிழரின் நலன்கள் மட்டுமே " - என்பதை பல தமிழ் கட்சிகள் வெளிப்படையாக கூறும் ஒரு கருத்து. அதைக்கூறித்தான் ஆகவேண்டும். 

அவ்வாறு கூறும் கட்சிகளை சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பு அரவணைத்து தமது குடைக்குள் கொண்டுவர  தவறி உள்ளது.  அதனால், ஒட்டுமொத்த தமிழர் தரப்பும் பலவீனமாக உள்ளது.

முதல் எதிரி மகிந்த அணிதான் என்றும் அது தொடர்பான தெளிவு சம்பந்தருக்கு மட்டுமே இருக்கிறது என்றால், நாளை சம்பந்தரையும் மீறி மகிந்த அணி ஆட்சியை பிடித்துவிட்டால் சம்பந்தரால் அதற்கு என்ன மாற்று வழி? என்பதையும் அவர் தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு என்றாலும் தெளிவு படுத்தி இருக்க வேண்டும்.  

Link to comment
Share on other sites

31 minutes ago, ampanai said:

" நிரந்தரமானது தமிழரின் நலன்கள் மட்டுமே " - 

அவ்வாறு கூறும் கட்சிகளை சம்பந்தர் தலைமையிலான கூட்டமைப்பு அரவணைத்து தமது குடைக்குள் கொண்டுவர  தவறி உள்ளது.  அதனால், ஒட்டுமொத்த தமிழர் தரப்பும் பலவீனமாக உள்ளது.

 

நீங்கள் கூறுவதுபோல சம்பந்தர் பெரிய குடையை விரிக்க வேண்டும் என்பது முற்றிலும் உண்மை. சம்பந்தரின் இயலாமை அமைப்பு சார்ந்ததாகும். பெரிய குடை இல்லாவிட்டால் கிழக்கை நிச்சயம் இழந்துவிடுவோம்.

இலங்கை இந்தியா மற்றும் இயக்கம்  தொடர்பான நமது வரலாற்றின் இருண்ட பகுதிபற்றி நான்  சம்பந்தப்பட்ட அல்லது நான் கேழ்விபட்ட  சில விடயங்களை விரைவில் சொல்லியே ஆகவேண்டும் என்பதை உணர்கிறேன். 

Link to comment
Share on other sites

On 8/17/2019 at 5:47 PM, Lara said:

இதென்னவோ உண்மை தான். 😀

பொயட் அவர்கள் முதலமைச்சர் பதவியை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்ததை சம்பந்தனின் சாணக்கிய அரசியல் என கருதுபவர். 😎

இது பல தளங்களை கொண்ட விடயம். சம்பந்தர் முன் கூட்டமைப்பு முதல்வரா முஸ்லிம் முதல்வரா என்கிற கேழ்வி இருக்கவில்லை. அவர் முன்னம் இருந்த கேழ்வி முஸ்லிம் முதல் அமைச்சரா மகிந்த அணி முதல் அமைச்சரா என்பதுதான். இது இலகுவான கேழ்வியல்ல. 

Link to comment
Share on other sites

6 minutes ago, poet said:

நீங்கள் கூறுவதுபோல சம்பந்தர் பெரிய குடையை விரிக்க வேண்டும் என்பது முற்றிலும் உண்மை. சம்பந்தரின் இயலாமை அமைப்பு சார்ந்ததாகும். பெரிய குடை இல்லாவிட்டால் கிழக்கை நிச்சயம் இழந்துவிடுவோம்.

தலைமை என்பது பல குணாதிசயங்களை உள்ளடக்கியது.  ஆளுமை அதில் முக்கியம் பெறுகின்றது. மேலும், நேரம் : எந்த நேரத்தில் எதை செய்யவேண்டும் மற்றும் எதை செய்யக்கூடாது என்பது  அதைவிட முக்கியமாகின்றது. அடுத்து, சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்திடும் தன்மை, தன்னை சுற்றி இருக்கும் ஆதரவாளர்கள் பற்றிய சரியான கணிப்பு என்பனவற்றையும் கூறலாம். 

சம்பந்தர் ஐயாவிடம் நிறைய அனுபவம் உள்ளது.  

ஆனால் மக்கள் எதிர்பார்ப்புக்கள் பல நிறைவேறாமலும் அநாதைகள் போன்ற உணர்வும் உள்ளது. தன்னால் முடியாவிட்டால், முடியாததை செய்யக்கூடிய அடுத்த தலைமுறை தலைவர்களை இனம்கண்டு  அவர்களுடன் சில காலம் பயணிக்க வேண்டும். அப்பொழுது தான் அரசியல் தலைமை பூரணமடையும்.  

Link to comment
Share on other sites

முப்பது வருட போரில் இழந்தவற்றை ஒரு இனக்கொலையின் பின்னர் எதிரியிடமிருந்து இராஜதந்திர அழுத்தங்களால் மட்டும் பெறுவது என்பது இலகுவான கலையல்ல. இனக்கொலையின் கையறு நிலையில் ஆரம்பித்த எங்களிடம் அதற்கான வல்லவர்களோ வளங்களோ குறைவு. போராட்டத்தால் நிமிர்ந்த புலம்பெயர் சமூகத்தின் உண்மையான பங்களிப்பு குறைவு. புலம்பெய்ர்ந்த நாடுகளில் படுபாவிகளான கொள்ளையர் குடும்பங்களால் அமுக்கபட்ட குல நாசமென நம்பப்படுகிற  தமிழர் இரத்தமும் சாபங்களும் தோய்ந்த பணத்தை மீட்டு போரில் ஈடுபட்ட பாதிக்கபட்ட குடும்பங்களுக்கு ஏழைக் கிரமங்களுக்கு திருப்பிவிடுவதில் புலம்பெயர்ந்த தமிழர்கள் அமைப்பு ரீதியாக அக்கறை  காட்டவில்லை. அமைப்புக்குள்ளும் சம்பந்தர்போல செயல்படுகிறவர்களை அதிகம் காணமுடியவில்லை. இவற்றையெல்லாம் மறந்துவிட்டு  சம்பந்தரை மதிப்பீடு செய்ய முடியுமா?  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.