Jump to content

நெடுந்தீவை தீவை சுற்றி வரலாம்…


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நெடுந்தீவை தீவை சுற்றி வரலாம்…

Editorial / 2019 ஓகஸ்ட் 14 புதன்கிழமை, பி.ப. 03:16

image_2a379636bc.jpgயாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சோழர் வம்சம், போர்த்துகீச, ஒல்லாந்த, பிரித்தானியர் காலனித்துவ காலத்திலிருந்து சிறந்த வரலாற்றைக் கொண்ட ஒரு அற்புதமான தீவு இந்த நெடுந்தீவாகும். 
இந்த இடம் ஏராளமான தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரியமாகும். டெல்ஃப்ட் தீவு என்று பிரபலமாக அறியப்படும் நெடுந்தீவானது, நீர், காற்று மூலம் அணுகக்கூடியது, மேலும் சுற்றுலாப் பயணிகள், கிராமவாசிகளுக்கு படகு மூலம் பயணம் செய்வது எளிதானது.
image_cac1e4fcda.jpg

கவர்ச்சிகரமான பயணம் யாழ்ப்பாண தீபகற்பத்துக்கு பாலமாக அமைந்துள்ள புங்குடுதிவு தீவில் உள்ள கே.கே.டி ஜெட்டியின் குரிகாடு டுவானில் இருந்து தொடங்குகிறது. டெல்ஃப்டுக்குச் செல்லப் பயன்படுத்தப்படும் படகு சேவை பொதுவாக பண்டைய நாகதீபா கோயிலுக்குச் செல்லும் யாத்திரிகர்களால் பயன்படுத்தப்படுகிறது.
image_b6f0abd9f6.jpgயாழ்ப்பாண தீபகற்பம், டெல்ஃப்ட் தீவுக்கு அருகாமையில் அமைந்துள்ள பல தீவுகளைக் காணலாம். அத்துடன் ஒரு டைவிங் இடமாக உருவாக்க ஒரு சிறந்த இடமாகவும் இது விளங்குகிறது.  

டெல்ஃப்ட் தீவுக்குச் செல்வதற்கு முன் மதிய உணவைக் கட்டிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் உணவருந்த அங்கு இடங்கள் இல்லை என்பதாகும். சிற்றுண்டி அல்லது குளிர்பானங்களை வாங்க ஒரு சில சில்லறை கடைகள் மட்டுமே உள்ளன.

image_4873f03033.jpg
தீவு முழுவதும் பவளம், சுண்ணாம்புக் கல்லை அடிப்படையாகக் கொண்டது. தீவு வளர்ச்சியடையாதது, ஆனால் அதன் மக்கள் தொகை சுமார் 4,500 பேர் வரையுள்ளனர்.

தொடர்ந்து செல்லும்போது அது வெறும் நிலம் மட்டுமேயாகும். இது தீவின் குடிமக்களால் பயன்படுத்தடுவதில்லை. உள்நோக்கி செல்ல, முதலில் பழைய போர்த்துகீச கோட்டை டெல்ஃப்ட்டுக்கு காணப்படும்.

image_84e619cd22.jpg

காலி கோட்டை அல்லது யாழ்ப்பாணக் கோட்டையுடன் ஒப்பிடும்போது இந்த கோட்டை அளவு சிறியது, பவளம், சுண்ணாம்புக் கற்களால் ஆனது. பழைய கப்பல்களுக்கு விரிகுடா வழங்கிய சாதகமான மூரிங் வசதிகள், எளிதில் தரையிறங்கும் வசதிகள் காரணமாக இந்த கோட்டை இங்கு அமைந்திருக்கலாம்.

பாதுகாக்கப்பட்ட தூண்கள், சுவர்கள் கோட்டை இரண்டு மாடி கட்டடம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. தரை தளத்தில் ஜன்னல்கள் இல்லை. மேலும் இது துப்பாக்கியை சேமிக்கவும் கைதிகளை வைத்திருக்கவும் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இரண்டாவது மாடி ஒளி நிறைந்நததாக பெரிய அறைகளுடன் காற்றோட்டத்துக்கான ஜன்னல்களால் கட்டப்பட்டும் காணப்படுகின்றது.

image_3d6913bc54.jpg

இலங்கையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடங்கள் பல காணப்பட்ட போதும், யாழ்ப்பாணத்தில் அமையப்பெற்றுள்ள இந்த நெடுந்தீவும் அந்தவகையில் பிரசித்தி பெற்றதாகும்.

image_c7259dea54.jpg

http://www.tamilmirror.lk/சுற்றுலா/நெடுந்தீவை-தீவை-சுற்றி-வரலாம்/100-236721

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.