Jump to content

காங்கேசன்துறை தேர்தல் தொகுதி குறித்து அரசாங்கத்தின் தீர்மானத்தை தொடருமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கோர முடியும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காங்கேசன்துறை தேர்தல் தொகுதி குறித்து அரசாங்கத்தின் தீர்மானத்தை தொடருமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம் கோர முடியும்

August 17, 2019

ranil-1.jpg?resize=671%2C363

யாழ்ப்­பா­ணம், காங்­கே­சன்­து­றைத் தேர்­தல் தொகு­தி­யில், குறிப்­பிட்ட தொகை வாக்­கா­ளர்­க­ளின் பெயர்ப்­பட்­டி­யல்­களை நீக்­கா­த­வாறு ஏற்­க­னவே உள்ள அரச தீர்­மா­னத்­தைத் தொட­ரு­மாறு தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வி­டம் வேண்­டு­கோள் முன்­வைக்க முடி­யும் என பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார்.

யாழ்ப்­பாண மாவட்­டத்­தின் அபி­வி­ருத்தி தொடர்­பான கலந்­து­ரை­யா­டல் மாவட்­டச் செய­ல­கத்­தில் நேற்று நடை­பெற்­றது. அதில், காங்­கே­சன்­து­றைத் தேர்­தல் தொகு­தி­யின் 21 கிராம அலு­வ­லர் பிரிவு நிலம் இது­வரை விடு­விக்­கப்­ப­டாத விட­யத்தை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் எடுத்­துக்­கூ­றி­னார்.

யாழ்ப்­பா­ணத் தேர்­தல் மாவட்­டத்­தின் காங்­கே­சன்­து­றைத் தேர்­தல் தொகு­தி­யில் 14 கிராம அலு­வ­லர்­கள் பிரி­வு­கள் முழு­மை­யா­க­வும் 7 கிராம அலு­வ­லர் பிரி­வு­கள் பகு­தி­ய­ள­வி­லு­மாக மொத்­தம் 21 கிராம அலு­வ­லர் பிரி­வு­கள் கொண்ட நிலம் இது­வரை விடு­விக்­கப்­ப­ட­வில்லை. விடு­விக்­கப்­பட்ட பகு­தி­க­ளில் எந்­தத் தேவை­யும் பூர்த்தி செய்­யப்­ப­டா­ம­லுள்­ளன.

அவ்­வா­றி­ருக்­கை­யில் அந்­தப் பகுதி மக்­கள் சொந்த இடம் திரும்­பு­வ­தற்­குத் தயங்­கு­கின்­ற­னர். இந்த நிலை­யில் தற்­போ­துள்ள வாக்­கா­ளர் பெயர்ப் பட்­டி­ய­லி­லி­ருந்து அத்­த­கை­ய­வர்­க­ளின் பெயர்­களை நீக்க முற்­ப­டு­வது அந்­தப் பகுதி மக்­க­ளின் அடை­யா­ளத்தை பாதிக்­கும் செய­லாக அமை­யும்.

அந்­தப் பகு­தி­யில் மீள்­கு­டி­யேற்­றம் நிறை­வு­பெ­றும் வரை­யில் காங்­கே­சன்­து­றைத் தேர்­தல் தொகு­தி­யின் வாக்­கா­ளர் பட்­டி­ய­லி­லி­ருந்து மக்­க­ளின் பெயர்­களை நீக்­கக் கூடாது – என்று சுமந்­தி­ரன் கோரிக்கை முன்­வைத்­தார்.

இதற்­குப் பதி­ல­ளித்து உரை­யாற்­றிய பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, காங்­கே­சன்­து­றைத் தேர்­தல் தொகுதி தொடர்­பில் ஏற்­க­னவே உள்ள அரச தீர்­மா­னத்தை தொட­ரு­மாறு தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வி­டம் வேண்­டு­கோளை முன் வைக்க முடி­யும். இத­னால் குறித்த விட­யத்தை உட­ன­டி­யா­கத் தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் கவ­னத்­துக்­குக் கொண்டு செல்­லுங்­கள். அதற்கு எமது ஒத்­து­ழைப்­புக் கிட்­டும் – என்று தெரி­வித்­தார்.

அந்­தத் தொகு­தி­யி­லுள்ள பெயர்ப்­பட்­டி­ய­லி­லி­ருந்து அங்கு குடி­யி­ருக்­கா­த­வர்­க­ளின் பெயர்­களை நீக்­கு­வ­தாக இருந்­தால் நாடா­ளு­மன்­றுக்­குத் தெரிவு செய்­யப்­ப­டும் தமிழ் உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்­கை­யில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­த­லாம் என்று தெரி­விக்­கப்­பட்­டு­ வ­ரு­கின்­றது.  #யாழ்ப்­பா­ணம் #காங்­கே­சன்­து­றை #தேர்­தல் #ரணில்

-மயூரப்பிரியன்

 

http://globaltamilnews.net/2019/129038/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.