Jump to content

இலங்கையின் புதிய இராணுவதளபதி சவேந்திரசில்வா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் புதிய இராணுவதளபதி சவேந்திரசில்வா?

யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகியுள்ள இராணுவ அதிகாரியும் முப்படைகளின் பிரதானியுமான மேஜர் ஜெனரல்  சவேந்திர டி சில்வா இலங்கையின் இராணுவதளபதியாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகிள்ளன.

இலங்கையின் தற்போதைய இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க நாளையுடன் ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே புதிய இராணுவதளபதியாக சவேந்திர டி சில்வா நியமிக்கப்படலாம் என  தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போதைய இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்கவிற்கு பதவி நீடிப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளபோதிலும் அதற்கான சாத்தியம் இல்லை என பாதுகாப்பு மற்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை சவேந்திர டி சில்வா  மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தினர் கடும் எதிர்ப்பை வெளியிடும் நிலை காணப்படுகின்றது.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனசவேந்திர டி சில்வா  இலங்கையின் இராணுவதளபதியாக நியமித்தால் ஐக்கியநாடுகள் அமைதிப்படையுடனான இலங்கையின் தொடர்புகள் முற்றாக தடைபடலாம்.

shaven.jpg

யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளான  அரசாங்க படையினருடன் ஐக்கிய நாடுகள் தொடர்புகளை பேணுவது தடை செய்யப்பட்டுள்ளதால் இந்த நிலை உருவாகலாம்.

இதேபோன்று இலங்கையுடனான அமெரிக்காவி;ன் பாதுகாப்பு ஒத்துழைப்புகளும் பாதிக்கப்படலாம்

சவேந்திரசவேந்திர டி  சில்வாவிற்கு கடந்த காலங்களில் மைத்திரிபால சிறிசேன பதவி உயர்வு வழங்கியவேளை சர்வதேச அளவில் இதற்கு கடும் எதிர்ப்பு உருவானது குறிப்பிடத்தக்கது.

 

https://www.virakesari.lk/article/62826

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE.jpg

புதிய இராணுவத் தளபதியாகும்... யுத்தக் குற்றவாளி?

புதிய இராணுவத் தளபதியாக யுத்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க நாளையுடன்(ஞாயிற்றுக்கிழமை) ஓய்வு பெறவுள்ளார்.

இவ்வாறு அவர் ஓய்வு பெற்றால், இராணுவத்தைச் சேர்ந்த இரண்டு மூத்த அதிகாரிகள் இராணுவத் தளபதிக்கான போட்டியில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இராணுவத் தலைமை அதிகாரியாக இரண்டாவது இடத்தில் உள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் தொண்டர்படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே ஆகியோரே இவ்வாறு போட்டியிடுகின்றனர்.

இந்தநிலையில் குறித்த பதவிக்கு மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவே நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜூலை மாதமே ஓய்வு பெற்றிருக்க வேண்டிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறு மாத சேவை நீடிப்பை வழங்கியிருந்தார்.

இராணுவத்தில் இரண்டாவது நிலை அதிகாரியாக இருக்கும் மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, இறுதிப் போரில் சர்ச்சைக்குரிய 58 ஆவது பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்தவர்.

இதன்போது அவர் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக ஐ.நா.வும் மனித உரிமை அமைப்புக்களும் தொடர்ச்சியாக குற்றஞ்சுமத்தி வருகின்றன.

இதற்கு முன்னர் இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமையினைத் தொடர்ந்து பல்வேறு சர்வதேச அமைப்புகள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/புதிய-இராணுவத்தளபதியாகு/

 

Link to comment
Share on other sites

புதிய இராணுவத் தளபதி நியமனம் – உச்சக்கட்ட குழப்பம்

 

Sri_Lanka_Army_Flag-300x199.jpgசிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், புதிய இராணுவத் தளபதி தொடர்பான முடிவு இன்று சிறிலங்கா அதிபரால் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறிலங்கா இராணுவத் தளபதி தொடர்பான அறிவிப்பை நேற்று அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது, எனினும், நேற்று எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

தற்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க சேவை நீடிப்பைக் கோரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் புதிய இராணுவத் தளபதிக்கான போட்டியில் நான்கு மூத்த மேஜர் ஜெனரல்கள் உள்ளனர்.

மேஜர் ஜெனரல்கள் சவேந்திர சில்வா, சத்யப்பிரிய லியனகே, தர்ஷன ஹெற்றியாராச்சி, குமுது பெரேரா ஆகிய நால்வரில், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இவர் தற்போது இராணுவத்தின் இரண்டாவது நிலைப் பதவியான இராணுவத் தலைமை அதிகாரியாக இருக்கிறார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று இராணுவத் தளபதி தொடர்பான முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்ப்பதாக, சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.

தற்போதைய இராணுவத் தளபதிக்கு சேவை நீடிப்பு அளிக்கப்படுமா அல்லது புதிய தளபதி நியமிக்கப்படுவாரா என்பது குறித்து ஏதும் தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, இன்று புதிய இராணுவத் தளபதி நியமனம் தொடர்பான அறிவிப்பை சிறிலங்கா அதிபர் வெளியிடுவார் என, பாதுகாப்புச் செயலர் ஜெனரல் சாந்த கொட்டேகொடவும், தெரிவித்துள்ளார்.

எனினும், புதிய இராணுவத் தளபதி நியமனம் தொடர்பான எந்த தகவலும் தனக்குத் தெரியாது என, சிறிலங்கா அதிபரின் செயலர் உதய செனிவிரத்ன கூறியுள்ளார்.

இதற்கிடையே, புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தும் சமூக வலைத்தளப் பரப்புரை ஒன்று தீவிரமாக இடம்பெற்று வருகிறது.

முன்னொரு போதும் இல்லாத வகையில் மிகத் தீவிரமான முறையில் இந்தப் பரப்புரை இடம்பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தற்போதைய பாதுகாப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டே, இராணுவத் தளபதி தொடர்பான முடிவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுப்பார் என, பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, தற்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு மூன்றாவது சேவை நீடிப்பு அளிக்கப்படலாம் என்றும், தகவல்கள் கூறுகின்றன.

http://www.puthinappalakai.net/2019/08/18/news/39589

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.