Jump to content

பிள்ளையான் கட்டிய கிணற்றை காணவில்லை! தேடி அலையும் மக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையான் கட்டிய கிணற்றை காணவில்லை! தேடி அலையும் மக்கள்!

_21190_1565961284_A0AEE48A-2BE6-46E5-90E7-791C9C80E350.jpeg

தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடு காரணமாக அரசியல் கைதிகளில் அரைவாசிப் பேருக்கு மேற்பட்டவர்களை விடுவித்து விட்டோம் என குண்டைப் போட்டுள்ளார் தமிழ் அரசுக்கட்சியின் செயலாளர் கி.துரைராசசிங்கம்.

முன்னாள் கிழக்கு முதலமைச்சர் சந்திரகாந்தனின் காலத்தில் கிணறுகள் கட்டப்பட்டதாக ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருந்தபோதும், அங்கு சென்ற பார்த்தபோது கிணற்றை காணவில்லையென்றும் தெரிவித்துள்ளார்.

கம்பெரலிய திட்டத்தின் ஊடாக வந்தாறுமூலை விஸ்ணு ஆலய புனரமைப்பிற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனின் நிதிஒதுக்கீட்டின் மூலம் செயற்படுத்தப்படும் வேலைப்பாடுகளைப் பார்வையிடுவதற்காக வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற உறுப்பினருடன் சென்றிருந்த வேளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு காரணமாகவே முழுமையாக இல்லாது விட்டாலும் அதிகளவான நிலங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. அதே போன்று அரசியற் கைதிகளிலும் இருந்தவர்களில் அரைவாசிக்கும் மேல் விடுவிக்கப்பட்டுள்ளனர். மிக முக்கியமாக பொறுப்புக் கூறல் என்ற விடயத்தினை ஐ.நா மனித உரிமை ஆணையகத்திற்குக் கொண்டு வந்து அங்கு இலங்கையையும் முன்நிறுத்தி இலங்கை அரசாங்கத்தையும் இணங்க வைத்துப் பொறுப்புக் கூறல் விடயத்திற்கு இணை அனுசரணை வழங்கும் விதமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான அலுவலகம் உருவாக்கப்பட்டது. சமஷ்டி ஆட்சி என்பதற்கு அடிப்படையான அரசியல் சாசனமொன்றை அமைப்பதற்குரிய செயற்பாடுகள் குறிப்பிட்டளவு தூரத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. எக்காலமும் இல்லாத விதத்தில் இந்த குறிப்பிட்ட காலத்தில் வடக்கு கிழக்கிற்கு அதிகமான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது. அத்தோடு அபிவிருத்தி தொடர்பிலும் எமது பாராளுமன்ற உறுப்பினர்களால் பல்வேறு நிதிமூலங்கள் கொண்டுவரப்பட்டு அதனூடாகப் பல்வேறு செயற்திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே இவ்வாறான விடயங்கள் பல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட போதிலும் எமது அன்பர்கள் முயலுக்கு மூன்று கால் என்ற விதத்திலே வெவ்வேறு கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.

இதே போன்று கடந்த கிழக்கு மாகாண ஆட்சியின் போது முஸ்லீம் காங்கிரஸின் ஏழு உறுப்பினர்களுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதினொரு உறுப்பினர்கள் முண்டுகொடுத்தார்கள் என்று சொல்கின்றார்கள். கிழக்கு மாகாணசபை வெறுமனே பதினெட்டு உறுப்பினர்களை மாத்திரம் கொண்டதாக இருக்கும் என்றால் நிச்சயமாக பதினொரு உறுப்பினர்களைக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியினைப் பெற்றிருக்கும் அதில் எவ்வித ஐயமுமில்லை. ஆனால் கிழக்கு மாகாண சபையில் முப்பத்தேழு உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். ஆட்சியமைப்பதற்கு பத்தொன்பது உறுப்பினர்கள் தேவை. நாங்கள் பதினொரு உறுப்பினர்கள் இருக்கின்றோம். ஐக்கிய தேசியக் கட்சியின் ஐந்து உறுப்பினர்களும் வருவதற்குத் தயாராக இருந்தார்கள். ஆனால் அவர்கள் தங்களுக்கு முதலமைச்சுப் பதவியைக் கோரினார்கள். அது முடியாத விடயம். ஏனெனில் கிழக்கு மாகாணம் சிறுபான்மை மக்களாகிய எங்களுக்குரியது அதில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராவது ஏற்றுக் கொள்ளமுடியாத ஒரு விடயம். இருப்பினும் அவர்கள் வந்தாலும் மேலும் மூன்று உறுப்பினர்கள் தேவை ஆட்சியமைப்பதற்கு.

அதேவேளை ஹாபிஸ் நசீர் அவர்கள் ஏற்கனவே முதலமைச்சராக நியமிக்கப்பட்ட ஒருவர். அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் கையெழுத்து வைத்து உருவாக்கிய முதலமைச்சர் அல்ல. கடந்த அரசாங்கத்தின் ஒப்பந்தத்தின் படி இரண்டரை வருடங்கள் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் மிகுதி இரண்டரை ஆண்டுகள் முஸ்லீம் காங்கிரசும் முதலமைச்சர் பதவியை வகிப்பதாகவே நியமிக்கப்பட்டிருந்தது. இந்த அடிப்படையிலே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதல் இரண்டரை ஆண்டுகள் முடிந்த பின்னர் முன்னாள் முதல்வர் சந்திரகாந்தன், ஜெயம், உதுமாலெப்பை, சுபைர் போன்ற பலரும் கையெழுத்து வைத்து உருவாக்கியவர் தான் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அவர்கள்.

அவ்வாறு முதலமைச்சர் உருவாக்கப்பட்டுள்ள போது, எங்கள் பக்கம் பத்தொன்பது பேரைச் சேர்த்துக் கொள்ள முடியாத யாதார்த்த நிலையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் மூலம் அந்த முதலமைச்சருடன் சேர்ந்து ஆட்சியில் நாங்களும் இணைத்துக் கொள்ளப்பட்டோம். இதுவே உண்மை நிலை. இந்த உண்மை நிலையைப் பலமுறை நாங்கள் தெரிவித்தும் வந்துள்ளோம். ஆனால் அவை மக்கள் மத்தியில் சரியான முறையில் கொண்டு சேர்க்கப்படவில்லை.

கடந்த மாகாணசபையில் இறுதி இரண்டரை வருடங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கல்வி, விவசாயம் என்ற இரண்டு அமைச்சுப் பொறுப்புக்களைப் பெற்றது. கல்வி அமைச்சைப் பொருத்தவரையில் கடந்த கால ஆட்சியாளர்களினால் முரணான விதத்தில் செயற்படுத்தப்பட்ட விடயங்களை மாற்றுகின்ற அடிப்படைச் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தது. ஆனால் விவசாய அமைச்சு முழுமூச்சுடன் செயற்பட்டு அதில் நாங்கள் வெற்றியும் கண்டோம்.

அண்மையில் ஒன்பது மாகாணங்களையும் ஒப்பீட்டு நடாத்தப்பட்ட விருது வழங்கும் நிகழ்வின் போது செயற்திறன், வினைத்திறன், நிதியினை அங்கீகரிக்கப்பட்ட விதத்தில் பயன்படுத்துதல், சிக்கனமாகப் பயன்படுத்துதல், வெளிப்படுதன்மை ஆகிய ஐந்து விடயங்களையும் ஒப்பிட்டு ஒன்பது மாகாணங்களுக்குமிடையில் இடம்பெற்ற போட்டியிலே 2017ம் ஆண்டுக்காக கிழக்கு மாகாண விவசாய அமைச்சு தங்க விருதினைப் பெற்றது. அதே நேரத்திலே 2016ம் ஆண்டுக்காக வெள்ளி விருதினையும் பெற்றிருந்தது. இக்கால கட்டத்திலே இவ்விவசாய அமைச்சினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே வழிநடத்தியது. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்திலே சிறந்த முறையில் செயலாற்றியுள்ளது என்பதை நமது அன்பர்கள் சொல்லத் தேவையில்லை, அவர்கள் சொல்லவும் மாட்டார்கள். ஆனால் இதனை இலங்கையில் உள்ள மிக உயர்ந்த மதிப்பீட்டாளர்கள் சொல்லியிருக்கின்றார்கள். அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய கருமங்களை மிகவும் கருத்துக் கருமானங்களோடு செய்திருக்கின்றது.

எமக்குப் பெரிய தேவைகள் இருக்கின்றன என்பது உண்மைதான். ஆனால் அவற்றையெல்லாம் ஒரு நொடியிலே நாங்கள் செய்துவிட முடியாது. ஒப்பீட்டளவில் பார்த்தால் கிழக்கு மாகாணத்தைப் பொருத்தளவில் இரண்டரை ஆண்டுகளிலே ஒருவர் கூட விரல் நீட்ட முடியாத அளிவிற்கு நாங்கள் செயற்பட்டுள்ளோம்.

எங்களுக்கு முன்பு முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் தலைமையில் விவசாய அமைச்சர் ஒருவர் இருந்தார். அவரின் காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் தங்கவேலாயுதபுரத்திலே பதினைந்து கிணறுகள் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்னர் எமது ஆட்சியின் போது அப்பிரதேச மக்களின் வேண்டுகோளின்படி கிணறுகள் கட்டுவதற்கு கோவைகளைப் பார்க்கும் போது கோவைகளின் அடிப்படையில் அங்கு கிணறு கட்டப்பட்டிருக்கின்றது. ஆனால் தங்கவேலாயுதபுரத்திற்குச் சென்ற பார்ததால் அங்கு வெறும் குழி மாத்திரமே இருக்கின்றது. வெறுமனே குழியை மாத்திரம் வைத்துக் கொண்டு கிணறுகள் கட்டப்பட்டதாக சொல்லிக் கொண்டிருந்தது தான் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் ஆட்சியில் இருந்த விவசாய அமைச்சின் கைங்கரியம்.

ஆனால் நாங்கள் அவ்வாறு வெறுமனே கோவையில் மாத்திரம் கணக்கு காட்டுபவர்கள் அல்ல. 147 மில்லியன் ரூபாயில் கரடியனாற்றில் விவசாயப் பயிற்சி நிலையம் ஒன்றை அமைத்திருக்கின்றோம். அதே போன்று மண்டூர் பண்ணை, தும்பங்கேணி ஆட்டுப் பண்ணை, இது போன்ற பல்வேறு செயற்பாடுகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவற்றைச் சொல்ல வேண்டிய நேரத்தில் துல்லியமாக வெளிப்படுத்துவோம். இவை வெறும் உதாரணங்களே. ஏனெனில் கிழக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்று செய்யவில்லை என்று கூறுபவர்களுக்காக இவை.

எனவே தேசிய மட்டத்திலே அரசியலமைப்பு உட்பட பல்வேறு விடயங்கள், மாகாண மட்டத்திலே மேற்குறிப்பிட்ட அபிவிருத்தி விடயங்கள் இவற்றையெல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே செய்தது. அதே நேரத்தில் இறுகி வைரமாக இருக்கின்ற பேரினவாதத்திடம் இருந்து எமது உரிமையப் பெற்றெடுக்கின்ற விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் பக்குவமாக உலக நாடுகளை அனுசரித்துக் கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என்ற தெரிவித்தார்.

 

http://www.battinaatham.net/description.php?art=21190

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவல் துறையிடம் புகார் செய்குக..👍

hqdefault.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.