Jump to content

400 ம‌ணித்தியால வேலை 1200 இயுரோ ச‌ம்ப‌ள‌ம் ,


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வ‌ண‌க்க‌ம் யாழ் உற‌வுக‌ளே  /

பிரான்ஸ் நாட்டில் வ‌சிக்கும் என‌து ஊரை சேர்ந்த‌ ஒரு அண்ணா த‌மிழ் க‌டையில் வேலை செய்கிறார் , மாச‌ம் 400 ம‌ணித்தியால‌ வேலை ச‌ம்ப‌ள‌ம் 1200 இயுரோ ( மிருக‌ வ‌தை )

என்ர‌ ந‌ண்ப‌னுக்கு அந்த‌ அண்ணாவை ந‌ல்லா தெரியும் , 
என்ர‌ ந‌ண்ப‌ன் அவ‌ரின் வேலையையும் ம‌ணித்தியால‌த்தையும் ச‌ம்ப‌ள‌த்தையும் சொல்ல‌ என்ன‌டா கொடுமை இது என்று என‌க்கு தோனிச்சு 😓,

அந்த‌ 1200 இயுரோவில் தான் பேருந்து க‌ட்ட‌ன‌மும் க‌ட்ட‌னும் , 

ஊரில் அவ‌ரின் ம‌னைவி பிள்ளைய‌லுக்கு மாச‌ம் 400 இயுரோவை அனுப்பி மீத‌ம் உள்ள‌ காசில் தான் சாப்பாடு வீட்டு வாட‌கை /

என்ர‌ ம‌ச்சான் அவ‌னும் இங்கை உண‌வ‌க‌ம் வைச்சு ந‌ட‌த்துறான் , அவ‌னுக்கு சொன்னேன் எங்க‌ட‌ ஊரை சேர்ந்த‌ அண்ணா பிரான்ஸ்சில் இப்ப‌டி க‌ஸ்ர‌ ப‌டுறார் என்று /

உட‌ன என்ர‌ ம‌ச்சான் சொன்னான் , ம‌ச்சி அந்த‌ அண்ணாவை த‌ண்ட‌ க‌டையில் வ‌ந்து வேலை செய்ய‌ சொல்லு தான் 1600 இயுரோ மாச‌ம் குடுக்கிறேன் , அவ‌ர் 100 ம‌ணித்தியாள‌ம் வேலை செய்தாலே த‌ன‌க்கு போதும் என்று என்ர‌ ம‌ச்சான் உட‌ன‌ சொன்னான் , அதோடு அந்த‌ அண்ணாவுக்கும் சாப்பாடும் தான் குடுக்கிறேன் என்று 🙏👏/

100ம‌ணித்தியால‌ வேலைக்கு 1600 இயுரோ ச‌ம்ப‌ள‌ம் குடுக்கிறேன் என்று சொன்ன‌ என்ர‌ ம‌ச்சானின் ம‌ன‌சு எங்கை ,
300 ம‌ணித்தியாள‌ம் மிச்ச‌ம் அதோடு 400 இயுரோ ச‌ம்ப‌ள‌ம் கூட‌ , 
( உன்ர‌ ந‌ல்ல‌ ம‌ன‌சுக்கு நீ நீடூழி வாழுவாய்டா ம‌ச்சி 🙏🙏🙏🙏🙏 )


400 ம‌ணித்தியால‌ம் வேலை வாங்கி போட்டு 1200 இயுரோ குடுக்கும் அந்த‌ ம‌னித‌ர்க‌ள் எங்கை ( மிருக‌ வ‌தை பிரான்ஸ் நாட்டில் எம்ம‌வ‌ர்க‌ள் சொந்த‌ இனத்த‌வ‌ர்க‌ளுக்கு செய்யிற‌து 😠/

ப‌திவு பைய‌ன்26 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனச் சாட்சி இல்லாமல், பழைய கடை முதலாளி வேலை வாங்கியிருக்கின்றார்.
ஒரு நாளைக்கு 16 மணித்தியாலம் வேலை செய்வித்து,
அதுகும்.. ஒரு மணித்தியாலத்திற்கு, 3 ஐரோ கொடுத்தது கண்டனத்துக்குரியது.  
அவரை அந்த இக்கட்டிலிருந்து... காப்பாற்றிய,  பையனுக்கு நன்றி. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் மச்சானுக்கு தங்க மனசு பையா. உங்களுக்கும்தான்.

தங்கும் அனுமதி இல்லாதவரை கசக்கி பிழிந்து வரும் பணத்தில்தான் வெளிநாட்டில் பலமுதலாளிகளின் படம் ஓடுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

உங்கள் மச்சானுக்கு தங்க மனசு பையா. உங்களுக்கும்தான்.

தங்கும் அனுமதி இல்லாதவரை கசக்கி பிழிந்து வரும் பணத்தில்தான் வெளிநாட்டில் பலமுதலாளிகளின் படம் ஓடுகிறது.

பிரோ , 
இங்கையும் எம் இன‌த்தை சேர்ந்த‌வைக்கு காட் இல்லை , ஆனாலும் , என்ர‌ ந‌ண்ப‌ன் அவைக்கு கீழா காசை குடுப்பான் , ஒரு ம‌ணித்தியால‌ம் வேலை செய்தா 10 இயுரோ அதோட‌ , சாப்பாடு த‌ங்கும் இட‌ம்  இன்ட‌நெட் வ‌ச‌தி , இப்ப‌டி சொல்லிட்டு போக‌லாம் பிரோ /

1999ம் ஆண்டு என்னோட‌ புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு ஒன்னா வ‌ந்த‌ பெடிய‌ங்க‌ள் தான் , இந்த‌ நாட்டுக்கு வ‌ரும் போது எங்க‌ளுக்கு 12 , 13 வ‌ய‌து , கொஞ்ச‌க் கால‌ம் அவ‌ங்க‌ள் க‌டின‌மாய் உழைச்சு முன்னோறி இப்போது பெரிய‌ உண‌வ‌க‌ம் வைச்சு ந‌ட‌த்துறாங்க‌ள் /

என்ர‌ ம‌ச்சானும் ச‌ரி என்ர‌ ந‌ண்ப‌ர்க‌ளும் ச‌ரி ம‌னித‌ நேய‌ம் ப‌டைச்ச‌வ‌ங்க‌ள் பிரோ 🙏🙏👏👏

த‌மிழ் உற‌வுக‌ளுக்கு தான் வேலை , வேற்று இன‌த்த‌வ‌ர்க‌ள் ஒரு ஆள் தான்  அவ‌ர்க‌ளின் உண‌வ‌க‌த்தில் /

விடுமுறை கால‌ங்க‌ளில் காசு ம‌ழை கொட்டும் பிரோ , அதே போல் வேலை செய்யும் உற‌வுக‌ளுக்கு காசை அள்ளி குடுப்பாங்க‌ள் என்ர‌ ம‌ச்சானும் ச‌ரி என‌து ந‌ண்ப‌னும்  பிரோ / 

400 ம‌ணித்தியால‌ வேலை எல்லாம் இங்கை எடுப‌டாது பிரோ 😠/
எம் இன‌த்த‌வ‌ர்க‌ளை எங்க‌ளை போல‌ க‌வ‌ணிக்கிறோம் 🙏👏 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விசயம் பையா.

ஒரு தாழ்மையான வேண்டுகோள்.  நீங்களும் உங்கள் நண்பர்களும் 1999 வந்த போது அங்கே இருந்த ஏனைய இனத்தவர்கள் எல்லாரும் தம் இனத்தவருக்கு மட்டுமே வேலை என இருந்திருந்தால் - உங்கள் நண்பர்களும் நீங்களும் இப்படி முன்னேறி இருக்க முடியாதல்லவா?

என்ன இனமா இருந்தா என்ன பையா, பசியும் வாழ்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பும் எல்லாருக்கும் பொதுவானதுதானே?

நம்பிக்கையானவர்களை கைதூக்கி விடுங்கள், இனம், மொழி மதம் எல்லாம் இரெண்டாம் பட்சம்.

இது என் தாழ்மையான கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

நல்ல விசயம் பையா.

ஒரு தாழ்மையான வேண்டுகோள்.  நீங்களும் உங்கள் நண்பர்களும் 1999 வந்த போது அங்கே இருந்த ஏனைய இனத்தவர்கள் எல்லாரும் தம் இனத்தவருக்கு மட்டுமே வேலை என இருந்திருந்தால் - உங்கள் நண்பர்களும் நீங்களும் இப்படி முன்னேறி இருக்க முடியாதல்லவா?

என்ன இனமா இருந்தா என்ன பையா, பசியும் வாழ்கையில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பும் எல்லாருக்கும் பொதுவானதுதானே?

நம்பிக்கையானவர்களை கைதூக்கி விடுங்கள், இனம், மொழி மதம் எல்லாம் இரெண்டாம் பட்சம்.

இது என் தாழ்மையான கருத்து.

பிரோ , க‌ட் இல்லாத‌ எம் உற‌வுக‌ளுக்கு வேலை குடுக்கும் போது , நிறைய‌ விடைய‌ங்க‌ளை யோசிக்க‌ வேண்டும் பிரோ , 

வேற்று இன‌த்த‌வ‌ர்க‌ள் இங்க‌த்தை அர‌சாங்க‌த்திட்டை காட்டி குடுத்தா வாழ் நாளில் மீழ‌ முடியாத‌ அள‌வுக்கு ப‌யின் அடிப்பாங்க‌ள் , 

இவ‌ங்க‌ளின் வ‌ள‌ர்சியை பொறுத்து கொள்ள‌ முடியாத‌ ஆட்க‌ள் ஆப்பு வைச்சா நில‌மை அவ‌ள‌வும் தான் , என்ர‌ ந‌ண்ப‌ன் ஒரு க‌ட்ட‌த்தில் ம‌ன‌ம் உடைஞ்சு போய் ஒரு உண்மையை சொன்ன‌வ‌ன் , அவ‌ன் சொன்ன‌து என் ம‌ன‌தையும் பாதிச்ச‌து பிரோ /

அது தான் த‌ந்திர‌மாய் உண‌வ‌க‌த்தை கொண்டு ந‌ட‌த்துறான் பிரோ 👏 /


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பையன்26 said:

பிரோ , க‌ட் இல்லாத‌ எம் உற‌வுக‌ளுக்கு வேலை குடுக்கும் போது , நிறைய‌ விடைய‌ங்க‌ளை யோசிக்க‌ வேண்டும் பிரோ , 

வேற்று இன‌த்த‌வ‌ர்க‌ள் இங்க‌த்தை அர‌சாங்க‌த்திட்டை காட்டி குடுத்தா வாழ் நாளில் மீழ‌ முடியாத‌ அள‌வுக்கு ப‌யின் அடிப்பாங்க‌ள் , 

இவ‌ங்க‌ளின் வ‌ள‌ர்சியை பொறுத்து கொள்ள‌ முடியாத‌ ஆட்க‌ள் ஆப்பு வைச்சா நில‌மை அவ‌ள‌வும் தான் , என்ர‌ ந‌ண்ப‌ன் ஒரு க‌ட்ட‌த்தில் ம‌ன‌ம் உடைஞ்சு போய் ஒரு உண்மையை சொன்ன‌வ‌ன் , அவ‌ன் சொன்ன‌து என் ம‌ன‌தையும் பாதிச்ச‌து பிரோ /

அது தான் த‌ந்திர‌மாய் உண‌வ‌க‌த்தை கொண்டு ந‌ட‌த்துறான் பிரோ 👏 /


 

புரிகிறது👍🏿

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

மனச் சாட்சி இல்லாமல், பழைய கடை முதலாளி வேலை வாங்கியிருக்கின்றார்.
ஒரு நாளைக்கு 16 மணித்தியாலம் வேலை செய்வித்து,
அதுகும்.. ஒரு மணித்தியாலத்திற்கு, 3 ஐரோ கொடுத்தது கண்டனத்துக்குரியது.  
அவரை அந்த இக்கட்டிலிருந்து... காப்பாற்றிய,  பையனுக்கு நன்றி. 

எந்த‌ உல‌க‌த்தில் நாம் வாழுகிறோம் என்று தெரியாம‌ இருக்கு சிறி அண்ணா /

இப்ப‌டியும் ம‌னித‌ர்க‌ள் எம்மின‌த்தில் இருக்கிறார்க‌ள் என்று நினைக்கும் போது ம‌ன‌ம் வேத‌னை அடைய‌ செய்யுது /

எங்க‌ட‌ நாட்டில் க‌ள‌வாய் வேலை செய்தா கூட‌ ம‌ணித்தியால‌த்துக்கு 10இயுரோ சிறி அண்ணா / 

க‌வ‌லைப் ப‌ட்ட‌து நான் ம‌ட்டும் இல்லை என்ர‌ ந‌ண்ப‌ர்க‌ளும் தான் , வ‌ய‌தில் சின்ன‌வ‌ங்க‌ளாய் இருந்தாலும் என்ர‌ ந‌ட்பு வ‌ட்டார‌ம் ம‌னித‌ நேய‌த்தை  மிக‌வும் நேசிக்க‌ கூடிய‌வ‌ங்க‌ள் / 

இந்த‌ நாட்டில் வேலை செய்யாம‌ வீட்டுக்கை இருக்கிர‌ ஆட்க‌ளுக்கு இந்த‌ நாட்டு  அர‌சாங்கம் , 9600 குரோன் காசு குடுக்குது , அத‌ இயுரோக்கு பார்த்தா 1200  இயுரோவ‌ தாண்டுது சிறி அண்ணா 👏 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பியும் நீயும் ஓர் கடை எடு நானும் இலங்கையிலிருந்து வரதயார் 

 

உங்க உறவுக்கு பாராட்டுக்கள் வாழ்க வளர்க 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

தம்பியும் நீயும் ஓர் கடை எடு நானும் இலங்கையிலிருந்து வரதயார் 

 

உங்க உறவுக்கு பாராட்டுக்கள் வாழ்க வளர்க 

முனிவா ,நீ வாப்பா , உன‌க்கு ந‌ல்ல‌ வேலை இங்கை இருக்கு , 
என‌க்கு உண‌வ‌க‌ வேலை ச‌ரி ப‌ட்டு வ‌ராது ம‌ச்சானும் என் ந‌ண்ப‌னுக்கும் தான் அதில் ஆர்வ‌ம் /

இங்கை எங்க‌ளுக்கு வேலைக்கு ஆள் தேவை , 100 அல்ல‌து 120 ம‌ணித்தியாள‌ வேலை செய்தாலே இல‌ங்கை காசுக்கு 3ல‌ச்ச‌ம் எடுக்க‌லாம் / 

நான் செய்யிர‌ வேலை விமான‌ நிலைய‌த்தில் , முதுகு வ‌லியால் கூட‌ நேர‌ம் செய்ய‌ ஏலாது , மாச‌ம் 52 ம‌ணித்தியால‌ வேலை மீத‌ ம‌ணித்தியால‌ காசை இங்கைத்தை அர‌சாங்க‌ம் த‌ருகின‌ம் , இல‌ங்கை காசுக்கு 4 ல‌ச்ச‌ம் நான் எடுக்கிறேன் மாச‌ம் /

ஊரில் இருந்து இந்த‌ நாட்டுக்குள் நுலைவ‌து க‌ஸ்ர‌ம் / ஏதாவ‌து ஜ‌ரோப்பா நாட்டுக்கு வ‌ந்தா எங்க‌ளின் பாஸ்போட்டில் உங்க‌ளை இங்கு கூட்டி வ‌ர‌லாம் /
ந‌ம்பி ப‌ழ‌கினா எதையும் செய்வோம் முனிவா ,
என்ர‌ ந‌ட்பு வ‌ட்டார‌ம் அப்ப‌டி 👏👏👏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜ‌ரோப்பா வார‌ ஜ‌டியா இருக்கா முனிவா 

Link to comment
Share on other sites

புதிதாக ஒரு நாட்டிற்கு வருபவர்கள் பலருக்கும் வந்த கடன், ஊருக்கு அனுப்ப வேண்டிய அவசியம் என உள்ள காரணங்கள் அவர்களை இவ்வாறான பாதகர்களின் கைகளுக்குள் அடிமையாக்கி விடுகின்றது. 

ஆனால், நல்லவர்களை பற்றித்தான் அதிகம் கதைத்தாக வேண்டும்.  

அடைக்கலம் தந்த நாட்டின் மொழி, கலாச்சாரம் மற்றும் நிச்சயம் சட்டங்களை ஓரளவிற்கு அறிந்து வைப்பது அவசியம். இல்லாவிட்டால்,  ஏமாந்து விடுவோம் இல்லை மாட்டிக்கொள்வோம். 

பின் குறிப்பு ; இவ்வாறூ உடலை வருத்தி உழைக்கும் உறவுகள் தமக்காக சேமிக்கவும்/முதலிடவும் வேண்டும்.   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ampanai said:

புதிதாக ஒரு நாட்டிற்கு வருபவர்கள் பலருக்கும் வந்த கடன், ஊருக்கு அனுப்ப வேண்டிய அவசியம் என உள்ள காரணங்கள் அவர்களை இவ்வாறான பாதகர்களின் கைகளுக்குள் அடிமையாக்கி விடுகின்றது. 

ஆனால், நல்லவர்களை பற்றித்தான் அதிகம் கதைத்தாக வேண்டும்.  

அடைக்கலம் தந்த நாட்டின் மொழி, கலாச்சாரம் மற்றும் நிச்சயம் சட்டங்களை ஓரளவிற்கு அறிந்து வைப்பது அவசியம். இல்லாவிட்டால்,  ஏமாந்து விடுவோம் இல்லை மாட்டிக்கொள்வோம். 

பின் குறிப்பு ; இவ்வாறூ உடலை வருத்தி உழைக்கும் உறவுகள் தமக்காக சேமிக்கவும்/முதலிடவும் வேண்டும்.   

நீங்க‌ள் சொல்வ‌தும் ச‌ரி தான் உட‌ன் ப‌டுகிறேன் , 
இந்த‌ நாட்டில் போல‌ன்ட் நாட்டை சேர்ந்த‌வ‌ங்க‌ள் நிறைய‌ பேர் வேலை செய்யிறாங்க‌ள் , அவ‌ங்க‌ளுக்கு இந்த‌ நாட்டு மொழி சுத்த‌மாய் தெரியாது ,அவையின்  வேலை க‌ழுவுற‌து சுத்த‌ம் செய்வ‌து போன்ற‌ வேலைக‌ள் /

இந்த‌ நாட்டில் அசூல் அடிக்க‌ அனும‌தி இருக்கு , ஆனால் அக்ஸ்ச‌ர் ப‌ண்ண‌ மாட்டாங்க‌ள் /

என்ர‌ ந‌ண்ப‌னும் ச‌ரி ம‌ச்சானும் ச‌ரி வேலையை ட‌க்க‌ன்ட‌ ப‌ழ‌க்கி போடுவாங்க‌ள் உற‌வுக‌ளுக்கு , 
பாசை தெரிந்த‌ ஆட்க‌ளை முன்னுக்கு விட்டுட்டு வேலை செய்யும் ஆட்க‌ள் பின்னுக்கு நின்று செய்ய‌ வேனும் /

அன்மையில் வ‌ந்த‌ முன்னால் போராளியும் என் ந‌ண்ப‌னின் க‌டையில் தான் வேலை செய்யிறார் , அந்த‌ அண்ணா இப்ப‌ எல்லா ச‌மைய‌ல் வேலையும் செய்வார் 👏

உற‌வுக‌ளுக்கு இந்த‌ நாட்டு சிட்டீச‌ன் இருக்க‌னும் , இர‌ண்டு வேலையும் செய்ய‌லாம் 👏👏

இந்த‌ நாட்டுக்கு நோர்வே நாட்டுக்கு வ‌ந்தா , வ‌ந்த‌ க‌ட‌னை குறுகிய‌ கால‌த்தில் க‌ட்டி முடிக்க‌லாம் 👏/

ல‌ண்ட‌ன் பிரான்ஸ் என்றால் நில‌மை வேர‌ , ம‌ணித்தியால‌த்துக்கு ச‌ம்ப‌ள‌ம் 5 ப‌வுன்ஸ் குடுப்பாங்க‌ள் , பிரான்ஸ் அத‌ விட‌ குறைவு /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பிரான்ஸ் நாட்டில் காட் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் , காட் இல்லா உற‌வுக‌ளுக்கு அவ‌ர்க‌ளின் காட்டில் வேலை எடுத்து குடுத்துட்டு வார‌ ச‌ம்ப‌ள‌த்தில் காட் வைச்சு இருக்கிர‌ ஆட்க‌ளுக்கு மாச‌ க‌ட‌சியில் காசு குடுக்க‌னும் /
எங்க‌டைய‌ளின் ந‌ரி புத்தியை பார்த்திங்க‌ளா 😉

த‌னி காட்டு ராஜா எம் நாட்டுக்கு வ‌ந்தா , அந்த‌ உற‌வை எப்ப‌டி வ‌ழி ந‌ட‌த்த‌னும் இந்த‌ நாட்டு அனுகுமுறையை சொல்லி குடுத்து ச‌ரியான‌ பாதையில் ப‌ய‌ணிக்க‌ வைக்க‌லாம் ந‌ல்ல‌ வேலையோட‌  👏/

அசூல் அடிச்சு போட்டு , 
க‌ள‌வாய் வேலையில் இற‌ங்க‌ வேண்டிய‌து தான் , அசூல் காசும் வ‌ரும் , வேலைக் காசு மாச‌க் க‌ட‌சியில் கையில் கிடைக்கும் , இப்ப‌டி ஒரு 4வ‌ருட‌ம் செய்தாலே , வ‌ந்த‌ க‌ட‌ன் ஒரு வ‌ருட‌த்தில் முடிந்துடும் , மீத‌ம் உழைச்சு எடுக்கிர‌ காசை கொண்டு போய் ஊரில் குடும்ப‌த்தோட‌ வாழுற‌து 👏/

திற‌மை இருந்தா எதையும் செய்ய‌லாம் / 
க‌ள‌வாய் வேலை குடுக்கும் போது ஒரு சில‌ ர‌க‌சிய‌ங்க‌ள் இருக்கு , அத‌ன் ப‌டி செய்தா ஒரு பிர‌ச்ச‌னையும் இல்லை வேலை செய்த‌ மாதிரியும் இருக்கும் காசு ச‌ம்பாதிச்ச‌ மாதிரியும் இருக்கும் 👏 /

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பையன்26 said:

முனிவா ,நீ வாப்பா , உன‌க்கு ந‌ல்ல‌ வேலை இங்கை இருக்கு , 
என‌க்கு உண‌வ‌க‌ வேலை ச‌ரி ப‌ட்டு வ‌ராது ம‌ச்சானும் என் ந‌ண்ப‌னுக்கும் தான் அதில் ஆர்வ‌ம் /

இங்கை எங்க‌ளுக்கு வேலைக்கு ஆள் தேவை , 100 அல்ல‌து 120 ம‌ணித்தியாள‌ வேலை செய்தாலே இல‌ங்கை காசுக்கு 3ல‌ச்ச‌ம் எடுக்க‌லாம் / 

நான் செய்யிர‌ வேலை விமான‌ நிலைய‌த்தில் , முதுகு வ‌லியால் கூட‌ நேர‌ம் செய்ய‌ ஏலாது , மாச‌ம் 52 ம‌ணித்தியால‌ வேலை மீத‌ ம‌ணித்தியால‌ காசை இங்கைத்தை அர‌சாங்க‌ம் த‌ருகின‌ம் , இல‌ங்கை காசுக்கு 4 ல‌ச்ச‌ம் நான் எடுக்கிறேன் மாச‌ம் /

ஊரில் இருந்து இந்த‌ நாட்டுக்குள் நுலைவ‌து க‌ஸ்ர‌ம் / ஏதாவ‌து ஜ‌ரோப்பா நாட்டுக்கு வ‌ந்தா எங்க‌ளின் பாஸ்போட்டில் உங்க‌ளை இங்கு கூட்டி வ‌ர‌லாம் /
ந‌ம்பி ப‌ழ‌கினா எதையும் செய்வோம் முனிவா ,
என்ர‌ ந‌ட்பு வ‌ட்டார‌ம் அப்ப‌டி 👏👏👏

நல்லது பொடியா நான் இங்கு ஓர் சிறிய அரச வேலையில் இருக்கிறன் நான் சும்மா பகிடிக்கு கேட்டது வரவா என முந்தய காலத்தில் ஐரோப்பா வருகிற ஐடியா இருந்தது திருமணம் ஆன பிறகு இல்லை நான் இங்கே இருக்க விரும்புகிறேன் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிகள் 🙏:100_pray:

 

4 hours ago, பையன்26 said:

ஜ‌ரோப்பா வார‌ ஜ‌டியா இருக்கா முனிவா 

தற்போது இல்லை பையா நன்றிடா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பையனின் அனுபவத்தை  பார்த்தேன்

இதுவும் கடந்து   போகும்  என்பதைத்தவிர வேறு எதுவும்  சொல்லமுடியவில்லை

நானும்  இதைத்தாண்டித்தான்  வந்தேன்  (ஆனால்  எம்மவர்களிடமில்லை)

எல்லாவற்றிற்கும் ஒரு விலை  இருப்பதாக  சொல்வார்கள்

இது  இரு  பகுதியும்  தீர்மானிக்கும் விடயம்.

நான் முடிந்தவரை  பிரெஞ்சு  சட்டங்களுக்கமைய தொழில் செய்வதால்

இதுவரை  விசா  இல்லாதவர்களை  வேலைக்கு  அமர்த்தியதில்லை

வீட்டு  வேலைக்கு வருபவர்கள்

விசா  இல்லாதவர்களை  தம்முடன்  அழைத்து  வந்தால்

இரட்டிப்பு  சம்பளமும்  சாப்பாடும்  கொடுத்து  தான்  அனுப்புவேன்

மன  நிம்மதிக்காக...

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த நாட்டிற்கு வந்து வேலை செய்த பொது  கிடைத்த சம்பளம் மணிக்கு இரண்டு ஜெர்மன் மார்க்(சட்டப்படி எவ்ளவு அப்போது கொடுத்தார்கள் என்பது நினைவில் இல்லை) ஒரு சாப்பாட்டுக்கடையில்.....
வேலை அனுமதி அப்போது இல்லை .
ஆனாலும் இந்த வேலைக்கும் ஆப்பு வைக்க அந்தக் காலத்தில் எங்கள் தமிழர்களும் இங்கு இருந்தார்கள்
அவர்கள் வேலைக்குப் போகாமல் சோசல் காசில் வாழ்ந்துகொண்டிருப்பார்கள் #ஆனாலும் வேலைக்குப் போகின்றவர்களைக் காட்டிக்கொடுப்பார்கள்
அந்த இரண்டு மார்க் வேலைக்கே அவ்வளவு கஷடம்.

வேலை பழகி நானும் சமையல்காரனாக வந்த பின்னரும் வேலை அனுமதிப்பத்திரம் இல்லாத காரணத்தைக் காட்டி அந்த இத்தாலி முதலாளி சம்பளத்தை அதிகரிக்க வில்லை

வேலை தெரிந்த படியால் வேறு இடம் மாறி மணிக்கு 5 மார்க் கிடைத்தது அதுவும் குறைவுதான்.
இப்படித்தான் எங்கள் வாழ்க்கையும் அப்போது இத்தாலி முதலாளிகள்    
 கையில் சிக்கியிருந்தது
இதையே இப்போது எம்மவர்கள் தொடர்ந்தும் கடைப்பிடிக்கின்றார்கள்
நானும் தான்(ஆனாலும் மணிக்கு  2   யூரோ அல்ல. எனக்கு  மனசாட்சி கொஞ்சமாவது இருப்பதால் )   அதற்குப்பல காரணங்கள் உள்ளது பையன்.......
அலசி ஆராய வேண்டும்

 

Link to comment
Share on other sites

On 8/17/2019 at 11:08 PM, பையன்26 said:

எங்க‌ட‌ நாட்டில் க‌ள‌வாய் வேலை செய்தா கூட‌ ம‌ணித்தியால‌த்துக்கு 10இயுரோ சிறி அண்ணா / 

உங்கள் நாட்டில் சட்டப்படி வேலை செய்பவர்களுக்கு அடிப்படை சம்பளம் மணித்தியாலத்துக்கு எவ்வளவு? (யூரோவில்)

Link to comment
Share on other sites

12 hours ago, பையன்26 said:

ஏன் பிரான்ஸ் நாட்டில் காட் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் , காட் இல்லா உற‌வுக‌ளுக்கு அவ‌ர்க‌ளின் காட்டில் வேலை எடுத்து குடுத்துட்டு வார‌ ச‌ம்ப‌ள‌த்தில் காட் வைச்சு இருக்கிர‌ ஆட்க‌ளுக்கு மாச‌ க‌ட‌சியில் காசு குடுக்க‌னும் /
எங்க‌டைய‌ளின் ந‌ரி புத்தியை பார்த்திங்க‌ளா 😉

ஒருவரின் பெயரில் பதிந்து விட்டு இன்னொருவர் வேலை செய்தால் யாரின் பெயரில் பதியப்பட்டதோ அவர் தான் அந்நாட்டுக்கு வருமான வரி கட்ட வேண்டும்.

இதில் அந்நபர் தானும் வேலை செய்பவர் என்றால் மொத்த வருமான தொகை அதிகரித்தால் கட்ட வேண்டிய வரிப்பணமும் அதிகரிக்கும். அவற்றிலும் இது தங்கியுள்ளது.

அதை கூட்டி கழித்து கொடுக்கப்படும் பணம் எவ்வளவு என்பதை வைத்தே இது தொடர்பில் நியாயமாக நடந்தார்களா இல்லையா என்ற முடிவிற்கு வரலாம்.

Link to comment
Share on other sites

On 8/17/2019 at 4:21 PM, பையன்26 said:

பிரான்ஸ் நாட்டில் வ‌சிக்கும் என‌து ஊரை சேர்ந்த‌ ஒரு அண்ணா த‌மிழ் க‌டையில் வேலை செய்கிறார் , மாச‌ம் 400 ம‌ணித்தியால‌ வேலை ச‌ம்ப‌ள‌ம் 1200 இயுரோ

காட் இல்லாதவர்கள் களவாக வேலை செய்தால் அவர்களை வருத்தி வேலை வாங்கி விட்டு குறைந்த சம்பளம் கொடுப்பது பல நாடுகளில் நடக்கிறது. உங்கள் நாட்டிலும் உள்ளதாமே.

https://yarl.com/forum3/topic/147990-ஐரோப்பாவில்-தமிழர்-கடைகளில்-நடப்பது-என்ன-நோர்வேயில்-அம்பலம்/

ஆனாலும் மாதம் 400 மணித்தியாலங்கள் வேலை செய்வது என்பது அதிகம்.

இவ்வாறு வேலை செய்ய ஒப்புக்கொள்வோர் உள்ளவரை வேலை வாங்குபவர்களும் இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Lara said:

காட் இல்லாதவர்கள் களவாக வேலை செய்தால் அவர்களை வருத்தி வேலை வாங்கி விட்டு குறைந்த சம்பளம் கொடுப்பது பல நாடுகளில் நடக்கிறது. உங்கள் நாட்டிலும் உள்ளதாமே.

https://yarl.com/forum3/topic/147990-ஐரோப்பாவில்-தமிழர்-கடைகளில்-நடப்பது-என்ன-நோர்வேயில்-அம்பலம்/

ஆனாலும் மாதம் 400 மணித்தியாலங்கள் வேலை செய்வது என்பது அதிகம்.

இவ்வாறு வேலை செய்ய ஒப்புக்கொள்வோர் உள்ளவரை வேலை வாங்குபவர்களும் இருப்பார்கள்.

வ‌ண‌க்க‌ம் லாரா ,
நீங்க‌ள் இணைத்த‌ ப‌திவில் நான் வ‌சிக்கும் நாட்டின் பெய‌ர் இல்லை /

ம‌னித‌ நேய‌த்தை நேசிக்கிர‌வை , த‌ங்க‌ளை போல் த‌ங்க‌ளின் இன‌த்த‌வ‌ர்க‌ளும் ந‌ல்லா இருக்க‌னும் என்று நினைப்ப‌வ‌ர்க‌ள் /

அந்த‌ ம‌னித‌ நேய‌ம் என‌து ந‌ண்ப‌னிட‌மும் என‌து ம‌ச்சானிட‌மும் இருக்கு /

இங்கை க‌ள‌வாய் வேலை செய்யிர‌ ஆட்க‌ள் மிஞ்சி போனா 120 ம‌ணித்தியாள‌ வேலை செய்வின‌ம் , ம‌ணித்தியாள‌த்துக்கு 10 இயுரோ சில‌து கூட‌வும் குடுப்பின‌ம் /

அண்மையில் எங்க‌ள் நாட்டுக்கு வ‌ந்த‌ முன்னால் போராளியும் என‌து ந‌ண்ப‌னின் க‌டையில் தான் வேலை செய்யிறார் / என்ர‌ ந‌ண்ப‌ன் வேலை செய்ப‌வ‌ர்க‌ளை போட்டு வாட்டி எடுக்க‌ மாட்டான் அவையின் பாட்டில் அவ‌ர் அவ‌ர் வேலையை செய்தா ச‌ரி / அதோடு த‌ங்கும் இட‌மும் /

நோர்வே நாட்டில் ச‌ம்ப‌ள‌ம் கூட‌ , சாப்பாட்டு சாமான்  ப‌ய‌ங்க‌ர‌ விலை , இந்த‌ நாட்டில் இல‌ங்கை காசுக்கு 9ல‌ச்ச‌ம் எடுக்கிற‌வையும் இருக்கின‌ம் , பொதுவாய் ப‌ல‌ர் 4 அல்ல‌து 5 ல‌ச்ச‌ம் எடுப்பின‌ம் இல‌ங்கை காசுக்கு மாச‌ம் /

Link to comment
Share on other sites

6 minutes ago, பையன்26 said:

வ‌ண‌க்க‌ம் லாரா ,
நீங்க‌ள் இணைத்த‌ ப‌திவில் நான் வ‌சிக்கும் நாட்டின் பெய‌ர் இல்லை /

நீங்கள் இவ்வாறு எழுதியதால் நீங்கள் நோர்வே நாட்டை சேர்ந்தவர் என நினைத்தேன். நோர்வேயில் குரோன் தான் நாணயம்.

13 hours ago, பையன்26 said:

இந்த‌ நாட்டுக்கு நோர்வே நாட்டுக்கு வ‌ந்தா , வ‌ந்த‌ க‌ட‌னை குறுகிய‌ கால‌த்தில் க‌ட்டி முடிக்க‌லாம் 👏/

 

On 8/17/2019 at 11:08 PM, பையன்26 said:

இந்த‌ நாட்டில் வேலை செய்யாம‌ வீட்டுக்கை இருக்கிர‌ ஆட்க‌ளுக்கு இந்த‌ நாட்டு  அர‌சாங்கம் , 9600 குரோன் காசு குடுக்குது ,

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Lara said:

நீங்கள் இவ்வாறு எழுதியதால் நீங்கள் நோர்வே நாட்டை சேர்ந்தவர் என நினைத்தேன். நோர்வேயில் குரோன் தான் நாணயம்.

இதுக்கும்  நாடுகளுக்கும்  சம்பந்தமில்லை

ஏன்  எமது  நாட்டிலேயே  

அந்தக்காலத்தில்  மலையக மக்களுக்கு 

எமது  தொழில்  நிறுவனங்களில் 

வீடுகளில்  என்ன  கொடுத்தோம்??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/17/2019 at 3:21 PM, பையன்26 said:

வ‌ண‌க்க‌ம் யாழ் உற‌வுக‌ளே  /

பிரான்ஸ் நாட்டில் வ‌சிக்கும் என‌து ஊரை சேர்ந்த‌ ஒரு அண்ணா த‌மிழ் க‌டையில் வேலை செய்கிறார் , மாச‌ம் 400 ம‌ணித்தியால‌ வேலை ச‌ம்ப‌ள‌ம் 1200 இயுரோ ( மிருக‌ வ‌தை )

என்ர‌ ந‌ண்ப‌னுக்கு அந்த‌ அண்ணாவை ந‌ல்லா தெரியும் , 
என்ர‌ ந‌ண்ப‌ன் அவ‌ரின் வேலையையும் ம‌ணித்தியால‌த்தையும் ச‌ம்ப‌ள‌த்தையும் சொல்ல‌ என்ன‌டா கொடுமை இது என்று என‌க்கு தோனிச்சு 😓,

அந்த‌ 1200 இயுரோவில் தான் பேருந்து க‌ட்ட‌ன‌மும் க‌ட்ட‌னும் , 

ஊரில் அவ‌ரின் ம‌னைவி பிள்ளைய‌லுக்கு மாச‌ம் 400 இயுரோவை அனுப்பி மீத‌ம் உள்ள‌ காசில் தான் சாப்பாடு வீட்டு வாட‌கை /

என்ர‌ ம‌ச்சான் அவ‌னும் இங்கை உண‌வ‌க‌ம் வைச்சு ந‌ட‌த்துறான் , அவ‌னுக்கு சொன்னேன் எங்க‌ட‌ ஊரை சேர்ந்த‌ அண்ணா பிரான்ஸ்சில் இப்ப‌டி க‌ஸ்ர‌ ப‌டுறார் என்று /

உட‌ன என்ர‌ ம‌ச்சான் சொன்னான் , ம‌ச்சி அந்த‌ அண்ணாவை த‌ண்ட‌ க‌டையில் வ‌ந்து வேலை செய்ய‌ சொல்லு தான் 1600 இயுரோ மாச‌ம் குடுக்கிறேன் , அவ‌ர் 100 ம‌ணித்தியாள‌ம் வேலை செய்தாலே த‌ன‌க்கு போதும் என்று என்ர‌ ம‌ச்சான் உட‌ன‌ சொன்னான் , அதோடு அந்த‌ அண்ணாவுக்கும் சாப்பாடும் தான் குடுக்கிறேன் என்று 🙏👏/

100ம‌ணித்தியால‌ வேலைக்கு 1600 இயுரோ ச‌ம்ப‌ள‌ம் குடுக்கிறேன் என்று சொன்ன‌ என்ர‌ ம‌ச்சானின் ம‌ன‌சு எங்கை ,
300 ம‌ணித்தியாள‌ம் மிச்ச‌ம் அதோடு 400 இயுரோ ச‌ம்ப‌ள‌ம் கூட‌ , 
( உன்ர‌ ந‌ல்ல‌ ம‌ன‌சுக்கு நீ நீடூழி வாழுவாய்டா ம‌ச்சி 🙏🙏🙏🙏🙏 )


400 ம‌ணித்தியால‌ம் வேலை வாங்கி போட்டு 1200 இயுரோ குடுக்கும் அந்த‌ ம‌னித‌ர்க‌ள் எங்கை ( மிருக‌ வ‌தை பிரான்ஸ் நாட்டில் எம்ம‌வ‌ர்க‌ள் சொந்த‌ இனத்த‌வ‌ர்க‌ளுக்கு செய்யிற‌து 😠/

ப‌திவு பைய‌ன்26 /

பையன் 26 ஏதோ இது புதிதுபோலப் பதிவு போட்டுள்ளீர்கள். நீங்கள் சொல்வதை ஒத்துக்கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. விசா இல்லாதவர்களை அடிமட்டக் கூலிக்கு அமர்த்துவது எம் நாட்டவரிடம் மட்டுமல்ல எல்லா நாட்டினரிடமும் உள்ளதுதான். அது சரியானது என்று நான் கூற வரவில்லை. ஆனால் அந்தச் சம்பளத்துக்குச் சம்மதித்து எம் ஆட்கள் வேலைக்குச் செல்வது முதலாழியின் தவறு என்று கூற முடியாது. களவாக்க் கையில் பணம் தேவைப்படுவதனால்த்தானே எதற்கும் சம்மதிக்கின்றனர். ஆனாலும் உங்கள் மச்சான் 100 மணித்தியாலம் செய்தாற் போதும் 1600 யூரோ கொடுக்கிறேன் என்பது உங்கள் கதையாய் இருக்கும். ஆனாலும் ஆர் சொன்னாலும் அதை நம்பிப் பதில் எழுதுபவர்கள் இருக்கும் மட்டும் உங்கள் காட்டில் மழைதான் போங்கள்😂

3 யூரோஸ் சம்பளம் எடுத்தவருக்கு 16 யூரோஸ் அடேங்கப்பா

Link to comment
Share on other sites

1 hour ago, விசுகு said:

இதுக்கும்  நாடுகளுக்கும்  சம்பந்தமில்லை

ஏன்  எமது  நாட்டிலேயே  

அந்தக்காலத்தில்  மலையக மக்களுக்கு 

எமது  தொழில்  நிறுவனங்களில் 

வீடுகளில்  என்ன  கொடுத்தோம்??????

இதற்கும் நாடுகளுக்கும் சம்பந்தமில்லை தான்.

ஆனால் தங்கடை நாட்டிலை களவா வேலை செய்தால் கூட மணித்தியாலத்துற்கு 10 யூரோ என்று அவர் எழுதியிருந்தார். 😀

அவர் தனது நாட்டில் இப்படி சுத்துமாத்து இல்லை என சொல்ல வந்தார். அது தான் அந்த இணைப்பை இணைத்திருந்தேன். (அவர் நோர்வே என நினைத்து).

தவிர பிரான்ஸில் சட்டப்படி வேலை செய்பவர்களுக்கு அடிப்படை சம்பளம் மணித்தியாலத்திற்கு கிட்டத்தட்ட 10 யூரோவாக உள்ள போது (எதுவும் கழிபடாமல்) களவாக வேலை செய்பவர்களுக்கு 3 யூரோ கொடுப்பதும் வேறு நாடுகளில் சட்டப்படி வேலை செய்பவர்களுக்கு அடிப்படை சம்பளம் மணித்தியாலத்திற்கு 20 யூரோ அல்லது அவ்வாறு கூடிய சம்பளம் உள்ள போது களவாக வேலை செய்வோருக்கு 10 யூரோ கொடுப்பதும் ஒன்று தான்.

பிரான்ஸையும் சுவிஸையும் ஒப்பிட்டு பாருங்களன் (யூரோவில்). 😎

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.