Jump to content

அமெரிக்கால போயி வெற்றி கொடி நாட்ட போறாரு நம்ம எடப்பாடி.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கால போயி வெற்றிக் கொடி நாட்டப் போறாரு நம்ம ஆளு !! எடப்பாடியைக் கொண்டாடிய ராஜேந்தி பாலாஜி !!

69655-jpg_1200x630xt.jpg

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 28 ஆம் தேதி அமெரிக்கா , இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு 10 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக அவர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறார்.

அதே நேரத்தில் தமிழகத்தில் ஏற்கனவே உலக மூதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றதே. அதில் முதலீடுகள் ஈர்க்கப்படவில்லையா என திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இதனிடையே வெளிநாடு செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பொறுப்புகளை, துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சிடம் கொடுக்காமல் அமைச்சர் தங்கமணியிடம் கொடுத்துச் செல்லப் போவதாக தகவ்லகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  அமைச்சர் ராஜேந்தி பாலாஜி , முதலீடுகளை ஈர்க்கச் செல்லும் முதல்வரின் வெற்றிக்கொடி அமெரிக்காவில் நாட்டப்படும் என தெரிவித்தார். . தேசிய பார்வையில் பாஜக எடுக்கும் முடிவுகள் அனைத்தும் அதிமுகவை கவர்ந்துள்ளன என தெரிவித்த ராஜேந்திர பாலாஜி . நல்லவர்கள் யார் ஆதரவு கொடுத்தாலும் அதிமுக அதை ஏற்றுக்கொள்ளும். என தெரிவித்தார்.

எந்த முதலமைச்சரும் படைக்காத சாதனையை முதலமைச்சர் படைத்து வருகிறார், அவர் மீது உள்ள ஆதங்கத்தில் முதல்வரின் அமெரிக்க பயணத்தை ஸ்டாலின் குறை கூறுகிறார் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்..

https://tamil.asianetnews.com/politics/rajendra-balaji-talk-about-cm-pwe1kp

டிஸ்கி:

gty.png


மாமா.. மாமா.. அமெரிக்காவுல நான் பொருள் காட்சிய சுத்தி பாக்கும் போது காணாம போனா கண்டு பிடுச்சுடுவாங்க இல்ல..?

மைக்குல சொல்லுவங்க மாப்பிள.. பின்ன அவிங்க நாடு கெட்டு போயிடாது..?

Link to comment
Share on other sites

`ஆந்திராவை எப்படி மாற்றப் போகிறேன் தெரியுமா?!’ - அமெரிக்காவில் மனம் திறந்த ஜெகன்

எந்த ஒரு ஏழைத் தாயும் தன் மகனைப் பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலையில் தவிக்கக் கூடாது. மதுவால் எந்தவொரு குடும்பமும் பாதிக்கப்படாத ஆந்திராவைக் கட்டமைக்க வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன்.

ஆந்திரா மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 3 நாள்களாக அங்கிருக்கும் அவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றியிருக்கிறார். அந்தவகையில் அமெரிக்காவில் வசிக்கும் தெலுங்கு மக்கள் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பேசினார்.

அப்போது பேசிய அவர், ``தற்கொலை செய்துகொள்ளாத விவசாயிகள் வாழும் மாநிலமாக ஆந்திராவை உருவாக்குவதே என் கனவு. மாநிலத்தில் உகந்த கட்டமைப்புடன் கூடிய சிறந்த பள்ளிகளை உருவாக்கி, அதில் மாணவர்கள் கல்வி கற்பதைக் காண வேண்டும். அனைத்துக் கிராமங்களும் பச்சைப் பசுமையுடன் மாற வேண்டும். பழையபடி மீண்டும் விவசாயத்தில் முழுக் கவனம் செலுத்தப்பட வேண்டும். பயிர்க்கடன் உள்ளிட்ட பிரச்னைகளால் எந்தவொரு விவசாயியும் உயிரிழக்கக் கூடாது என்பதுதான் என் கனவு. அனைத்துத் துறைகளிலும் சாதனையாளர்களாக மாணவர்களை உருவாக்கும்பொருட்டு, கிராமப்புறத்திலுள்ள பள்ளிகளில் சிறந்த கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.


ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு ஏழைக்கும், அரசு பொது மருத்துவமனைகளில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதுதான் என்னடைய விருப்பம். எந்த ஏழையும் தங்க இடமில்லாமல் அனாதையாக்கப்படக் கூடாது; எந்த ஒரு ஏழைத் தாயும் தன் மகனைப் பள்ளிக்கு அனுப்ப முடியாத நிலையில் தவிக்கக் கூடாது. மதுவால் எந்தவொரு குடும்பமும் பாதிக்கப்படாத ஆந்திராவைக் கட்டமைக்க வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன்.

மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய பின்னர் வரலாற்று சிறப்பு வாய்ந்த 19 மசோதாக்களை நிறைவேற்றியுள்ளோம். நீதித்துறையிலும் வெளிப்படைத்தன்மையை கொண்டுவந்துள்ளோம். ஆந்திரா அரசு உங்களுடையது என்பதை மறந்துவிடாதீர்கள். தேர்தலில் நான் வெற்றிபெற நீங்கள் கொடுத்த ஆதரவை மறக்கமாட்டேன். தற்போது உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். மாநிலம் செழிக்க அரசுடன் கைகோக்க வேண்டும்; ஜிடிபியில் மட்டுமல்ல; மனித வளர்ச்சிக்கும்கூட” என்றார் உறுதியான குரலில்.

 

https://www.vikatan.com/government-and-politics/politics/jagan-mohan-plans-over-developing-andhra-pradesh

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.