Jump to content

மட்டக்களப்பு வான்பரப்பில் மர்மப்பொருள் – அச்சத்தில் மக்கள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Bati-3-1-720x450.jpg

மட்டக்களப்பு வான்பரப்பில் மர்மப்பொருள் – அச்சத்தில் மக்கள்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் வெள்ளை நிறத்தினாலான மர்மப்பொருள் வானில் பறப்பதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

வாழைச்சேனை, கிண்ணையடி, கும்புறுமூலை, ஓட்டமாவடி, மீராவோடை, மாஞ்சோலை, உட்பட பல பிரதேசங்களிலேயே இன்று (ஞாயிற்றுக்கிழமை) இவ்வாறு வான்பரப்பில் மர்மப்பொருள் பறந்துள்ளது. இதன் காரணமாக மக்கள் அச்சமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வெள்ளை நிறத்தினாலான பஞ்சு அல்லது சிலந்தி வலை போன்ற மர்மப்பொருள் வான்பரப்பில் பறப்பதோடு, சிலரது வீடுகள் மற்றும் மரங்களின் மேல் அவை காணப்படுகின்றமையால் பிரதேச மக்கள் அச்சத்துடன் குறித்த மர்மப்பொருளை அவதானித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பஞ்சுவகை போன்ற குறித்த பொருளை சிலர் கையிலெடுத்து பார்த்தபோது அவை மென்மையாக காணப்படுவதாகவும் குறித்த மர்மப்பொருளில் சிறு பூச்சி இனங்கள் இருந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த மர்மப்பொருளினை பிரதேசத்திலுள்ள சிறுவர்கள் கையில் எடுத்து அதனை சேகரித்து விளையாடும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Bati-1-1-720x405.jpg

Bati-7-720x405.jpg

Bati-8-720x405.jpg

Bati-5-720x405.jpg

Bati-2-1-720x405.jpg

http://athavannews.com/மட்டக்களப்பு-வான்பரப்பி/

Link to comment
Share on other sites

வானிலை ஆராய்ச்சி பலூனின் மிச்சமா இருக்கும்!

சின்னப்பிள்ளைகள் அச்சப்பட்டதா தெரியல்ல.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.