Jump to content

தனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்? நிலாந்தன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தனிச்சிங்கள வாக்குகள் எதிர் மூவின வாக்குகள்? நிலாந்தன்

August 18, 2019

 

சில வாரங்களுக்கு முன்பு டான் டிவியின் அதிபர் குகநாதன் முகநூலில் பின்வருமாறு ஒரு குறிப்பை எழுதி இருந்தார்………
‘சிங்கள மக்கள் தெரிவு செய்யப் போகும் அடுத்த ஜனாதிபதி!
சிறுபான்மையினரின் வாக்குகள் இல்லாமல் யாரும் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று பலரும் எழுதி வருகின்றனர்.ஒரு சின்னக் கணக்கு.
பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்காளர்-15,992,096.
வாக்களிப்பவர்கள் அதிகபட்சம் 80 வீதம்-12,793,676.
வெற்றிபெறத் தேவையானது-6,396,839.
தனிச்சிங்கள் வாக்காளர்கள்-11,302,393.
அவர்களில் வாக்களிப்பவர்கள் 80 வீதம்-9,041,914.
இந்த வாக்குகளில் 70.74 வீதம்-6,396,839.
ஆக சிங்கள மக்களின் வாக்குகளில் 70.74 வீத வாக்குகளைப் பெறுகின்ற ஒருவரால் சிறுபான்மையினர் வாக்குகள் ஒன்று கூட இல்லாமல் ஜனாதிபதி ஆகிவிடமுடியும்.இந்தத் தேர்தலிலும் சிறுபான்மையினர் வாக்குகள் ஜனாதிபதியை தீர்மானிப்பதை பெரும்பான்மையான சிங்கள மக்கள் விரும்பவில்லை என்று தெரிகின்றது. பொறுத்திருந்து பார்ப்போம்!’

குகநாதனின் கணக்கில் ஒரு தர்க்கம் உண்டு. 2015ஆம் ஆண்டு தேர்தல் முடிவுகளை இலங்கை வரைபடத்தில் நிறந்தீட்டிப் பார்த்தால் ஒரு விடயம் தெளிவாகத் தெரியவரும். மைத்திரிபால சிறிசேனவின் கூட்டு எதிரணி தமிழ் பகுதிகளில்தான் பெருமளவு வெற்றி பெற்றது. அதேசமயம் சிங்களப் பகுதிகளில் அக்கூட்டு எதிரணி கொழும்பு, கண்டி,கம்பகா திகாமடுல்ல ஆகிய பகுதிகளில்தான் வெற்றி பெற்றிருக்கிறது. மஹிந்த 47.58 வீத வாக்குகளைப் பெற்றார். மைத்திரிபால சிறிசேன 51.28 விகிதத்தை பெற்றார். அதாவது மஹிந்த 3.07 விகித வாக்குகளால் தோல்வியுற்றார்.

இது ஓர் அரும்பொட்டு வெற்றி இந்த வெற்றிக்கு பெருமளவு காரணம் தமிழ் முஸ்லிம் மலையக வாக்குகளே
அதே ஆண்டு ஓகஸ்ற் மாதம் நிகழ்ந்த நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் சிங்கள மக்கள் மத்தியில் மாற்றத்தின் அலை ஒன்று வீசியது. எனினும் நல்லாட்சிக்கான ரணில்-மைத்திரி கூட்டுக்கு கிடைத்தது 45.66 விகிதமாகும.; மகிந்த ராஜபக்ஷ அணிக்கு கிடைத்தது 42.38 விகிதமாகும். அதாவது 3.28 விகித வேறுபாட்டில் ரணில் மைத்திரி அணி வெற்றி பெற்றது. ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் ஒரு வெற்றி அலை வீசிய போதிலும் மகிந்த அணிக்கும் ரணில் மைத்திரி அணிக்கும் இடையிலான வாக்கு விகித வித்தியாசம் எனப்படுவது 3.28 விகிதம்தான்.

அதன் பின் நிகழ்ந்த கூட்டுறவு சபைகளுக்கான தேர்தலில் ராஜபக்ச அணி பெருவெற்றி பெற்றது. அந்த வெற்றியைப் கண்டு அஞ்சியே ரணல் – மைத்திரி அரசாங்கம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை ஒத்திவைத்தது. முடிவில் கடந்த ஆண்டு தேர்தல்களை நடாத்தியது. அத்தேர்தலில் ராஜபக்ச அணி தாமரை மொட்டுச் சின்னத்தின் கீழ் பொது ஜன பெரமுன என்ற கட்சியாக போட்டியிட்டு பெருவெற்றி பெற்றது. அந்த வெற்றிதான் மைத்திரியைக் குழப்பியது. அதன் விளைவே கடந்த ஒக்டோபர் மாதம் நிகழ்ந்த ஆட்சிக் குழப்பம் ஆகும்.

பொது ஜன பெரமுன எனப்படுவது யுத்த வெற்றியின் குழந்தை. யுத்த வெற்றியை நிறுவன மயப்படுத்தி அதைக் கட்டிறுக்கமான ஒரு கட்சியாக மகிந்த கட்டி எழுப்பியுள்ளார். மகிந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாரம்பரியத்தில் வந்தவர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் கட்டி எழுப்பியதில் ராஜபக்ஷக்களுக்கு பெரிய பங்கு உண்டு. எனினும் சந்திரிக்காவின் கண்டிச் சிங்கள மேட்டுக்குடி வம்சத்துக்கு நிகராக நின்று பிடிப்பதில் ராஜபக்ஷக்களுக்கு அடிப்படையான சவால்கள் முன்பு இருந்தன. ஆனால் யுத்த வெற்றியின் மூலம் தனக்கு முன்பு ஆட்சி செய்த மேட்டுக்குடி கண்டிச் சிங்கள வம்சங்கள் எதனாலும் முடியாத ஒன்றை ராஜபக்ச சாதித்துக் காட்டினார.;

வெல்ல முடியாது ஒர் அமைப்பு என்று நம்பப்பட்ட புலிகள் இயக்கத்தை அவர் தோற்கடித்தார். அதன்மூலம் தனக்கு முன்பு ஆட்சி செய்த கண்டிச் சிங்கள மேட்டுக்குடிகளுக்கு எதிராகத் தன்னை தோற்கடிக்கப்பட முடியாத ஒருவராக ஸ்தாபித்தார.; பண்டாரநாயக்காக்களின் கட்சியாகக் காணப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் தனது முதன்மையை ஸ்தாபிப்பதை விடவும் தனது யுத்த வெற்றிகளையே ஒரு கட்சியாகக் கட்டியெழுப்புவது என்று அவர் முடிவெடுத்தார். அப்படி முடிவெடுத்துக் கட்டி எழுப்பப்பட்டதே தாமரை மொட்டுக் கட்சியான பொது ஜன பெரமுன. இதன் மூலம் ராஜபக்சக்கள் யுத்த வெற்றியைத் தமது குடும்பச் சொத்தாக்கி அதை நிறுவனமயப்படுத்தியும் விட்டார்கள்.

‘கடந்த உளூராட்சி மன்றத் தேர்தலில் இக்கட்சி ஐந்து மில்லியன் வாக்குகளைப் பெற்றது. ஆசியாவிலேயே சீனக் கொம்மியூனிஸ்ட் கட்சிக்கு அடுத்த படியாக இரண்டாவது பெரிய கட்சி அதுவென்றும் டிஜிட்டல் தளங்களிலில் அது பெரிய செல்வாக்கைச் செலுத்துகின்றது என்றும்’ சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மேற்கண்டவை அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகத் தெரியவரும் 2009 இல் இருந்து மஹிந்ததான் சிங்கள-பௌத்த பெருந் தேசிய வாதத்தின் கேள்விக்கிடமற்ற தலைவராக காணப்படுகிறார.; 2015இல் அவரைத் தோற்கடித்தது தமிழ் முஸ்லிம் வாக்குகள்தான். சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தை பொறுத்தவரை மஹிந்த தான் அதன்; தலைவர்.

2015இல்; மைத்திரி கட்சியை இரண்டாக உடைத்தார். அதுதான் மஹிந்தவின் தோல்விக்கான வழிகளைத் திறந்து விட்டது .ஆனால் 2015இலிருந்து தொடர்ச்சியாக நடந்த எல்லா தேர்தல்களிலும் மஹிந்ததான் சிங்கள பௌத்த தேசியவாதத்தின் இதயத்தில் அமர்ந்து இருக்கிறார் என்ற செய்தி தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டது. இப்பொழுது மகிந்த யுத்த வெற்றி வாதத்தை நன்கு நிறுவன மயப்படுத்தி அதை ஒரு கட்சியாகக் கட்டி எழுப்பி விட்டார். பிளவுண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெருந்துண்டு மகிந்தவிடம் சென்று விட்டது. அக் கட்சியின் சிதைவின் மீது பொது ஜன பெரமுன கட்டியெழுப்பப்படுகிறது. பொது ஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக யுத்த வெற்றி நாயகர்களில் ஒருவரான கோத்தபாயவை அறிவிக்கப்பட்ருக்கிறார்.

யுத்த வெற்றி வாதம் எனப்படுவது 2009 க்குப் பின்னரான சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தின் ஆகப் பிந்திய வளர்ச்சிதான். எனவே யுத்த வெற்றி வாதத்தை ஒரு கட்சியாகக் கட்டியெழுப்பியதன் மூலம் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாக்;குகளை அப்படியே கொத்தாக அள்ளியெடுக்க ராஜபக்ச சகோதரர்கள் திட்டமிடுகிறார்கள். இவ்வாறு ராஜபக்ச சகோதரர்கள் தனிச் சிங்கள வாக்குகளை இலக்கு வைத்து தமது வியூகத்தை வகுக்கும் வகுத்திருக்கும் ஒரு பின்னணியில் ரணில் விக்கிரமசிங்க என்ன செய்யப் போகிறார்?
அவர் இன்னமும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. அந்த அறிவிப்பை காலம் தாழ்த்துவதன் மூலம் சஜித்தின் ஆதரவாளர்களை எப்படிச் சமாளிக்கலாம் என்று அவர் சிந்திக்கிறார். கட்சித் தலைமையை அவர் வேறு யாரிடமாவது கையளிக்கத்; தயாரா?

அவருடைய தரப்பு வேட்பாளர் யாராகவும் இருக்கலாம் ஆனால் அந்த வேட்பாளர் மூவின வாக்குகளை திரட்டும் ஒருவராக இருக்கவேண்டும். ஆனால் அவ்வாறு மூவின வாக்குகளைத் திரட்டப்போகும் வேட்பாளருக்குப் பின்வரும் சவால்கள் உண்டு.
முதலாவது சவால் – ஈஸ்டர் குண்டு வெடிப்புக்குப் பின் ஒரு பகுதி சிங்களப் பொதுக் கூட்டு உளவியல் எனப்படுவது உறுதியான ஒரு தலைமைத்துவத்தை கோரத் தொடங்கிவிட்டது. அப்படி ஓர் உறுதியான தலைமை யுத்த வெற்றி வாதிகள் மத்தியில்தான் உண்டு. லிபரல் ஜனநாயக முகமூடி அணிந்த சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதிகள் மத்தியில் உண்டா?

இரண்டாவது சவால் – ஒரு புதிய மாற்றத்தை அல்லது பெருந்திருப்பத்தை ஏற்படுத்தத் தேவையான ஒரு புத்துணர்ச்சி மிக்க கூட்டு உளவியலைக் கட்டியெழுப்ப வல்ல ஆளுமை மிக்க தலைவர்கள் எவரும் அந்த அணியிடம் இல்லை. 2015இல் மைத்திரிபால சிறிசேன அப்படி ஒரு வேட்பாளர் போல தோன்றினார். அப்பொழுதும் கூட அவருடைய அமைச்சின் கீழ் வேலை செய்த சில தமிழ் மருத்துவர்கள் சொன்னார்கள்…….அவர் காட்டும் லிபரல் ஜனநாயக முகம் ஒரு முகமூடி என்று. தென்னிலங்கையில் நடந்த ஒரு கருத்தரங்கில் உரைகள் யாவும் சிங்களத்தில் அமைந்திருந்த பொழுது அதைச் சுட்டிக்காட்டிய தமிழ் மருத்துவர்களிடம் நீங்கள் சிங்களம் பழகுங்கள் என்று அவர் கூறியதாகத் தகவல் உண்டு.

இப்பொழுது மைத்திரியின் முகமூடி கிழிந்து விட்டது. இனி அவரைப் போல யாரைக் கொண்டு வந்தாலும் அது முகமூடியா நிஜமா என்று தமிழ் மக்கள் சந்தேகிப்பார்கள். முஸ்லிம் மக்களும் சந்திப்பார்கள.; ஏன் மைத்திரி வாக்களித்த சிங்கள மக்களும் சந்திப்பார்கள்.அதாவது மாற்றத்தை குறித்து புத்துணர்ச்சி மிக்க எதிர்பார்ப்புக்களும் நம்பிக்கைகளும் நாட்டில் இப்பொழுது இல்லை. இது ரணில் அணிக்குப் பாதகமான அம்சம்.

மூன்றாவது சவால்;. 2015இல் பிளக்கப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது இப்பொழுது பெருமளவுக்கு மீள இணைக்கப்பட்டு அதில் பெரும்பகுதி மகிந்தவோடு நிற்கிறது. சிறு துண்டு மைத்திரியோடு நிற்கிறது.

நாலாவது சவால்;. தமிழ் மக்களின் கூட்டுக் உளவியல் 2015ல் காணப்பட்டதை போல இப்பொழுது இல்லை. கூட்டமைப்பின் மீதும் ரணிலின் மீதும் அதிருப்தியும் கோபமும் அதிகரித்துக் காணப்படுகின்றன. கம்பெரலிய துரித அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் திருத்தப்பட்ட விதிகள் மைதானங்கள் கட்டப்பட்ட கட்டிடங்கள் எல்லாவற்றையும் மேவிக்கொண்டு நாவற்குழியில் கட்டப்பட்டு வரும் விகாரை தெரிகிறது, கன்னியா தெரிகிறது, பழைய செம்மலை தெரிகிறது. எனவே தமிழ் மக்களின் கூட்டுக் உளவியலை ராஜபக்சவுக்கு எதிராக திரட்டுவது என்ற ஓர் உத்தியில் மட்டுமே கூட்டமைப்பும் ரணிலும் தொங்க வேண்டி இருக்கும்.

ஐந்தாவது சவால் – முஸ்லிம் வாக்குகள். ஈஸ்டர் குண்டுவெடிப்பின் பின் முஸ்லிம் சமூகம் பெருமளவிற்கு தற்காப்பு நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. வெல்ல முடியாத பேரினவாதத்தோடு மோதுவதை விடவும் அதோடு சுதாகரித்துக் கொள்ளலாம் என்று ஒரு தரப்பு முஸ்லிம்கள் யோசிக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்பு முன்னாள் கிழக்கு முதலமைச்சர் ஆற்றிய உரையில் வெற்றி பெறும் தரப்பு எது என்று பார்த்துத் தாம் முடிவெடுக்க போவதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் 2015இல் மாற்றத்துக்காக விழுந்த வாக்குகளில் முஸ்லிம்களின் வாக்குகளும் கணிசமானவை. முஸ்லிம் கூட்டுக் உளவியல் 2015இல் காணப்பட்டதை போல இப்பொழுதும் காணப்படுகிறதா?

ஆறாவது சவால் – 2015இல் ஆட்சி மாற்றத்திற்காக ஒரு பகுதி மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் லிபரல் ஜனநாயக வாதிகளும் பல்கலைக்கழக புத்திஜீவிகளும் கருத்துருவாக்கிகளும்; படைப்பாளிகளும் மத குருக்களும் தென்னிலங்கையில் ஒரு கூட்டாகத் திரண்டு வேலை செய்தார்கள.; ஆனால் இம்முறை அப்படி மாற்றத்தை குறித்த ஓர் அலையை உருவாக்குவது யார்? அக்காலகட்டத்தில் அரசியல்வாதிகள் மீதும் வாக்காளர்கள் மீதும் தார்மீகத் தலையீட்டை மேற்கொள்ளவல்ல சோபித தேரர் போன்றவர்கள் இருந்தார்கள். ஆனால் இப்பொழுது சோபித தேரர் இல்லை. இருப்பதெல்லாம் ஞானசார தேரர்களும் ரத்தின தேரர்களும்தான.;இதுவோர் எதிர் மறை வளர்ச்சி.

எனவே மேற்கண்ட அனைத்தையும் தொகுத்துப் பார்த்தால் ராஜபக்ச அணியின் யுத்த வெற்றி வாதத்திற்கு எதிராக நின்று பிடிக்கக்கூடிய ஒரு வேட்பாளருக்குப் பாதகமான அம்சங்களே அதிகம் உண்டு. இப்பாதகமான அம்சங்களை எதிர்கொண்டு மூவினத்து வாக்குகளைக் கொத்தாகத் திரட்டக் கூடிய ஒரு வேட்பாளர் யார்?  #தனிச்சிங்கள  #வாக்குகள் #மூவின #சிறுபான்மையினர்

 

http://globaltamilnews.net/2019/129090/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் பொதுவாகவே, ரத்த அழுத்தம் தீவிர உடல்நல பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், இதனை முறையாக பரிசோதிக்காவிட்டால் பல இணை நோய்கள் ஏற்படும் என மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) சமீபத்தில் இந்தியாவில் ரத்த அழுத்த பாதிப்பின் நிலைமை குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியர்கள் அதனை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாததை வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது. அந்த ஆய்வறிக்கை சர்வதேச பொது சுகாதார ஆய்விதழில் வெளியாகியிருந்தது. அதன்படி, இந்தியாவில் 18 முதல் 54 வயதுக்குட்பட்ட 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. அதாவது, பத்தில் மூன்று பேர் அதை பரிசோதிப்பதில்லை. தென்னிந்திய மாநிலங்களில் அதிகபட்ச சராசரியாக 76% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். வட இந்திய மாநிலங்களில் சராசரியாக 70% பேர் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்கின்றனர். ரத்த அழுத்தத்தை தொடர் இடைவெளியில் முறையாக கண்காணிக்காவிட்டால், இதய நோய்கள் உட்பட பல தீவிர நோய்கள் ஏற்பட்டு, இறப்புக்குக் கூட காரணமாகிவிடும் என்கின்றனர் மருத்துவர்கள். அதுவே, முறையாக கண்காணித்து வாழ்வியல் மாற்றங்களின் மூலம் அதனை கட்டுக்குள் வைத்தால் பிரச்னை இல்லை என்ற ஆறுதல் செய்தியையும் அவர்கள் கூறுகின்றனர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐ.சி.எம்.ஆர். ஆய்வில் 30% இந்தியர்கள் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. “முன்பு 50-60 வயதில்தான் ரத்த அழுத்தம் வரும். இப்போது சிறுவயதிலேயே வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்குக் கூட உயர் ரத்த அழுத்தம் வருகிறது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன். இளம் வயதினரிடையே மன அழுத்தம், தூக்கமின்மை, உப்பு, கொழுப்பு அதிகமாக இருக்கும் உணவுகளை எடுப்பது இதற்கு காரணமாக இருக்கிறது. நீரிழிவு நோயைவிட உயர் ரத்த அழுத்தம் அதிகமானவர்களை பாதிக்கிறது” என்கிறார், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர். மேலும், “பெரும்பாலானோர் இதற்கு மருத்துவ சிகிச்சையே எடுப்பது கிடையாது. ஒருமுறை பரிசோதித்துவிட்டு ‘நார்மலாக' இருக்கிறது என மருந்துகளை எடுக்க மாட்டார்கள். அப்படி இருக்கக்கூடாது. தொடர்ச்சியாக ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். தொடர் பரிசோதனைகளில் ரத்த அழுத்தம் குறைந்தால்தான் மருந்துகளின் அளவை குறைக்க வேண்டும். உயர் ரத்த அழுத்தத்திற்கு தொடர்ந்து மாத்திரைகள் எடுக்க வேண்டும் என்பது விளிம்புநிலை மக்களுக்குத் தெரிவதில்லை. நடுத்தர மக்கள் மாத்திரைகள் எடுத்தாலும், தொடர்ந்து பரிசோதித்து கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறதா என்று பார்ப்பதில்லை” என்கிறார் அவர். ரத்த அழுத்தம் குறித்த பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.   படக்குறிப்பு,சிறுவயதினருக்கும் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதாக கூறுகிறார் மருத்துவர் எஸ். சந்திரசேகர். ரத்த அழுத்தம் எந்த அளவை எட்டினால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை நாட வேண்டும்? ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. இதில் 120 என்பது சிஸ்டோல் அளவு, இதய அறைகள் சுருங்கும்போது மாறுபட்ட கட்டம். 80 என்பது டயஸ்டோல், அதாவது இதயத்தின் அறைகள் ரத்தத்தால் நிரப்பப்படும் போது இதய சுழற்சியின் தளர்வான கட்டமாகும். இந்த அளவு 140/90 வரை அதிகரித்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்ன வகையான உணவுகள், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நிச்சயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் கூறாமல், மருந்துகளை நிறுத்தவோ, கூட்டவோ, குறைக்கவோ கூடாது. குறிப்பிட்ட இடைவெளியில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை வீட்டிலேயே பரிசோதிப்பது எப்படி? மருத்துவர்கள் முன்பெல்லாம் பாதரசத்துடன் கூடிய ஸ்பிக்மோமேனோ மீட்டர் எனப்படும் ரத்த அழுத்தமானியை பயன்படுத்தினார்கள். இப்போது மின்னணு ரத்த அழுத்தக் கருவி வந்துவிட்டது. ரூ.2,500-3,000-ல் நல்ல கருவிகளை வீட்டிலேயே வாங்கி வைத்துக்கொள்ளலாம். அந்த கருவியை கையில் எங்கு, எப்படி பொருத்த வேண்டும் என, செவிலியர் அல்லது மருத்துவத் துறையை சேர்ந்த ஒருவரிடம் நேரிலேயே சென்று செய்துபார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 15-20 நிமிடங்களுக்கு முன் டீ, காபி அருந்தியிருக்கக் கூடாது. பொதுவாகவே மது, புகைப்பிடிப்பது நல்லதல்ல. குறிப்பாக, ரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் நிச்சயம் அவற்றை செய்திருக்கக் கூடாது. ரிலாக்ஸாக இருக்க வேண்டும். பின்பக்கம் சாய்ந்துகொள்ளக்கூடிய நாற்காலியில், நிச்சயம் கால்களை தொங்கவிட்டுக்கொள்ள வேண்டும். கால்களை மடக்கி வைத்துக்கொண்டோ, கால்மேல் கால் போட்டுக்கொண்டோ அமர்ந்திருக்கக் கூடாது. ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால் ஓரிரு முறை மீண்டும் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். வலது கை, இடது கை என மாற்றி பரிசோதித்து, அதன் சராசரியைக் கூட எடுத்துப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரத்த அழுத்தம் 120/80 mm/Hg என்பது நார்மல் அளவு. எந்த நேரத்தில் ரத்த அழுத்தத்தைப் பரிசோதிக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா? ரத்த அழுத்தத்தை காலையில்தான் பரிசோதிக்க வேண்டும் என்பதில்லை. மதியம் அல்லது இரவிலும் பரிசோதிக்கலாம். உறங்குவதற்கு முன்பு கூட எடுக்கலாம். உறங்கும்போது ரத்த அழுத்தம் 15-20% குறையும். அந்த நேரத்தில் நம் உடல் சற்று ரிலாக்ஸாகும். ஆனால், இப்போது பெரும்பாலானோர் தூங்குவதற்கே இரண்டு-மூன்று மணியாகிவிடுகிறது. அதனால், அந்த சமயத்திலும் ரத்த அழுத்தம் தாழ்வு நிலைக்கு செல்லாமல் உயர்வாகவே இருக்கிறது. இதனை மருத்துவ மொழியில் இரவு நேர உயர் ரத்த அழுத்தம் (Nocturnal hypertension) என்கிறோம். அதனால்தான் பலருக்கும் காலையில் பக்கவாதம், மாரடைப்பு போன்றவை ஏற்படுகிறது. ரத்த அழுத்தம் என்பது 24 மணிநேரமும் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்பதே நிறைய பேருக்குத் தெரிவதில்லை. அதனால்தான் இளம் வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றை நாம் பார்க்கிறோம். மனச்சோர்வு, மன அழுத்தம் இருந்தாலும் ரத்த அழுத்தம் அதிகமாகும். வலிநிவாரண மாத்திரைகள் எடுப்பதுகூட சில சமயங்களில் உயர் ரத்த அழுத்தத்திற்கு காரணமாக உள்ளது. ரத்த அழுத்தத்தை தினசரி பரிசோதிக்க வேண்டுமா? தினசரி பரிசோதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏதாவது அறிகுறிகள், தொந்தரவு இருந்தால் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்? உயர் ரத்த அழுத்தம் தொடர்ந்து இருந்தால் கண்பார்வை பாதிக்கப்படும். இதய சுவர்கள், ரத்தக்குழாய்கள் பாதிப்பு, சிறுநீரகம் செயலிழப்பு, மூளைக்கு செல்லும் ரத்தக் குழாய்கள் பாதித்து பக்கவாதம் ஏற்படலாம். காலுக்கு செல்லும் ரத்தக்குழாய்கள் பாதித்து பெரிஃபெரல் ஆர்ட்டரி நோய் எனப்படும் புற தமனி நோய் ஏற்படலாம். அனைத்து உறுப்புகளும் ரத்தக் குழாய்களும் பாதிக்கப்படலாம். ரத்த அழுத்தம் அதிகமாகும்போது இதய ரத்தக் குழாய்களின் சுற்றளவு குறைகிறது. இதய சுவர்கள் தடித்து வீங்கிவிடும். சுருங்கி விரிவது குறைந்துவிடும். எனவே, உயர் ரத்த அழுத்தம் நிறைய வழிகளில் இதயத்தைப் பாதிக்கும். இதய துடிப்புகள்கூட இதனால் அதிகமாகிவிடும். உயர் ரத்த அழுத்தத்திற்கான அறிகுறிகள் என்னென்ன? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அறிகுறியே இருக்காது. ‘எனக்குதான் அறிகுறியே இல்லையே, நான் எதற்கு மாத்திரை எடுக்க வேண்டும்’ என்றுதான் பலரும் கேட்பார்கள். நாளடைவில்தான் அறிகுறிகள் தோன்றும். பதற்றம், தலைவலி, தலைசுற்றல், உடல் சோர்வு, தூக்கமின்மை, சிறிய விஷயத்திற்கு பயம், கால்களில் வீக்கம் உள்ளிட்டவை ஏற்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"உயர் ரத்த அழுத்தத்தால் கண் பார்வை பிரச்னை கூட ஏற்படலாம்" உயர் ரத்த அழுத்தம் ஏற்படாமல் எப்படி தடுக்கலாம்? உடல் எடையை ஒழுங்குக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பு அதிகம் சேர்த்துக்கொள்ளக் கூடாது. உடற்பயிற்சி செய்ய வேண்டும். நடைபயிற்சி, ஜாக்கிங், நீச்சல், ஸ்ட்ரெச்சிங் போன்றவற்றை செய்யலாம். எடை பயிற்சி போன்றவற்றை மருத்துவ ஆலோசனையுடன் செய்யலாம். ‘மெடிட்டரேனியன் டயட்’ எனப்படும் அதிகளவில் காய்கறிகள், பழங்களுடன் சிறிது புரதம், அதைவிட குறைவாக கார்போஹைட்ரேட் எடுக்கலாம். உடல் எடை 10% குறைகிறது என்றாலே இரண்டு இலக்கத்தில் நிச்சயம் ரத்த அழுத்தம் குறையும். சரியான உடல் எடையில் இருப்பவர்களுக்கும் அப்படி குறையும் என்பதில்லை. நடைபயிற்சி எல்லோராலும் செய்ய முடியும். அதற்கு எந்த தடையும் இல்லை. மூட்டு வியாதி, மூட்டு வலி இருப்பவர்கள், கை, கால்களை நீட்டி மடக்கி பயிற்சி (Stretching) செய்யலாம். தோட்ட வேலை, வீட்டு வேலைகளையே உடற்பயிற்சியாக செய்யலாம். ஒரேமாதிரியான உடற்பயிற்சிகளையே தினமும் செய்யாமல் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரியான உடற்பயிற்சிகளை செய்யலாம். ஒருவாரத்திற்கு 150 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். குறைந்தது 5 நாட்களாவது உடற்பயிற்சி செய்திருக்க வேண்டும். இதைத்தான் அமெரிக்க இதய சங்கம் கூறும் வழிமுறை. இவ்வளவு செய்தும் கட்டுப்பாட்டுக்குள் இல்லையென்றாலோ அல்லது இணை நோய்கள் இருந்தாலோ நிச்சயம் மருத்துவ ஆலோசனைகளை பெறுவது அவசியம். உயர் ரத்த அழுத்தத்திற்கு வாழ்நாள் முழுவதும் மாத்திரைகள் எடுக்க வேண்டுமா? இதனை முற்றிலும் குணப்படுத்த முடியுமா? பெரும்பாலானோருக்கு இதற்கு காலம் முழுவதும் மாத்திரை எடுக்க வேண்டும்தான். ஆனால், இதற்கான நிரந்தர தீர்வுக்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வாழ்வியல் முறைகளை மாற்றினாலே கட்டுப்பாட்டுக்குள் வரும் என்பது அறிவியல் பூர்வமான உண்மை.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உப்பு குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறை ரத்த அழுத்தம் என்பது என்ன? அதன் அறிகுறிகள் என்ன? குறை ரத்த அழுத்தம் என்பது நோய் கிடையாது. பெண்களுக்கு பொதுவாகவே 90/60 தான் ரத்த அழுத்தம் இருக்கும். அவர்களின் உடலமைப்புக்கு அப்படி இருக்கிறது. உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாத்திரை எடுத்து நார்மலாகிவிட்டது என்றால் சிலருக்கு தலைசுற்றல் இருக்கும். உடல்சோர்வு இருக்கும். அதனால் அவர்களுக்கு குறை ரத்த அழுத்தம் ஏற்படும். அவர்கள் அதற்கு மாத்திரைகள் எடுக்கலாம். நீர்ச்சத்துக் குறைபாட்டாலும் இது வரலாம். என்ன சாப்பிடலாம்? உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் என்னென்ன சாப்பிடலாம், எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து, சென்னையை சேர்ந்த உணவியல் நிபுணர் புவனேஸ்வரி கூறினார். “உப்பு அதிகமாக உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். தினசரி உப்பின் அளவை குறைக்க வேண்டும். சிப்ஸ், ஊறுகாய், உப்பு அதிகம் உள்ள நொறுக்குத் தீனிகளை தவிர்க்க வேண்டும். தினசரி எடுத்துக்கொள்வதில் பாதி அளவையே எடுக்க வேண்டும். உலக சுகாதார மையத்தின்படி தினசரி ஆறு கிராம் உப்பு போதும். இந்திய உணவுகளில் 10-12 கிராம் உப்பு இருக்கிறது. அதனால் அதில் பாதி எடுக்க வேண்டும். அசைவ உணவுகளில் கொழுப்பு அதிகம். மேலும், அசைவ உணவுகளில் அதிக உப்பு, எண்ணெய், மசாலா சேர்க்கிறோம். கொழுப்பு அதிகமான ஆட்டிறைச்சி உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும். கொழுப்பு குறைவான கோழி இறைச்சி, மீன் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். அவற்றையும் என்ன அளவு எடுக்க வேண்டும் என்றும் இருக்கிறது” என தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c51nd7ekv99o
    • 15 APR, 2024 | 03:58 PM ஆர்.ராம் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சி முகங்கொடுத்துள்ள வழக்குகள் தொடர்பிலும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளால் முன்மொழியப்பட்டுள்ள பொதுவேட்பாளர் விடயம் சம்பந்தமாகவும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு மீதான விசரணை எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக வழக்கு விடயங்களை கையாள்வது தொடர்பில் ஏகோபித்த நிலைப்பாட்டை எடுப்பதற்கு முனைவதாக கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இதேநேரம், கட்சியின் சிரேஷ்ட தலைவர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சாணக்கியன் மற்றும் வட மாகாண சபையின் தவிசாளர் சி.வி.கே.சிவஞானம் ஆகியோர் இதுவரை தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பில் எதிர்மறையாக கருத்து வெளியிட்டுள்ளனர். அதேநேரம், சிவஞானம் சிறீதரன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுவேட்பாளர் விடயத்தினை சாதகமாக பரிசீலிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். எவ்வாறாயினும், கட்சியின் தலைவரோ செயலாளரோ இதுதொடர்பில் எவ்விதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை. இவ்வாறான பின்னணியிலேயே கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும், எதிர்வரும் 19ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று மட்டக்களப்பில் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதால் அம்மாவட்டத்தினைச் சேர்ந்த தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்பதில் சந்தேகமான நிலைமை ஏற்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181135
    • தனியாருடன் இணைந்த சேவையை வழங்க முடியாது : வட மாகாண போக்குவரத்து குழுமம் தெரிவிப்பு Published By: DIGITAL DESK 7    16 APR, 2024 | 10:14 AM யாழ்ப்பாணத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நெடுந்தூர பயணிகள் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து தனியார் பேருந்துகளுடன் இணைந்த சேவையை வழங்க முடியாது என இலங்கை போக்குவரத்துச் சபையின் வடமாகாண குழுமத்தின் தலைவர் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் புதிதாக கட்டப்பட்ட நெடுந்தூர பயணிகள் பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகள் இணைந்த நேர அட்டவணையில் பயணிக்க முடியும் ஆனால் இணைந்த சேவையை குறித்த தரிப்பிடத்தில் இருந்து வழங்க முடியாது . நேற்றைய தினம் திங்கட்கிழமை வட மாகாண ஆளுநர் செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஆகியோர் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து சங்கம் ஆகியவற்றுடன் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. குறித்த கலந்துரையாடலில் புதிய பேருந்து தரிப்பிடத்தில் இருவரும் இணைந்த சேவையை வழங்குவது தொடர்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில் தொழிற்சங்கங்கள் இணைந்த சேவைக்கு சம்மதிக்க மறுக்கின்றன. அதற்கான காரணங்களும் வலுவாக இருக்கிறது உதாரணமாக வவுனியா பேருந்து தரிப்பிடத்தில் பெரும்பாலான வெளி மாவட்டத்துக்கான சேவையை வழங்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் உள்ளே செல்லாது வெளியில் நின்றே பயணிகளை ஏற்றுகின்றன. இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிகள் நடத்துனர்கள் தனியார் பேருந்து சாரதி நடத்துனர்களால் தாக்கப்பட்ட சம்பவங்கள் பல தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ள நிலையில் அவர்களுடன் இணைந்து சேவையில் ஈடுபடும் போது பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க கூடும் என தொழில் சங்கங்கள் எண்ணுகின்றன. யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கான பேருந்து தரிப்பிடத்தில் இருந்து எமது பேருந்துகள் தனித்துவமான சேவைகளை வழங்கி வரும் நிலையில் அதனை நாம் குழப்புவதற்கு விரும்பவில்லை. வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் தனியாருடன் இணைந்த நேர அட்டவணையில் பயணிப்பதற்கு எமது விருப்பத்தை தெரிவித்துக் கொள்வதோடு இணைந்த சேவையை புதிய பேருந்து தரிப்பிடத்தில் மேற்கொள்வதற்கு சங்கங்கள் விரும்பவில்லை என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181189
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.