Jump to content

JVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

JVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்..

August 18, 2019

 

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள பேரணியினைத் தொடர்ந்து காலி முகத்திடலில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பவுள்ளது. கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதன்போது ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், தேசிய மக்கள் சக்தி இயக்கம் என்ற பெயரில் 28 பொது அமைப்புக்களை உள்ளடக்கியதாக, ஒரு மக்கள் படையணி இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது வைக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்ஸக்களை தோற்கடிக்க வேண்டுமென விரும்பும் மக்கள் தம்மை ஆதரிப்பார்கள் என மக்கள் விடுதலை முன்னணி நம்பிக்கை வெளியிட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/2019/129148/

 

Link to comment
Share on other sites

ஜே.வி. பி. ஒரு நாள் ஆட்சியை கௌவும். 

அதற்கு காரணம், இந்த தொடந்தும் சிங்கள மக்களை கூட ஏமாற்றும் பிரதான சிங்கள கட்சிகளும் அவர்களின் இறுமாப்பும். 

Link to comment
Share on other sites

ஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திசாநாயக்க  தெரிவுச்செய்யப்பட்டுள்ளார். 

Related image

காலிமுகத்திடலில் இடம்பெறும் தேசிய மக்கள் சக்தி கூட்டத்தில் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

69036753_690463521419096_719606952378132

68743001_2536374023259828_44362156191755

68687327_408754143088177_296967539216141

 

 

 

https://www.virakesari.lk/article/62892

Link to comment
Share on other sites

கோட்டாபயவை எதிர்த்து போட்டியிடும் அநுர குமார: தேசிய மக்கள் சக்தியின் பின்னணி என்ன

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டது.

கொழும்பு காலி முகத்திடலில் இன்று மாலை இடம்பெற்ற மக்கள் கூட்டத்திலேயே அநுர குமார திஸாநாயக்கவின் பெயர் அறிவிக்கப்பட்டது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த 11ஆம் தேதி பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் அறிவித்திருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை.

இலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே, கட்சிகள் தமது ஜனாதிபதி வேட்பாளர்களை தற்போது அறிவித்து வருகின்றன.

 

ஆயுத குழுவாக ஆரம்பமான மக்கள் விடுதலை முன்னணி

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 1965ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ரோஹண விஜயவீரவினால் ஆரம்பிக்கப்பட்டது.

சோஷலிச சமத்துவத்திற்கான அரசியல் கட்சி என அறிவித்து ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்சியில் வேலையற்ற இளைஞர்கள், மாணவர்கள், தாழ்த்தப்பட்டோர் என பெரும்பாளானோர் இதில் இணைந்துக் கொண்டனர்.

மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலப் பகுதியில் ரகசிய ஆயுதப் பயிற்சிகளையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

பிரதமராக கடமையாற்றிய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்திற்கு மக்கள் விடுதலை முன்னணி நடத்திய ரகசிய ஆயுதக் கிடங்கு தொடர்பில் தகவல் கிடைத்த நிலையில், 1971ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரோஹண விஜயவீர கைது செய்யப்படுகின்றார்.

கைது செய்யப்பட்ட ரோஹண விஜயவீர, யாழ்ப்பாணத்திலுள்ள சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்ட நிலையில், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் அப்போது பாரிய கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு ஏற்பட்ட கிளர்ச்சியினால் இலங்கையின் தென் பகுதி பெருமளவில் மக்கள் விடுதலை முன்னணியில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் உதவியை நாடிய நிலையில், இரண்டு வார காலத்தில் இந்த கிளர்ச்சி முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்கள் பலர் இந்த காலப் பகுதியில் கொல்லப்பட்டதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.

அதனைத் தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணியை இலங்கை அரசாங்கம் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து, 1977ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, ரோஹண விஜயவீரவை விடுதலை செய்ததுடன், மக்கள் விடுதலை முன்னணி மீதான தடையையும் நீக்கியிருந்தது.

அதன்பின்னர், தாம் ஜனநாயக முறைக்கு திரும்புவதாக அறிவித்த பின்னணியில், அந்தக் கட்சியினர் தேர்தல்களிலும் போட்டியிட ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், 1982ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ரோஹண விஜயவீர, அந்த காலப் பகுதியில் 2,75,000 வாக்குகளை பெற்றிருந்தார்.

 

 

1983 கலவரத்தின் பின்னர் மக்கள் விடுதலை முன்னணி தடை

இலங்கையில் 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஏற்பட்ட கலவரத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியே காரணம் என கூறி அந்த அமைப்பிற்கு அரசாங்கம் மீண்டும் தடை விதித்திருந்தது.

அதனைத்தொடர்ந்து மக்கள் விடுதலை முன்னணி இலங்கைக்குள் தலைமறைவாக இயங்கத் தொடங்கியது.

1987 - 1989ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையில் மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது.

இந்தக் கலவரத்தினால் பெருமளவிலானோர் உயிரிழந்திருந்ததாக கூறப்படுகின்றது.

ரோஹண விஜயவீர கொழும்பில் வைத்து 1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் தேதி சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இதையடுத்து, மக்கள் விடுதலை முன்னணி 1990ஆம் ஆண்டுக்கு பின்னர் புதிய தலைமைத்துவத்தின் கீழ் மீள் கட்டியெழுப்பப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, இலங்கையில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டிருந்தது.

இலங்கை நாடாளுமன்றத்தில் 6 உறுப்பினர்களை கொண்ட ஒரு கட்சியாக செயற்பட்டு வரும் மக்கள் விடுதலை முன்னணி, கடந்த இரண்டு ஜனாதிபதி தேர்தல்களிலும் மக்கள் விடுதலை முன்னணி பொது வேட்பாளராக களமிறங்கியவர்களுக்கு ஆதரவை வழங்கியருந்தது.

இந்த நிலையில், இந்த முறை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி தனித்து களமிறங்கியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் மக்கள் விடுதலை முன்னணி இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது

 

 

அநுரகுமார திஸாநாயக்க யார்?

1968ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி அநுர குமார திஸாநாயக்க பிறந்துள்ளார்.

தம்புத்தேகம கல்லூரியில் கல்வி பயின்ற அவர், களனி பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பினை நிறைவு செய்துள்ளார்.

2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 7ஆவது தேசிய மாநாட்டில் அந்தக் கட்சியின் தலைவராக அநுர குமாரதிஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-49388682

Link to comment
Share on other sites

எம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார

ஊழல், மோசடிகள் நிறைந்த காலாவதியான  ஆட்சியை மீண்டும் உருவாக்க வேண்டுமா அல்லது சகல மக்களையும் ஒன்றிணைத்து  தேசிய ஐக்கியத்துடன் கூடிய புதிய ஆட்சியை உருவாக்க வேண்டுமா  என்பதை மக்கள் தீர்மானிக்கும் முக்கியமான சூழலில் மக்கள் உள்ளனர்.  இப்போது மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும்  எம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் எனவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். 

F4CD69C6-E951-4BEC-8D36-784C16377013.jpe

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் மக்கள் கூட்டம் இன்று  காலிமுகத்திடலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக உரையாற்றும் போது இதனைக் குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில், 

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் என்னை தலைமையேற்க தெரிவு செய்தமைக்காக முதலில் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அதுமட்டுமல்லாது என்மீதான நம்பிக்கையை வைத்து என்னை தெரிவுசெய்தமைக்கு ஏற்றால் போல் தேசிய மக்கள் சக்திக்கும் இந்த நாட்டு  மக்களுக்கும் எப்போதும் நன்றியுடையவனாகவும், நம்பிக்கையை காப்பாற்றும் நபராகவும் இருப்பேன் என உறுதிமொழி வழங்குகின்றேன்.

இந்த ஜனாதிபதி தேர்தல் முகவும் முக்கியமான ஒரு கட்டத்தில் உள்ளது. இதில் இரண்டு தெரிவுகள் மக்களுக்கு உள்ளது. ஒன்று பழைய மோசமான ஊழல்வாத ஆட்சியை கொண்டு செல்லும் வழி. மற்றையது மக்கள் மகிழ்ச்சியாக, ஒற்றுமையாக வாழக்கூடிய வழியும் உள்ளது. 

காலாவதியான மோசமான ஆட்சி வேண்டுமா அல்லது மக்கள் நம்பிக்கையுடன் கட்டியெழுப்பகூடிய வழி வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டிய முக்கிய சந்தியில் உள்ளீர்கள். 

இந்த நாட்டினை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும் என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது. முதலில் மோசமான அரசியலை இல்லாது செய்ய வேண்டும். நாட்டினை கட்டியெழுப்பும் நோக்கம் கொண்ட தொழிலாளர், அதனை ஏற்றுகொள்ளும் மக்கள் கூட்டத்தை கொண்டே முன்னெடுக்க வேண்டும். இதில் முதல் கட்டம் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும், இந்த நாட்டில் அரசியல் ஊழல், மோசடி, கப்பம், அடக்குமுறை என்பவற்றை கையாளும் நபர்களின் கைகளில் இன்று அரசியல் அதிகாரங்கள் உள்ளது. இவற்றை மாற்றியமைக்க வேண்டும். 

இந்த நாசகார ஊழல் மிக்க அரசியலுக்கு அப்பால் தூய்மையான உண்மையான மக்கள் நல அரசியலை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியை இதில் நாம் முன்வைக்கின்றோம். இந்த நாட்டின் வளங்கள் அனைத்துமே கைப்பற்றப்பட்டுள்ளது.

சமூகமாக இன்று நாட்டு பிளவுபட்டுள்ளது. சமூகங்களை பிரித்து வைத்துள்ளனர். பிளவுபட்ட சமூகத்தை கொண்டு நாட்டினை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது. ஜாதி, மதம், இன பிளவுகளில் இருந்து விடுபட்டு ஐக்கிய நாட்டினை உருவாக்கும் சூழலை நாம் உருவாக்கிக்கொடுப்போம். 

எமது எதிர்கால சந்ததியினருக்கான உறுதியான நாட்டினையும் எமது இளம் சமுதாயத்தினருக்கு நிருவாகத்தை கையில் கொடுக்க வேண்டும். எமது நாட்டில் அப்பாவி மக்கள் வேதனையுடன், வருத்ததுடனும் வாழ்கின்றனர். ஆனால் இந்த வேதனைகளால் மாத்திரம் மாற்றத்தை உருவாக்கிவிட முடியாது. அதனையும் தாண்டி உறுதியான மன நிலையுடன் மக்கள் கூட்டத்தை உருவாக்க வேண்டும். அதற்கான நம்பிக்கையை இன்று காலிமுகத்திடலில் கூடியுள்ள மக்கள் கூட்டத்தின் மூலமாக எமக்கு கூறியுள்ளனர். 

இதுவரை காலமாக ஏனைய கட்சிகளை ஆதரித்த மக்கள் அனைருக்கும் நாம் இப்போது அழைப்பு விடுக்கின்றோம். அனைவரும் எம்முடன் இணைந்து புதிய பயணத்தை ஆரம்பிப்போம். போராட்டத்தை இங்கிருந்து ஆரம்பிப்போம். 

அதற்கான இன மத பேதமின்றி அனைவரும் ஒன்றினைவோம். இனியும் மக்கள் மௌனிகளாக இருந்தால் இந்த நாட்டின் பாதையை மாற்றியமைக்க முடியாது. ஆகவே மக்களுக்கு இருக்கும் மிகவும் முக்கியமான சந்தர்ப்பம் இது. இதில் மக்கள் சகலரும் சரியான தீர்மானத்தை எடுத்து எம்முடன் கைகோர்க்க அலைப்புவிடுவதாக  அவர் தனது உரையில் குறிப்பிட்டார். 

https://www.virakesari.lk/article/62896

Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திசாநாயக்க  தெரிவுச்செய்யப்பட்டுள்ளார். 

இதனால் தேர்தலில் சிங்களவர்களின் வாக்குகள் பிரியும். 

ஆனால் தமிழர்களுக்கெதிராக இவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து விடுவார்கள்.

Link to comment
Share on other sites

38 minutes ago, Lara said:

இதனால் தேர்தலில் சிங்களவர்களின் வாக்குகள் பிரியும். 

முஸ்லீம் வேட்ப்பாளர் ஒருவர் நிறுத்தபப்டும் சாத்தியங்களும் உண்டு. 

தமிழர் வாக்குகள் ஏற்கனவே பிரிந்து தான் இருக்கின்றது. 

Link to comment
Share on other sites

39 minutes ago, Lara said:

இதனால் தேர்தலில் சிங்களவர்களின் வாக்குகள் பிரியும். 

ஆனால் தமிழர்களுக்கெதிராக இவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து விடுவார்கள்.

சிங்களவர்களின் வாக்குகளால் மட்டும் கோத்தபாயவோ, சஜித்தோ, ரனிலோ வெல்லக்கூடிய நிலை வந்து விட்டது. சிறுபான்மையினரின் வாக்குகளால் தான் வெல்ல வேண்டிய நிலை சிங்கள கட்சிகளுக்கு உண்டு. தமிழர்கள் எப்படி இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துவார்கள் என்பது மில்லியன் டொலர்  கேள்வி. கூட்டமைப்பு ஜே.வி.பியுடன் பேச்சுவார்த்தை (பம்மாத்துக்கேனும் என கோவத்துடன் மனதுக்குள் கறுவிக்கொள்கிறேன்) நடாத்தியதாக அறிந்தேன்.

தமிழர்களுக்கு  அடிப்பதில் சிங்களவர்கள் மட்டுமா விருப்பப்படுகிறார்கள்? 

Link to comment
Share on other sites

38 minutes ago, nunavilan said:

தமிழர்களுக்கு  அடிப்பதில் சிங்களவர்கள் மட்டுமா விருப்பப்படுகிறார்கள்? 

முஸ்லிம்களும் தான்.

Link to comment
Share on other sites

2 hours ago, nunavilan said:

தமிழர்களுக்கு  அடிப்பதில் சிங்களவர்கள் மட்டுமா விருப்பப்படுகிறார்கள்? 

தமிழர்களும் தான். 😀

Link to comment
Share on other sites

இருபது வருடங்களின் பின்னர் இந்த கட்சி சனாதிபதி தேர்தலில் களம் இறங்குவதற்கு முக்கிய காரணம் பலவீனமான நிலையில் முன்பு இருந்த இரண்டு பிரதான கட்சிகளும். 

அடுத்து, இலங்கையில் உள்ள மக்களிலும் இளையவர்கள் அதிகமாக உள்ளனர். நாளை அவர்களே பிரதான வாக்கு வங்கி ஆகும் நிலை உள்ளது. அவர்களை பொறுத்தவரையில், நிம்மதியான பொருளாதார நிறைவான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.

அதனால், பழை சித்தாந்தங்கள் மற்றும் குடும்ப அரசியல் என்பன தே முகமாயும் ஜே.வி.பி ஒரு மாற்று கட்சியாயும் தெரிகின்றது.   

Link to comment
Share on other sites

4 hours ago, nunavilan said:

எதிர்பார்த்த விடை வரவில்லை.

கூட்டமைப்பினர் என்று சொல்ல வந்தீர்களாக்கும். :grin:

நான் அம்பனையின் கருத்தையும் வாசித்து விட்டு எழுதியதால் முஸ்லிம்கள், தமிழர்கள் என பொதுப்படையாக எழுதி விட்டேன். 😀

Link to comment
Share on other sites

பாகிஸ்தான் தொடக்கம் மேற்கு நாடுகளூம் மறைமுகமாகவும் நேரடியாகவும் பங்கெடுத்தன.

Link to comment
Share on other sites

5 hours ago, nunavilan said:

பாகிஸ்தான் தொடக்கம் மேற்கு நாடுகளூம் மறைமுகமாகவும் நேரடியாகவும் பங்கெடுத்தன.

தமிழர்களின் பங்கை எப்படி மறந்தீர்கள்? கருணா, பிள்ளையான், மாணிக்கதாசன், டக்லசு ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Jude said:

தமிழர்களின் பங்கை எப்படி மறந்தீர்கள்? கருணா, பிள்ளையான், மாணிக்கதாசன், டக்லசு ..

அதுதானே கருணா பிள்ளையானை தவிர கன பேர் இருக்கிறார்கள்

Link to comment
Share on other sites

மோசடியாளர்கள் புறக்கணிக்கப்பட வேண்டுமே தவிர   கால மாற்றத்திற்கு அமைய  புதுப்பிக்கப்பட கூடாது  -  மக்கள் விடுதலை முன்னணி 

இராஜதுரை ஹஷான்)

 அரசியலில் 71வருட காலம் ஆதிக்கம் செலுத்திய  ஸ்ரீ லங்கா   சுதந்திர கட்சி,  ஐக்கிய தேசிய கட்சி ஆகிய  இரு  கட்சிகளினாலும்   எவ்வித முன்னேற்றகரமான   அரசியல் நிர்வாகமும்  செயற்படுத்தப்படவில்லை. ஊழல் மோசடிகள் மிகுந்த இவ்விரு கட்சிகளின் போலியான வாக்குறுதிகளுக்கு  நாட்டு  மக்கள்  இம்முறையும் ஏமாற கூடாது. 

மோசடியாளர்கள் புறக்கணிக்கப்பட வேண்டுமே தவிர  கால மாற்றத்திற்கு அமைய  புதுப்பிக்கப்பட கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் அதுநிதி தெரிவித்தார்.

உத்தேச  ஜனாதிபதி தேர்தல் மும்முனை   போட்டியினை கொண்டுள்ளது. பொதுஜன  பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி   ஆகிய   தரப்பினருக்கு சவால் விடுக்கும் விதமாகவெ  இம்முறை   மக்கள் விடுதலை முன்னணி  ஜனாதிபதி வேட்பாளரை  களமிறக்கியுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும்,  ஐக்கிய தேசிய கட்சியும் 71வருட  காலம முறையற்ற அரசியல் பின்னணியையே கொண்டுள்ளது.

தேர்தல் காலத்தில் இவ்விரு கட்சிகளும் ஒருவருக்கொருவரை  தூற்றியே   ஆட்சியமைத்துக் கொண்டுள்ளது.  .

ஆகவே  இவ்விரு தரப்பினரும் அரசியலில்  இருந்து முழுமையான புறக்கணிக்கப்பட வேண்டும்.  புதிய ஒரு  அரசியல் மார்க்கத்தை தெரிவு செய்ய  வேண்டியது  தற்போதைய  தேவையாக காணப்படுகின்றது.

ஊழல்  மோசடியாளர்களிடம் மீண்டும் மீண்டும் ஆட்சியதிகாரம் கிடைக்கப் பெற்றால்  எவ்வித மாற்றங்களும் ஏற்படாது.  உத்தேச  ஜனாதிபதி தேர்தலில் முறைக்கேடான  இவ்விரு தரப்பினருக்கும் நாட்டு மக்கள் தகுந்த அரசியல் தீர்மானத்தை மேற்கொண்டு  பாடம்  கற்பிக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/63023

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.