Jump to content

JVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

JVPயின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிக்கப்படவுள்ளார்..

August 18, 2019

 

மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியிடப்படவுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெறவுள்ள பேரணியினைத் தொடர்ந்து காலி முகத்திடலில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியிடப்பவுள்ளது. கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இதன்போது ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், தேசிய மக்கள் சக்தி இயக்கம் என்ற பெயரில் 28 பொது அமைப்புக்களை உள்ளடக்கியதாக, ஒரு மக்கள் படையணி இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தது வைக்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜபக்ஸக்களை தோற்கடிக்க வேண்டுமென விரும்பும் மக்கள் தம்மை ஆதரிப்பார்கள் என மக்கள் விடுதலை முன்னணி நம்பிக்கை வெளியிட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

 

http://globaltamilnews.net/2019/129148/

 

Link to comment
Share on other sites

ஜே.வி. பி. ஒரு நாள் ஆட்சியை கௌவும். 

அதற்கு காரணம், இந்த தொடந்தும் சிங்கள மக்களை கூட ஏமாற்றும் பிரதான சிங்கள கட்சிகளும் அவர்களின் இறுமாப்பும். 

Link to comment
Share on other sites

ஜே.வி.பி யின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திசாநாயக்க  தெரிவுச்செய்யப்பட்டுள்ளார். 

Related image

காலிமுகத்திடலில் இடம்பெறும் தேசிய மக்கள் சக்தி கூட்டத்தில் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

69036753_690463521419096_719606952378132

68743001_2536374023259828_44362156191755

68687327_408754143088177_296967539216141

 

 

 

https://www.virakesari.lk/article/62892

Link to comment
Share on other sites

கோட்டாபயவை எதிர்த்து போட்டியிடும் அநுர குமார: தேசிய மக்கள் சக்தியின் பின்னணி என்ன

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் பெயர் இன்று அறிவிக்கப்பட்டது.

கொழும்பு காலி முகத்திடலில் இன்று மாலை இடம்பெற்ற மக்கள் கூட்டத்திலேயே அநுர குமார திஸாநாயக்கவின் பெயர் அறிவிக்கப்பட்டது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த 11ஆம் தேதி பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர் அறிவித்திருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை.

இலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையிலேயே, கட்சிகள் தமது ஜனாதிபதி வேட்பாளர்களை தற்போது அறிவித்து வருகின்றன.

 

ஆயுத குழுவாக ஆரம்பமான மக்கள் விடுதலை முன்னணி

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 1965ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் தேதி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிரிந்து சென்ற ரோஹண விஜயவீரவினால் ஆரம்பிக்கப்பட்டது.

சோஷலிச சமத்துவத்திற்கான அரசியல் கட்சி என அறிவித்து ஆரம்பிக்கப்பட்ட இந்த கட்சியில் வேலையற்ற இளைஞர்கள், மாணவர்கள், தாழ்த்தப்பட்டோர் என பெரும்பாளானோர் இதில் இணைந்துக் கொண்டனர்.

மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்கள் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலப் பகுதியில் ரகசிய ஆயுதப் பயிற்சிகளையும் பெற்றுக் கொண்டிருந்தனர்.

பிரதமராக கடமையாற்றிய ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்திற்கு மக்கள் விடுதலை முன்னணி நடத்திய ரகசிய ஆயுதக் கிடங்கு தொடர்பில் தகவல் கிடைத்த நிலையில், 1971ஆம் ஆண்டு மார்ச் மாதம் ரோஹண விஜயவீர கைது செய்யப்படுகின்றார்.

கைது செய்யப்பட்ட ரோஹண விஜயவீர, யாழ்ப்பாணத்திலுள்ள சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்ட நிலையில், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியினர் அப்போது பாரிய கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு ஏற்பட்ட கிளர்ச்சியினால் இலங்கையின் தென் பகுதி பெருமளவில் மக்கள் விடுதலை முன்னணியில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் உதவியை நாடிய நிலையில், இரண்டு வார காலத்தில் இந்த கிளர்ச்சி முழுமையாகக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது.

மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்கள் பலர் இந்த காலப் பகுதியில் கொல்லப்பட்டதாக வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.

அதனைத் தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணியை இலங்கை அரசாங்கம் தடை செய்யப்பட்ட அமைப்பாக அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து, 1977ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, ரோஹண விஜயவீரவை விடுதலை செய்ததுடன், மக்கள் விடுதலை முன்னணி மீதான தடையையும் நீக்கியிருந்தது.

அதன்பின்னர், தாம் ஜனநாயக முறைக்கு திரும்புவதாக அறிவித்த பின்னணியில், அந்தக் கட்சியினர் தேர்தல்களிலும் போட்டியிட ஆரம்பித்தனர்.

இந்த நிலையில், 1982ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ரோஹண விஜயவீர, அந்த காலப் பகுதியில் 2,75,000 வாக்குகளை பெற்றிருந்தார்.

 

 

1983 கலவரத்தின் பின்னர் மக்கள் விடுதலை முன்னணி தடை

இலங்கையில் 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் ஏற்பட்ட கலவரத்திற்கு மக்கள் விடுதலை முன்னணியே காரணம் என கூறி அந்த அமைப்பிற்கு அரசாங்கம் மீண்டும் தடை விதித்திருந்தது.

அதனைத்தொடர்ந்து மக்கள் விடுதலை முன்னணி இலங்கைக்குள் தலைமறைவாக இயங்கத் தொடங்கியது.

1987 - 1989ஆம் ஆண்டு காலப் பகுதியில் இலங்கையில் மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது.

இந்தக் கலவரத்தினால் பெருமளவிலானோர் உயிரிழந்திருந்ததாக கூறப்படுகின்றது.

ரோஹண விஜயவீர கொழும்பில் வைத்து 1989ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் தேதி சுட்டுக் கொலை செய்யப்பட்டிருந்தார்.

இதையடுத்து, மக்கள் விடுதலை முன்னணி 1990ஆம் ஆண்டுக்கு பின்னர் புதிய தலைமைத்துவத்தின் கீழ் மீள் கட்டியெழுப்பப்பட்டிருந்தது.

அதனைத் தொடர்ந்து, இலங்கையில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட்டிருந்தது.

இலங்கை நாடாளுமன்றத்தில் 6 உறுப்பினர்களை கொண்ட ஒரு கட்சியாக செயற்பட்டு வரும் மக்கள் விடுதலை முன்னணி, கடந்த இரண்டு ஜனாதிபதி தேர்தல்களிலும் மக்கள் விடுதலை முன்னணி பொது வேட்பாளராக களமிறங்கியவர்களுக்கு ஆதரவை வழங்கியருந்தது.

இந்த நிலையில், இந்த முறை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி தனித்து களமிறங்கியுள்ளது.

தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் மக்கள் விடுதலை முன்னணி இந்த முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது

 

 

அநுரகுமார திஸாநாயக்க யார்?

1968ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 24ஆம் தேதி அநுர குமார திஸாநாயக்க பிறந்துள்ளார்.

தம்புத்தேகம கல்லூரியில் கல்வி பயின்ற அவர், களனி பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பினை நிறைவு செய்துள்ளார்.

2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி நடைபெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் 7ஆவது தேசிய மாநாட்டில் அந்தக் கட்சியின் தலைவராக அநுர குமாரதிஸாநாயக்க தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-49388682

Link to comment
Share on other sites

எம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் ; அனுரகுமார

ஊழல், மோசடிகள் நிறைந்த காலாவதியான  ஆட்சியை மீண்டும் உருவாக்க வேண்டுமா அல்லது சகல மக்களையும் ஒன்றிணைத்து  தேசிய ஐக்கியத்துடன் கூடிய புதிய ஆட்சியை உருவாக்க வேண்டுமா  என்பதை மக்கள் தீர்மானிக்கும் முக்கியமான சூழலில் மக்கள் உள்ளனர்.  இப்போது மக்களே தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும்  எம்மை நம்பி எம்மிடம் ஆட்சியை கொடுக்கும் மக்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டோம் எனவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக தெரிவித்தார். 

F4CD69C6-E951-4BEC-8D36-784C16377013.jpe

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் மக்கள் கூட்டம் இன்று  காலிமுகத்திடலில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக உரையாற்றும் போது இதனைக் குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில், 

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் என்னை தலைமையேற்க தெரிவு செய்தமைக்காக முதலில் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். அதுமட்டுமல்லாது என்மீதான நம்பிக்கையை வைத்து என்னை தெரிவுசெய்தமைக்கு ஏற்றால் போல் தேசிய மக்கள் சக்திக்கும் இந்த நாட்டு  மக்களுக்கும் எப்போதும் நன்றியுடையவனாகவும், நம்பிக்கையை காப்பாற்றும் நபராகவும் இருப்பேன் என உறுதிமொழி வழங்குகின்றேன்.

இந்த ஜனாதிபதி தேர்தல் முகவும் முக்கியமான ஒரு கட்டத்தில் உள்ளது. இதில் இரண்டு தெரிவுகள் மக்களுக்கு உள்ளது. ஒன்று பழைய மோசமான ஊழல்வாத ஆட்சியை கொண்டு செல்லும் வழி. மற்றையது மக்கள் மகிழ்ச்சியாக, ஒற்றுமையாக வாழக்கூடிய வழியும் உள்ளது. 

காலாவதியான மோசமான ஆட்சி வேண்டுமா அல்லது மக்கள் நம்பிக்கையுடன் கட்டியெழுப்பகூடிய வழி வேண்டுமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டிய முக்கிய சந்தியில் உள்ளீர்கள். 

இந்த நாட்டினை எவ்வாறு கட்டியெழுப்ப முடியும் என்ற கேள்வி அனைவருக்கும் உள்ளது. முதலில் மோசமான அரசியலை இல்லாது செய்ய வேண்டும். நாட்டினை கட்டியெழுப்பும் நோக்கம் கொண்ட தொழிலாளர், அதனை ஏற்றுகொள்ளும் மக்கள் கூட்டத்தை கொண்டே முன்னெடுக்க வேண்டும். இதில் முதல் கட்டம் எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும், இந்த நாட்டில் அரசியல் ஊழல், மோசடி, கப்பம், அடக்குமுறை என்பவற்றை கையாளும் நபர்களின் கைகளில் இன்று அரசியல் அதிகாரங்கள் உள்ளது. இவற்றை மாற்றியமைக்க வேண்டும். 

இந்த நாசகார ஊழல் மிக்க அரசியலுக்கு அப்பால் தூய்மையான உண்மையான மக்கள் நல அரசியலை உருவாக்குவோம் என்ற வாக்குறுதியை இதில் நாம் முன்வைக்கின்றோம். இந்த நாட்டின் வளங்கள் அனைத்துமே கைப்பற்றப்பட்டுள்ளது.

சமூகமாக இன்று நாட்டு பிளவுபட்டுள்ளது. சமூகங்களை பிரித்து வைத்துள்ளனர். பிளவுபட்ட சமூகத்தை கொண்டு நாட்டினை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாது. ஜாதி, மதம், இன பிளவுகளில் இருந்து விடுபட்டு ஐக்கிய நாட்டினை உருவாக்கும் சூழலை நாம் உருவாக்கிக்கொடுப்போம். 

எமது எதிர்கால சந்ததியினருக்கான உறுதியான நாட்டினையும் எமது இளம் சமுதாயத்தினருக்கு நிருவாகத்தை கையில் கொடுக்க வேண்டும். எமது நாட்டில் அப்பாவி மக்கள் வேதனையுடன், வருத்ததுடனும் வாழ்கின்றனர். ஆனால் இந்த வேதனைகளால் மாத்திரம் மாற்றத்தை உருவாக்கிவிட முடியாது. அதனையும் தாண்டி உறுதியான மன நிலையுடன் மக்கள் கூட்டத்தை உருவாக்க வேண்டும். அதற்கான நம்பிக்கையை இன்று காலிமுகத்திடலில் கூடியுள்ள மக்கள் கூட்டத்தின் மூலமாக எமக்கு கூறியுள்ளனர். 

இதுவரை காலமாக ஏனைய கட்சிகளை ஆதரித்த மக்கள் அனைருக்கும் நாம் இப்போது அழைப்பு விடுக்கின்றோம். அனைவரும் எம்முடன் இணைந்து புதிய பயணத்தை ஆரம்பிப்போம். போராட்டத்தை இங்கிருந்து ஆரம்பிப்போம். 

அதற்கான இன மத பேதமின்றி அனைவரும் ஒன்றினைவோம். இனியும் மக்கள் மௌனிகளாக இருந்தால் இந்த நாட்டின் பாதையை மாற்றியமைக்க முடியாது. ஆகவே மக்களுக்கு இருக்கும் மிகவும் முக்கியமான சந்தர்ப்பம் இது. இதில் மக்கள் சகலரும் சரியான தீர்மானத்தை எடுத்து எம்முடன் கைகோர்க்க அலைப்புவிடுவதாக  அவர் தனது உரையில் குறிப்பிட்டார். 

https://www.virakesari.lk/article/62896

Link to comment
Share on other sites

3 hours ago, ampanai said:

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) ஜனாதிபதி வேட்பாளராக அநுரகுமார திசாநாயக்க  தெரிவுச்செய்யப்பட்டுள்ளார். 

இதனால் தேர்தலில் சிங்களவர்களின் வாக்குகள் பிரியும். 

ஆனால் தமிழர்களுக்கெதிராக இவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து விடுவார்கள்.

Link to comment
Share on other sites

38 minutes ago, Lara said:

இதனால் தேர்தலில் சிங்களவர்களின் வாக்குகள் பிரியும். 

முஸ்லீம் வேட்ப்பாளர் ஒருவர் நிறுத்தபப்டும் சாத்தியங்களும் உண்டு. 

தமிழர் வாக்குகள் ஏற்கனவே பிரிந்து தான் இருக்கின்றது. 

Link to comment
Share on other sites

39 minutes ago, Lara said:

இதனால் தேர்தலில் சிங்களவர்களின் வாக்குகள் பிரியும். 

ஆனால் தமிழர்களுக்கெதிராக இவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து விடுவார்கள்.

சிங்களவர்களின் வாக்குகளால் மட்டும் கோத்தபாயவோ, சஜித்தோ, ரனிலோ வெல்லக்கூடிய நிலை வந்து விட்டது. சிறுபான்மையினரின் வாக்குகளால் தான் வெல்ல வேண்டிய நிலை சிங்கள கட்சிகளுக்கு உண்டு. தமிழர்கள் எப்படி இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்துவார்கள் என்பது மில்லியன் டொலர்  கேள்வி. கூட்டமைப்பு ஜே.வி.பியுடன் பேச்சுவார்த்தை (பம்மாத்துக்கேனும் என கோவத்துடன் மனதுக்குள் கறுவிக்கொள்கிறேன்) நடாத்தியதாக அறிந்தேன்.

தமிழர்களுக்கு  அடிப்பதில் சிங்களவர்கள் மட்டுமா விருப்பப்படுகிறார்கள்? 

Link to comment
Share on other sites

38 minutes ago, nunavilan said:

தமிழர்களுக்கு  அடிப்பதில் சிங்களவர்கள் மட்டுமா விருப்பப்படுகிறார்கள்? 

முஸ்லிம்களும் தான்.

Link to comment
Share on other sites

2 hours ago, nunavilan said:

தமிழர்களுக்கு  அடிப்பதில் சிங்களவர்கள் மட்டுமா விருப்பப்படுகிறார்கள்? 

தமிழர்களும் தான். 😀

Link to comment
Share on other sites

இருபது வருடங்களின் பின்னர் இந்த கட்சி சனாதிபதி தேர்தலில் களம் இறங்குவதற்கு முக்கிய காரணம் பலவீனமான நிலையில் முன்பு இருந்த இரண்டு பிரதான கட்சிகளும். 

அடுத்து, இலங்கையில் உள்ள மக்களிலும் இளையவர்கள் அதிகமாக உள்ளனர். நாளை அவர்களே பிரதான வாக்கு வங்கி ஆகும் நிலை உள்ளது. அவர்களை பொறுத்தவரையில், நிம்மதியான பொருளாதார நிறைவான வாழ்க்கையை விரும்புகிறார்கள்.

அதனால், பழை சித்தாந்தங்கள் மற்றும் குடும்ப அரசியல் என்பன தே முகமாயும் ஜே.வி.பி ஒரு மாற்று கட்சியாயும் தெரிகின்றது.   

Link to comment
Share on other sites

4 hours ago, nunavilan said:

எதிர்பார்த்த விடை வரவில்லை.

கூட்டமைப்பினர் என்று சொல்ல வந்தீர்களாக்கும். :grin:

நான் அம்பனையின் கருத்தையும் வாசித்து விட்டு எழுதியதால் முஸ்லிம்கள், தமிழர்கள் என பொதுப்படையாக எழுதி விட்டேன். 😀

Link to comment
Share on other sites

பாகிஸ்தான் தொடக்கம் மேற்கு நாடுகளூம் மறைமுகமாகவும் நேரடியாகவும் பங்கெடுத்தன.

Link to comment
Share on other sites

5 hours ago, nunavilan said:

பாகிஸ்தான் தொடக்கம் மேற்கு நாடுகளூம் மறைமுகமாகவும் நேரடியாகவும் பங்கெடுத்தன.

தமிழர்களின் பங்கை எப்படி மறந்தீர்கள்? கருணா, பிள்ளையான், மாணிக்கதாசன், டக்லசு ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Jude said:

தமிழர்களின் பங்கை எப்படி மறந்தீர்கள்? கருணா, பிள்ளையான், மாணிக்கதாசன், டக்லசு ..

அதுதானே கருணா பிள்ளையானை தவிர கன பேர் இருக்கிறார்கள்

Link to comment
Share on other sites

மோசடியாளர்கள் புறக்கணிக்கப்பட வேண்டுமே தவிர   கால மாற்றத்திற்கு அமைய  புதுப்பிக்கப்பட கூடாது  -  மக்கள் விடுதலை முன்னணி 

இராஜதுரை ஹஷான்)

 அரசியலில் 71வருட காலம் ஆதிக்கம் செலுத்திய  ஸ்ரீ லங்கா   சுதந்திர கட்சி,  ஐக்கிய தேசிய கட்சி ஆகிய  இரு  கட்சிகளினாலும்   எவ்வித முன்னேற்றகரமான   அரசியல் நிர்வாகமும்  செயற்படுத்தப்படவில்லை. ஊழல் மோசடிகள் மிகுந்த இவ்விரு கட்சிகளின் போலியான வாக்குறுதிகளுக்கு  நாட்டு  மக்கள்  இம்முறையும் ஏமாற கூடாது. 

மோசடியாளர்கள் புறக்கணிக்கப்பட வேண்டுமே தவிர  கால மாற்றத்திற்கு அமைய  புதுப்பிக்கப்பட கூடாது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் அதுநிதி தெரிவித்தார்.

உத்தேச  ஜனாதிபதி தேர்தல் மும்முனை   போட்டியினை கொண்டுள்ளது. பொதுஜன  பெரமுன, ஐக்கிய தேசிய கட்சி   ஆகிய   தரப்பினருக்கு சவால் விடுக்கும் விதமாகவெ  இம்முறை   மக்கள் விடுதலை முன்னணி  ஜனாதிபதி வேட்பாளரை  களமிறக்கியுள்ளது. ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும்,  ஐக்கிய தேசிய கட்சியும் 71வருட  காலம முறையற்ற அரசியல் பின்னணியையே கொண்டுள்ளது.

தேர்தல் காலத்தில் இவ்விரு கட்சிகளும் ஒருவருக்கொருவரை  தூற்றியே   ஆட்சியமைத்துக் கொண்டுள்ளது.  .

ஆகவே  இவ்விரு தரப்பினரும் அரசியலில்  இருந்து முழுமையான புறக்கணிக்கப்பட வேண்டும்.  புதிய ஒரு  அரசியல் மார்க்கத்தை தெரிவு செய்ய  வேண்டியது  தற்போதைய  தேவையாக காணப்படுகின்றது.

ஊழல்  மோசடியாளர்களிடம் மீண்டும் மீண்டும் ஆட்சியதிகாரம் கிடைக்கப் பெற்றால்  எவ்வித மாற்றங்களும் ஏற்படாது.  உத்தேச  ஜனாதிபதி தேர்தலில் முறைக்கேடான  இவ்விரு தரப்பினருக்கும் நாட்டு மக்கள் தகுந்த அரசியல் தீர்மானத்தை மேற்கொண்டு  பாடம்  கற்பிக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/63023

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.