Jump to content

ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதே முதலமைச்சர் பதவியிலிருந்து விக்கி ஒதுங்கியிருக்க வேண்டும் ;ஆனந்தசங்கரி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதே முதலமைச்சர் பதவியிலிருந்து விக்கி ஒதுங்கியிருக்க வேண்டும் ;ஆனந்தசங்கரி

வடக்கு மாகாண சபையில் ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதே முதலமைச்சர் பதவியில் இருந்து விக்னேஸ்வரன் ஒதுங்கியிருக்க வேண்டும். அதனை விடுத்து எழுக தமிழ் பேரணிகளை நடத்துவதில் எந்த பயனும் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

ananthsangari.JPG

யாழ்ப்பாணம் நாச்சிமார் வீதியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் இன்று அவர் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கு மாகாண சபை ஆட்சியில் இருந்த போது அதில் அங்கம் வகித்த அமைச்சர்கள் சிலர் மீது ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த நிர்வாகத்திலேயே இந்த குற்றச் சட்டு வைக்கப்பட்டது.

அப்படியானால் முதலில் அவர் தனது பதவியிலிருந்து விலகி நீதியான விசாரணைக்கு இடமளித்திருக்க வேண்டும்.விசாரணைக்கு பதவியில் இருந்து ஒதுங்கி ஒத்துழைப்பு வழங்கி இருந்தால் மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்றிருப்பார்.

வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் செய்த தவறினால் இப்போது நீதிமனரத்தின் ஊடாக அவரது நிர்வாக பிழைகள் வெளியில் வந்துள்ளன.

இவ்வற்றை செய்யாமல் விட்டுவிட்டு தமிழர்களின் பிரச்சனைகளை தீர்க்க போகின்றோம் என எழுக தமிழ் பேரணிகளை நடத்துவதால் எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை.இவர்களின் பேரணியால் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை.என்றார்.

https://www.virakesari.lk/article/62881

Link to comment
Share on other sites

4 minutes ago, கிருபன் said:

வடக்கு மாகாண சபையில் ஊழல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டபோதே முதலமைச்சர் பதவியில் இருந்து விக்னேஸ்வரன் ஒதுங்கியிருக்க வேண்டும். அதனை விடுத்து எழுக தமிழ் பேரணிகளை நடத்துவதில் எந்த பயனும் இல்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்தார்.

என்னவொரு லிங்க் எழுக பேரணிக்கும் எவனோ செய்த ஊழலுக்கும். எவனோ ஊழல் செய்தா முதலமைச்சர் ஏன் பதவி விலகோணும்? 

இப்பிடி எல்லாம் லிங் பண்ண முடிஞ்சா ஆனந்தசங்கரி எப்பவோ தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் பதவியை துறந்திருக்கோணுமே!

இதனால, ஆனந்தசங்கரி தனது இந்திய எஜமானர்களின் தாளத்துக்கு ஆடத் தொடங்கிருக்கார்னு அர்த்தம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.